Archive for the ‘ஹீனயானம்’ Category

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மாநாடு அழைப்பிதழ்

மாநாட்டில் பேசுபவர்கள்………

14-05-2023 – தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு: 14-05-2023 அன்று தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை வகித்தார். தம்ம தர்மேந்திரா, கோ.பெரியசாமி, ஆதிராஜா, சா.ராம்ஜி, மூக்நாயக் மணி, காளிதாஸ், மணிகண்டன், இளையநந்தன், பி.பி.ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவாசல் அருகே தியாகனுாரில் பவுத்த மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “தமிழகத்தில், 76 இடங்களில் புத்தர் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், உலகம் முழுதும் கடவுள் நம்பிக்கை, பிசாசு மூடநம்பிக்கை இருந்தது. கடவுள் நம்பிக்கையை பரப்பும் நிறுவனமாக மதம் உள்ளது. பவுத்த மதம் இருக்கும் இடத்தில் அறிவு உள்ளது. அம்பேத்கர் மேலும், 10 ஆண்டு உயிருடன் இருந்திருந்தால் பவுத்த மதம் வளர்ச்சி பெற்றிருக்கும். நல்லிணக்க கோட்பாடாக பவுத்தம் உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். புத்தர் அவதார புர்ஷர் அல்ல, புஷ்யமித்ர சுங்கரால் தான் பௌத்தம் இந்தியாவில் வீழ்ந்தது, என்பதெல்லாம் அவரது பேச்சில் இருந்த முக்கியமான அம்சங்கள்.

பௌத்த ஊர்வலம், நடபடிகள்: இந்த மாநாட்டை முன்னிட்டு முன்னதாக புத்த பிக்குகள் மற்றும் சங்க ரத்தினர்கள், பவுத்த உபாசகர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. மேலும் மாநாட்டில் சங்க பேரவையின் மகாசங்ககாதிபதியாக அனைவரும் முன்னிலையிலும் முக்கோல் பெற்றுக் கொண்டு பிக்கு தம்மசீலர் பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தபிரகாசம், தம்ம ரத்னா, ஜெயசீலர், குணசீலர், அமராவதி, தமிழ் கோவை, பவுத்தம் பாலா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு மங்கள கங்கண நிகழ்வும் புத்த பூர்ணிமா நிகழ்வும் நடை பெற்றது. பௌத்தத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இச்சடங்குகள் நிறைவேற்ற பட்டன. ஒருவேளை எஸ்.சிக்களை பௌத்தத்திற்கு மாற்ற, முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், “நியோ பௌத்தம்,” என்று குறிப்பிடாமல் இருப்பதும் நோக்கத் தக்கது[1].  

செக்யூலரிஸத் தன்மையினை எடுத்துக் காட்டிய முயற்சி: இதைத் தொடர்ந்து விகார் கவுன்சில் செயலர் திருநாவுக்கரசு தலைமையில் போதிச்சந்திரன் வரவேற்பில் சிறுபான்மை நலகுழு உறுப்பினர்கள் பவுத்த பெருமாள், அம்பேத் ஆனந்த், சி. அழகர், தேவேந்திரன், கௌதம் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில் சர்வ மதத்தினரும் கலந்து கலந்துண்ட நிகழ்வு நடை பெற்றது. இதில் காஞ்சி ஜைனமட ஜினாலய பரிபாலகர் பட்டாராக சுவாமிகள், உத்தரப்பிரதேசம் பிக்கு நாகபூசனா, ஆந்திரபிரதேசம் நாகார்ஜுனா, போ தி ஆகியயோர் மகா சங்கதிபதி மற்றும் மகா சங்கத்தை வாழ்த்தி பே சினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள புத்தர் திருக்கோயில் நிர்வாகிகள், சங்கரத்தினர்கள், புத்த பூசகர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேடையில் வழிபாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாட்டில் பவுத்த சுவடுகள் கருத்தரங்கம் நிகழ்வு மகாதினகரன் தலைமையில், எஸ் வசந்த் வரவேற்பில் நடைபெற்றது. இதில் தம்மதேவா, கோவைப் பிரியா, சிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் ஆதிக்கம்: ஜெர்மனி தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, குந்தவை நாச்சியார், கல்லூரி இணை பேராசிரியர் சிவராமன், வரலாற்று ஆய்வாளர் அரகலூர் வெங் கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 மாவட்ட சிறுபான்மைநல உறுப்பினர்கள் மகாசங்க உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து பவுத்த மறுமலர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பாளர் கவுதம சன்னா தலைமையில் நடைபெற்றது. மகா சங்க பொருளாளர் அரக்கோணம் கோவி. பார்த்திபன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொ.திருமாவளவன். எம்.பி., காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ., சிந்தனை செல்வன், மருத்துவர்கள் ராஜ்வர்தன், பெரியசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் மகர பூசணம், மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்கத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக சா. ராம்ஜி சாக்கியா நன்றி கூறினார்.

முரண்பட்ட அல்லது சேந்துள்ளவர்களின் சித்தாந்த நிலை: இப்படி இம்மாநாட்டில் ஏதோ பல இந்திய மாநிலங்களிலிருந்து, பல வெளிநாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்த முயன்றாலும், அவரவர் தமது காரியங்களில் குறியாக இருந்தனர். திருமாவளவன் பேசி சென்றுவிட்டார்.   தேமொழி எழுதிய ‘ தமிழகத்தில் பௌத்தம்” நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில்(14.05.2023) சேலம் அருகே தியாகனூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பௌத்த சங்கம் கூறியது, “நெடுநாளாய்த் தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்கள் குறித்த இந்துக்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லை யென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்து கொள்ளப் போவதில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, தன்னுதவி, தன் மேம்பாட்டுக்கான போராட்டம் அவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்.” பிறகு, நாராயணன் போன்றோர் எப்படி விசுவாசத்துடன் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோவிலும், இந்து கோவில் போலத் தான் கட்டியுள்ளார்கள். திருமா பார்த்தாரா என்று தெரியவில்லை.

விசித்திரமான நட்புக்குழு: கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் இவர்களின் தொடர்புகள், தமிழகத்தில் பல பேனர்களில் வேலை செய்வது, பரஸ்பர உதவி முதலியன பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. கௌதம சன்னா விசிக வின் பிரச்சார செயலாளர், பல அமைப்புகளில் பொறுப்பு என்று பட்டியல் காணப் படுகிறது[2].  மாநில செயலர் நீலசந்திரகுமார், முனைவர் கனல்விழி, பேராசிரியை சுந்தரவல்லி, செம்மலர், கௌதம சன்னா முதலியோர் கிருபா என்ற பெண் வழக்கறிஞர் விக்ரம் மீது ஏப்ரல் 2023ல் கொடுத்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க மே 2023ல் முதல் வாரத்தில் அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சுபாஷிணி மீது ஏற்கெனவே சிலர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இப்படி சர்ச்சைக்குர்யவர்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்கின்றனர் என்பதும் புதிராக உள்ளது. நாராயணன் கண்ணன் தன்னை ஒரு வைணவன் என்று காட்டிக் கொள்வார், ஆனால், இவர்கள் தூஷிக்கும் பொழுது கண்டுகொள்ள மாட்டார். தவிர, “மின் தமிழ்” என்ற குழுவில் இவர்கள் மற்ற பலருடன் நடு வைத்துள்ளனர். எல்லா விசயங்களையும் அலசுவர் பொதுவாக செக்யூலரிஸ, முற்போக்கு, மார்க்சீய, சித்தாந்திகள் போன்று காட்டிக் கொள்வர்..

கௌதம சன்னாபலவித பதவிகள், பொறுப்புகள், எழுத்தாளர் முதலியன: கௌதம சன்னாவைப் பொறுத்த வரையில் அரசியல்வாதி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தேர்தலிலும் நின்று தோற்றுள்ளது தெரிகிறது. “ஜெய் பீம் பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் வைத்திருப்பதும் தெரிகிறது.. இதனால், பௌத்தத்தை அரசியல் ரீதியில் உபயோகப் படுத்த முயலும் நிலையும் தெரிகிறது. அதனை அவரே விளக்கியுள்ளதை இங்கு படிக்கலாம்[3]. மற்றபடி “தலித்” என்ற பேனர்கள்-மேடைகள், புத்தகங்கள் எல்லாம் அம்பேத்கரை உபயோகப் படுத்தப் படும் முறையும் விளங்குகிறது. வழக்கம் போல திருவள்ளுவரையும் இதில் சேர்த்து குழப்பி, ஆராய்ச்சி என்று வறுத்தெடுப்பது, கிறிஸ்துவ பாணியும் புலப் படுகிறது. எனவே தலித்-கிறிஸ்துவ-பௌத்த இணைப்புகள் உள்ளதா இல்லையா என்று ஆராய வேண்டியதும் உள்ளது.

நாராயணன் கண்ணன் மற்றும் கௌதம சன்னா உறவுகள்: நாராயணன் கண்ணன் என்பவர், “பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்,” என்று பேஸ்புக் 14-05-2023 பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்று தியாகனூரில் நடந்த பௌத்த மாநாட்டில் சுபாஷினியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  மதம் மாறினாலும் எஸ்.சிக்களுக்கு அச்சலுகைகள் தொடரும் என்று அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளின் படி உள்ளது. அதனால், இதில் பிரச்சினை இல்லை.

[2] https://gsannah.wordpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

[3] “ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா  by வல்லினம் • February 1, 2018; https://vallinam.com.my/version2/?p=4973

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழின-மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [2]

ஒக்ரோபர் 18, 2019

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழின-மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [2]

Bodhidharma-sculpture in Mahabalipuram

குங்ஃபூவும் போதிதருமனும்: போதி தருமன் பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர். சீனக்கோயிலில் (shoalin temple – kungfu school) உள்ள கல்வெட்டு ஒன்று போதிதருமன் பற்றி கூறுகிறது.  டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் அரசரின் மகன் என்கிறது. டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng). தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன-ஜப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர். மகாசன், சுவலபில் போன்ற ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறனர். யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை).

Bodhidharma-Tamil mythologization

ப்ராஃடன்[1] யாங் சுவான்சீ பதிவை மறுப்பது: அக்காலப் பாரசீகத்தை பஹலவர் என்ற அரச மரபினர் ஆண்டனர். அந்த பஹலவர் பெயரும் பல்லவர் பெயரும் ஒற்றுமையாய் உள்ளதாலே யாங் சுவாங்சீ பதிவுகளை எழுதியவர். பல்லவரான போதிதருமரை பஹலவர் என மயங்கி பாரசீகத்தைச் சேர்ந்தவர் என எண்ணியிருக்கக் கூடும். இதற்கு வழுசேர்க்கும் விதமாக போதி தர்மாவின் சீடரெனக் கருதப்படும் தான்லின் போதிதருமரை தென்னிந்தியர் எனக்கூறியதையும் கொண்டு பிராட்டன் என்னும் ஆய்வாளர் போதிதர்மா பாரசீகத்தவர் எனக் கூறப்பட்டதை மறுக்கிறார். போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் II -னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.  கந்தவர்மன் II -னின் மூன்று மகன்கள் என அறியப்படுவோர் – 1. முதலாம் சிம்மவர்மன், 2. இரண்டாம் விஷ்ணுகோபன், 3. இரண்டாம் குமாரவிட்ணு. கால ஒற்றுமையின் படி, போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (475-550 CE விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (340 CE) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (450-500) 28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (563 BCE) போதிதர்மா வரை (550 CE). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை. ஆனால், இவர்கள் எல்லோருமே, ஆன்டி பெர்கூசன் ஆராய்ச்சியை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பது தெறிகிறது.

Bodhidharma-Tamil mythologization-by Tamil group

போதி தர்மர் பற்றி ஆன்டி பெர்கூஸன் கூறுவது: ஆன்டி பெர்கூசன் என்பவர் 1978களில் போதிதர்மர் சம்பந்தப் பட்ட இடங்களுக்குச் சென்று, சீனமொழியில் உள்ள இலகீயங்களைப் படித்து, ஆராய்ச்சி செய்து, ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவர் பல விவரங்களைக் கொடுத்துள்ளார். போதிதர்மர் பற்றி அறிய டௌஸ்வான் [Daoxuan pronounced as Dawswan 596-667 CE] என்ற டாங் காலத்தைய பௌத்த சரித்திர ஆசிரியர் மற்றும் பண்டிதர் முக்கியமானவர்.  பிறகு வூ [Wu 502-549 CE] என்கின்ற சீன அரசன். இவர்கள் மூலம் தான் போதிதர்மர் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன, ஏனெனில்,  இவர்கள் காலத்தில் தன், போதிதர்மர் அங்கு சென்றுள்ளார். இவர், ஜென் பௌத்தத்தின் ஆரம்ப குரு, பிதாமஹர் என்றெல்லாம் போற்றப் படுகிறார். ஜென் என்பது, சைனாமயமாக்கப் பட்ட, இந்திய பௌத்தம். அவர் இந்தியாவின் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த பிராமணர்[2]. கண்கள் நீல நிறத்தில் இருந்தன [Blue-Eyed Barbrian], அதனால், சீனர் இவரை “நீலக் கண் காட்டுமிராண்டி” என்றே அழைத்தனர். 527ல் குவாங்சௌக்கு வந்து, வூவை சந்திக்க நான்சிங்கிற்கு [Nanjing] சென்றதாக உள்ளது. வூவிற்கு பௌத்தத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாக இருந்ததால், அவர் “போதிசத்துவ மஹராஜா” [Bodhisattva Emperor] என்றே அழைக்கப் பட்டார். உள்ளூர் கதைகளின் படி, போதிதர்மர் யாங்-சீ [Yang-tse] நதியைக் கடந்து, ஷாவாலின் கோவிலை அடைந்தார். அக்கோவில் பின்புறத்தில் இருந்த குகையில் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து 536ல் இறந்ததாக உள்ளது. அவரது உடல், டிங்லிங் [Dinglin] என்ற, “சமாதி காடுகளில்” புதைக்கப் பட்டது. அது லுயோயாங் [Luoyang]  என்ற புராதன நகரில் ஒரு கோவிலில் உள்ளது.

Bodhidharma-Tamil mythologization-books produced

டௌஸ்வான் என்ற சீன சரித்திர ஆசிரியர் கூறுவது: டௌஸ்வான் தொகுத்து வெளியிட்ட, “தொடர்ந்த பிரசித்தி பெற்ற சந்நியாசிகளின் சுயசரிதைகள்” [Continued Biographies of Eminent Monks] என்றதிலிருந்து, போதிதர்மரைப் பற்றி அறிய முடிகின்றது. அத்தகைய விவரங்கள் முன்னமே இருததால், “தொடர்ந்த” என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிடுவதாவது[3]: “போதிதர்மர்: தென்னிந்தியாவிலிருந்து வந்த பிராமணர். அவருடைய ஆன்மீக ஞானம் விஸ்தாரமானது. அவரது (போதனைகளைக்) கேட்டவர், தெளிவு பெற்றனர். மஹாயானபௌத்த முறைகளில் ஆழ்ந்த மனத்துடன் ஈடுபட்டிருந்தார். தியானத்தின் எல்லா முறைகளையு அறிந்து, தெரிந்த வல்லவர். சீனாவைத் தேர்ந்தெடுத்து யோகாசாரத்தை போதித்தார். 479ல் வியூ-சோங் வம்சாவளி காலத்தில் தெற்கு-சைனாவிற்கு வந்தார். பிறகு வடக்கில் உள்ல யூ / வை என்ற வம்சாவளி அரசனிடம் சென்றார். அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம், ஜென்னை போதித்தார். இவ்விதமாக, நாடு முழுவதும் சென்று அவர் போதித்தார். பலர் அவர் போதித்ததை எதிர்த்தனர், குறை கூறினர். தௌயூ [Daoyu] மற்றும் யூய்கே [Huike] என்ற இருவர் சீடர்கள் ஆகினர்…..அவர் பணி தொடர்ந்தது…………………………..”

Bodhidharma-Tamil mythologization-by Tamil groups

சரித்திரம் எழுதப் படும் முறை: சரித்திரம் [history] என்பது உண்மையில் இப்படித்தான் நடந்தது என்று பாரபட்சமின்றி ஆதாரங்களுடன் எழுதுவது. அது எழுதப் பட்டது, எழுதப் படுவது என்பது இல்லை, ஆனால், உண்மையிலே நடந்தது ஆகும். இகு ஆதாரங்கள் – முதன்மை [primary sources] மற்றும் இரண்டாம் தர [secondary sources] என்று இரண்டாகப் பிரிக்கப் படுகிறது. முதன்மை, பிராதான மூலங்கள் நடந்த சம்பவ காலத்தைச் சேர்ந்தவை அல்லது பிறகு குறுகிய ஆண்டுகளில் பதிவு செய்யப் பட்டவை. இரண்டாம் தர ஆதாரங்கள் என்பது, மற்றவர் சொன்னதை, எழுதியை வைத்து எழுதுவது. இங்குதான், பாரபட்சம் போன்றவை நுழைகின்றன. இட்டுக்கதை, கட்டுக் கதை, மாயை [myth] முதலியவற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலையும் உண்டு, இந்தியா, சைனா போன்ற மிகபுராதனமான நாடுகளின் சரித்திரம், தொடர்ந்து வருபவை. அதனால், அவற்றின் தொன்மை சரித்திரத்தை தினம்-தினம் நடந்தது போல எழுத முடியாது. அதனால் எல்லாமே கட்டுக் கதை ஆகிவிடாது, ஏனெனில், அங்கு மாயையே சரித்திரமாக [mythistory] உள்ளது. அதனால், அம்மாயையை நீக்கினால் [demythologization] சரித்திரம் வெளிப்படும். அம்முறை சரித்திரம் எழுதும் முறை [historiography] எனப்படும். அதற்காக, விஞ்ஞான முறையில், மற்ற வர் ஏற்கும்படி, கடைப்பிடிக்கப் படும் முறை, [Historiography methodology] எனப்படும், அதுவும் எந்தவிதமான சித்தாந்தம் [ideology] மூலம் கரைப் படிய / பாதிக்கப் படக் கூடாது.

Bodhidharma-Shaolin temple

பிரச்சாரங்களில் சரித்திரம் ஒதுக்கப் படுவது: தமிழகத்தை, இந்தியாவைப் பொறுத்த வரைக்கும், இந்த வகை பரிசோதிக்கும் போது தம்மைப் பற்றிய குறிப்பும் கிடையாது இரண்டாவது பருவம் ஏழாம் அறிவு திரைப்படம் பற்றிய கதைகள் தமிழகத்திலும் பல அமைக்கப்பட்டுள்ளது சில குறிப்புகளை வைத்துக்கொண்டு குறிப்பாக காஞ்சிபுரத்திலிருந்து பல்லவர். பிறகு, இணைதளங்களில், பிரச்சார ரீதியில், பதிவுகள், வீடியோக்கள் முதலியன வந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுதைய மோடி-லி பிங்க் சந்திப்பிறுகுப் பிறகு, அத்தகைய பிரச்சாரம் அதிகமாகக் கூடும். எல்லாமே தமிழ் என்கின்ற கூட்டங்களும், இதில் சேரக் கூடும், பிரச்சாரம் செய்யக் கூடும்.  எல்லாம் தமிழ்-தமிழ் என்றால், அவர்களுக்கு கண்மூடித் தனமான ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் பொய்கள், கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டாலும், கவலைப் படுவதில்லை. அதாவது, தெரிந்தே அதரவு கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது. இவற்றைப் பரப்ப, ஊடகவாதிகளும் தயாராக இருக்கிறார்கள் மற்றும் ஒத்துப் போகிறார்கள் என்றும் தெரிகிறது. ஒருவேளை அவர்களுக்கும், இத்தகைய பிரச்சாரங்களினால் பணம், சலுகை, உபசாரம் முதலியவை கிடைக்கின்றன போலும்.

© வேதபிரகாஷ்

17-10-2019

Bodhidharma-Tamil mythologization-travelling by bamboo

[1] Jeffrey Lyle Broughton, The Bodhidharma anthology: The earliest records of Zen. Univ of California Press, 1999.

[2]  Andy Ferguson, Tracking Bodhidharma: A Journey to the Heart of Chinese Culture. Berkeley: Counterpoint., 2012, see indtroduction, p.4, 14.

[3]  Ibid, pp.14-17.

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழ் மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [1]

ஒக்ரோபர் 18, 2019

போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழ் மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [1]

Date of Buddha 1887-1807 BCE

இந்தியாவில் பௌத்தம் குறைந்தது, சீனாவில் வளர்ந்தது: இந்தியாவில் தோன்றிய பௌத்தம், கால போக்கில், முரண்பட்ட நிலைகளால், அது. பாரதத்தில் கொஞ்சம்-கொஞ்சமாக தேய்ந்து குறைந்தாலும், மற்ற நாடுகளில் வளர ஆரம்பித்தது[1]. பௌத்தத்தின் தொன்மை 1887-1807 BCE வரை செல்கிறது[2], ஆனால், ஆங்கிலேயர் அவரது தேதியை 563-483 BCE, அல்லது 480-400 BCE BCE என்று குறைக்கிறார்கள். கிருத்துவம் பௌத்தத்திலிருந்து பெறப் பட்டது என்ற சித்தாந்தம் இருப்பதால், புத்தரின் தேதியை குறைத்து வருகிறார்கள். பாஹியான், யுவான் சுவாங் போன்றோர், பௌத்த மதத்தின் ஓலைச்சுவடிகளை எடுத்துச் செல்ல இங்கு வந்து சென்றனர் என்று அவர்கள் அதிகமாகவே எழுதி வைத்தார்கள். சைனாகாரர்கள் அப்படியொன்றும், சோடை போனவர்கள் அல்லர். இதியாவுடனான வியாபார விவகாரங்களுக்கு அதிகமாகவே வந்டு சென்றனர். இந்தியர்களும் சென்றனர். உண்மையில், தென்கிழக்காசிய நாடுகளில், இந்தியாவின் தாக்கம் தான் அதிகமாக இருந்தது. அது, வியாபாரம் மட்டுமல்லாது, எல்லாமும் கலந்து இருந்தது. இல்லை, இந்தியரே, குறிப்பாக பல்லவர்கள் பல்லாண்டுகள் ஆண்டு வந்தனர். ஆனால், பௌத்தம் அதிகாரத்தில் ஆதிக்கம் வளர, இந்தியரின் தாக்கம் குறைந்தது. சோழர்கள் மறைந்தவுடன், 13ம் நூற்றாண்டு வரை, கடலில் ஆதிக்கம் இல்லாத சைனா, பிறகு கோலோச்ச ஆரம்பித்தது. அத்தகைய உறவுகள் இருவழிகளிலும் இருந்தன.

Bodhidharma-Tamil mythologization-Kambe photo-vaikunda perumal koil

போதிதர்மன் பற்றிய சரித்திர ஆதாரமான மூல ஆவணம் எதுவும் இல்லை:  போதிதர்மன் பற்றிய சரித்திர ஆதாரமான மூல ஆவணம் எதுவும் இல்லை. இருக்கின்ற சைன கதைகளிலிருந்து, அவன் 5ம் / 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று கருதப் படுகிறது. அவரன் காலத்தைய விவரங்கள் அடங்கிய நூல்கள் இருந்ததாகவும் பிறகு அவை அழிந்து விட்டன அல்லது அதை எல்லாம் ஆதாரபூர்வமான சொல்ல முடியாது என்ற கருத்து நிலவுகிறது. இக்கதை தொகுப்புகளிலிருந்து, –

1. பாரசீகத்தில் இருந்து அதாவது மத்திய ஆசியாவிலிருந்து அல்லது 2. இந்திய பகுதியிலிந்து வந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கப் படுகிறது. இருப்பினும், சீனாவுக்கு எப்பொழுது எந்த தேதியில் எந்த காலத்தில் வந்தான் என்று, எந்த சரித்திரக் குறிப்பு இல்லை. இருக்கின்ற குறிப்புகளை தொகுத்து பார்க்கும் பொழுது ஒன்று அவன் சீன தேசத்திலிருந்து மேற்கு திசையிலிருந்து, வந்திருக்க வேண்டும் அதாவது மத்திய ஆசியா / பாரசீகத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் இல்லை, இரண்டு அவன் தென்னிந்தியாவிலிருந்து இந்திய அரசின் வம்சாவளியில் பிறந்த, ஒரு அரசனின், மூன்றாவது மகனாக பிறந்தவன் என்றும் சொல்லப்படுகிறது. பல்லவகாலத்தில், ஒரு பிராமண குலத்தில் பிறந்தவன் என்றும் காணப்படுகிறது. இக்குறிப்பு, தமிழர்களின் இப்பொழுதைய கதைகளில் மறைக்கப் படுகின்றது. விகிபீடியாவே மறைப்பது கேவலமாக இருக்கிறது[3], ஏனெனில், ஆங்கிலத்தில் உள்ளதை[4] தமிழில் மறைக்கும் போக்கில் வெளிப்படுகிறது.

Bodhidharma-Tamil mythologization-Kambe photo

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் போதிதர்மனைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை[5]: 2011ல் “ஏழாம் அறிவு” என்ற திரைப்படத்தின் மூலம் தான், அவனது கதையை அறியப்பட்டு குறிப்பாக அவன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்றதனால், ஆதாரங்களை எல்லாம் இல்லையென்றாலும், அவனை பற்றி இருக்கும் சில குறிப்புகள், பெரிதாக ஊதப்பட்டு ஏதோ பெரிய சரித்திரம் போன்ற குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் ஜனரஞ்சக எந்தவித சரித்திர ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுத ஆரம்பித்துள்ளனர். நேரிடையாக, போதி தர்மனைப் பற்றி பேசாமல், எதையதையோ பேசி, சுற்றி வளைத்து, காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்குச் சென்றான் என்கிறார்கள். சீனக் குறிப்புகளைப் படிக்கும்போதுதான், அவன் சென், சான் அல்லது ஜென் பௌத்த மதத்தை அல்லது அந்த புத்த மதக் கொள்கைகளை சைனாவுக்கு கொண்டுவந்தான் என்றுள்ளது. பிறகு ஜப்பான் வியட்நாம் போன்ற நாடுகளிலும் பரவியது என தெரிகிறது.

Bodhidharma-Tamil mythologization-map

பட்டுப் பாதை வழியாக, சுமத்ராவிலிருந்துகுவாங்சௌ பகுதியில் முத்து நதி கரையில் வந்து இறங்கினான்: சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பு படி அவன் இந்தியாவின் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இருக்கும் கடல்வழி  பட்டுப் பாதை வழியாக, சுமத்ராவிலிருந்து,  குவாங்சௌ பகுதியில் [முன்னர் canton என அழைக்கப் பட்டது] முத்து நதி கரையில் வந்து இறங்கினான் என தெரிகிறது. அதாவது அவன்  லியூ என்கின்ற சோங் வம்சாவளி [Liu Song Dynasty, 420-479] அல்லது லியாங் வம்சாவளி [the Liang Dynasty, 502-557CE)] காலகட்டத்தில் வந்திருக்கலாம் என்று பெர்கூசன் [Frgusson] என்ற ஆராய்ச்சியாளர் எடுத்துக் காட்டுகிறார்[6]. அருகில் இருக்கும் குவாங்சௌ மடாலத்தில் அவர் முதன் முதலில் தன்னுடைய போதனை ஆரம்பித்தார் என்றும் அவரால் குறிப்பிடப்படுகிறது[7]. பிறகு, தனது யாத்திரியை வடக்கு திசையில் மேற்கொண்டு, போதிசத்துவர் என்று மதிக்கப் படுகின்ற, அரசராக இருக்கின்ற வூ என்கின்றவனை சந்தித்து உரையாடினார் என்றுஉள்ளது.  இதுவும் ஒரு apocryphal போன்ற கட்டுக்கதை போன்ற குறிப்புகளில் உள்ளது தான் என்று புரிகிறது.

Bodhidharma-Yuwan Swang, Fa-hein

யாங் சுவான்சீ கொடுக்கும் விவரங்கள் – போதிதர்மன் பாரசீகத்திலிருந்து வந்தான்: 17 ஆம் நூற்றாண்டிற் சீனாவில் அரசு செலுத்திய மிங் அரச மரபினரால் அமைக்கப்பட்ட போதி தருமரின் வெண்கல சிலை லுவோயங் (洛陽伽藍記 Luòyáng Qiélánjì) பகுதியில் அமைந்துள்ள பௌத்த மடாலயங்களின் குறிப்புக்கள் 547 CE ஆம் ஆண்டில் மகாயான பௌத்த ஆக்கங்களைச் சீனமொழிக்கு மொழிபெயர்த்த யுவான் சுவாங் என்பவரால் எழுதப்பட்டவையாகும். அக்காலத்தில் மேற்குப் பகுதியில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த பாரசீகரான போதிதருமர் என அறியப்பட்ட ஒரு துறவி இருந்தார். அவர் காட்டு எல்லைகள் வழியாகச் சீனாவை அடைந்தார். கதிரொளியிற் பளிச்சிடும் [யோங்னிங்சி தூபியின்] தங்கத் தட்டுக்களைப் பார்த்தும், அதனூடு செல்லும் ஒளி மேகத்தில் கலப்பது போன்றிருப்பதைக் கண்டும், காற்றில் அசைந்தாடும் மாணிக்கம் பதித்த மணியின் ஓசை வானத்தை அடைவது போன்று இருப்பதைக் கண்டும் அவர் அதன் புகழ் பாடினார். அவர் இப்படி விளித்தார்: “மெய்யாகவே இது ஆவிகளின் வேலை”. அவர் மேலும் கூறினார்: “நான் 150 ஆண்டு வயதானவன். நான் எத்தனையோ நாடுகளைக் கடந்து வந்துள்ளேன். கிட்டத்தட்ட நான் போகாத நாடே இல்லை எனக் கூறலாம். தொலை தூரத்திலிருக்கும் இது போன்ற பௌத்த நாடாயினும் சரியே.” அவர் அதனைப் புகழ்ந்தேற்றியதுடன் தன் கரங்களைக் கூப்பி நாட்கணக்காக வைத்திருந்தார். இங்கு குறிப்பிடப்படும் ஆலயமான யோங்னிங்சியில் (永寧寺) உள்ள ஆலயம் அதன் புகழ் ஓங்கி இருந்த காலத்திலேயே லுவோயங்கில் போதி தருமரின் வரவு பற்றி புரௌட்டன் 516 இற்கும் 526 CE இடைப்பட்ட காலத்தினதாகக் குறிப்பிடுகிறார். 526 ஆம் ஆண்டு முதல் யோங்னிங்சி தொடர்ச்சியாக இடம்பெற்ற கடுமையான நிகழ்வுகளால் தாக்கப்பட்டு அழிவுறத் தொடங்கி, 534 ஆம் ஆண்டு மொத்தமாக அழிந்து விட்டது. அதாவது ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாகியது.

Bodhidharma-cave in China

தான்லின் – போதிதர்மன் தென்னிந்தியாவிலிருந்து வந்தான்: இரண்டாவது குறிப்பு தான்லின் (曇林; 506–574 CE) என்பவரால் எழுதப்பட்டது. தான்லின் எழுதிய “தரும போதகரின்” சுருக்கமான வாழ்க்கை வரலாறு, போதி தருமரே எழுதியதாகப் பொதுவாகக் கருதப்படும் இரு வாயில்களும் நான்கு செயல்களும் என்பதற்கு அவர் எழுதிய முன்னுரையில் போதி தருமா ஒரு தென்னிந்தியர் எனக் குறிப்பிடுகிறார்: “தரும போதகர் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். அவர் இந்தியாவின் சிறந்த அரசரொருவரின் மூன்றாம் மகன். மகாயான வழியிலேயே அவரது குறிக்கோள் இருந்தது. அதனால் அவர் தனது வெண் துகிலை நீக்கிவிட்டு, துறவிகள் அணியும் கருந்துகிலுக்கு மாறினார் […] வேற்று நாடுகளில் மெய்யான போதனை இல்லாமலாவதைக் கண்டு வருந்திய அவர் நெடுந் தொலைவிலுள்ள மலைகளையும் கடல்களையும் கடந்து ஹான் மற்றும் வை ஆகிய இடங்களிற் போதிப்பதை நோக்கமாகக் கொண்டு பயணித்தார்.” போதி தருமர் சீடர்களைக் கொண்டிருந்தார் என்னும் தான்லினின் கூற்று, குறிப்பாக அவர் டாஒயூ (道育) மற்றும் ஹூயிக்கே (慧可) என்போரைச் சீடராகக் கொண்டிருந்தார் என்னும் கூற்று இங்கு குறிப்பிடத் தக்கது. மேற்படி இருவருள் பின்னவரான ஹூயிக்கே என்பவர் போதி தருமர் பற்றிய இலக்கிய ஆக்கங்களைப் பின்னர் இயற்றியவராவார். தான்லின் போதி தருமரின் சீடரொருவரென்றே பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் அவர் போதி தருமரின் சீடரான ஹூயிக்கேவின் சீடராக இருந்திருப்பதற்கான சாத்தியமே கூடுதலாக உள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2019

Bodhidharma-differs much

[1]  மின்–தமிழ் என்ற இணைதளத்தில், இதைப் பற்றி விவரமாக எழுதி வந்தேன், ஆனால், திடீரென்று அவை மறைந்தன மற்றும்  நானும் தடை செய்யப் பட்டேன். அதனால், அவற்றை மீட்டெடுத்து, தொகுத்து, மறுபடியும் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அப்பதிவுகளை, இங்கு படிக்கலாம்:https://buddhismstudies.wordpress.com/

[2]  இது ரக்கலதாஸ் பானர்ஜியின் அகழ்வாய்வு முடிவுகளை ஒத்திருந்ததால், அவரது அறிக்கை மற்றும் புகைப் படங்கள், ஆங்கில அரசால் மறைக்கப் பட்டன, அச்சில் ஏறவிடால் தடுக்கப் பட்டன. புகைப் படங்களும் மற்ற ஆதாரங்களும் மறைந்து விட்டன.

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D

[4] https://en.wikipedia.org/wiki/Bodhidharma

[5] While Bodhidharma is virtually unknown in India,apart from the controversial 2011 film, 7am Arivu, his legacy in China, Japan and Vietnam is very considerable. As mentioned, he is honoured for bringing ‘Chan’ (pronounced ‘Chen’) Buddhism to China, and ‘Zen’ thereafter – by a succession of hands – to Japan, though contemporary scholarship suggests a much earlier introduction of Zen to the East (Red Pine, 1989).

[6] Andy Ferguson, Tracking Bodhidharma: A Journey to the Heart of Chinese Culture. Berkeley: Counterpoint., 2012.

[7] By contrast, for Bodhidharma, there are virtually no records, and what we lose by way of fact is made up by a wealth of invention. On the banks of Guangzhou’s Pearl River where Bodhidharma is said to have landed from his long sea voyage on the maritime silk route via Sumatra (in either the Liu Song Dynasty, 420-479, or the Liang Dynasty, 502-557CE), a gateway identifies the spot where he stepped ashore (Ferguson, 2012:25). Similarly, the nearby Hualin Temple in Guangzhou marks the place where Bodhidharma began his teaching.

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பது – முதலிய சரித்திரப் பிரச்சினைகள், காலக்கணக்கீடுகள் (2)

மே 1, 2018

புத்த பூர்ணிமா, வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப் படுவது, புத்தருடைய தேதி தீர்மானமாகாமல் இருப்பதுமுதலிய சரித்திரப் பிரச்சினைகள், காலக்கணக்கீடுகள் (2)

Rakhladas Banerjee and John Msrshall, IVC controversy

புத்தரின் தேதியை குறைப்பது, இந்திய சரித்திர காலத்தைக் குறிப்பது: “அலெக்சாந்தரின் படையெடுப்பிற்கு முன்னர் 326 BCE, இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை,” என்று[1] எதேச்சதிகாரமாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், மஹாவீரரும், புத்தரும் அவர்களை அடக்கினர். அவர்களது சரித்திர ஆதாரங்களை அழித்து, அவர்களை மறைக்கவே மேனாட்டவர் முயன்றனர். ஆனால், பெரிய சிலைகள், மடாலயங்கள், கல்வெட்டுகள், நூல்கள் முதலியவை மறைக்க முடியவில்லை. மேலும், எகிப்திய லக்ஷாரில் இருந்து புத்தர் சிலை அவர்களை அடக்கியது. ஏனெனில், அது புத்தரின் தேதியை 1887-1807 BCEக்கு எடுத்துச் செல்கிறது, அது, புத்தரின் பாரம்பரிய தேதியுடன் ஒத்துப் போகிறது[2]. சந்திர, சூரிய, சந்திர-சூரிய வருடக்கணக்கு பின்பற்றப்பட்ட முறைகளினால், புத்தருடைய தேதியை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆரம்பகாலங்களில் சந்திரமாதக் கணக்கைத்தான் மக்கள் பின்பற்றி வந்தனர். சந்திரனை தொடர்ந்து கண்காணித்து வந்ததால், அது பூமியை சுற்றி வரும் போது, தேய்பிறை-வளர்பிறை 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்றது என்பதனை அறிந்து கொண்டு, ஆண்டிற்கு 360 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொண்டனர்.  அந்த 15 நாட்களை “பஞ்சாங்க முறைப்படி[3]” வாரம், திதி[4], கரணம்[5], நட்சத்திரம் மற்றும் யோகம்[6] என்றும் பிரித்துக் கொண்டனர். பௌத்தர்களும் இம்முறையினை உலகம் முழுவதும் பின்பற்றி வந்தனர். இதனால், பௌத்தத்ததின் தொன்மையினை ஏற்றுக் கொண்டால், அத்தகைய காலக்கணக்கீட்டுமுறை, வானவியல் முதலிய ஜானங்களின் தொன்மையினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அது இந்திய வரலாற்றுத் தொன்மையினை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான், அவர்கள் இதனை எப்படியாவது எதிர்த்து, மறைத்து, காலத்தைக் குறைப்பது என்று முடிவு கொண்டனர்[7].

Dipavamsa, Mahavamsa

தீபவம்சம் மற்றும் மஹாவம்சம் என்ற நூட்களை உருவாக்கி காலக்கணக்கீட்டை கெடுத்தது: தீபவம்சம் மற்றும் மஹாவம்சம் என்ற நூட்களை ஆங்கிலேயர் பண்டிதர்களை வைத்து உருவாக்கி, பௌத்தத்தின் தொன்மையினை குறைத்தனர். இதனை, உண்மையான ஆராய்ச்சியாளர்கள் எதிர்த்தனர். “இந்தியர்களுக்கு சரித்திர அறிவு இல்லை,” என்ற போது, “ராஜதரங்கனி” அவர்களை மிரட்டியது. அதில் உள்ள ஜைன அசோகன் அவர்களை பயமுருத்தினான். ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே[8]. மகாபாரத தேதியும் திகைக்க வைத்தது. அதாவது, “கட்டுக்கதை, புராணம்” என்பவை எல்லாம் சரித்திரம் ஆனது. இவற்றை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  இதனால், ஜைன அசோகன் மறைக்கப் பட்டான், அவனது “தேவநாம் பிய திஸ்ஸா” கல்வெட்டுகள், பௌத்த அசோகனுடையது என்று மாற்றி எழுதினார்கள். அதன்படி, அசோகனுடைய காலத்தை 1200 வருடங்கள் குறைத்தனர்.

buddha-at-luxor

புத்தருடைய தேதி, இந்திய சரித்திரத்திற்கு முக்கியமானது: புத்தர் எந்த காலத்தில் இருந்தால் என்ன, நிறைய புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறவர்கள், சரித்திரத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். புத்தருடைய தொன்மை, இந்திய சரித்திரத்தின் தொன்மைக்குள்ள ஆதாரங்களில் ஒன்றாகும். சிந்துசமவெளி நாகரிக அகழ்வாய்வு படிவுகளின் கீழ், ஒரு பௌத்த சைத்தியத்தை, ரக்லதாஸ் பானர்ஜி கண்டு பிடித்ததை, ஜான் மார்ஷல் மறைத்து, புகைப்படங்களையும் மாயமாக்கி விட்டு, அவருடைய கட்டுரையினையும் வெளியிடாமல் செய்தார்[9]. சில பௌத்த கட்டுமானங்களின் சில ஆடிகள் கீழே 5000 வருட தொன்மையான நாகரிகம் இருந்தத்தை பானர்ஜி கண்டு பிடித்தார். சங்கராச்சார்யா போன்று, புத்த மடாதிபதிகள் தொடர்ந்த போது, அவர்கள் “புத்தர்,” என்றே அழைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், ஆதி-தீர்த்தங்கரர், ஆதி-புத்தா போன்ற தத்துவங்கள் ஜைன-பௌத்தங்களில் உள்ளன. “ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் / 1616ம் ஆண்டில் பேரறிவாளன் தோன்றுவான் / புத்தன் தோன்றுவான், என்று மணிமேகலை சொன்னது, என்ன வருடம், என்றால் தெரியவில்லதேன்கிறார்கள். நிச்சயமாக அது மணிமேகலைக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதால், மற்ற காலக்கணக்கீட்டில் வருகின்ற வருடமாகவேண்டும். எப்படியிருந்தாலும் BCEல் தான் வரவேண்டும் என்பதால், அதன் சரித்திர உண்மைநிலயை மறுக்க முடியாது.

Pre-christian Buddhism in Britain - Ireland

பௌத்தமும், மேனாட்டு ஆராய்ச்சியாளர்களும்: பௌத்தத்திலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கிருத்துவம் தோன்றியது என வலுவான கருத்துகள் இருந்து வருகின்றன. ஆகையால், பௌத்தத்தின் காலத்தைக் குறைக்க அவர்கள் பல வழிகளில் சரித்திர ஆதாரங்களை மாற்றினர், மறைத்தனர், போலிகளை உருவாக்கி குழப்பினர். உதாரணத்திற்கு, ஏ.ஏ.ஃபூரர் என்பரது வழக்கு திகைப்படைய வைப்பதாக இருக்கிறது[10].  இத்தகைய அந்நியர் எழுதிய சரித்திரத்தை இந்தியர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இன்று கூட புத்தரின் தேதி / கால நிலை உறுதியாக நிலைநிறுத்தப்படவில்லை. மாறாக, அந்த தேதியை கிரேக்கத் தத்துவ ஆரம்பங்களுக்குப் பிறகு வைக்க இன்றளவும், ஆதிக்க சக்திகளின் போலியான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கு புத்தரின் மண்டையோட்டின் ஒரு பகுதி எப்படி பலவிதமாக தேதியிடப்படுகின்றது என்று நோக்கத்தக்கது[11]:

  1. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்: புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது.  அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  2. 2,500 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.
  3. 1000 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்

உண்மையில், குழப்புவதற்காகவே, இவ்வாறான தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம், ஏனெனில், முதல் மற்றும் மூன்றாவது தேதிகள் தவறு என்பது பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது, ஆனால், இரண்டாம் தேதி, மேனாட்டவர்ளுக்கு ஒத்துப் போகிறது.

© வேதபிரகாஷ்

30-04-2018

Buddhas skull, China

[1] Referred to as “sheet anchor of Indian history” and denying history before it and mentioning IVC as “Proto-historic,” further historical evidences are also discredited.

[2] R.G.N . Prasad, “The Date of Buddha’s Mahäparinirväna“, Annals of the Bhandarkar Oriental Research Institute 67 (1986), pp. 77-88. A version of this paper was also read in 1985 at the 7th Conference of the International Association of Buddhist Studies in Bologna.

[3]  வளர்பிறை-தேய்முறை, சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கவனித்து, பதிவு செய்து, கணித்து தயாரிப்பது பஞ்சாங்கம் ஆகும்.

[4] திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன.

[5] ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

[6] சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர். யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20′ அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.[2] எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20′ அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் “தின யோகம்”, “நித்திய யோகம்”, “சூரிய சித்தாந்த யோகம்” போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

[7] John Bentley, Hindu Astronomy,

[8] http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

[9] Rakhladas Banerjee,

The first round of excavations revealed a Buddhist stupa belonging to the Kusana period (2nd and 3rd centuries). As the area around the stupa was dug up, the archaeological team came upon microliths (tiny flints, part of a bigger tool) and pieces of pottery that did not match anything found earlier. Further excavations revealed a 5,000-year-old civilisation only a few feet below the Buddhist structure. Rakhaldas received a letter from the then director-general of the ASI, H. Hargreaves. The letter came along with a 166-page typewritten document – the article on Mohenjodaro that Rakhaldas had sent Marshall four years ago. The letter read: “Sir John thinks it could be unkind to not let you know that many of your theories are quite untenable and your statements incorrect.” Hargreaves also urged Rakhaldas to get his “report” printed before the book by Marshall was out so “there are no misunderstandings”. The photographs, he informed, had gone missing. The book, Mohenjodaro and the Indus Civilisation, edited by Sir John Marshall was published in 1931. In the foreword, Marshall mentions Rakhaldas’s name as something he “can’t pass over in silence” and says “to him belongs the credit of having discovered if not Mohenjodaro itself, at any rate its high antiquity”.

[10] Alois Anton Führer – Führer had an unusual religious career. He served as a Catholic priest but in 1887 converted to Anglicanism. Following his expulsion from government service in India, Führer made plans to become a Buddhist monk. Quoting the Ceylon Standard, the Journal of the Mahabodhi Society noted: “Much interest has been excited in Buddhist and other circles at the prospect of Dr Führer coming to Ceylon to join the Buddhist priesthood. The Press notices recently made regarding this gentleman have given rise to grave suspicion. We understand that Dr Führer will have an opportunity given him of refuting the charges made against him before he is accepted by the leading Buddhists here as an exponent of the religion of Buddha.” These plans seem to have come to nothing because in 1901 Führer re-converted to the Christian Catholic Church of Switzerland. Führer’s archaeological career ended in disgrace. Under official instructions from the Government of India, Führer was relieved of his positions, his papers seized and his offices inspected by Vincent Arthur Smith on 22 September 1898 Confronted by Smith about his archaeological publications and his report to the Government, Führer was obliged to admit “that every statement in it [the report] was absolutely false.” These activities were presaged by Führer’s publications on Sanskrit texts and law which, as shown by Andrew Huxley, are effectively works of plagiarism, large portions being copied from the writing of Georg Bühler.

[11] வேதபிரகாஷ்,  புத்தர் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது,

https://buddhismstudies.wordpress.com/2010/06/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

A Brahmin attacked Buddha-2

பிராமணர்களின் கத்திபௌத்தர்களக் கொன்றது, விஹாரங்களை இடித்ததுபௌத்தத்தை ஒழித்தது முதலியன: சமீப காலத்தில், இத்தகைய கதைகள் “சரித்திரங்கள்” போன்று பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ பிராமணர்கள்தாம் தமது குரூர, கொடூர வஞ்சனைகளுடன் பௌத்தர்களை கொன்று குவித்து, பௌத்தத்தையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனர், ஒழித்துக் கட்டினர், மறையச் செய்து விட்டனர் என்று அட்டகாசமாக எழுதி வருகிறார்கள். ஆகவே அதில் என்ன உண்மை உள்ளது என்பது ஆராய வேண்டியுள்ளது. ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய கதைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பொதுவான பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு பல நேரங்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது. படித்தவர்களும் மற்றவர்களும்கூட இதனை நம்பி அலச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று அவர்கள் அறிவதில்லை.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன்: பௌத்த-விரோத நான்கு கொடூரர்கள்:  புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன் என்று நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தாம் பௌத்தத்தை இந்தியாவில் வேரோடு கருவறுத்தவர், பௌத்தர்களைக் கொன்றுக் கொவித்தவர், பௌத்த வழிபாட்டு ஸ்தலங்கள், ஸ்தூபிகள், விஹாரங்களை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள், என்று இன்றளவிலும் சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்கள், “புதிய” / “லே” பௌத்தர்கள், அம்பேத்கரைஸ்டுகள், தலித் அறிஞர்கள், என பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. பிறகு அவர்கள் பிராமண அரசர்கள் என்பதனால், பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் தூண்டுதலால்தான் அவ்வாறு அட்டூழியம் செய்தனர் என்ற கருதுகோள் வைக்கப்படுகிறது. புதியதாக இப்பொழுது “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) ஒன்று “இஸ்லாமிய கத்தி” (Sword of Islam) போன்று தயாரித்து எழுதி வருகின்றனர், படம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலங்களைக் கொடுக்காமல் ஒருவர் சொன்னதைத் திரும்ப சொல்லுவது, குறிப்பிட்டதை திரும்ப குறிப்பிடும் ரீதியில் (Quoted-quote methodology) எழுதி-பேசி செயல்பட்டு வருகின்றனர்.
Why did Buddhism disappear from South Asia? Brahmin atrocities that destroyed Buddhism in the Subcontinent, Posted on February 3, 2008 by Moin Ansari
http://rupeenews.com/2008/02/03/why-did-buddhism-disappear-from-the-south-asian-subcontinent-summary-of-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

http://www.lankaweb.com/news/items/2013/01/26/why-did-buddhism-disappear-from-south-asia-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

Pushyamitra Sunga accused of destroying Buddhism

நவீன பௌத்தர்களின் எழுத்துகளுக்கு ஒரு உதாரணம், இதோ. மேற்சொல்லப்பட்ட உதாரணங்களுடன், புதியாதாக சேர்க்கப்பட்டுள்ளது: ஸ்ரவஸ்தியின் அரசன் விரூதகன் 90,900,000 சாக்கியர்களை கொன்றுபோட்டான், அதனால் ரத்த குளங்களையே உண்டாக்கினான்.
Kyotsu Hori (Complier) & Jay Sakashita (Ed.), Writings of Nichiren Shonin, Doctrine.3, Hawaii, USA, 2004, p.122.
http://books.google.co.in/books?id=q2ADA_3Q4PAC&pg=PA122&lpg=PA122&dq=sasanka+kill+buddhists&source=bl&ots=gzpv06hoPX&sig=mDM3s8GObnp2VA0aUO2PnABiHcU&hl=en&ei=ESe7SoeYCsrUlAePuJSkDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4#v=onepage&q=&f=false

சித்தாந்தவாதிகளின் சரித்திரம் (Ideologized history): குறிப்பாக வெகுஜன வகுப்புவாதத்தை / அடிப்படைவாதத்தை (majority communalism / fundamentalism, read as Hindu communalism / fundamentalism) எதிர்க்கும் போக்கில் மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்கள் (Marxist historians) என்று கூறிக்கொள்ளும், கர்கி சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுவதாவது, “ஹிந்து ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையினைப் பற்றி ஒரு கட்டுக்கதை மிகவும் சாமர்த்தியமாக ஊக்குவிக்கப்படுகிறது. வாருங்கள், இரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கு செல்வோம். திவ்யவதன என்ற இரண்டாம் நூற்றாண்டு நூல் புஸ்யமித்திர சுங்கன் ஒரு பெரிய பௌத்தமத தண்டனையாளன் (Buddhist persecutor) என கூறுகிறது. சிலுவைப்போரைப் போன்று (crusading army) ஒரு பெரிய சேனையுடன் சென்று, அவன் ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்.
அந்த அழிவு சகல, இக்காலத்தைய சியால்கோட் வரையிலும் சென்றது. அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான். இது மிகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது என்றாலும், புஸ்யமித்திரனுக்கும் பிக்குகளுக்கும் இடையே இருந்த கொடிய பகைமையை மறுக்கமுடியாது”.
Gargi Chakravartty: “BJP-RSS and Distortion of History”, in Pratul Lahiri, ed.: Selected Writings on Communalism, People’s Publishing House, Delhi 1994, p.166-167.
http://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/pushyamitra.html

A Brahmin attacked Buddha

இங்கு குறிப்பாக எதையும் சொல்வதில்லை. “ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்றுதான் உள்ளது. உடனே, மற்றொருவர் அதை குறிப்பிட்டு “பல ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்று எழுதுவார். அடுத்த இன்னொருவர், முன்னிருவரைக் ஆதாரமாகக் குறிப்பிட்டு, “ஆயிரக்கணக்கான”, “பல ஆயிரக்கணக்கான” என்று நீண்டுகொண்டே இருக்கும்.
Swami Dharma Theertha, The Menace of Hindu Imperialism, Har Bhagwan Happy Home Publication, Lahore, 1946. See chapter.X, “How Brahmanism killede Buddhism, pp.94-110.
Ahir, V. T. Rajasekhar முதலியவர்களின் புத்தகங்களைப் பார்க்கவும்.
மேனாட்டு/ஆதிக்கசக்திகளான ஆங்கிலேயர்களும் தமது பங்கை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, இ. பி. ஹேவல் என்பவர் அத்தகைய குறிப்புகளைத் தந்துள்ளார், “The earliest of these Saiva revivalists was Maikka-Vacagar, minister of one of the Pandyan kings of Madura about the sixth century A. D. He came to be known as the Hammer of the Buddhism”.
E. B. Havell, The History of Aryan Rule in India from the earliedst times to the death of Akbar, (1918),  K.M.N. Publishers, New Delhi, 1972.

இக்கதைகள்-கட்டுக்கதைகளின் தோற்றம்: திவ்யவதன, அசோகவதன போன்ற பௌத்த மத நூல்கள் (இடைகாலம் வரை திருத்தி எழுதப்பட்டவை-இவையெல்லாம் பல அதிசயங்கள், இயற்கைக்கு புறம்பான நிகழ்ச்சிகளைக் கொண்ட விவரணங்களைக் கொண்ட நூல்கள்), பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) என்ற சைன பௌத்த துறவியின் இந்திய யாத்திரைக் குறிப்புகள். தாரநாத என்ற திபெத்தின் பௌத்த பிக்குவின் நூல். குறிப்பாக யுவான் சுவாங் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அக்கதைகள் வளர்ந்துள்ளன. தங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாதகமானதை விடுத்து, தமது சரக்கையும் சேர்த்து இவ்வாறான கதைகளை புனைந்துள்ளனர். அக்கதைகள் “மிகைப்படுத்திக் கூறப்பட்டது” என்றாலும், “பௌத்தம் இந்தியாவில் மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டது” என்பதனால், அது அவ்வாறு “மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டத”ற்கு காரணம் கற்பிக்க ஒன்று இருக்கவேண்டும் என்பதினால், இத்தகைய கட்டுக்கதைகள் உற்சாகத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், “இஸ்லாமிய கத்தி”யை (Sword of Islam) மறைக்க, மறக்க இந்த தோற்றுவிக்கப்பட்ட “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) தாராளமாக உதவுகிறது. குற்றங்களை மறந்து மறைக்கும் சித்தாந்தவாதத்திற்கும் (negationaism) உதவுகிறது.

தினார்களா, தங்க நாணயங்களா? கர்கி சொல்கிறார், “அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான்”, என்று. இன்னொரு மொழிபெயர்ப்பிலேயோ (Beal, Watters etc), “ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள்
தரப்படும் என்று அறிவித்ததாக….” கூறப்படுகிறது.
http://projectsouthasia.sdstate.edu/docs/HISTORY/PRIMARYDOCS/FOREIGN_VIEWS/CHINESE/XuanZang/BookIV.htm
இன்னொருவர் சொல்கிறார், “100 தங்க நாணயங்கள் அளிக்கப் படும்” என்று. எவ்வாறு, தீனார், தங்கமாகி, தங்க நாணயங்களாக மாற முடியும்? தீனார்கள் சுங்க காலத்தில் இல்லை. ஆகையால் தினார்கள் இந்தியாவில் வழக்கில் இருந்த காலத்தில், இது எழுதப்பட்டது தெரிகிறது. அதாவது, பிற்கால இடைசெருகல் எனத்தெரிகிறது.

விஹாரத்தைக் கட்டிய புஸ்யமித்திர சுங்கன்: திலாதக/திரா-சக/தீலா-சாக்ய என்ற விஹாரம் பிம்பிசாரன் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசன் கட்டினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கடைசி அரசனோ புஸ்யமித்ர சுங்கன்! பிறகு எப்படி விஹாரங்களை இடிப்பவன், விஹாரத்தைக் கட்டியிருக்க முடியும்?
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.II, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.106-107.
இது மாதிரி, பல முரண்பாடுகள் யுவான் சுவாங் வர்ணனைகளில் உள்ளன.

பௌத்த அமைச்சர்களைக் கொண்ட புஸ்யமித்திர சுங்கன்: புஸ்யமித்திரன் அந்த அளவிற்கு பௌத்த-விரோதியாக இருந்திருந்தால், பௌத்த அமைச்சர்களைக் கொண்டிருக்க மாட்டான். உண்மை சொல்வதானால், அவன் காலத்தில்தான் பௌத்தம் நன்றாக செழுமையாக இருந்தது என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. கல்வெட்டுகள் சொல்லும் புஸ்யமித்திரன் நினைவு சின்னங்களை எழுப்புகிறான்: சாஞ்சி மற்றும் பஹ்ருத் முதலிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் இவன் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, பஹ்ருத்தில் உள்ள பௌத்த கல்வெட்டு, “சுங்க அரசன்….தோரணம் மற்ற சிற்பங்களுக்கு தானம் கொடுத்து உருவாக்கினான்” (Suganaṃ raje… dhanabhūtina karitaṅ toranāṃ silā-kaṅmaṅto ca upaṃṇa)
D.C. Sircar (ed), Select Inscriptions Bearing on Indian History and Civilization, Vol. 1, 2nd rev and enlarged ed, Calcutta: University of Calcutta, 1965: 87.
என்ன இது, பிராமண சுங்கனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது, யுவான் சுவாங் தவறாக எழுதி விட்டாரா? மகதத்திலிருக்கும் சுங்கன் பஹ்ரூத் வரை வந்து, பௌத்தர்களின் தலைக்கு தீனார் என்று பிரகடனப் படுத்தியபிறகு, ஏன் இந்த தாராளத்தனம்? எனவே, இக்கதைகளை ஊக்குவிப்பவர்கள் பல உண்மைகளை மறைக்கிறார்கள் எனத்தெரிகிறது.

Decline of Buddhism in India

சுங்ககாலத்தில் பெருகிய விஹாரங்கள்: இலங்கையின் தீப/மஹாவசங்கள் சுங்ககாலத்தை ஒட்டிய தத்தாகமணி (circa 101-77 BCE) காலத்தில் பீஹார், அவத், மால்வா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விஹாரங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றன. ஆகவே, புஸ்யமித்திரன் தண்டித்ததாக திவ்யவதன மற்றும் தாரநாத நூல்களில் காணப்படும் கதைகள் அபத்தமானவையாகும்.
Mitra, R.C. The Decline of Buddhism in India, Santiniketan, Birbhum: Vishva Bharati, 1954, p.125.

அதுமாதிரியே அவன் படையுடன் சென்று அழித்தது, 100 தினார்கள் கொடுப்பதக்க அறிவித்தது முதலியனவும் “தெளிவாக பொய்” எனத்தெரிகிறது “is manifestly false.”
Devahuti, D. Harsha: A Political Study, third revised edition, New Delhi: Oxford University Press, 1998, p.48.

Yuan Chwangs Travels in India

சசாங்கன்: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை (போதி மரம்) அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் களைத்துவிட்டான். என்றெல்லாம் எழுதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காலத்தால் வேறுபட்ட இந்த மன்னர்களை தனது காலத்தைச் சேர்ந்தவர்கள் போன்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi, 2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial Guptas.
“பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” (J. R. A. S., 1893, p.147).

ஆகையால், சசாங்கன், ஒரு சிவன் பக்தனாக, ஆனால் பௌத்தத்தை அடக்குவதாக இருப்பவன் ஆனால், அவன் எவ்வாறு தனது கர்ணசுவர்ன என்ற தலைநகருக்கு அருகில் இருந்த பிரபலமான ரக்தமித்ரிகா விஹாரத்தை விட்டுவைத்தான்? மேலும் யுவான் சுவாங் கூறுவதாவது,கர்ணசுவர்னவாவில் பத்து விஹாரங்கள் மற்றும் 2000 பிக்குகள் இருந்தனர் என்பது.
Thomas Watters, On Yuan Chwang’s Travels in India, London, 1904-05, pp.191-192.

அதே யுவான் சுவாங் சசாங்கன் இறந்த பிறகு, அந்த விஹாரத்தின் செழுமையைப் பற்றி புகழ்கிறார் (மூர்ஸிதாபாத் மாவட்டத்தில், சிரூதி என்ற இடத்தில் அதன் இடிபாடுகள் இப்பொழுது உள்ளன). நிச்சயமாக, அந்த பௌத்த யாத்திரியின் பார்வை மதமோஹத்தில் பாரபட்சத்துடன் நோக்கவைத்துள்ளது என நன்றாகத் தெரிகிறது. பௌத்தர்களும் அத்தகைய மதவிரோதத்துடன், மஹேஸ்வரனும், கௌரியும். திரிலோக்யவிஜய என்னும் பௌத்த கடவுளின் கால்களில் மிதிபடுவதைப்போன்று சித்தரித்துள்ளனர்.
Bratindra Nath Mukherjee, Nationhood and statehood in India: a historical survey, Rajiv Gandhi Foundation, Indian Council of Social Science Research. North Eastern Regional Centre, 2001, p.76.

Adi sankara - accused of for disappearance of Buddhism

சசாங்கனை எதிர்த்த குப்தர்கள்: யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார், “மோ-ஹி-லோ-கு-லோ (மிஹிரகுலன்) தனது பொழுதுபோக்கிற்காக பௌத்தமதம் கற்க ஆசைப்பட்டான். அதனால் ஒரு தலைச்சிறந்த பிக்குவை தனக்கு பௌத்தத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்படி பணித்தான். ஆனால், பௌத்தர்களோ அவனது வேலைக்காரனையே அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் கொண்ட மிஹிரகுலன், பௌத்தத்தை அழிக்கத் துணிந்தான். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த பாலாதித்யன் என்ற குப்த மன்னன் பௌத்தர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பல உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருந்தான். மிஹிரகுலன் அவனது பகுதியின் மீது படையெடுத்தபோது, பாலாதித்யன் அவனை சிறைப்பிடிக்கிறான். ஆனால், தனது தாயாரின் அறிவுரைப்படி அவனை விடுவிக்கிறான். காஷ்மீரத்திற்கு தப்பிச் செல்லும் அவன், அந்த நாட்டு மன்னனைக் கொன்று தனது பௌத்த-விரோத கொள்கையினை தொடங்குகின்றான். 1600 ஸ்தூபிகள் மற்றும் விஹாரங்களை அழிக்கிறான். ஒன்பது பௌத்தர்களைக்கொல்கிறான். ஆனால், அவனது காலம் திடீரென்று முடிகிறது. வானம் கருக்கிறது, பூமி நடுங்குகிறது, பலமான காற்று வீசுகிறது, அவன் நரகத்திற்கு செல்கிறான்”.
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.I, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.288-289.

மிஹிரகுலன் இறந்தது 619 அல்லது 637 எனக்கருதப்படுகிறது. ஆகவே, பௌத்தர்களின் பரம எதிரிகள்-இந்துத்வா-தூக்கிகள் என இப்பொழுது
வர்ணிக்கப்படும் குப்தர்கள் எப்படி பௌத்தர்களுக்கு உதவி இருக்க முடியும்? மேலும் வேடிக்கைகள் பல உள்ளன. அத்தகைய குப்தர்கள் பிராமணர்களின் அடிவருடிகளாகச் சித்தரிக்கப் பட்டாலும், புத்த குப்தன், தத்தகாத குப்தன், பாலாதித்யன் என வரிசையாக வரும் குப்தர்கள் பௌத்தமதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள், வளர்க்கிறார்கள்! “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ அவ்வாறு திடீரென்று குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர். ஹூணர்களின் படையெடுப்பால்தான் அவர்கள் மறைந்து போகின்றனர். பிறகு சுமார் 220 வருடங்கள் ஆண்ட குப்தர்களுக்கும் (320-540), 160 ஆண்டுகள் ஆண்ட தோரமானன்-மிஹிரகுலன்களுக்கும் (478-637) என்ன வேற்றுமை?

சிவனுடைய ஆணையின்படி புத்த கோவில்கள் கட்டும் பிராமணர்கள்: சசாங்கன் புத்தரின் சிலையை எடுத்துவிட்டு, சிவனுடைய சிலையை வைக்க முயன்றான், ஆனால் முடியவில்லை என்று சொல்லும் அதே பத்தியில் மேலே யுவான் சுவாங் குறிப்பிடுவதாவது, “இந்த கோவில் பனிமலையில் இருக்கும் சிவனின் அறிவுரையின்படி, ஒரு பிராமணன் கட்டினான். அருகிலுள்ள குளத்தை அவனது சகோதரன், சிவனின் ஆணையின்படி கட்டினான்”. இதையெல்லாம் முற்றும் உணர்ந்த சரித்திர ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. தமக்கு சாதகமாக இல்லை என்றால் அந்த வரிகளைக் ககறிப்பிட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிய்ம், சாதாரணமாக யாரும் யுவான் சுவாங் எழுதியதை எடுத்து படுத்து அவ்வாறே உள்ளதா-இல்லையா என்று யாரும் பரிசோதிக்க மாட்டார்கள் என்று! இவ்வாறு பிராமணர்கள், புத்தனுக்காக கோவில்-குளம் கட்டும்போது, எதற்காக அவர்கள் சசாங்கனைத் தூண்டி இடிக்கவைக்கவேண்டும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் நோக்கவேண்டும். சசாங்கனுக்கும், ஹர்ஷவர்த்தனுக்கும் இடையே இருந்த பகைமை அறிந்ததே. ஆகையால் பௌத்தர்கள் ஹர்ஷவர்ததனுடன் கூட்டு சேர்ந்து சசாங்கனுக்கு எதிராக சதி செய்திருக்கலாம். அந்நிலையில் எந்த அரசனும் அத்தகைய குழுவைத் தண்டிக்கத்தான் செய்வான்.
R.G. Basak, The History of North-eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of the Pāla Dynasty of Bengal, 2nd rev and enl ed, C.A.D. 320-760, Calcutta: Sambodhi Publications, 1967: 154-56.

பௌத்தர்கள், இந்தியா முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பாக இருந்தது. நாட்டின் பல இடங்களில் பரவியிருந்த விஹாரங்கள் மூலம், மகதத்தின் அரசியலில் அளவுக்கு அதிகமாகவே தலையிட்டுள்ளனர். ஆகையினால் பௌத்த மௌகாரிகள், பிராமண கௌடர்களுக்குச் சாதகமாக மகதத்திலிருந்து வெளியேற்ற பட்டிருக்கலாம். இதனால், பௌத்தர்களிடையே சசாங்கனுக்கு மதிப்புக் குறைந்தது எனலாம்.
B.P. Sinha, The Decline of the Kingdom of Magadha (Cir. 455-1000 A.D.), Bankipore: Motilal Banarsidass, 1954: 259.

தேவஹூதி என்பவரும் யுவான் சுவாங் கதையினை மறுத்துள்ளார்.
D. Devahuti, Harsha: A Political Study, third revised edition, Delhi:
Oxford University Press, 1998: 48.

வேதபிராகாஷ்
24-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பிக்குனிகளை மடாலயங்களில் சேர்த்துக் கொண்டாதால் உண்டான விளைவுகள் (7)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பிக்குனிகளை மடாலயங்களில் சேர்த்துக் கொண்டாதால் உண்டான விளைவுகள் (7)

Buddha and women

பெண்களும், பௌத்தமும்: பாலி எழுத்துகளில், வினய மற்றும் இதர சுத்தங்களில் எங்குமே புத்தரின் தனிமட்ட மனிதரின் கவர்ச்சியால் பெண்கள் அதிக அளவில் சங்கத்தில் சேர்ந்தனர் என்பதற்கான எந்தகுறிப்பும் இல்லை.

Eliot, Hinduism and Buddhism, London, 1921, Vol.I, p.248.

  1. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen, Motilal Banarasidas, New Delhi, 1999, p.96.

பெண்கள் பௌத்தத்தில் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், புத்தரைப் பின்பற்ற பெண்கள் வந்தனர் என்பது உண்மை.

பெண் துறவு விசடத்தில் ஜைனத்தின் தாக்கம்: நிச்சயமாக, ஜைன மதத்தின் தாக்கத்தால், பௌத்ததில் பிக்குனிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் எனலாம். மஹாவீரர் தன்னுடைய காலத்திலேயே, தன்னைப் பின்பற்றுபவர்களை நான்கு பிரிவுகளாகக் கொண்டார்:

  1. ஆண்துறவியர்.
    2.        பெண்துறவியர்.
    3.        புதிதாக மதத்தில் சேர்ந்த ஆண்கள்.
    4.        புதிதாக மதத்தில் சேர்ந்த பெண்கள்.

இதோ போல, பௌத்தர்களும், பெண்துறவியரை தமது இயக்கத்தில் / சங்கத்தில் சேர்த்துக்கொண்டனர்.

புத்தரின் முதல் மறுப்பும், பிற்படி அனுமதியும்: “பிக்குனிகள்” – பெண் பௌத்த சந்நியாசிகளை உருவாக்குவதில் அதிலும், சங்கத்தில் சேர்ப்பதை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தார். ஏனெனில், ஆண்பிக்குகள் வழிதவறி நடந்தால் நடக்கும் நிலையை அறிந்தே அவ்வாறு அம்முறையை மறுத்து வந்தார். இருப்பினும், ஆனந்தா என்ற அவருடைய, மிகவும் விசுவாசமான சீடனின் வேண்டுக்கோளுக்கு இணங்கி பெண்களை பிக்குனிகளாக ஏற்றுக்கொள்வதை ஆமோதித்தார். இருப்பினும் அவர் சொன்னதாவது, “இது சங்கத்தின் காலத்தைக் குறைக்கப் போகிறது” என்பதாகும். இதனால், அவர்களுக்கு மிகவும் கடினமான சட்டதிட்டங்களும், கட்டுப்பாட்டு விதிமுறைகளும் விதிக்கப்பட்டன. “பிக்குனி பதி மோக்க” (பிக்குனியின் மோக்ஷப் பாதை) என்று அவர்களுக்குத் தனியாக விதிமுறைகள் இருந்தன. அவர்களுடைய சென்று-வரும் இயக்கம், வசிக்கும் இடங்கள் முதலியன கவனமாகக் கண்காணிக்கப்பட்டன.

Buddha and women-2

பிக்குனி பதி மோக்க” (பிக்குனியின் மோக்ஷப் பாதை) விதிகள்: அத்தகைய கட்டுபாடுகள் (சுல்ல வக்க, வினய பீடிக):

  1. பிக்குனி எவ்வளவு வயதானாலும், பிக்குவிற்கு மரியாதைச்  செல்லுத்த வேண்டும், ஆனால், பிக்கு அவ்வாறு பதிலிற்கு செய்யவேண்டியதில்லை.
  2. “வஸ”காலத்தை, பிக்குனிகள், பிக்கு இல்லாமல் கழிக்கக்கூடாது.
    [பிக்குனி, எந்த காரணத்திற்கும் மடாலயத்தில் பிக்குகள், அவர்கள்
    இருந்தாலும், இல்லையென்றாலும், வசிக்கும் இடத்திற்கு / இடத்தைக் கடந்து செல்லக் கூடாது.]
  3. “உபோசதா” சடங்கு எப்பொழுது நடக்கும் என, பிக்குவிடமிருந்து
    கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும், மற்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் நாளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
  4. “பாவர்னா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குனி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.
  5. “மானத்தா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்படது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குனி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.
  6. “பிக்குனி பதி மோக்க” விதிமுறையின்படி, ஆறு பசித்தியா விதிகளில் பயிர்ச்சி பெற்ற பிறகு, “உபசம்பதா” முறையிலும் இரண்டு சங்கங்களிலும் தனித்தனியாக பயிர்ச்சி பெறவேண்டும்.
  7. பிக்குனி, ஒரு பிக்குவை திட்டவோம் நிந்திக்கவோ, தூஷிக்கவோ கூடாது.
  8. பிக்குனி, ஒரு பிக்குவை கடிந்து கொள்ளவோ, குறைகூறவோ கூடாது. மேற்குறிப்பிட்ட “உபோசதா” மற்றும் “பாவர்னா” தேதிகளை குறிக்க பிக்குகளிடன் வாதிடக்கூடாது. ஆனால், பிக்குகள், பிக்குனிகளை கடிந்து கொள்ளலாம். [இந்த “பாவர்னா” என்ற முறை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிறகு கிருத்துவத்தில் “பாவ-மன்னிப்புக்கோரல்” (confession) என்றாகியதா எனநோக்கத்தக்கது. பௌத்தத்திலிருந்து, கிருத்துவம் உருவானது, பெறப்பட்டது என பல அறிஞர்கள் ஏற்கெனவே எடுத்துக்காட்டியுள்ளனர்.]

Buddha and women-3

பிக்குனிகளுக்கு விதிக்கப்பட்ட இதர தடைகள்: பிக்குனிகள், காடுகளில் வசிக்க அனுமதி அளிக்கப்படவில்லை, ஆனால் வெளிப்புற வீடுகள் மற்றும் ஆஸ்ரமங்களில் வசிக்கலாம். குளிப்பதற்கு, அலங்கார பொருட்கள் உபயோகிப்பதற்கு பல தடைகள் இருந்தன. பிக்குகள் மற்றும் பிக்குனிகளுக்கு இடையே உணவு, ஆடை, மற்றும் இதர பொருட்கள் கொடுக்கல்-வாங்கல் செயல்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தன.

Ramesan, Glimpses of Buddhism, A.P. Govt. archaeological series No.2, Hyderabad, 1961, pp.187-189.

நடைமுறை பிரச்சினைகள்: “பாவமன்னிப்பு” போன்ற சடங்குகள், அதுவும் பிக்குனிகள் பிக்குகள் முன்பு செய்யவேண்டும் என்பன, பிக்குகள் பிக்குனிகளை அடக்கியாள ஏதுவாயிற்று எனத்தெரிகிறது. மேலும், மேற்காணும் விதிக்கப்பட்ட எட்டு விதிகளும், பிக்குக்களுக்கு சாதகமாக உள்ளதை காணலாம். அதாவது “ஆணாதிக்கரீதியில் உள்ளதை தெரிந்து கொள்ளலாம். இதனல்தான், அத்தகைய அடக்குமுறைகளை தாங்காமல், சில பிக்குனிகள் சங்கத்தை விட்டு விலக நேரிட்டத்து என்ற குறிப்பிகளும் கானப்படுகின்றன. இதிலிருந்து, பெண்கள் சந்நியாசிகளாக அனுமதிக்கப்பட்டது, பௌத்தத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது தெரிகின்றது. விஹாரங்களில் ஆண்-பெண் துறவிகள் இருப்பது, அவர்கள் பல நேரங்களில் சந்தித்துக் கொள்வது, பேசுவது, தமது பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்வது முதலிய காரியங்கள் நிச்சயமாக கட்டுப்பாடுகளை மீற வைக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கலாம். இதை மனத்தில் வைத்துகொண்டுதான், புத்தர் முதலில் பெண்கள் சங்கத்தில் சேருவதை ஊக்குவிக்கவில்லை.

Buddha and women-4

ஜைனபௌத்த பெண் சந்நியாசிகள்வேறுபாடு: ஜைனத்தில், பெண்சாமியார்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். மொட்டை அடித்துக்கொண்டு, தீட்சை பெற்றுவிட்டால், அவர்கள் உண்மையிலேயே கடுமையான துறவர வாழ்க்கையினை நடத்தியாக வேண்டும். முக்கியமாக, அஹிம்சை சித்தாந்தத்தை முழு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், உணவு முறை கட்டுப்பாடு இருந்தது. அவ்வுணவு, எளிமையாக சாத்வீக ஆகாரமாக இருந்தது. அதாவது மனக்கட்டுப்பாட்டை தளர்க்கும், சலனத்தை ஏற்படுத்தும், உணர்ச்சிகளைத் தூண்டும் காய்கறிகள், பொருட்கள் உபயோகப்படுத்தி உணவு சமைக்கமுடியாது. ஆகவே, மாமிச உணவு என்பதற்கு பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் இருப்பிடம் தனியாக இருந்தது. பௌத்த பிக்குனிகளைப்போல, விஹார வாழ்க்கை வாழமுடியாது. பௌத்தத்தில், எவ்வாறு “மழைக்கு ஒதுங்கிய நிரந்தரமற்ற ஆவாஸ-ஆராம வாழ்க்கை”, பிறகு பற்பல வசதிகளோடு “நிரந்தர விஹார வாழ்க்கை” ஆனது என்பது ஏற்கெனவே விலக்கப்பட்டது. ஆகையால், பௌத்தத்தில், அத்தகைய கட்டுப்பாடுகள் முதலில் இருந்தாலும், பிற்பாடு தளர்ந்தது, பிரச்சினைகள் ஏற்பட்டது, பிக்குனிகள் சங்கத்திலிருந்து வெளியேறிது-வெளியேற்றப்பட்டதிலிருந்து நன்றாகவேத் தெரிகின்றது.

Buddha and women-5

பிக்குனிகள் சங்கத்தை விட்டு விலகுவது: பிக்குனிகள், சங்கத்தில் சேர்ந்த பிறகு, வெளியேருவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத காரியம். அவ்வாறு அவர்கள், சங்கத்தைத்துறப்பது என்றால், தமது முடிவை “மூன்று முறை” அறிவிக்கவேண்டும். ‘சந்தகாலி’, என்ற பிக்குனியின் வெளியேற்றம் மற்றும் இதர பெண்களின் வெளியேற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, பிக்குனிகள் சந்நியாசி வாழ்க்கையினைத் துறந்து, மறுபடியும் இல்லறத்தில் புகுந்ததாகத் தெரிகிறது. இதைத்தவிர, சங்கத்தைத் துறந்து செல்லும் மற்றொரு முறையும் இருந்தது. அது தற்கொலை செய்து கொள்வதுதான். சிஹா என்ற பிக்குனியின் தூக்குப்போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்ட குறிப்பு உள்ளது. டி லா வல்லி பௌஸின் என்பவர், எப்படி சில பிக்குகள் தமது கழுத்துகளை அறுத்துக்கொண்டனர் என்று குறிப்பிடுகின்றார்.

de la Vallee Pousin, Nirvana, Paris, 1925, p.22.

Mara attacking Buddha Amaravati 2nd cent CE

மேத்தியா என்பவன், பெண்களை அவதூறாக பேசியதற்காக, சங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாக, குறிப்பிடப்படுகிறது.

[இத்தகைய முறையும், ஜைனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஜைனத்தில், பொதுவாக, உண்ணநோன்பு இருந்து தமது வாழ்க்கையினை முடித்துக்கொள்வர். சந்திரகுத மௌரியன், சிரவணபெலகோலாவிற்கு வந்து “வடக்கிருந்து” உயிர் துறந்தத்தை இங்கு நோக்கத்தக்கது. பௌத்தத்தில், பிறகு, தற்கொலை என்பது குறைந்த அளவில் அத்தகைய தண்டனையாக அல்லது உயிர்துறப்பதாகக் கொள்ளலாம். எது எப்படி இருப்பினும், அஹிம்சை போதிக்கும் இம்மதங்கள் இத்தகைய “ஹிம்சா-முறைகளை” மதத்தை / சங்கத்தை / இயக்கத்தைத் துறப்பதற்கு விதித்துள்ளது வினோதமே. தற்கொலை எண்ணம் எழுவது, அச்செயலைத் தூண்டுவது, செய்விப்பது முதலியன மனோதத்துவ ரீதியில் உள்ள விஷயங்கள் ஆகும். அது நிச்சயமாக அஹிம்சா முறையற்ற-நன்முறையற்ற வன்முறை-தீவிரவாத எண்ணங்களை மனத்தில் விதையிட்டு, வளர்க்கும், ஊக்குவிக்கும் முறையாகும். [பெண்கள் சங்கத்தைத்துறக்க மூன்றுமுறை தமது முடிவை அறிவிக்கவேண்டும் என்பதும், இஸ்லாத்தில், ஒரு மனைவியை விவாகரத்து செய்யும்போது, மூன்றுமுறை அவ்வாறு அறிவிப்பது நோக்கத்தக்கது].

பஹ்ருத், தக்ஸசிலா, அமராவதி, அஜந்தா, எல்லோரா முதலிய சிற்பங்கள் மற்றும் சித்திரங்களை வைத்துப் பார்க்கும்போதும், அங்கிருந்த மடாலயங்களில் இருந்த வசதிகளைப் பார்க்கும்போதும், பிக்குகள் “விஹார வாழ்க்கையை” மிகவும் வசதியாகவே வாழ்ந்தது தெரிகிறது. அதுமாதிரியே, பிக்குனிகளும் வாழ்ந்துள்ளனர். எனவே, புத்தர் எதிர்பார்த்தபடியே, பிக்குனிகளை சங்கத்தில் அனுமதித்தது, சங்கத்தின் காலத்தைக் குறைத்துவிட்டது என்றே தெரிகிறது.

வேதபிரகாஷ்
23-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Mara attacking Buddha Amaravati 2nd cent CE-2

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (4)

Mahavira and Buddha.looking alike

ஜைன-பௌத்த சந்திப்புகள், உரையாடல்கள் மற்றும் எதிர்ப்புகள்: ஜைனம் பௌத்தத்திற்கு முற்பட்டது என்பதில் சரித்திர ரீதியாக எந்த ஐயமும் இல்லை, ஆனால் சரித்திர ஆதாரம் தான் இல்லை, அதாவது ஜைன காலத்தைச் சேர்ந்த எழுதபட்ட ஆவணங்கள் / கல்வெட்டுகள்தாம் இல்லை. எனவே, மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள், ஜைனத்தின் தொன்மை மற்றும் சரித்திரத்தை மறைத்து விட்டனர். பாவம், ஜைனர்களும் எழுத்தறிவு இல்லாமலேயே பலதுறைகளிலும் வல்லவர்களாக இருந்தனர்! அது எப்படி என்பதைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பலருக்கும் ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் மட்டுமன்றி, அவர்களது மதத்தலைவர்களான மஹாவீரர் மற்றும் புத்தர் இவர்களின் உருவ சிலைகளிலும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாமல் சிரமமாகவே இருந்தது.

Brahmachari Sital Prasadji, A Comparative Study of Jainism and Buddhism, The Jaina Mission Society, Madras, 1932, p.286-287.

எழுத்தறிவு இல்லாமல் எப்படி சிற்பங்கள் செதுக்கப்பட்டன?: எப்படி ஜைன சிற்பங்கள் பௌத்த சிற்பங்கள் என்று அடையாளங்காணப்பட்டு, ஜைனத்தின் கலை மற்றும் அதன் தொன்மையினையும் மறைத்தனர். சிற்பக்கலை இந்தியாவில் அந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கவில்லை என்றால், சிற்பிகள் அத்தகைய உயிரோட்டமுள்ள மஹாவீரர்- புத்தர் சிலைகளை வடித்திருக்க முடியாது. அது மட்டுமல்லாது, இந்திய எழுத்துமுறை அசோகன் காலத்தில்தான் திடீரென்று பிறந்தது என்ற வாதத்தை வைத்துக் கொண்டு, இம்மாதிரி காலகக்கணக்கீட்டைக் குறைத்து சரித்திரத்தையும் குறைக்கின்றனர்.

* கல்வேலை தெரிந்தவர்களுக்கு, சிற்பங்களை வடிப்பவர்களுக்கு எழுததெரியாமலா போய்விடும்?

* கணிதம், வடிவக்கணிதம், வடிவமைப்பியல், பாறையியல், உலோகவியல், நுணுக்கமான கருவிகளை உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றை அறிந்தவர்கள் எழுத்தெரியாத மண்டுகளாக மண்டுகளாக இருந்துள்ளனர் என்பது சரித்திர புதிரே!

9வது-7வது BCE நூற்றாண்டுகளில் ஜைன கலை-கட்டிடங்களைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை!

இருப்பினும், ஜைன பண்டிதர்கள் ஜைனத்தின் கலை-கட்டிடங்களின் தொன்மை சிந்துசமவெளி நாகரிகத்திற்கு செல்கிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்.
“பசுபதி” எனப்படுகின்றவர்தாம், ரிஷபதேவராகிய முதல் தீர்த்தங்கரர். ஜோஸப் காம்பெல், ஜான் கொல்லர் முதலியோரும் அத்தகையக் கருத்தை வைத்துள்ளனர்.
Joseph Campbell, Oriental Mythology, The Viking Press, New York, 1962, pp.219-220.
John Koller, The Indian Way, MacMillan Publishing Co., New York, 1982, p.113.

இதன்படி பார்த்தால், ஜைனத்தின் தொன்மை 2250-1950 BCE காலத்திற்கு செல்கிறது. ஆகவே, அது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்தியதரை நாடுகளில் பரவியது சாத்தியமே. இ. ஜே. தாமஸ் மற்றும் ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் என்பவர்களின் ஆராய்ச்சியின்படி புத்தருக்கு முன்பு, வெளிநாட்டவர், ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, என்பதாகும்.
Edward J. Thomas, Life of Buddha, 1927,
J. G. R. Forlong, Science of Comparative Religions, 1877

Greek philosophers

மேனாட்டவர் ஜைனத்தின் தொன்மையினை மறைத்தது, பௌத்தத்தின் காலத்தைக் குறைத்தது: இ. ஜே. தாமஸ் தமது “புத்தரின் வாழ்க்கை” என்ற நூலில் (1927 வருட பத்திப்பு), கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        இந்தியாவில் “ஜிம்னோஃபிஸ்டுகள்” அல்லது திறந்தமேனி சாமியார்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் பௌத்தர்கள் இல்லை (முன்னுரை, ப.XIV).

•        மனிதனுக்கு வேண்டிய தத்துவங்கள் எல்லாம், அந்த திகம்பர இந்தியர்களிடம் இருந்தன (ப.104).

•        ஸ்டிராபோ, “சர்மன்”களை “ஜெர்மன்”கள் என்றும், பர்பைரியஸ் சுமரியன்கள் என்றும் குறிப்பிட்டனர். அந்த சாமியார்கள், ஜைனம் அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் (ப.105).

•        அலெக்ஸ்சாந்தர் தக்ஸசீலத்தில், இத்தகைய நிர்வாண துறவியர்களைப் பார்க்க நேரிட்டது. அவர்களைப் பிடித்தபோது, அவர்களுள் டௌலானஸ் என்ற வயாதானவர் அலெக்ஸ்சாந்தருடன் செல்ல மறுத்ததுடன், மற்றவரையும் அவனுடன் செல்ல தடுத்தார். பிறகு கலானஸ் என்பவனை வெற்றிக் கொண்டு பிடித்துச் சென்றதாகத் தெரிகிறது (ப.115).

•        “சாக்ரடீஸ் ஆத்மாவானது, எவ்வாறு ஒரு பறவை கூண்டில் அடைப்பட்டிருக்கிறதோ, அது மாதிரி, உடலில் சிறையிடப்பட்டுள்ளது என்கிறார். இது பைதகோரஸின் தத்துவத்தைச் சார்ந்திருக்கிறது. பைத்தாகோரஸ்
இந்தியாவிற்கு சென்றிருந்ததால், அத்தகைய தத்துவம் இந்தியாவினின்று பெறப்பட்டது என நம்பப்படுகிறது” (ப.122).

Alexander meeting gymnophists -medieval period

ஜெ. ஜி. ஆர். ஃபோர்லாங்க் “விஞ்ஞான ரீதியில் மதங்களின் ஒப்புமை” என்ற தமது நூலில், கீழ்காணும் விவரங்களைத் தருகிறார் (வசதிற்காக, பக்க எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன).

•        “திபெத்தியர், மங்கோலியர் மற்றும் சீனர்களின் கோதமர் ஒரு ஜைனராக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏனெனில் அவர்கள் 10-11 BCE நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். திபெத்தியர் அவர் 916ல் பிறந்து, 881ல் புத்தனாகி தனது 35வது வயது வரை போதனை செய்து 851 BCEல் இறந்ததாக குறிப்பிடுகின்றனர். இது பார்ஸவ முனிவரின் காலத்தை ஒட்டிவருகின்றது” (முன்னுரை, ப.XIX). [இது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட சரித்திர தேதிகளை ஒத்துபோகவில்லை என்பது நோக்கத்தக்கது].

•        “பௌத்தம் சரித்திர வழிகளில் எந்த அளவிற்கு கிருத்துவத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்? நமது விசாரணையை ஜைனத்தையும் இணைத்து பார்க்கவேண்டும், ஏனெனில் அது மற்ற மதங்களையும் விட முந்தையது. பல கோடி மக்களின் மதமாக இருந்திருந்தாலும், ஐரோப்பாவில் சிலருக்கே தெரிந்திருந்தது” (ப.2).

•        “அசோகனும் ஜைனர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டவில்லை, ஏனெனில் தனது ஆட்சிகாலத்தில் 12ம் வருடத்தில் தான் தனது மதநம்பிக்கையை பிரகடனப் படுத்திக் கொள்கிறான். ஆகையால் அவனது கல்வெட்டு சாஸனங்கள் எல்லாம் ஒரு ஜைன ஆட்சியாளரையேக் காட்டிகிறது” (ப.20).

•        அப்துல் ஃபஸலின் “ஐனி-அக்பரி” என்ற நூலின்படி, தனது பிரதிநிதி உஜ்ஜயினியில் 260 BCEல் இருக்கும்போது, தந்தை பிந்துசாரர் மற்றும் தாத்தா சந்திரகுப்தர் மகத பேரரசை ஆண்டு கொண்டிருந்தபோதும், அசோகன் காஷ்மீரத்தில் ஜைனத்தை ஆதரித்தான் என்பதாகும். புத்தன் இறந்து நூறு ஆண்டுகள் கழிந்தும், பௌத்தத்தைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை, ஏனெனில், அது ஜைனத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. அசோகன் அவர்களிடையேதான் தனது மென்மையான-மிருதுவான ஜைனத்தை வாழ்க்கையின் புனிதத்துவம், அமைதி, தர்மம், சகோதரத்துவம் முதலிய கொள்கைகளுடன் பரப்பி வந்தான். அதுமட்டுமல்லாது, தனது கல்வெட்டுகளில் ஜைனர்களுக்குப் பிரியமான, “தேவநாம் பியா திஸ்ஸா” (கடவுளுக்கு/தேவனுக்குப் பிரியமான திஸ்ஸா) என்றுதான் தன்னை அழைத்துக் குறிப்பிட்டுக் கொண்டான் (ப.29). [“அசோகனது கல்வெட்டுகள்” தேவநாம் பியா திஸ்ஸா மற்றும் அசோகன் என்ற இருவரது கல்வெட்டுகள் ஆகும். முன்னவர் ஜைன மதத்தைச் சேர்ந்த அசோகன் (கல்ஹனர் குறிப்பிட்டது), பின்னவர், பௌத்தத்தைச் சேர்ந்த அசோகன். ஆனால் வின்சென்டு ஸ்மித் வலுக்கட்டாயமாக இருவரும் ஒருவரே என்று வாதிட்டு, முன்னவரை மறைத்து விட்டான்].

Alexander meeting gymnophists 1470-80 CE

•        பிறகுதான், கௌதம சாக்கியமுனி போதிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஜைன-புத்த மதம் சித்தாந்தங்களுடனும், வழிமுறைகளுடனும் இந்தியாவில் பரவியிருந்தது வந்தது ………… நிச்சயமாக அது பார்ஸ்வ மற்றும் மஹாவீரருக்கு முன்பு இருந்தது………….. 7ம் நூற்றாண்டு BCEலிருந்து இந்தியா, அம்மதத்தின் மையமாக இருந்தது. இமாலயத்திற்கு அப்பால், ஓக்ஸியானா, பாக்டிரீயா, காஸ்பியானா முதலிய பகுதிகளில் – அதே மாதிரியான கருத்துகள் மற்றும் பழக்க-வழக்கங்கள் பரவ ஆரம்பிக்கும் நிலை இருந்தது. கீழ்திசை உலகத்தில் தமது சந்நியாசிகளை 7ம் நூற்றாண்டிற்கு BCE முன்பே உலாவர செய்தனர் என்று சரித்திர ரீதியில் தெரிகின்றது. சீனாவிலிருந்து காஸ்பியன் வரை ஜைன-பௌத்தம் போதிக்கப்பட்டது என்பதனை காரணங்களுடன் நாம் நம்பலாம்…………அது மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஓக்ஸியானா மற்றும் இமாலயத்தின் வடக்கில் இருந்தது” (ப.29). [மஹாவீரர் காலம் 599-529 BCE, ஆகவே மஹாவீரருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எனும்போது 2600 BCEல் / 4600 YBPல் அத்தகைய மதம் அங்கு இருந்தது என்ன என்பது ஆய்விற்குறியது].

•        ஆகையால்தான், நாம் ஜெல்மோக்ஸிஸ், பைத்தோகோரஸ் முதலியோர் 7வது-6வது BCE நூற்றாண்டுகளில் ஜைனர்கள்-பௌத்தர்களின் குருவான “புத்தர் போதித்தது” போன்று போதித்து வந்தனர் என்பதைக் காணமுடிகின்றது (p.32).

•        ஸ்டிராபோ, குறிப்பிடுவதாவது, “த்ரகியன் என்ற குழுமம் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தனர். மாசி எனப்படுகின்ற அவர்களது சகோதரர்கள் உயிருள்ள எதையும் உண்ணாமல் இருந்தனர்.” (p.32)

•        7ம் நூற்றாண்டில் BCE, ஹோமர் சொல்வதாவது, “அவர்களுள் பெரும்பாலோர் ……….. பாலைக்குடித்தே உயிர்வாழ்கின்றனர்……..பணத்திற்கு ஆசைபடுவதில்லை…….. ஜான் பாப்திஸ்து, ஏசு மற்றும் அவர்களது சீடர்கள் முதலியோர் அத்தகைய எஸ்ஸென் எனப்படுகின்ற ஆசியர்களைப் போன்றவர்களே (ஆசியாவைச் சார்ந்தவர்கள்)” (p.32).

•        ஜோஸஃபஸ் சொல்வதாவது, “இந்த எஸ்ஸென் சகோதரர் பழங்கால தேஸே மக்களைப் போன்று, அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை, மது அருந்துவதில்லை, வேலையாட்களை வைத்துக் கொள்வதில்லை, தனியாக வாழ்கிறார்கள், பலி-சடங்குகள் செய்வதில்லை, ஆனால் ஜைனர்களைப் போன்று ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதிக்கின்றனர்” (ப.32).

•        ஜெல்மோக்ஸிஸ் ஜைனர்களை விட அதிகமாகவே ஆத்மாவின் அழிவற்ற நிலையை போதித்துள்ளார் (ப.35).

•        அவர், “இந்திய வாழ்க்கைச் சுழற்ச்சி……. உடலை விட்டு உடல் செல்லும் ஆத்மா……..மனிதனைப் போன்று விலங்குகளும் ஆத்மாக்களைக் கொண்டுள்ளதால் அவற்றைத் துன்புறுத்தக்கூடாது……..” என்றெல்லாம் போதித்தார் (ப.36).

•        கெலே-சிரியாவைச் சேர்ந்த யூதர்கள், இந்தியர்களே ஆவர். அவர்கள் கிழக்கு
கலானி மற்றும் இக்ஷ்வாகு / கரும்பு-மக்கள் (இந்தியாவிலிருந்து வந்த) ஆவர். ஜூதேயாவில் வாழ்ந்த யூதர்கள், எஸ்ஸென்களே ஆவர், அவர்கள் இந்திய தத்துவ ஞானிகளிடமிருந்து உறுதியான மனப்பாங்கு, உணவு மற்றும் மனசாட்சி முதலியவை வாழ்க்கையில் தேவை என்பதனைப் பெற்றனர். கிரேக்கர்கள் அவர்களை சிரியர்கள் என்று தவறாக அடையாளங்கொண்டாலும், அவர்கள் ஜைன-பௌத்தர்களே ஆவர்
(ப.46).

•        202-193 BCEல், ஹான் வம்சம் சீனாவில் வலுப்பெற்றது. நூல்களை தொகுப்பவர், சூய் 600 CE காலம் வரை சீனா பௌத்தத்தை அறிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆகவே அதற்கு முன்பு 200 BCEக்கு – முன்பு இருந்தது ஜைன-பௌத்தமே ஆகும் (ப.67).

Black Buddha - 1

மேற்கண்ட விவரங்களிலிருந்து அறிவதாவது, பௌத்தம் தோன்றி தனி மதமாக அடையாளங்காணும் முன்பே அத்தகைய ஒரு மதம் பாரதம் மட்டுமல்லாது, மத்தியதரைகடல் நாடுகள், மத்திய ஆசியா, சீனா முதலிய பகுதிகளிலும் இருந்தது தெரிகிறது. சில மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் அதனை எடுத்துக் காட்டியும், ஆதிக்க வர்க்க-ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் சரித்திர புத்தக ஆசிரியர்கள் அந்த விஷயங்களை மறைத்து எழுதினர் எனத்தெரிகிறது. அவ்வாறு பௌத்தம், புத்தம் போன்ற மதம், ஜைன-பௌத்தம், ஜைனம் முதலியவை உலகம் முழுவதும் பரவியிருந்தபொது, அமைதியான நிலை இருந்தது காட்டுகிறது.

ஆகவே ஜைனத்தை மறைத்து தவிர்த்து, தனியாக எந்தவித பௌத்தமும் எழுந்திருக்க முடியாது. நிச்சயமாக ஜைனத்திலிருந்து, பௌத்தம் அஹிம்சாவாதத்தில் வேறுபட்டு தன்னை நீர்த்துக் கொண்டது, அத்தகைய மக்களை கவரவே அவ்வாறு சமரசம் செய்து கொண்டது எனத்தெரிகிறது. அதனால் தான் புத்தர் புலால் உண்பதை மறுக்கவில்லை, மறைக்கவில்லை. 81வது வயதில் பன்றிக்கறி / மாமிசம் உண்டு, குடலில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் எனத் தெரிகிறது. பௌத்தர்களும் சரியான மாமிச உணவு உண்பவரே. எனவே அவர்களது அஹிம்சை மற்ற உயிர்களை வதைக்காதே போன்ற கொள்கைகள் செல்லுபடியாகாது.

வேதபிரகாஷ்
17-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Was Buddha a black - some sculptures with curled hair etc- more

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது, வலுவிழந்தது ஏன்? (3)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (3)

வேதபிரகாஷ்

 “ஆரம்ப காலங்களில் புத்தரை மையமாக வைத்துக் கொண்டு சந்நியாசிகளாக அலைந்து திரிந்த பிக்குகள், எவ்வாறு அவர்கள் ஒன்றுகூடி, ஆசிரமங்கள் அல்லது ஒரு இடத்தில் தங்கி வசிக்கும் நிலையில் மடங்கள் / பள்ளிகள் உருவாக்கி வாழ ஆரம்பித்தனர், இதுதானே பிறகு இஸ்லாமின் முதல் ஆண்டுகளில், முஸ்லீம் படையெடுப்புகளினால் அழிக்கப்பட்டு, இந்தியாவிலேயே பௌத்தத்திற்கு ஒரு நாசத்தைத் தேடித்தந்தது? இந்த வினாவிற்குத்தான் பாட்ரிக் ஓலிவெல் (Patrick  Polivelle) இந்த புத்தகத்தில் பதில் அளிக்கிறார்”, என்று ஆர். சி. ஜாஹ்னர் (R. C. Zaehner) என்ற ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழக பேராசிரியர் “பௌத்த மடங்கள் அமைப்பின் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி” என்ற நூலில் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
R. C. Zaehner in his FOREWORD to “The origin and Early development of Buddhist Monachism”, M. D. Gunasena & Co. Ltd, Colombo, 1974, p.v.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-5

“அத்தகைய அலைந்து திரியும் வாழ்க்கை மழைகாலத்தில் முடியாது, ஆகையால் அத்தகைய சந்நியாசத்தை முறித்துக் கொள்வர் என்று எந்த தேரவாத பௌத்தத்தின் மாணவனுக்கும் தெரியும். ஆனால் அதுவே பிறகு எப்படி மடங்கள் / மடாலங்கள் ஒருவாகி அத்தகைய தங்கி வசிக்கும் வாழ்க்கையினை (Sedentary interlude) சந்நியாசிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது, அத்தகைய “மடங்கள் / பள்ளிகளின் கலாச்சாரம்” உருவெடுத்தது” என்று பாட்ரிக் ஓலிவெல் விளக்குகிறார்.

“பரிவிராஜக” [பரி = சுற்று; வ்ராஜ = செல், திரி (சமஸ்கிருதம்); எல்லா திசைகளிலிலும் அலைந்து திரிந்து வாழும் சந்நியாசி] முறையானது முற்றும் துறந்த நிலையினைக் காட்டுகிறது. புத்தர் காட்டிய வழி அதுதான். ஆனால் நவீனகாலத்தில் அதன் அர்த்தத்தை / பொருளைத் தவறாக கொள்கின்றனர். உதாரணத்திற்கு அம்பேத்கரே, “புத்தர் ஒரு இறந்த மனிதன், நோயாளி மற்றும் ஒரு வயதானவன் முதலியோரைக் கண்டவுடன் “பரிவிராஜக”த்தை ஏற்றுக் கொண்டார் என்பது, அது அபத்தம் என்று பார்க்கும் போதே தெரிகிறது” என்று குறிப்பிடுகின்றார் (That Buddha took Parivraja after seeing a dead person, a sick person and an old person is absurd on the face of it).
B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, in introduction.

Buddha head - thailand

“பரிவிராஜக” சந்நியாச முறை முற்றும் துறந்த முறையாகும். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது, இருக்கக்கூடாது. உலகில் எல்லா திசைகளிலிலும் செல்லும்போது, மக்களே அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அதாவது உணவு அளிப்பார்கள். இரவுகளில் மரங்கள் அடியில் தூங்கி, இயற்கையில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பிறகு மறுபடியும் தமது பணிகளைத் தொடங்குவர். உடல், மனம், ஐம்புலன்கள் அனைத்தையும் அடக்கி அதற்கேற்ற முறையில் அடக்கத்துடன், பக்குவத்துடன், நெறிமுறைகளுடன் இருக்கும் துறவு நிலை.

மழைக்காலங்களில், சந்நியாசிகள் அவ்வாறு திரிய முடியாது என்பதனால், ஆசாட (ஜூன்-ஜூலை நடுவில்) மாதத்திலிருந்து நான்கு மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் சாலைகளும் சேறும், சகதியாக இருக்கும். இத்தகைய முறை ஜைனர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. ஆனால், ஜைனர்கள் ஈரத்தைக்கூட மிதிக்கக்கூடாது, ஏனெனில் அதில் சில புழுக்கள், பூச்சிகள் மற்ற சிறிய உயிரினங்கள் இருக்கும் அவற்றை பாதிக்கக்கூடாது, கொல்லக்கூடாது என்ற முறையில் மேற்கொண்டனர். இது ஜைனர்களால் பஜ்ஜுஸான், பௌத்தர்களால் வஸ்ஸ (வருஸ = மழை) எனப்பட்டது.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary

பௌத்தர்கள் அவ்வாறு தங்கி வாழும் சந்நியாச முறையை மூன்றாகக் கொண்டனர்: ஆவாஸா, ஆராம மற்றும் விஹார என்ற மூன்று வகை தங்கி வசிக்கும் சந்நியாசி நிலை வாழ்க்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

1. ஆவாஸா: ஆவாஸா = ஆ + வாஸா = வாசத்திற்கு உகந்தது அல்ல அதாவது வசிப்பதற்கு எற்றது இல்லை. அதாவது அவ்வாறு அமைக்கப் பட்ட இடங்கள் குறுகிய காலத்திற்கான, மழைக்காலத்தில் தங்குவதற்கேற்றவாறு அமைக்கப்பட்ட சிறிய ஓலைக்குடில்கள் ஆகும்.

2. ஆராம: சிறப்பான ஆவாஸா ஆராம எனப்படும், ஏனெனில் “ரம்” என்றால் வசதி, மகிழ்ச்சி, ஆனந்தம் என்று பொருள். ஆகவே இது சந்தோசம் அளிக்கும் ஒரு பூங்கா, தோட்டம் அல்லது தோப்பு ஆகும். அத்தகையவை பௌத்த பிக்குகளுக்கு அரசர்கள், தனவான்கள், வியாபாரிகளால் தானமாக அளிக்கப்பட்டன. அவர்களுக்கு வசதியாக சமைக்கும் இடம், கழிவறைகள் முதலியன இருக்கும். ஆகவே இவை வசதிகளுடன் ஓய்வெடுக்கும் இடங்களாக இருந்தன.

3. விஹார: விஹார என்பது அனைத்தையும் அடக்கியது அதாவது எல்லா வசதிகளையும் கொண்டது. அதில் “பரிவேன” என்பது ஒரு பிக்கு தூங்கும் அறை. விஹாரத்தில் பல “பரிவேன”ங்கள் இருக்கும். விஹார என்றால் சந்தோசமாக நடப்பது, உலவுவது என்பதாகும். ஆகவே, இந்த “விஹார” கட்டிடங்கள் மிகப் பெரிதாக அனத்து வசதிகளையும் கொண்டு இருக்கும்.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-2

சுல்லவக்க (VI,15.2) உரிமையை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு மாற்ற முடியாத பொருள்களை ஐந்து வகையாகப் பிரிக்கிறது:

1. ஆராம அல்லது “ஆராம”விற்கு அளிக்கப் பட்ட இடம்.
2. விஹார அல்லது “விஹார”த்திற்கு அளிக்கப் பட்ட இடம்.
3. உட்காரும் ஆசனங்கள், நாற்காலிகள், மெத்தைகள், விரிக்கும் படுக்கைகள் /
பாய்கள்.
4. தாமிர பாத்திரங்கள், தாமிரப் பெட்டிகள், தாமிர ஜாடிகள் / கருவிகள், கத்திகள்,கோடாளிகள், பெரிய கத்திகள், அரிவாள்
5. காட்டில் உபயோகப்படுத்தும் கயிறு, மூங்கில் கொம்பு, தடித்த நாணல், புற்கள், களிமண், மரப்பொருள்கள், மண்பாத்திரங்கள்

இதிலிலிருந்து, பிக்குகள் உபயோகப்படுத்திய பொருட்களைப் பற்றி அறியலாம். பிறகு, பிக்குகள் பல வேலைகளுக்குக் குறிப்பாக நியமித்தனர் என்பதிலிருந்து, மற்ற பொருட்வகைகள் பிக்குகளுக்கு கிடைத்ததும் தெரிய வருகிறது:

1. பாண்டகாரிக: பண்டகசாலையின் அதிகாரி
2. பட்டுதேஸக: பங்கிட்டு அளிக்கும் அதிகாரி
3. சீவரபாஜக: துணிககளை விநியோகிக்கும் அதிகாரி
4. யாகுபாஜிக: அரிசி கஞ்சியை விநியோகிக்கும் அதிகாரி
5. பலபாஜிக: பழங்களை விநியோகிக்கும் அதிகாரி
6. கஜ்ஜபாஜிக: திட உணவை விநியோகிக்கும் அதிகாரி
7. சேனாசனபன்னாபக: இடத்தை / அறைகளை அளிக்கும் அதிகாரி
8. வீவார-பதிக்காஹக: மக்களிடமிருந்து துணிகளை பெரும் அதிகாரி
9. சாதிய-காஹாபக: மேலாடைகள் / உள்ளாடைகள் / மழைக்கால ஆடைகள்
விநியோகிக்கும் அதிகாரி
10. பட்ட-காஹபக: உண்ண உணவை தருமமாக பெற அளிக்கப்படும் பிச்சா பாத்திரம்
விநியோகிக்கும் அதிகாரி
11. அப்பமட்டகவிசஜக: ஊசிகள், நூல், கத்தரி முதலியவற்றை விநியோகிக்கும்
அதிகாரி
12.ஆராமிகபேஸக: இடத்தை நிவகிக்க வேண்டிய பொருட்களை பெற கவனிக்குக்
அதிகாரி.
13.சாமனேர்பேஸக: புதிய பிக்குகளுக்கு வேண்டிய பொருட்களை விநியோகிக்கும் அதிகாரி
14. நவகாம்மிக: புதிய கட்டிடங்களை நிவகிக்கும் அதிகாரி.

இதிலிருந்து, எப்படி நிலையற்ற சந்நியாசம் நிலைகொண்டு, வசதிகளோடு வாழ
ஆரம்பித்தது என்பதனை அறியலாம்.
Chullavagga of Vinayapiitika (English translation), London, 1952

முதலில் மழைக்காக ஒதுங்கியவர்கள், ஒதுங்கிய இடங்கள் வசதிகளோடு மாற்றப்பட்டன. வசதிகள் பெருகியதும், பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்தது. அதற்கான அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர். பிறகு பணமும் தானமாக வரத் தொடங்கியதும், இன்னும் பாதுகாப்பு எண்ணம் வளர்ந்தது. அச்சம் பெருகியது. விஹாரங்கள் செல்வசெழிப்பொடு இருக்க ஆரம்பித்தன. “மழைக்கால வாழ்க்கை”, முழுகாலவாழ்க்கையாக மாறியது.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-3

சங்கத்தில் அனுமதி என்பதும் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தது, நடந்தது. “உபசம்பத” என்பது வெறும் “அனுமதி சடங்கு” அல்ல. “பப்பஜ்ஜ/ப்ரவிரஜ்ய” முறைக்கு அனுமதி பதினைந்து வருடங்கள் கழித்து அளிக்கப்ப்படும். ஒரு துறவி பத்து வருட அனுபவம், திறமை மற்றும் தகுதி இருந்தால்தான் “உபசம்பத” நிலை / பட்டம் அளிக்கப்படும். பிறகு “இபஜ்ஜய” / “ஆசார்ய” நிலையை அடையலாம்.

பிக்குகளின் நிலை / கட்டுபாடுகளில் சில:

1. பம்சுகுலிக: குப்பைகளிலிருந்து பொரிக்கி எடுத்தத் துணிகளைத் தைத்து
உருவாக்கப் பட்ட ஆடைகளை அணிவது.
2. தேசீவாரரக: ஒரே நேரத்தில் மூன்று ஆடைகளை மட்டும் வைத்திருக்கும் நிலை.
3. பிண்டபாதிக: பிச்சையெடுத்து உண்ணும் நிலை.
4. சபதான-சாரிக: ஒவ்வொறு வீடாக சென்று  பிச்சையெடுத்து உண்ணும் நிலை.
5. எகாசனிக: ஒரே வேளை உணவு உண்ணும் பிக்கு.
6. பட்டபிண்டக: ஒரு பிச்சைப் பாத்திரத்திலிருந்து மட்டு உண்ணும் பிக்கு.
7. கலுபச்சபட்டிக: காலந்தவறிய பிறகு உணவு மறுக்கும் பிக்கு.
8. ஆரண்யக: காட்டில் வாழும் பிக்கு.
9. ருக்கமுலிக: மரத்தடியில் இருக்கும் / வசிக்கும் நிலை.
10. அபோகாசிக: திறந்த வெளியில் இருக்கும் / வசிக்கும் நிலை.
11. சசானிக: மயானத்தில் இருக்கும் / வசிக்கும் நிலை.
12. யஹாசந்ததிக: இரவு பொழுது எந்த இடமாகிலும், அந்நிலை மறந்து தனது பாயை விரிக்கும் பிக்கு.
13. நேசஜ்ஜிக: உட்கார்ந்து கொண்டே தூங்கும் நிலை.

Patrick, Olivelle, Ascetics and Brahmins: Studies in Ideologies and Institutions, Florence: University of Florence Press, 2007.
Sukumar Dutt, Buddhist monks and monasteries of India: their history and their Contribution to Indian Culture, Motilal Banarasidas, New Delhi, 2008.

இத்தகைய கட்டுபாடுகள், மனம்-உடல் இவற்றை தமதிச்சைக்குள் வைத்திருக்க உதவியாக இருந்தது. ஆனால், கட்டுப்பாடுகள் தளர-தளர, பிக்குகள் வசதிகளால் வளர்ந்தனர். அறை, படுக்கை, தோட்டம் என வசதிகள் பெருகியதும், மனம்-உடல் கட்டுப்பாடுகள் தளர்ந்தன. சங்கம் சீரழிய ஆரம்பித்தது.

இதிலிருந்து, எப்படி புத்தரின் “பரிவிராஜக” கட்டுப்பாட்டுமுறை, படிபடியாக தேய்ந்து, மாறி, பல விலக்குகள் அளிக்கப்பட்டு, “மழைக்கால ஒழுங்குமுறை சந்நியாசம்” என்ற நிலை போய் வசதிகளுடன் வாழும் “விஹார” வாழ்க்கையானது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்
16-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Paharpur, Somapur, Bangladesh - Buddhist monastary-ruins-4

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (2)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது,  தேய்ந்தது ஏன்? (2)

வெளிகாரணிகள்:

1.        ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

2.        ஆதிசங்கரர் இந்தியாவில் இருந்த பலவித வழிபாட்டு நம்பிக்கையாளர்களை “ஷண்மதம்” என்ற கட்டுக்குள் எடுத்து வந்ததால், பௌத்தம் இந்தியாவில் தேய ஆரம்பித்தது.

3.        இந்துக்கள் புத்தரையே ஒரு அவதாரமாக்கி, பௌத்தத்தை வலுவிழக்கச்
செய்தார்கள்.

4.        ஜைனர்களின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், “இந்தியா”விற்கு
வெளியில் தனது கவனத்தைச் செல்லுத்தியது.

5.        ராஜபுத்தரர்களின் வளர்ச்சி

6.        ஹூனர்களின் படையெடுப்பு

7.        முகமதியரின் அழிப்பு

இனி மேற்கண்ட விவரங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.

1. ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.

மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும்.

Mahavira and Buddha

ஜைனர்கள் வலுவாக இருந்த பொழுது, புத்தர்காலத்தில் (567-487 BCE) பௌத்தம் வளர்ந்தது ஊகமே, ஏனெனில் ஜைனர்கள் காலத்தில் அவ்வாறு புத்தரோ தமது சீடர்களோ அவ்வாறு செய்திருக்க முடியாது.

* இதில் வேடிக்கையென்னவென்றால், தாத்தா சந்திரகுப்தன் (321 – 297 BCE) ஜைனமதத்தினனாக இருந்து, சிரவணபெலகோலா வந்து “வடக்கிருந்து” இறக்கிறான்.

* மகன் பிந்துசாரன் (299 – 274 BCE) “இந்து” என்றே கருதப்படுகிறது!

* பேரன் அசோகனோ (273 – 237 BCE) பௌத்த மதத்தைத் தழுவுகிறான்!

ஆகவே எப்படி ஒரு தலைமுறையில், இவ்வாறு மாற்றங்களுடன், அசோகன் உடனடியாக தனது மதப்பிரசாகர்களை அனுப்பி, புத்தமதத்தைப் பரப்பத் தொடங்கியிருக்கமுடியும்?

Asoka - Buddhism
மேலும் வேடிக்கை என்னவென்றால், அசோகன் மட்டும் தான் “சரித்திர காலத்திற்கு” (historic period) வருகிறான்! அவனது தந்தை மற்றும் தாத்தா “சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் (pre-historic / proto- historic) வைக்கப்படுகிறார்கள்! பிறகு எப்படிதான், இந்தியாவின் சரித்திரம் நிர்ணயம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை! [Protohistory refers to a period between prehistory and history, during which a culture or civilization has not yet developed writing, but other cultures have already noted its existence in their own writings.]

Chandragupta, Bindusara, Asoka

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஃபார்மர் என்ற மேதாவி, ஏற்கெனவே, ஹரப்பன்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தி வருகிறார்.
http://www.safarmer.com/washstate.pdf

அசோகன் தனது “பிரம்மி” எழுத்தை உடனே கண்டுபிடித்து கல்லிலே எழுத ஆரம்பித்தவுடன் தான் இந்தியர்களுக்கு அத்தகைய எழுத்தறிவு வந்தது! ஆனால் பாவம், தந்தை-தாத்தாக்கள் எல்லாம் எழுதத்தெரியாமல் இருந்தார்கள்!
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians?,  in “Contribution of South India to Indian Art and Architecture”, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.
http://forumhub.mayyam.com/hub/viewlite.php?t=6130
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

மௌரிய காலத்திலிருந்தே, குறிப்பாக தென்னிந்தியாவில் ஜைனத்தின் ஆதிக்கம்அரசிய ரீதியில் அதிகமாக இருந்தது. இலங்கையில் பௌத்தம் இருந்து வளர்ந்த நிலையில், தமிழகத்தில் ஜைனத்தின் ஆதிக்கம் இருந்தது ஒரு காரணம் எனலாம். மேலும், அகாலங்க என்பவர் பௌத்தர்களை 788 CEல் தோற்கடித்ததால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள், என்பதில், ஜைனர்கள்தாம் பௌத்தர்களை தோற்கடித்து இந்தியாவிலிருந்து விரட்டினர் என கல்வெட்டுகளிலிருந்துத் தெரிகிறது.
K. A. Nilakanta Sastri (Publisher), Sravanabelagola, Department of archaeology, Mysore. 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.

ஆகையால் தான் சங்க-இலக்கியம் சந்திரகுப்த மௌரியனைப் பற்றியும், அசோகனைப் பற்றியும் மூச்சுக் கூடவிடவில்லை. முதல் நூற்றாண்டுகளில் ஜைனர்கள் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழகம் பெருமளவில் பாதித்தது “களப்பிரர்கள்” மூலம் அறியலாம்.

ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே.
http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

வேதபிரகாஷ்
15-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Chandragupta Maurya - a Jain

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

மார்ச் 16, 2013

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

Buddhist attacked Tanjore temple

பௌத்தம் – நாத்திகம் – திராவிடர் கூட்டு என்னவாயிற்று?: பௌத்தமத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு, இந்துமதத்தைத் தாக்கி வந்ததை, வருவதை பார்த்துள்ளோம்[1]. இந்துமத விரோதிகள் அவ்வப்போது, இந்த வாதங்களை எடுத்துக் கொள்வர். பௌத்தர்கள் திராவிடர்களே என்று கூட நாத்திகவாதிகள் வாதிட்டுள்ளனர். இங்கு பௌத்தர்கள், நாத்திகர்கள் என்று சேர்ந்து இருக்கும் போது, இலங்கையில் மட்டும் எப்படி பௌத்தர்கள் தமிழர்களுக்கு எதிராக நடக்கின்றனர் என்று பலமுறை எடுத்துக் காட்டியுள்ளேன். இது “திராவிடர்கள்” ஒட்டு மொத்தமாக காவிரி மற்றும் முல்லைப்பெரியார் நீர்களுக்கு அடித்துக் கொள்வதைப் போன்றுள்ளது[2]. பௌத்தமே அஹிம்சைவாதிகளா இல்லை ஹிம்சையிலும் ஈடுபட்டனரா, இந்தியாவில் பௌத்தம் எப்படி தேய்ந்தது என்ற பிரச்சினைகள் பற்றி எடுத்துக் காட்டியுள்ளேன்[3]. இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர், இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் தாக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Buddhist attacked Tanjore temple2

தமிழ் இயக்கத்தினர் ஏன் தாக்கினர்?: தஞ்சாவூருக்கு இன்று காலை இலங்கை புத்த மத பிட்சு தலைமையில், தாய்லாந்து, இந்தோனேசியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து 19 மாணவர்கள் ஆய்விற்காக வந்தனர். இவ்வாறு வருவது சகஜமான விஷயம் தான். இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.ஈது தவிர மாநாடு, கருத்தரங்கம் என்று பலர் பற்பல நாடுகளுக்குச் செல்கின்றனர், செல்லும் போது, அங்குள்ள இடங்களைப் பார்த்து வருகின்றனர். இருப்பினும், வந்திருந்த தொல்லியல் ஆய்வு மாணவர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு இருந்ததால், அவர் மீது தஞ்சையில் தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தின[4] என்பது வித்தியாசமாக உள்ளது. இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறாராம்[5]. தமிழ்தேச பொதுவுடமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர் முதலியோர் அடங்குவர் அப்போது அங்கு கோவில் வளாகத்தில் நின்ற புத்த பிட்சுகளை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டனர். இதில் சில புத்த பிட்சுகளுக்கு அடி விழுந்தது. ரத்த காயமும் ஏற்பட்டது என்றெல்லாம் ஊடகங்கள் சொல்கின்றன.

Buddhist attacked Tanjore temple5

 

புத்தபிக்கு தாக்கப்படும் இன்னொரு காட்சி

Lankan monk attacked Tanjore

ஆராய்ச்சி-சுற்றுலா வருபவர்களைத் தாக்கலாமா?: ஆராய்ச்சி நிமித்தம் வருகின்ற பௌத்தர்களை இப்படி அடிக்கலாமா? இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் என்றும் தெரிய வருகிறது[6]. இந்தியத் தொல்லியல் துறையில் [ASI] ஒன்றரை வருட டிப்ளோமா படித்து வருகின்றார்.  தில்லியில் இருக்கிறார் எனும் போது, தில்லியில் எப்படி இத்தனை காலம் விட்டு வைத்தனர்? இவரைப்போல இன்னும் ஆயிரக்கணக்கன இலங்கை மற்றும் பௌத்த துறவிகள், மாணவர்கள் இந்தியாவில் உள்ளனர். அனைவரையும் இவர்கள் இப்படி தாக்குவார்களா? திருமாவளவன் போன்றோர் தில்லியில் பலமுறை சென்று ஆர்பாட்டம் செய்துள்ளனர். அப்பொழுது, இத்தகைய இலங்கை பௌத்தர்களை அடித்து விரட்டலாமே?

Buddhist-monk-is-attacked-in-Tamil-Nadu

தொல்லியல் துறை அலுவலகத்தில் நுழைந்த பின்னரும் அடிக்க வந்த மாணவர்கள்: உண்மையில் அந்த பிக்கு ஊட-ஓட விரட்டி அடிக்கப்பட்டார். கூட வந்திருந்த மாணவர்களும் பயந்து ஓட்டம் பிடித்தனர். தாக்குதலுக்கு பயந்து இலங்கையை சேர்ந்தவர்கள் தஞ்சை தொல்லியல் துறை அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். துரத்தி வந்தவர்கள் அவர்களை தாக்க முயன்றார்கள். அப்பொழுது, கதவுகள் சாத்தப்பட்டன[7]. அதற்குள் வந்த போலீசார், போராட்டகாரர்களை கைது செய்த பின்னர் இலங்கை புத்தமத பிட்சு மற்றும் அவரது மாணவர்களை காவலர்கள் வெளியேற்றினர். இந்த தாக்குதலால் தஞ்சை பெரிய கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Buddhist attacked Tanjore temple4

திருச்சியிலும் தாக்கப்பட்டது ஏன்?: இந்நிலையில், அவர் பாதுகாப்பாக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர்கள் வந்த வேன் திருச்சி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த வேன் மீது கல் வீசித் தாக்கினர். இதில் வேனின் இருபக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன. பின்னர் போலீஸார் அங்கு வந்து, பாதுகாப்பாக அவர்களை மீட்டு விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் திருச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ASI office Tanjore

பௌத்தர்கள்அஹிம்சாவாதிகளாஜிம்சைகாரர்களா?: தொடர்ந்து பௌத்தர்கள், பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்படுவது சரியா என்று சிந்திக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 2012ல் கூட தஞ்சைக்கு வந்த பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்பட்டனர்[8]. இலங்கைப் பிரத மந்திரி வந்து அகில உலக பௌத்த மாநாட்டைத் துவக்கி வைத்தபோதும், பலர் இந்தியாவிற்கு வந்தனர். பிறகு கால்பந்து குழுவும் விரட்டப்பட்டது[9].  பௌத்தர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் தாக்கப்படுகின்றனரா அல்லது அஹிம்சை விடுத்து இலங்கைத் தமிழர்களை கொடுமைப் படுத்தியதால் தாக்கப்படுகின்றனரா என்று தெரியவில்லை. பௌத்தர்கள் புத்தர் போதித்தபடி அஹிம்சைவாதிகள். ஆகவே அவர்கள் எப்படி கொடுமைக்காரர்களாக இருப்பர்? இலங்கையினையோ, இலங்கை மக்களையோ, பௌத்தத்தையோ ஒரு சின்னம் போல, அடையாளம் காணப்பட்டு, தமிழர்கள் தாக்கத் தொடங்கினால், நாளைக்கு, இந்தியாவில் உள்ள புத்தர் சிலைகள் தாக்கப்படுமா? அம்பேத்கரும் தாக்கப்படுவாரா?

Youngster fight in front of ASI office Tanjore

வேதபிரகாஷ்

16-03-2013


[1] பௌத்தர்கள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், தலித்துகள், அம்பேத்கரைட்டுகள், முஸ்லீம்கள்………என பற்பல முகமூடிகளில் மறைந்து கொண்டு பேசியுள்ளனர்-எழுதியுள்ளனர்,

[2] திராவிட மொழிகள் பேசுபவர்கள், தென்னிந்திர்கள் எல்லோருமே திராவிடர்கள் என்றால், ஏன் அவர்கள் இப்படி சண்டை போட வேண்டும், பிரிந்து கிடக்க வேண்டும்? ஒரே இனத்தவர் இப்படி இருக்கலாமா – தவறு கால்டுவெல் சித்தாந்தத்திலா, திராவிட மாயையிலா?

[3] பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் என்ற தலைப்பில் பல விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளேன்.

https://groups.google.com/forum/#!msg/mintamil/hjXk8ncjZ48/epbrVjgxI4IJ

https://groups.google.com/forum/?hl=es&fromgroups=#!topic/mintamil/nLy0jFIvdIY

https://groups.google.com/forum/?hl=da&fromgroups=#!topic/mintamil/y76uHIRzuc8

[5] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece

[6] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece