தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்தம மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)
தென்னிந்தியாவில் ஜைனம்–பௌத்தம் குறைந்து வைணவம்–சைவம் வளர்ந்து ஆதிக்கம் பெற்றது: பௌத்த மதம் தன்னுடைய ஹிம்சை-அஹிம்சை முரண்பாடுகளால், போலித் தனங்களால், இரட்டை வேடங்களால், வன்முறைகளால், வாணிக அடாவடித்தனங்களால், மோதல்களினால், போர்களால் இந்தியாவில் வெளிப்பட்டு, மக்கள் அதனை ஒதுக்கினர்[1]. போதாகுறைக்கு, இடைக்காலங்களில் ஜைன-பௌத்த மோதல்களில் பௌத்தம் பெரும்பாலாக சீர்குலைந்தது. ஜைன ஆதிக்கம் அதிகமாகிய நிலையில் பௌத்தம் ஒதுக்கப் பட்டது[2]. பிறகு தென்னகத்தில் வைணவம்-சைவம் கொஞ்சம்-கொஞ்சமாக பல்லவ காலத்திற்குப் பிறகு வளர்ந்த நிலையில், பௌத்தம் ஓரளவுக்கு முழுமையாக வெளிநாடுகளுக்குச் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜைனம் உச்சத்தை அடைந்து தென்னிந்தியாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், வைணவம்-சைவம் சித்தாந்த மோதல்களில் தோற்க ஆரம்பித்தது. ஜைன அரசர்களின் வன்முறைகள் அவர்களது அஹிம்சை நெறிகளுக்கு முரணானது. முதல் நூற்றாண்டுகளில் தமிழக அழிவுகளுக்கு ஜைன களப்பிளர்களைச் சுட்டிக் கட்டியுள்ளனர். கல்வெட்டுகளும், ஜீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களும் ஜைனர்களின் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகின்றன.
ஜைன–பௌத்த சிலைகள் தெய்வசிலைகள் அல்ல, பூஜிக்கப் படவும் இல்லை: மக்களுக்குப் புரிந்தது. இதனால், ஜைனர்கள் இரட்டை வேடம் போட முடியவில்லை. தங்களது வியாபார மற்றும் வணிக முறைகளால் இந்தியாவிலேயே சித்தாந்தத்தை மாற்றிக் கொண்டு தழைக்க முயன்று வெற்றி கண்டது. ஜைன-பௌத்த மதங்கள் நாத்திக மதங்களாதலால், அவற்றின் கடவுள், கடவுளின் விக்கிரகம் என்றெல்லாம் இல்லை[3]. இதனால், மதத்தலைவர்களின் சிலைகள் ஒதுக்கப் பட்டன, மறக்கப் பட்டன. ஏனெனில், அவை பூஜிக்கப் படவில்லை. இதனால் தான் அத்தகைய சிலைகள் அங்கும்-இங்கும் வயல்களில், கிராமப்புறகளில், தொலைவான இடங்களில் கிடக்கின்றன. இதுபோல பல சிவலிங்கங்களும், மற்ற இந்துமத கடவுள், தேவதைகளின் சிலைகள், விக்கிரங்களும் அதிகமாகவே காணப் படுகின்றன[4]. இத்தகைய சிலைகள் காணப் படுவதற்கு மாலிக்காபூர், ஹைதர் அலி, திப்பு சுல்தான், வாலாஜா நவாப்புகள் முதலியோர் காரணம். இதை எந்த எழுத்தாளர்களும் முறையாக எடுத்துக் காட்டுவதில்லை.
2013ல் – தியாகனூரில் புத்தர் கோவில் கட்டப் படுதல்: கேட்பாரற்று கிடந்த, ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலைக்கு, தனி கோவில் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள், கோரிக்கை விடுத்தனர்[5] என்று ஊடகங்கள் குறிப்பிடுவ்தை கவனிக்கலாம். அதையடுத்து, மெட்ராஸ் சிமென்ட், சிட்டி யூனியன் பாங்க், எஸ்.கே., கார்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம்பெனி நிறுவனங்கள் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புத்த தியான பீடம் அமைக்க, கட்டுமான பணி நடந்தது[6]. மே 23 2013 அன்று தியான பீடத்தில், புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தில் சிலைகள் கீழ்கண்டவாறு அம்மைக்கப் பட்டுள்ளன:
- கிழக்கு (அ) கோயிலின் முன் பக்கத்தில்: புத்தர் உருவம்
- தெற்கு : கண்ணனின் உருவம்
- மேற்கு : திருமாலின் நரசிம்ம அவதாரம்
- வடக்கு :கிருஷ்ண அவதாரம்
இங்கு புத்தரின் விக்கிரகம் ஒரு வைஷ்ணவ ஆச்சாரியார் போலவே உள்ளது. புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாலும், அத்தகைய மாற்றத்தை வேண்டுமென்றே செய்தது இந்துக்களா, பௌத்தரா என்ற கேள்வியும் உள்ளது. இந்துக்களை மதமாற்ற பௌத்தர்கள் செய்த சூழ்ச்சி என்றும், இல்லை பௌத்தத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இந்துக்கள் செய்த சூழ்ச்சி என்றும் பரஸ்பர குற்றச்சாட்டு கூறுவது தெரிந்த விசயமே.
2023ல் பௌத்த மாநாடு நடத்த தீர்மானம்: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புத்த பூர்ணிமா விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பௌத்தர்கள் மற்றும் விஹார்களின் தலைமை மத அமைப்பின் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீட மேற்பு பிக்கு பிக்குகளின் சங்க பரிபாலன கங்கன மேற்புக்கான தமிழ்நாடு பௌத்தம் மறுமலர்ச்சி மாநாடிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கௌதம சன்னா அவர்கள் 14.05.2023 பகவான் தியாக புத்தர் திருக்கோயில் தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு தியாகனூரில் நடைபெற இருப்பதால் தமிழ்நாட்டின் ஆதி மதமான பௌத்தம் புத்தரின் காலத்திலும் அதற்கு பிறகும் தமிழகத்தில் பரவி செழித்திருந்தது. பெரும்பாலான தமிழர்கள் பௌத்தம் தழுவி இருந்த நிலையில் சாம்ராட் அசோகரின் காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஏராளமான பௌத்த புனித தலங்கள் உருவாக்கினார். பௌத்தத்தை பின்பற்றிய தமிழ் அரசர்கள் அறநெறிப்படி ஆட்சி புரிந்தனர் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்தம் செழித்தோங்கியிருந்தது.அக்காலகட்டத்தில் பௌத்தத்தை பரப்பும் ஒருங்கிணைக்கவும் தலைமை பௌத்த சங்கம் செயல்பட்டது. அதற்கு தலைமை பிக்குவும் மற்ற நிர்வாகிகளும் பௌத்த மார்க்கத்தை நிர்வகித்தனர். இவர்களின் நிர்வாகத்தின் கீழ் விகாரைகள் எனப்படும் பிக்கு பிக்குனி மடங்களும் புத்தரின் பாதையை பின்பற்றுவதை நினைவுறுத்தும் அவரின் பாத பீடிகைகளை வழிபடும் முறையும் தமிழகத்தில் பரவலாக இருந்தன. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த பிக்கு பிக்குனிகள் பேரவை மறைந்தது. தமிழர்களின் ஆதிமதமான பெளத்தம் தமிழ்நாட்டில் அழிந்துபோனது.
தமிழகத்தில் பௌத்தத்தின் நிலை: பௌத்தம் அளிக்கப்பட்டு 700 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் பண்டிதர் அயோத்திதாசரும் இந்தியா அளவில் அனகாரிக தர்மபாலா மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் பௌத்தத்தை மீட்டெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக 800 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் மகா சங்காதிபதி தலைமையில் பிக்கு பிக்குனிகள் நிர்வாகத்தில் தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பாகவும் தலைமை சங்கமாகவும் மீண்டும் எழுகிறது பௌத்தம். அதற்கான விழா தான் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீடமேற்பு மற்றும் பிக்கு பிக்குனிகளின் சங்க பரிபாலன கங்கன மேற்பு விழா நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது என்பது சிறப்பு மிக்கதாகும். இந்த மாநாட்டில் அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து மத தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பௌத்த சங்கப் பேரவை மகா சங்காதிபதி வணக்கத்திற்குரிய பிக்கு தம்மசீலர், வணக்கத்திகுரிய பிக்கு போதி அம்பேத்கர் மற்றும் பிக்குகள், மகா சங்க செயலாளர் ஆர். திருநாவுக்கரசு, பொருளாளர் பார்த்திபன், தமிழக முழுவதிலும் உள்ள புத்த விகார் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு புத்தசங்கா கவுன்சில் துணைச் செயலாளர் எஸ் வசந்த், பால்ராஜ், ரகு, செந்தில், சந்திரசேகர், சரவணன்,மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
© வேதபிரகாஷ்
20-05-2023.
[1] இதைப் பற்றி முன் தமிழில் விவரமாக சுமர் 200 பக்கங்களுக்கு எழுதியுள்ளேன். ஆக, இவை இந்த குழுக்களுக்கு – கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் முதலியோர்களுக்கு தாராளமாகவே தெரியும்.
[2] 788-CEல் தோல்வியடைந்த பௌத்தர்களை கொல்லாமல், இலங்கைக்கு நாடு கடத்தியதை கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன.
[3] பௌத்தர்களின் ஸ்தூபம், விகாரம் முதலியவை கோவில்கள் அல்ல, சிதை-அல்லது இறந்தவர்களில் எச்சங்கள் மீது நினைவாகக் கட்டப் பட்ட கட்டிடங்கள் ஆகும். சிலைகளும் பிற்காலத்தில் வைக்கப் பட்டன.
[4] இவையெல்லாம் சைவ-வைணவ மோதல்களில் உண்டானவை போன்று சித்தரிக்கப் படுகின்றன, ஆனால், அவை ஜைன-பௌத்தர்களால், பெரும்பாலும் துலுக்கர்களால் கோவில்கள் இடித்துத் தள்ளப் பட்டு விட்டுச் சென்ற மீதிப் பொருட்களே.
[5] தினமலர், ஆத்தூர் அருகே 5ம் நூற்றாண்டு கால புத்தர் சிலை பிரதிஷ்டை, பதிவு செய்த நாள்: மே 24,2013 03:52