Posts Tagged ‘ரத்தம்’

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

மே 12, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

Sankara vijaya accounts

ஆதி சங்கரர் பௌத்தர்களைக் கொன்று குவித்த கதை உருவானது: இனி ஆதிசங்கரர் எப்படி படைகளுடன் திக்விஜயம் செய்து, சென்றவிடமெல்லாம் பௌத்தர்களைக் கொன்றுகுவித்தார் என்ற குற்றச்சாட்டைப் பார்ப்போம். இக்கருத்தை இன்றைய பௌத்தர்கள், நியோ-பௌத்தர்கள், அம்பேத்கரைட்ஸ், தி.கவினர், மற்ற ஹிந்து-விரோத குழுக்கள் முதலியோர் பரப்பி வருகின்றனர். உண்மையினை ஆராயாமல், சில மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்களும் அதை பிரசாரம் செய்து வருகின்றனர்.
K. Jamanadas, Tirupati Balaji was a Buddhist Shrine, www.ambedkar.org/Tirupati/Tirupati.pdf
K. S. Bhagavan,  Adi Shankara’s Anti-people philosophy, The Modern Rationalist, Vol.XII, no.6, Feb.1985, pp.8-12.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -1, The Modern Rationalist, Vol.XII, no.7, March 1985, pp.5-6.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -2, The Modern Rationalist, Vol.XII, no.8, April 1985, pp.5-10.
David N. Lorenzen, Warrior Ascetics in Indian History, Journal of the American Oriental Society, Vol. 98, No. 1 (Jan. – Mar., 1978), pp.61-75 (article consists of 15 pages).
இவையேல்லாமே, “சங்கரவிஜயம்” என்ற நூற்களில் காணப்படும், சில வரிகளை வைத்துக் கொண்டு, அத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆதிசங்கரரைத் தாக்கும் போக்கில், இந்துமதத்தை தூஷிக்க வேண்டும் என்ற போக்குதான், இவர்களின் எழுத்துகளில் உள்ளதே தவிர, உண்மையினை அறிய வேண்டும் என்ற ஆராய்ச்சி நெறி காணப்படவில்லை.

Sankara vijaya texts - later period

18-19வது நூற்றாண்டுகள் வரை திருத்தப்பட்ட சங்கரவிஜயங்கள்: உள்ள “சங்கரவிஜயம்” எனப்படும் நூல்களைப் படிக்கும்போது, காஞ்சிமடம் மற்றும் சிருங்கேரிமடம் இவற்றிற்குள் உள்ள பூசல்கள், சண்டைகள் அத்தகைய சங்கரவிஜய எழுத்துப் பிரதிகளில் தத்தமது மடத்தின் பெருமையினை பறைச்சாற்றிக் கொள்ள பல மாற்றங்களையும், இடை செருகல்களையும் செய்துள்ளார்கள் எனத்தெரிகிறது.
ஸ்ரீராம சாஸ்திரிகள், ஆனந்தகிரி சங்கரவிஜயத்தில் ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமடம், ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
…………………………, வ்யாஸாசலீய சங்கரவிஜயம், காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003.
நடுநிலையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவரின் ஆராய்ச்சியின்படி, சங்கரவிஜயங்கள் எல்லாம் 18-19ம் நூற்றாண்டுகள் வரை எழுதப்பட்டு வந்துள்ளன. அதாவது, திருத்தங்கள், மாற்றங்கள், இலைசெருகல்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆகையால், சரித்திர ரீதியாக அவை சொல்வதை எடுத்துக் கொள்ளமுடியாது. மற்ற எல்லா மடங்களும் ஆதிசங்கரர் காலம் 509-477 BCE என்று பின்பற்றும்போது, சிருங்கேரி 788-820 CE தேதியை பயன்படுத்துகிறது. ஆகவே ஆதிசங்கரர் முதல் தற்பொழுதுள்ள சங்கராச்சாரியார்களின் பட்டியல்களும் அவ்வாறே உள்ளன. அதாவது சிருங்கேரியின் பட்டியலின்படி 36வது மடாதிபதி பாரதி தீர்த்தர் ஆவர். முதல் எட்டு மடாதிபதிகளுக்கு தேதிகள் குறிப்பிடவில்லை. பத்தாவது மடாதிபதி வித்யா சங்கர தீர்த்த என்பவருக்கு C.1228-C.1333 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
A. K. Sastri, A History of Sringeri, Prasaranga, Karnataka University,  Dharwad, 1982, Appendix – III.
காஞ்சிமடம் மடாதிபதிகளின் வரிசைபடி 509-477 BCEலிருந்து ஆரம்பித்து
தற்பொழுதையவர் 69வதாக உள்ளார். பொதுவாக, இம்மடங்கள் தங்களது தொன்மையினை எடுத்துக் காட்டிக் கொள்ள மேற்கொண்டுள்ள போட்டியில், ஆதிசங்கரரின் தொன்மையினை பாதிக்கும் முறையில், சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். அதனால், அவற்றில் காணப்படும் வேறுபாடுகளை, இந்துவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்.

Sankara vijaya accounts

காலின் மெகன்ஸி, ஓலைச்சுவடி சேகரிப்பு, பிரதியெடுத்தல், பிழைதிருத்தங்கள் பெருகுதல்: காலின் மெகன்ஸி என்பவர் பல இடங்களுக்குச் சென்று, லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் (இந்தியாவின் அக்காலப் புத்தகங்கள்), முக்கியமான நாணயங்கள், அத்தாட்சி பொருட்கள் முதலியவற்றை சேகரித்து இங்கிலாந்திற்கு அனுப்பி வந்தார். ஆனந்தானந்தகிரி அல்லது ஆனந்தகிரி என்பவரால் எழுதப்பட்ட சங்கரவிஜயம் அதில் இருந்தது. மெகன்ஸி அதைப் படித்துவிட்டு, “சங்கரரின் கட்டுக்கதை” என்று குறிப்பிட்டார்.
Colin Mackanzie, The Oxford Catalogue of Sanskrit Manuscripts, Bibilotheica Indica series, London, 1881.
ஆனால், நம் மக்களோ அக்கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டு சரித்திரம் ஆக்க முயற்ச்சிக்கின்றனர். மெகன்ஸி சில நேரங்களில் ஓலைச்சுவடிகள் அரிதாக இருந்தால் பிரதியெடுக்கச் செய்து அதனை வைத்து அசலை எடுத்திச் சென்றுவிடுவார். அவரிடம் வேலைப் பார்த்தவர்கள் இந்திய பண்டிதர்களே. 18-19வது நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் இந்திய சமூகத்தைச் சாதிகளின்மீதும், சமயப்பிரிவுகள், குறிப்பாக சமய-உட்பிரிவுகள் மூலம் பிரிக்க முயன்றனர். இதற்காக பல “ஜாதி-சரித்திரங்கள்” எழுதவைத்தனர்.
அதுமட்டுமல்லாது, நீதிமன்றங்களில் தமது மதப்பிரச்சினைகளை எடுத்துச் செல்லத் தூண்டி அதற்கேற்ற ஆதாரங்களைக் கேட்க ஆரம்பித்தனர். அவ்வாறு கேட்கும்போது, இந்தியர்கள் ஆதாரங்கள்/அத்தாட்சிகளை எடுத்துவருவர், அவற்றை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுங்கள் என்று கூறலாம் அவற்றை அபகரித்து விடலாம் என்பதுதான் அவர்களின் யுக்தி.

sringeri - Kanchi controversies

புதிய சங்கர விஜயங்கள் உருவானது எப்படி?: உதாரணத்திற்கு, 1844ல் காஞ்சிபுரத்தில் “தாதாங்க-ப்ரதிஸ்தா” என்ற சடங்கை ஜம்புகேசஸ்வரத்தில் உள்ள அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு செய்வதற்கு இரண்டு மடங்களும் போட்டியிட்டன. உடனே ஆங்கிலேயர்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாணப் பணித்தனர். விவரம் அறியாது அவ்வாறே சென்றன. ஆதாரம் கேட்டபோது, காஞ்சிமடம் “சிவ-ரஹஸ்யம்” மற்றும் “மார்க்கண்டேய-சம்ஹிதை” என்ற இரண்டு நூல்களை ஆதாரமாக சமர்ப்பித்தனராம். ஆனால், சிருங்கேரிக்கு அத்தகைய ஆதாரம் இல்லாதபோதுதான், இந்த சங்கரவிஜயம் இப்பொழுது உலாவரும் “வித்யயரண்யரின் சங்கரவிஜயம்” எனப்படும் நூல் உருவாக்க்கப்பட்டதாம்!
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003, ப.46.
பிறகு படிப்படியாக மற்ற விவரங்கள் சேக்கப்பட்டன. டபிள்யூ. ஆர். அந்தர்க்கர் எடுத்துக்காட்டுபவை:

  1. சித்சுக பிரதியில் “ஜைனர்கள், மஹாவீரர்”, என்றிருந்தது சதாநந்த,
    சித்திவிலாச பிரதிகளில், “பௌத்தர்கள், பௌத்த குரு” என்று மாற்றப்பட்டுள்ளது (ப.28).
  2. மற்ற சங்ரவிஜங்களில், சிவன் சங்ரராக அவதாரம் எடுக்கும்போது, பிரஹத்-சங்கரவிஜயத்தில், விஷ்ணுவே புத்தராக அவதாரம் எடுக்கிறார் (ப.56).
  3. ஒரு குறிப்பிட்ட சங்கரவிஜய பிரதிகளிலேயே உள்ள சுலோகங்கள் 11 முதல் 473
    வரை வித்தியாசப்படுகின்றன (ப.49-51).
  4. மத்வ, ஆனந்தகிரி முதலிய சங்கரவிஜயங்களைத் தவிர, மற்றவைகளில் ஜைனர்கள், பௌத்தர்கள் குறிப்பிடப்படுவதில்லை.
  5. சிருங்கேரி சங்கரவிஜயத்தில் “‡பனர்”, “திகம்பரர்” என்ற வார்த்தகள்
    அதிகமாகவும் “புத்த” என்ற வார்த்தை குறைவாகவும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.
  6. “மத்வரால்” எழுதப்பட்டது என்பது, 1798 வரை ததருத்தி எழுதப்பட்டு
    வருகிறது (ப.49).
  7. ஐரோப்பியர்களே, சீனர்களின் குறிப்புகளை அளவிற்கு மீறி நம்பவேண்டாம்
    என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் நாம், அவற்றை முழுவதுமாக
    நம்பொகிறோம் (ப,98).

Sankara vijaya accounts- vimsara-he preaching to Arabs

ஆதி சங்கரர் அரேபியாவுக்குச் சென்று போதித்தது: சீன-குறிப்புகளினின்றுதான் இந்த சர்ச்சை எழும்பியுள்ளதால், ஆதாரங்கள் இல்லாமல், சரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள், இதனை பெரிது படுத்து எழுதுவது தகாததாகும். ஆகவே, ஆங்கிலேயர்களும் தமது பங்கிற்கு இடைசெருகல்கள் செய்திருந்தால், அது அவர்களுக்குத் தான் தெரியும். எனவே, இந்தியர்கள் பல விதங்களில் பாதிக்கப்படும் நிலையில்தான் இருக்கின்றனர். ஆதிசங்கரர் அரேபியாவிற்கு சென்று போதித்தது: இன்னும், வேடிக்கை என்னவென்றால், சங்கரர் தமது திக்விஜயத்தில் அரேபியாவிற்குக் கூடபோனார், ஆகாயத்திலிருந்தே அரேபியர்களுக்கு போதித்தார் என்றும் உள்ளது! “விம்ஸர” என்ற நூல், “ஆதிசங்கரர் 64 நாட்களுக்கு வானத்தில் இருந்து கொண்டே வேதங்களின் மூன்று மார்க்கங்களான, கர்மா, உபாஸனா மற்றும் ஞானம் முதலியவற்றை அங்கு வாழ்ந்த யூகிக்களுக்கு அரேபிய மொழியிலேயே உபதேசித்தார். அவர்களும் சிரத்தையாக அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அரேபிய மொழியிலேயே அவற்றை எழுதி வைத்துக் கொண்டனர். அவைதாம் பிறகு புனித குரான் ஆனது”.
K. V. Subbaratnam, The Date of Sri Sankara, Vani Vilas Press, Srirangam, 1987, p.24
[கடல் கடந்து சென்றால், சங்கரரையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள் என பயந்து, அவரை ஆகாயத்தில் பறக்கவிட்டதுடன், ஆகாயதிலேயே அதாவது பூமியின்மீது கால்கள் படாமல் நிறுத்திவைத்தது நன்றாகவே தெரிககறது! பாவம், இடைச்செருகல் செய்தவர், காலத்ததற்கேற்ற்வாறு செய்துள்ளார் போலும்!]

Sankara and Kapalikas

ஜைன-பௌத்த சர்ச்சை நூல்கள் இத்தகைய நூல்களுக்கு தூபம் போட்டது: முன்பு வாதங்களில் தோற்றவர்கள் மேற்கில் கடலுக்கு அப்பால் அனுப்பப்பட்டனர் என்று குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. ஆகவே இவற்றை வைத்துக் கொண்டு, முகமது நபியே, சங்கர அத்வைதம் அவ்வாறு அறிந்து, தானும் பலகடவுளர்களை வழிபட்டு வந்த அரேபியர்களை ஒன்றுபடுத்தி, ஒருபுதிய மதத்தை நிறுவினார் என்று வாதிடலாம். ஏனெனில், முகமது நபி, மெக்காவில் இருந்த 360 விக்கிரங்களை உடைத்தாரம். அப்பொழுது, அவர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ஒரே ஒன்றை விட்டுவைத்தாராம். அதுதான் காஃபாவில் உள்ள விக்கிரம் / கருப்பான வெள்ளைக்கல். உண்மையில், ஆராய்ச்சிரீதியில், காலக்கணக்கியல் மற்றும் இதர ஆதாரங்களுடன், அத்தகைய கருதுகோளை சித்தாந்தம் ஆக்கலாம், சித்தாந்தத்தை ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கலாம், சரித்திரமாக்கலாம். [இப்பொழுது ஆதிசங்கரர் தமது அத்வைதத்தை இஸ்லாத்திலிருந்து காப்பியடித்துதான் உருவாக்கினார் என்று சரித்திர ஆசிரியர்கள் தாராளமாக எழுதி வருகிறார்கள்].

Sankara and Kapalikas- fight

ஆதிசங்கரர் சுதன்வன் படைகளுடன் சென்றாரா?: இனி, சங்கரதிக்விஜயத்திற்கு வரும்போது, குறிப்பாக, “மத்வர்/மத்வாச்சாரியார்” என்பவர் எழுதியாகச் சொல்லப்படும் சங்கரவிஜயத்தின்படி, “சங்கரர் சுதன்வ என்ற அரசன், மற்றும் பக்தகோடிகளுடன் தனது தத்துவத்தைப் பரப்புவதற்கும் மற்றும் அதனை எதிர்ப்பவர்களை வாதிட்டு ஜெயிப்பதற்கும் புறப்பட்டார்” (காண்டம்.15, வரி.1). இதில் என்ன வேடிக்கை என்றால், குறிப்பாக பற்பல இந்துமதப் பிரிவினர்களைத்தான் வெற்றிகொண்டார் என்றுள்ளது. நியாயவாதிகளை வென்றார், கபிலருடைய சித்தாந்தத்தை முடித்தார், வைஷ்ணவத்தை மண்ணோடு மண்ணாக மறையச் செய்தார் (10.118-119). காபாலிகர்களுடந்தான் சண்டை ஏற்பட்டது தெரிகிறது. ஒரு காபாலிகன், சங்கரரை, அவரது சீடன்போல நடித்து, கொல்லவருகிறான். அதிலும், “நரசிம்மரே” வந்து, அதாவது மற்றொரு சீடர் பத்மபாத “நரசிம்மராகி”, காபாலிகனைக் கொன்று, சங்கரரைக் காப்பாற்றியதாக உள்ளது (காண்டம்.11). எனவே இக்கதைகளை நம்பமுடியாது, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நியாயம், தர்மங்களை விடுத்த பிராமணர்களை கடுமையாகச் சாடுகிறார். மற்ற திமிரான எதிராளிகளை வென்று மேற்கு கடலுக்கு அப்பால் அனுப்பி விடுகிறார் (15.29). சாக்தகள், பாசுபத-காபாலிகர்கள், வைணவர்கள் இவர்களை வென்றதாக பல இடங்களில் உள்ளது (15.164). [இதையெல்லாம் படித்தால், அவர்களுக்குத் தான் கோபம் வரவேண்டும்]
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
முன்னுரையில், கே. ஆர். வெங்கடராமன் குறிப்பிடுவதாவது, “சுதன்வ என்பது கவியின் படைப்பு”, அதாவது கற்பனைப் பாத்திரம். ஏனெனில், எப்படி சிவன் சங்கரராக, முருகன் குமாரில பட்டராக பிறந்தார்களோ இந்திரனே சுதன்வனாகப் பிறந்தான், என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. மேலும் சிருங்கேரிமட சங்கராச்சாரியாரே (அதாவது ஸ்ரீ மத்வர் பிறகு, ஸ்ரீ வித்யாரண்யர் (1380-1386) என்ற பெயருடன் மடாதிபதியானார்) இதை எழுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சரித்திரத்தன்மையற்ற அந்த ஆவணங்களின் நிலையை நன்றாக அறிந்து கொள்ளலாம்.

சுதன்வன்அரசன்ஒரு கட்டுக்கதை: சரித்திர-ரீதியில் சுதன்வ என்ற அரசன் இருந்தது, அரசாண்டது என்ற குறிப்பே இல்லை. ஆகையால், இது 18-19வது நூற்றாண்டுகளில் சங்கரவிஜயம் எழுத ஆரம்பித்த மடங்களின் சார்புடையவர்களின் கற்பனையே ஆகும். இருப்பினும் அவன் படைகளுடன், வில்-அம்புகளுடன் சென்று காபாலிகர்களைக் கொன்றதால், அதே மாதிரி, பௌத்தர்களையும் கொன்றிருப்பான், என்று ஒருவர் குறிப்பிட்டதும், அதை மற்றவர்கள் எடுத்து தங்களது எழுத்துகளில் எடுத்தாள ஆரம்பித்து விட்டனர்! இனி விவரமாகப் பார்ப்போம்.

சுதன்வன் குமாரில பட்டரின் தூண்டுதலால் பௌத்தத்தை ஒடுக்கியது: கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்ப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. மேலும் அது ஒரு மறைமுக மிரட்டல் ஆணையாக உள்ளது. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. அதே மாதிரி எந்த ஒரு பௌத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது.
T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.
See Telang, Mudrarakshasa., pp.xlviii-liii.,
………………., The Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155.
Wilson, Dict., xix;
Colebroole, Essayas, 1. 32.

Sankara was defetated by Buddhists

பௌத்தர்கள் உருவாக்கிய சர்ச்சைக்குள்ள நூல்கள்: சமீபத்தில், கே. டி. எஸ். சரௌ என்ற ஆராய்ச்சியாளரும், இவ்விஷயத்தை நுணுக்கமாக ஆய்ந்து பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது பலநிலைகளில் – மத-சடங்கு முறை முதல் சங்கத்தின் பிரச்சினைகள் வரை – ஏற்பட்டது என எடுத்துக் காட்டியுள்ளார்.
K.T.S. Sarao, On the Question of Animosity of the Brāhmaṇas and Persecution by Brāhmaṇical Kings Leading to the Decline of Buddhism in India, The Chung-Hwa Institute of Buddhist Studies, Taipei Chung-Hwa, Buddhist Studies, No. 10, (2006).

ஆகவே, அக்கதைகளின் ஆரம்பம் என்னவென்று பார்த்தால் பௌத்தர்களின் “கதைகள்” தாம் என்று தெரிகின்றன. 7ம்-8ம் நூற்றாண்டுகளுக்கு மேல் பல காலங்களில் பலரால் எழுதப்பட்ட தொகுப்பு நூல்களில் தான் அத்தகைய விவரங்கள் காணப்படுகின்றன. முதன் முதலில் யுவான் சுவாங் (629-645), என்ற சைனாவின் புத்த யாத்திரிகர் வருகிறார். அவர் இந்தியாவில் தான் பார்த்தது, கேட்டது என்று எழுதிவைத்துள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துள்ளனர். பௌத்தர்கள் தமது மத-ரீதியில், சாதகமாக எழுதும்போது அவ்வாறுதான் எழுதுவார்கள். ஆனால் சரித்திர ஆசிரியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்த விவரங்களை மற்ற அத்தாட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கல்வெட்டு-கட்டிடங்களின் நிலை பார்த்து முடிவிற்கு வரவேண்டும். மௌரிய பேரரசு ஆதிசங்கரர் இவற்றை இணைக்கும் மற்றும் அவற்றை காலக்கணக்கீட்டில் வரிசையாக வைத்து அவ்வாறே இந்திய சரித்திர நிகழ்ச்சிகள் முறைப்படுத்தும் வலுக்கட்டாயமான முயற்ச்சியும் இதில் தெரிகின்றது. இது ஒரு 1200 ஆண்டுகளில் கட்டிவைக்க முயன்ற திட்டம். இக்காலகட்டத்தில் தான் உண்மையிலேயே, எழுதப்பட்டுள்ள சரித்திரத்தின் படி, ஜைன-புத்த மதங்கள் மிகவும் உச்சநிலையில் இருந்தன. ஆனால், “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர்.

சைனாவில் பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டது: முன்னமே குறிப்பிட்டபடி, சைனாவில் பௌத்தம் தழைத்தோங்கிய நிலையில் இருந்தாலும், அங்கு பௌத்தர்கள் தண்டிக்கப் பட்டது தெரிகிறது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் என்று தெரிகிறது. அவன் பொருளாதார காரணங்களுக்காக அவ்வாறு பௌத்தர்களைத் தாக்கியதாக கூறுகிறார்கள். அயல்நாட்டு தாக்கத்தை முழுவதுமாக அழிக்கவும், அவன் அத்தகைய கொடிய முறையைக் கையாண்டதாகத் தெரிகின்றது. எனவே அத்தகைய அடக்குமுறை, படிப்படியாக வளர்ந்து, பௌத்ததிற்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டும். பொருளாதார காரணம் காட்டியிருந்தாலும் (விஹாரங்களில் தங்கம் இருந்தது), அத்தகைய நிலை, மக்கள் பௌத்தத்தை பெரிதளவில் ஆதரித்த நிலப்பாடுத் தெரிகிறது. எனவே, திடீரென்று, ஆட்சியாளர்கள், அத்தகைய பிரபமான-மக்கள் மதத்திற்கு எதிராக அடக்குமுறையை ஏவிவிட்டிருக்க முடியாது. ஒரு சைன யாத்திரிகர், யுவான் சுவாங் எழுதியதை வைத்து, இந்தியர்களைக் குறைக்கூறும் இன்றைய இந்தியர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் சைனாவில் பௌத்தம் அவ்வாறு ஒடுக்கப்பட்டதைப் பற்றி பேசுவதில்லை. ஏனெனில், ஹூணர்களோ அல்லது பௌத்தர்களோ அல்லது யாரோ அவ்வாறு வெளியேறி இருந்தால், அவர்கள் இந்தியாவில் நுழைந்திருந்தால், ஏன் என்று ஆராய்ச்சி செய்யவேண்டும். பௌத்தம் இருந்தும், வன்முறை இருந்தது ஏன், எதற்காக அவர்கள் மீது அத்தகைய அடக்குமுறை ஏற்பட்டது என்பதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

வேதபிராகாஷ்
30-09-2009.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும் (6)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?  – பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும் (6)

Buddha died eating pork

பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும்: பாலியில் எழுதப்பட்ட நூல்களில் வெளிப்படையாக, எங்குமே மாமிசம் உண்ணுவது தடை செய்யப்பட்டதாக தெரியவில்லை.

“பாதிமக்க”வின் விதி, பாசித்தியா 35 மற்றும் வினயபீடக, மஹாவக்க, நூல்களின் சரத்துகளின் படி, மீன் மற்றும் மாமிசம் புசித்தலைப்பற்றிய தடை நிஜமானதோ அல்லது எல்லொருக்கும் பொருந்துவதோ அல்ல. புத்தர் மீன் மற்றும் மாமிசம் புசிப்பதை கீழ்காணும் முன்று விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டதாக கூறுகிறார்.

“பிக்குகளே, நான் உங்களுக்கு மூன்று நிலைகளில் மீன் மற்றும் மாமிசம் சுத்தமாக இருக்குமேயானால், அவற்றை பரிந்துரைக்கிறேன்: அதாவது, பிக்குகளுக்காகத்தான் அவை கொல்லப்பட்டன, என யாரும் பார்த்திருக்கக்கூடாது, யாரும் கேட்கிருக்கக்கூடாது, அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படவும் கூடாது.”  [மஹாவக்க (வினயபீடக). VI, 31, 14.]

முதலில் புத்தர் சொன்னதாவது, பிச்சையெடுக்கும்போது என்னக் கொடுத்தாலும், எந்த கேள்விகளும் கேட்காமல், பெற்றுப்புசிக்கவேண்டும் என்பதுதான்.

Patrick Olivelle, “The origin and Early development of Buddhist Monachism”, M. D. Gunasena & Co. Ltd, Colombo, 1974, p.55.

“புலால் உன்பதைபற்றி” ஜீவக சுத்தத்தில் (வினய பீடக) உள்ள புத்தர்-ஜீவகன் உரையாடல்: ஜீவகன் புத்தனிடம் சொன்னான்: “மக்கள் புத்தர் சாப்பிடுவதற்காக விலங்குகளைக் கொன்றதாகவும், அதனால் செய்யப்பட்ட உணவை புத்தர் உண்ணதாகவும், நான் கேள்வி பட்டேன்”. அத்தகைய மக்கள், உண்மை பேசுபவர்களாகக் கொள்ளலாமா, அவ்வாறு புத்தரை (தொடர்பு படுத்தி பேசுவதால்) பொய்மையுடன் குறைகூறுவதாக இல்லையா, என்றும் கேட்கிறான்.

Anguttara nikaaya - Buddha ate pork - verse

மூன்று நேரங்களில் மாமிசம் புசிக்கக்கூடாது: புத்தர் அதற்கு பதில் சொல்கிறார், “அது உண்மையாகாது. மூன்று நேரங்களில் மாமிசம் புசிக்கக்கூடாது. மாமிசமானது, ஒரு மனிதன் தனக்குத்தான் தயாரிக்கப்படுகிறது என்று பார்க்கும்போது, கேட்கும்பொது அல்லது அவ்வாறு சந்தேகிக்கும்போது அத்தகைய மாமிசத்தைப் புசிக்கக்கூடாது. ஒரு கிராமத்தில், பிரம்மவிஹாரத்தில் அன்பைக்கடைப்பிடிக்கும் ஒருவன், பௌத்தத்துறவியை வரவேற்று தனது இல்லத்தில் அருமையான சாப்பாடு போட்டால், எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வான் எனக்கொள்ளலாம்.  அவன் எந்தவித தயக்கமோ / ஆசையோ, எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்ணலாம்.”. புத்தர், ஜீவகனைப் பார்த்துக் கேட்கிறார், “ஜீவகா, அந்த நிலையில், அந்த பிக்கு தனக்கோ, மற்றவருக்கோ அல்லது இருவருக்குமே தீங்கு விளைவிக்கிறான் என்று நினைக்கின்றானா?”. ஜீவகன் பதிலுரைக்கிறான், “தேவரீர், நிச்சயமாக இல்லை.”

Mahavira ordered for chickem meat for curing bloddy diarrhea

விலங்குகளைக் கொல்வதில் புரியும் ஐந்து குற்றங்கள் – புத்தர் மேலும் விவரிக்கிறார்: “ஜீவகனே, “தூய்மையான ஒன்று” எனக்கருதப்படுகின்ற எனக்காக உயிரெடுக்கும் ஒருவன் ஐந்து குற்றங்களைப் புரிகிறான்.

1.        விலங்குகளைக் கொல்லும் மனப்பாங்கு: “சென்று, அந்த விலங்கை பிடித்துவா”, என ஆணையிடும்போது முதலாக பெருங்குற்றத்தைப் புரிகிறான். ஏனெனில் அந்த விலங்கு பயத்தால் நடு-நடுங்கி, வலியையும், கொடுமையையும் அனுபவிக்கிறது.

2.        விலங்குகளைக் கொல்ல பெறும் நிலை: விலங்கு இழுத்து வரப்படுகிறது. அப்போது, இரண்டாம் முறை குற்றத்தைப்புரிகிறான்.

3.        சொந்தமாகிக்கிக் கொண்ட விலங்குகளை கொல்ல ஆணையிடுதல்: “செல், அந்த விலங்கைக் கொல்”, என ஆணையிட்டவுடன், காரணம் அறிந்து, மரணகொடூரம் உணர்ந்து, மரணத்தை நோக்குகிறது. அப்போது, மூன்றாம் முறை
குற்றத்தைப்புரிகிறான்.

4.        விலங்குகளை கொல்லுதல், சமைத்தல்: கொன்று உணவை தயாரிக்கிறான். அப்போது, நான்காம் முறை குற்றத்தைப்புரிகிறான்.

5.        சமைத்த உணவை பரிமாறுதல், உண்ணுதல்: தயாரித்த உணமை “தூய்மையான ஒன்று” எனக்கருதப்படுகின்ற எனக்காக பரிமாறுகிறான்”. அப்போது, ஐந்தாம் முறை குற்றத்தைப்புரிகிறான்.

ஆகவே, படிப்படியாக அவ்விலங்கு அனுபவிக்கும் மரண அவலம் விவரிக்கமுடியாதது.

DasaVaishalika sutra mentions about preparation of meat without bones etc-Jaina

கொன்று தின்னும் பனப்பாங்கு: மனத்தால் நினைப்பதுதான், இழுத்து வரச்செய்கிறது; இழுத்து வரச்செய்தபின், மனம் இருகும்போது, கொல்லச்செய்கிறது; கொன்றபிறகு, தோலுரிப்பது, ரத்தத்தை சுத்தப்படுத்துவது, தசையை எடுப்பது, பதப்படுத்துவது, முதலிய செயல்கள் மனத்தை இருக செய்துவிடுகிறது. ஒவ்வொரு காரியத்தையும் செய்யும் மனிதர்கள் தனித்தனியாக இருக்கும்போது, அத்தகய இருகிய மனங்கள் எந்தவித சலனமும் இன்றி வேலைகளை செய்கின்றன. சமைக்கின்றவர்களும், பழகியபிறகு, வித்தியாசம் பார்ப்பதிலை. சாப்பிட ஆரம்பித்தவர்களும், பிறகு எத்தகைய, பாவ உணர்ச்சிகளையும் கொள்வதில்லை. ஆகவே, ஒருகாலகட்டத்தில் மனம் இருகி-சமைத்து விடுகிறது. அந்நிலையில், விலங்குகளைக் கொள்வது பாவம், மாமிசம் தின்பது பாவம் என்றெல்லம் போதித்தால் மனதில் ஏறாது. உண்ணாவிரதத்தைக் கடைபிடிக்கும் மக்களை கேலிசெய்யும், கேவலப்படுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் “உண்ணும் நோன்பு” கடைபிடித்து, அதிலும், மாமிசம்-வகையறா வைத்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராகவே உண்ணும் “மனப்பாங்க்ய்ம்” இத்தகையதே.

Did Buddha die of eating pork - Arthur Waley

புத்தர் புலால் உண்டது பற்றிய குறிப்புகள்: புத்தரே புலால் உண்பது பற்றி சில குறிப்புகள் காணப்படுகின்றன:

1. சிஹா என்ற ஒரு ஜைன படைத்தளபதி, கௌதம புத்தருக்கு மாமிசத்தை பரிமாரியதாகவும், புத்தர் அதனை உண்டதாகவும் குறிப்பு உள்ளது [ஜைனர்கள் புலாலை அறவே ஒதுக்குவதால், அவ்வாறு ஒரு ஜைனமதத்தவன், புத்தருக்கு மாமிச உணவு கொடுத்திருப்பானா என்று நோக்கத்தக்கது. அல்லது, இது ஜைன-பௌத்த சர்ச்சைகளுள் ஒன்றாகவும் கருத வேண்டியுள்ளது. அதாவது, ஒன்று ஜைனன் தனது நம்பிக்கையிலிருந்து பிறழ்ந்து புலாலைத் தொடுகிறான். இரண்டு, அஹிம்சை போதிக்கும் புத்தர் புலாலை உண்ணும் மாதிரி சித்தரிக்கப்படுகிறது]. – மஜ்ஜிம் நிகாய மஹா சிஹா சுத்த1.2,2.

2. தேவதத்தன், புத்தரிடம் சொல்கிறான். “வாழ்நாள் முழுவதிலும் யார் மீன் மற்றும் மாமிசத்தைப் புசிக்காமல் இருக்கிறானோ அவன்தான் சங்கத்தில் அனுமதிக்கப்படவேண்டும்”. புத்தர் பதில் சொல்கிறார், “நான் யாருமே பார்க்காத, கேட்காத இது வரையிலும் தயாரிக்கப்படாத தூய்மையான மாமிசத்திற்கு விண்ணப்பித்துள்ளேன்” [இதுவும் தத்துவ ரீதியில் யதார்த்தமாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஒன்று, அவ்வாறு வாழ்நாள் முழுவதிலும் யார் மீன் மற்றும் மாமிசத்தைப் புசிக்காமல் இருக்கிறார்கள் என்றால் தாவர உணவை மட்டு உண்பவர்கள்தாம். புத்தர் சொல்வதோ தான் ஏற்படுத்திய கட்டுப்பாட்டின்படியாருமே பார்க்காத, கேட்காத இது வரையிலும் தயாரிக்கப்படாத தூய்மையான மாமிசம் கிடைக்காது என்பதனால், அத்தகைய 100% புலால் மறுக்கும் நம்பிக்கையாளர்களை மட்டும் தேடிபிடித்து சங்கத்தில் சேர்த்துக் கொள்ளமுடியாது ]. – தேவதத்த வித்ரோஹ, சுல்ல வக்க.7

3. இங்கு சுண்ட என்ற கொல்லனிடமிருந்து, புத்தர் “சுக்ர மத்தவ” என்ற உணவை வாங்கிப் புசித்ததாகவும், அதனால், அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பிறகு குடலில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிடப்படுகிறது. இங்கு “சுக்ர மத்தவ” என்பது பலவிதமாக மொழிபெயர்க்கப்படுகிறது:

1.        பன்றியின் மாமிசம்.
2.        மிருதுவான மாமிசம்.
3.        மிருதுவான ஒரு தாவர உணவு.
4.        பாலில் வேகவைத்த அரிசியால் செய்யப்பட்ட உணவு.

மஹாபரிநிப்பான (புத்தர் தனது மரணப்படுக்கையில் அளித்த உபதேசம்) சுத்த.
2.3.
ஜனவசப சுத்த (புத்தரின் இறப்பிற்கு பிறகு பிம்பிசரனுடைய விஜயம்)
சரிபுத்த சுத்த (சரிபுத்தனின் சிங்கத்தின் கர்ஜனை)

Rhys Davids, Dial, Vol.ii, p.137.
J. F. Fleet, JRAS, 1909, p.21.
Edward J. Thomas, The Life of Buddha As Legend and History, Motilal Banarasidas, New Delhi, 1977, p.149.
Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.
343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm
Vaidya Bhagwan Dash, in his introduction to the Hoernle’s book, pp.xix- xx.
A. F. Rudolf Hoernle, Studies in the Medicine of Ancient India (Osteology or the Bones of the Human Body), Concept Publishing Company, New Delhi, 1984.
B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, pp. 542-543.

அம்பேத்கர், “some preparation of Sukra-madhva” என்று குறிப்பிட்டாலும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை, இருப்பினும், “சுன்டா கொடுத்த உணவு புத்தருக்கு ஒத்துப்போகவில்லை” என்று குறிப்பிடுகிறார் (ப.543).

Did Buddha die of eating pork - Roshi Philip Kapleau
புத்தர் மற்றொரு இடத்தில் உபதேசிப்பது: “பிக்குகளே, கீழ்கண்ட வியாபாரங்களில், எந்த சாதாரணமான மனிதனும் ஈடுபடலாகாது:

1.        ஆயுதங்கள்.
2.        உயிரோடு இருக்கும் பிராணிகள்
3.        மாமிசம்.
4.        மது.
5.        விஷம்”
அங்குத்தாரா நிகாய.5.177

இதன்படி பார்த்தால், உயிரோடு இருக்கும் பிராணிகளை யாரும் விற்கவோ, வாங்குவதோ கூடாது. இறந்த பிறகு அவ்வாறு செய்யலாமா என்பதற்கு, மாமிசம் விற்கலாகாது என்பது தடையாக உள்ளது. ஆகவே அத்தகைய நிலையில், மாமிசம் சமைத்து, அதிலும் “அஹிம்சை” போதிக்கும் பிக்குகளுக்கு தானமாகக் போடுகிறார்கள் என்பது உண்மைக்குப்புரம்பாக உள்ளது. புத்தர் போதித்தபடி, 100% இத்தொழில்களில், வியாபாரங்களில் யாருமே ஈடுப்டவில்லை என்றால், நிச்சயமாக புலால் உண்பது சமூகத்திலிருந்து மறைந்திருக்கும்.

Cunda preparing pork a Chinese pork

கேட்காதே, கொடுத்தால் சாப்பிடு: புலால் உண்பது சமுக்கத்தில் 100% அமூல் படுத்த்முடியாது, ஏனெனில், அது ஒருவரின் உணவுபழக்கத்தைப் பொருத்து இருந்து வந்துள்ளது. ஆகவே, பிக்குகளுக்கு என்று இல்லாமல், மற்றவர்களுக்காகவோ அல்லது பொதுவாகவோ விலங்குகள் கொல்லப்பட்டு, தோலிரித்து, மாமிசத்தைப் பதப்படுத்தி, சமைத்து பரிமாரினால், பிச்சையிட்டால் எந்த கேள்விகளும் கேட்காமல், பெற்றுப்புசிக்கலாம், புசித்திருக்கக்கூடும்.

ஆகையால், புலால் உண்ணுவது பௌத்தத்தில் ஒரு பெரியபிரச்சினையாகக் கொள்வதில்லை. ஆனால், அஹிம்சை, உயிர்வதைக்கூடாது, என்றெல்லாம் போதிக்கும் புத்தர் அல்லது பௌத்தர்கள் புலால் உண்டுகொண்டே போதித்தால் என்னாவது? மேலும் அசோகனுடைய கல்வெட்டு ஆணைகளுக்கும் இது எதிராக இருப்பதைக் காணலாம்.

சாந்தம், அமைதி, நிர்வாணம் பேசும் பௌத்தர்கள் புலால் உண்ணுவது முன்னுக்கு முரணானது. சாத்விக உணவு விடுத்து, புலால் உண்டு அத்தகைய நிலையை அடையலாம் என்பதும் மனச்சிக்கல் உருவாக்குவதே. இந்த பெரிய முரண்பாடு, நிச்சயமாக பௌத்தம் எதிர்கொண்டுள்ளது.

Cunda preparing pork a Chinese pork- illustrative

மேற்கத்தைய மதங்களுடன் ஒத்துப்போவது: கிழக்கத்திய மதங்களுள் பௌத்தம் இந்த விஷயத்தில் மேற்கத்தைய மதங்களுடன் (யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் / இஸ்லாம்) ஒத்துப்போகிறது. புலால் உண்ணும் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் / இஸ்லாம் மதங்கள் என்றுமே இவ்விஷயத்தில் “அஹிம்சை” பேசுவது இல்லை. “கொன்றால் பாவம், தின்றால் போச்சு” என்ற பானியில் தான் அவை உள்ளன. முகமதிய புலால் உண்ணும் விதிகள் பௌத்தத்தை ஒத்துப்போவதைக் காணலாம்.

வேதபிரகாஷ்
22-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Devotee offered food

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கக்கூடும்?

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கக்கூடும்?

Ground plan and section of main Chaitya Hall, Karla caves.2

பிராமணர்களும், பௌத்தர்களும்: புத்தர் இறந்து 500 வருடங்களுக்குப் பின்னரே அவர் உபதேசங்களை மற்ற கதைகளைத் தொகுத்து பௌத்த பிக்குகள் எழுத ஆரம்பித்தனர். அரசவம்சத்தில் பிறந்த சித்தார்த்தன், “புத்தர்” ஆகியபோது, முதலில் பௌத்தத்தை எற்றுக்கொண்டது அரசவம்சத்தினரே. புத்தர் மறைந்தபிறகு, பலர் சங்கத்தில் சேர்ந்தாலும், அரச-வணிகர்களின் ஆதரவு பௌத்தத்திற்கு அதிகமாக இருந்தது. பிராமணர்கள் பௌத்தத்தில் சேர்ந்தாலும் அவர்களது நிலை பாதிக்கப்படும் நிலையில்தான் இருந்தது. பிராமணர்களை எதிர்த்து பௌத்தம் வளர்ந்தபோது, பௌத்தத்தில் அவர்களது ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையினை ஆராயவேண்டியுள்ளது. விரும்பி ஏற்றுக்கொண்டாலும், வலுக்கட்டாயமாக மதமாற்றப்பட்டாலும் அவர்களை மற்ற பௌத்தர்கள் எவ்வாறு நடத்தினர் அல்லது தூரமாகவே வைத்திருந்தனர் என்பது நோக்கத்தக்கது. ஆகவே, பிராமணர்கள் பௌத்த மதத்தில் சேருவது என்பது சாத்தியமில்லை அல்லது குறைந்த அளவிலேயே இருந்திருக்கக் கூடும்.

சத்திரியர்களும், பௌத்தர்களும்: சத்திரியர்களின் நிலையோ அதைவிட முரண்பட்டதாகும். ஏனெனில் அவர்களுக்கும் அஹிம்சை போதிக்கும்
பௌத்தத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது வெளிச்சம். அரசர்கள் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டபோது, அவர்களது அரசுகள் “பௌத்த அரசுகளாக” இயங்கலாம், இயங்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் போரிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். தங்களது ஆட்சியை காத்துக் கொள்ளவேண்டும் என்றால், சத்திரிய தர்மத்தைத் தான் கடைபிடித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, அஹிம்சை, சமாதானம், அமைதி என்றால், அத்தகை சத்திரியர்கள் சத்திரியர்களாக இருந்திரிக்க மாட்டார்கள். பௌத்தத்தின் அஹிம்சாபோதனை போர்களை நிறுத்திவிடவில்லை என்பதனை சரித்திரம் காட்டுகிறது. மேலும், புத்தபிக்குகளே ஒரு அரசை ஆதரித்து, மற்ற அரசை எதிர்க்கும் நிலையும் ஏற்பட்டது. அவ்வாறான நிலையில், பிக்குகளும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றாகிறது.

வைசியர்களும் பௌத்தர்களும்: பௌத்தர்கள் பல நாடுகளுக்குச் சென்று வந்ததால், அங்கெல்லாம் பொருட்களின் தேவை இருக்கும் என்பதனால், வைசியர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. பௌத்தர்கள் வியாபாரிகளுக்கு முன்னோடியாக, உதவியாக இருந்தனர். “பட்டுப்பாதை/வழி” (the Silk route) ஆனாலும், கடல் வழியானாலும் வணிகர்கள் தமது பொருட்களுடன் பௌத்த பிரசாகரர்களுடன் பயணித்தனர். வியாபாரம் செய்தனர், லாபம் ஈட்டினர். அத்தகைய லாபங்களை தானமாக பிக்குகளுக்கு தோடங்களாக, விஹாரங்களாக அளித்து ஆதரித்தனர். எனவே பௌத்த பிக்கு-வைசிய உறவு பரஸ்பரமானது என்பதாகிறது.

சூத்திரர்களும், பௌத்தர்களும்: சூத்திரர்கள் பௌத்தத்தில் இணைந்துள்ளதை தம்மபாத மற்றும் ஜாதக கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் பௌத்தம் வளர்ந்ததற்கு, பரவியதற்கு பிக்குகளுடன் இணைந்து பணியாற்றிய விவரங்கள் தெரியவில்லை. பௌத்தத்தில் “வஸலா” என்ற வார்த்தை தாழ்த்தப்பட்ட, வெறுக்கத்தக்க மனிதனைக்குறிக்கிறது. பௌத்தம் அடிமைகளை மறுத்ததாகத் தெரியவில்லை.
http://www.bbc.co.uk/religion/religions/buddhism/history/slavery.shtml

பிராமணர்கள் கடல் கடக்கத் தடை: ஆகவே நிச்சயமாக “சிரமணர்கள்-பிராமணர்கள்” சேர்ந்து சென்றது அசோகனது காலத்திற்கு பிறகு மறைந்தது எனலாம். திடீரென்று பிராமணர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது, அவ்வாறு சென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர் என்ற தடை ஏற்படுத்தப்பட்டதும் நோக்கத்தக்கது. இதனால்தான், மனுஸ்மிருதியில் அத்தகைய இடைச்செருகல் ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ஏனெனில் தென்கிழக்காசிய மற்றும் தன்னமிரிக்க நாடுகளிலேயே இந்து மதம் பரவியிருந்தபோது, பிராமணர்கள் அங்கிருந்தனர். எனவே ஒன்று அவர்கள் நடந்து சென்றிருக்க வேண்டும் அல்லது கப்பலில் கடல் கடந்து செறிருக்கவேண்டும். பின்னதுதான் சாத்தியமாகிறது என்பதால், அத்தகைய தடை பிற்பாடு ஏற்படுத்தியிருக்கவேண்டும் எனத் தெரிகிறது. “சிரமணர்கள்”, “பிராமணர்கள்” தங்களுடன் வருவதை விரும்பவில்லையா அல்லது அவர்கள் வருவதை நிறுத்த முயன்றனரா என்பது நொக்கத்தக்கது. ஆகவே முன்னம் கப்பல்களில் சேந்து சென்ற இவர்களுக்குள் என்ன நேர்ந்தது? நிச்சயமாக, ஒருகாலகட்டத்தில், பிராமணர்கள் தங்களுடன் வருவதை “சிரமணர்கள்” விரும்பியிருக்க மாட்டார்கள். எனவே அவர்களை தடுக்க வழி உள்ள சட்டதிட்டங்களை வைத்துதான் செயல்படுத்த வேண்டும். அந்நிலையில்தான் மனுஸ்மிருதியை பௌத்தர்கள் திருத்தியிருக்கவேண்டும். ஏனெனில், பிராமணர்களே தங்களுக்கு பாதகமாக அத்தகைய சரத்தை நுழைத்திருக்க மாட்டார்கள்.

Ground plan and section of main Chaitya Hall, Karla caves.

பௌத்த சிற்ப-கட்டிடக் கலை வளர்ந்தது: குகைக்கோவில்கள், பெரிய அளவில் புத்தசிற்பங்கள், விஹாரங்கள் முதலியன அமைக்கப்பட்டது, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல இடங்களில் ஈடுபடுத்தப்பட்டது, ஈடுபட்டது தெரிகின்றது. கற்கள் மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் என்பதனால் அவ்விடங்களில் விஹாரங்கள் கட்டப்பட்டது சாதகமாகவே தெரிகிறது. கற்கள் உருவான விதம், அவற்றின் உள் அமைப்பு, கடினம்-மென்மை தன்மைகள், முதலியன கல்-விற்பன்னர்களுக்குத் தெரிந்திருக்கும். 40 அடிகள் உயர தூண்கள் அல்லது சிலைகள் இருக்கும்போது, அத்தகைய பாறைகளை எவ்வாறு உடைத்து, செதுக்கி உருவாக்கினர் என்று நோக்க வேண்டியுள்ளது. மேலும் கற்களை உடைக்க, கழிக்க, கடைய, செதுக்க, மேற்பகுதியை மென்மையாக்க பலவித உலோகக்கருவிகள் உபயோகப்படுத்த்ப்பட்டிருக்கும். எனவே அத்தகைய கருவிகளை உருவாக்கும் உலோகவியல் வல்லுனர்கள் இருந்திருக்க வேண்டும். வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோருக்கு வேண்டியவற்றை அவர்கள் தொடர்ந்து விநியோகித்து வந்திருக்கவேண்டும்.
James Fergusson, History of Indian & Eastern Architecture, Low-Priced Publications, New Delhi, 1997.
E. B. Havell, Indian Sculpture and Painting, John Murray, London, 1908, p.183. Taraporavala & Sons, Bombay reprint is available.

அவர்கள் எல்லொரும் பௌத்தர்களா அல்லது பணம் பெற்று அவர்களுக்காக வேலை செய்து அத்தகைய சிற்பங்கள், விஹாரங்களை உருவாக்கினரா? அல்லது அடிமைகளாக வேலை செய்தனரா? அவர்கள் எல்லாம் பௌத்தர்கள் இல்லை என்றால், தமக்கு எதிரான மதத்திற்கு அவ்வாறு வேலை செய்திருக்க முடியாது. அல்லது, அத்தகைய வேறுபாடே இல்லாத நிலை இருந்திருக்கவேண்டும். பௌத்தமதம் வெறும் பிராமணத்தை எதிர்த்து மட்டும் வளர்ந்து விடவில்லை. உலகம் முழுவதும், புத்த சிற்பங்களை செதுக்கி, தமது மதத்தை பிரபலப்படுத்தி வளர்த்தனர். ஆகவே, அத்தகைய லட்சக் கணக்கான வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோர் எவ்வாறு பௌத்தத்திற்கு சாதகமாக வேலை செய்தனர்?

Takht-i-Bahai Chaita hall, temple

உருவத்தை உருவாக்கும் நிலை (Iconogenism) மற்றும் உருவங்களை உடைக்கும் நிலை (Iconoclasm): பௌத்தம் தேய்ந்ததற்கு அவர்களும் காரணமா? மஹாயான பௌத்தத்தை குறை சொன்னால், அல்லது ஒதுக்கினால், இவர்களது கதி அதோகதிதான். எனவே, மஹாயானத்தைக் குறைக்கூறுவது, விக்கிர ஆராதனையை (Idolatry) விமர்சிப்பது, புத்த சிற்பங்கள்-விஹாரங்களை வெறுப்பது முதலியன முரணான போக்கே. விக்கிரங்களை உருவாக்குகின்றவர்கள் (Icon producers), இறையியல் அல்லது மற்ற சித்தாந்த ரீதிகளில் விக்கிரங்களை வெறுப்பவர்கள் /உடைப்பவர்கள் (Iconoclasts) ஒரே மதத்தில் / சாகையில் பிரசாரகரர்களாக, ஒருமித்த-சித்தாந்திகளாக இருப்பது போலித்தனமாகும், கபடத்தனமாகும். ஆகவே பௌத்தம் எந்நிலையிலும் அத்தகைய வாதத்தை முன் வைக்கமுடியாது. அத்தகைய வெறுக்கும் நிலையே அவர்களது அஹிம்சை-விரோத மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது. உருவத்தை உருவாக்கும் நிலை (Iconogenism) மற்றும் உருவங்களை உடைக்கும் நிலை (Iconoclasm) இரண்டையும் தன்னுள் அடக்கி பௌத்தம் இருந்தது என்றால் பொய்மைதான். கலாரசிகர்கள் கலையை வெறுப்பரோ, சிற்பங்களை “உருவாக்குபவர்கள்”, சிற்பங்களை “உடைப்பார்களோ?”
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians? in Contribution of South India to Indian Art and Architecture, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.

அத்தகைய உருவங்கள் / சிற்பங்கள் உருவானது, இருப்பதற்கு எதிராகத்தான் அல்லது மக்களைக் கவரும் முறையில் உருவாக்கியிருக்கவேண்டும். எனவே அத்தகைய முறையை உருவாக்கிவிட்டு, பிறகு அது பாவச்செயல், சாத்தானின் செயல் என்றெல்லாம் பேசுவது, பிரசாரம் செய்வது அல்லது அவற்றை உடைப்பது / அழிப்பது அஹிம்சை-விரோத மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது, தீவிரவாதாமாகிறது, மானுடத்தை பாதிக்கிறது.
The Mohammedans’ iconoclast-fanatical-ferocious destruction of temples have been noted by the British surveyors and recorded in their records and works. James Fergusson, opt cit. Archaeological Survey of Western India, Vol. III, pp.20, 23, 38-40.

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture60

ஒருவேளை, அத்தகைய எண்ணம் வலுப்பட்டு, பௌத்தத்தில் “உருவவழிபாட்டு-எதிர்ப்புவாதிகள்” உருவாகி கிளம்பியிருந்தால், நிச்சயமாக மேற்கண்ட வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோர் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பர். ஏனெனில் அது அவர்களின் தொழில் என்றாகிவிட்டப் பிறகு அதனை மறுப்பவரை, ஒழிப்பவரை அவர்கள் நிச்சயமாக விரும்பியிருக்க மாட்டார்கள். மேலும், பௌத்தர்களுக்கு எதிராகவும் திரும்பியிருக்கக்கூடும். தங்களை வைத்தே, அத்தகைய பற்பல கோடிகணக்கில் சிற்பங்கள், லட்ச கணக்கில் விஹாரங்கள், மடாலயங்கள் என்று உருவாக்கி, பிறகு தங்களையே இழிவு படுத்துவதை எந்த வேலையாளும், தொழிலாளியும், சிற்பியும் அல்லது ஸ்தபதியும் தாங்கிக் கொண்டிருக்கமாட்டான். எனவே அத்தகைய“உருவவழிபாட்டு-எதிர்ப்புவாத பௌத்தர்கள்” மற்றும் இவர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டிருக்கக்கூடுமோ என்று ஆராயத்தக்கது.

தென்னிந்திய சம்பிரதாயப்படி பலவித சிற்பசாஸ்திரங்கள் இருந்தன. அவையாவன:

1. விருத்தம்                         9. வித்தியாபதி               17.மிகுத்தவட்டம்
25. ஸுஸ்ருதம்
2. விஸ்வபோதம்                10. மானசாரம்              18.கலயூபம்                26.
சைத்யகம்
3. விஸ்வகஸ்பியம்        11. மனுமன்                      19. கபீலம்
27. நமசம்ஹிதை
4. விஸ்சலம்                        12. மனபோதம்               20. கற்பர்யம்
28. சாத்விகம்
5. விஸ்வதர்மம்                13. மயிந்திரமல்               21. கலாம்ருதம்        29.
அதிசாரம்
6. விஸ்வேஸம்                14. மயாமனபோதம்     22. நளம்                        30.
அரிதகம்
7. விஸ்வசாரம்                15.மயன்மதம்               23. பானு                        31.
ஸௌம்யம்
8. வஜ்ஜிரம்                        16. மயன்-நீதி                       24.
பர்சரியம்                32. சித்ரம்.

Prasanna  Kumar  Acharya, A Dictionary of Hindu Architecture, Vol.I, Low Price Publications, New Delhi, 1997.
………………………………………., Indian Architecture according to Manasara-silpasastra, Vol.II, 1998.
………………………………………., Manasara on Architecture and sculpture: Sanskrit Text with critical nores, Vol.III., 1997.
………………………………………., Architecture of Manasara (English translation), Vol.IV, 1998.
………………………………………, Atchitecture of Manasara: Illustraions of Architectural and Sculptural objects, Vol.V., 1998
……………………………………….., Hindu Architecture in India and Aboard, Vol.VI, 1998.
………………………………………., An Encyclopedia of Hindu Architecture, Vol.VII, 2001
Bruno Dagens, Mayamata, Sitaram Bharatia Institute of Science & Research, New Delhi, 1995, p.v in Introduction.
T. Bhattacharya, The Cannons of Indian Art, Calcutta, 1963, pp.183-195.
K. V. Ramakrishna Rao, Stone – Work, Art, Architecture, Style and Dating in Indian Context, ICIH-2009 conference, Souvenir Volume, New Delhi, 2009, p.78. For full text see at:
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture61

பௌத்தம் “இந்து/சனாதன மதத்திலிருந்து” பெற்றவை: “செரிந்தியா” எனப்படுகின்ற மத்திய ஆசியா பகுதிகளில் பௌத்தம் இருந்தபோதும், எட்டாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருத வழக்கு இருந்து வந்தது என்று ஏரியல் ஸ்டீன் என்ற ஆராய்ச்சியாளர் பல அத்தாட்சிகளுடன் காட்டியுள்ளார். பௌத்ததைப் பற்றிய ஆரம்பகால பாலிமொழி நூல் கரோஸ்தி லிபியில் இருந்தது. சமஸ்கிருதமோ பிரம்மி லிபியில் இருந்தது.
Sir Aurel Stein, Serindia, Vol.I, Introduction.

ஆகவே, எப்படி தத்துவம் முதலியன பௌத்தர்களுக்கு வேத-உபநிடதங்களிலிருந்து பெற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டனரோ, அம்மாதிரியே, வேதகலைகளையும் பெற்றனர் என்பது அவர்களது சிற்ப கட்டிட கலை அத்தாட்சிகள் காட்டுகின்றன. சரித்திரஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் எது முன்பு, எது பின்பு என்பதனை காலகணக்கீட்டு முறையில் குறிப்பிடுவதில்தான் குழம்பியுள்ளனர், குழப்பியுள்ளனர், பாரபட்சமுறையில் இருந்துள்ளனர் என்பது இதனை படிக்கும்போது / ஆராயும்போது தெரிகிறது. ஏ. எல். பாஸம் “அசோகனுடைய தூண்கள்” அசோகனுக்கு முன்னமே இருந்தன என்றபோது, நமது சரித்திரஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அறிந்தும் அறியாதவர்கள் மாதிரி இருந்தனர்.
A. L. Basham, The Wonder that was India, Rupa & Co., New Delhi., 1990.

“எழுத்தறிவற்ற” சிந்துசமவெளி / ஹரப்பன் நாகரிகம் (c.2250-1950 BCE) மற்றும் திடீரென்று முளைத்த “சரித்திர கால” மௌரிய பேரரசு (c.300 BCE) இந்த இடைப்பட்ட காலத்தில், 1900 வருடங்களுக்கு இந்தியர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? நமது அதி-மேதாவி / அறிவிஜீவி / பிரபலமான / முன்னோக்குள்ள சரித்திரஆசிரியர்கள் (eminent, progressive, secular etc), ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருட்துறை வல்லுனர்கள் அந்த ரகசியத்தைச் சொல்ல மறுக்கின்றனர்! எல்லாவற்றையும் proto-history (Proto- = original, primitive, first) காலத்தில் வைத்து இந்தியர்களை ஏமாற்றுகின்றனர்!

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture62

இருப்பினும் ஏ. எல். பாஸம் போன்ற நடுநிலையாளர்கள் உண்மையை எடுத்துக்
காட்டியுள்ளனர்: குப்தகாலத்திற்கு முன்பே பராபர், நாகார்ஜுனா முதலிய இருப்பிடங்கள் / குகைக்கோவில்கள் முதலியவற்றைக் குறிப்பிடும்போது, அவர் இவ்வாறு எடுத்துக்காட்டுகிறார்:

“The inner walls of all caves are finely polished, no doubt by workmen of the school whch was responsible for the polish of the Asokan columns” (p.354). “குகைக்கோவில்களின் சுவர்களை மென்மையாக கழித்து வழுவழுப்பாக பளிச்சென செய்தவர்கள் அசோகனுடைய தூண்களை செய்த அதே சிற்ப-
கட்டிடகலை குடும்பத்தை சேர்ந்திருக்கவேண்டும்”.

“The capitals of Asokan’s columns, some of which were perhaps made before his reign, are the earliest important sculptures after those of the Indus cities” (p.366).  “சிந்து நகர கட்டிடகலைக்குப்பிறகு, அதேமாதிரியான தொன்மையான வேலைபாடு அசோகனுடைய தூண்களிலில்தான் காணப்படுகிறது, அவைகளில் சில அவனது காலத்திற்கு முன்பே செய்யப்பட்டிருக்ககூடும்”

“Yet, if we did not know that the possibility of western influence existed, we might suggest that the animal sculptures of the columns were those of a school directly descended from the engravers of the Indus seals, which show a realistic treatment very unusual for so early a civilization”. “மேற்கத்தைய தாக்கம் இருந்ததற்கான வாய்ப்பு
உள்ளதா இல்லையா என்று அறிவதற்கு இயாலமல் இருக்கும் நிலையில், சிந்துசமவெளி நாகரிகத்தின் முத்திரைகளை கடைந்து பொரித்து உருவாக்கிய அதே கலைக்குடும்பம் அல்லது வம்சத்திலிருந்து நேரிடையாக வழி-வந்தவர்கள்தாம் இந்த விலங்குகளை செதுக்கியிருக்கவேண்டும் எனத்தெரிகிறது.”

பல “யக்ஸினிகள்” சிற்பங்களை ஆராய்ந்து கூறுவதாவது:

“The treatment of the ample abdomens of these figures has been compared with that of the Harappa torso and gives further evidence of the survival of tradition over the long intervening period” (p.367).
“எவ்விதமாக இந்த சிற்பங்களின் வயிற்றுப்பகுதிகள் செதுக்கப்பட்டுள்ளன / விவரங்களைக் கொண்டுள்ளன என்பதற்கு ஹரப்பன் சிற்பங்களின் முண்டத்துடன் ஒப்புமைப்படுத்தி போதுமான வரை ஆராயப்பட்டுள்ளது. அத்தகைய ஒப்புமை ஆராய்ச்சி கொடுக்கும் அத்தாட்சியானது, அத்தகைய கலைப்பாரம்பரியம் இடைப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வந்துள்ளது தெரிகிறது”.

ஆகவே, ஜைன-பௌத்த மதங்களுக்கு முன்பு, சிந்துசமவெளி நாகரிகத்திற்கு முன்பே அத்தகைய சிற்ப-கட்டிடகலை இருந்து வந்துள்ளது. ஜைன-பௌத்தர்கள் அவர்களிடமிருந்துதான் அத்தகைய கலையையும் பெற்றனர், அதன் வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோரையும் பெற்றனர். ஆகவே இருந்த பாரம்பரிய-கலாச்சாரக்கூறுகளுக்கு எதிராக ஜைன-பௌத்தர்கள் செயல்பட்டிருந்தால், அவர்கள் நிச்சயமாக பதில்-எதிர்ப்பை உணர்ந்திருப்பர். அதை பௌத்தத்திற்கு விரோதமாக நடந்த செயல் என்றாகாது. பாதிப்பு ஏற்படும்போது, பௌத்தர்களே புத்தர் சொன்னபடி நடக்காமல் இருந்திருக்கலாம். ஆகையால்தான், பௌத்தத்திலேயே பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளன.

வேதபிரகாஷ்
18-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

 Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture63