புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள் (1)
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: இன்று புத்த பூர்ணிமா, விஷாக-2018 உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. பௌர்ணமி 29-30 மாலை-காலை வரை, விசாகம்-30-04-2018! புத்தர் பிறந்தது [ஜனனம்], ஞானம் பெற்றது [நிர்யாணம்] மற்றும் காலமானது [முக்தி] எல்லாமே விசாகம்-பௌர்ணமி திதியன்று நடந்துள்ளது. புத்த பூர்ணிமா, விஷாக-2018 ஶ்ரீலங்கா, கம்போடியா, மியன்மார், பங்களாதேச நாடுகளில் 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா, விஷாக-2018 சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் 29-05-2018 அன்று கொண்டாடப் படுகிறது. திபெத், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இரண்டு விதமான பாரம்பரியங்களுக்கு ஏற்றமுறையில் அனுஷ்டிக்கப் படுகிறது. புத்தருடைய தேதி சரியாகக் கணக்கிடப் படவில்லை, ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறான தேதிகள் உபயோகத்தில் உள்ளன. புத்தருடைய இறந்த தேதி – 544-543 BCE, 487-486 BCE, 368 BCE, 2420 to 290 BCE மற்றும் அசோகனுக்கு முன்னால் இருந்த ஐந்து புத்தர்களுக்கு முந்தையவர் என்று கணக்கிடப் பட்டுள்ளது. 1887-1807 BCE என்பது பாரம்பரிய தேதியாக இருக்கிறது, இது வானவியல் கணக்கீடு மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது[1].
பௌத்தத்தின் தொன்மையினை மேனாட்டவர் ஏன் மறைத்து, குறைக்க வேண்டும்?: மேனாட்டு, ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், புத்தருடைய சரித்திரத்தைப் படித்த போது,– கன்னித்தன்மை பிறப்பு, குடும்பத் துறப்பு, சீடன் காட்டிக் கொடுத்தது-இறப்பிற்கு காரணம் ஆனது, கடவுளை-தேவனை மறுத்தது – என்று பலவிசயங்களில் கிருத்துவத்திற்கும், அதற்கும் பொருந்தி போவதைக் கண்டனர். கிருத்துவத்திற்கு சரித்திர ஆதாரங்களே இல்லாத நிலையில், பௌத்தத்திற்கு உலகில் பலநாடுகளில் ஆதாரங்கள் இருப்பதை கண்டு கொண்டனர். தவிர, பௌத்தத்தின் தொன்மையினால், கிருத்துவமே பௌத்தத்திலிருந்து பெறப்பட்டது என்று கூட அவர்கள் தங்களது ஆராய்ச்சிகளில் முடிவுக்கு வந்தனர். இதனால், கிருத்துவ சார்புடைய, கிருத்துவ விசுவாசிகளான மற்றும் கிருத்துவப் பாதிரி-ஆராய்ச்சியாளர்கள் அதனை எப்படியாவது மறுக்க, மறைக்க மற்றும் மறக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். “கிறிஸ்து கட்டுக்கதை” போப்புகளுக்கே, இடைகாலத்திலிருந்து தெரிந்துள்ளது. போப் லியோ, கார்டினல் பெம்போவிடம், “அந்த கிறிஸ்து கட்டுக்கதை என்ன லாபத்தைத்தான் கொடுக்காமல் இருக்கிறது?,” என்ற கேட்டது தெரிந்த விசயமாக இருக்கிறது[2]. மேலும் ஐரோப்பியாவில் ஜே.எம். ராபர்ட்சன் போன்றோர் ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசுகிறிஸ்து பற்றிய கட்டுக்கதிகள் பற்றி எழுதினார்கள், அப்பொழுது அவையெல்லாம் இந்தியர்களுக்குத் தெரியாது. “பௌத்தம் சரித்திர வழிகளில் எந்த அளவிற்கு கிருத்துவத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்? நமது விசாரணையை ஜைனத்தையும் இணைத்து பார்க்கவேண்டும், ஏனெனில் அது மற்ற மதங்களையும் விட முந்தையது. பல கோடி மக்களின் மதமாக இருந்திருந்தாலும், ஐரோப்பாவில் சிலருக்கே தெரிந்திருந்தது[3]”ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிறகு கிருத்துவத்தில் “பாவ–மன்னிப்புக் கோரல்” (confession) என்றாகியதா எனநோக்கத்தக்கது. பௌத்தத்திலிருந்து, கிருத்துவம் உருவானது, பெறப்பட்டது என பல அறிஞர்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டியுள்ளனர். இத்தகைய வாத-விவாதங்களை கிருத்துவர்கள் விரும்பவில்லை.
நிக்கோலஸ் நோட்டோவிட்ச் விசயத்திலும், நன்றாகவே அசிங்கப் பட்டனர்: திபெத்திய பௌத்தத்தில் பல ரகசியங்கள் இருப்பதாக, ஐரோப்பியர், கிருத்துவர்கள் நினைத்தனர். அதனால், மாறுவேடங்களில் அங்கு சென்று விசயங்களை அறியச் சென்றனர். நிக்கோலஸ் நோடோவிட்ச் என்ற ரஷ்ய பிரயாணி தான், ஹிமி புத்த மடாலயத்தில் ஒரு ஓலைச்சுவடியைப் பார்த்ததாகவும், அதில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், பிராமணர்களில் வேதங்களைக் கற்றுக் கொண்டார், வேதங்களை போதித்தார்…பொன்ற விவரங்கள் இருந்ததாக குறிப்பிட்டான். “யாருக்கும் தெரியாத ஏசுகிருஸ்துவின் மர்மமான வாழ்க்கை” என்ற புத்தகத்தை எழுதி நன்றாகவே பணம் சம்பாதித்தான்[4]. ஆனால், மாக்ஸ்முல்லர் இதை ஆராயுமாறு ஆணையிட்டார். அதன்படியே, ஆங்கில அதிகாரிகள், அந்த மடாலயத்திற்கு சென்று விசாரித்தபோது, அத்தகைய ஓலைச்சுவடி அங்கில்லை என்றும், ஆனால், நிக்கோலஸ் நோடோவிட்ச், அடிபட்டதால் அங்கு வந்து தங்கினான் என்று மடத்தில் அறிவித்தனர். இதனால், மாக்ஸ்முல்லர், அப்புத்தகத்தை ஒரு மோசடி என்று அறிவித்தார். சுமாமி விவேகானந்தரும் இதனை எடுத்துக் காட்டினர். ஆனால், முன்னர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்து சாமியார், இதனை விடாமல் பரப்பி வந்தார்[5]. அப்புத்தகத்தை வெளியிடவும் செய்தார். யோகானந்தர் தனது புத்தகத்தில் இக்கட்டுக்கதையை சேர்த்ததால், மறுபடியும், இது பிரபலமாகியது. கிருத்துவர்களுக்கோ கொண்டாட்டம் தான்[6].
ஜைனமும், பௌத்தமும்: ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்டஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[7]. மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்கவேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும். ஆக மகாவீரரும், புத்தரும் ஒரே காலத்தவராக இருந்திருக்க முடியாது. இதிலேயே, காலஜ்கணக்கியல் உதைக்கிறது. ஆனால், மேற்கத்தைய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் முதலில் ஜைனத்தை தனி மதமாகவே கருதவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. இ. ஜே. தாமஸ் மற்றும் ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் என்பவர்களின் ஆராய்ச்சியின்படி புத்தருக்கு முன்பு, வெளிநாட்டவர், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, என்பதாகும்[8]. மெகன்ஸி ஜைன மதத்த்ஐப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய பிறகு தான் அது பிரபலமாகியது.
புத்தருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளும், தொடரும் ஆராய்ச்சிகளும்: புத்தருடைய தேதியை அறுதியாக நிலைநிறுத்தமுடியாது என்ற எண்ணத்தை உண்டாக்க, பலவழிகளில் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் பரவியிருந்த பௌத்த நம்பிக்கையாளர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் முதலியவை, பௌத்தத்தின் தொன்மையினை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இதனால், இன்றும், புத்தருக்கு பல தேதிகள் உள்ளன என்பதனை அறிந்து, அவற்றை கீழ்கண்டவாறு பகுத்துள்ளனர்:
- ஶ்ரீலங்காவில் உபயோகப்படுத்தப் படும் நெடிய காலக்கணக்கீடு [Long chronology (Ceylonese)]: 544-543 BCE.
- சரிசெய்யப் பட்ட நெடிய காலக்கணக்கீடு [Corrected long chronology]: 487-486 BCE
- குறுகிய காலக்கணக்கீடு [Short chronology (Indian chronology)]: 368 BCE.
- பாரம்பரியமாக வழக்கில் உள்ள நெடிய காலக்கணக்கீடு [Buddhist tradition (non-scholar)]: ranges from 2420 to 290 BCE.
- அசோகனுக்கு முன்னால் இருந்த ஐந்து புத்தர்களுக்கு முந்தையவர் என்று கணக்கிடப் பட்ட காலக்கணக்கீடு [Succession of the five patriarchs: Five succession of teachers before Ashoka]: என்றுள்ளது.
இந்தியாவிற்கு வராமலேயே, இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள் முதலியவற்றை வரவழைத்து, லண்டனில் உட்கார்ந்து கொண்டு வேதங்களை ஆராய்ச்சி செய்த மாக்ஸ் முல்லர், புத்தருக்கு பல தேதிகள் குற்ப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டினார் – 2422 BCE, 2148, 2139, 2136, 2135 1366, 1332, 1310; 1058, 1036, 1027; all in BCE. இப்பொழுதோ 300 BCEக்கு முறைக்கிறார்கள். இதிலிருந்தே, அவர்களது ஆராய்ச்சி முறைகளில் ஏதோ தவறாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. விஞ்ஞான முறைப்படி ஆராய்ச்சி செய்யும் போது, காலக்கிரய ஆதாரங்கள், முன்னது எது, பின்னது எது என்பதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி விடுகிறது. அதனால், அதில் எந்த குழப்பமும் இல்லை.
© வேதபிரகாஷ்
30-04-2018
[1] E.Vedavyas, Astronomical Dating of the Mahabharata War, New Delhi, 1986, pp. 223-229.
[2] Pope Leo X (1475-1521) was privy to the truth based on his high rank, when the bishop recounts an alleged exchange between Cardinal Bembo (1470-1547) and Pope Leo X, with the latter supposedly exclaiming, “What profit has not that fable of Christ brought us!”
Encyclopedia Britannica, XXIII, 87. (Emph. added.) See also Walker, 471; Taylor, 35. Bale’s original Latin is as follows: “Quantum nobis nostrisque ea de Christo fabula profuerit, satis est omnibus saeculis notum.” (Roscoe, III, 339.)
[3] Edward J. Thomas, Life of Buddha, 1927, p.2
[4] Nicholas Notovitch, The unknown life of Jesus Christ. Vol. 4. Health Research Books, 1996.
[5] Abhayananda, Swami. “Journey Into Kashmir and Tibet: With the Life of Jesus by Nicolas Notovitch.”, Advaida Ashrama, Calcutta, (1987).
[6] Prophet, Elizabeth Clare. The Lost Years of Jesus: On the Discoveries of Notovitch, Abhedananda, Roerich, and Caspari. Summit University Press, 1984.
[7] Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.
[8] Edward J. Thomas, Life of Buddha, 1927,
J. G. R. Forlong, Science of Comparative Religions, 1877