Posts Tagged ‘ஆதி சங்கரர்’

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சிறுபிள்ளை சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (13)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன்தர்மகீர்த்தியிடம் சிறுபிள்ளை சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (13)

Foundations - Dharmakirtis philosophy

சிறுபிள்ளை, சிறுவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனரா, எப்பொழுது?: அக்காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் சிறப்புப் பெற்ற சிறுபிள்ளை / சிறுவன் “ஆளுடைய பிள்ளை” திருஞான சம்பந்தர் தான், அவர் தான் 638-656 காலத்தில் 16 வயது வாழ்ந்து, சமண-பௌத்தர்களை தர்க்கத்தில் வென்றவர். இதனை, தர்மகீர்த்தி பற்றி ஆராய்பவர்கள் கவனிக்காமல் இந்ருந்தது / இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. “மஹாதேவர் அவர் முன்பு தோன்றி, எல்லாவற்றையும் போதித்தார். சில நேரங்களில் மஹாதேவரே, அவருடைய உடலில் புகுந்து, அவருக்குத் தெரியாத வாதங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார்”, என்றெல்லாம் தாரநாதர் விவரிப்பதும் நோக்கத்தக்கது. ஒருவேளை அக்காலத்திலேயே சம்பந்தர் சிறு வயதில் தன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்தி, பௌத்தர்-ஜைனர்களை வென்றதால், அவர் புகழ் பரவி, அதற்கேற்றார்போல, 17ம் நூற்றாண்டில், தாரநாத அப்புத்தகதை எழுதும் போது, தர்மகீர்த்தியை உயர்த்தி, சங்கராச்சார்யவை சிறுபிள்ளையாக்கி, குறைத்துக் காட்டினார் போலும்! இருப்பினும் சம்பந்தர் 16 ஆண்டுகள் வாழ்ந்தார், சங்கரர் 32 ஆண்டுகள் வாழ்ந்தார், என்றெல்லாம் கவனிக்கத் தக்கது. மேலும், சிறுவர்கள் மீது வன்முறையினை திணிப்பது, அதாவது, தோற்றால், இறக்க வேண்டும் போன்ற சரத்தையும் நோக்கத் தக்கது. ஏனெனில், சம்பந்தர், அதே காரணத்திற்காகத் தான், சிலர் ஜைனரை கழுவேற்றி வீட்டார் என்ற வாதத்தை வைத்து எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்கள் இத்தகைய விவரங்கள் முழுவதையும் படிப்பதில்லை போலும்.

kumarila bhatta - Tantravarttika- Dharmakirti

14-15 வயது பையனுடன் சண்டை போட ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்தது ஏன்?: சம்பந்தர் காலம் [c.638-654 CE] என்பதால் அவர் 16 வயது வரை தான் வாழ்ந்தார் என்றாகிறது. அப்படியென்றால், அந்த வயதிலேயே உடனுக்குடன் செந்தழில் பதிகம் பாடக் கூடிய திறமைப் பெற்றிருந்தார்; மத-தத்துவங்களில் வாதம் புரிய வல்லவராக இருந்தார்; மருத்துவம் முதலியவற்றையும் அறிந்திருந்ததால் கூன்பாண்டியனின் நோயையும் தீர்த்தார் என்ற விவரங்கள் தெரிய வருகின்றன. அதனால், சிறுவயதிலிருந்தே அவற்றையெல்லாம் கற்றுத் தேர்ந்தார் என்றாகிறது. ஆகவே, அத்தகைய சிறுவனுடன், வாதிட ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்தார்கள் என்பதே முரண்பாடாக இருக்கிறது. அக்காலத்தில் ஒருவர், இன்னொருவருடன் வாதம் புரிவார். தோற்றால், ஒப்புக் கொண்டு மற்றவரின் தத்துவத்தை, ஞானத்தை ஒப்புக்க்கொள்வார். ஆனால், ஜைனர் மற்றும் பௌத்தர் காலங்களில் தான், ஒன்று தங்களது மதத்தை ஏற்றுக் கொள் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கையுடன் வாதப்போரை ஆரம்பித்து வைத்தனர். அரசு சார்பில் மதத்தலைவர், ராஜகுரு போன்றோர் தோற்றால், அந்த அரசனை மதமாற்றி, அந்த அரசையும் அவர் மதசார்பான நாடாக்கினர். இவ்வாறு தான், ஒரு காலகட்டத்தில், பாரதம் முழுவதும் அதிகார ரீதியில் ஜைனர் மற்றும் பௌத்தர் கோலோச்சி வந்தனர். இருப்பினும் அவர்கள் பெரும்பான்மையினரான, சனாதன, வேத அல்லது இந்து நம்பிக்கையாளர்களை முழுவதுமாக மாற்ற முடியவில்லை.

Sstarving Buddha - sallekhana - suicide

சமணர்கள் வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள்: ஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்று சில நூல்களில் இருக்கிறது. ஆனால் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்தில், வாதத்தில் சமணர்கன் தோற்றவுடன் ஞானசம்பந்தர் அவர்களை, “நாணி லீர்! மன்னன் முன்னர் நல்ல சொல்கிறேன், கண்டீர்: பூணும் வெண்ணிறு பூசும்; போற்றி ஒயஞ்செழுத்தை போதும்காணொணா முத்தி இன்பம் காணலாம்,” என்றுதான் அருளினார். கழுவில் ஏற்றச் சொல்லவில்லை. சமணர் களில் சிலர் சைவ சமயத்தில் சேர்ந்தார்கள். ஆனால் பலர், வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள் என்று வருகிறது[1]. தக்கயாகப் பரணியிலும் இதே கருத்து உள்ளத. வாதத்தில் தோற்ற சமணர்களைக் கழுவேற்றுதல் ஆகாது என்று பிள்ளையார் விலக்கி அருள’ என்று வருமிடத்தில் சம்பந்தப் பெருமானின் பெருங் கருணைத் திறம் நன்கு புலப்படுகின்றது. அதுகாறும் வெளிவராத “தக்கயாகப் பரணி” நூலை ஶ்ரீமத் ஐயர் ஆராய்ந்து பதிப்பித்துக்கொண்டிருந்தார்: அவரோடு இவரும் அந்நூலைப் படித்து, ப்ரூஃப்” பார்த்துக் கொண்டும் இருந்தார். எனவே, பூரீமத் ஐயரின் கட்டளைப்படி அந்தக் கருத்தை வைத்தே, சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றவில்லை. சைவ சமயத்தில் சேருங்கள்” என்றே அருளினார்’ என எடுத்துக் காட்டப்படுகிறது[2].

Sallekhana and starving Buddha

தர்மகீர்த்தி தடுத்தது, சங்கராச்சார்ய கங்கையில் குதித்து செத்தது மற்றும் சம்பந்தர் தடுத்தது, சமணர் கழுவேறியது: தர்க்கத்தில் தோற்ற சங்கராச்சார்ய கங்கையில் குதிக்கும் போது தர்மகீர்த்தி தடுத்தது, பௌத்தத்தை ஏற்ருக் கொள்ல சொன்னார். இது வாரணாசியில் நடந்தது.  அதேபோல சமணர் தோற்று கழுவேற எத்தனித்த போது, சம்பந்தர் தடுத்த போது, அவர்கள் கழுவேறினார்கள். அதாவது, வாதத்தில் தோற்றவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கை, சரத்து அக்காலத்தில் உண்டானதா என்று கவனிக்க வேண்டும். முகமதியர் பின்னர், இதே கொள்கையினைக் கடை பிடித்தது தெரிந்ததே. ஆக, இதில் வன்முறை ஊக்குவிப்பு என்பது எவ்வாறு நடக்கிறது, தானாக சாக ஒப்புக் கொள்வது என்பது தற்கொலையிலிருந்து வேறுபட்டதா, இல்லை, அவ்வாறு சாகாவிட்டாலும், சாவு அவர்களுக்கு காத்திருக்கிறது என்ற நிலையிருந்ததா, அல்லது, மரண தண்டனை கொடுத்து, இத்தகைய கதைகளை புராணம் போல எழுதி வைத்தனரா, முதலியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஆனால், இப்பொழுது, மதவாத, வகுப்புவாத திரிபுவாதங்கள், செக்யூலரிஸ போர்வையில், இந்துமதத்திற்கு , பிராமணர்களுக்கு எதிராக வைத்து எழுதி வருகின்றனர். அதில், எடுத்துக் காட்டப்பட்ட உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

Jains persecuted - sculpture from Chidambaram

தர்மகீர்த்தி இந்தியரா, வெளிநாட்டவரா?: விகிபிடியா[3] தர்மகீர்த்தி பற்றி இவ்வாறு கூறுகிறது, “தர்மகீர்த்தி  (Dharmakīrti) (கி பி 7-ஆம் நூற்றாண்டுஇந்திய பௌத்த அறிஞர். இந்திய தத்துவ தர்க்கவியல் தர்சனத்தை அறிமுகப்படுத்திய  பௌத்த துறவியாவார். மேலும் துவக்ககால பௌத்த அணுவாதக் கோட்பாட்டை கொள்கையை நிறுவிய கொள்கையாளர். இவரது பௌத்த அணுவாதக் கோட்பாட்டின் படி பொருட்கள் எல்லாம் கண நேரம் இருப்பதாக கருதப்படுகிறது. இவர் எழுதிய நூல் ஹேதுபிந்து ஆகும். கி பி ஏழாம் நூற்றாண்டில் சுமத்திரா தீவில் பிறந்த தர்மகீர்த்தி சைலேந்திரன் என்ற பெயரில் இளவரசராக வாழ்ந்தவர். ஸ்ரீவிஜயம் பகுதியில் அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கிய இவர் பின்னர் இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த இயல் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பௌத்த சமய தத்துவங்களில் சிறந்து விளங்கியவரும்காஞ்சிபுரத்தில் பிறந்தவரும், பௌத்த சமய துவக்க கால தர்க்க தத்துவ அறிஞராகவும் விளங்கிய திக்நாகரின் புகழ் பெற்ற பௌத்த தத்துவங்களுக்கு மீள் விளக்க உரைகள் எழுதியவர். இவரை எதிர்த்து வாதிட்ட  குமரிலபட்டரை நாலந்தா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியவர்”. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், பிராமணர், சங்கரர வென்றவர் என்று எல்லாவற்றையும் விடுத்திருக்கிறார். அதாவது ஆங்கில[4] “தர்மகீர்த்தி” ஒருமாதிரியாகவும், தமிழ் “தர்மகீர்த்தி” வேறுமாதிரியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளனர்[5]. ஒருவேளை இவ்வுண்மையினை அறிந்து, தமது சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறது என்று ஒருதலைப் பட்சமான விவரங்களை மட்டும் கொடுத்துள்ளனர் போலும்.

© வேதபிரகாஷ்

13-05-2017

Jain impaled - Avudaiyar Temple-2

[1]  நாம் அறிந்த கி.வா.ஜ, பக்கம்.237.

[2]https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9C.pdf/238

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

[4] https://en.wikipedia.org/wiki/Dharmakirti

[5] If we go by Tibetan sources, he seems to have been born in South India and then to have moved to the great monastic university of Nālandā (in present day Bihar state) where he was supposedly in contact with other Buddhist luminaries, such as Dharmapāla (530–561 C.E.).https://plato.stanford.edu/entries/dharmakiirti/

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (12)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன்தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (12)

Dhamakiriti arguing with Sankara child

சங்கராச்சார்ய இரண்டாவது பிறவியில், இரண்டாம் முறை தர்மகீர்த்தியிடம் தோற்று உயிரிழந்தது: அடுத்த வருடம், சங்கராச்சார்ய பட்ட ஆச்சாரியாரின் மகனாகப் பிறந்தார். மூன்று வருடங்கள் தந்தையிடமும், இன்னொரு மூன்று வருடங்கள் மற்றவர்களிடமும் கற்று, வாதம் புரிய தேர்ச்சி பெற்றார். இங்கு வருடம் / வருடங்கள் என்றேல்லாம் இருந்தாலும், அவை என்ன ஆண்டுகள் என்று குறிப்பிடப்படவில்லை. ஏழாவது வயதில் தர்மகீர்த்தியுடன் வாதம் புரிந்தார், ஆனால், முழுவதுமாக தோற்கடிக்கப் பட்டார். தர்மகீர்த்தி தடுத்தும் கேளாமல், சங்கராச்சார்ய கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால், அவரது இளைய சகோதரர் கிழக்கு திசையில் தப்பியோடி விட்டார். 500 பிராமணர்கள் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர், 500 பிராமணர்கள் திரிபீடிகத்தை படிக்க ஆரம்பித்தனர்.

Dharmakirti who defetated Sankaracharya for four times, in four births

தர்மகீர்த்தியின் புகழ் உலகம் முழுவதும் பரவியது, பல மடாலங்கள் ஏற்படுத்தியது முதலியன: மகதத்தில் பூர்ண மற்றும் மதுராவில் பூர்ணபத்ரா என்ற பிராமணர்கள் இருந்தார்கள். அவர்கள், மிக்க சக்திவான்கள், பணக்காரர்கள் மற்றும் தத்துவ சாஸ்திரங்களில் வல்லவர்கள். சரஸ்வதி மற்றும் விஷ்ணு போன்ற கடவுளர்களது ஆசிகளைப் பெற்றவர்கள். ஆனால், இவர்களும் தர்மகீர்த்தியிடம் வாதமிட்டு தோற்றுப் போயினர். இந்த விதமாக, இவரது புகழ் உலகமெல்லாம் பரவியது. மகதத்திற்கு அருகில் இருந்த மதங்க ரிஷி காட்டில், வாழ்ந்து மந்திரங்களில் சித்தி பெற்றார். அப்பொழுது, விந்தியாசலத்தில், உத்புல்லபுஸ்ப என்பனின் மகனான புஸ்ப என்ற அரசன் ஆண்டு வந்தான். தர்மகீர்த்தி அவனிடத்தில் சென்று, தன்னை தெரிவித்துக் கொண்டபோது, பல மடாலங்களைக் கட்டிக் கொடுத்தான். தர்மகீர்த்தி அங்கு வாழ்ந்து வந்தார். “பிரமாணம்” பற்றி ஏழு நூல்களை இயற்றினார். ஆயிரக்கணக்கில் பிராமணர்களை வென்று, 50 இடங்களில் மடங்களை ஏற்படுத்தினார்[1]. குஜராத் வரை சென்று வெற்றி கொண்டார். கோடாபுரி என்ற கோவிலைக் கட்டினார். இங்கு 80 சித்தர்களின் ஸ்தோத்திரங்கள் படி, தர்மகீர்த்தி வானத்தில் பறந்து சென்று பலரை வென்றார். ஆனால், இவையெல்லாம் நம்பும்படியில்லை[2].

Dhamakiriti arguing with Sankara - boy-16

மூன்றாவது முறையாக சங்கராச்சார்ய மூன்றாவது பிறவியில், தர்மகீர்த்தியிடம் தோற்று உயிரிழந்தது: இந்நிலையில் சங்கராச்சார்ய மறுபடியும் பிறந்து, வளர்ந்தார். தனது 16 அல்லது 17ம் வயதில் மஹாதேவருடைய தரிசனம் பெற்று, வாரணாசிக்கு வந்து தர்மகீர்த்தியுடன் வாதம் புரிய அரசன் மஹாஸ்யானி என்பவனிடம் அறிவித்தார். அரசன் மணியடித்து, இவ்வாதத்தைப் பற்றி பிரகடனம் செய்தான். நான்கு திசைகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் வந்து கூடினர். தெற்கு திசையிலிருந்து, தர்மகீர்த்தி வரவழைக்கப்பட்டார். 5,000 பிராமணர்கள் கூடியிருக்க வாதம் ஆரம்பித்தது. ஆனால், சங்கராச்சார்ய, தர்மகீர்த்தியிடம் தோற்றுப் போனார். கங்கையில் குதிக்க தயாரானார், தர்மகீர்த்தி தடுத்தார், ஆனால், ஒப்புக் கொள்ளாமல் குதித்து உயிரை விட்டார். இதனால், பல பிரமாணர்கள் மதம் மாறினர், இவரின் உபாசகர்களாகவும் மாறினர். இதனால், பௌத்தம் பெருகிக் கொண்டே இருந்தது.

Dhamakiriti arguing with Sankara

நான்காவது முறையாக சங்கராச்சார்ய நான்காவது பிறவியில், தர்மகீர்த்தியிடம் தோற்று உயிரிழந்தது: தர்மகீர்த்தியின் வாழ்நாள் இறுதியில், இதே சங்கராச்சார்ய மறுபடியும் பிறந்து, முன்னர் விட அதிபுத்திசாலியானார். மஹாதேவர் அவர் முன்பு தோன்றி, எல்லாவற்றையும் போதித்தார். சில நேரங்களில் மஹாதேவரே, அவருடைய உடலில் புகுந்து, அவருக்குத் தெரியாத வாதங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார். ஆக, இம்முறை 12வது வயதிலேயே, தர்மகீர்த்டியுடன் வாதம் புரிய தயாராகி விட்டார். “முதலில் மற்றவருடன் வாதம் புரிவாயாக, ஏனெனில், தர்மகீர்த்தியுடன் வாதம் புரிந்து ஜெயிப்பது கடினம் ஆகும்”, என்று சிலர் அறிவுருத்தினர். அதற்கு, சங்கராச்சார்ய, “அவரை வெல்லாமல், உண்மையான புகழ் கிட்டாது”, என்றார். அதேபோல, தெற்கில் இருக்கும் தர்மகீர்த்தியிடம் சென்று, வாதம் புரிந்து தோற்றார். அவரின் சீடரானார். தெற்கில் சங்கரரை பௌத்தத்தை பிராமணர் போலவே இருந்து உபாசிப்பதாக, வழிபடுவதாகச் சொல்லப் படுகிறது[3]. புத்தருக்காக சங்கராச்சார்ய கட்டி கோவிலும் அங்கிருக்கிறது.

Dharmakirti - duality and advaita

தெற்கிலிருந்து சங்கராச்சார்ய வடக்கு போனதும், வடக்கிலிருந்த தர்மகீர்த்தி வடக்கில் போனதும்: இந்த தர்மகீர்த்தி-சங்கராச்சார்ய வாத-மோத கதைகளில் மூன்று முறை தெற்கிலிருந்து சங்கராச்சார்ய வடக்கு போனதாகவும், வடக்கிலிருந்த தர்மகீர்த்தி வடக்கில் போனதாகவும் உள்ளது. நான்காவது முறைதான், இருவருமே தெற்கிலேயே வாதித்தாக குறிப்பிடப் படுகிறது. மூன்று முறை தோற்று, கங்கையில் உயிரைவிட்ட சங்கராச்சார்ய, நான்காவது முறை தோற்றபோது, அவரின் சீடராகிறார்! ஆக, இந்த தெற்கு-வடக்கு திசைகள் பௌத்தர்களை, திபெத்திய பௌத்தர்களை, ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. தர்மகீர்த்தியே, தெற்கில் பிரமாணராகப் பிறந்து, குமாரில பாட்டரின் மறுமகனாக இருந்து, பிராமண உடையை எடுத்துக் கொண்டபோது, குமாரில பட்டர் திட்டியதால், பௌத்தராக மாறினார் என்று கதைகள் சொல்கின்றன. நாலந்தாவில் போத்தித்து வந்த இவர், திபெத்தில் பிரபலமாக இருந்தார். இவரது காலம் ஆறு-ஏழாம் நூற்றாண்டுகள், சுமார் 600–660 CE, என்றெல்லாம் குறிக்கப்படுகின்றன[4].  கிடைத்துள்ள நூல்களில் காணப்படும் தத்துவம், தத்து விளக்கம், மறுப்பு-எதிர்ப்பு-ஆதரிப்பு போன்ற காரணிகளை வைத்துக் கொண்டு இம்முடிவுக்கு வந்துள்ளார்கள். எப்படியிருந்தாலும், இவர்கள் தர்மகீர்த்தியின் காலத்தை 500-660ற்குள் வைப்பதால்[5], நிச்சயமாக, இவர் ஆதிசங்கரர் காலத்தில் இருக்கவில்லை என்று உறுதியாகிறது. அப்படியென்றால், அது கட்டுக்கதை என்றாகிறது. அதாவது, பௌத்தர்கள் எழுதிவைத்த சர்ச்சைக்குள்ள, சரித்திரம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகளின் [polemical and controversial writings, legends and myths]  ஆதாரமாக வைத்து புனையப் பட்ட இன்னொரு கதை என்றாகிறது.

Foundations - Dharmakirtis arguments

மெத்தப்படித்த தர்மகீர்த்தி சிறுவர்களிடம் ஏன் தர்க்கம் /வாதம் புரிய வேண்டும்?: தர்மகீர்த்தியின் வயது இதுதான் என்று குறிப்பிடப்படவில்லை. மேலே குறிப்பிட்டபடி, ஆராய்ச்சியாளர்கள் அவர் 50-70 வருடங்கள் வாழ்ந்ததாக தோரயமாக கணக்கு போட்டு சொல்லியிருக்கிறார்கள்.  தர்மகீர்த்தி சங்கராச்சாரியரோடு பிரிந்த வாதங்கள் விவரங்களில் கீழ்கண்டவைப் பெறப்படுகின்றன. சங்கராச்சார்ய நான்கு முறை பிறந்து, மூன்று முறை இறந்து, மறுபிறப்பு எடுத்து, நான்கு முறை வாதம் புரிந்துள்ளார்:

தர்மகீர்த்தியின் வாதங்கள் சங்கராச்சார்யரின் வயது தோற்றப் பிறகு சங்கரச்சார்யரின் நிலை

முதல் வாதம்

குறிப்பிடப்படவில்லை கங்கையில் குதித்து இறப்பு
இரண்டாம் வாதம்

7

கங்கையில் குதித்து இறப்பு
மூன்றாம் வாதம்

16-17

கங்கையில் குதித்து இறப்பு
நான்காம் வாதம் 12

தர்மகீர்த்தியின் சீடரானார்.

ஆக, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு வருடம் இடைவெளி விட்டு, இவரது காலத்தை கணக்கிட வேண்டுமென்றால், 1 + 7 + 1 + 16 + 1 + 12 = 38 வருடங்கள் வருகின்றன. அதாவது, 38 ஆண்டுகளில் ஒரே ஆளுடன் நான்கு முறை வாதிட்டிருக்கிறார். முதல் தடவை, இவர் வாதிடும் போது, இவரது வயது 50 என்று வைத்துக் கொண்டால் கூட, இவருக்கு கடையாக வாதிடும் போது 88 வயதாகியிருக்க வேண்டும். அப்படியென்றால், 50, 67, 75 மற்றும் 88 வயதுகளில் வாதிட்டபோது, 7, 16-17 மற்றும் 12 வயது சிறு பையன்களிடம் தான் வாதித்துள்ளார். வயதான தேர்ந்த, சிறந்த தர்க்கம் புரிய யாரும் இல்லாமலா போய்விட்டனர்? நிச்சயமாக தர்க்கத்தில் யார்-யாருடம் தர்க்கம் புரியலாம் என்ற நியதியெல்லாம் இருக்கிறது. சிறுவர்களுடம் / சிறுவர்கள் தர்க்கம் புரியலாம் என்றால், அக்காலத்தில் அத்தகைய நிலை என்ன, ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்றும் ஆராய வேண்டியுள்ளது. போதாகுறைக்கு, அக்குழந்தைகளை கங்கையில் குதித்து இறந்துள்ளனர். அப்படியென்றால், அந்த சிறுபையன்களின் தைரியம், அறிவு, பல்லாயிரம் கி.மீ நடந்து வாரணாசிக்கு வந்தது முதலியவை பிரமிப்படைய வைப்பதாக இருக்கிறது. பௌத்தர்கள் ஏன் அப்படி, சிறு பிள்ளை வென்றதாக கதைகள் எழுதி வைக்க வேண்டும்?

© வேதபிரகாஷ்

13-05-2017

Dharmakirti national musueum

[1] He established about fifty48 centres for the Doctrine. From there he went to the border-Iand49 *Gujiratha. He

converted many brahmarJa-s and tirthika-s into the Law of the Buddha. He built a temple called *Gotapuri. 235

[2] What is now current as the stotra of the eighty siddha-s cannot be considered reliable. Still it is clear that the account of his flying through the’ sky after defeating his opponents etc is based on this. 235.

[3] Towards the end of his life the same *Sal11karacarya was born again as the son of *BhaHa * Adirya the second54 and in intelligence became stronger than before. His god (Mabadeva) appeared before him in person and gave him lessons. Sometimes he (Mahadeva) even merged into his body and taught him some hitherto unknown arguments. At the age of twelve, he wanted to enter into a debate with Sri Dlnrmakirti. The . brahmary,a-s told him, ‘It is better for the time being to debate with others, whom you are sure to defeat. But it is hard to defeat Dharmakirti.’ He said, ‘Without defeating him there can be no real fame in debate.’ Saying this, he went to the south and started debate with

this agreement that the defeated one had to accept the other’s creed. Sri Dharmakirti became victorious and  converted him into a follower of the Law of the Buddha. It is said that in the south, he (Sa11lkara) used to worship

the Law of the Buddha as a brahmaIJa [Fol 93A] following the practices of an upasaka. The temple built55 by him still exists. 236-237

[4] Balcerowicz, Piotr. On the Relative Chronology of Dharmakīrti and SamantabhadraJournal of Indian Philosophy 44.3 (2016): 437-483.

[5]

Author Period assined approximately

Relying upon evidence, argument etc

Pathak, K. B Various dates . “Dharmakirti and Sankaracharya.” Journal of Royal Asiatic Society 18.

 

Lindtner 530-600 CE partly on the basis of the problematic dating of the Madhyamaka-ratna-pradīpa and its attribution to Bha¯viveka, etc.)
Kimura 550-620 CE

mainly on the basis of circumstantial evidence of Chinese sources, attempted to push Dharmakı¯rti’s date back to 550–620.

Erich Frauwallner 600-660 CE

rest primarily on the juxtaposition of the travelogues of two Chinese

pilgrims who visited Na¯landa¯ university where Dharmakı¯rti is known to have taught.    Xuanzang (602–664), who visited Na¯landa¯ during his travel to India between 629–641, apparently99 was completely silent on Dharmakı ¯rti, even though he did mention the names of some renowned Buddhist thinkers teaching at Na¯landa¯ 1961

650-700 CE

On the other hand Yijing (635–713) travelled to Na¯landa¯ during his trip to India between 673–685 and included Dharmakı¯rti’s name among the prominent teachers of the university.

P Balcerowicz 550-610

As contemporary of Samantabhadra 530–590 and Pu¯jyapa¯da Devanandin 540–600

 

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (11)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன்தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (11)

Pre-christian Buddhism in Britain - Ireland

இடைக்காலம் வரை தென்னிந்தியாவில் ஜைனபௌத்தத்தின் தாக்கம்: ஆரம்பகாலங்களில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் கிரேக்கர், அரேபியர் பிறகு முகமதியர் என்று அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு, முக்கியமாக தங்களது வியாபாரத்திற்கு முக்கியம் கொடுத்து வாழ்ந்ததால், இவர்கள் எண்ணிக்கைக் குறைய-குறைய தாக்குதல்கள் அதிகமாயின. குறிப்பாக பௌத்தம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலேயே முதல் நூற்றாண்டுகளில் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. டொனால்டு ஏ. மெக்கன்ஸி என்பவர் தன்னுடைய புத்தகத்தில் இவ்விவரங்களை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்[1].  ஆனால், யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் ஆதிக்கம் பெற்றுவந்த நிலையில், மற்றவர்களின் ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்தன. மற்ற நம்பிக்கையாளர்களையும் மதம் மாற்ற ஆரம்பித்தனர். அம்முயற்சிகளில், இம்மூன்று மதங்களுக்கிடையே இருந்த போட்டி, சன்டைகள், போர்கள் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன. அந்நிலையில் மற்ற மதங்களின் நிலை பற்றி சொல்லவேண்டியதில்லை. காலனிய ஆதிக்கம் வந்தபோது, ஐரோப்பியர் ஆசிய-ஆப்பிரிக்க-அமெரிக்க நாட்டு மக்களை அடக்கியாள திட்டமிட்டனர். 20 நூற்றாண்டுகள் வரை, அத்தகைய முறைகள் சித்த்ஆந்தம் மூலமும் செயல்பட்டது. அதற்கு சரித்திரம் [அவர்களே எழுதிய] உதவியது.

Pre-christian Buddhism in Britain - Ireland- donald Mackanzie

ஜைனபௌத்தர்கள் வடமேற்கு, வடக்கு, தெற்கு என்று நகர்ந்தது: மதமோதல்கள் அதிகமானபோது, ஜைன-பௌத்தர்கள், இடம் பெயர வேண்டியதாயிற்று. இவர்கள் மதம் மாற நேரிட்டது. தப்பித்தவர்களுக்கு, இந்தியா புகலிடம் அளித்தது. இடைக்காலத்தில், ஜைன-பௌத்த மதங்கள் முகமதியர்களின் தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல், தெற்கில் நகர்ந்து செல்ல ஆரம்பித்தனர். முன்பும் அவர்களது மடாலயங்கள் இருந்தன. ஆனால், இடைக்காலத்தில், தங்களது அதிகாரத்தைத் தக்கக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்பு, அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களுடன் – இந்துக்களுடன், தங்களது நிலையை அறிந்து அனுசரித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், முகமதியர்களின் அடக்குமுறைகளினால், பெரிதும் பாதிக்கப்பட்டது இவர்கள் தாம். “களப்பிரர்களின்” கொடுமைகளை இங்கு விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. முகமதியர் வடக்கில் கொள்ளை, கொலை அட்டகாசம், ஆதிக்கம் முத்லியவை அதிகமாகிய போது, அரசர்களின் நிலையும் மாறின. இதனால், இவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர். ஆனால், முதல் நூற்றாண்டுகளில் இவர்கள் மற்றவர்களுக்கு அதிக கொடுமைகள் புரிந்ததால், மக்கள் விழிப்புக் கொண்டு, சைவம்-வைணவம் என்ற ரீதியில் ஜைன-பௌத்தர்களை எதிர்க்க ஆரம்பித்தனர். இதனால், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் மூலம், விழிப்புணர்வு ஏற்பட்டது. 14ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் முகமதியர்களின் அட்டகாசம் ஆரம்பித்தது.

Buddha in Egypt

லாமா தாரநாதா என்பவரின்இந்தியாவில் பௌத்தம்என்ற நூல் கொடுக்கும் விவரங்கள்[2]: லாமா தாரநாதா 1575ல் பிறந்து, தனது 34ம் வயதில் [சுமார் 1609ம் ஆண்டு] “இந்தியாவில் பௌத்தம்” என்ற நூலை எழுதினார். இது “புத்த மஹாத்மியம்” என்றும் சொல்லலாம், ஏனெனில், முழுவதும் சரித்திரமாக இல்லாமல், புத்தர் மற்றும் பௌத்தத்தின் சிறப்பை, மேன்மையை மற்றும் வெற்றியை புகழ்ந்து எழுதப்பட்ட கதைகள் கொண்ட புராண நூலாக உள்ளது[3]. ஏ.ஐ. வோஸ்திரிகோவ், இந்நூல் 143 ஏடுகளைக் கொண்டிருந்தன, ஏ. குருன்வெடல் என்ற ஜெர்மானியர் மொழிபெயர்த்தார், மூல சுவடிகள் / ஏடுகள் ஐந்தாவது தலாய் லாமா காலத்தில் [1617-1682] பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டபோது, அழிக்கப்பட்டது[4].  இங்கு பௌத்தர்களை யார், எதனால், ஏன் தாக்கப்பட்டனர் என்று தெரியவில்லை, பிறகு மீண்ட ஆவணங்களை வைத்து, உருவான, அத்தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இப்பொழுது, பௌத்தர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை[5].

Dharmakirti - Tranatha Buddhism in India

தர்மகீர்த்தியின் புகழும் பௌத்தத்தை பரப்பிய விதமும்: காககுஹா என்ற இடத்தில் தர்மகீர்த்தி என்ற புத்த பிக்ஷு இருந்தார். அவர் ஆறு தர்சனங்களை அறிந்த தத்துவ விற்பன்னர்களைத் தோற்கடித்து, பௌத்தத்தின் சிறப்பை எடுத்துக் காட்டினார். ஆயிரக் கணக்கான பிராமணர்கள் தோற்று, பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர். நிர்கந்த, மீமாஸக, பிராமண, தீர்த்திக என்று எல்லா பிரிவினரையும் வெற்றிக் கொண்டார். மணியை அடித்து, “இன்னும் என்னுடம் வாதம் புரிய யாராவது உள்ளனரா?”, என்று கேட்டார். ஆனால், தப்பித்தவர் எல்லாம் விந்தியாசலம் தாண்டி ஓடி மறைந்தனர். அவர் பழைய சித்தாந்திகளின் வழிபாடு ஸ்தலங்களை, அவை அழிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததால், புதுப்பித்துக் கட்டினார்[6]. பிறகு, காட்டில் சென்று தியானம் செய்ய சென்று விட்டார். அதாவது அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் இடிக்கப் பட்டன, பௌத்தாலயங்களாக மாற்றிக் கட்ட்டப்பட்டன என்பதை அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய, பௌத்தப் பற்று கொண்ட தர்மகீர்த்தி, பழைய கோவில்களை ஒன்றும் புதுப்பித்துக் கட்டியிருக்க மாட்டார்.  அதாவது, ஆறாம் நூற்றாண்டிலேயே அத்தகைய இடிப்புகள் நடந்துள்ளது என்பதனையும் கவனிக்க வேண்டும்[7].

Dharmakirtis - Sankara arguments

சங்கராச்சார்ய, தர்மகீர்த்தியை எதிர்கொண்டது: இந்நிலையில் சங்கராச்சார்யா, ஶ்ரீ நளேந்திரர் என்பருக்கு தான் வாதம் புரிய தயாக இருப்பதாக செய்தி அனுப்பினார். ஆனால், நாலந்தாவில் உள்ள பிக்ஷுக்கள் ஒரு வருடம் கழித்து வாதம் வைத்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்தனர். அதாவது, தெற்கில் சென்ற தர்மகீர்த்தியை வரவழைக்க நேரத்தை எடுத்துக் கொண்டனர். வாரணாசியில், அரசன் பிரதோத்யா / பிராதித்யா வாதத்திற்கு ஏற்பாடு செய்தார். சங்கராச்சார்யா, தர்மகீர்த்தியிடம், “தர்மகீர்த்தி தோற்றால் கங்கையில் மூழ்கடிக்கப்பட வேண்டுமா அல்லது மதம் மாற்றப்பட வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்கலாம், ஆனால், நான் தோற்றால் கங்கையில் குதித்து என்னுயிரை மாய்த்துக் கொள்வேன்”, என்று எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார்[8].  இருவரிடையே வாதம் ஆரம்பித்தது, ஆனால், சங்கராச்சார்யா எல்லா விதத்திலும் தோற்கடிக்கப் பட்டார். அவருக்கு பதில் அளிக்க எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டது. அந்நிலையில், கங்கையில் குதித்து, இறக்கத் தயாரானார். அப்பொழுது, தர்மகீர்த்தி தடுத்தார். ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை, தன்னுடைய சீடனான பட்ட ஆச்சார்யாவை நோக்கி, “மொட்டையெடித்துக் கொண்டு இவருடன் வாதம் புரிவாயாக, ஒரு வேளை உன்னால் வாதத்தில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், நான் மறுபடியுமனுன்னுடைய மகனாகப் பிறந்து வந்து இவருடன் வாதிப்பேன்”, என்று கூறி, கங்கயில் குதித்து உயிரை விட்டார். தர்மகீர்த்தி சங்கர்ராச்சார்யருடைய சீடர்கள் பலரை பௌத்த மதத்திற்கு மாற்றினார். சிலர் தப்பி ஓடி விட்டனர்.

© வேதபிரகாஷ்

13-05-2017

Dharmakirti - ferocious

[1] Donald A. Mackanzie, Pre-Christian Buddhism in UK and Ireland, Blackie & Son Ltd, UK, 1928.

[2] Deviprasad Chattopadhyaya (ed.) and Lama Chimpoa (Trans.), Taranatha’s History of Buddhism in India, Motilal Banarasidas, New Delhi, 1990.

[3]   Deviprasad Chattopadhyaya , in his preface to this book writen on May 26, 1970, Preface, p.xxiii

[4] The original printing blocks of Taranatha’s works were largely destroyed “during the persecution of the Jo-nan~pa sect in the time of the Fifth Dalai Lama (Nag-bdan-bJo-bzanrgya-mtsho: A.D. 1617-1682) in the first half of the 17th century AD. Preface, p.xxiv.

[5] பௌத்தம் சைனாவினால் எப்படி கட்டுப்படுத்தப் பட்டது போன்ற விவரங்களையும் இவர்கள் படிப்பதில்லை, ஆராய்ச்சி செவதில்லை.

[6] He next went to *DravaIi and, by ringing a bell, proclaimed: ‘Is there anybody in this place capable of entering into a debate?’ Most of the tirthika-s ran away while some admitted that they were not capable of it. He rebuilt there all the older centres of the Doctrine which had been damaged. He sat on meditation in a solitary forest. 232

[7] ஏனெனில், முகமதியர்களாக மாறியவர்களில் பெர்ம்பாலோர் பௌத்தர்களாக இருந்த நிலையில், அவர்களது கோவில் இடிப்பு, விக்கிர-அழிப்பு சித்தாந்தம் இன்னும் அதிகமாகின என்பதை அவர்களது நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

[8] On the ev; of the debate between *Sal11karadirya and Sri Dharmakirti, * Sa111kara declared to the people in the

presence of the king: ‘In case of our victory, we shall decide whether to drown him into the *GaIlga or to convert him into a til’thika. In case of his victory, I shall kill myself by jumping into the *Gal1ga.’ 233.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

மே 12, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

Sankara vijaya accounts

ஆதி சங்கரர் பௌத்தர்களைக் கொன்று குவித்த கதை உருவானது: இனி ஆதிசங்கரர் எப்படி படைகளுடன் திக்விஜயம் செய்து, சென்றவிடமெல்லாம் பௌத்தர்களைக் கொன்றுகுவித்தார் என்ற குற்றச்சாட்டைப் பார்ப்போம். இக்கருத்தை இன்றைய பௌத்தர்கள், நியோ-பௌத்தர்கள், அம்பேத்கரைட்ஸ், தி.கவினர், மற்ற ஹிந்து-விரோத குழுக்கள் முதலியோர் பரப்பி வருகின்றனர். உண்மையினை ஆராயாமல், சில மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்களும் அதை பிரசாரம் செய்து வருகின்றனர்.
K. Jamanadas, Tirupati Balaji was a Buddhist Shrine, www.ambedkar.org/Tirupati/Tirupati.pdf
K. S. Bhagavan,  Adi Shankara’s Anti-people philosophy, The Modern Rationalist, Vol.XII, no.6, Feb.1985, pp.8-12.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -1, The Modern Rationalist, Vol.XII, no.7, March 1985, pp.5-6.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -2, The Modern Rationalist, Vol.XII, no.8, April 1985, pp.5-10.
David N. Lorenzen, Warrior Ascetics in Indian History, Journal of the American Oriental Society, Vol. 98, No. 1 (Jan. – Mar., 1978), pp.61-75 (article consists of 15 pages).
இவையேல்லாமே, “சங்கரவிஜயம்” என்ற நூற்களில் காணப்படும், சில வரிகளை வைத்துக் கொண்டு, அத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆதிசங்கரரைத் தாக்கும் போக்கில், இந்துமதத்தை தூஷிக்க வேண்டும் என்ற போக்குதான், இவர்களின் எழுத்துகளில் உள்ளதே தவிர, உண்மையினை அறிய வேண்டும் என்ற ஆராய்ச்சி நெறி காணப்படவில்லை.

Sankara vijaya texts - later period

18-19வது நூற்றாண்டுகள் வரை திருத்தப்பட்ட சங்கரவிஜயங்கள்: உள்ள “சங்கரவிஜயம்” எனப்படும் நூல்களைப் படிக்கும்போது, காஞ்சிமடம் மற்றும் சிருங்கேரிமடம் இவற்றிற்குள் உள்ள பூசல்கள், சண்டைகள் அத்தகைய சங்கரவிஜய எழுத்துப் பிரதிகளில் தத்தமது மடத்தின் பெருமையினை பறைச்சாற்றிக் கொள்ள பல மாற்றங்களையும், இடை செருகல்களையும் செய்துள்ளார்கள் எனத்தெரிகிறது.
ஸ்ரீராம சாஸ்திரிகள், ஆனந்தகிரி சங்கரவிஜயத்தில் ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமடம், ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
…………………………, வ்யாஸாசலீய சங்கரவிஜயம், காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003.
நடுநிலையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவரின் ஆராய்ச்சியின்படி, சங்கரவிஜயங்கள் எல்லாம் 18-19ம் நூற்றாண்டுகள் வரை எழுதப்பட்டு வந்துள்ளன. அதாவது, திருத்தங்கள், மாற்றங்கள், இலைசெருகல்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆகையால், சரித்திர ரீதியாக அவை சொல்வதை எடுத்துக் கொள்ளமுடியாது. மற்ற எல்லா மடங்களும் ஆதிசங்கரர் காலம் 509-477 BCE என்று பின்பற்றும்போது, சிருங்கேரி 788-820 CE தேதியை பயன்படுத்துகிறது. ஆகவே ஆதிசங்கரர் முதல் தற்பொழுதுள்ள சங்கராச்சாரியார்களின் பட்டியல்களும் அவ்வாறே உள்ளன. அதாவது சிருங்கேரியின் பட்டியலின்படி 36வது மடாதிபதி பாரதி தீர்த்தர் ஆவர். முதல் எட்டு மடாதிபதிகளுக்கு தேதிகள் குறிப்பிடவில்லை. பத்தாவது மடாதிபதி வித்யா சங்கர தீர்த்த என்பவருக்கு C.1228-C.1333 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
A. K. Sastri, A History of Sringeri, Prasaranga, Karnataka University,  Dharwad, 1982, Appendix – III.
காஞ்சிமடம் மடாதிபதிகளின் வரிசைபடி 509-477 BCEலிருந்து ஆரம்பித்து
தற்பொழுதையவர் 69வதாக உள்ளார். பொதுவாக, இம்மடங்கள் தங்களது தொன்மையினை எடுத்துக் காட்டிக் கொள்ள மேற்கொண்டுள்ள போட்டியில், ஆதிசங்கரரின் தொன்மையினை பாதிக்கும் முறையில், சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். அதனால், அவற்றில் காணப்படும் வேறுபாடுகளை, இந்துவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்.

Sankara vijaya accounts

காலின் மெகன்ஸி, ஓலைச்சுவடி சேகரிப்பு, பிரதியெடுத்தல், பிழைதிருத்தங்கள் பெருகுதல்: காலின் மெகன்ஸி என்பவர் பல இடங்களுக்குச் சென்று, லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் (இந்தியாவின் அக்காலப் புத்தகங்கள்), முக்கியமான நாணயங்கள், அத்தாட்சி பொருட்கள் முதலியவற்றை சேகரித்து இங்கிலாந்திற்கு அனுப்பி வந்தார். ஆனந்தானந்தகிரி அல்லது ஆனந்தகிரி என்பவரால் எழுதப்பட்ட சங்கரவிஜயம் அதில் இருந்தது. மெகன்ஸி அதைப் படித்துவிட்டு, “சங்கரரின் கட்டுக்கதை” என்று குறிப்பிட்டார்.
Colin Mackanzie, The Oxford Catalogue of Sanskrit Manuscripts, Bibilotheica Indica series, London, 1881.
ஆனால், நம் மக்களோ அக்கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டு சரித்திரம் ஆக்க முயற்ச்சிக்கின்றனர். மெகன்ஸி சில நேரங்களில் ஓலைச்சுவடிகள் அரிதாக இருந்தால் பிரதியெடுக்கச் செய்து அதனை வைத்து அசலை எடுத்திச் சென்றுவிடுவார். அவரிடம் வேலைப் பார்த்தவர்கள் இந்திய பண்டிதர்களே. 18-19வது நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் இந்திய சமூகத்தைச் சாதிகளின்மீதும், சமயப்பிரிவுகள், குறிப்பாக சமய-உட்பிரிவுகள் மூலம் பிரிக்க முயன்றனர். இதற்காக பல “ஜாதி-சரித்திரங்கள்” எழுதவைத்தனர்.
அதுமட்டுமல்லாது, நீதிமன்றங்களில் தமது மதப்பிரச்சினைகளை எடுத்துச் செல்லத் தூண்டி அதற்கேற்ற ஆதாரங்களைக் கேட்க ஆரம்பித்தனர். அவ்வாறு கேட்கும்போது, இந்தியர்கள் ஆதாரங்கள்/அத்தாட்சிகளை எடுத்துவருவர், அவற்றை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுங்கள் என்று கூறலாம் அவற்றை அபகரித்து விடலாம் என்பதுதான் அவர்களின் யுக்தி.

sringeri - Kanchi controversies

புதிய சங்கர விஜயங்கள் உருவானது எப்படி?: உதாரணத்திற்கு, 1844ல் காஞ்சிபுரத்தில் “தாதாங்க-ப்ரதிஸ்தா” என்ற சடங்கை ஜம்புகேசஸ்வரத்தில் உள்ள அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு செய்வதற்கு இரண்டு மடங்களும் போட்டியிட்டன. உடனே ஆங்கிலேயர்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாணப் பணித்தனர். விவரம் அறியாது அவ்வாறே சென்றன. ஆதாரம் கேட்டபோது, காஞ்சிமடம் “சிவ-ரஹஸ்யம்” மற்றும் “மார்க்கண்டேய-சம்ஹிதை” என்ற இரண்டு நூல்களை ஆதாரமாக சமர்ப்பித்தனராம். ஆனால், சிருங்கேரிக்கு அத்தகைய ஆதாரம் இல்லாதபோதுதான், இந்த சங்கரவிஜயம் இப்பொழுது உலாவரும் “வித்யயரண்யரின் சங்கரவிஜயம்” எனப்படும் நூல் உருவாக்க்கப்பட்டதாம்!
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003, ப.46.
பிறகு படிப்படியாக மற்ற விவரங்கள் சேக்கப்பட்டன. டபிள்யூ. ஆர். அந்தர்க்கர் எடுத்துக்காட்டுபவை:

  1. சித்சுக பிரதியில் “ஜைனர்கள், மஹாவீரர்”, என்றிருந்தது சதாநந்த,
    சித்திவிலாச பிரதிகளில், “பௌத்தர்கள், பௌத்த குரு” என்று மாற்றப்பட்டுள்ளது (ப.28).
  2. மற்ற சங்ரவிஜங்களில், சிவன் சங்ரராக அவதாரம் எடுக்கும்போது, பிரஹத்-சங்கரவிஜயத்தில், விஷ்ணுவே புத்தராக அவதாரம் எடுக்கிறார் (ப.56).
  3. ஒரு குறிப்பிட்ட சங்கரவிஜய பிரதிகளிலேயே உள்ள சுலோகங்கள் 11 முதல் 473
    வரை வித்தியாசப்படுகின்றன (ப.49-51).
  4. மத்வ, ஆனந்தகிரி முதலிய சங்கரவிஜயங்களைத் தவிர, மற்றவைகளில் ஜைனர்கள், பௌத்தர்கள் குறிப்பிடப்படுவதில்லை.
  5. சிருங்கேரி சங்கரவிஜயத்தில் “‡பனர்”, “திகம்பரர்” என்ற வார்த்தகள்
    அதிகமாகவும் “புத்த” என்ற வார்த்தை குறைவாகவும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.
  6. “மத்வரால்” எழுதப்பட்டது என்பது, 1798 வரை ததருத்தி எழுதப்பட்டு
    வருகிறது (ப.49).
  7. ஐரோப்பியர்களே, சீனர்களின் குறிப்புகளை அளவிற்கு மீறி நம்பவேண்டாம்
    என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் நாம், அவற்றை முழுவதுமாக
    நம்பொகிறோம் (ப,98).

Sankara vijaya accounts- vimsara-he preaching to Arabs

ஆதி சங்கரர் அரேபியாவுக்குச் சென்று போதித்தது: சீன-குறிப்புகளினின்றுதான் இந்த சர்ச்சை எழும்பியுள்ளதால், ஆதாரங்கள் இல்லாமல், சரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள், இதனை பெரிது படுத்து எழுதுவது தகாததாகும். ஆகவே, ஆங்கிலேயர்களும் தமது பங்கிற்கு இடைசெருகல்கள் செய்திருந்தால், அது அவர்களுக்குத் தான் தெரியும். எனவே, இந்தியர்கள் பல விதங்களில் பாதிக்கப்படும் நிலையில்தான் இருக்கின்றனர். ஆதிசங்கரர் அரேபியாவிற்கு சென்று போதித்தது: இன்னும், வேடிக்கை என்னவென்றால், சங்கரர் தமது திக்விஜயத்தில் அரேபியாவிற்குக் கூடபோனார், ஆகாயத்திலிருந்தே அரேபியர்களுக்கு போதித்தார் என்றும் உள்ளது! “விம்ஸர” என்ற நூல், “ஆதிசங்கரர் 64 நாட்களுக்கு வானத்தில் இருந்து கொண்டே வேதங்களின் மூன்று மார்க்கங்களான, கர்மா, உபாஸனா மற்றும் ஞானம் முதலியவற்றை அங்கு வாழ்ந்த யூகிக்களுக்கு அரேபிய மொழியிலேயே உபதேசித்தார். அவர்களும் சிரத்தையாக அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அரேபிய மொழியிலேயே அவற்றை எழுதி வைத்துக் கொண்டனர். அவைதாம் பிறகு புனித குரான் ஆனது”.
K. V. Subbaratnam, The Date of Sri Sankara, Vani Vilas Press, Srirangam, 1987, p.24
[கடல் கடந்து சென்றால், சங்கரரையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள் என பயந்து, அவரை ஆகாயத்தில் பறக்கவிட்டதுடன், ஆகாயதிலேயே அதாவது பூமியின்மீது கால்கள் படாமல் நிறுத்திவைத்தது நன்றாகவே தெரிககறது! பாவம், இடைச்செருகல் செய்தவர், காலத்ததற்கேற்ற்வாறு செய்துள்ளார் போலும்!]

Sankara and Kapalikas

ஜைன-பௌத்த சர்ச்சை நூல்கள் இத்தகைய நூல்களுக்கு தூபம் போட்டது: முன்பு வாதங்களில் தோற்றவர்கள் மேற்கில் கடலுக்கு அப்பால் அனுப்பப்பட்டனர் என்று குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. ஆகவே இவற்றை வைத்துக் கொண்டு, முகமது நபியே, சங்கர அத்வைதம் அவ்வாறு அறிந்து, தானும் பலகடவுளர்களை வழிபட்டு வந்த அரேபியர்களை ஒன்றுபடுத்தி, ஒருபுதிய மதத்தை நிறுவினார் என்று வாதிடலாம். ஏனெனில், முகமது நபி, மெக்காவில் இருந்த 360 விக்கிரங்களை உடைத்தாரம். அப்பொழுது, அவர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ஒரே ஒன்றை விட்டுவைத்தாராம். அதுதான் காஃபாவில் உள்ள விக்கிரம் / கருப்பான வெள்ளைக்கல். உண்மையில், ஆராய்ச்சிரீதியில், காலக்கணக்கியல் மற்றும் இதர ஆதாரங்களுடன், அத்தகைய கருதுகோளை சித்தாந்தம் ஆக்கலாம், சித்தாந்தத்தை ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கலாம், சரித்திரமாக்கலாம். [இப்பொழுது ஆதிசங்கரர் தமது அத்வைதத்தை இஸ்லாத்திலிருந்து காப்பியடித்துதான் உருவாக்கினார் என்று சரித்திர ஆசிரியர்கள் தாராளமாக எழுதி வருகிறார்கள்].

Sankara and Kapalikas- fight

ஆதிசங்கரர் சுதன்வன் படைகளுடன் சென்றாரா?: இனி, சங்கரதிக்விஜயத்திற்கு வரும்போது, குறிப்பாக, “மத்வர்/மத்வாச்சாரியார்” என்பவர் எழுதியாகச் சொல்லப்படும் சங்கரவிஜயத்தின்படி, “சங்கரர் சுதன்வ என்ற அரசன், மற்றும் பக்தகோடிகளுடன் தனது தத்துவத்தைப் பரப்புவதற்கும் மற்றும் அதனை எதிர்ப்பவர்களை வாதிட்டு ஜெயிப்பதற்கும் புறப்பட்டார்” (காண்டம்.15, வரி.1). இதில் என்ன வேடிக்கை என்றால், குறிப்பாக பற்பல இந்துமதப் பிரிவினர்களைத்தான் வெற்றிகொண்டார் என்றுள்ளது. நியாயவாதிகளை வென்றார், கபிலருடைய சித்தாந்தத்தை முடித்தார், வைஷ்ணவத்தை மண்ணோடு மண்ணாக மறையச் செய்தார் (10.118-119). காபாலிகர்களுடந்தான் சண்டை ஏற்பட்டது தெரிகிறது. ஒரு காபாலிகன், சங்கரரை, அவரது சீடன்போல நடித்து, கொல்லவருகிறான். அதிலும், “நரசிம்மரே” வந்து, அதாவது மற்றொரு சீடர் பத்மபாத “நரசிம்மராகி”, காபாலிகனைக் கொன்று, சங்கரரைக் காப்பாற்றியதாக உள்ளது (காண்டம்.11). எனவே இக்கதைகளை நம்பமுடியாது, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நியாயம், தர்மங்களை விடுத்த பிராமணர்களை கடுமையாகச் சாடுகிறார். மற்ற திமிரான எதிராளிகளை வென்று மேற்கு கடலுக்கு அப்பால் அனுப்பி விடுகிறார் (15.29). சாக்தகள், பாசுபத-காபாலிகர்கள், வைணவர்கள் இவர்களை வென்றதாக பல இடங்களில் உள்ளது (15.164). [இதையெல்லாம் படித்தால், அவர்களுக்குத் தான் கோபம் வரவேண்டும்]
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
முன்னுரையில், கே. ஆர். வெங்கடராமன் குறிப்பிடுவதாவது, “சுதன்வ என்பது கவியின் படைப்பு”, அதாவது கற்பனைப் பாத்திரம். ஏனெனில், எப்படி சிவன் சங்கரராக, முருகன் குமாரில பட்டராக பிறந்தார்களோ இந்திரனே சுதன்வனாகப் பிறந்தான், என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. மேலும் சிருங்கேரிமட சங்கராச்சாரியாரே (அதாவது ஸ்ரீ மத்வர் பிறகு, ஸ்ரீ வித்யாரண்யர் (1380-1386) என்ற பெயருடன் மடாதிபதியானார்) இதை எழுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சரித்திரத்தன்மையற்ற அந்த ஆவணங்களின் நிலையை நன்றாக அறிந்து கொள்ளலாம்.

சுதன்வன்அரசன்ஒரு கட்டுக்கதை: சரித்திர-ரீதியில் சுதன்வ என்ற அரசன் இருந்தது, அரசாண்டது என்ற குறிப்பே இல்லை. ஆகையால், இது 18-19வது நூற்றாண்டுகளில் சங்கரவிஜயம் எழுத ஆரம்பித்த மடங்களின் சார்புடையவர்களின் கற்பனையே ஆகும். இருப்பினும் அவன் படைகளுடன், வில்-அம்புகளுடன் சென்று காபாலிகர்களைக் கொன்றதால், அதே மாதிரி, பௌத்தர்களையும் கொன்றிருப்பான், என்று ஒருவர் குறிப்பிட்டதும், அதை மற்றவர்கள் எடுத்து தங்களது எழுத்துகளில் எடுத்தாள ஆரம்பித்து விட்டனர்! இனி விவரமாகப் பார்ப்போம்.

சுதன்வன் குமாரில பட்டரின் தூண்டுதலால் பௌத்தத்தை ஒடுக்கியது: கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்ப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. மேலும் அது ஒரு மறைமுக மிரட்டல் ஆணையாக உள்ளது. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. அதே மாதிரி எந்த ஒரு பௌத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது.
T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.
See Telang, Mudrarakshasa., pp.xlviii-liii.,
………………., The Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155.
Wilson, Dict., xix;
Colebroole, Essayas, 1. 32.

Sankara was defetated by Buddhists

பௌத்தர்கள் உருவாக்கிய சர்ச்சைக்குள்ள நூல்கள்: சமீபத்தில், கே. டி. எஸ். சரௌ என்ற ஆராய்ச்சியாளரும், இவ்விஷயத்தை நுணுக்கமாக ஆய்ந்து பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது பலநிலைகளில் – மத-சடங்கு முறை முதல் சங்கத்தின் பிரச்சினைகள் வரை – ஏற்பட்டது என எடுத்துக் காட்டியுள்ளார்.
K.T.S. Sarao, On the Question of Animosity of the Brāhmaṇas and Persecution by Brāhmaṇical Kings Leading to the Decline of Buddhism in India, The Chung-Hwa Institute of Buddhist Studies, Taipei Chung-Hwa, Buddhist Studies, No. 10, (2006).

ஆகவே, அக்கதைகளின் ஆரம்பம் என்னவென்று பார்த்தால் பௌத்தர்களின் “கதைகள்” தாம் என்று தெரிகின்றன. 7ம்-8ம் நூற்றாண்டுகளுக்கு மேல் பல காலங்களில் பலரால் எழுதப்பட்ட தொகுப்பு நூல்களில் தான் அத்தகைய விவரங்கள் காணப்படுகின்றன. முதன் முதலில் யுவான் சுவாங் (629-645), என்ற சைனாவின் புத்த யாத்திரிகர் வருகிறார். அவர் இந்தியாவில் தான் பார்த்தது, கேட்டது என்று எழுதிவைத்துள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துள்ளனர். பௌத்தர்கள் தமது மத-ரீதியில், சாதகமாக எழுதும்போது அவ்வாறுதான் எழுதுவார்கள். ஆனால் சரித்திர ஆசிரியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்த விவரங்களை மற்ற அத்தாட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கல்வெட்டு-கட்டிடங்களின் நிலை பார்த்து முடிவிற்கு வரவேண்டும். மௌரிய பேரரசு ஆதிசங்கரர் இவற்றை இணைக்கும் மற்றும் அவற்றை காலக்கணக்கீட்டில் வரிசையாக வைத்து அவ்வாறே இந்திய சரித்திர நிகழ்ச்சிகள் முறைப்படுத்தும் வலுக்கட்டாயமான முயற்ச்சியும் இதில் தெரிகின்றது. இது ஒரு 1200 ஆண்டுகளில் கட்டிவைக்க முயன்ற திட்டம். இக்காலகட்டத்தில் தான் உண்மையிலேயே, எழுதப்பட்டுள்ள சரித்திரத்தின் படி, ஜைன-புத்த மதங்கள் மிகவும் உச்சநிலையில் இருந்தன. ஆனால், “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர்.

சைனாவில் பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டது: முன்னமே குறிப்பிட்டபடி, சைனாவில் பௌத்தம் தழைத்தோங்கிய நிலையில் இருந்தாலும், அங்கு பௌத்தர்கள் தண்டிக்கப் பட்டது தெரிகிறது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் என்று தெரிகிறது. அவன் பொருளாதார காரணங்களுக்காக அவ்வாறு பௌத்தர்களைத் தாக்கியதாக கூறுகிறார்கள். அயல்நாட்டு தாக்கத்தை முழுவதுமாக அழிக்கவும், அவன் அத்தகைய கொடிய முறையைக் கையாண்டதாகத் தெரிகின்றது. எனவே அத்தகைய அடக்குமுறை, படிப்படியாக வளர்ந்து, பௌத்ததிற்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டும். பொருளாதார காரணம் காட்டியிருந்தாலும் (விஹாரங்களில் தங்கம் இருந்தது), அத்தகைய நிலை, மக்கள் பௌத்தத்தை பெரிதளவில் ஆதரித்த நிலப்பாடுத் தெரிகிறது. எனவே, திடீரென்று, ஆட்சியாளர்கள், அத்தகைய பிரபமான-மக்கள் மதத்திற்கு எதிராக அடக்குமுறையை ஏவிவிட்டிருக்க முடியாது. ஒரு சைன யாத்திரிகர், யுவான் சுவாங் எழுதியதை வைத்து, இந்தியர்களைக் குறைக்கூறும் இன்றைய இந்தியர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் சைனாவில் பௌத்தம் அவ்வாறு ஒடுக்கப்பட்டதைப் பற்றி பேசுவதில்லை. ஏனெனில், ஹூணர்களோ அல்லது பௌத்தர்களோ அல்லது யாரோ அவ்வாறு வெளியேறி இருந்தால், அவர்கள் இந்தியாவில் நுழைந்திருந்தால், ஏன் என்று ஆராய்ச்சி செய்யவேண்டும். பௌத்தம் இருந்தும், வன்முறை இருந்தது ஏன், எதற்காக அவர்கள் மீது அத்தகைய அடக்குமுறை ஏற்பட்டது என்பதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

வேதபிராகாஷ்
30-09-2009.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

A Brahmin attacked Buddha-2

பிராமணர்களின் கத்திபௌத்தர்களக் கொன்றது, விஹாரங்களை இடித்ததுபௌத்தத்தை ஒழித்தது முதலியன: சமீப காலத்தில், இத்தகைய கதைகள் “சரித்திரங்கள்” போன்று பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ பிராமணர்கள்தாம் தமது குரூர, கொடூர வஞ்சனைகளுடன் பௌத்தர்களை கொன்று குவித்து, பௌத்தத்தையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனர், ஒழித்துக் கட்டினர், மறையச் செய்து விட்டனர் என்று அட்டகாசமாக எழுதி வருகிறார்கள். ஆகவே அதில் என்ன உண்மை உள்ளது என்பது ஆராய வேண்டியுள்ளது. ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய கதைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பொதுவான பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு பல நேரங்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது. படித்தவர்களும் மற்றவர்களும்கூட இதனை நம்பி அலச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று அவர்கள் அறிவதில்லை.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன்: பௌத்த-விரோத நான்கு கொடூரர்கள்:  புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன் என்று நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தாம் பௌத்தத்தை இந்தியாவில் வேரோடு கருவறுத்தவர், பௌத்தர்களைக் கொன்றுக் கொவித்தவர், பௌத்த வழிபாட்டு ஸ்தலங்கள், ஸ்தூபிகள், விஹாரங்களை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள், என்று இன்றளவிலும் சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்கள், “புதிய” / “லே” பௌத்தர்கள், அம்பேத்கரைஸ்டுகள், தலித் அறிஞர்கள், என பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. பிறகு அவர்கள் பிராமண அரசர்கள் என்பதனால், பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் தூண்டுதலால்தான் அவ்வாறு அட்டூழியம் செய்தனர் என்ற கருதுகோள் வைக்கப்படுகிறது. புதியதாக இப்பொழுது “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) ஒன்று “இஸ்லாமிய கத்தி” (Sword of Islam) போன்று தயாரித்து எழுதி வருகின்றனர், படம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலங்களைக் கொடுக்காமல் ஒருவர் சொன்னதைத் திரும்ப சொல்லுவது, குறிப்பிட்டதை திரும்ப குறிப்பிடும் ரீதியில் (Quoted-quote methodology) எழுதி-பேசி செயல்பட்டு வருகின்றனர்.
Why did Buddhism disappear from South Asia? Brahmin atrocities that destroyed Buddhism in the Subcontinent, Posted on February 3, 2008 by Moin Ansari
http://rupeenews.com/2008/02/03/why-did-buddhism-disappear-from-the-south-asian-subcontinent-summary-of-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

http://www.lankaweb.com/news/items/2013/01/26/why-did-buddhism-disappear-from-south-asia-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

Pushyamitra Sunga accused of destroying Buddhism

நவீன பௌத்தர்களின் எழுத்துகளுக்கு ஒரு உதாரணம், இதோ. மேற்சொல்லப்பட்ட உதாரணங்களுடன், புதியாதாக சேர்க்கப்பட்டுள்ளது: ஸ்ரவஸ்தியின் அரசன் விரூதகன் 90,900,000 சாக்கியர்களை கொன்றுபோட்டான், அதனால் ரத்த குளங்களையே உண்டாக்கினான்.
Kyotsu Hori (Complier) & Jay Sakashita (Ed.), Writings of Nichiren Shonin, Doctrine.3, Hawaii, USA, 2004, p.122.
http://books.google.co.in/books?id=q2ADA_3Q4PAC&pg=PA122&lpg=PA122&dq=sasanka+kill+buddhists&source=bl&ots=gzpv06hoPX&sig=mDM3s8GObnp2VA0aUO2PnABiHcU&hl=en&ei=ESe7SoeYCsrUlAePuJSkDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4#v=onepage&q=&f=false

சித்தாந்தவாதிகளின் சரித்திரம் (Ideologized history): குறிப்பாக வெகுஜன வகுப்புவாதத்தை / அடிப்படைவாதத்தை (majority communalism / fundamentalism, read as Hindu communalism / fundamentalism) எதிர்க்கும் போக்கில் மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்கள் (Marxist historians) என்று கூறிக்கொள்ளும், கர்கி சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுவதாவது, “ஹிந்து ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையினைப் பற்றி ஒரு கட்டுக்கதை மிகவும் சாமர்த்தியமாக ஊக்குவிக்கப்படுகிறது. வாருங்கள், இரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கு செல்வோம். திவ்யவதன என்ற இரண்டாம் நூற்றாண்டு நூல் புஸ்யமித்திர சுங்கன் ஒரு பெரிய பௌத்தமத தண்டனையாளன் (Buddhist persecutor) என கூறுகிறது. சிலுவைப்போரைப் போன்று (crusading army) ஒரு பெரிய சேனையுடன் சென்று, அவன் ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்.
அந்த அழிவு சகல, இக்காலத்தைய சியால்கோட் வரையிலும் சென்றது. அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான். இது மிகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது என்றாலும், புஸ்யமித்திரனுக்கும் பிக்குகளுக்கும் இடையே இருந்த கொடிய பகைமையை மறுக்கமுடியாது”.
Gargi Chakravartty: “BJP-RSS and Distortion of History”, in Pratul Lahiri, ed.: Selected Writings on Communalism, People’s Publishing House, Delhi 1994, p.166-167.
http://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/pushyamitra.html

A Brahmin attacked Buddha

இங்கு குறிப்பாக எதையும் சொல்வதில்லை. “ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்றுதான் உள்ளது. உடனே, மற்றொருவர் அதை குறிப்பிட்டு “பல ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்று எழுதுவார். அடுத்த இன்னொருவர், முன்னிருவரைக் ஆதாரமாகக் குறிப்பிட்டு, “ஆயிரக்கணக்கான”, “பல ஆயிரக்கணக்கான” என்று நீண்டுகொண்டே இருக்கும்.
Swami Dharma Theertha, The Menace of Hindu Imperialism, Har Bhagwan Happy Home Publication, Lahore, 1946. See chapter.X, “How Brahmanism killede Buddhism, pp.94-110.
Ahir, V. T. Rajasekhar முதலியவர்களின் புத்தகங்களைப் பார்க்கவும்.
மேனாட்டு/ஆதிக்கசக்திகளான ஆங்கிலேயர்களும் தமது பங்கை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, இ. பி. ஹேவல் என்பவர் அத்தகைய குறிப்புகளைத் தந்துள்ளார், “The earliest of these Saiva revivalists was Maikka-Vacagar, minister of one of the Pandyan kings of Madura about the sixth century A. D. He came to be known as the Hammer of the Buddhism”.
E. B. Havell, The History of Aryan Rule in India from the earliedst times to the death of Akbar, (1918),  K.M.N. Publishers, New Delhi, 1972.

இக்கதைகள்-கட்டுக்கதைகளின் தோற்றம்: திவ்யவதன, அசோகவதன போன்ற பௌத்த மத நூல்கள் (இடைகாலம் வரை திருத்தி எழுதப்பட்டவை-இவையெல்லாம் பல அதிசயங்கள், இயற்கைக்கு புறம்பான நிகழ்ச்சிகளைக் கொண்ட விவரணங்களைக் கொண்ட நூல்கள்), பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) என்ற சைன பௌத்த துறவியின் இந்திய யாத்திரைக் குறிப்புகள். தாரநாத என்ற திபெத்தின் பௌத்த பிக்குவின் நூல். குறிப்பாக யுவான் சுவாங் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அக்கதைகள் வளர்ந்துள்ளன. தங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாதகமானதை விடுத்து, தமது சரக்கையும் சேர்த்து இவ்வாறான கதைகளை புனைந்துள்ளனர். அக்கதைகள் “மிகைப்படுத்திக் கூறப்பட்டது” என்றாலும், “பௌத்தம் இந்தியாவில் மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டது” என்பதனால், அது அவ்வாறு “மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டத”ற்கு காரணம் கற்பிக்க ஒன்று இருக்கவேண்டும் என்பதினால், இத்தகைய கட்டுக்கதைகள் உற்சாகத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், “இஸ்லாமிய கத்தி”யை (Sword of Islam) மறைக்க, மறக்க இந்த தோற்றுவிக்கப்பட்ட “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) தாராளமாக உதவுகிறது. குற்றங்களை மறந்து மறைக்கும் சித்தாந்தவாதத்திற்கும் (negationaism) உதவுகிறது.

தினார்களா, தங்க நாணயங்களா? கர்கி சொல்கிறார், “அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான்”, என்று. இன்னொரு மொழிபெயர்ப்பிலேயோ (Beal, Watters etc), “ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள்
தரப்படும் என்று அறிவித்ததாக….” கூறப்படுகிறது.
http://projectsouthasia.sdstate.edu/docs/HISTORY/PRIMARYDOCS/FOREIGN_VIEWS/CHINESE/XuanZang/BookIV.htm
இன்னொருவர் சொல்கிறார், “100 தங்க நாணயங்கள் அளிக்கப் படும்” என்று. எவ்வாறு, தீனார், தங்கமாகி, தங்க நாணயங்களாக மாற முடியும்? தீனார்கள் சுங்க காலத்தில் இல்லை. ஆகையால் தினார்கள் இந்தியாவில் வழக்கில் இருந்த காலத்தில், இது எழுதப்பட்டது தெரிகிறது. அதாவது, பிற்கால இடைசெருகல் எனத்தெரிகிறது.

விஹாரத்தைக் கட்டிய புஸ்யமித்திர சுங்கன்: திலாதக/திரா-சக/தீலா-சாக்ய என்ற விஹாரம் பிம்பிசாரன் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசன் கட்டினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கடைசி அரசனோ புஸ்யமித்ர சுங்கன்! பிறகு எப்படி விஹாரங்களை இடிப்பவன், விஹாரத்தைக் கட்டியிருக்க முடியும்?
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.II, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.106-107.
இது மாதிரி, பல முரண்பாடுகள் யுவான் சுவாங் வர்ணனைகளில் உள்ளன.

பௌத்த அமைச்சர்களைக் கொண்ட புஸ்யமித்திர சுங்கன்: புஸ்யமித்திரன் அந்த அளவிற்கு பௌத்த-விரோதியாக இருந்திருந்தால், பௌத்த அமைச்சர்களைக் கொண்டிருக்க மாட்டான். உண்மை சொல்வதானால், அவன் காலத்தில்தான் பௌத்தம் நன்றாக செழுமையாக இருந்தது என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. கல்வெட்டுகள் சொல்லும் புஸ்யமித்திரன் நினைவு சின்னங்களை எழுப்புகிறான்: சாஞ்சி மற்றும் பஹ்ருத் முதலிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் இவன் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, பஹ்ருத்தில் உள்ள பௌத்த கல்வெட்டு, “சுங்க அரசன்….தோரணம் மற்ற சிற்பங்களுக்கு தானம் கொடுத்து உருவாக்கினான்” (Suganaṃ raje… dhanabhūtina karitaṅ toranāṃ silā-kaṅmaṅto ca upaṃṇa)
D.C. Sircar (ed), Select Inscriptions Bearing on Indian History and Civilization, Vol. 1, 2nd rev and enlarged ed, Calcutta: University of Calcutta, 1965: 87.
என்ன இது, பிராமண சுங்கனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது, யுவான் சுவாங் தவறாக எழுதி விட்டாரா? மகதத்திலிருக்கும் சுங்கன் பஹ்ரூத் வரை வந்து, பௌத்தர்களின் தலைக்கு தீனார் என்று பிரகடனப் படுத்தியபிறகு, ஏன் இந்த தாராளத்தனம்? எனவே, இக்கதைகளை ஊக்குவிப்பவர்கள் பல உண்மைகளை மறைக்கிறார்கள் எனத்தெரிகிறது.

Decline of Buddhism in India

சுங்ககாலத்தில் பெருகிய விஹாரங்கள்: இலங்கையின் தீப/மஹாவசங்கள் சுங்ககாலத்தை ஒட்டிய தத்தாகமணி (circa 101-77 BCE) காலத்தில் பீஹார், அவத், மால்வா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விஹாரங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றன. ஆகவே, புஸ்யமித்திரன் தண்டித்ததாக திவ்யவதன மற்றும் தாரநாத நூல்களில் காணப்படும் கதைகள் அபத்தமானவையாகும்.
Mitra, R.C. The Decline of Buddhism in India, Santiniketan, Birbhum: Vishva Bharati, 1954, p.125.

அதுமாதிரியே அவன் படையுடன் சென்று அழித்தது, 100 தினார்கள் கொடுப்பதக்க அறிவித்தது முதலியனவும் “தெளிவாக பொய்” எனத்தெரிகிறது “is manifestly false.”
Devahuti, D. Harsha: A Political Study, third revised edition, New Delhi: Oxford University Press, 1998, p.48.

Yuan Chwangs Travels in India

சசாங்கன்: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை (போதி மரம்) அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் களைத்துவிட்டான். என்றெல்லாம் எழுதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காலத்தால் வேறுபட்ட இந்த மன்னர்களை தனது காலத்தைச் சேர்ந்தவர்கள் போன்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi, 2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial Guptas.
“பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” (J. R. A. S., 1893, p.147).

ஆகையால், சசாங்கன், ஒரு சிவன் பக்தனாக, ஆனால் பௌத்தத்தை அடக்குவதாக இருப்பவன் ஆனால், அவன் எவ்வாறு தனது கர்ணசுவர்ன என்ற தலைநகருக்கு அருகில் இருந்த பிரபலமான ரக்தமித்ரிகா விஹாரத்தை விட்டுவைத்தான்? மேலும் யுவான் சுவாங் கூறுவதாவது,கர்ணசுவர்னவாவில் பத்து விஹாரங்கள் மற்றும் 2000 பிக்குகள் இருந்தனர் என்பது.
Thomas Watters, On Yuan Chwang’s Travels in India, London, 1904-05, pp.191-192.

அதே யுவான் சுவாங் சசாங்கன் இறந்த பிறகு, அந்த விஹாரத்தின் செழுமையைப் பற்றி புகழ்கிறார் (மூர்ஸிதாபாத் மாவட்டத்தில், சிரூதி என்ற இடத்தில் அதன் இடிபாடுகள் இப்பொழுது உள்ளன). நிச்சயமாக, அந்த பௌத்த யாத்திரியின் பார்வை மதமோஹத்தில் பாரபட்சத்துடன் நோக்கவைத்துள்ளது என நன்றாகத் தெரிகிறது. பௌத்தர்களும் அத்தகைய மதவிரோதத்துடன், மஹேஸ்வரனும், கௌரியும். திரிலோக்யவிஜய என்னும் பௌத்த கடவுளின் கால்களில் மிதிபடுவதைப்போன்று சித்தரித்துள்ளனர்.
Bratindra Nath Mukherjee, Nationhood and statehood in India: a historical survey, Rajiv Gandhi Foundation, Indian Council of Social Science Research. North Eastern Regional Centre, 2001, p.76.

Adi sankara - accused of for disappearance of Buddhism

சசாங்கனை எதிர்த்த குப்தர்கள்: யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார், “மோ-ஹி-லோ-கு-லோ (மிஹிரகுலன்) தனது பொழுதுபோக்கிற்காக பௌத்தமதம் கற்க ஆசைப்பட்டான். அதனால் ஒரு தலைச்சிறந்த பிக்குவை தனக்கு பௌத்தத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்படி பணித்தான். ஆனால், பௌத்தர்களோ அவனது வேலைக்காரனையே அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் கொண்ட மிஹிரகுலன், பௌத்தத்தை அழிக்கத் துணிந்தான். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த பாலாதித்யன் என்ற குப்த மன்னன் பௌத்தர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பல உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருந்தான். மிஹிரகுலன் அவனது பகுதியின் மீது படையெடுத்தபோது, பாலாதித்யன் அவனை சிறைப்பிடிக்கிறான். ஆனால், தனது தாயாரின் அறிவுரைப்படி அவனை விடுவிக்கிறான். காஷ்மீரத்திற்கு தப்பிச் செல்லும் அவன், அந்த நாட்டு மன்னனைக் கொன்று தனது பௌத்த-விரோத கொள்கையினை தொடங்குகின்றான். 1600 ஸ்தூபிகள் மற்றும் விஹாரங்களை அழிக்கிறான். ஒன்பது பௌத்தர்களைக்கொல்கிறான். ஆனால், அவனது காலம் திடீரென்று முடிகிறது. வானம் கருக்கிறது, பூமி நடுங்குகிறது, பலமான காற்று வீசுகிறது, அவன் நரகத்திற்கு செல்கிறான்”.
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.I, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.288-289.

மிஹிரகுலன் இறந்தது 619 அல்லது 637 எனக்கருதப்படுகிறது. ஆகவே, பௌத்தர்களின் பரம எதிரிகள்-இந்துத்வா-தூக்கிகள் என இப்பொழுது
வர்ணிக்கப்படும் குப்தர்கள் எப்படி பௌத்தர்களுக்கு உதவி இருக்க முடியும்? மேலும் வேடிக்கைகள் பல உள்ளன. அத்தகைய குப்தர்கள் பிராமணர்களின் அடிவருடிகளாகச் சித்தரிக்கப் பட்டாலும், புத்த குப்தன், தத்தகாத குப்தன், பாலாதித்யன் என வரிசையாக வரும் குப்தர்கள் பௌத்தமதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள், வளர்க்கிறார்கள்! “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ அவ்வாறு திடீரென்று குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர். ஹூணர்களின் படையெடுப்பால்தான் அவர்கள் மறைந்து போகின்றனர். பிறகு சுமார் 220 வருடங்கள் ஆண்ட குப்தர்களுக்கும் (320-540), 160 ஆண்டுகள் ஆண்ட தோரமானன்-மிஹிரகுலன்களுக்கும் (478-637) என்ன வேற்றுமை?

சிவனுடைய ஆணையின்படி புத்த கோவில்கள் கட்டும் பிராமணர்கள்: சசாங்கன் புத்தரின் சிலையை எடுத்துவிட்டு, சிவனுடைய சிலையை வைக்க முயன்றான், ஆனால் முடியவில்லை என்று சொல்லும் அதே பத்தியில் மேலே யுவான் சுவாங் குறிப்பிடுவதாவது, “இந்த கோவில் பனிமலையில் இருக்கும் சிவனின் அறிவுரையின்படி, ஒரு பிராமணன் கட்டினான். அருகிலுள்ள குளத்தை அவனது சகோதரன், சிவனின் ஆணையின்படி கட்டினான்”. இதையெல்லாம் முற்றும் உணர்ந்த சரித்திர ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. தமக்கு சாதகமாக இல்லை என்றால் அந்த வரிகளைக் ககறிப்பிட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிய்ம், சாதாரணமாக யாரும் யுவான் சுவாங் எழுதியதை எடுத்து படுத்து அவ்வாறே உள்ளதா-இல்லையா என்று யாரும் பரிசோதிக்க மாட்டார்கள் என்று! இவ்வாறு பிராமணர்கள், புத்தனுக்காக கோவில்-குளம் கட்டும்போது, எதற்காக அவர்கள் சசாங்கனைத் தூண்டி இடிக்கவைக்கவேண்டும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் நோக்கவேண்டும். சசாங்கனுக்கும், ஹர்ஷவர்த்தனுக்கும் இடையே இருந்த பகைமை அறிந்ததே. ஆகையால் பௌத்தர்கள் ஹர்ஷவர்ததனுடன் கூட்டு சேர்ந்து சசாங்கனுக்கு எதிராக சதி செய்திருக்கலாம். அந்நிலையில் எந்த அரசனும் அத்தகைய குழுவைத் தண்டிக்கத்தான் செய்வான்.
R.G. Basak, The History of North-eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of the Pāla Dynasty of Bengal, 2nd rev and enl ed, C.A.D. 320-760, Calcutta: Sambodhi Publications, 1967: 154-56.

பௌத்தர்கள், இந்தியா முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பாக இருந்தது. நாட்டின் பல இடங்களில் பரவியிருந்த விஹாரங்கள் மூலம், மகதத்தின் அரசியலில் அளவுக்கு அதிகமாகவே தலையிட்டுள்ளனர். ஆகையினால் பௌத்த மௌகாரிகள், பிராமண கௌடர்களுக்குச் சாதகமாக மகதத்திலிருந்து வெளியேற்ற பட்டிருக்கலாம். இதனால், பௌத்தர்களிடையே சசாங்கனுக்கு மதிப்புக் குறைந்தது எனலாம்.
B.P. Sinha, The Decline of the Kingdom of Magadha (Cir. 455-1000 A.D.), Bankipore: Motilal Banarsidass, 1954: 259.

தேவஹூதி என்பவரும் யுவான் சுவாங் கதையினை மறுத்துள்ளார்.
D. Devahuti, Harsha: A Political Study, third revised edition, Delhi:
Oxford University Press, 1998: 48.

வேதபிராகாஷ்
24-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.