Posts Tagged ‘சரணம்’

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (2)

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது,  தேய்ந்தது ஏன்? (2)

வெளிகாரணிகள்:

1.        ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

2.        ஆதிசங்கரர் இந்தியாவில் இருந்த பலவித வழிபாட்டு நம்பிக்கையாளர்களை “ஷண்மதம்” என்ற கட்டுக்குள் எடுத்து வந்ததால், பௌத்தம் இந்தியாவில் தேய ஆரம்பித்தது.

3.        இந்துக்கள் புத்தரையே ஒரு அவதாரமாக்கி, பௌத்தத்தை வலுவிழக்கச்
செய்தார்கள்.

4.        ஜைனர்களின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், “இந்தியா”விற்கு
வெளியில் தனது கவனத்தைச் செல்லுத்தியது.

5.        ராஜபுத்தரர்களின் வளர்ச்சி

6.        ஹூனர்களின் படையெடுப்பு

7.        முகமதியரின் அழிப்பு

இனி மேற்கண்ட விவரங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.

1. ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.

மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும்.

Mahavira and Buddha

ஜைனர்கள் வலுவாக இருந்த பொழுது, புத்தர்காலத்தில் (567-487 BCE) பௌத்தம் வளர்ந்தது ஊகமே, ஏனெனில் ஜைனர்கள் காலத்தில் அவ்வாறு புத்தரோ தமது சீடர்களோ அவ்வாறு செய்திருக்க முடியாது.

* இதில் வேடிக்கையென்னவென்றால், தாத்தா சந்திரகுப்தன் (321 – 297 BCE) ஜைனமதத்தினனாக இருந்து, சிரவணபெலகோலா வந்து “வடக்கிருந்து” இறக்கிறான்.

* மகன் பிந்துசாரன் (299 – 274 BCE) “இந்து” என்றே கருதப்படுகிறது!

* பேரன் அசோகனோ (273 – 237 BCE) பௌத்த மதத்தைத் தழுவுகிறான்!

ஆகவே எப்படி ஒரு தலைமுறையில், இவ்வாறு மாற்றங்களுடன், அசோகன் உடனடியாக தனது மதப்பிரசாகர்களை அனுப்பி, புத்தமதத்தைப் பரப்பத் தொடங்கியிருக்கமுடியும்?

Asoka - Buddhism
மேலும் வேடிக்கை என்னவென்றால், அசோகன் மட்டும் தான் “சரித்திர காலத்திற்கு” (historic period) வருகிறான்! அவனது தந்தை மற்றும் தாத்தா “சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் (pre-historic / proto- historic) வைக்கப்படுகிறார்கள்! பிறகு எப்படிதான், இந்தியாவின் சரித்திரம் நிர்ணயம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை! [Protohistory refers to a period between prehistory and history, during which a culture or civilization has not yet developed writing, but other cultures have already noted its existence in their own writings.]

Chandragupta, Bindusara, Asoka

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஃபார்மர் என்ற மேதாவி, ஏற்கெனவே, ஹரப்பன்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தி வருகிறார்.
http://www.safarmer.com/washstate.pdf

அசோகன் தனது “பிரம்மி” எழுத்தை உடனே கண்டுபிடித்து கல்லிலே எழுத ஆரம்பித்தவுடன் தான் இந்தியர்களுக்கு அத்தகைய எழுத்தறிவு வந்தது! ஆனால் பாவம், தந்தை-தாத்தாக்கள் எல்லாம் எழுதத்தெரியாமல் இருந்தார்கள்!
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians?,  in “Contribution of South India to Indian Art and Architecture”, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.
http://forumhub.mayyam.com/hub/viewlite.php?t=6130
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

மௌரிய காலத்திலிருந்தே, குறிப்பாக தென்னிந்தியாவில் ஜைனத்தின் ஆதிக்கம்அரசிய ரீதியில் அதிகமாக இருந்தது. இலங்கையில் பௌத்தம் இருந்து வளர்ந்த நிலையில், தமிழகத்தில் ஜைனத்தின் ஆதிக்கம் இருந்தது ஒரு காரணம் எனலாம். மேலும், அகாலங்க என்பவர் பௌத்தர்களை 788 CEல் தோற்கடித்ததால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள், என்பதில், ஜைனர்கள்தாம் பௌத்தர்களை தோற்கடித்து இந்தியாவிலிருந்து விரட்டினர் என கல்வெட்டுகளிலிருந்துத் தெரிகிறது.
K. A. Nilakanta Sastri (Publisher), Sravanabelagola, Department of archaeology, Mysore. 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.

ஆகையால் தான் சங்க-இலக்கியம் சந்திரகுப்த மௌரியனைப் பற்றியும், அசோகனைப் பற்றியும் மூச்சுக் கூடவிடவில்லை. முதல் நூற்றாண்டுகளில் ஜைனர்கள் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழகம் பெருமளவில் பாதித்தது “களப்பிரர்கள்” மூலம் அறியலாம்.

ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே.
http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html

வேதபிரகாஷ்
15-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Chandragupta Maurya - a Jain

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

மார்ச் 16, 2013

தஞ்சைக்கு வந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் – பௌத்தர்கள் அஹிம்சாவாதிகளா-ஹிம்சைகாரர்களா?

Buddhist attacked Tanjore temple

பௌத்தம் – நாத்திகம் – திராவிடர் கூட்டு என்னவாயிற்று?: பௌத்தமத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு, இந்துமதத்தைத் தாக்கி வந்ததை, வருவதை பார்த்துள்ளோம்[1]. இந்துமத விரோதிகள் அவ்வப்போது, இந்த வாதங்களை எடுத்துக் கொள்வர். பௌத்தர்கள் திராவிடர்களே என்று கூட நாத்திகவாதிகள் வாதிட்டுள்ளனர். இங்கு பௌத்தர்கள், நாத்திகர்கள் என்று சேர்ந்து இருக்கும் போது, இலங்கையில் மட்டும் எப்படி பௌத்தர்கள் தமிழர்களுக்கு எதிராக நடக்கின்றனர் என்று பலமுறை எடுத்துக் காட்டியுள்ளேன். இது “திராவிடர்கள்” ஒட்டு மொத்தமாக காவிரி மற்றும் முல்லைப்பெரியார் நீர்களுக்கு அடித்துக் கொள்வதைப் போன்றுள்ளது[2]. பௌத்தமே அஹிம்சைவாதிகளா இல்லை ஹிம்சையிலும் ஈடுபட்டனரா, இந்தியாவில் பௌத்தம் எப்படி தேய்ந்தது என்ற பிரச்சினைகள் பற்றி எடுத்துக் காட்டியுள்ளேன்[3]. இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர், இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் தாக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Buddhist attacked Tanjore temple2

தமிழ் இயக்கத்தினர் ஏன் தாக்கினர்?: தஞ்சாவூருக்கு இன்று காலை இலங்கை புத்த மத பிட்சு தலைமையில், தாய்லாந்து, இந்தோனேசியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து 19 மாணவர்கள் ஆய்விற்காக வந்தனர். இவ்வாறு வருவது சகஜமான விஷயம் தான். இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.ஈது தவிர மாநாடு, கருத்தரங்கம் என்று பலர் பற்பல நாடுகளுக்குச் செல்கின்றனர், செல்லும் போது, அங்குள்ள இடங்களைப் பார்த்து வருகின்றனர். இருப்பினும், வந்திருந்த தொல்லியல் ஆய்வு மாணவர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு இருந்ததால், அவர் மீது தஞ்சையில் தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தின[4] என்பது வித்தியாசமாக உள்ளது. இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறாராம்[5]. தமிழ்தேச பொதுவுடமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர் முதலியோர் அடங்குவர் அப்போது அங்கு கோவில் வளாகத்தில் நின்ற புத்த பிட்சுகளை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டனர். இதில் சில புத்த பிட்சுகளுக்கு அடி விழுந்தது. ரத்த காயமும் ஏற்பட்டது என்றெல்லாம் ஊடகங்கள் சொல்கின்றன.

Buddhist attacked Tanjore temple5

 

புத்தபிக்கு தாக்கப்படும் இன்னொரு காட்சி

Lankan monk attacked Tanjore

ஆராய்ச்சி-சுற்றுலா வருபவர்களைத் தாக்கலாமா?: ஆராய்ச்சி நிமித்தம் வருகின்ற பௌத்தர்களை இப்படி அடிக்கலாமா? இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் என்றும் தெரிய வருகிறது[6]. இந்தியத் தொல்லியல் துறையில் [ASI] ஒன்றரை வருட டிப்ளோமா படித்து வருகின்றார்.  தில்லியில் இருக்கிறார் எனும் போது, தில்லியில் எப்படி இத்தனை காலம் விட்டு வைத்தனர்? இவரைப்போல இன்னும் ஆயிரக்கணக்கன இலங்கை மற்றும் பௌத்த துறவிகள், மாணவர்கள் இந்தியாவில் உள்ளனர். அனைவரையும் இவர்கள் இப்படி தாக்குவார்களா? திருமாவளவன் போன்றோர் தில்லியில் பலமுறை சென்று ஆர்பாட்டம் செய்துள்ளனர். அப்பொழுது, இத்தகைய இலங்கை பௌத்தர்களை அடித்து விரட்டலாமே?

Buddhist-monk-is-attacked-in-Tamil-Nadu

தொல்லியல் துறை அலுவலகத்தில் நுழைந்த பின்னரும் அடிக்க வந்த மாணவர்கள்: உண்மையில் அந்த பிக்கு ஊட-ஓட விரட்டி அடிக்கப்பட்டார். கூட வந்திருந்த மாணவர்களும் பயந்து ஓட்டம் பிடித்தனர். தாக்குதலுக்கு பயந்து இலங்கையை சேர்ந்தவர்கள் தஞ்சை தொல்லியல் துறை அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். துரத்தி வந்தவர்கள் அவர்களை தாக்க முயன்றார்கள். அப்பொழுது, கதவுகள் சாத்தப்பட்டன[7]. அதற்குள் வந்த போலீசார், போராட்டகாரர்களை கைது செய்த பின்னர் இலங்கை புத்தமத பிட்சு மற்றும் அவரது மாணவர்களை காவலர்கள் வெளியேற்றினர். இந்த தாக்குதலால் தஞ்சை பெரிய கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Buddhist attacked Tanjore temple4

திருச்சியிலும் தாக்கப்பட்டது ஏன்?: இந்நிலையில், அவர் பாதுகாப்பாக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர்கள் வந்த வேன் திருச்சி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த வேன் மீது கல் வீசித் தாக்கினர். இதில் வேனின் இருபக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன. பின்னர் போலீஸார் அங்கு வந்து, பாதுகாப்பாக அவர்களை மீட்டு விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் திருச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ASI office Tanjore

பௌத்தர்கள்அஹிம்சாவாதிகளாஜிம்சைகாரர்களா?: தொடர்ந்து பௌத்தர்கள், பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்படுவது சரியா என்று சிந்திக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 2012ல் கூட தஞ்சைக்கு வந்த பௌத்த யாத்திரிகர்கள் தாக்கப்பட்டனர்[8]. இலங்கைப் பிரத மந்திரி வந்து அகில உலக பௌத்த மாநாட்டைத் துவக்கி வைத்தபோதும், பலர் இந்தியாவிற்கு வந்தனர். பிறகு கால்பந்து குழுவும் விரட்டப்பட்டது[9].  பௌத்தர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் தாக்கப்படுகின்றனரா அல்லது அஹிம்சை விடுத்து இலங்கைத் தமிழர்களை கொடுமைப் படுத்தியதால் தாக்கப்படுகின்றனரா என்று தெரியவில்லை. பௌத்தர்கள் புத்தர் போதித்தபடி அஹிம்சைவாதிகள். ஆகவே அவர்கள் எப்படி கொடுமைக்காரர்களாக இருப்பர்? இலங்கையினையோ, இலங்கை மக்களையோ, பௌத்தத்தையோ ஒரு சின்னம் போல, அடையாளம் காணப்பட்டு, தமிழர்கள் தாக்கத் தொடங்கினால், நாளைக்கு, இந்தியாவில் உள்ள புத்தர் சிலைகள் தாக்கப்படுமா? அம்பேத்கரும் தாக்கப்படுவாரா?

Youngster fight in front of ASI office Tanjore

வேதபிரகாஷ்

16-03-2013


[1] பௌத்தர்கள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், தலித்துகள், அம்பேத்கரைட்டுகள், முஸ்லீம்கள்………என பற்பல முகமூடிகளில் மறைந்து கொண்டு பேசியுள்ளனர்-எழுதியுள்ளனர்,

[2] திராவிட மொழிகள் பேசுபவர்கள், தென்னிந்திர்கள் எல்லோருமே திராவிடர்கள் என்றால், ஏன் அவர்கள் இப்படி சண்டை போட வேண்டும், பிரிந்து கிடக்க வேண்டும்? ஒரே இனத்தவர் இப்படி இருக்கலாமா – தவறு கால்டுவெல் சித்தாந்தத்திலா, திராவிட மாயையிலா?

[3] பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் என்ற தலைப்பில் பல விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளேன்.

https://groups.google.com/forum/#!msg/mintamil/hjXk8ncjZ48/epbrVjgxI4IJ

https://groups.google.com/forum/?hl=es&fromgroups=#!topic/mintamil/nLy0jFIvdIY

https://groups.google.com/forum/?hl=da&fromgroups=#!topic/mintamil/y76uHIRzuc8

[5] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece

[6] As anti-Sri Lankan protests raged in several parts of Tamil Nadu, a Buddhist priest from the island, currently pursuing archaeological studies in Delhi University, was roughed up by some activists of pro-Tamil outfits at the famous Big Temple here today, police said.

http://newindianexpress.com/states/tamil_nadu/article1504269.ece