Archive for the ‘சரணம்’ Category

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மாநாடு அழைப்பிதழ்

மாநாட்டில் பேசுபவர்கள்………

14-05-2023 – தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு: 14-05-2023 அன்று தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை வகித்தார். தம்ம தர்மேந்திரா, கோ.பெரியசாமி, ஆதிராஜா, சா.ராம்ஜி, மூக்நாயக் மணி, காளிதாஸ், மணிகண்டன், இளையநந்தன், பி.பி.ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவாசல் அருகே தியாகனுாரில் பவுத்த மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “தமிழகத்தில், 76 இடங்களில் புத்தர் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், உலகம் முழுதும் கடவுள் நம்பிக்கை, பிசாசு மூடநம்பிக்கை இருந்தது. கடவுள் நம்பிக்கையை பரப்பும் நிறுவனமாக மதம் உள்ளது. பவுத்த மதம் இருக்கும் இடத்தில் அறிவு உள்ளது. அம்பேத்கர் மேலும், 10 ஆண்டு உயிருடன் இருந்திருந்தால் பவுத்த மதம் வளர்ச்சி பெற்றிருக்கும். நல்லிணக்க கோட்பாடாக பவுத்தம் உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். புத்தர் அவதார புர்ஷர் அல்ல, புஷ்யமித்ர சுங்கரால் தான் பௌத்தம் இந்தியாவில் வீழ்ந்தது, என்பதெல்லாம் அவரது பேச்சில் இருந்த முக்கியமான அம்சங்கள்.

பௌத்த ஊர்வலம், நடபடிகள்: இந்த மாநாட்டை முன்னிட்டு முன்னதாக புத்த பிக்குகள் மற்றும் சங்க ரத்தினர்கள், பவுத்த உபாசகர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. மேலும் மாநாட்டில் சங்க பேரவையின் மகாசங்ககாதிபதியாக அனைவரும் முன்னிலையிலும் முக்கோல் பெற்றுக் கொண்டு பிக்கு தம்மசீலர் பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தபிரகாசம், தம்ம ரத்னா, ஜெயசீலர், குணசீலர், அமராவதி, தமிழ் கோவை, பவுத்தம் பாலா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு மங்கள கங்கண நிகழ்வும் புத்த பூர்ணிமா நிகழ்வும் நடை பெற்றது. பௌத்தத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இச்சடங்குகள் நிறைவேற்ற பட்டன. ஒருவேளை எஸ்.சிக்களை பௌத்தத்திற்கு மாற்ற, முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், “நியோ பௌத்தம்,” என்று குறிப்பிடாமல் இருப்பதும் நோக்கத் தக்கது[1].  

செக்யூலரிஸத் தன்மையினை எடுத்துக் காட்டிய முயற்சி: இதைத் தொடர்ந்து விகார் கவுன்சில் செயலர் திருநாவுக்கரசு தலைமையில் போதிச்சந்திரன் வரவேற்பில் சிறுபான்மை நலகுழு உறுப்பினர்கள் பவுத்த பெருமாள், அம்பேத் ஆனந்த், சி. அழகர், தேவேந்திரன், கௌதம் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில் சர்வ மதத்தினரும் கலந்து கலந்துண்ட நிகழ்வு நடை பெற்றது. இதில் காஞ்சி ஜைனமட ஜினாலய பரிபாலகர் பட்டாராக சுவாமிகள், உத்தரப்பிரதேசம் பிக்கு நாகபூசனா, ஆந்திரபிரதேசம் நாகார்ஜுனா, போ தி ஆகியயோர் மகா சங்கதிபதி மற்றும் மகா சங்கத்தை வாழ்த்தி பே சினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள புத்தர் திருக்கோயில் நிர்வாகிகள், சங்கரத்தினர்கள், புத்த பூசகர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேடையில் வழிபாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாட்டில் பவுத்த சுவடுகள் கருத்தரங்கம் நிகழ்வு மகாதினகரன் தலைமையில், எஸ் வசந்த் வரவேற்பில் நடைபெற்றது. இதில் தம்மதேவா, கோவைப் பிரியா, சிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் ஆதிக்கம்: ஜெர்மனி தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, குந்தவை நாச்சியார், கல்லூரி இணை பேராசிரியர் சிவராமன், வரலாற்று ஆய்வாளர் அரகலூர் வெங் கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 மாவட்ட சிறுபான்மைநல உறுப்பினர்கள் மகாசங்க உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து பவுத்த மறுமலர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பாளர் கவுதம சன்னா தலைமையில் நடைபெற்றது. மகா சங்க பொருளாளர் அரக்கோணம் கோவி. பார்த்திபன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொ.திருமாவளவன். எம்.பி., காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ., சிந்தனை செல்வன், மருத்துவர்கள் ராஜ்வர்தன், பெரியசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் மகர பூசணம், மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்கத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக சா. ராம்ஜி சாக்கியா நன்றி கூறினார்.

முரண்பட்ட அல்லது சேந்துள்ளவர்களின் சித்தாந்த நிலை: இப்படி இம்மாநாட்டில் ஏதோ பல இந்திய மாநிலங்களிலிருந்து, பல வெளிநாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்த முயன்றாலும், அவரவர் தமது காரியங்களில் குறியாக இருந்தனர். திருமாவளவன் பேசி சென்றுவிட்டார்.   தேமொழி எழுதிய ‘ தமிழகத்தில் பௌத்தம்” நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில்(14.05.2023) சேலம் அருகே தியாகனூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பௌத்த சங்கம் கூறியது, “நெடுநாளாய்த் தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்கள் குறித்த இந்துக்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லை யென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்து கொள்ளப் போவதில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, தன்னுதவி, தன் மேம்பாட்டுக்கான போராட்டம் அவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்.” பிறகு, நாராயணன் போன்றோர் எப்படி விசுவாசத்துடன் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோவிலும், இந்து கோவில் போலத் தான் கட்டியுள்ளார்கள். திருமா பார்த்தாரா என்று தெரியவில்லை.

விசித்திரமான நட்புக்குழு: கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் இவர்களின் தொடர்புகள், தமிழகத்தில் பல பேனர்களில் வேலை செய்வது, பரஸ்பர உதவி முதலியன பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. கௌதம சன்னா விசிக வின் பிரச்சார செயலாளர், பல அமைப்புகளில் பொறுப்பு என்று பட்டியல் காணப் படுகிறது[2].  மாநில செயலர் நீலசந்திரகுமார், முனைவர் கனல்விழி, பேராசிரியை சுந்தரவல்லி, செம்மலர், கௌதம சன்னா முதலியோர் கிருபா என்ற பெண் வழக்கறிஞர் விக்ரம் மீது ஏப்ரல் 2023ல் கொடுத்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க மே 2023ல் முதல் வாரத்தில் அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சுபாஷிணி மீது ஏற்கெனவே சிலர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இப்படி சர்ச்சைக்குர்யவர்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்கின்றனர் என்பதும் புதிராக உள்ளது. நாராயணன் கண்ணன் தன்னை ஒரு வைணவன் என்று காட்டிக் கொள்வார், ஆனால், இவர்கள் தூஷிக்கும் பொழுது கண்டுகொள்ள மாட்டார். தவிர, “மின் தமிழ்” என்ற குழுவில் இவர்கள் மற்ற பலருடன் நடு வைத்துள்ளனர். எல்லா விசயங்களையும் அலசுவர் பொதுவாக செக்யூலரிஸ, முற்போக்கு, மார்க்சீய, சித்தாந்திகள் போன்று காட்டிக் கொள்வர்..

கௌதம சன்னாபலவித பதவிகள், பொறுப்புகள், எழுத்தாளர் முதலியன: கௌதம சன்னாவைப் பொறுத்த வரையில் அரசியல்வாதி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தேர்தலிலும் நின்று தோற்றுள்ளது தெரிகிறது. “ஜெய் பீம் பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் வைத்திருப்பதும் தெரிகிறது.. இதனால், பௌத்தத்தை அரசியல் ரீதியில் உபயோகப் படுத்த முயலும் நிலையும் தெரிகிறது. அதனை அவரே விளக்கியுள்ளதை இங்கு படிக்கலாம்[3]. மற்றபடி “தலித்” என்ற பேனர்கள்-மேடைகள், புத்தகங்கள் எல்லாம் அம்பேத்கரை உபயோகப் படுத்தப் படும் முறையும் விளங்குகிறது. வழக்கம் போல திருவள்ளுவரையும் இதில் சேர்த்து குழப்பி, ஆராய்ச்சி என்று வறுத்தெடுப்பது, கிறிஸ்துவ பாணியும் புலப் படுகிறது. எனவே தலித்-கிறிஸ்துவ-பௌத்த இணைப்புகள் உள்ளதா இல்லையா என்று ஆராய வேண்டியதும் உள்ளது.

நாராயணன் கண்ணன் மற்றும் கௌதம சன்னா உறவுகள்: நாராயணன் கண்ணன் என்பவர், “பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்,” என்று பேஸ்புக் 14-05-2023 பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்று தியாகனூரில் நடந்த பௌத்த மாநாட்டில் சுபாஷினியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  மதம் மாறினாலும் எஸ்.சிக்களுக்கு அச்சலுகைகள் தொடரும் என்று அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளின் படி உள்ளது. அதனால், இதில் பிரச்சினை இல்லை.

[2] https://gsannah.wordpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

[3] “ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா  by வல்லினம் • February 1, 2018; https://vallinam.com.my/version2/?p=4973

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்தம மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

தென்னிந்தியாவில் ஜைனம்பௌத்தம் குறைந்து வைணவம்சைவம் வளர்ந்து ஆதிக்கம் பெற்றது: பௌத்த மதம் தன்னுடைய ஹிம்சை-அஹிம்சை முரண்பாடுகளால், போலித் தனங்களால், இரட்டை வேடங்களால், வன்முறைகளால், வாணிக அடாவடித்தனங்களால், மோதல்களினால், போர்களால் இந்தியாவில் வெளிப்பட்டு, மக்கள் அதனை ஒதுக்கினர்[1]. போதாகுறைக்கு, இடைக்காலங்களில் ஜைன-பௌத்த மோதல்களில் பௌத்தம் பெரும்பாலாக சீர்குலைந்தது. ஜைன ஆதிக்கம் அதிகமாகிய நிலையில் பௌத்தம் ஒதுக்கப் பட்டது[2]. பிறகு தென்னகத்தில் வைணவம்-சைவம் கொஞ்சம்-கொஞ்சமாக பல்லவ காலத்திற்குப் பிறகு வளர்ந்த நிலையில், பௌத்தம் ஓரளவுக்கு முழுமையாக வெளிநாடுகளுக்குச் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜைனம் உச்சத்தை அடைந்து தென்னிந்தியாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், வைணவம்-சைவம் சித்தாந்த மோதல்களில் தோற்க ஆரம்பித்தது. ஜைன அரசர்களின் வன்முறைகள் அவர்களது அஹிம்சை நெறிகளுக்கு முரணானது. முதல் நூற்றாண்டுகளில் தமிழக அழிவுகளுக்கு ஜைன களப்பிளர்களைச் சுட்டிக் கட்டியுள்ளனர். கல்வெட்டுகளும், ஜீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களும் ஜைனர்களின் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகின்றன.

ஜைனபௌத்த சிலைகள் தெய்வசிலைகள் அல்ல, பூஜிக்கப் படவும் இல்லை: மக்களுக்குப் புரிந்தது. இதனால், ஜைனர்கள் இரட்டை வேடம் போட முடியவில்லை. தங்களது வியாபார மற்றும் வணிக முறைகளால் இந்தியாவிலேயே சித்தாந்தத்தை மாற்றிக் கொண்டு தழைக்க முயன்று வெற்றி கண்டது. ஜைன-பௌத்த மதங்கள் நாத்திக மதங்களாதலால், அவற்றின் கடவுள், கடவுளின் விக்கிரகம் என்றெல்லாம் இல்லை[3]. இதனால், மதத்தலைவர்களின் சிலைகள் ஒதுக்கப் பட்டன, மறக்கப் பட்டன. ஏனெனில், அவை பூஜிக்கப் படவில்லை. இதனால் தான் அத்தகைய சிலைகள் அங்கும்-இங்கும் வயல்களில், கிராமப்புறகளில், தொலைவான இடங்களில் கிடக்கின்றன. இதுபோல பல சிவலிங்கங்களும், மற்ற இந்துமத கடவுள், தேவதைகளின் சிலைகள், விக்கிரங்களும் அதிகமாகவே காணப் படுகின்றன[4]. இத்தகைய சிலைகள் காணப் படுவதற்கு மாலிக்காபூர், ஹைதர் அலி, திப்பு சுல்தான், வாலாஜா நவாப்புகள் முதலியோர் காரணம். இதை எந்த எழுத்தாளர்களும் முறையாக எடுத்துக் காட்டுவதில்லை.

2013ல்தியாகனூரில் புத்தர் கோவில் கட்டப் படுதல்: கேட்பாரற்று கிடந்த, ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலைக்கு, தனி கோவில் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள், கோரிக்கை விடுத்தனர்[5] என்று ஊடகங்கள் குறிப்பிடுவ்தை கவனிக்கலாம். அதையடுத்து, மெட்ராஸ் சிமென்ட், சிட்டி யூனியன் பாங்க், எஸ்.கே., கார்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம்பெனி நிறுவனங்கள் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புத்த தியான பீடம் அமைக்க, கட்டுமான பணி நடந்தது[6]. மே 23 2013 அன்று தியான பீடத்தில், புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தில் சிலைகள் கீழ்கண்டவாறு அம்மைக்கப் பட்டுள்ளன:

  • கிழக்கு (அ) கோயிலின் முன் பக்கத்தில்: புத்தர் உருவம்
  • தெற்கு : கண்ணனின் உருவம்
  • மேற்கு : திருமாலின் நரசிம்ம அவதாரம்
  • வடக்கு :கிருஷ்ண அவதாரம்

இங்கு புத்தரின் விக்கிரகம் ஒரு வைஷ்ணவ ஆச்சாரியார் போலவே உள்ளது. புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாலும், அத்தகைய மாற்றத்தை வேண்டுமென்றே செய்தது இந்துக்களா, பௌத்தரா என்ற கேள்வியும் உள்ளது. இந்துக்களை மதமாற்ற பௌத்தர்கள் செய்த சூழ்ச்சி என்றும், இல்லை பௌத்தத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இந்துக்கள் செய்த சூழ்ச்சி என்றும் பரஸ்பர குற்றச்சாட்டு கூறுவது தெரிந்த விசயமே.

2023ல் பௌத்த மாநாடு நடத்த தீர்மானம்: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புத்த பூர்ணிமா விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பௌத்தர்கள் மற்றும் விஹார்களின் தலைமை மத அமைப்பின் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீட மேற்பு பிக்கு பிக்குகளின் சங்க பரிபாலன கங்கன மேற்புக்கான தமிழ்நாடு பௌத்தம் மறுமலர்ச்சி மாநாடிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கௌதம சன்னா அவர்கள் 14.05.2023 பகவான் தியாக புத்தர் திருக்கோயில் தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு தியாகனூரில் நடைபெற இருப்பதால் தமிழ்நாட்டின் ஆதி மதமான பௌத்தம் புத்தரின் காலத்திலும் அதற்கு பிறகும் தமிழகத்தில் பரவி செழித்திருந்தது.  பெரும்பாலான தமிழர்கள் பௌத்தம் தழுவி இருந்த நிலையில் சாம்ராட் அசோகரின் காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஏராளமான பௌத்த புனித தலங்கள் உருவாக்கினார். பௌத்தத்தை பின்பற்றிய தமிழ் அரசர்கள் அறநெறிப்படி ஆட்சி புரிந்தனர் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்தம் செழித்தோங்கியிருந்தது.அக்காலகட்டத்தில் பௌத்தத்தை பரப்பும் ஒருங்கிணைக்கவும் தலைமை பௌத்த சங்கம் செயல்பட்டது. அதற்கு தலைமை பிக்குவும் மற்ற நிர்வாகிகளும் பௌத்த மார்க்கத்தை நிர்வகித்தனர். இவர்களின் நிர்வாகத்தின் கீழ் விகாரைகள்  எனப்படும் பிக்கு பிக்குனி மடங்களும் புத்தரின் பாதையை பின்பற்றுவதை நினைவுறுத்தும் அவரின் பாத பீடிகைகளை  வழிபடும் முறையும் தமிழகத்தில் பரவலாக இருந்தன. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த பிக்கு பிக்குனிகள் பேரவை  மறைந்தது. தமிழர்களின் ஆதிமதமான பெளத்தம் தமிழ்நாட்டில் அழிந்துபோனது.

தமிழகத்தில் பௌத்தத்தின் நிலை: பௌத்தம் அளிக்கப்பட்டு 700 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் பண்டிதர் அயோத்திதாசரும் இந்தியா அளவில் அனகாரிக தர்மபாலா மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் பௌத்தத்தை மீட்டெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக 800 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் மகா சங்காதிபதி தலைமையில் பிக்கு பிக்குனிகள் நிர்வாகத்தில் தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பாகவும் தலைமை சங்கமாகவும் மீண்டும் எழுகிறது பௌத்தம். அதற்கான விழா தான் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீடமேற்பு மற்றும் பிக்கு பிக்குனிகளின் சங்க பரிபாலன கங்கன மேற்பு விழா நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது என்பது சிறப்பு மிக்கதாகும். இந்த மாநாட்டில்  அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து மத தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பௌத்த சங்கப் பேரவை மகா சங்காதிபதி வணக்கத்திற்குரிய பிக்கு தம்மசீலர், வணக்கத்திகுரிய பிக்கு போதி அம்பேத்கர் மற்றும் பிக்குகள், மகா சங்க செயலாளர் ஆர். திருநாவுக்கரசு, பொருளாளர் பார்த்திபன், தமிழக முழுவதிலும் உள்ள புத்த விகார் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு புத்தசங்கா கவுன்சில் துணைச் செயலாளர் எஸ் வசந்த், பால்ராஜ், ரகு, செந்தில், சந்திரசேகர், சரவணன்,மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  இதைப் பற்றி முன் தமிழில் விவரமாக சுமர் 200 பக்கங்களுக்கு எழுதியுள்ளேன். ஆக, இவை இந்த குழுக்களுக்கு – கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் முதலியோர்களுக்கு தாராளமாகவே தெரியும்.

[2] 788-CEல் தோல்வியடைந்த பௌத்தர்களை கொல்லாமல், இலங்கைக்கு நாடு கடத்தியதை கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன.

[3]  பௌத்தர்களின் ஸ்தூபம், விகாரம் முதலியவை கோவில்கள் அல்ல, சிதை-அல்லது இறந்தவர்களில் எச்சங்கள் மீது நினைவாகக் கட்டப் பட்ட கட்டிடங்கள் ஆகும். சிலைகளும் பிற்காலத்தில் வைக்கப் பட்டன.

[4]  இவையெல்லாம் சைவ-வைணவ மோதல்களில் உண்டானவை போன்று சித்தரிக்கப் படுகின்றன, ஆனால், அவை ஜைன-பௌத்தர்களால், பெரும்பாலும் துலுக்கர்களால் கோவில்கள் இடித்துத் தள்ளப் பட்டு விட்டுச் சென்ற மீதிப் பொருட்களே.

[5] தினமலர், ஆத்தூர் அருகே 5ம் நூற்றாண்டு கால புத்தர் சிலை பிரதிஷ்டை, பதிவு செய்த நாள்: மே 24,2013 03:52

[6] https://m.dinamalar.com/detail.php?id=720040

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பிக்குனிகளை மடாலயங்களில் சேர்த்துக் கொண்டாதால் உண்டான விளைவுகள் (7)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பிக்குனிகளை மடாலயங்களில் சேர்த்துக் கொண்டாதால் உண்டான விளைவுகள் (7)

Buddha and women

பெண்களும், பௌத்தமும்: பாலி எழுத்துகளில், வினய மற்றும் இதர சுத்தங்களில் எங்குமே புத்தரின் தனிமட்ட மனிதரின் கவர்ச்சியால் பெண்கள் அதிக அளவில் சங்கத்தில் சேர்ந்தனர் என்பதற்கான எந்தகுறிப்பும் இல்லை.

Eliot, Hinduism and Buddhism, London, 1921, Vol.I, p.248.

  1. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen, Motilal Banarasidas, New Delhi, 1999, p.96.

பெண்கள் பௌத்தத்தில் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், புத்தரைப் பின்பற்ற பெண்கள் வந்தனர் என்பது உண்மை.

பெண் துறவு விசடத்தில் ஜைனத்தின் தாக்கம்: நிச்சயமாக, ஜைன மதத்தின் தாக்கத்தால், பௌத்ததில் பிக்குனிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் எனலாம். மஹாவீரர் தன்னுடைய காலத்திலேயே, தன்னைப் பின்பற்றுபவர்களை நான்கு பிரிவுகளாகக் கொண்டார்:

  1. ஆண்துறவியர்.
    2.        பெண்துறவியர்.
    3.        புதிதாக மதத்தில் சேர்ந்த ஆண்கள்.
    4.        புதிதாக மதத்தில் சேர்ந்த பெண்கள்.

இதோ போல, பௌத்தர்களும், பெண்துறவியரை தமது இயக்கத்தில் / சங்கத்தில் சேர்த்துக்கொண்டனர்.

புத்தரின் முதல் மறுப்பும், பிற்படி அனுமதியும்: “பிக்குனிகள்” – பெண் பௌத்த சந்நியாசிகளை உருவாக்குவதில் அதிலும், சங்கத்தில் சேர்ப்பதை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தார். ஏனெனில், ஆண்பிக்குகள் வழிதவறி நடந்தால் நடக்கும் நிலையை அறிந்தே அவ்வாறு அம்முறையை மறுத்து வந்தார். இருப்பினும், ஆனந்தா என்ற அவருடைய, மிகவும் விசுவாசமான சீடனின் வேண்டுக்கோளுக்கு இணங்கி பெண்களை பிக்குனிகளாக ஏற்றுக்கொள்வதை ஆமோதித்தார். இருப்பினும் அவர் சொன்னதாவது, “இது சங்கத்தின் காலத்தைக் குறைக்கப் போகிறது” என்பதாகும். இதனால், அவர்களுக்கு மிகவும் கடினமான சட்டதிட்டங்களும், கட்டுப்பாட்டு விதிமுறைகளும் விதிக்கப்பட்டன. “பிக்குனி பதி மோக்க” (பிக்குனியின் மோக்ஷப் பாதை) என்று அவர்களுக்குத் தனியாக விதிமுறைகள் இருந்தன. அவர்களுடைய சென்று-வரும் இயக்கம், வசிக்கும் இடங்கள் முதலியன கவனமாகக் கண்காணிக்கப்பட்டன.

Buddha and women-2

பிக்குனி பதி மோக்க” (பிக்குனியின் மோக்ஷப் பாதை) விதிகள்: அத்தகைய கட்டுபாடுகள் (சுல்ல வக்க, வினய பீடிக):

  1. பிக்குனி எவ்வளவு வயதானாலும், பிக்குவிற்கு மரியாதைச்  செல்லுத்த வேண்டும், ஆனால், பிக்கு அவ்வாறு பதிலிற்கு செய்யவேண்டியதில்லை.
  2. “வஸ”காலத்தை, பிக்குனிகள், பிக்கு இல்லாமல் கழிக்கக்கூடாது.
    [பிக்குனி, எந்த காரணத்திற்கும் மடாலயத்தில் பிக்குகள், அவர்கள்
    இருந்தாலும், இல்லையென்றாலும், வசிக்கும் இடத்திற்கு / இடத்தைக் கடந்து செல்லக் கூடாது.]
  3. “உபோசதா” சடங்கு எப்பொழுது நடக்கும் என, பிக்குவிடமிருந்து
    கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும், மற்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் நாளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
  4. “பாவர்னா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குனி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.
  5. “மானத்தா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்படது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குனி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.
  6. “பிக்குனி பதி மோக்க” விதிமுறையின்படி, ஆறு பசித்தியா விதிகளில் பயிர்ச்சி பெற்ற பிறகு, “உபசம்பதா” முறையிலும் இரண்டு சங்கங்களிலும் தனித்தனியாக பயிர்ச்சி பெறவேண்டும்.
  7. பிக்குனி, ஒரு பிக்குவை திட்டவோம் நிந்திக்கவோ, தூஷிக்கவோ கூடாது.
  8. பிக்குனி, ஒரு பிக்குவை கடிந்து கொள்ளவோ, குறைகூறவோ கூடாது. மேற்குறிப்பிட்ட “உபோசதா” மற்றும் “பாவர்னா” தேதிகளை குறிக்க பிக்குகளிடன் வாதிடக்கூடாது. ஆனால், பிக்குகள், பிக்குனிகளை கடிந்து கொள்ளலாம். [இந்த “பாவர்னா” என்ற முறை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிறகு கிருத்துவத்தில் “பாவ-மன்னிப்புக்கோரல்” (confession) என்றாகியதா எனநோக்கத்தக்கது. பௌத்தத்திலிருந்து, கிருத்துவம் உருவானது, பெறப்பட்டது என பல அறிஞர்கள் ஏற்கெனவே எடுத்துக்காட்டியுள்ளனர்.]

Buddha and women-3

பிக்குனிகளுக்கு விதிக்கப்பட்ட இதர தடைகள்: பிக்குனிகள், காடுகளில் வசிக்க அனுமதி அளிக்கப்படவில்லை, ஆனால் வெளிப்புற வீடுகள் மற்றும் ஆஸ்ரமங்களில் வசிக்கலாம். குளிப்பதற்கு, அலங்கார பொருட்கள் உபயோகிப்பதற்கு பல தடைகள் இருந்தன. பிக்குகள் மற்றும் பிக்குனிகளுக்கு இடையே உணவு, ஆடை, மற்றும் இதர பொருட்கள் கொடுக்கல்-வாங்கல் செயல்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தன.

Ramesan, Glimpses of Buddhism, A.P. Govt. archaeological series No.2, Hyderabad, 1961, pp.187-189.

நடைமுறை பிரச்சினைகள்: “பாவமன்னிப்பு” போன்ற சடங்குகள், அதுவும் பிக்குனிகள் பிக்குகள் முன்பு செய்யவேண்டும் என்பன, பிக்குகள் பிக்குனிகளை அடக்கியாள ஏதுவாயிற்று எனத்தெரிகிறது. மேலும், மேற்காணும் விதிக்கப்பட்ட எட்டு விதிகளும், பிக்குக்களுக்கு சாதகமாக உள்ளதை காணலாம். அதாவது “ஆணாதிக்கரீதியில் உள்ளதை தெரிந்து கொள்ளலாம். இதனல்தான், அத்தகைய அடக்குமுறைகளை தாங்காமல், சில பிக்குனிகள் சங்கத்தை விட்டு விலக நேரிட்டத்து என்ற குறிப்பிகளும் கானப்படுகின்றன. இதிலிருந்து, பெண்கள் சந்நியாசிகளாக அனுமதிக்கப்பட்டது, பௌத்தத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது தெரிகின்றது. விஹாரங்களில் ஆண்-பெண் துறவிகள் இருப்பது, அவர்கள் பல நேரங்களில் சந்தித்துக் கொள்வது, பேசுவது, தமது பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்வது முதலிய காரியங்கள் நிச்சயமாக கட்டுப்பாடுகளை மீற வைக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கலாம். இதை மனத்தில் வைத்துகொண்டுதான், புத்தர் முதலில் பெண்கள் சங்கத்தில் சேருவதை ஊக்குவிக்கவில்லை.

Buddha and women-4

ஜைனபௌத்த பெண் சந்நியாசிகள்வேறுபாடு: ஜைனத்தில், பெண்சாமியார்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். மொட்டை அடித்துக்கொண்டு, தீட்சை பெற்றுவிட்டால், அவர்கள் உண்மையிலேயே கடுமையான துறவர வாழ்க்கையினை நடத்தியாக வேண்டும். முக்கியமாக, அஹிம்சை சித்தாந்தத்தை முழு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், உணவு முறை கட்டுப்பாடு இருந்தது. அவ்வுணவு, எளிமையாக சாத்வீக ஆகாரமாக இருந்தது. அதாவது மனக்கட்டுப்பாட்டை தளர்க்கும், சலனத்தை ஏற்படுத்தும், உணர்ச்சிகளைத் தூண்டும் காய்கறிகள், பொருட்கள் உபயோகப்படுத்தி உணவு சமைக்கமுடியாது. ஆகவே, மாமிச உணவு என்பதற்கு பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் இருப்பிடம் தனியாக இருந்தது. பௌத்த பிக்குனிகளைப்போல, விஹார வாழ்க்கை வாழமுடியாது. பௌத்தத்தில், எவ்வாறு “மழைக்கு ஒதுங்கிய நிரந்தரமற்ற ஆவாஸ-ஆராம வாழ்க்கை”, பிறகு பற்பல வசதிகளோடு “நிரந்தர விஹார வாழ்க்கை” ஆனது என்பது ஏற்கெனவே விலக்கப்பட்டது. ஆகையால், பௌத்தத்தில், அத்தகைய கட்டுப்பாடுகள் முதலில் இருந்தாலும், பிற்பாடு தளர்ந்தது, பிரச்சினைகள் ஏற்பட்டது, பிக்குனிகள் சங்கத்திலிருந்து வெளியேறிது-வெளியேற்றப்பட்டதிலிருந்து நன்றாகவேத் தெரிகின்றது.

Buddha and women-5

பிக்குனிகள் சங்கத்தை விட்டு விலகுவது: பிக்குனிகள், சங்கத்தில் சேர்ந்த பிறகு, வெளியேருவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத காரியம். அவ்வாறு அவர்கள், சங்கத்தைத்துறப்பது என்றால், தமது முடிவை “மூன்று முறை” அறிவிக்கவேண்டும். ‘சந்தகாலி’, என்ற பிக்குனியின் வெளியேற்றம் மற்றும் இதர பெண்களின் வெளியேற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, பிக்குனிகள் சந்நியாசி வாழ்க்கையினைத் துறந்து, மறுபடியும் இல்லறத்தில் புகுந்ததாகத் தெரிகிறது. இதைத்தவிர, சங்கத்தைத் துறந்து செல்லும் மற்றொரு முறையும் இருந்தது. அது தற்கொலை செய்து கொள்வதுதான். சிஹா என்ற பிக்குனியின் தூக்குப்போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்ட குறிப்பு உள்ளது. டி லா வல்லி பௌஸின் என்பவர், எப்படி சில பிக்குகள் தமது கழுத்துகளை அறுத்துக்கொண்டனர் என்று குறிப்பிடுகின்றார்.

de la Vallee Pousin, Nirvana, Paris, 1925, p.22.

Mara attacking Buddha Amaravati 2nd cent CE

மேத்தியா என்பவன், பெண்களை அவதூறாக பேசியதற்காக, சங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாக, குறிப்பிடப்படுகிறது.

[இத்தகைய முறையும், ஜைனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஜைனத்தில், பொதுவாக, உண்ணநோன்பு இருந்து தமது வாழ்க்கையினை முடித்துக்கொள்வர். சந்திரகுத மௌரியன், சிரவணபெலகோலாவிற்கு வந்து “வடக்கிருந்து” உயிர் துறந்தத்தை இங்கு நோக்கத்தக்கது. பௌத்தத்தில், பிறகு, தற்கொலை என்பது குறைந்த அளவில் அத்தகைய தண்டனையாக அல்லது உயிர்துறப்பதாகக் கொள்ளலாம். எது எப்படி இருப்பினும், அஹிம்சை போதிக்கும் இம்மதங்கள் இத்தகைய “ஹிம்சா-முறைகளை” மதத்தை / சங்கத்தை / இயக்கத்தைத் துறப்பதற்கு விதித்துள்ளது வினோதமே. தற்கொலை எண்ணம் எழுவது, அச்செயலைத் தூண்டுவது, செய்விப்பது முதலியன மனோதத்துவ ரீதியில் உள்ள விஷயங்கள் ஆகும். அது நிச்சயமாக அஹிம்சா முறையற்ற-நன்முறையற்ற வன்முறை-தீவிரவாத எண்ணங்களை மனத்தில் விதையிட்டு, வளர்க்கும், ஊக்குவிக்கும் முறையாகும். [பெண்கள் சங்கத்தைத்துறக்க மூன்றுமுறை தமது முடிவை அறிவிக்கவேண்டும் என்பதும், இஸ்லாத்தில், ஒரு மனைவியை விவாகரத்து செய்யும்போது, மூன்றுமுறை அவ்வாறு அறிவிப்பது நோக்கத்தக்கது].

பஹ்ருத், தக்ஸசிலா, அமராவதி, அஜந்தா, எல்லோரா முதலிய சிற்பங்கள் மற்றும் சித்திரங்களை வைத்துப் பார்க்கும்போதும், அங்கிருந்த மடாலயங்களில் இருந்த வசதிகளைப் பார்க்கும்போதும், பிக்குகள் “விஹார வாழ்க்கையை” மிகவும் வசதியாகவே வாழ்ந்தது தெரிகிறது. அதுமாதிரியே, பிக்குனிகளும் வாழ்ந்துள்ளனர். எனவே, புத்தர் எதிர்பார்த்தபடியே, பிக்குனிகளை சங்கத்தில் அனுமதித்தது, சங்கத்தின் காலத்தைக் குறைத்துவிட்டது என்றே தெரிகிறது.

வேதபிரகாஷ்
23-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Mara attacking Buddha Amaravati 2nd cent CE-2

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

Mahavira and Buddha.looking alike

ஜைன-பௌத்த சந்திப்புகள், உரையாடல்கள் மற்றும் எதிர்ப்புகள்: ஜைனம் பௌத்தத்திற்கு முற்பட்டது என்பதில் சரித்திர ரீதியாக எந்த ஐயமும் இல்லை, ஆனால் சரித்திர ஆதாரம் தான் இல்லை, அதாவது ஜைன காலத்தைச் சேர்ந்த எழுதபட்ட ஆவணங்கள் / கல்வெட்டுகள்தாம் இல்லை. எனவே, மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள், ஜைனத்தின் தொன்மை மற்றும் சரித்திரத்தை மறைத்து விட்டனர். பாவம், ஜைனர்களும் எழுத்தறிவு இல்லாமலேயே பலதுறைகளிலும் வல்லவர்களாக இருந்தனர்! அது எப்படி என்பதைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பலருக்கும் ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் மட்டுமன்றி, அவர்களது மதத்தலைவர்களான மஹாவீரர் மற்றும் புத்தர் இவர்களின் உருவ சிலைகளிலும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாமல் சிரமமாகவே இருந்தது.

Brahmachari Sital Prasadji, A Comparative Study of Jainism and Buddhism, The Jaina Mission Society, Madras, 1932, p.286-287.

எழுத்தறிவு இல்லாமல் எப்படி சிற்பங்கள் செதுக்கப்பட்டன?: எப்படி ஜைன சிற்பங்கள் பௌத்த சிற்பங்கள் என்று அடையாளங்காணப்பட்டு, ஜைனத்தின் கலை மற்றும் அதன் தொன்மையினையும் மறைத்தனர். சிற்பக்கலை இந்தியாவில் அந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கவில்லை என்றால், சிற்பிகள் அத்தகைய உயிரோட்டமுள்ள மஹாவீரர்- புத்தர் சிலைகளை வடித்திருக்க முடியாது. அது மட்டுமல்லாது, இந்திய எழுத்துமுறை அசோகன் காலத்தில்தான் திடீரென்று பிறந்தது என்ற வாதத்தை வைத்துக் கொண்டு, இம்மாதிரி காலகக்கணக்கீட்டைக் குறைத்து சரித்திரத்தையும் குறைக்கின்றனர்.

* கல்வேலை தெரிந்தவர்களுக்கு, சிற்பங்களை வடிப்பவர்களுக்கு எழுததெரியாமலா போய்விடும்?

* கணிதம், வடிவக்கணிதம், வடிவமைப்பியல், பாறையியல், உலோகவியல், நுணுக்கமான கருவிகளை உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றை அறிந்தவர்கள் எழுத்தெரியாத மண்டுகளாக மண்டுகளாக இருந்துள்ளனர் என்பது சரித்திர புதிரே!

9வது-7வது BCE நூற்றாண்டுகளில் ஜைன கலை-கட்டிடங்களைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை!

இருப்பினும், ஜைன பண்டிதர்கள் ஜைனத்தின் கலை-கட்டிடங்களின் தொன்மை சிந்துசமவெளி நாகரிகத்திற்கு செல்கிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்.
“பசுபதி” எனப்படுகின்றவர்தாம், ரிஷபதேவராகிய முதல் தீர்த்தங்கரர். ஜோஸப் காம்பெல், ஜான் கொல்லர் முதலியோரும் அத்தகையக் கருத்தை வைத்துள்ளனர்.
Joseph Campbell, Oriental Mythology, The Viking Press, New York, 1962, pp.219-220.
John Koller, The Indian Way, MacMillan Publishing Co., New York, 1982, p.113.

இதன்படி பார்த்தால், ஜைனத்தின் தொன்மை 2250-1950 BCE காலத்திற்கு செல்கிறது. ஆகவே, அது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்தியதரை நாடுகளில் பரவியது சாத்தியமே. இ. ஜே. தாமஸ் மற்றும் ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் என்பவர்களின் ஆராய்ச்சியின்படி புத்தருக்கு முன்பு, வெளிநாட்டவர், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, என்பதாகும்.
Edward J. Thomas, Life of Buddha, 1927,
J. G. R. Forlong, Science of Comparative Religions, 1877

Greek philosophers

மேனாட்டவர் ஜைனத்தின் தொன்மையினை மறைத்தது, பௌத்தத்தின் காலத்தைக் குறைத்தது: இ. ஜே. தாமஸ் தமது “புத்தரின் வாழ்க்கை” என்ற நூலில் (1927 வருட பத்திப்பு), கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        இந்தியாவில் “ஜிம்னோஃபிஸ்டுகள்” அல்லது திறந்தமேனி சாமியார்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் பௌத்தர்கள் இல்லை (முன்னுரை, ப.XIV).

•        மனிதனுக்கு வேண்டிய தத்துவங்கள் எல்லாம், அந்த திகம்பர இந்தியர்களிடம் இருந்தன (ப.104).

•        ஸ்டிராபோ, “சர்மன்”களை “ஜெர்மன்”கள் என்றும், பர்பைரியஸ் சுமரியன்கள் என்றும் குறிப்பிட்டனர். அந்த சாமியார்கள், ஜைனம் அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் (ப.105).

•        அலெக்ஸ்சாந்தர் தக்ஸசீலத்தில், இத்தகைய நிர்வாண துறவியர்களைப் பார்க்க நேரிட்டது. அவர்களைப் பிடித்தபோது, அவர்களுள் டௌலானஸ் என்ற வயாதானவர் அலெக்ஸ்சாந்தருடன் செல்ல மறுத்ததுடன், மற்றவரையும் அவனுடன் செல்ல தடுத்தார். பிறகு கலானஸ் என்பவனை வெற்றிக் கொண்டு பிடித்துச் சென்றதாகத் தெரிகிறது (ப.115).

•        “சாக்ரடீஸ் ஆத்மாவானது, எவ்வாறு ஒரு பறவை கூண்டில் அடைப்பட்டிருக்கிறதோ, அது மாதிரி, உடலில் சிறையிடப்பட்டுள்ளது என்கிறார். இது பைதகோரஸின் தத்துவத்தைச் சார்ந்திருக்கிறது. பைத்தாகோரஸ்
இந்தியாவிற்கு சென்றிருந்ததால், அத்தகைய தத்துவம் இந்தியாவினின்று பெறப்பட்டது என நம்பப்படுகிறது” (ப.122).

Alexander meeting gymnophists -medieval period

ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் “விஞ்ஞான ரீதியில் மதங்களின் ஒப்புமை” என்ற தமது நூலில், கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        “திபெத்தியர், மங்கோலியர் மற்றும் சீனர்களின் கோதமர் ஒரு ஜைனராக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏனெனில் அவர்கள் 10-11 BCE நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். திபெத்தியர் அவர் 916ல் பிறந்து, 881ல் புத்தனாகி தனது 35வது வயது வரை போதனை செய்து 851 BCEல் இறந்ததாக குறிப்பிடுகின்றனர். இது பார்ஸவ முனிவரின் காலத்தை ஒட்டிவருகின்றது” (முன்னுரை, ப.XIX). [இது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட சரித்திர தேதிகளை ஒத்துபோகவில்லை என்பது நோக்கத்தக்கது].

•        “பௌத்தம் சரித்திர வழிகளில் எந்த அளவிற்கு கிருத்துவத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்? நமது விசாரணையை ஜைனத்தையும் இணைத்து பார்க்கவேண்டும், ஏனெனில் அது மற்ற மதங்களையும் விட முந்தையது. பல கோடி மக்களின் மதமாக இருந்திருந்தாலும், ஐரோப்பாவில் சிலருக்கே தெரிந்திருந்தது” (ப.2).

•        “அசோகனும் ஜைனர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டவில்லை, ஏனெனில் தனது ஆட்சிகாலத்தில் 12ம் வருடத்தில் தான் தனது மதநம்பிக்கையை பிரகடனப் படுத்திக் கொள்கிறான். ஆகையால் அவனது கல்வெட்டு சாஸனங்கள் எல்லாம் ஒரு ஜைன ஆட்சியாளரையேக் காட்டிகிறது” (ப.20).

•        அப்துல் ஃபஸலின் “ஐனி-அக்பரி” என்ற நூலின்படி, தனது பிரதிநிதி உஜ்ஜயினியில் 260 BCEல் இருக்கும்போது, தந்தை பிந்துசாரர் மற்றும் தாத்தா சந்திரகுப்தர் மகத பேரரசை ஆண்டு கொண்டிருந்தபோதும், அசோகன் காஷ்மீரத்தில் ஜைனத்தை ஆதரித்தான் என்பதாகும். புத்தன் இறந்து நூறு ஆண்டுகள் கழிந்தும், பௌத்தத்தைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை, ஏனெனில், அது ஜைனத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. அசோகன் அவர்களிடையேதான் தனது மென்மையான-மிருதுவான ஜைனத்தை வாழ்க்கையின் புனிதத்துவம், அமைதி, தர்மம், சகோதரத்துவம் முதலிய கொள்கைகளுடன் பரப்பி வந்தான். அதுமட்டுமல்லாது, தனது கல்வெட்டுகளில் ஜைனர்களுக்குப் பிரியமான, “தேவநாம் பியா திஸ்ஸா” (கடவுளுக்கு/தேவனுக்குப் பிரியமான திஸ்ஸா) என்றுதான் தன்னை அழைத்துக் குறிப்பிட்டுக் கொண்டான் (ப.29). [“அசோகனது கல்வெட்டுகள்” தேவநாம் பியா திஸ்ஸா மற்றும் அசோகன் என்ற இருவரது கல்வெட்டுகள் ஆகும். முன்னவர் ஜைன மதத்தைச் சேர்ந்த அசோகன் (கல்ஹனர் குறிப்பிட்டது), பின்னவர், பௌத்தத்தைச் சேர்ந்த அசோகன். ஆனால் வின்சென்டு ஸ்மித் வலுக்கட்டாயமாக இருவரும் ஒருவரே என்று வாதிட்டு, முன்னவரை மறைத்து விட்டான்].

Alexander meeting gymnophists 1470-80 CE

•        பிறகுதான், கௌதம சாக்கியமுனி போதிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஜைன-புத்த மதம் சித்தாந்தங்களுடனும், வழிமுறைகளுடனும் இந்தியாவில் பரவியிருந்தது வந்தது ………… நிச்சயமாக அது பார்ஸ்வ மற்றும் மஹாவீரருக்கு முன்பு இருந்தது………….. 7ம் நூற்றாண்டு BCEலிருந்து இந்தியா, அம்மதத்தின் மையமாக இருந்தது. இமாலயத்திற்கு அப்பால், ஓக்ஸியானா, பாக்டிரீயா, காஸ்பியானா முதலிய பகுதிகளில் – அதே மாதிரியான கருத்துகள் மற்றும் பழக்க-வழக்கங்கள் பரவ ஆரம்பிக்கும் நிலை இருந்தது. கீழ்திசை உலகத்தில் தமது சந்நியாசிகளை 7ம் நூற்றாண்டிற்கு BCE முன்பே உலாவர செய்தனர் என்று சரித்திர ரீதியில் தெரிகின்றது. சீனாவிலிருந்து காஸ்பியன் வரை ஜைன-பௌத்தம் போதிக்கப்பட்டது என்பதனை காரணங்களுடன் நாம் நம்பலாம்…………அது மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஓக்ஸியானா மற்றும் இமாலயத்தின் வடக்கில் இருந்தது” (ப.29). [மஹாவீரர் காலம் 599-529 BCE, ஆகவே மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எனும்போது 2600 BCEல் / 4600 YBPல் அத்தகைய மதம் அங்கு இருந்தது என்ன என்பது ஆய்விற்குறியது].

•        ஆகையால்தான், நாம் ஜெல்மோக்ஸிஸ், பைத்தோகோரஸ் முதலியோர் 7வது-6வது BCE நூற்றாண்டுகளில் ஜைனர்கள்-பௌத்தர்களின் குருவான “புத்தர் போதித்தது” போன்று போதித்து வந்தனர் என்பதைக் காணமுடிகின்றது (p.32).

•        ஸ்டிராபோ, குறிப்பிடுவதாவது, “த்ரகியன் என்ற குழுமம் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தனர். மாசி எனப்படுகின்ற அவர்களது சகோதரர்கள் உயிருள்ள எதையும் உண்ணாமல் இருந்தனர்.” (p.32)

•        7ம் நூற்றாண்டில் BCE, ஹோமர் சொல்வதாவது, “அவர்களுள் பெரும்பாலோர் ……….. பாலைக்குடித்தே உயிர்வாழ்கின்றனர்……..பணத்திற்கு ஆசைபடுவதில்லை…….. ஜான் பாப்திஸ்து, ஏசு மற்றும் அவர்களது சீடர்கள் முதலியோர் அத்தகைய எஸ்ஸென் எனப்படுகின்ற ஆசியர்களைப் போன்றவர்களே (ஆசியாவைச் சார்ந்தவர்கள்)” (p.32).

•        ஜோஸஃபஸ் சொல்வதாவது, “இந்த எஸ்ஸென் சகோதரர் பழங்கால தேஸே மக்களைப் போன்று, அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை, மது அருந்துவதில்லை, வேலையாட்களை வைத்துக் கொள்வதில்லை, தனியாக வாழ்கிறார்கள், பலி-சடங்குகள் செய்வதில்லை, ஆனால் ஜைனர்களைப் போன்று ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதிக்கின்றனர்” (ப.32).

•        ஜெல்மோக்ஸிஸ் ஜைனர்களை விட அதிகமாகவே ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதித்துள்ளார் (ப.35).

•        அவர், “இந்திய வாழ்க்கைச் சுழற்ச்சி……. உடலை விட்டு உடல் செல்லும் ஆத்மா……..மனிதனைப் போன்று விலங்குகளும் ஆத்மாக்களைக் கொண்டுள்ளதால் அவற்றைத் துன்புறுத்தக்கூடாது……..” என்றெல்லாம் போதித்தார் (ப.36).

•        கெலே-சிரியாவைச் சேர்ந்த யூதர்கள், இந்தியர்களே ஆவர். அவர்கள் கிழக்கு
கலானி மற்றும் இக்ஷ்வாகு / கரும்பு-மக்கள் (இந்தியாவிலிருந்து வந்த) ஆவர். ஜூதேயாவில் வாழ்ந்த யூதர்கள், எஸ்ஸென்களே ஆவர், அவர்கள் இந்திய தத்துவ ஞானிகளிடமிருந்து உறுதியான மனப்பாங்கு, உணவு மற்றும் மனசாட்சி முதலியவை வாழ்க்கையில் தேவை என்பதனைப் பெற்றனர். கிரேக்கர்கள் அவர்களை சிரியர்கள் என்று தவறாக அடையாளங்கொண்டாலும், அவர்கள் ஜைன-பௌத்தர்களே ஆவர்
(ப.46).

•        202-193 BCEல், ஹான் வம்சம் சீனாவில் வலுப்பெற்றது. நூல்களை தொகுப்பவர், சூய் 600 CE காலம் வரை சீனா பௌத்தத்தை அறிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆகவே அதற்கு முன்பு 200 BCEக்கு – முன்பு இருந்தது ஜைன-பௌத்தமே ஆகும் (ப.67).

Black Buddha - 1

மேற்கண்ட விவரங்களிலிருந்து அறிவதாவது, பௌத்தம் தோன்றி தனி மதமாக அடையாளங்காணும் முன்பே அத்தகைய ஒரு மதம் பாரதம் மட்டுமல்லாது, மத்தியதரைகடல் நாடுகள், மத்திய ஆசியா, சீனா முதலிய பகுதிகளிலும் இருந்தது தெரிகிறது. சில மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் அதனை எடுத்துக் காட்டியும், ஆதிக்க வர்க்க-ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் சரித்திர புத்தக ஆசிரியர்கள் அந்த விஷயங்களை மறைத்து எழுதினர் எனத்தெரிகிறது. அவ்வாறு பௌத்தம், புத்தம் போன்ற மதம், ஜைன-பௌத்தம், ஜைனம் முதலியவை உலகம் முழுவதும் பரவியிருந்தபொது, அமைதியான நிலை இருந்தது காட்டுகிறது.

ஆகவே ஜைனத்தை மறைத்து தவிர்த்து, தனியாக எந்தவித பௌத்தமும் எழுந்திருக்க முடியாது. நிச்சயமாக ஜைனத்திலிருந்து, பௌத்தம் அஹிம்சாவாதத்தில் வேறுபட்டு தன்னை நீர்த்துக் கொண்டது, அத்தகைய மக்களை கவரவே அவ்வாறு சமரசம் செய்து கொண்டது எனத்தெரிகிறது. அதனால் தான் புத்தர் புலால் உண்பதை மறுக்கவில்லை, மறைக்கவில்லை. 81வது வயதில் பன்றிக்கறி / மாமிசம் உண்டு, குடலில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் எனத் தெரிகிறது. பௌத்தர்களும் சரியான மாமிச உணவு உண்பவரே. எனவே அவர்களது அஹிம்சை மற்ற உயிர்களை வதைக்காதே போன்ற கொள்கைகள் செல்லுபடியாகாது.

வேதபிரகாஷ்
17-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Was Buddha a black - some sculptures with curled hair etc- more

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (3)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (3)

வேதபிரகாஷ்

 “ஆரம்ப காலங்களில் புத்தரை மையமாக வைத்துக் கொண்டு சந்நியாசிகளாக அலைந்து திரிந்த பிக்குகள், எவ்வாறு அவர்கள் ஒன்றுகூடி, ஆசிரமங்கள் அல்லது ஒரு இடத்தில் தங்கி வசிக்கும் நிலையில் மடங்கள் / பள்ளிகள் உருவாக்கி வாழ ஆரம்பித்தனர், இதுதானே பிறகு இஸ்லாமின் முதல் ஆண்டுகளில், முஸ்லீம் படையெடுப்புகளினால் அழிக்கப்பட்டு, இந்தியாவிலேயே பௌத்தத்திற்கு ஒரு நாசத்தைத் தேடித்தந்தது? இந்த வினாவிற்குத்தான் பாட்ரிக் ஓலிவெல் (Patrick  Polivelle) இந்த புத்தகத்தில் பதில் அளிக்கிறார்”, என்று ஆர். சி. ஜாஹ்னர் (R. C. Zaehner) என்ற ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழக பேராசிரியர் “பௌத்த மடங்கள் அமைப்பின் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி” என்ற நூலில் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
R. C. Zaehner in his FOREWORD to “The origin and Early development of Buddhist Monachism”, M. D. Gunasena & Co. Ltd, Colombo, 1974, p.v.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-5

“அத்தகைய அலைந்து திரியும் வாழ்க்கை மழைகாலத்தில் முடியாது, ஆகையால் அத்தகைய சந்நியாசத்தை முறித்துக் கொள்வர் என்று எந்த தேரவாத பௌத்தத்தின் மாணவனுக்கும் தெரியும். ஆனால் அதுவே பிறகு எப்படி மடங்கள் / மடாலங்கள் ஒருவாகி அத்தகைய தங்கி வசிக்கும் வாழ்க்கையினை (Sedentary interlude) சந்நியாசிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது, அத்தகைய “மடங்கள் / பள்ளிகளின் கலாச்சாரம்” உருவெடுத்தது” என்று பாட்ரிக் ஓலிவெல் விளக்குகிறார்.

“பரிவிராஜக” [பரி = சுற்று; வ்ராஜ = செல், திரி (சமஸ்கிருதம்); எல்லா திசைகளிலிலும் அலைந்து திரிந்து வாழும் சந்நியாசி] முறையானது முற்றும் துறந்த நிலையினைக் காட்டுகிறது. புத்தர் காட்டிய வழி அதுதான். ஆனால் நவீனகாலத்தில் அதன் அர்த்தத்தை / பொருளைத் தவறாக கொள்கின்றனர். உதாரணத்திற்கு அம்பேத்கரே, “புத்தர் ஒரு இறந்த மனிதன், நோயாளி மற்றும் ஒரு வயதானவன் முதலியோரைக் கண்டவுடன் “பரிவிராஜக”த்தை ஏற்றுக் கொண்டார் என்பது, அது அபத்தம் என்று பார்க்கும் போதே தெரிகிறது” என்று குறிப்பிடுகின்றார் (That Buddha took Parivraja after seeing a dead person, a sick person and an old person is absurd on the face of it).
B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, in introduction.

Buddha head - thailand

“பரிவிராஜக” சந்நியாச முறை முற்றும் துறந்த முறையாகும். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது, இருக்கக்கூடாது. உலகில் எல்லா திசைகளிலிலும் செல்லும்போது, மக்களே அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அதாவது உணவு அளிப்பார்கள். இரவுகளில் மரங்கள் அடியில் தூங்கி, இயற்கையில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பிறகு மறுபடியும் தமது பணிகளைத் தொடங்குவர். உடல், மனம், ஐம்புலன்கள் அனைத்தையும் அடக்கி அதற்கேற்ற முறையில் அடக்கத்துடன், பக்குவத்துடன், நெறிமுறைகளுடன் இருக்கும் துறவு நிலை.

மழைக்காலங்களில், சந்நியாசிகள் அவ்வாறு திரிய முடியாது என்பதனால், ஆசாட (ஜூன்-ஜூலை நடுவில்) மாதத்திலிருந்து நான்கு மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் சாலைகளும் சேறும், சகதியாக இருக்கும். இத்தகைய முறை ஜைனர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. ஆனால், ஜைனர்கள் ஈரத்தைக்கூட மிதிக்கக்கூடாது, ஏனெனில் அதில் சில புழுக்கள், பூச்சிகள் மற்ற சிறிய உயிரினங்கள் இருக்கும் அவற்றை பாதிக்கக்கூடாது, கொல்லக்கூடாது என்ற முறையில் மேற்கொண்டனர். இது ஜைனர்களால் பஜ்ஜுஸான், பௌத்தர்களால் வஸ்ஸ (வருஸ = மழை) எனப்பட்டது.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary

பௌத்தர்கள் அவ்வாறு தங்கி வாழும் சந்நியாச முறையை மூன்றாகக் கொண்டனர்: ஆவாஸா, ஆராம மற்றும் விஹார என்ற மூன்று வகை தங்கி வசிக்கும் சந்நியாசி நிலை வாழ்க்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

1. ஆவாஸா: ஆவாஸா = ஆ + வாஸா = வாசத்திற்கு உகந்தது அல்ல அதாவது வசிப்பதற்கு எற்றது இல்லை. அதாவது அவ்வாறு அமைக்கப் பட்ட இடங்கள் குறுகிய காலத்திற்கான, மழைக்காலத்தில் தங்குவதற்கேற்றவாறு அமைக்கப்பட்ட சிறிய ஓலைக்குடில்கள் ஆகும்.

2. ஆராம: சிறப்பான ஆவாஸா ஆராம எனப்படும், ஏனெனில் “ரம்” என்றால் வசதி, மகிழ்ச்சி, ஆனந்தம் என்று பொருள். ஆகவே இது சந்தோசம் அளிக்கும் ஒரு பூங்கா, தோட்டம் அல்லது தோப்பு ஆகும். அத்தகையவை பௌத்த பிக்குகளுக்கு அரசர்கள், தனவான்கள், வியாபாரிகளால் தானமாக அளிக்கப்பட்டன. அவர்களுக்கு வசதியாக சமைக்கும் இடம், கழிவறைகள் முதலியன இருக்கும். ஆகவே இவை வசதிகளுடன் ஓய்வெடுக்கும் இடங்களாக இருந்தன.

3. விஹார: விஹார என்பது அனைத்தையும் அடக்கியது அதாவது எல்லா வசதிகளையும் கொண்டது. அதில் “பரிவேன” என்பது ஒரு பிக்கு தூங்கும் அறை. விஹாரத்தில் பல “பரிவேன”ங்கள் இருக்கும். விஹார என்றால் சந்தோசமாக நடப்பது, உலவுவது என்பதாகும். ஆகவே, இந்த “விஹார” கட்டிடங்கள் மிகப் பெரிதாக அனத்து வசதிகளையும் கொண்டு இருக்கும்.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-2

சுல்லவக்க (VI,15.2) உரிமையை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு மாற்ற முடியாத பொருள்களை ஐந்து வகையாகப் பிரிக்கிறது:

1. ஆராம அல்லது “ஆராம”விற்கு அளிக்கப் பட்ட இடம்.
2. விஹார அல்லது “விஹார”த்திற்கு அளிக்கப் பட்ட இடம்.
3. உட்காரும் ஆசனங்கள், நாற்காலிகள், மெத்தைகள், விரிக்கும் படுக்கைகள் /
பாய்கள்.
4. தாமிர பாத்திரங்கள், தாமிரப் பெட்டிகள், தாமிர ஜாடிகள் / கருவிகள், கத்திகள்,கோடாளிகள், பெரிய கத்திகள், அரிவாள்
5. காட்டில் உபயோகப்படுத்தும் கயிறு, மூங்கில் கொம்பு, தடித்த நாணல், புற்கள், களிமண், மரப்பொருள்கள், மண்பாத்திரங்கள்

இதிலிலிருந்து, பிக்குகள் உபயோகப்படுத்திய பொருட்களைப் பற்றி அறியலாம். பிறகு, பிக்குகள் பல வேலைகளுக்குக் குறிப்பாக நியமித்தனர் என்பதிலிருந்து, மற்ற பொருட்வகைகள் பிக்குகளுக்கு கிடைத்ததும் தெரிய வருகிறது:

1. பாண்டகாரிக: பண்டகசாலையின் அதிகாரி
2. பட்டுதேஸக: பங்கிட்டு அளிக்கும் அதிகாரி
3. சீவரபாஜக: துணிககளை விநியோகிக்கும் அதிகாரி
4. யாகுபாஜிக: அரிசி கஞ்சியை விநியோகிக்கும் அதிகாரி
5. பலபாஜிக: பழங்களை விநியோகிக்கும் அதிகாரி
6. கஜ்ஜபாஜிக: திட உணவை விநியோகிக்கும் அதிகாரி
7. சேனாசனபன்னாபக: இடத்தை / அறைகளை அளிக்கும் அதிகாரி
8. வீவார-பதிக்காஹக: மக்களிடமிருந்து துணிகளை பெரும் அதிகாரி
9. சாதிய-காஹாபக: மேலாடைகள் / உள்ளாடைகள் / மழைக்கால ஆடைகள்
விநியோகிக்கும் அதிகாரி
10. பட்ட-காஹபக: உண்ண உணவை தருமமாக பெற அளிக்கப்படும் பிச்சா பாத்திரம்
விநியோகிக்கும் அதிகாரி
11. அப்பமட்டகவிசஜக: ஊசிகள், நூல், கத்தரி முதலியவற்றை விநியோகிக்கும்
அதிகாரி
12.ஆராமிகபேஸக: இடத்தை நிவகிக்க வேண்டிய பொருட்களை பெற கவனிக்குக்
அதிகாரி.
13.சாமனேர்பேஸக: புதிய பிக்குகளுக்கு வேண்டிய பொருட்களை விநியோகிக்கும் அதிகாரி
14. நவகாம்மிக: புதிய கட்டிடங்களை நிவகிக்கும் அதிகாரி.

இதிலிருந்து, எப்படி நிலையற்ற சந்நியாசம் நிலைகொண்டு, வசதிகளோடு வாழ
ஆரம்பித்தது என்பதனை அறியலாம்.
Chullavagga of Vinayapiitika (English translation), London, 1952

முதலில் மழைக்காக ஒதுங்கியவர்கள், ஒதுங்கிய இடங்கள் வசதிகளோடு மாற்றப்பட்டன. வசதிகள் பெருகியதும், பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்தது. அதற்கான அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர். பிறகு பணமும் தானமாக வரத் தொடங்கியதும், இன்னும் பாதுகாப்பு எண்ணம் வளர்ந்தது. அச்சம் பெருகியது. விஹாரங்கள் செல்வசெழிப்பொடு இருக்க ஆரம்பித்தன. “மழைக்கால வாழ்க்கை”, முழுகாலவாழ்க்கையாக மாறியது.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-3

சங்கத்தில் அனுமதி என்பதும் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தது, நடந்தது. “உபசம்பத” என்பது வெறும் “அனுமதி சடங்கு” அல்ல. “பப்பஜ்ஜ/ப்ரவிரஜ்ய” முறைக்கு அனுமதி பதினைந்து வருடங்கள் கழித்து அளிக்கப்ப்படும். ஒரு துறவி பத்து வருட அனுபவம், திறமை மற்றும் தகுதி இருந்தால்தான் “உபசம்பத” நிலை / பட்டம் அளிக்கப்படும். பிறகு “இபஜ்ஜய” / “ஆசார்ய” நிலையை அடையலாம்.

பிக்குகளின் நிலை / கட்டுபாடுகளில் சில:

1. பம்சுகுலிக: குப்பைகளிலிருந்து பொரிக்கி எடுத்தத் துணிகளைத் தைத்து
உருவாக்கப் பட்ட ஆடைகளை அணிவது.
2. தேசீவாரரக: ஒரே நேரத்தில் மூன்று ஆடைகளை மட்டும் வைத்திருக்கும் நிலை.
3. பிண்டபாதிக: பிச்சையெடுத்து உண்ணும் நிலை.
4. சபதான-சாரிக: ஒவ்வொறு வீடாக சென்று  பிச்சையெடுத்து உண்ணும் நிலை.
5. எகாசனிக: ஒரே வேளை உணவு உண்ணும் பிக்கு.
6. பட்டபிண்டக: ஒரு பிச்சைப் பாத்திரத்திலிருந்து மட்டு உண்ணும் பிக்கு.
7. கலுபச்சபட்டிக: காலந்தவறிய பிறகு உணவு மறுக்கும் பிக்கு.
8. ஆரண்யக: காட்டில் வாழும் பிக்கு.
9. ருக்கமுலிக: மரத்தடியில் இருக்கும் / வசிக்கும் நிலை.
10. அபோகாசிக: திறந்த வெளியில் இருக்கும் / வசிக்கும் நிலை.
11. சசானிக: மயானத்தில் இருக்கும் / வசிக்கும் நிலை.
12. யஹாசந்ததிக: இரவு பொழுது எந்த இடமாகிலும், அந்நிலை மறந்து தனது பாயை விரிக்கும் பிக்கு.
13. நேசஜ்ஜிக: உட்கார்ந்து கொண்டே தூங்கும் நிலை.

Patrick, Olivelle, Ascetics and Brahmins: Studies in Ideologies and Institutions, Florence: University of Florence Press, 2007.
Sukumar Dutt, Buddhist monks and monasteries of India: their history and their Contribution to Indian Culture, Motilal Banarasidas, New Delhi, 2008.

இத்தகைய கட்டுபாடுகள், மனம்-உடல் இவற்றை தமதிச்சைக்குள் வைத்திருக்க உதவியாக இருந்தது. ஆனால், கட்டுப்பாடுகள் தளர-தளர, பிக்குகள் வசதிகளால் வளர்ந்தனர். அறை, படுக்கை, தோட்டம் என வசதிகள் பெருகியதும், மனம்-உடல் கட்டுப்பாடுகள் தளர்ந்தன. சங்கம் சீரழிய ஆரம்பித்தது.

இதிலிருந்து, எப்படி புத்தரின் “பரிவிராஜக” கட்டுப்பாட்டுமுறை, படிபடியாக தேய்ந்து, மாறி, பல விலக்குகள் அளிக்கப்பட்டு, “மழைக்கால ஒழுங்குமுறை சந்நியாசம்” என்ற நிலை போய் வசதிகளுடன் வாழும் “விஹார” வாழ்க்கையானது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்
16-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-4

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (2)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது,  தேய்ந்தது ஏன்? (2)

வெளிகாரணிகள்:

1.        ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

2.        ஆதிசங்கரர் இந்தியாவில் இருந்த பலவித வழிபாட்டு நம்பிக்கையாளர்களை “ஷண்மதம்” என்ற கட்டுக்குள் எடுத்து வந்ததால், பௌத்தம் இந்தியாவில் தேய ஆரம்பித்தது.

3.        இந்துக்கள் புத்தரையே ஒரு அவதாரமாக்கி, பௌத்தத்தை வலுவிழக்கச்
செய்தார்கள்.

4.        ஜைனர்களின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், “இந்தியா”விற்கு
வெளியில் தனது கவனத்தைச் செல்லுத்தியது.

5.        ராஜபுத்தரர்களின் வளர்ச்சி

6.        ஹூனர்களின் படையெடுப்பு

7.        முகமதியரின் அழிப்பு

இனி மேற்கண்ட விவரங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.

1. ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.

மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும்.

Mahavira and Buddha

ஜைனர்கள் வலுவாக இருந்த பொழுது, புத்தர்காலத்தில் (567-487 BCE) பௌத்தம் வளர்ந்தது ஊகமே, ஏனெனில் ஜைனர்கள் காலத்தில் அவ்வாறு புத்தரோ தமது சீடர்களோ அவ்வாறு செய்திருக்க முடியாது.

* இதில் வேடிக்கையென்னவென்றால், தாத்தா சந்திரகுப்தன் (321 – 297 BCE) ஜைனமதத்தினனாக இருந்து, சிரவணபெலகோலா வந்து “வடக்கிருந்து” இறக்கிறான்.

* மகன் பிந்துசாரன் (299 – 274 BCE) “இந்து” என்றே கருதப்படுகிறது!

* பேரன் அசோகனோ (273 – 237 BCE) பௌத்த மதத்தைத் தழுவுகிறான்!

ஆகவே எப்படி ஒரு தலைமுறையில், இவ்வாறு மாற்றங்களுடன், அசோகன் உடனடியாக தனது மதப்பிரசாகர்களை அனுப்பி, புத்தமதத்தைப் பரப்பத் தொடங்கியிருக்கமுடியும்?

Asoka - Buddhism
மேலும் வேடிக்கை என்னவென்றால், அசோகன் மட்டும் தான் “சரித்திர காலத்திற்கு” (historic period) வருகிறான்! அவனது தந்தை மற்றும் தாத்தா “சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் (pre-historic / proto- historic) வைக்கப்படுகிறார்கள்! பிறகு எப்படிதான், இந்தியாவின் சரித்திரம் நிர்ணயம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை! [Protohistory refers to a period between prehistory and history, during which a culture or civilization has not yet developed writing, but other cultures have already noted its existence in their own writings.]

Chandragupta, Bindusara, Asoka

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஃபார்மர் என்ற மேதாவி, ஏற்கெனவே, ஹரப்பன்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தி வருகிறார்.
http://www.safarmer.com/washstate.pdf

அசோகன் தனது “பிரம்மி” எழுத்தை உடனே கண்டுபிடித்து கல்லிலே எழுத ஆரம்பித்தவுடன் தான் இந்தியர்களுக்கு அத்தகைய எழுத்தறிவு வந்தது! ஆனால் பாவம், தந்தை-தாத்தாக்கள் எல்லாம் எழுதத்தெரியாமல் இருந்தார்கள்!
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians?,  in “Contribution of South India to Indian Art and Architecture”, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.
http://forumhub.mayyam.com/hub/viewlite.php?t=6130
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

மௌரிய காலத்திலிருந்தே, குறிப்பாக தென்னிந்தியாவில் ஜைனத்தின் ஆதிக்கம்அரசிய ரீதியில் அதிகமாக இருந்தது. இலங்கையில் பௌத்தம் இருந்து வளர்ந்த நிலையில், தமிழகத்தில் ஜைனத்தின் ஆதிக்கம் இருந்தது ஒரு காரணம் எனலாம். மேலும், அகாலங்க என்பவர் பௌத்தர்களை 788 CEல் தோற்கடித்ததால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள், என்பதில், ஜைனர்கள்தாம் பௌத்தர்களை தோற்கடித்து இந்தியாவிலிருந்து விரட்டினர் என கல்வெட்டுகளிலிருந்துத் தெரிகிறது.
K. A. Nilakanta Sastri (Publisher), Sravanabelagola, Department of archaeology, Mysore. 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.

ஆகையால் தான் சங்க-இலக்கியம் சந்திரகுப்த மௌரியனைப் பற்றியும், அசோகனைப் பற்றியும் மூச்சுக் கூடவிடவில்லை. முதல் நூற்றாண்டுகளில் ஜைனர்கள் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழகம் பெருமளவில் பாதித்தது “களப்பிரர்கள்” மூலம் அறியலாம்.

ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே.
http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

வேதபிரகாஷ்
15-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Chandragupta Maurya - a Jain

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்

மார்ச் 19, 2013

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்

Buddhist monk attacked in a train at Central Chennai2

 

உணர்ச்சிப் பூர்வமாக நடந்து வரும் போராட்டங்களும், பிரச்சினைகளும்: தமிழகத்தில் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதாக வீடியோ மற்று புகைப்படங்கள் வெளியானதிலிருந்து, குறிப்பிட்ட அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், இலங்கை-ஈழ விடுதலை இயக்கத்தார் முதலியோர் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர். கடந்த மாதம் ஸ்டர்லிங் ரோடில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் என்று அவை போராட்டங்கள் காலை நேரங்களில் நடத்தின. ஒரு நாள் பந்த் என்றும் அறிவித்து ஆர்பாட்டம் செய்தனர். இப்பொழுது, புத்த பிக்குகள், குறிப்பாக யாத்திரிகர்கள் தாக்கப்படுவது பிரச்சினையாகியிருக்கிறது.

Buddhist monk attacked in a train at Central Chennai5

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், டில்லியிலிருந்து 19-03-13 அன்று சென்னை வந்த, புத்த சாமியார்கள் இருவர், மர்ம நபர்களால் தாக்கப் பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது[1]. ரயில்வே போலீசார் அங்கு வருவதற்குள், மர்ம நபர்கள் மூவரும் தப்பியோடினர்[2]. இலங்கை ஊடகங்கள் எல்.டி.டி.ஈ. அதரவாளர்கள் புத்த பிட்சுகளைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றன[3]. கருணதிலக அமுனுகம என்றறைலங்கை வெளியுறவுத்துறை செயலாளர், இந்தியாவில் பிராயணம் செய்யும் ஶ்ரீலங்கை யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளது[4]. தமிழக அரசும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் என்பவரும் அத்தகைய வேண்டுகோளை விடுத்திருந்தார்[5].கடந்த ஜனவரி மாதம், 2011ல் எழும்பூரில் உள்ள புத்த மடாலயம் தாக்கப்பட்டது. அதில் நான்கு துறவிகள் தாக்கப்பட்டனர். கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, உள்ளே மற்ற பொருட்களும் உடைக்கப்பட்டன[6].

Buddhist monk attacked in a train at Central Chennai3

குறிப்பாக எஸ்.6ல் நுழைந்து புத்த பிக்குகள் தாக்கப்பட்டது: இலங்கை கண்டியை சேர்ந்த, புத்த சாமியார் பண்டாரா, 40, தலைமையில், 19 பேர், இந்தியாவில் உள்ள புத்தகயாவிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, டில்லியிலிருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் “எஸ் 6′ பெட்டியில் ஒன்றாக பயணம் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை, 7:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது. திடீரென, மூன்று மர்ம நபர்கள், “எஸ் 6′ பெட்டிக்குள் புகுந்தனர். அங்கு காவி உடையிலிருந்த புத்த சாமியார் பண்டாராவையும், அவருக்கு அருகில் சாதாரண உடையிலிருந்த புத்தசாமியார் வங்கீசாவையும் பிடித்து இழுத்து அடித்தனர்[7]. அவர் பயத்தில் அலறியதால், அவருடன் பயணம் செய்ய மற்றவர்கள், அவரருகில் ஓடிவந்து, மர்ம நபர்களை தடுத்தனர்; எதிர்த்து அடிக்கவும் முயன்றனர். பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்களின் தாக்குதலை, பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயில்வே போர்ட்டர்கள் பார்த்துவிட்டு, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். இதற்குள்ளாக தகராறில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். புத்த சாமியார்கள் இருவர் மற்றும் இவர்களுடன் வந்திருந்த இலங்கையை சேர்ந்த, 17 பேரையும், ரயில்வே போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில், 17 பேரை, எழும் பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன், வேனில் அனுப்பி வைத்தனர்.

Buddhist monk attacked in a train at Central6

புத்த பிக்குகளிடம் போலீஸ் விசாரணை: புத்த சாமியார்கள் இருவரையும், பாதுகாப்பாக நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ரயில் பெட்டியில் நடந்தது என்ன? தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் ஏதும் தெரிவிக்க முடியுமா?’ எனவும் கேட்டனர். இதற்கு புத்த சாமியார் பண்டாரா, “மூன்று பேர் வந்தனர். இருவர் பேன்ட் சர்ட் அணிந்துஇருந்தனர். ஒருவர் பேன்ட், டி சர்ட் அணிந்திருந்தார். மூன்று பேரும், நாங்கள் பயணம் செய்த பெட்டியில் ஏறியதும், “நீங்கள் இந்தியாவிற்கு ஏன் வந்தீர்கள், சிங்களர்களே திரும்பி போங்கள்’ என, திட்டினர். அப்போது, எங்களை அவர்கள் தாக்கினர்’ எனவும் கூறினார். தன் முகத்திலும், நெஞ்சிலும், காலிலும் மர்ம நபர்கள் தாக்கியதாக கூறியவர், இடது காலில் இருந்த காயத்தையும், போலீசாரிடம் காட்டினார். பொலீசார் அவர் மிகவும் கொடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக கூறினர். காலின் மீது ஒரு கட்டைப் போன்ற ஆயுதத்தால் அடித்துள்ளனர் என்று கூறினர்[8]. தவிர ரூ.40,000/- அடங்கிய பை ஒன்றும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்[9]. காவி உடை அணிந்திருந்த புத்த சாமியாரை, வேறு யாரும் திடீரென தாக்கி விடாமலிருக்க, முன்னெச்சரிக்கையாக, அவரது காவி உடை மீது, சாதாரண உடை அணியுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். விசாரணைக்கு பிறகு, புத்த சாமியார் இருவரும், மற்றொரு வேனில் எழும்பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு, போலீஸ் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Buddhist monk attacked in a train at Central Chennai

புத்தசாமியார்களையும், அவர்களுடன்வந்திருந்தவர்களையும்தாக்கிவிட்டு, இரண்டேநிமிடத்தில்அங்கிருந்ததப்பிஓடியுள்ளனர்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் வந்து, ஆறாவது பிளாட்பாரத்தில் நின்றததும், பயணிகள் இறங்கியபோது, திடீரென மர்ம நபர்கள் மூன்று பேர், பெட்டியின் உள்ளே நுழைந்து புத்த சாமியார்களையும், அவர்களுடன் வந்திருந்தவர்களையும் தாக்கிவிட்டு, இரண்டே நிமிடத்தில் அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர். இதை, தனியார் “டிவி’ நிறுவனத்தின், கேமராமேன் வீடியோவில் பதிவு செய்து உள்ளார். செய்தி நிருபரும் அவருடன் இருந்துள்ளார். இதனால், மர்ம நபர்கள் பற்றி இவர்களுக்கு ஏதும் விவரம் தெரியுமா என, விசாரிப்பதற்காக, ரயில்வே போலீசார், இவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். புத்த சாமியார்கள் தாக்கப்பட்டபோது, அவர்கள் வீடியோவில், பதிவு செய்து வைத்திருந்த காட்சிகளையும் போலீசார் பார்த்தனர்.

Buddhist monk attacked in a train at Central7

மர்ம நபர் தொலைபேசியில் தனியார் டிவிக்கு அவர்கள் வருவதை தொலைபேசி மூலம் அறிவித்தனராம்: இதன்பிறகு, “புத்த சாமியார்களும், இலங்கை நாட்டினரும் ரயிலில் வருவது உங்களுக்கு எப்படி தெரியும்?’ என, கேட்டதற்கு, “எங்கள் அலுவலக தொலைபேசியில் பேசிய நபர் கூறினார். அதனால் தான், நாங்கள் வந்தோம். மர்ம நபர்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாதுஎன, தெரிவித்தனர். இதன் பிறகு, இருவரையும்போலீசார் அனுப்பிவிட்டனர். தாக்கியவர்கள் ஒரு ட்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று “தி ஹிந்து” பெயர் குறிப்பிடாமல் அறிவித்துள்ளது[10]. இப்படி குறிப்பாக ரெயில் பெட்டியில் நுழைவது, இரண்டு நிமிடங்களில் அடித்துவிட்டு மறைவது, ஆனால், இவற்றையெல்லாம் பொறுமையாக இருந்து வீடியோ பிடிப்பது எல்லாம், ஒரு குறிப்பிட்ட யிவி-குழுமத்தின் திறமையாகவேத் தெரிகிறது. யதேச்சையாக வீடியோ அவ்வாறு எடுக்க முடியாது. “எஸ் 6” பெட்டிக்குள் தாக்குதல் நடக்கும், அதை படம் பிடிக்கலாம் எனும்போது, போலிஸாருக்கு நிச்சயம் தகவல் அளித்திருக்கலாம், இரந்த முழுநிகழ்ச்சியை அறவே தவித்திருக்கலாம்.

Mahabodhi centre, Chennai Egmore

வேதபிரகாஷ்

19-03-2013


[3] Pro-LTTE Tamils in Tamil Nadu attack another Sri Lankan Buddhist monk, Mon, Mar 18, 2013, 09:40 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.

http://www.colombopage.com/archive_13A/Mar18_1363623022CH.php

[4] Karunathilake Amunugama, Lanka’s Ministry of External Affairs’ Secretary said Colombo has lodged a formal request with the Indian authorities in this connection. Sri Lanka’s concerns arose after two successive attacks against Buddhist monks and a group of pilgrims.

http://www.deccanherald.com/content/319782/sri-lanka-calls-indian-protection.html

[5] Tamil Nadu Government took this decision after the Sri Lanka’s Deputy High Commissioner Prasad Kariyawasam made such a request from the state government and the central government.

http://www.dailymirror.lk/news/26850-special-security-for-lankan-pilgrims.html

[6] An incident of stone pelting has been reported from Bodhimaya, the Buddhist centre in the capital city of Tamil Nadu.Four monks were injured in the attack, which took place on Monday night. Window panes were broken and the centre was vandalised in the attack.”What I have been told that 10-15 people came. An auto driver called me…I live in the neighbourhood…I came here immediately. By then the monks were taken to the hospital. I do not know what exactly happened here,” said Kapil Alexander, a local resident.

http://ibnlive.in.com/news/chennai-buddhist-centre-attacked-four-hurt/141438-3.html

[8] The police said the attack on Mr. Bhandara had been quite brutal. “They slapped the monk, hurled abuse at him and hit him on the leg with a blunt object,” an officer said. The monk sustained injuries on his left leg and the group lodged a complaint with the GRP in which they said they had been carrying Rs. 40,000 in cash, which they found missing after the assault.

[10] The Government Railway Police have registered a case and are investigating. They have also intensified checks on all trains. “We suspect that those who indulged in the attack are from a Tamil organisation,” a police officer said.

http://www.thehindu.com/news/national/sri-lankan-monk-attacked-on-train-in-chennai/article4522981.ece

 

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

மார்ச் 16, 2013

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

Buddhist attacked Tanjore temple

பௌத்தம் – நாத்திகம் – திராவிடர் கூட்டு என்னவாயிற்று?: பௌத்தமத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு, இந்துமதத்தைத் தாக்கி வந்ததை, வருவதை பார்த்துள்ளோம்[1]. இந்துமத விரோதிகள் அவ்வப்போது, இந்த வாதங்களை எடுத்துக் கொள்வர். பௌத்தர்கள் திராவிடர்களே என்று கூட நாத்திகவாதிகள் வாதிட்டுள்ளனர். இங்கு பௌத்தர்கள், நாத்திகர்கள் என்று சேர்ந்து இருக்கும் போது, இலங்கையில் மட்டும் எப்படி பௌத்தர்கள் தமிழர்களுக்கு எதிராக நடக்கின்றனர் என்று பலமுறை எடுத்துக் காட்டியுள்ளேன். இது “திராவிடர்கள்” ஒட்டு மொத்தமாக காவிரி மற்றும் முல்லைப்பெரியார் நீர்களுக்கு அடித்துக் கொள்வதைப் போன்றுள்ளது[2]. பௌத்தமே அஹிம்சைவாதிகளா இல்லை ஹிம்சையிலும் ஈடுபட்டனரா, இந்தியாவில் பௌத்தம் எப்படி தேய்ந்தது என்ற பிரச்சினைகள் பற்றி எடுத்துக் காட்டியுள்ளேன்[3]. இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர், இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் தாக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Buddhist attacked Tanjore temple2

தமிழ் இயக்கத்தினர் ஏன் தாக்கினர்?: தஞ்சாவூருக்கு இன்று காலை இலங்கை புத்த மத பிட்சு தலைமையில், தாய்லாந்து, இந்தோனேசியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து 19 மாணவர்கள் ஆய்விற்காக வந்தனர். இவ்வாறு வருவது சகஜமான விஷயம் தான். இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.ஈது தவிர மாநாடு, கருத்தரங்கம் என்று பலர் பற்பல நாடுகளுக்குச் செல்கின்றனர், செல்லும் போது, அங்குள்ள இடங்களைப் பார்த்து வருகின்றனர். இருப்பினும், வந்திருந்த தொல்லியல் ஆய்வு மாணவர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு இருந்ததால், அவர் மீது தஞ்சையில் தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தின[4] என்பது வித்தியாசமாக உள்ளது. இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறாராம்[5]. தமிழ்தேச பொதுவுடமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர் முதலியோர் அடங்குவர் அப்போது அங்கு கோவில் வளாகத்தில் நின்ற புத்த பிட்சுகளை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டனர். இதில் சில புத்த பிட்சுகளுக்கு அடி விழுந்தது. ரத்த காயமும் ஏற்பட்டது என்றெல்லாம் ஊடகங்கள் சொல்கின்றன.

Buddhist attacked Tanjore temple5

 

புத்தபிக்கு தாக்கப்படும் இன்னொரு காட்சி

Lankan monk attacked Tanjore

ஆராய்ச்சி-சுற்றுலா வருபவர்களைத் தாக்கலாமா?: ஆராய்ச்சி நிமித்தம் வருகின்ற பௌத்தர்களை இப்படி அடிக்கலாமா? இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் என்றும் தெரிய வருகிறது[6]. இந்தியத் தொல்லியல் துறையில் [ASI] ஒன்றரை வருட டிப்ளோமா படித்து வருகின்றார்.  தில்லியில் இருக்கிறார் எனும் போது, தில்லியில் எப்படி இத்தனை காலம் விட்டு வைத்தனர்? இவரைப்போல இன்னும் ஆயிரக்கணக்கன இலங்கை மற்றும் பௌத்த துறவிகள், மாணவர்கள் இந்தியாவில் உள்ளனர். அனைவரையும் இவர்கள் இப்படி தாக்குவார்களா? திருமாவளவன் போன்றோர் தில்லியில் பலமுறை சென்று ஆர்பாட்டம் செய்துள்ளனர். அப்பொழுது, இத்தகைய இலங்கை பௌத்தர்களை அடித்து விரட்டலாமே?

Buddhist-monk-is-attacked-in-Tamil-Nadu

தொல்லியல் துறை அலுவலகத்தில் நுழைந்த பின்னரும் அடிக்க வந்த மாணவர்கள்: உண்மையில் அந்த பிக்கு ஊட-ஓட விரட்டி அடிக்கப்பட்டார். கூட வந்திருந்த மாணவர்களும் பயந்து ஓட்டம் பிடித்தனர். தாக்குதலுக்கு பயந்து இலங்கையை சேர்ந்தவர்கள் தஞ்சை தொல்லியல் துறை அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். துரத்தி வந்தவர்கள் அவர்களை தாக்க முயன்றார்கள். அப்பொழுது, கதவுகள் சாத்தப்பட்டன[7]. அதற்குள் வந்த போலீசார், போராட்டகாரர்களை கைது செய்த பின்னர் இலங்கை புத்தமத பிட்சு மற்றும் அவரது மாணவர்களை காவலர்கள் வெளியேற்றினர். இந்த தாக்குதலால் தஞ்சை பெரிய கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Buddhist attacked Tanjore temple4

திருச்சியிலும் தாக்கப்பட்டது ஏன்?: இந்நிலையில், அவர் பாதுகாப்பாக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர்கள் வந்த வேன் திருச்சி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த வேன் மீது கல் வீசித் தாக்கினர். இதில் வேனின் இருபக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன. பின்னர் போலீஸார் அங்கு வந்து, பாதுகாப்பாக அவர்களை மீட்டு விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் திருச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ASI office Tanjore

பௌத்தர்கள்அஹிம்சாவாதிகளாஜிம்சைகாரர்களா?: தொடர்ந்து பௌத்தர்கள், பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்படுவது சரியா என்று சிந்திக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 2012ல் கூட தஞ்சைக்கு வந்த பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்பட்டனர்[8]. இலங்கைப் பிரத மந்திரி வந்து அகில உலக பௌத்த மாநாட்டைத் துவக்கி வைத்தபோதும், பலர் இந்தியாவிற்கு வந்தனர். பிறகு கால்பந்து குழுவும் விரட்டப்பட்டது[9].  பௌத்தர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் தாக்கப்படுகின்றனரா அல்லது அஹிம்சை விடுத்து இலங்கைத் தமிழர்களை கொடுமைப் படுத்தியதால் தாக்கப்படுகின்றனரா என்று தெரியவில்லை. பௌத்தர்கள் புத்தர் போதித்தபடி அஹிம்சைவாதிகள். ஆகவே அவர்கள் எப்படி கொடுமைக்காரர்களாக இருப்பர்? இலங்கையினையோ, இலங்கை மக்களையோ, பௌத்தத்தையோ ஒரு சின்னம் போல, அடையாளம் காணப்பட்டு, தமிழர்கள் தாக்கத் தொடங்கினால், நாளைக்கு, இந்தியாவில் உள்ள புத்தர் சிலைகள் தாக்கப்படுமா? அம்பேத்கரும் தாக்கப்படுவாரா?

Youngster fight in front of ASI office Tanjore

வேதபிரகாஷ்

16-03-2013


[1] பௌத்தர்கள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், தலித்துகள், அம்பேத்கரைட்டுகள், முஸ்லீம்கள்………என பற்பல முகமூடிகளில் மறைந்து கொண்டு பேசியுள்ளனர்-எழுதியுள்ளனர்,

[2] திராவிட மொழிகள் பேசுபவர்கள், தென்னிந்திர்கள் எல்லோருமே திராவிடர்கள் என்றால், ஏன் அவர்கள் இப்படி சண்டை போட வேண்டும், பிரிந்து கிடக்க வேண்டும்? ஒரே இனத்தவர் இப்படி இருக்கலாமா – தவறு கால்டுவெல் சித்தாந்தத்திலா, திராவிட மாயையிலா?

[3] பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் என்ற தலைப்பில் பல விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளேன்.

https://groups.google.com/forum/#!msg/mintamil/hjXk8ncjZ48/epbrVjgxI4IJ

https://groups.google.com/forum/?hl=es&fromgroups=#!topic/mintamil/nLy0jFIvdIY

https://groups.google.com/forum/?hl=da&fromgroups=#!topic/mintamil/y76uHIRzuc8

[5] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece

[6] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece