Posts Tagged ‘மாமிச உணவு’

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மாநாடு அழைப்பிதழ்

மாநாட்டில் பேசுபவர்கள்………

14-05-2023 – தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு: 14-05-2023 அன்று தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை வகித்தார். தம்ம தர்மேந்திரா, கோ.பெரியசாமி, ஆதிராஜா, சா.ராம்ஜி, மூக்நாயக் மணி, காளிதாஸ், மணிகண்டன், இளையநந்தன், பி.பி.ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவாசல் அருகே தியாகனுாரில் பவுத்த மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “தமிழகத்தில், 76 இடங்களில் புத்தர் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், உலகம் முழுதும் கடவுள் நம்பிக்கை, பிசாசு மூடநம்பிக்கை இருந்தது. கடவுள் நம்பிக்கையை பரப்பும் நிறுவனமாக மதம் உள்ளது. பவுத்த மதம் இருக்கும் இடத்தில் அறிவு உள்ளது. அம்பேத்கர் மேலும், 10 ஆண்டு உயிருடன் இருந்திருந்தால் பவுத்த மதம் வளர்ச்சி பெற்றிருக்கும். நல்லிணக்க கோட்பாடாக பவுத்தம் உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். புத்தர் அவதார புர்ஷர் அல்ல, புஷ்யமித்ர சுங்கரால் தான் பௌத்தம் இந்தியாவில் வீழ்ந்தது, என்பதெல்லாம் அவரது பேச்சில் இருந்த முக்கியமான அம்சங்கள்.

பௌத்த ஊர்வலம், நடபடிகள்: இந்த மாநாட்டை முன்னிட்டு முன்னதாக புத்த பிக்குகள் மற்றும் சங்க ரத்தினர்கள், பவுத்த உபாசகர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. மேலும் மாநாட்டில் சங்க பேரவையின் மகாசங்ககாதிபதியாக அனைவரும் முன்னிலையிலும் முக்கோல் பெற்றுக் கொண்டு பிக்கு தம்மசீலர் பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தபிரகாசம், தம்ம ரத்னா, ஜெயசீலர், குணசீலர், அமராவதி, தமிழ் கோவை, பவுத்தம் பாலா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு மங்கள கங்கண நிகழ்வும் புத்த பூர்ணிமா நிகழ்வும் நடை பெற்றது. பௌத்தத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இச்சடங்குகள் நிறைவேற்ற பட்டன. ஒருவேளை எஸ்.சிக்களை பௌத்தத்திற்கு மாற்ற, முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், “நியோ பௌத்தம்,” என்று குறிப்பிடாமல் இருப்பதும் நோக்கத் தக்கது[1].  

செக்யூலரிஸத் தன்மையினை எடுத்துக் காட்டிய முயற்சி: இதைத் தொடர்ந்து விகார் கவுன்சில் செயலர் திருநாவுக்கரசு தலைமையில் போதிச்சந்திரன் வரவேற்பில் சிறுபான்மை நலகுழு உறுப்பினர்கள் பவுத்த பெருமாள், அம்பேத் ஆனந்த், சி. அழகர், தேவேந்திரன், கௌதம் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில் சர்வ மதத்தினரும் கலந்து கலந்துண்ட நிகழ்வு நடை பெற்றது. இதில் காஞ்சி ஜைனமட ஜினாலய பரிபாலகர் பட்டாராக சுவாமிகள், உத்தரப்பிரதேசம் பிக்கு நாகபூசனா, ஆந்திரபிரதேசம் நாகார்ஜுனா, போ தி ஆகியயோர் மகா சங்கதிபதி மற்றும் மகா சங்கத்தை வாழ்த்தி பே சினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள புத்தர் திருக்கோயில் நிர்வாகிகள், சங்கரத்தினர்கள், புத்த பூசகர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேடையில் வழிபாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாட்டில் பவுத்த சுவடுகள் கருத்தரங்கம் நிகழ்வு மகாதினகரன் தலைமையில், எஸ் வசந்த் வரவேற்பில் நடைபெற்றது. இதில் தம்மதேவா, கோவைப் பிரியா, சிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் ஆதிக்கம்: ஜெர்மனி தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, குந்தவை நாச்சியார், கல்லூரி இணை பேராசிரியர் சிவராமன், வரலாற்று ஆய்வாளர் அரகலூர் வெங் கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 மாவட்ட சிறுபான்மைநல உறுப்பினர்கள் மகாசங்க உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து பவுத்த மறுமலர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பாளர் கவுதம சன்னா தலைமையில் நடைபெற்றது. மகா சங்க பொருளாளர் அரக்கோணம் கோவி. பார்த்திபன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொ.திருமாவளவன். எம்.பி., காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ., சிந்தனை செல்வன், மருத்துவர்கள் ராஜ்வர்தன், பெரியசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் மகர பூசணம், மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்கத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக சா. ராம்ஜி சாக்கியா நன்றி கூறினார்.

முரண்பட்ட அல்லது சேந்துள்ளவர்களின் சித்தாந்த நிலை: இப்படி இம்மாநாட்டில் ஏதோ பல இந்திய மாநிலங்களிலிருந்து, பல வெளிநாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்த முயன்றாலும், அவரவர் தமது காரியங்களில் குறியாக இருந்தனர். திருமாவளவன் பேசி சென்றுவிட்டார்.   தேமொழி எழுதிய ‘ தமிழகத்தில் பௌத்தம்” நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில்(14.05.2023) சேலம் அருகே தியாகனூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பௌத்த சங்கம் கூறியது, “நெடுநாளாய்த் தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்கள் குறித்த இந்துக்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லை யென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்து கொள்ளப் போவதில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, தன்னுதவி, தன் மேம்பாட்டுக்கான போராட்டம் அவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்.” பிறகு, நாராயணன் போன்றோர் எப்படி விசுவாசத்துடன் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோவிலும், இந்து கோவில் போலத் தான் கட்டியுள்ளார்கள். திருமா பார்த்தாரா என்று தெரியவில்லை.

விசித்திரமான நட்புக்குழு: கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் இவர்களின் தொடர்புகள், தமிழகத்தில் பல பேனர்களில் வேலை செய்வது, பரஸ்பர உதவி முதலியன பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. கௌதம சன்னா விசிக வின் பிரச்சார செயலாளர், பல அமைப்புகளில் பொறுப்பு என்று பட்டியல் காணப் படுகிறது[2].  மாநில செயலர் நீலசந்திரகுமார், முனைவர் கனல்விழி, பேராசிரியை சுந்தரவல்லி, செம்மலர், கௌதம சன்னா முதலியோர் கிருபா என்ற பெண் வழக்கறிஞர் விக்ரம் மீது ஏப்ரல் 2023ல் கொடுத்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க மே 2023ல் முதல் வாரத்தில் அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சுபாஷிணி மீது ஏற்கெனவே சிலர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இப்படி சர்ச்சைக்குர்யவர்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்கின்றனர் என்பதும் புதிராக உள்ளது. நாராயணன் கண்ணன் தன்னை ஒரு வைணவன் என்று காட்டிக் கொள்வார், ஆனால், இவர்கள் தூஷிக்கும் பொழுது கண்டுகொள்ள மாட்டார். தவிர, “மின் தமிழ்” என்ற குழுவில் இவர்கள் மற்ற பலருடன் நடு வைத்துள்ளனர். எல்லா விசயங்களையும் அலசுவர் பொதுவாக செக்யூலரிஸ, முற்போக்கு, மார்க்சீய, சித்தாந்திகள் போன்று காட்டிக் கொள்வர்..

கௌதம சன்னாபலவித பதவிகள், பொறுப்புகள், எழுத்தாளர் முதலியன: கௌதம சன்னாவைப் பொறுத்த வரையில் அரசியல்வாதி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தேர்தலிலும் நின்று தோற்றுள்ளது தெரிகிறது. “ஜெய் பீம் பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் வைத்திருப்பதும் தெரிகிறது.. இதனால், பௌத்தத்தை அரசியல் ரீதியில் உபயோகப் படுத்த முயலும் நிலையும் தெரிகிறது. அதனை அவரே விளக்கியுள்ளதை இங்கு படிக்கலாம்[3]. மற்றபடி “தலித்” என்ற பேனர்கள்-மேடைகள், புத்தகங்கள் எல்லாம் அம்பேத்கரை உபயோகப் படுத்தப் படும் முறையும் விளங்குகிறது. வழக்கம் போல திருவள்ளுவரையும் இதில் சேர்த்து குழப்பி, ஆராய்ச்சி என்று வறுத்தெடுப்பது, கிறிஸ்துவ பாணியும் புலப் படுகிறது. எனவே தலித்-கிறிஸ்துவ-பௌத்த இணைப்புகள் உள்ளதா இல்லையா என்று ஆராய வேண்டியதும் உள்ளது.

நாராயணன் கண்ணன் மற்றும் கௌதம சன்னா உறவுகள்: நாராயணன் கண்ணன் என்பவர், “பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்,” என்று பேஸ்புக் 14-05-2023 பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்று தியாகனூரில் நடந்த பௌத்த மாநாட்டில் சுபாஷினியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  மதம் மாறினாலும் எஸ்.சிக்களுக்கு அச்சலுகைகள் தொடரும் என்று அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளின் படி உள்ளது. அதனால், இதில் பிரச்சினை இல்லை.

[2] https://gsannah.wordpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

[3] “ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா  by வல்லினம் • February 1, 2018; https://vallinam.com.my/version2/?p=4973

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும் (6)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?  – பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும் (6)

Buddha died eating pork

பௌத்தமும், புலால் உண்ணுதலும், மறுத்தலும்: பாலியில் எழுதப்பட்ட நூல்களில் வெளிப்படையாக, எங்குமே மாமிசம் உண்ணுவது தடை செய்யப்பட்டதாக தெரியவில்லை.

“பாதிமக்க”வின் விதி, பாசித்தியா 35 மற்றும் வினயபீடக, மஹாவக்க, நூல்களின் சரத்துகளின் படி, மீன் மற்றும் மாமிசம் புசித்தலைப்பற்றிய தடை நிஜமானதோ அல்லது எல்லொருக்கும் பொருந்துவதோ அல்ல. புத்தர் மீன் மற்றும் மாமிசம் புசிப்பதை கீழ்காணும் முன்று விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டதாக கூறுகிறார்.

“பிக்குகளே, நான் உங்களுக்கு மூன்று நிலைகளில் மீன் மற்றும் மாமிசம் சுத்தமாக இருக்குமேயானால், அவற்றை பரிந்துரைக்கிறேன்: அதாவது, பிக்குகளுக்காகத்தான் அவை கொல்லப்பட்டன, என யாரும் பார்த்திருக்கக்கூடாது, யாரும் கேட்கிருக்கக்கூடாது, அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படவும் கூடாது.”  [மஹாவக்க (வினயபீடக). VI, 31, 14.]

முதலில் புத்தர் சொன்னதாவது, பிச்சையெடுக்கும்போது என்னக் கொடுத்தாலும், எந்த கேள்விகளும் கேட்காமல், பெற்றுப்புசிக்கவேண்டும் என்பதுதான்.

Patrick Olivelle, “The origin and Early development of Buddhist Monachism”, M. D. Gunasena & Co. Ltd, Colombo, 1974, p.55.

“புலால் உன்பதைபற்றி” ஜீவக சுத்தத்தில் (வினய பீடக) உள்ள புத்தர்-ஜீவகன் உரையாடல்: ஜீவகன் புத்தனிடம் சொன்னான்: “மக்கள் புத்தர் சாப்பிடுவதற்காக விலங்குகளைக் கொன்றதாகவும், அதனால் செய்யப்பட்ட உணவை புத்தர் உண்ணதாகவும், நான் கேள்வி பட்டேன்”. அத்தகைய மக்கள், உண்மை பேசுபவர்களாகக் கொள்ளலாமா, அவ்வாறு புத்தரை (தொடர்பு படுத்தி பேசுவதால்) பொய்மையுடன் குறைகூறுவதாக இல்லையா, என்றும் கேட்கிறான்.

Anguttara nikaaya - Buddha ate pork - verse

மூன்று நேரங்களில் மாமிசம் புசிக்கக்கூடாது: புத்தர் அதற்கு பதில் சொல்கிறார், “அது உண்மையாகாது. மூன்று நேரங்களில் மாமிசம் புசிக்கக்கூடாது. மாமிசமானது, ஒரு மனிதன் தனக்குத்தான் தயாரிக்கப்படுகிறது என்று பார்க்கும்போது, கேட்கும்பொது அல்லது அவ்வாறு சந்தேகிக்கும்போது அத்தகைய மாமிசத்தைப் புசிக்கக்கூடாது. ஒரு கிராமத்தில், பிரம்மவிஹாரத்தில் அன்பைக்கடைப்பிடிக்கும் ஒருவன், பௌத்தத்துறவியை வரவேற்று தனது இல்லத்தில் அருமையான சாப்பாடு போட்டால், எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வான் எனக்கொள்ளலாம்.  அவன் எந்தவித தயக்கமோ / ஆசையோ, எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்ணலாம்.”. புத்தர், ஜீவகனைப் பார்த்துக் கேட்கிறார், “ஜீவகா, அந்த நிலையில், அந்த பிக்கு தனக்கோ, மற்றவருக்கோ அல்லது இருவருக்குமே தீங்கு விளைவிக்கிறான் என்று நினைக்கின்றானா?”. ஜீவகன் பதிலுரைக்கிறான், “தேவரீர், நிச்சயமாக இல்லை.”

Mahavira ordered for chickem meat for curing bloddy diarrhea

விலங்குகளைக் கொல்வதில் புரியும் ஐந்து குற்றங்கள் – புத்தர் மேலும் விவரிக்கிறார்: “ஜீவகனே, “தூய்மையான ஒன்று” எனக்கருதப்படுகின்ற எனக்காக உயிரெடுக்கும் ஒருவன் ஐந்து குற்றங்களைப் புரிகிறான்.

1.        விலங்குகளைக் கொல்லும் மனப்பாங்கு: “சென்று, அந்த விலங்கை பிடித்துவா”, என ஆணையிடும்போது முதலாக பெருங்குற்றத்தைப் புரிகிறான். ஏனெனில் அந்த விலங்கு பயத்தால் நடு-நடுங்கி, வலியையும், கொடுமையையும் அனுபவிக்கிறது.

2.        விலங்குகளைக் கொல்ல பெறும் நிலை: விலங்கு இழுத்து வரப்படுகிறது. அப்போது, இரண்டாம் முறை குற்றத்தைப்புரிகிறான்.

3.        சொந்தமாகிக்கிக் கொண்ட விலங்குகளை கொல்ல ஆணையிடுதல்: “செல், அந்த விலங்கைக் கொல்”, என ஆணையிட்டவுடன், காரணம் அறிந்து, மரணகொடூரம் உணர்ந்து, மரணத்தை நோக்குகிறது. அப்போது, மூன்றாம் முறை
குற்றத்தைப்புரிகிறான்.

4.        விலங்குகளை கொல்லுதல், சமைத்தல்: கொன்று உணவை தயாரிக்கிறான். அப்போது, நான்காம் முறை குற்றத்தைப்புரிகிறான்.

5.        சமைத்த உணவை பரிமாறுதல், உண்ணுதல்: தயாரித்த உணமை “தூய்மையான ஒன்று” எனக்கருதப்படுகின்ற எனக்காக பரிமாறுகிறான்”. அப்போது, ஐந்தாம் முறை குற்றத்தைப்புரிகிறான்.

ஆகவே, படிப்படியாக அவ்விலங்கு அனுபவிக்கும் மரண அவலம் விவரிக்கமுடியாதது.

DasaVaishalika sutra mentions about preparation of meat without bones etc-Jaina

கொன்று தின்னும் பனப்பாங்கு: மனத்தால் நினைப்பதுதான், இழுத்து வரச்செய்கிறது; இழுத்து வரச்செய்தபின், மனம் இருகும்போது, கொல்லச்செய்கிறது; கொன்றபிறகு, தோலுரிப்பது, ரத்தத்தை சுத்தப்படுத்துவது, தசையை எடுப்பது, பதப்படுத்துவது, முதலிய செயல்கள் மனத்தை இருக செய்துவிடுகிறது. ஒவ்வொரு காரியத்தையும் செய்யும் மனிதர்கள் தனித்தனியாக இருக்கும்போது, அத்தகய இருகிய மனங்கள் எந்தவித சலனமும் இன்றி வேலைகளை செய்கின்றன. சமைக்கின்றவர்களும், பழகியபிறகு, வித்தியாசம் பார்ப்பதிலை. சாப்பிட ஆரம்பித்தவர்களும், பிறகு எத்தகைய, பாவ உணர்ச்சிகளையும் கொள்வதில்லை. ஆகவே, ஒருகாலகட்டத்தில் மனம் இருகி-சமைத்து விடுகிறது. அந்நிலையில், விலங்குகளைக் கொள்வது பாவம், மாமிசம் தின்பது பாவம் என்றெல்லம் போதித்தால் மனதில் ஏறாது. உண்ணாவிரதத்தைக் கடைபிடிக்கும் மக்களை கேலிசெய்யும், கேவலப்படுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் “உண்ணும் நோன்பு” கடைபிடித்து, அதிலும், மாமிசம்-வகையறா வைத்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராகவே உண்ணும் “மனப்பாங்க்ய்ம்” இத்தகையதே.

Did Buddha die of eating pork - Arthur Waley

புத்தர் புலால் உண்டது பற்றிய குறிப்புகள்: புத்தரே புலால் உண்பது பற்றி சில குறிப்புகள் காணப்படுகின்றன:

1. சிஹா என்ற ஒரு ஜைன படைத்தளபதி, கௌதம புத்தருக்கு மாமிசத்தை பரிமாரியதாகவும், புத்தர் அதனை உண்டதாகவும் குறிப்பு உள்ளது [ஜைனர்கள் புலாலை அறவே ஒதுக்குவதால், அவ்வாறு ஒரு ஜைனமதத்தவன், புத்தருக்கு மாமிச உணவு கொடுத்திருப்பானா என்று நோக்கத்தக்கது. அல்லது, இது ஜைன-பௌத்த சர்ச்சைகளுள் ஒன்றாகவும் கருத வேண்டியுள்ளது. அதாவது, ஒன்று ஜைனன் தனது நம்பிக்கையிலிருந்து பிறழ்ந்து புலாலைத் தொடுகிறான். இரண்டு, அஹிம்சை போதிக்கும் புத்தர் புலாலை உண்ணும் மாதிரி சித்தரிக்கப்படுகிறது]. – மஜ்ஜிம் நிகாய மஹா சிஹா சுத்த1.2,2.

2. தேவதத்தன், புத்தரிடம் சொல்கிறான். “வாழ்நாள் முழுவதிலும் யார் மீன் மற்றும் மாமிசத்தைப் புசிக்காமல் இருக்கிறானோ அவன்தான் சங்கத்தில் அனுமதிக்கப்படவேண்டும்”. புத்தர் பதில் சொல்கிறார், “நான் யாருமே பார்க்காத, கேட்காத இது வரையிலும் தயாரிக்கப்படாத தூய்மையான மாமிசத்திற்கு விண்ணப்பித்துள்ளேன்” [இதுவும் தத்துவ ரீதியில் யதார்த்தமாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஒன்று, அவ்வாறு வாழ்நாள் முழுவதிலும் யார் மீன் மற்றும் மாமிசத்தைப் புசிக்காமல் இருக்கிறார்கள் என்றால் தாவர உணவை மட்டு உண்பவர்கள்தாம். புத்தர் சொல்வதோ தான் ஏற்படுத்திய கட்டுப்பாட்டின்படியாருமே பார்க்காத, கேட்காத இது வரையிலும் தயாரிக்கப்படாத தூய்மையான மாமிசம் கிடைக்காது என்பதனால், அத்தகைய 100% புலால் மறுக்கும் நம்பிக்கையாளர்களை மட்டும் தேடிபிடித்து சங்கத்தில் சேர்த்துக் கொள்ளமுடியாது ]. – தேவதத்த வித்ரோஹ, சுல்ல வக்க.7

3. இங்கு சுண்ட என்ற கொல்லனிடமிருந்து, புத்தர் “சுக்ர மத்தவ” என்ற உணவை வாங்கிப் புசித்ததாகவும், அதனால், அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பிறகு குடலில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிடப்படுகிறது. இங்கு “சுக்ர மத்தவ” என்பது பலவிதமாக மொழிபெயர்க்கப்படுகிறது:

1.        பன்றியின் மாமிசம்.
2.        மிருதுவான மாமிசம்.
3.        மிருதுவான ஒரு தாவர உணவு.
4.        பாலில் வேகவைத்த அரிசியால் செய்யப்பட்ட உணவு.

மஹாபரிநிப்பான (புத்தர் தனது மரணப்படுக்கையில் அளித்த உபதேசம்) சுத்த.
2.3.
ஜனவசப சுத்த (புத்தரின் இறப்பிற்கு பிறகு பிம்பிசரனுடைய விஜயம்)
சரிபுத்த சுத்த (சரிபுத்தனின் சிங்கத்தின் கர்ஜனை)

Rhys Davids, Dial, Vol.ii, p.137.
J. F. Fleet, JRAS, 1909, p.21.
Edward J. Thomas, The Life of Buddha As Legend and History, Motilal Banarasidas, New Delhi, 1977, p.149.
Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.
343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm
Vaidya Bhagwan Dash, in his introduction to the Hoernle’s book, pp.xix- xx.
A. F. Rudolf Hoernle, Studies in the Medicine of Ancient India (Osteology or the Bones of the Human Body), Concept Publishing Company, New Delhi, 1984.
B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, pp. 542-543.

அம்பேத்கர், “some preparation of Sukra-madhva” என்று குறிப்பிட்டாலும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை, இருப்பினும், “சுன்டா கொடுத்த உணவு புத்தருக்கு ஒத்துப்போகவில்லை” என்று குறிப்பிடுகிறார் (ப.543).

Did Buddha die of eating pork - Roshi Philip Kapleau
புத்தர் மற்றொரு இடத்தில் உபதேசிப்பது: “பிக்குகளே, கீழ்கண்ட வியாபாரங்களில், எந்த சாதாரணமான மனிதனும் ஈடுபடலாகாது:

1.        ஆயுதங்கள்.
2.        உயிரோடு இருக்கும் பிராணிகள்
3.        மாமிசம்.
4.        மது.
5.        விஷம்”
அங்குத்தாரா நிகாய.5.177

இதன்படி பார்த்தால், உயிரோடு இருக்கும் பிராணிகளை யாரும் விற்கவோ, வாங்குவதோ கூடாது. இறந்த பிறகு அவ்வாறு செய்யலாமா என்பதற்கு, மாமிசம் விற்கலாகாது என்பது தடையாக உள்ளது. ஆகவே அத்தகைய நிலையில், மாமிசம் சமைத்து, அதிலும் “அஹிம்சை” போதிக்கும் பிக்குகளுக்கு தானமாகக் போடுகிறார்கள் என்பது உண்மைக்குப்புரம்பாக உள்ளது. புத்தர் போதித்தபடி, 100% இத்தொழில்களில், வியாபாரங்களில் யாருமே ஈடுப்டவில்லை என்றால், நிச்சயமாக புலால் உண்பது சமூகத்திலிருந்து மறைந்திருக்கும்.

Cunda preparing pork a Chinese pork

கேட்காதே, கொடுத்தால் சாப்பிடு: புலால் உண்பது சமுக்கத்தில் 100% அமூல் படுத்த்முடியாது, ஏனெனில், அது ஒருவரின் உணவுபழக்கத்தைப் பொருத்து இருந்து வந்துள்ளது. ஆகவே, பிக்குகளுக்கு என்று இல்லாமல், மற்றவர்களுக்காகவோ அல்லது பொதுவாகவோ விலங்குகள் கொல்லப்பட்டு, தோலிரித்து, மாமிசத்தைப் பதப்படுத்தி, சமைத்து பரிமாரினால், பிச்சையிட்டால் எந்த கேள்விகளும் கேட்காமல், பெற்றுப்புசிக்கலாம், புசித்திருக்கக்கூடும்.

ஆகையால், புலால் உண்ணுவது பௌத்தத்தில் ஒரு பெரியபிரச்சினையாகக் கொள்வதில்லை. ஆனால், அஹிம்சை, உயிர்வதைக்கூடாது, என்றெல்லாம் போதிக்கும் புத்தர் அல்லது பௌத்தர்கள் புலால் உண்டுகொண்டே போதித்தால் என்னாவது? மேலும் அசோகனுடைய கல்வெட்டு ஆணைகளுக்கும் இது எதிராக இருப்பதைக் காணலாம்.

சாந்தம், அமைதி, நிர்வாணம் பேசும் பௌத்தர்கள் புலால் உண்ணுவது முன்னுக்கு முரணானது. சாத்விக உணவு விடுத்து, புலால் உண்டு அத்தகைய நிலையை அடையலாம் என்பதும் மனச்சிக்கல் உருவாக்குவதே. இந்த பெரிய முரண்பாடு, நிச்சயமாக பௌத்தம் எதிர்கொண்டுள்ளது.

Cunda preparing pork a Chinese pork- illustrative

மேற்கத்தைய மதங்களுடன் ஒத்துப்போவது: கிழக்கத்திய மதங்களுள் பௌத்தம் இந்த விஷயத்தில் மேற்கத்தைய மதங்களுடன் (யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் / இஸ்லாம்) ஒத்துப்போகிறது. புலால் உண்ணும் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் / இஸ்லாம் மதங்கள் என்றுமே இவ்விஷயத்தில் “அஹிம்சை” பேசுவது இல்லை. “கொன்றால் பாவம், தின்றால் போச்சு” என்ற பானியில் தான் அவை உள்ளன. முகமதிய புலால் உண்ணும் விதிகள் பௌத்தத்தை ஒத்துப்போவதைக் காணலாம்.

வேதபிரகாஷ்
22-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Devotee offered food

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

பிப்ரவரி 20, 2010

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

வேதபிரகாஷ்

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது அல்லது தேய்ந்தது, இந்தியா பௌத்தத்தைத் துறந்தது அல்லது துரத்தியடித்ததைப் பற்றி பல கருத்துகள் உருவாகியுள்ளன. இதில் வேடிக்கையான பிரச்சினை என்னவென்றால், பௌத்தத்தைப் பற்றிய மூலங்கள் அதிகமாக இருந்தும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இருந்தும், அவற்றைப் படிக்காமல், ஆராயாமல், “மற்றவர்கள் சொன்னது” அல்லது “மற்றவர் மற்றவர்களைப் பற்றிச் சொன்னது”, தாங்கள் கேட்டது, கேள்வி பட்டது என்பனவற்றின் மீது கருத்துருவாக்கம் கொண்டு அதனையே சரித்திர ஆதாரமாக நிலைநிறுத்தப்பட்டது போன்று வாதிட்டி பேசி-எழுதி வருவது, தமிழர்களிடையே அதிகமாகவே உள்ளது.

ஒரு தடவையாவது அம்மூலங்களைப் படிப்பது அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்து அவ்வாறு தாங்கள் கேட்டபடி, நினைத்தபடி உள்ளதா அல்லது வேறுவிதமாக உள்ளதா என்று பரிசோதனை செய்வது, சரிபார்ப்பது உண்டா என்பது தெரியவில்லை.

இனி, விஷயத்தை ஆராயும்போது, இவற்றை – பௌத்தம் இந்தியாவில் குறைந்தது பற்றி – பொதுவாக இரண்டு தலைப்புகளில் பிரித்துஆராயலாம்:

1. புத்தமத உள்விவகாரங்கள் மற்றும் 2. வெளிகாரணிகள்

புத்தமத உள்விவகாரங்கள்: பௌத்தம் திடீரென்று குறைந்து, தேய்ந்து, மாயமாக மறைந்து விடவில்லை. இந்திய சரித்திரத்தில் உள்ள, உருவாக்கப்பட்ட, பரப்பப் பட்டுவரும் பற்பல கட்டுக்கதைகளில், இதுவும் பிரபலமான ஒரு கட்டுக்கதை, மாயை, பொய்மையும் கூட.

6ம் நூற்றாண்டிலிருந்து BCEலிருந்து, வளர்ந்து, பரவி, உலக மதமாகி, பலம்-அதிகாரம் பெற்று, சர்ச்சைகள் பெருகி, உடைந்து, பிரிவுகள் ஏற்பட்டு பிறகு 12ம் நூற்றாண்டில்தான் CE குறைகிறது! ஆகவே 1600-1800 வருடங்கள் இந்தியாவில் கோலோச்சி வந்தது, அதிகாரத்துடன் பவனி வந்தது, தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தியது. [இப்பொழுது BCE = Before Current / Common Era CE = Current / Common Era என்றுதான் சரித்திரத்தில் குறிப்பிடப் படுகின்றன].

அத்தகைய பலமுள்ள, அதிகாரமுள்ள உலக மதம் சாதாரணமாக மறைந்து விட முடியாது. பௌத்தத்தின் வளர்ச்சி-வீழ்ச்சி என்பது, அதன் 1600-1800 வருட-செயல்பாடுகளை பாரபட்சமின்றி ஆராய்ந்து தெளியவேண்டும். அம்பேத்கரே அத்தகைய வழியைக் காட்டிடுள்ளார்.

  1. புத்தமதம் இரண்டாகப் பிரிந்தது: முதலில் பௌத்தர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், பிறகு பல விஷயங்களுக்கு சண்டை-சச்சரவுகள் வளர்ந்தன. அதனால், புத்த சங்கம் ஹீனயானம் மற்றும் மஹாயானம் என்று இரண்டு பிரிவுகளாகவும், மற்றும் 16 சிறு பிரிவுகளாகவும் பிரிந்தன.
  2. புத்தரைக் கடவுளாக்கியது: கடவுள் இல்லை என்று வளர்த்த மதம், புத்தரையே கடவுளாக்கி அவர்களது புத்தகங்களும் அவ்வாறே திரித்து எழுதப் பட்டன.
  3. விக்கிர-ஆராதனை பெருகியது: வேதகாலத்திலிருந்து, பாரதத்தில் / “இந்தியா”வில் உருவவழிபாடு இல்லை. ஆனால், திடீரென்று, பௌத்தர்கள் புத்தருக்கு பெரிய அளவில் சிலைகளை செதுக்க ஆரம்பித்தனர். அத்தகைய வேலைகளில் எத்தனை வேலையாட்கள் ஈடுபடுத்தியிருக்க பட வேண்டும் என்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.
  4. வேதங்களை எதிர்த்து, வேதங்களை எடுத்தாண்டது: வேதங்களை பௌத்தர்கள் எதிர்த்தாலும், பெரும்பாலான, வேத-உபநிஸதக் கருத்துகளை அப்படியே தமது “தம்மத்தில்” தம்-மதத்தில் ஏற்றுக் கொண்டனர்[1].
  5. அதிகாரம், ஊழல் பெருகியது: முதலில் பிக்குகள் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, தம்ம-சிரத்தையுடன் இருந்தனர். ஆனால், பின்பற்றுபவர்கள் பெருக-பெருக அவர்களது முக்கியத்துவம் வளர்ந்தது. வாழ்க்கை முறையும் மாறி வசதிகளுடன் வாழத்தொடங்கினர். விஹாரங்களில் பணப்புழக்கம் அதிகமாகியது. இதனால் உட்பூசல்கள் ஆரம்பித்து பிக்குகள் ஒருவரை ஒருவர் குற்றம் கூற ஆரம்பித்தனர்.
  6. பெண்கள் பிக்குனிகள் அனுமதிக்கப்பட்டது: பெண்கள் பிக்குனிகளாக / கன்யா ஸ்திரீகளாக அனுமதிக்கப் பட்டது, சங்கத்தின் அழிவிற்கு வித்திட்டது.
  7. ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டது: அஹிம்சை போதித்த பௌத்தர்களே ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டதால், மக்களுக்கு, புத்தருக்குப் பிறகு, பௌத்தத்தின் மீதான நம்பிக்கை குறைந்தது. மன்னர்களுடைய தொடர்பு போர்களில் ஈடுபடவும் செய்தது.
  8. மாமிச உணவு உண்டது: குறிப்பாக மாமிச உணவு உண்ணும் பிக்குகள், பௌத்தர்களைக் கண்டு, மக்கள் வியந்து திகைத்தனர். விலங்குகளைக் கொல்லாமல், அவற்றை தோலுறித்து, பதப்படுத்திக் கொடுக்காமல் மாமிசம் கிடைக்காது. குறிப்பாக, புத்தரே மாமிச உணவைத் தடை செய்யாதௌ மாட்டுமன்றி புசிக்கவும் செய்தார்.
  9. மதம்-அல்லாத விஷயங்களில் ஈடுபட்டது: மதத்தை விடுத்து, பௌத்தர்கள் மற்ற காரியங்களில் அதிகமாகத் தலையிட்டனர்.
  10. அரசியலில் தலையிட்டது: ஜைனர்களைப் போன்று அரசியலில் ஈடுபட்டது. அதாவது ஆளும் மன்னர்களின் துணையில் அல்லது அவர்களை மதம் மாற்றி தமது மதத்தின் அதிகாரத்தைச் செல்லும் முறையைக் கடை பிடித்தனர். பௌத்த ராஜ்யங்கள் (Buddhist Kingdoms) பரவியிருந்தது உண்மை.
  11. வியாபாரத்தில் ஈடுபட்டது: பல இடங்களுக்கு, பல நாடுகளுக்கு சென்றுவந்த பௌத்தர்கள் வியாபாரத்தில் பங்கு கொண்டனர். வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டு, அரசியல் அதிகாரமும் பெற்றதால், மத காரியங்களில் சிரத்தையாக ஈடுபடாமல் போனது.
  12. கடல் கடந்தது மற்ற செயல்கள்: பாரத்தில் சில காரியங்கள் செய்வது ஏற்றுக் கொள்ளப் படாததாக இருந்தன. அவை இக்கால சட்ட-திட்டங்களைப் போன்று “கலிவிரஜ்யா” = கலிகாலத்தில் விலக்கப் படவேண்டியவை, என்றிருந்து மக்களிடையே நம்பிக்கையாக மனங்களில் பதிந்திருந்தது. அந்நிலையில், பிராமணர்கள் கடல் கடக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, பிக்குகள் கப்பல்களில் சென்றதும் மக்களுக்கு வியப்பாக இருந்தது.

வேதபிரகாஷ்

10-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

இதற்கான ஆதாரமான நூல்கள்:

Louis Dela Valle Poussin, The Buddhist Councils, K. P. Bagchi & Company, Calcutta, 1976.

Sumangal Barua, Buddhist Councils and Development of Buddhism, Atisha Memorial Publishing Company, Calcutta, 1997.

I. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen, Motilal Banarasidas, New Delhi, 1999.

K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm

Alexander Berzin, The Historical Interaction between the Buddhist and Islamic Cultures before the Mongol Empire, 1996 http://www.berzinarchives.com/web/en/archives/e-books/unpublished_manuscripts/historical_interaction/pt2/history_cultures_12.html

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, pp.439-447; 542-543

M. Monier Williams, Buddhism: In its connexion with Brahmanism and Hinduism and its contrast with Christianity, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd, New Delhi, 1995.

கடைசி புத்தகத்தில், மோனியர் வில்லியம்ஸ், பௌத்தம் தான் மேற்கொண்ட மாற்றங்களினால், இந்து மதத்தின் உயரிய கொள்கைகளான சகிப்புத்தன்மை, அஹிம்சை முதலிய குணாதிசயங்களினால், 12ம் நூற்றாண்டு காலத்தில் மறைய நேரிட்டது என்று விளக்குகிறார் (Lecture VIIl – Changes in Buddhism and its disappearance from India என்ற விளக்கத்தை “How Did Buddhism Die out in India?” pp.161-171, காணலாம்).

பி.வி.பாபட் தொகுத்த நூலில், “பௌத்தத்தில் பிற்பாடு செய்யப் பட்ட மாற்றங்கள்” என்ற தலைப்பில், பௌத்தம் எவ்வாறு தனது ஆரம்பகால நிலையினின்று பிரழ்ந்து என்பதனைக் காணலாம்.

P. V. Bapat, 2500 years of Buddhism, Publications Division, New Delhi, 1997, pp.297-332


[1] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992.