தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)
மாநாடு அழைப்பிதழ்
மாநாட்டில் பேசுபவர்கள்………
14-05-2023 – தமிழ்நாடுபவுத்தர்கள்சங்கப்பேரவைசார்பில்தியாகனூரில்பௌத்தர்கள்மறுமலர்ச்சிமாநாடு: 14-05-2023 அன்று தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை வகித்தார். தம்ம தர்மேந்திரா, கோ.பெரியசாமி, ஆதிராஜா, சா.ராம்ஜி, மூக்நாயக் மணி, காளிதாஸ், மணிகண்டன், இளையநந்தன், பி.பி.ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவாசல் அருகே தியாகனுாரில் பவுத்த மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “தமிழகத்தில், 76 இடங்களில்புத்தர்சிலைகளுடன்கோவில்கள்உள்ளன. 2,500 ஆண்டுக்குமுன், உலகம்முழுதும்கடவுள்நம்பிக்கை, பிசாசுமூடநம்பிக்கைஇருந்தது. கடவுள்நம்பிக்கையைபரப்பும்நிறுவனமாகமதம்உள்ளது. பவுத்தமதம்இருக்கும்இடத்தில்அறிவுஉள்ளது. அம்பேத்கர்மேலும், 10 ஆண்டுஉயிருடன்இருந்திருந்தால்பவுத்தமதம்வளர்ச்சிபெற்றிருக்கும். நல்லிணக்ககோட்பாடாகபவுத்தம்உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். புத்தர் அவதார புர்ஷர் அல்ல, புஷ்யமித்ர சுங்கரால் தான் பௌத்தம் இந்தியாவில் வீழ்ந்தது, என்பதெல்லாம் அவரது பேச்சில் இருந்த முக்கியமான அம்சங்கள்.
பௌத்தஊர்வலம், நடபடிகள்: இந்த மாநாட்டை முன்னிட்டு முன்னதாக புத்த பிக்குகள் மற்றும் சங்க ரத்தினர்கள், பவுத்த உபாசகர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. மேலும் மாநாட்டில் சங்க பேரவையின் மகாசங்ககாதிபதியாக அனைவரும் முன்னிலையிலும் முக்கோல் பெற்றுக் கொண்டு பிக்கு தம்மசீலர் பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தபிரகாசம், தம்ம ரத்னா, ஜெயசீலர், குணசீலர், அமராவதி, தமிழ் கோவை, பவுத்தம் பாலா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு மங்கள கங்கண நிகழ்வும் புத்த பூர்ணிமா நிகழ்வும் நடை பெற்றது. பௌத்தத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இச்சடங்குகள் நிறைவேற்ற பட்டன. ஒருவேளை எஸ்.சிக்களை பௌத்தத்திற்கு மாற்ற, முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், “நியோ பௌத்தம்,” என்று குறிப்பிடாமல் இருப்பதும் நோக்கத் தக்கது[1].
செக்யூலரிஸத்தன்மையினைஎடுத்துக்காட்டியமுயற்சி: இதைத் தொடர்ந்து விகார் கவுன்சில் செயலர் திருநாவுக்கரசு தலைமையில் போதிச்சந்திரன் வரவேற்பில் சிறுபான்மை நலகுழு உறுப்பினர்கள் பவுத்த பெருமாள், அம்பேத் ஆனந்த், சி. அழகர், தேவேந்திரன், கௌதம் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில் சர்வ மதத்தினரும் கலந்து கலந்துண்ட நிகழ்வு நடை பெற்றது. இதில் காஞ்சி ஜைனமட ஜினாலய பரிபாலகர் பட்டாராக சுவாமிகள், உத்தரப்பிரதேசம் பிக்கு நாகபூசனா, ஆந்திரபிரதேசம் நாகார்ஜுனா, போ தி ஆகியயோர் மகா சங்கதிபதி மற்றும் மகா சங்கத்தை வாழ்த்தி பே சினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள புத்தர் திருக்கோயில் நிர்வாகிகள், சங்கரத்தினர்கள், புத்த பூசகர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேடையில் வழிபாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாட்டில் பவுத்த சுவடுகள் கருத்தரங்கம் நிகழ்வு மகாதினகரன் தலைமையில், எஸ் வசந்த் வரவேற்பில் நடைபெற்றது. இதில் தம்மதேவா, கோவைப் பிரியா, சிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலைசிறுத்தைகளின்ஆதிக்கம்: ஜெர்மனி தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, குந்தவை நாச்சியார், கல்லூரி இணை பேராசிரியர் சிவராமன், வரலாற்று ஆய்வாளர் அரகலூர் வெங் கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 மாவட்ட சிறுபான்மைநல உறுப்பினர்கள் மகாசங்க உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து பவுத்த மறுமலர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பாளர் கவுதம சன்னா தலைமையில் நடைபெற்றது. மகா சங்க பொருளாளர் அரக்கோணம் கோவி. பார்த்திபன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொ.திருமாவளவன். எம்.பி., காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ., சிந்தனை செல்வன், மருத்துவர்கள் ராஜ்வர்தன், பெரியசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் மகர பூசணம், மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்கத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக சா. ராம்ஜி சாக்கியா நன்றி கூறினார்.
முரண்பட்டஅல்லதுசேந்துள்ளவர்களின்சித்தாந்தநிலை: இப்படி இம்மாநாட்டில் ஏதோ பல இந்திய மாநிலங்களிலிருந்து, பல வெளிநாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்த முயன்றாலும், அவரவர் தமது காரியங்களில் குறியாக இருந்தனர். திருமாவளவன் பேசி சென்றுவிட்டார். தேமொழி எழுதிய ‘ தமிழகத்தில் பௌத்தம்” நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில்(14.05.2023) சேலம் அருகே தியாகனூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பௌத்த சங்கம் கூறியது, “நெடுநாளாய்த்தொடர்ந்துவரும்நமதுபோராட்டங்களுக்குப்பின்னரும், தீண்டப்படாதமக்கள்குறித்தஇந்துக்களதுமனப்பான்மையில்மாற்றமேதுமில்லையென்றும், நம்மிடம்அவர்கள்நேயத்தோடுநடந்துகொள்ளப்போவதில்லையென்றும்முடிவுக்குவந்துள்ளோம்.எனவேநாம்இந்துக்களிடமிருந்துவிலகி, தன்னுதவி, தன்மேம்பாட்டுக்கானபோராட்டம்அவற்றிலேயேநம்பிக்கைவைப்பதுஎனமுடிவுசெய்துள்ளோம்.” பிறகு, நாராயணன் போன்றோர் எப்படி விசுவாசத்துடன் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோவிலும், இந்து கோவில் போலத் தான் கட்டியுள்ளார்கள். திருமா பார்த்தாரா என்று தெரியவில்லை.
விசித்திரமானநட்புக்குழு: கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் இவர்களின் தொடர்புகள், தமிழகத்தில் பல பேனர்களில் வேலை செய்வது, பரஸ்பர உதவி முதலியன பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. கௌதம சன்னா விசிக வின் பிரச்சார செயலாளர், பல அமைப்புகளில் பொறுப்பு என்று பட்டியல் காணப் படுகிறது[2]. மாநில செயலர் நீலசந்திரகுமார், முனைவர் கனல்விழி, பேராசிரியை சுந்தரவல்லி, செம்மலர், கௌதம சன்னா முதலியோர் கிருபா என்ற பெண் வழக்கறிஞர் விக்ரம் மீது ஏப்ரல் 2023ல் கொடுத்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க மே 2023ல் முதல் வாரத்தில் அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சுபாஷிணி மீது ஏற்கெனவே சிலர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இப்படி சர்ச்சைக்குர்யவர்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்கின்றனர் என்பதும் புதிராக உள்ளது. நாராயணன் கண்ணன் தன்னை ஒரு வைணவன் என்று காட்டிக் கொள்வார், ஆனால், இவர்கள் தூஷிக்கும் பொழுது கண்டுகொள்ள மாட்டார். தவிர, “மின் தமிழ்” என்ற குழுவில் இவர்கள் மற்ற பலருடன் நடு வைத்துள்ளனர். எல்லா விசயங்களையும் அலசுவர் பொதுவாக செக்யூலரிஸ, முற்போக்கு, மார்க்சீய, சித்தாந்திகள் போன்று காட்டிக் கொள்வர்..
கௌதமசன்னா – பலவிதபதவிகள், பொறுப்புகள், எழுத்தாளர்முதலியன: கௌதம சன்னாவைப் பொறுத்த வரையில் அரசியல்வாதி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தேர்தலிலும் நின்று தோற்றுள்ளது தெரிகிறது. “ஜெய் பீம் பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் வைத்திருப்பதும் தெரிகிறது.. இதனால், பௌத்தத்தை அரசியல் ரீதியில் உபயோகப் படுத்த முயலும் நிலையும் தெரிகிறது. அதனை அவரே விளக்கியுள்ளதை இங்கு படிக்கலாம்[3]. மற்றபடி “தலித்” என்ற பேனர்கள்-மேடைகள், புத்தகங்கள் எல்லாம் அம்பேத்கரை உபயோகப் படுத்தப் படும் முறையும் விளங்குகிறது. வழக்கம் போல திருவள்ளுவரையும் இதில் சேர்த்து குழப்பி, ஆராய்ச்சி என்று வறுத்தெடுப்பது, கிறிஸ்துவ பாணியும் புலப் படுகிறது. எனவே தலித்-கிறிஸ்துவ-பௌத்த இணைப்புகள் உள்ளதா இல்லையா என்று ஆராய வேண்டியதும் உள்ளது.
நாராயணன்கண்ணன்மற்றும்கௌதமசன்னாஉறவுகள்: நாராயணன் கண்ணன் என்பவர், “பௌத்தசங்கத்தைஅக்கறையோடுயாரும்மீட்டெடுக்காததருணத்தில்திரு.கௌதமசன்னாதலைமையிலானஓர்குழுபல்சமயஆசீர்வாதத்துடன்நேற்றுபுத்தசங்கம்அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்குடயோசியஸ், முஸ்லிம்களுக்குஜும்மா, வைதீகர்களுக்குமடங்கள், ஆதீனங்கள்இருப்பதுபோல்புத்தநெறிக்குபௌத்தசங்கம்அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்குஎந்தவொருதமிழககட்சிகளும்ஆதரவுதராதநிலையில்விடுதலைசிறுத்தைகட்சிமுழுஆதரவுவழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்டமக்களுக்குஏற்றதொருசமயம்பௌத்தம்எனடாக்டர்அம்பேத்கார் 20 வருடஆய்விற்குப்பின்கண்டெடுத்தஉண்மையைஅடிப்படையாகக்கொண்டுதாழ்த்தபட்டஅனைத்துத்தமிழர்களின்சங்கமாகஇதுஅமைகிறது. சவாலுள்ளஇப்பெரும்முயற்சியைகௌதமசன்னாஎனும்இளைஞர்எடுத்திருக்கிறார். அவரைபௌத்தஅபிமானிஎனும்அளவில்நான்வாழ்த்துகிறேன்,” என்று பேஸ்புக் 14-05-2023 பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்று தியாகனூரில் நடந்த பௌத்த மாநாட்டில் சுபாஷினியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.
புத்தரின்தேதியைகுறைப்பது, இந்தியசரித்திரகாலத்தைக்குறிப்பது: “அலெக்சாந்தரின் படையெடுப்பிற்கு முன்னர் 326 BCE, இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை,” என்று[1] எதேச்சதிகாரமாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், மஹாவீரரும், புத்தரும் அவர்களை அடக்கினர். அவர்களது சரித்திர ஆதாரங்களை அழித்து, அவர்களை மறைக்கவே மேனாட்டவர் முயன்றனர். ஆனால், பெரிய சிலைகள், மடாலயங்கள், கல்வெட்டுகள், நூல்கள் முதலியவை மறைக்க முடியவில்லை. மேலும், எகிப்திய லக்ஷாரில் இருந்து புத்தர் சிலை அவர்களை அடக்கியது. ஏனெனில், அது புத்தரின் தேதியை 1887-1807 BCEக்கு எடுத்துச் செல்கிறது, அது, புத்தரின் பாரம்பரிய தேதியுடன் ஒத்துப் போகிறது[2]. சந்திர, சூரிய, சந்திர-சூரிய வருடக்கணக்கு பின்பற்றப்பட்ட முறைகளினால், புத்தருடைய தேதியை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆரம்பகாலங்களில் சந்திரமாதக் கணக்கைத்தான் மக்கள் பின்பற்றி வந்தனர். சந்திரனை தொடர்ந்து கண்காணித்து வந்ததால், அது பூமியை சுற்றி வரும் போது, தேய்பிறை-வளர்பிறை 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்றது என்பதனை அறிந்து கொண்டு, ஆண்டிற்கு 360 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொண்டனர். அந்த 15 நாட்களை “பஞ்சாங்க முறைப்படி[3]” வாரம், திதி[4], கரணம்[5], நட்சத்திரம் மற்றும் யோகம்[6] என்றும் பிரித்துக் கொண்டனர். பௌத்தர்களும் இம்முறையினை உலகம் முழுவதும் பின்பற்றி வந்தனர். இதனால், பௌத்தத்ததின் தொன்மையினை ஏற்றுக் கொண்டால், அத்தகைய காலக்கணக்கீட்டுமுறை, வானவியல் முதலிய ஜானங்களின் தொன்மையினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அது இந்திய வரலாற்றுத் தொன்மையினை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான், அவர்கள் இதனை எப்படியாவது எதிர்த்து, மறைத்து, காலத்தைக் குறைப்பது என்று முடிவு கொண்டனர்[7].
தீபவம்சம்மற்றும்மஹாவம்சம்என்றநூட்களைஉருவாக்கிகாலக்கணக்கீட்டைகெடுத்தது: தீபவம்சம் மற்றும் மஹாவம்சம் என்ற நூட்களை ஆங்கிலேயர் பண்டிதர்களை வைத்து உருவாக்கி, பௌத்தத்தின் தொன்மையினை குறைத்தனர். இதனை, உண்மையான ஆராய்ச்சியாளர்கள் எதிர்த்தனர். “இந்தியர்களுக்கு சரித்திர அறிவு இல்லை,” என்ற போது, “ராஜதரங்கனி” அவர்களை மிரட்டியது. அதில் உள்ள ஜைன அசோகன் அவர்களை பயமுருத்தினான். ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே[8]. மகாபாரத தேதியும் திகைக்க வைத்தது. அதாவது, “கட்டுக்கதை, புராணம்” என்பவை எல்லாம் சரித்திரம் ஆனது. இவற்றை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், ஜைன அசோகன் மறைக்கப் பட்டான், அவனது “தேவநாம் பிய திஸ்ஸா” கல்வெட்டுகள், பௌத்த அசோகனுடையது என்று மாற்றி எழுதினார்கள். அதன்படி, அசோகனுடைய காலத்தை 1200 வருடங்கள் குறைத்தனர்.
புத்தருடையதேதி, இந்தியசரித்திரத்திற்குமுக்கியமானது: புத்தர் எந்த காலத்தில் இருந்தால் என்ன, நிறைய புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறவர்கள், சரித்திரத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். புத்தருடைய தொன்மை, இந்திய சரித்திரத்தின் தொன்மைக்குள்ள ஆதாரங்களில் ஒன்றாகும். சிந்துசமவெளி நாகரிக அகழ்வாய்வு படிவுகளின் கீழ், ஒரு பௌத்த சைத்தியத்தை, ரக்லதாஸ் பானர்ஜி கண்டு பிடித்ததை, ஜான் மார்ஷல் மறைத்து, புகைப்படங்களையும் மாயமாக்கி விட்டு, அவருடைய கட்டுரையினையும் வெளியிடாமல் செய்தார்[9]. சில பௌத்த கட்டுமானங்களின் சில ஆடிகள் கீழே 5000 வருட தொன்மையான நாகரிகம் இருந்தத்தை பானர்ஜி கண்டு பிடித்தார். சங்கராச்சார்யா போன்று, புத்த மடாதிபதிகள் தொடர்ந்த போது, அவர்கள் “புத்தர்,” என்றே அழைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், ஆதி-தீர்த்தங்கரர், ஆதி-புத்தா போன்ற தத்துவங்கள் ஜைன-பௌத்தங்களில் உள்ளன. “ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் / 1616ம் ஆண்டில் பேரறிவாளன் தோன்றுவான் / புத்தன் தோன்றுவான், என்று மணிமேகலை சொன்னது, என்ன வருடம், என்றால் தெரியவில்லதேன்கிறார்கள். நிச்சயமாக அது மணிமேகலைக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதால், மற்ற காலக்கணக்கீட்டில் வருகின்ற வருடமாகவேண்டும். எப்படியிருந்தாலும் BCEல் தான் வரவேண்டும் என்பதால், அதன் சரித்திர உண்மைநிலயை மறுக்க முடியாது.
பௌத்தமும், மேனாட்டுஆராய்ச்சியாளர்களும்: பௌத்தத்திலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கிருத்துவம் தோன்றியது என வலுவான கருத்துகள் இருந்து வருகின்றன. ஆகையால், பௌத்தத்தின் காலத்தைக் குறைக்க அவர்கள் பல வழிகளில் சரித்திர ஆதாரங்களை மாற்றினர், மறைத்தனர், போலிகளை உருவாக்கி குழப்பினர். உதாரணத்திற்கு, ஏ.ஏ.ஃபூரர் என்பரது வழக்கு திகைப்படைய வைப்பதாக இருக்கிறது[10]. இத்தகைய அந்நியர் எழுதிய சரித்திரத்தை இந்தியர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இன்று கூட புத்தரின் தேதி / கால நிலை உறுதியாக நிலைநிறுத்தப்படவில்லை. மாறாக, அந்த தேதியை கிரேக்கத் தத்துவ ஆரம்பங்களுக்குப் பிறகு வைக்க இன்றளவும், ஆதிக்க சக்திகளின் போலியான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கு புத்தரின் மண்டையோட்டின் ஒரு பகுதி எப்படி பலவிதமாக தேதியிடப்படுகின்றது என்று நோக்கத்தக்கது[11]:
25,000 ஆண்டுகள்பழமைவாய்ந்ததாகஇருக்கலாம்: புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது. அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2,500 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.
1000 ஆண்டுகள்பழமை வாய்ந்ததாக இருக்கலாம்
உண்மையில், குழப்புவதற்காகவே, இவ்வாறான தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம், ஏனெனில், முதல் மற்றும் மூன்றாவது தேதிகள் தவறு என்பது பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது, ஆனால், இரண்டாம் தேதி, மேனாட்டவர்ளுக்கு ஒத்துப் போகிறது.
[1] Referred to as “sheet anchor of Indian history” and denying history before it and mentioning IVC as “Proto-historic,” further historical evidences are also discredited.
[2] R.G.N . Prasad, “The Date of Buddha’s Mahäparinirväna“, Annals of the Bhandarkar Oriental Research Institute 67 (1986), pp. 77-88. A version of this paper was also read in 1985 at the 7th Conference of the International Association of Buddhist Studies in Bologna.
[3] வளர்பிறை-தேய்முறை, சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கவனித்து, பதிவு செய்து, கணித்து தயாரிப்பது பஞ்சாங்கம் ஆகும்.
[4] திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன.
[5] ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.
[6] சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர். யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20′ அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.[2] எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20′ அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் “தின யோகம்”, “நித்திய யோகம்”, “சூரிய சித்தாந்த யோகம்” போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.
The first round of excavations revealed a Buddhist stupa belonging to the Kusana period (2nd and 3rd centuries). As the area around the stupa was dug up, the archaeological team came upon microliths (tiny flints, part of a bigger tool) and pieces of pottery that did not match anything found earlier. Further excavations revealed a 5,000-year-old civilisation only a few feet below the Buddhist structure. Rakhaldas received a letter from the then director-general of the ASI, H. Hargreaves. The letter came along with a 166-page typewritten document – the article on Mohenjodaro that Rakhaldas had sent Marshall four years ago. The letter read: “Sir John thinks it could be unkind to not let you know that many of your theories are quite untenable and your statements incorrect.” Hargreaves also urged Rakhaldas to get his “report” printed before the book by Marshall was out so “there are no misunderstandings”. The photographs, he informed, had gone missing. The book, Mohenjodaro and the Indus Civilisation, edited by Sir John Marshall was published in 1931. In the foreword, Marshall mentions Rakhaldas’s name as something he “can’t pass over in silence” and says “to him belongs the credit of having discovered if not Mohenjodaro itself, at any rate its high antiquity”.
[10] Alois Anton Führer – Führer had an unusual religious career. He served as a Catholic priest but in 1887 converted to Anglicanism. Following his expulsion from government service in India, Führer made plans to become a Buddhist monk. Quoting the Ceylon Standard, the Journal of the Mahabodhi Society noted: “Much interest has been excited in Buddhist and other circles at the prospect of Dr Führer coming to Ceylon to join the Buddhist priesthood. The Press notices recently made regarding this gentleman have given rise to grave suspicion. We understand that Dr Führer will have an opportunity given him of refuting the charges made against him before he is accepted by the leading Buddhists here as an exponent of the religion of Buddha.” These plans seem to have come to nothing because in 1901 Führer re-converted to the Christian Catholic Church of Switzerland. Führer’s archaeological career ended in disgrace. Under official instructions from the Government of India, Führer was relieved of his positions, his papers seized and his offices inspected by Vincent Arthur Smith on 22 September 1898 Confronted by Smith about his archaeological publications and his report to the Government, Führer was obliged to admit “that every statement in it [the report] was absolutely false.” These activities were presaged by Führer’s publications on Sanskrit texts and law which, as shown by Andrew Huxley, are effectively works of plagiarism, large portions being copied from the writing of Georg Bühler.
ரைஸ்டேவிட்ஸ் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்குமுன்பே இதெல்லாம் பொய் என்று மறுத்துள்ளார்: டி. டபிள்யூ. ரைஸ் டேவிட்ஸ் [Thomas William Rhys Davids (1843-1922)] என்பவர் பௌத்தமத ஆராய்ச்சியில் தலைசிறந்தவர். அவரது “பௌத்த இந்தியா” (Buddhist India) என்ற புத்தகம் இன்றளவிலும் மிக்கியமாக உள்ளது. பாலி டெக்ஸ்ட் சொஸைடி உருவாக்கியதில் (1881), நூல்களை, சேகரித்ததில், பதிப்பித்ததில் (more than 25,000 pages, www.palitext.com) பெரும் பங்காற்றியுள்ளார். அவர் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே, இப்பொழுது பிரச்சார ரீதியில் பௌத்தர்கள் ஹிந்துக்களால் இந்தியாவில் கொடுமைப்படுத்தப் பட்டனர், கொன்று குவிக்கப் பட்டனர், அவர்களது விஹாரங்கள், பள்ளிகள், சின்னங்கள் இடித்து நொறுக்கப்பட்டன, எரிக்கப் பட்டன, சங்கரர் மற்றும் அரசர்கள், குறிப்பாக பிராமணர்கள் இத்தகைய மத-தண்டனைகளை நிறைவேற்றினார்கள் போன்ற குற்றச்சாட்டுகளை ஆய்ந்து, அவையெல்லாம் சரித்திர ஆதாரமற்றது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இருப்பினும் பிரசார பீரங்கிகளை வைத்துகொண்டு, அதில் சரித்திர-ஆதாரமில்லாத வெடிமருந்துகளை நிரப்பி, பொய்களை வெடித்து, கட்டுக்கதைகளைப் பரப்பி வரும் சித்தாந்த எழுத்தாளர்கள்-பேச்சாளர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. நமது “மின்தமிழ்” அறிஞர்கள் சிலரும் அத்தகைய வினாக்களை எழுப்பியுள்ளார்கள். ஆகையால், அக்கட்டுரையை மொழி பெயர்த்துத் தருகிறேன்.
T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.
மிஹிரகுலன் படையெடுப்பின் போது பௌத்தர்கள் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது: யுவான் சுவாங் தனது பிரயாணகுறிப்புகளில் (புத்தகம்.IV; Julien 1.196; Beal.1., 171) மிஹிரகுலன் என்ற காஷ்மீர அரசன், தன்னுடைய ஆப்கானிஸ்தானின் மீதான படையெடுப்பின் போது (சுமார் 400 AD) பௌத்த ஆலயங்கள், விஹாரங்கள் முதலியவற்றை இடித்துத்தள்ளியதாகவும், எண்ணிலடங்காத அந்த பௌத்த நாட்டு மக்களைக் கொன்றுகுவித்ததாகவும் சொல்கிறார் (ஜூலியன்.1.196; பீல்,1,171). பிறகு வோங்-பு என்பவரும் ஆறாவது நூற்றாண்டு இறுதியில் எழுதும்போது, இந்த நிகழ்ச்சிகளைக்குறிப்பிட்டுள்ளார். “தசைகளான ரத்த ஆறாக ஒடிக்கொண்டிருந்தது” (Beal’s “Catena”, p.139). பீல் இது மத-ரீதியில் நடத்தப்பட்டக் கொடுமை என்கிறார். ஆனால், ஒரு நாட்டின்மீது படையெடுத்து செல்லும் நிகழ்ச்சி, எவ்வளவு கொடுமையாக இருந்தாலும், மதசாயம் கொடுக்கமுடியாது. வெற்றிக்கொண்டவன், அந்த ராஜ்ஜியத்தை, தனது ஆளுகைக்குட்படுத்திய பின்பு, அத்தகைய கொலை, அழிவு நிகழ்ச்சிகள் அவன்மீது ஏற்றிச்சொல்லப்படுகிறது. மேலும் ராஜதரங்கிணி அவன் 3,00,00,000 மக்களை கொன்று குவித்ததால் அவனை ஒரு ராக்சஸன் என்று குறிப்பிடுகின்றது (I.312). ஆனால் அத்தகைய கொலைக்கு எந்த மதநோக்கும் இல்லை. மேலும் வேடிக்கை என்னவென்றால், அவனது மந்திரிகள் பௌத்தர்கள் ஆவார்கள்! ஆகவே அவன், ஒரு கொலைக்கார, வெறிபிடித்த பைத்தியம் எனலாம். அத்தகைய விவரங்கள் இருந்தால், அவன் மதரீதியில் கொடுமை புரிந்தான் எனலாம். ஆனால், உள்ள விவரங்கள் அவ்வாறு இல்லை.
புத்தரின் எலும்புகளைப் பகிர்வதில் ஏற்பட்ட போர்கள்: பன்னா (சம்யுத்தா IV.61; திவ்யவதனா.38) என்ற அருமையான கதையில் சூன-பராந்தகர்கள் எவ்வாறு புதிய கருத்துகளைப் பரப்புகின்றவர்களைக் கொடுமைப்படுத்திகின்றனர் கூறப்படுகிறது. அவர்களது, அத்தகைய கொடிய நடத்தை. சத்தர்மா புண்டரீகா (X.25) என்ற நூலில் வரும் பாடலை நினவுபடுத்துகிறது, “எந்த பிராசரகன் மீதாவது கொம்புகள், கட்டைகள், முற்களால் ஆன ஆயுதங்கள், கெட்ட வார்த்தைகள் விழுந்தால், அவன் பொருமையாக என்னை நினைத்துக் கொள்வனாக”. பாதிக்கப்பட்டவனே, அதை மத-ரீதியிலான நடந்த கொடுமை என்று சொல்லமாட்டான். ஆகவே, சரித்திர ஆசிரியன் இந்த வார்த்தையினை உபயோகப்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும். இத்தகைய கதையும் தாதாவாசன என்று நூலில் காணப்படுகிறது (P. T. S. J., 1884, II.94 and IV.13), ஒரு நிகந்தன் தனது குஹசிவா என்ற பக்கத்து வீட்டுக்காரனை, “தானே செத்த உடம்பின் எலும்பை வணங்கும்போது, அவன் மற்றவர்களின் கடவுளர்களை இகழ்ந்து பேசுகிறான்”, என்று ஒரு ஹிந்து அரசனிடம் புகார் கூறி அவனது இதயத்தில் விரோதத்தை வளர்க்க முயல்கிறான். அரசன் அந்த எலும்பை எடுத்து வரச்சொல்லி ராணுவத்தை தூதுவனுடன் அனுப்புகிறான். ஆனால், அவனே மதம் மாறுகிறான், பிறகு அரசனும் மதம் மாறுகிறான். ஆனால், படைகள் தாக்குகின்றன, குஹசிவா போரிட்டு இறக்கிறான் (IV.20), ஆனால், அந்த “புனித-எலும்பு” இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைக்கூட ஒரு “மத-யுத்தம்” என்று சொல்லலாமேத் தவிர “மத-ரீதியிலான கொடுமை” ஆகாது.
சசாங்கன் வங்காளத்தில் பௌத்தர்களைத் தண்டித்தது, கொடுமைப் படுத்தியது: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் பிரித்துவிட்டான். பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது (J. R. A. S., 1893, p.147). சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது”. அந்த திவ்யவதன கதைகளில் (ப,433, 434), பிறகு வருகிறான், புஸ்யமித்ரன். அவன் அசோகனுக்குப் பிறகு ஆறாவது அரசனாக இருக்கிறான், மௌரிய அரசர்களுக்கு கடைசியாக இருக்கிறான். இங்குதான், நாம் சோதித்துப் பார்க்கும் வகையில், கடைசியாக உடற்றல்/மத-ரீதியில் தண்டித்தல் (persecution) என்ற நிலை இருப்பதாகத் தெரிகிறது. இங்கு, சசாங்கன் புத்தனுடைய மதத்தை வேரறுக்கத் தீர்மானித்ததுடன், அவர்களுடைய விஹாரங்களை இடித்துத் தள்ளியதுடன், ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள் தரப்படும் என்று அறிவித்ததாகவும், பிறகு “அர்ஹத்துகள்” எனப்படுகின்ற பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் விவரங்கள் காணப்படுகின்றன. ஆனால், அக்கதை எழுதிய ஆசிரியரே ஒப்புக்கொள்வதாவது, உடனடியாக அந்த உடற்றல் நிறுத்தப்பட்டது என்பதாகும். இந்த கதையினை உறுதி செய்யும் வகையில் எந்த ஆதாரமும் இல்லாததால், நாம் நமது தீர்ப்பினை திருத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
மௌரியன் பௌத்தத்தை தண்டித்தான், கொடுமைப் படுத்தினான் என்பது முரணானது: “திவ்யவதன” என்ற இந்த கதையில் வரும் இந்த விவரங்கள் அடங்கிய பத்தி – ஒரு தேதியை தரும் வகையிலும் அல்லது ஒரு அரசனின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடுவதிலும், மிகவும் ஆவலைத்தூண்டும் வகையில் உள்ளது. உண்மையில், அந்த பத்தி “அசோகவதன” என்ற கதையில் வருகிறது. தொகுக்கப்பட்ட அக்கதைகள் பல காலங்களைச் சேர்ந்த பல அவதானங்களிலிருந்து பெறப்பட்டு இப்பொழுதைய உருவெடுத்துள்ளது. புஸ்யமித்திரன் எந்த கடைசி மௌரியனுக்கு படைதளபதியாக இருந்தானோ அவனைக் கொன்று, இரண்டாம் நூற்றாண்டில் BCE சுங்க வம்ச ஆட்சியை நிறுவியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அத்தாட்சியாக உள்ளதோ முன்னுக்கு முரணான உள்ள புராணங்களில் உள்ள அரசர்களின் பட்டியல்கள் தாம் (They are all given in Miss Duff’s forthcoming “Indian Chronology,” of which she has kindly allowed me to see the proofs. See also Lassen’s “In.Alt.,” 2.271, 345). இந்த புராணங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு, இந்த வடிவத்தில் இப்பொழுது உள்ளன. இங்கு இந்த விவரங்கள், அதாவது புஸ்யமித்திரனைப் பற்றியவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்வதானால், அவன் ஒரு மௌரியன் என்று கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், அவன் தான் மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் என்றாக மாட்டான்.
குமாரில பட்டரின்தூண்டுதலால், சுதன்வன்என்பவன்மேற்கொண்டதானமத–ரீதியிலான தண்டனை: கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்கப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. அதே மாதிரி எந்த ஒரு புத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது (See Telang’s Mudrarakshasa., pp.xlviii-liii., and the Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155. Wilson, Dict., xix; Colebroole, Essayas, 1. 323).
பௌத்த எச்சங்கள் சிதிலங்களில் காணப்படுவது, அவை பலமுறைத் தாக்கப் பட்டுள்ளன என்பதிக் காட்டுகின்ற்ன: நான் கவனித்த வரையிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பௌத்த நினைவு சின்னங்களின் தற்பொழுதுள்ள நிலை தான் எனக்கு ஆதாரமாகத் தெரிகின்றது. காபூலிலிருந்து வங்காளம் வரை, தெற்கில் தக்காணத்திலிருந்து இலங்கை வரை, பௌத்த பள்ளிகள், விஹாரங்கள் அழிவில் உள்ளன. சாரநாத்தில் அகவாழ்வு மேற்கொண்டபோது, பல இடங்களில் தீயிட்டதற்கான மற்றும் வேண்டும் என்றே இடிக்கப்பட்டது என்பதற்கான பல அடையாளங்கள் காணப்பட்டன, “இவையெல்லாம் – மதகுருமார்கள், கோவில்கள், விக்கிரங்கள் முதலியவை மொத்தமாக – ஒருதடவைக்கு மேல் தாக்கப்பட்டன, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன” என்ற முடிவிக்கு வரலாம். (Cunningham, Archaeological Reports, 1.121-128). இலங்கையில், நானே அத்தகைய அழிக்கப்பட்ட சின்னங்களைப் பார்த்திருக்கிறேன். இலங்கையைப் பொருத்த வரையிலும், உண்மையென்னவென்றால், தமிழக படையெடுத்து வந்தவர்கள் மற்றவர்கள் புதையலை வேட்டையாட வந்தார்களேயொழிய, தமக்குப் போட்டியாக வந்துள்ள மதத்தினை அழிக்க வரவில்லை, என்பது அவர்களது சாதாரணமான போர்முறைகளிலிருந்து தெரிகின்றது. (See especially Chapter 55, verse 21, and Chapter 80, verses 65-69). மத-துவேசம், வெற்றிக்கொண்டவர்கள் அதிகமாக இருக்கும்போது, போரின் முடிவில் தீவிரவாதத்துடன் வெளிப்பட்டிருக்கும் என்பதனை அறியலாம். ஆனால், இவையெல்லாம் அத்தகைய மத-ரீதியிலான தண்டனை யுத்தங்கள் அல்ல. இவையெல்லாம் சாதாரணமான போர்களில் எந்த அளவிற்கு வன்செயல்கள் ஏற்படுமே அந்த அளவில்தான் ஏற்பட்டுள்ளன, அதேமாதிரிதான் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளன என்று நியாமான முடிவிற்கு வரலாம்.
பாலிமொழியிலுள்ளபீடகங்களிலேயேஅத்தகையமத–ரீதியிலானகொடுமைகள்/ தண்டனைகள்பற்றியஎந்தகுறிப்புகளும்இல்லை: இருப்பினும், இந்திய சரித்திர ஆசிரியர்கள் நாலந்தா மற்றும் மற்ற இடங்களில் ஏற்பட்ட முகமதியர்களின் கொடுமைகளை பயங்கரமாகச் சித்தரிக்கின்றனர். எந்த ஒரு ராணுவ காரணம் / தேவையும் இன்றி, அத்தகைய பழமை வாய்ந்த பல்கலை கழகத்தை – கட்டிடங்களை அழித்ததோடு அல்லாமல், புத்தகங்களை எரித்துள்ளார்கள், தம்மைக் காத்துக் கொள்ளத் தெரியாத மாணவர்களையும் கொன்றுள்ளார்கள். இங்கு மததுவேசம் / வெறி இல்லை என்று மறுக்கமுடியாது அல்லது அவர்களது அறியாத காட்டுமிராண்டித்தனத்தை சாதாரணமாக குறைக்கூற முடியாது. சாரநாத்தில் காணப்படுகின்ற அத்தகைய கொலைகள் மற்றும் தீயிட்டுக் கொளுத்துதல் முதலிய காரியங்கள், அந்த அருமையான மென்மையான கைகளே செய்திருக்க வேண்டும். பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மத-ரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. நிகந்தர்களின் தூண்டுதலால் மொகல்லான என்பவன் கொல்லப்பட்ட நிகழ்ச்சி “தம்மபாத உரையில்” காணப்படுகிறது. ஆனால் அது தனிமனித குற்றச்செயலாக உள்ளது (Dhammapada Commentary, pp.298 and following; compare J.1.391).
பாலிமொழிநூல்களில்பிராமணர்கள்உயர்வாகப் பேசப்படுகிறார்கள்: அங்குலிமாலன் தாக்கப்பட்டதற்கு எந்தவித மதக்காரணமும் இல்லை (M.2.96). மாகந்தியன் என்ற துறவி தனது பிராமண நண்பனிடம் புத்தருக்கு எதிராக வெறுப்பும், காழ்ப்புடன் கூறுவதும் அத்தகைய நிலையில் இல்லை. ஏனெனில், “புத்தர் நமது சூத்திரங்களில் வேவு பார்க்கிறார்” (M.1.502) என்றுள்ளது. ஆனால் அந்த பிராமண நண்பன் அவனிடம் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. பிறகு அந்த துறவியே தனது கருத்தை மாற்றிக்கொள்கிறான். பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள், மற்றும் பிராமணன் என்ற வார்த்தை எப்பொழுதுமே ஒரு மதிக்கப்படும் பட்டம் / கௌரவமுள்ளவன் போன்றே உபயோகப்படுத்தப் படுகிறது. சங்கத்திற்கும் பிராமணர்களுக்கும் இடையே நிரந்தரமான உரையாடல்கள்- சந்திப்புகள் மிகவும் அடக்கத்துடனும் மரியாதையுடனும் இருந்து வந்துள்ளன.
கதையாக எழுதியவர் ஆதாரங்களுடன் எழுதவில்லை: நான் [ரைஸ் டேவிட்ஸ்] குறிப்பிட்ட பிற்கால குறிப்புகள், சமூக மாற்றங்களை ஊக்குவிக்கும் கிருத்துவர்கள் ஆசார கிருத்துவர்களால் அல்லது ரோமாபுரி ஆட்சியாளர்களால் அரசியல் கலந்த முறையில் கிருத்துவர்கள் தண்டிக்கப்பட்டது போன்று, இவையெல்லாம் இல்லை. புஸ்யமித்திரன் கதைக்கு எந்த ஆதாரமும் / உண்மையும் இல்லை என்று நான் சொல்லவேண்டியதில்லை. இப்பொழுதுள்ள அந்த கதைகொண்ட ஆவணம் தவறான விவரங்களைக் கொண்டுள்ளன, மேலும் அதை எழுதிய ஆசிரியருக்கு எந்த விவரமும் முழுவதுமாகத் தெரிந்திருக்கவில்லை என்பது தெரிவதால், நாம் முடிவான தீர்ப்புக்கு கருத்துருவாக்கம் கொள்ள முடியாது. எது எப்படியாகிலும், தத்துவார்த்த ரீதியில் எதிர்-எதிரான கருத்துகளைக் கொண்ட மதங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் மிகுந்த அமைதியுடன் வாழ்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை.
சகிப்புத்தன்மை – சிறப்புத்தன்மைமுழுவதுமாகஇந்தியமக்களையேசாரும்: பௌத்த அரசன் அசோகனுடைய மெச்சக்கூடிய சகிப்புத்தன்மையினை, மேற்கத்திய சரித்திர ஆசிரியன் ஒப்புக்கொள்ள மறுக்கும் விஷயம் விந்தையான போக்காக உள்ளது. ஆனால் அத்தகைய சகிப்புத்தன்மை என்பது முந்தைய காரணங்களின் மீது ஆதாரமாக உள்ளது. இத்தகைய சிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும். மேலும், அசோகனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கங்கைச் சமவெளியில் மிகத்தலைச்சிறந்த ஞானம் மற்றும் கலாச்சாரம் இருந்து பரவியிருந்தது, மேனாட்டவர்கள் இதுவரை சரியான முறையில் அறியப்படவில்லை என்பது, என்னுடையக் கருத்து (The Mahavamsa (p.128) tells of the tolerance of the Tamil conqueror Elara towards the beliefs of his Buddhist subjects, and (pp.232-235) of proceedings taken by Buddhist kings against heretics of the same faith. See also Chapter 78). [என்னுடைய மேற்காணும் கட்டுரை தட்டெழுத்தில் இருக்கும்போது, சர் ஜான் வேர் எட்கார் (Sir John Ware Edgar) என்பவரும் அதேமாதிரியான முடிவை தமது கட்டுரையில் வெளியிட்டுள்ளார் Fortnightly Review, Vol.xxvii., 1880, p. 821, என அறிகிறேன். ஆனால் அதை நான் பார்க்கவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்]. T. W. Rhys Davids. இவ்வாறு ரைஸ் டேவிட்ஸ் தன்னுடைய கட்டுரையை முடிக்கிறார்.
ரைஸ் டேவிட்ஸின், ஆராய்ச்சியின் நாணயத் தன்மை: இங்கு ஒரு ஆராய்ச்சியாளரின் நேர்மையை பாருங்கள். ஒத்தக்கருத்தை, அதே முடிவை மற்றொருவரும் ஆதாரங்களுடன் தனக்கு முன்பேயே கூறியுள்ளார் என்றபோது அவரைக் குறிப்பிட்டு அவரது ஆய்வுக் கட்டுரையை, முன்னமேயுள்ள பதிவுசெய்யப்பட்ட எழுத்துகளை அறிந்து ஏற்றுகொள்கிறார், முறையோடு ஆதரிக்கிறார். ஆனால், இன்றோ எங்கு தமது நிலை மாறிவிடுமோ, ஆராய்ச்சித்திறன்-மதிப்பு குறைந்துவிடுமோ என்று பயந்து அதை மறைக்கத் துணிகின்றனர், மறைக்கின்றனர். அதுமட்டுமல்லாது, சந்தர்ப்பம் / நேரம் கிடைத்தால், அத்தகைய ஆய்வுகட்டுரையிலுள்ள விஷயங்களையும் சேர்த்துக் கொண்டு, ஏதோ இவர் எல்லாவற்றையும் பார்த்துதான் தமது ஆய்வுகட்டுரையை உருவாக்கியுள்ளார் என்ற தோற்றத்தை தயாரித்து நம்புகின்ற முறையில் அளிப்பார். ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையை அறிய திறன் வேண்டும், அறிந்தபின் ஒப்புக்கொள்ளத் துணிவு, பக்குவம் வேண்டும். ஆனால் சித்தாந்தரீதியில் இயங்குபவர்கள் தமது நிலை, பதவி, ஆதிக்கம், கிடைக்கும் வசதிகள் முதலியவற்றை மனத்தில் கொண்டு, அவற்றை இழக்கக் கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, உண்மையைபற்றி கவலை இல்லை தான். அறிந்த பின்னரும், இல்லை நான் இப்படிதான் வாதிடுவேன், பேசுவேன், எழுதுவேன் என்றாலும் ஒன்றும் செய்யமுடியாது.
வேதபிரகாஷ்
01-10-2009.
குறிப்பு: இத்தொடர்கட்டுரை 2009ல்மின்தமிழ்என்றதளத்தில்வெளியிடப்பட்டது, விவாதிக்கப் பட்டது. ஆனால், சிலகாலத்திற்குபிறகு, இக்குழுவினர்என்னைநீக்கிவிட்டனர். இப்பொழுது, அதைஅப்படியேகிடைக்கும்வரை, இங்குமறுபதிவுசெய்கிறேன்.
சிறுபிள்ளை, சிறுவர்கள்தர்க்கத்தில்ஈடுபட்டுள்ளனரா, எப்பொழுது?: அக்காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் சிறப்புப் பெற்ற சிறுபிள்ளை / சிறுவன் “ஆளுடைய பிள்ளை” திருஞான சம்பந்தர் தான், அவர் தான் 638-656 காலத்தில் 16 வயது வாழ்ந்து, சமண-பௌத்தர்களை தர்க்கத்தில் வென்றவர். இதனை, தர்மகீர்த்தி பற்றி ஆராய்பவர்கள் கவனிக்காமல் இந்ருந்தது / இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. “மஹாதேவர்அவர்முன்புதோன்றி, எல்லாவற்றையும்போதித்தார். சிலநேரங்களில்மஹாதேவரே, அவருடையஉடலில்புகுந்து, அவருக்குத்தெரியாதவாதங்களைஎல்லாம்சொல்லிக்கொடுத்தார்”, என்றெல்லாம் தாரநாதர் விவரிப்பதும் நோக்கத்தக்கது. ஒருவேளை அக்காலத்திலேயே சம்பந்தர் சிறு வயதில் தன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்தி, பௌத்தர்-ஜைனர்களை வென்றதால், அவர் புகழ் பரவி, அதற்கேற்றார்போல, 17ம் நூற்றாண்டில், தாரநாத அப்புத்தகதை எழுதும் போது, தர்மகீர்த்தியை உயர்த்தி, சங்கராச்சார்யவை சிறுபிள்ளையாக்கி, குறைத்துக் காட்டினார் போலும்! இருப்பினும் சம்பந்தர் 16 ஆண்டுகள் வாழ்ந்தார், சங்கரர் 32 ஆண்டுகள் வாழ்ந்தார், என்றெல்லாம் கவனிக்கத் தக்கது. மேலும், சிறுவர்கள் மீது வன்முறையினை திணிப்பது, அதாவது, தோற்றால், இறக்க வேண்டும் போன்ற சரத்தையும் நோக்கத் தக்கது. ஏனெனில், சம்பந்தர், அதே காரணத்திற்காகத் தான், சிலர் ஜைனரை கழுவேற்றி வீட்டார் என்ற வாதத்தை வைத்து எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்கள் இத்தகைய விவரங்கள் முழுவதையும் படிப்பதில்லை போலும்.
14-15 வயதுபையனுடன்சண்டைபோடஆயிரக்கணக்கில்சமணர்கள்வந்ததுஏன்?: சம்பந்தர் காலம் [c.638-654 CE] என்பதால் அவர் 16 வயது வரை தான் வாழ்ந்தார் என்றாகிறது. அப்படியென்றால், அந்த வயதிலேயே உடனுக்குடன் செந்தழில் பதிகம் பாடக் கூடிய திறமைப் பெற்றிருந்தார்; மத-தத்துவங்களில் வாதம் புரிய வல்லவராக இருந்தார்; மருத்துவம் முதலியவற்றையும் அறிந்திருந்ததால் கூன்பாண்டியனின் நோயையும் தீர்த்தார் என்ற விவரங்கள் தெரிய வருகின்றன. அதனால், சிறுவயதிலிருந்தே அவற்றையெல்லாம் கற்றுத் தேர்ந்தார் என்றாகிறது. ஆகவே, அத்தகைய சிறுவனுடன், வாதிட ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்தார்கள் என்பதே முரண்பாடாக இருக்கிறது. அக்காலத்தில் ஒருவர், இன்னொருவருடன் வாதம் புரிவார். தோற்றால், ஒப்புக் கொண்டு மற்றவரின் தத்துவத்தை, ஞானத்தை ஒப்புக்க்கொள்வார். ஆனால், ஜைனர் மற்றும் பௌத்தர் காலங்களில் தான், ஒன்று தங்களது மதத்தை ஏற்றுக் கொள் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கையுடன் வாதப்போரை ஆரம்பித்து வைத்தனர். அரசு சார்பில் மதத்தலைவர், ராஜகுரு போன்றோர் தோற்றால், அந்த அரசனை மதமாற்றி, அந்த அரசையும் அவர் மதசார்பான நாடாக்கினர். இவ்வாறு தான், ஒரு காலகட்டத்தில், பாரதம் முழுவதும் அதிகார ரீதியில் ஜைனர் மற்றும் பௌத்தர் கோலோச்சி வந்தனர். இருப்பினும் அவர்கள் பெரும்பான்மையினரான, சனாதன, வேத அல்லது இந்து நம்பிக்கையாளர்களை முழுவதுமாக மாற்ற முடியவில்லை.
சமணர்கள்வாதத்தில்தோற்றாலும்சபதத்தில்தாங்கள்தோற்கத்தயாராகஇல்லைஎன்றுவீம்போடுதாமேகழுவேறினார்கள்: ஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்று சில நூல்களில் இருக்கிறது. ஆனால் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்தில், வாதத்தில் சமணர்கன் தோற்றவுடன் ஞானசம்பந்தர் அவர்களை, “நாணிலீர்! மன்னன்முன்னர்நல்லசொல்கிறேன், கண்டீர்: பூணும்வெண்ணிறுபூசும்; போற்றிஒயஞ்செழுத்தைபோதும்” காணொணாமுத்திஇன்பம்காணலாம்,” என்றுதான் அருளினார். கழுவில் ஏற்றச் சொல்லவில்லை. சமணர் களில் சிலர் சைவ சமயத்தில் சேர்ந்தார்கள். ஆனால் பலர், வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள் என்று வருகிறது[1]. தக்கயாகப் பரணியிலும் இதே கருத்து உள்ளத. வாதத்தில் தோற்ற சமணர்களைக் கழுவேற்றுதல் ஆகாது என்று பிள்ளையார் விலக்கி அருள’ என்று வருமிடத்தில் சம்பந்தப் பெருமானின் பெருங் கருணைத் திறம் நன்கு புலப்படுகின்றது. அதுகாறும் வெளிவராத “தக்கயாகப் பரணி” நூலை ஶ்ரீமத் ஐயர் ஆராய்ந்து பதிப்பித்துக்கொண்டிருந்தார்: அவரோடு இவரும் அந்நூலைப் படித்து, ப்ரூஃப்” பார்த்துக் கொண்டும் இருந்தார். எனவே, பூரீமத் ஐயரின் கட்டளைப்படி அந்தக் கருத்தை வைத்தே, சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றவில்லை. சைவ சமயத்தில் சேருங்கள்” என்றே அருளினார்’ என எடுத்துக் காட்டப்படுகிறது[2].
தர்மகீர்த்தி தடுத்தது, சங்கராச்சார்ய கங்கையில் குதித்து செத்தது மற்றும் சம்பந்தர் தடுத்தது, சமணர் கழுவேறியது: தர்க்கத்தில் தோற்ற சங்கராச்சார்ய கங்கையில் குதிக்கும் போது தர்மகீர்த்தி தடுத்தது, பௌத்தத்தை ஏற்ருக் கொள்ல சொன்னார். இது வாரணாசியில் நடந்தது. அதேபோல சமணர் தோற்று கழுவேற எத்தனித்த போது, சம்பந்தர் தடுத்த போது, அவர்கள் கழுவேறினார்கள். அதாவது, வாதத்தில் தோற்றவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கை, சரத்து அக்காலத்தில் உண்டானதா என்று கவனிக்க வேண்டும். முகமதியர் பின்னர், இதே கொள்கையினைக் கடை பிடித்தது தெரிந்ததே. ஆக, இதில் வன்முறை ஊக்குவிப்பு என்பது எவ்வாறு நடக்கிறது, தானாக சாக ஒப்புக் கொள்வது என்பது தற்கொலையிலிருந்து வேறுபட்டதா, இல்லை, அவ்வாறு சாகாவிட்டாலும், சாவு அவர்களுக்கு காத்திருக்கிறது என்ற நிலையிருந்ததா, அல்லது, மரண தண்டனை கொடுத்து, இத்தகைய கதைகளை புராணம் போல எழுதி வைத்தனரா, முதலியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஆனால், இப்பொழுது, மதவாத, வகுப்புவாத திரிபுவாதங்கள், செக்யூலரிஸ போர்வையில், இந்துமதத்திற்கு , பிராமணர்களுக்கு எதிராக வைத்து எழுதி வருகின்றனர். அதில், எடுத்துக் காட்டப்பட்ட உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
தர்மகீர்த்திஇந்தியரா, வெளிநாட்டவரா?: விகிபிடியா[3] தர்மகீர்த்தி பற்றி இவ்வாறு கூறுகிறது, “தர்மகீர்த்தி(Dharmakīrti) (கிபி 7-ஆம்நூற்றாண்டு) இந்தியபௌத்தஅறிஞர். இந்தியதத்துவதர்க்கவியல்தர்சனத்தைஅறிமுகப்படுத்தியபௌத்ததுறவியாவார். மேலும்துவக்ககாலபௌத்தஅணுவாதக்கோட்பாட்டைகொள்கையைநிறுவியகொள்கையாளர். இவரதுபௌத்தஅணுவாதக்கோட்பாட்டின்படிபொருட்கள்எல்லாம்கணநேரம்இருப்பதாககருதப்படுகிறது. இவர்எழுதியநூல்ஹேது–பிந்துஆகும்.கிபிஏழாம்நூற்றாண்டில்சுமத்திராதீவில்பிறந்ததர்மகீர்த்திசைலேந்திரன்என்றபெயரில்இளவரசராகவாழ்ந்தவர். ஸ்ரீவிஜயம்பகுதியில்அறிஞராகவும், கவிஞராகவும்விளங்கியஇவர்பின்னர்இந்தியாவின்நாலந்தாபல்கலைக்கழகத்தில்பௌத்தஇயல்ஆசிரியராகப்பொறுப்புஏற்றுக்கொண்டார். பௌத்தசமயதத்துவங்களில்சிறந்துவிளங்கியவரும், காஞ்சிபுரத்தில்பிறந்தவரும், பௌத்தசமயதுவக்ககாலதர்க்கதத்துவஅறிஞராகவும்விளங்கியதிக்நாகரின்புகழ்பெற்றபௌத்ததத்துவங்களுக்குமீள்விளக்கஉரைகள்எழுதியவர். இவரைஎதிர்த்துவாதிட்டகுமரிலபட்டரைநாலந்தாபல்கலைக்கழகத்திலிருந்துவெளியேற்றியவர்”. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், பிராமணர், சங்கரர வென்றவர் என்று எல்லாவற்றையும் விடுத்திருக்கிறார். அதாவது ஆங்கில[4] “தர்மகீர்த்தி” ஒருமாதிரியாகவும், தமிழ் “தர்மகீர்த்தி” வேறுமாதிரியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளனர்[5]. ஒருவேளை இவ்வுண்மையினை அறிந்து, தமது சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறது என்று ஒருதலைப் பட்சமான விவரங்களை மட்டும் கொடுத்துள்ளனர் போலும்.
[5] If we go by Tibetan sources, he seems to have been born in South India and then to have moved to the great monastic university of Nālandā (in present day Bihar state) where he was supposedly in contact with other Buddhist luminaries, such as Dharmapāla (530–561 C.E.).https://plato.stanford.edu/entries/dharmakiirti/
சங்கராச்சார்யஇரண்டாவதுபிறவியில், இரண்டாம்முறைதர்மகீர்த்தியிடம்தோற்றுஉயிரிழந்தது: அடுத்த வருடம், சங்கராச்சார்ய பட்ட ஆச்சாரியாரின் மகனாகப் பிறந்தார். மூன்று வருடங்கள் தந்தையிடமும், இன்னொரு மூன்று வருடங்கள் மற்றவர்களிடமும் கற்று, வாதம் புரிய தேர்ச்சி பெற்றார். இங்கு வருடம் / வருடங்கள் என்றேல்லாம் இருந்தாலும், அவை என்ன ஆண்டுகள் என்று குறிப்பிடப்படவில்லை. ஏழாவது வயதில் தர்மகீர்த்தியுடன் வாதம் புரிந்தார், ஆனால், முழுவதுமாக தோற்கடிக்கப் பட்டார். தர்மகீர்த்தி தடுத்தும் கேளாமல், சங்கராச்சார்ய கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால், அவரது இளைய சகோதரர் கிழக்கு திசையில் தப்பியோடி விட்டார். 500 பிராமணர்கள் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர், 500 பிராமணர்கள் திரிபீடிகத்தை படிக்க ஆரம்பித்தனர்.
தர்மகீர்த்தியின்புகழ்உலகம்முழுவதும்பரவியது, பலமடாலங்கள்ஏற்படுத்தியதுமுதலியன: மகதத்தில் பூர்ண மற்றும் மதுராவில் பூர்ணபத்ரா என்ற பிராமணர்கள் இருந்தார்கள். அவர்கள், மிக்க சக்திவான்கள், பணக்காரர்கள் மற்றும் தத்துவ சாஸ்திரங்களில் வல்லவர்கள். சரஸ்வதி மற்றும் விஷ்ணு போன்ற கடவுளர்களது ஆசிகளைப் பெற்றவர்கள். ஆனால், இவர்களும் தர்மகீர்த்தியிடம் வாதமிட்டு தோற்றுப் போயினர். இந்த விதமாக, இவரது புகழ் உலகமெல்லாம் பரவியது. மகதத்திற்கு அருகில் இருந்த மதங்க ரிஷி காட்டில், வாழ்ந்து மந்திரங்களில் சித்தி பெற்றார். அப்பொழுது, விந்தியாசலத்தில், உத்புல்லபுஸ்ப என்பனின் மகனான புஸ்ப என்ற அரசன் ஆண்டு வந்தான். தர்மகீர்த்தி அவனிடத்தில் சென்று, தன்னை தெரிவித்துக் கொண்டபோது, பல மடாலங்களைக் கட்டிக் கொடுத்தான். தர்மகீர்த்தி அங்கு வாழ்ந்து வந்தார். “பிரமாணம்” பற்றி ஏழு நூல்களை இயற்றினார். ஆயிரக்கணக்கில் பிராமணர்களை வென்று, 50 இடங்களில் மடங்களை ஏற்படுத்தினார்[1]. குஜராத் வரை சென்று வெற்றி கொண்டார். கோடாபுரி என்ற கோவிலைக் கட்டினார். இங்கு 80 சித்தர்களின் ஸ்தோத்திரங்கள் படி, தர்மகீர்த்தி வானத்தில் பறந்து சென்று பலரை வென்றார். ஆனால், இவையெல்லாம் நம்பும்படியில்லை[2].
மூன்றாவதுமுறையாகசங்கராச்சார்யமூன்றாவதுபிறவியில், தர்மகீர்த்தியிடம்தோற்றுஉயிரிழந்தது: இந்நிலையில் சங்கராச்சார்ய மறுபடியும் பிறந்து, வளர்ந்தார். தனது 16 அல்லது 17ம் வயதில் மஹாதேவருடைய தரிசனம் பெற்று, வாரணாசிக்கு வந்து தர்மகீர்த்தியுடன் வாதம் புரிய அரசன் மஹாஸ்யானி என்பவனிடம் அறிவித்தார். அரசன் மணியடித்து, இவ்வாதத்தைப் பற்றி பிரகடனம் செய்தான். நான்கு திசைகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் வந்து கூடினர். தெற்கு திசையிலிருந்து, தர்மகீர்த்தி வரவழைக்கப்பட்டார். 5,000 பிராமணர்கள் கூடியிருக்க வாதம் ஆரம்பித்தது. ஆனால், சங்கராச்சார்ய, தர்மகீர்த்தியிடம் தோற்றுப் போனார். கங்கையில் குதிக்க தயாரானார், தர்மகீர்த்தி தடுத்தார், ஆனால், ஒப்புக் கொள்ளாமல் குதித்து உயிரை விட்டார். இதனால், பல பிரமாணர்கள் மதம் மாறினர், இவரின் உபாசகர்களாகவும் மாறினர். இதனால், பௌத்தம் பெருகிக் கொண்டே இருந்தது.
நான்காவதுமுறையாகசங்கராச்சார்யநான்காவதுபிறவியில், தர்மகீர்த்தியிடம்தோற்றுஉயிரிழந்தது: தர்மகீர்த்தியின் வாழ்நாள் இறுதியில், இதே சங்கராச்சார்ய மறுபடியும் பிறந்து, முன்னர் விட அதிபுத்திசாலியானார். மஹாதேவர் அவர் முன்பு தோன்றி, எல்லாவற்றையும் போதித்தார். சில நேரங்களில் மஹாதேவரே, அவருடைய உடலில் புகுந்து, அவருக்குத் தெரியாத வாதங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார். ஆக, இம்முறை 12வது வயதிலேயே, தர்மகீர்த்டியுடன் வாதம் புரிய தயாராகி விட்டார். “முதலில் மற்றவருடன் வாதம் புரிவாயாக, ஏனெனில், தர்மகீர்த்தியுடன் வாதம் புரிந்து ஜெயிப்பது கடினம் ஆகும்”, என்று சிலர் அறிவுருத்தினர். அதற்கு, சங்கராச்சார்ய, “அவரை வெல்லாமல், உண்மையான புகழ் கிட்டாது”, என்றார். அதேபோல, தெற்கில் இருக்கும் தர்மகீர்த்தியிடம் சென்று, வாதம் புரிந்து தோற்றார். அவரின் சீடரானார். தெற்கில் சங்கரரை பௌத்தத்தை பிராமணர் போலவே இருந்து உபாசிப்பதாக, வழிபடுவதாகச் சொல்லப் படுகிறது[3]. புத்தருக்காக சங்கராச்சார்ய கட்டி கோவிலும் அங்கிருக்கிறது.
தெற்கிலிருந்துசங்கராச்சார்யவடக்குபோனதும், வடக்கிலிருந்ததர்மகீர்த்திவடக்கில்போனதும்: இந்த தர்மகீர்த்தி-சங்கராச்சார்ய வாத-மோத கதைகளில் மூன்று முறை தெற்கிலிருந்து சங்கராச்சார்ய வடக்கு போனதாகவும், வடக்கிலிருந்த தர்மகீர்த்தி வடக்கில் போனதாகவும் உள்ளது. நான்காவது முறைதான், இருவருமே தெற்கிலேயே வாதித்தாக குறிப்பிடப் படுகிறது. மூன்று முறை தோற்று, கங்கையில் உயிரைவிட்ட சங்கராச்சார்ய, நான்காவது முறை தோற்றபோது, அவரின் சீடராகிறார்! ஆக, இந்த தெற்கு-வடக்கு திசைகள் பௌத்தர்களை, திபெத்திய பௌத்தர்களை, ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. தர்மகீர்த்தியே, தெற்கில் பிரமாணராகப் பிறந்து, குமாரில பாட்டரின் மறுமகனாக இருந்து, பிராமண உடையை எடுத்துக் கொண்டபோது, குமாரில பட்டர் திட்டியதால், பௌத்தராக மாறினார் என்று கதைகள் சொல்கின்றன. நாலந்தாவில் போத்தித்து வந்த இவர், திபெத்தில் பிரபலமாக இருந்தார். இவரது காலம் ஆறு-ஏழாம் நூற்றாண்டுகள், சுமார் 600–660 CE, என்றெல்லாம் குறிக்கப்படுகின்றன[4]. கிடைத்துள்ள நூல்களில் காணப்படும் தத்துவம், தத்து விளக்கம், மறுப்பு-எதிர்ப்பு-ஆதரிப்பு போன்ற காரணிகளை வைத்துக் கொண்டு இம்முடிவுக்கு வந்துள்ளார்கள். எப்படியிருந்தாலும், இவர்கள் தர்மகீர்த்தியின் காலத்தை 500-660ற்குள் வைப்பதால்[5], நிச்சயமாக, இவர் ஆதிசங்கரர் காலத்தில் இருக்கவில்லை என்று உறுதியாகிறது. அப்படியென்றால், அது கட்டுக்கதை என்றாகிறது. அதாவது, பௌத்தர்கள் எழுதிவைத்த சர்ச்சைக்குள்ள, சரித்திரம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகளின் [polemical and controversial writings, legends and myths] ஆதாரமாக வைத்து புனையப் பட்ட இன்னொரு கதை என்றாகிறது.
மெத்தப்படித்ததர்மகீர்த்திசிறுவர்களிடம்ஏன்தர்க்கம் /வாதம்புரியவேண்டும்?: தர்மகீர்த்தியின் வயது இதுதான் என்று குறிப்பிடப்படவில்லை. மேலே குறிப்பிட்டபடி, ஆராய்ச்சியாளர்கள் அவர் 50-70 வருடங்கள் வாழ்ந்ததாக தோரயமாக கணக்கு போட்டு சொல்லியிருக்கிறார்கள். தர்மகீர்த்தி சங்கராச்சாரியரோடு பிரிந்த வாதங்கள் விவரங்களில் கீழ்கண்டவைப் பெறப்படுகின்றன. சங்கராச்சார்ய நான்கு முறை பிறந்து, மூன்று முறை இறந்து, மறுபிறப்பு எடுத்து, நான்கு முறை வாதம் புரிந்துள்ளார்:
தர்மகீர்த்தியின்வாதங்கள்
சங்கராச்சார்யரின்வயது
தோற்றப்பிறகுசங்கரச்சார்யரின்நிலை
முதல் வாதம்
குறிப்பிடப்படவில்லை
கங்கையில் குதித்து இறப்பு
இரண்டாம் வாதம்
7
கங்கையில் குதித்து இறப்பு
மூன்றாம் வாதம்
16-17
கங்கையில் குதித்து இறப்பு
நான்காம் வாதம்
12
தர்மகீர்த்தியின் சீடரானார்.
ஆக, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு வருடம் இடைவெளி விட்டு, இவரது காலத்தை கணக்கிட வேண்டுமென்றால், 1 + 7 + 1 + 16 + 1 + 12 = 38 வருடங்கள் வருகின்றன. அதாவது, 38 ஆண்டுகளில் ஒரே ஆளுடன் நான்கு முறை வாதிட்டிருக்கிறார். முதல் தடவை, இவர் வாதிடும் போது, இவரது வயது 50 என்று வைத்துக் கொண்டால் கூட, இவருக்கு கடையாக வாதிடும் போது 88 வயதாகியிருக்க வேண்டும். அப்படியென்றால், 50, 67, 75 மற்றும் 88 வயதுகளில் வாதிட்டபோது, 7, 16-17 மற்றும் 12 வயது சிறு பையன்களிடம் தான் வாதித்துள்ளார். வயதான தேர்ந்த, சிறந்த தர்க்கம் புரிய யாரும் இல்லாமலா போய்விட்டனர்? நிச்சயமாக தர்க்கத்தில் யார்-யாருடம் தர்க்கம் புரியலாம் என்ற நியதியெல்லாம் இருக்கிறது. சிறுவர்களுடம் / சிறுவர்கள் தர்க்கம் புரியலாம் என்றால், அக்காலத்தில் அத்தகைய நிலை என்ன, ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்றும் ஆராய வேண்டியுள்ளது. போதாகுறைக்கு, அக்குழந்தைகளை கங்கையில் குதித்து இறந்துள்ளனர். அப்படியென்றால், அந்த சிறுபையன்களின் தைரியம், அறிவு, பல்லாயிரம் கி.மீ நடந்து வாரணாசிக்கு வந்தது முதலியவை பிரமிப்படைய வைப்பதாக இருக்கிறது. பௌத்தர்கள் ஏன் அப்படி, சிறு பிள்ளை வென்றதாக கதைகள் எழுதி வைக்க வேண்டும்?
[1] He established about fifty48 centres for the Doctrine. From there he went to the border-Iand49 *Gujiratha. He
converted many brahmarJa-s and tirthika-s into the Law of the Buddha. He built a temple called *Gotapuri. 235
[2] What is now current as the stotra of the eighty siddha-s cannot be considered reliable. Still it is clear that the account of his flying through the’ sky after defeating his opponents etc is based on this. 235.
[3] Towards the end of his life the same *Sal11karacarya was born again as the son of *BhaHa * Adirya the second54 and in intelligence became stronger than before. His god (Mabadeva) appeared before him in person and gave him lessons. Sometimes he (Mahadeva) even merged into his body and taught him some hitherto unknown arguments. At the age of twelve, he wanted to enter into a debate with Sri Dlnrmakirti. The . brahmary,a-s told him, ‘It is better for the time being to debate with others, whom you are sure to defeat. But it is hard to defeat Dharmakirti.’ He said, ‘Without defeating him there can be no real fame in debate.’ Saying this, he went to the south and started debate with
this agreement that the defeated one had to accept the other’s creed. Sri Dharmakirti became victorious and converted him into a follower of the Law of the Buddha. It is said that in the south, he (Sa11lkara) used to worship
the Law of the Buddha as a brahmaIJa [Fol 93A] following the practices of an upasaka. The temple built55 by him still exists. 236-237
[4] Balcerowicz, Piotr. On the Relative Chronology of Dharmakīrti and Samantabhadra. Journal of Indian Philosophy 44.3 (2016): 437-483.
. “Dharmakirti and Sankaracharya.” Journal of Royal Asiatic Society 18.
Lindtner
530-600 CE
partly on the basis of the problematic dating of the Madhyamaka-ratna-pradīpa and its attribution to Bha¯viveka, etc.)
Kimura
550-620 CE
mainly on the basis of circumstantial evidence of Chinese sources, attempted to push Dharmakı¯rti’s date back to 550–620.
Erich Frauwallner
600-660 CE
rest primarily on the juxtaposition of the travelogues of two Chinese
pilgrims who visited Na¯landa¯ university where Dharmakı¯rti is known to have taught. Xuanzang (602–664), who visited Na¯landa¯ during his travel to India between 629–641, apparently99 was completely silent on Dharmakı ¯rti, even though he did mention the names of some renowned Buddhist thinkers teaching at Na¯landa¯ 1961
650-700 CE
On the other hand Yijing (635–713) travelled to Na¯landa¯ during his trip to India between 673–685 and included Dharmakı¯rti’s name among the prominent teachers of the university.
P Balcerowicz
550-610
As contemporary of Samantabhadra 530–590 and Pu¯jyapa¯da Devanandin 540–600
இடைக்காலம்வரைதென்னிந்தியாவில்ஜைன–பௌத்தத்தின்தாக்கம்: ஆரம்பகாலங்களில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் கிரேக்கர், அரேபியர் பிறகு முகமதியர் என்று அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு, முக்கியமாக தங்களது வியாபாரத்திற்கு முக்கியம் கொடுத்து வாழ்ந்ததால், இவர்கள் எண்ணிக்கைக் குறைய-குறைய தாக்குதல்கள் அதிகமாயின. குறிப்பாக பௌத்தம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலேயே முதல் நூற்றாண்டுகளில் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. டொனால்டு ஏ. மெக்கன்ஸி என்பவர் தன்னுடைய புத்தகத்தில் இவ்விவரங்களை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்[1]. ஆனால், யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் ஆதிக்கம் பெற்றுவந்த நிலையில், மற்றவர்களின் ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்தன. மற்ற நம்பிக்கையாளர்களையும் மதம் மாற்ற ஆரம்பித்தனர். அம்முயற்சிகளில், இம்மூன்று மதங்களுக்கிடையே இருந்த போட்டி, சன்டைகள், போர்கள் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன. அந்நிலையில் மற்ற மதங்களின் நிலை பற்றி சொல்லவேண்டியதில்லை. காலனிய ஆதிக்கம் வந்தபோது, ஐரோப்பியர் ஆசிய-ஆப்பிரிக்க-அமெரிக்க நாட்டு மக்களை அடக்கியாள திட்டமிட்டனர். 20 நூற்றாண்டுகள் வரை, அத்தகைய முறைகள் சித்த்ஆந்தம் மூலமும் செயல்பட்டது. அதற்கு சரித்திரம் [அவர்களே எழுதிய] உதவியது.
ஜைன–பௌத்தர்கள்வடமேற்கு, வடக்கு, தெற்குஎன்றுநகர்ந்தது: மதமோதல்கள் அதிகமானபோது, ஜைன-பௌத்தர்கள், இடம் பெயர வேண்டியதாயிற்று. இவர்கள் மதம் மாற நேரிட்டது. தப்பித்தவர்களுக்கு, இந்தியா புகலிடம் அளித்தது. இடைக்காலத்தில், ஜைன-பௌத்த மதங்கள் முகமதியர்களின் தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல், தெற்கில் நகர்ந்து செல்ல ஆரம்பித்தனர். முன்பும் அவர்களது மடாலயங்கள் இருந்தன. ஆனால், இடைக்காலத்தில், தங்களது அதிகாரத்தைத் தக்கக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்பு, அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களுடன் – இந்துக்களுடன், தங்களது நிலையை அறிந்து அனுசரித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், முகமதியர்களின் அடக்குமுறைகளினால், பெரிதும் பாதிக்கப்பட்டது இவர்கள் தாம். “களப்பிரர்களின்” கொடுமைகளை இங்கு விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. முகமதியர் வடக்கில் கொள்ளை, கொலை அட்டகாசம், ஆதிக்கம் முத்லியவை அதிகமாகிய போது, அரசர்களின் நிலையும் மாறின. இதனால், இவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர். ஆனால், முதல் நூற்றாண்டுகளில் இவர்கள் மற்றவர்களுக்கு அதிக கொடுமைகள் புரிந்ததால், மக்கள் விழிப்புக் கொண்டு, சைவம்-வைணவம் என்ற ரீதியில் ஜைன-பௌத்தர்களை எதிர்க்க ஆரம்பித்தனர். இதனால், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் மூலம், விழிப்புணர்வு ஏற்பட்டது. 14ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் முகமதியர்களின் அட்டகாசம் ஆரம்பித்தது.
லாமாதாரநாதாஎன்பவரின் “இந்தியாவில்பௌத்தம்” என்றநூல்கொடுக்கும்விவரங்கள்[2]: லாமா தாரநாதா 1575ல் பிறந்து, தனது 34ம் வயதில் [சுமார் 1609ம் ஆண்டு] “இந்தியாவில் பௌத்தம்” என்ற நூலை எழுதினார். இது “புத்த மஹாத்மியம்” என்றும் சொல்லலாம், ஏனெனில், முழுவதும் சரித்திரமாக இல்லாமல், புத்தர் மற்றும் பௌத்தத்தின் சிறப்பை, மேன்மையை மற்றும் வெற்றியை புகழ்ந்து எழுதப்பட்ட கதைகள் கொண்ட புராண நூலாக உள்ளது[3]. ஏ.ஐ. வோஸ்திரிகோவ், இந்நூல் 143 ஏடுகளைக் கொண்டிருந்தன, ஏ. குருன்வெடல் என்ற ஜெர்மானியர் மொழிபெயர்த்தார், மூல சுவடிகள் / ஏடுகள் ஐந்தாவது தலாய் லாமா காலத்தில் [1617-1682] பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டபோது, அழிக்கப்பட்டது[4]. இங்கு பௌத்தர்களை யார், எதனால், ஏன் தாக்கப்பட்டனர் என்று தெரியவில்லை, பிறகு மீண்ட ஆவணங்களை வைத்து, உருவான, அத்தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இப்பொழுது, பௌத்தர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை[5].
தர்மகீர்த்தியின்புகழும்பௌத்தத்தைபரப்பியவிதமும்: காககுஹா என்ற இடத்தில் தர்மகீர்த்தி என்ற புத்த பிக்ஷு இருந்தார். அவர் ஆறு தர்சனங்களை அறிந்த தத்துவ விற்பன்னர்களைத் தோற்கடித்து, பௌத்தத்தின் சிறப்பை எடுத்துக் காட்டினார். ஆயிரக் கணக்கான பிராமணர்கள் தோற்று, பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர். நிர்கந்த, மீமாஸக, பிராமண, தீர்த்திக என்று எல்லா பிரிவினரையும் வெற்றிக் கொண்டார். மணியை அடித்து, “இன்னும் என்னுடம் வாதம் புரிய யாராவது உள்ளனரா?”, என்று கேட்டார். ஆனால், தப்பித்தவர் எல்லாம் விந்தியாசலம் தாண்டி ஓடி மறைந்தனர். அவர் பழைய சித்தாந்திகளின் வழிபாடு ஸ்தலங்களை, அவை அழிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததால், புதுப்பித்துக் கட்டினார்[6]. பிறகு, காட்டில் சென்று தியானம் செய்ய சென்று விட்டார். அதாவது அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் இடிக்கப் பட்டன, பௌத்தாலயங்களாக மாற்றிக் கட்ட்டப்பட்டன என்பதை அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய, பௌத்தப் பற்று கொண்ட தர்மகீர்த்தி, பழைய கோவில்களை ஒன்றும் புதுப்பித்துக் கட்டியிருக்க மாட்டார். அதாவது, ஆறாம் நூற்றாண்டிலேயே அத்தகைய இடிப்புகள் நடந்துள்ளது என்பதனையும் கவனிக்க வேண்டும்[7].
சங்கராச்சார்ய, தர்மகீர்த்தியைஎதிர்கொண்டது: இந்நிலையில் சங்கராச்சார்யா, ஶ்ரீ நளேந்திரர் என்பருக்கு தான் வாதம் புரிய தயாக இருப்பதாக செய்தி அனுப்பினார். ஆனால், நாலந்தாவில் உள்ள பிக்ஷுக்கள் ஒரு வருடம் கழித்து வாதம் வைத்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்தனர். அதாவது, தெற்கில் சென்ற தர்மகீர்த்தியை வரவழைக்க நேரத்தை எடுத்துக் கொண்டனர். வாரணாசியில், அரசன் பிரதோத்யா / பிராதித்யா வாதத்திற்கு ஏற்பாடு செய்தார். சங்கராச்சார்யா, தர்மகீர்த்தியிடம், “தர்மகீர்த்தி தோற்றால் கங்கையில் மூழ்கடிக்கப்பட வேண்டுமா அல்லது மதம் மாற்றப்பட வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்கலாம், ஆனால், நான் தோற்றால் கங்கையில் குதித்து என்னுயிரை மாய்த்துக் கொள்வேன்”, என்று எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார்[8]. இருவரிடையே வாதம் ஆரம்பித்தது, ஆனால், சங்கராச்சார்யா எல்லா விதத்திலும் தோற்கடிக்கப் பட்டார். அவருக்கு பதில் அளிக்க எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டது. அந்நிலையில், கங்கையில் குதித்து, இறக்கத் தயாரானார். அப்பொழுது, தர்மகீர்த்தி தடுத்தார். ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை, தன்னுடைய சீடனான பட்ட ஆச்சார்யாவை நோக்கி, “மொட்டையெடித்துக் கொண்டு இவருடன் வாதம் புரிவாயாக, ஒரு வேளை உன்னால் வாதத்தில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், நான் மறுபடியுமனுன்னுடைய மகனாகப் பிறந்து வந்து இவருடன் வாதிப்பேன்”, என்று கூறி, கங்கயில் குதித்து உயிரை விட்டார். தர்மகீர்த்தி சங்கர்ராச்சார்யருடைய சீடர்கள் பலரை பௌத்த மதத்திற்கு மாற்றினார். சிலர் தப்பி ஓடி விட்டனர்.
[1] Donald A. Mackanzie, Pre-Christian Buddhism in UK and Ireland, Blackie & Son Ltd, UK, 1928.
[2] Deviprasad Chattopadhyaya (ed.) and Lama Chimpoa (Trans.), Taranatha’s History of Buddhism in India, Motilal Banarasidas, New Delhi, 1990.
[3] Deviprasad Chattopadhyaya , in his preface to this book writen on May 26, 1970, Preface, p.xxiii
[4] The original printing blocks of Taranatha’s works were largely destroyed “during the persecution of the Jo-nan~pa sect in the time of the Fifth Dalai Lama (Nag-bdan-bJo-bzanrgya-mtsho: A.D. 1617-1682) in the first half of the 17th century AD. Preface, p.xxiv.
[5] பௌத்தம் சைனாவினால் எப்படி கட்டுப்படுத்தப் பட்டது போன்ற விவரங்களையும் இவர்கள் படிப்பதில்லை, ஆராய்ச்சி செவதில்லை.
[6] He next went to *DravaIi and, by ringing a bell, proclaimed: ‘Is there anybody in this place capable of entering into a debate?’ Most of the tirthika-s ran away while some admitted that they were not capable of it. He rebuilt there all the older centres of the Doctrine which had been damaged. He sat on meditation in a solitary forest. 232
[7] ஏனெனில், முகமதியர்களாக மாறியவர்களில் பெர்ம்பாலோர் பௌத்தர்களாக இருந்த நிலையில், அவர்களது கோவில் இடிப்பு, விக்கிர-அழிப்பு சித்தாந்தம் இன்னும் அதிகமாகின என்பதை அவர்களது நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
[8] On the ev; of the debate between *Sal11karadirya and Sri Dharmakirti, * Sa111kara declared to the people in the
presence of the king: ‘In case of our victory, we shall decide whether to drown him into the *GaIlga or to convert him into a til’thika. In case of his victory, I shall kill myself by jumping into the *Gal1ga.’ 233.
பௌத்தம்இந்தியாவில்வலுவிழந்ததுஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)
ஆதி சங்கரர் பௌத்தர்களைக் கொன்று குவித்த கதை உருவானது: இனி ஆதிசங்கரர் எப்படி படைகளுடன் திக்விஜயம் செய்து, சென்றவிடமெல்லாம் பௌத்தர்களைக் கொன்றுகுவித்தார் என்ற குற்றச்சாட்டைப் பார்ப்போம். இக்கருத்தை இன்றைய பௌத்தர்கள், நியோ-பௌத்தர்கள், அம்பேத்கரைட்ஸ், தி.கவினர், மற்ற ஹிந்து-விரோத குழுக்கள் முதலியோர் பரப்பி வருகின்றனர். உண்மையினை ஆராயாமல், சில மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்களும் அதை பிரசாரம் செய்து வருகின்றனர்.
K. Jamanadas, Tirupati Balaji was a Buddhist Shrine, www.ambedkar.org/Tirupati/Tirupati.pdf
K. S. Bhagavan, Adi Shankara’s Anti-people philosophy, The Modern Rationalist, Vol.XII, no.6, Feb.1985, pp.8-12.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -1, The Modern Rationalist, Vol.XII, no.7, March 1985, pp.5-6.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -2, The Modern Rationalist, Vol.XII, no.8, April 1985, pp.5-10.
David N. Lorenzen, Warrior Ascetics in Indian History, Journal of the American Oriental Society, Vol. 98, No. 1 (Jan. – Mar., 1978), pp.61-75 (article consists of 15 pages).
இவையேல்லாமே, “சங்கரவிஜயம்” என்ற நூற்களில் காணப்படும், சில வரிகளை வைத்துக் கொண்டு, அத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆதிசங்கரரைத் தாக்கும் போக்கில், இந்துமதத்தை தூஷிக்க வேண்டும் என்ற போக்குதான், இவர்களின் எழுத்துகளில் உள்ளதே தவிர, உண்மையினை அறிய வேண்டும் என்ற ஆராய்ச்சி நெறி காணப்படவில்லை.
18-19வதுநூற்றாண்டுகள்வரைதிருத்தப்பட்டசங்கரவிஜயங்கள்: உள்ள “சங்கரவிஜயம்” எனப்படும் நூல்களைப் படிக்கும்போது, காஞ்சிமடம் மற்றும் சிருங்கேரிமடம் இவற்றிற்குள் உள்ள பூசல்கள், சண்டைகள் அத்தகைய சங்கரவிஜய எழுத்துப் பிரதிகளில் தத்தமது மடத்தின் பெருமையினை பறைச்சாற்றிக் கொள்ள பல மாற்றங்களையும், இடை செருகல்களையும் செய்துள்ளார்கள் எனத்தெரிகிறது.
ஸ்ரீராம சாஸ்திரிகள், ஆனந்தகிரிசங்கரவிஜயத்தில்ஸ்ரீகாஞ்சிஸ்ரீமடம், ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
…………………………, வ்யாஸாசலீயசங்கரவிஜயம், காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003.
நடுநிலையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவரின் ஆராய்ச்சியின்படி, சங்கரவிஜயங்கள் எல்லாம் 18-19ம் நூற்றாண்டுகள் வரை எழுதப்பட்டு வந்துள்ளன. அதாவது, திருத்தங்கள், மாற்றங்கள், இலைசெருகல்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆகையால், சரித்திர ரீதியாக அவை சொல்வதை எடுத்துக் கொள்ளமுடியாது. மற்ற எல்லா மடங்களும் ஆதிசங்கரர் காலம் 509-477 BCE என்று பின்பற்றும்போது, சிருங்கேரி 788-820 CE தேதியை பயன்படுத்துகிறது. ஆகவே ஆதிசங்கரர் முதல் தற்பொழுதுள்ள சங்கராச்சாரியார்களின் பட்டியல்களும் அவ்வாறே உள்ளன. அதாவது சிருங்கேரியின் பட்டியலின்படி 36வது மடாதிபதி பாரதி தீர்த்தர் ஆவர். முதல் எட்டு மடாதிபதிகளுக்கு தேதிகள் குறிப்பிடவில்லை. பத்தாவது மடாதிபதி வித்யா சங்கர தீர்த்த என்பவருக்கு C.1228-C.1333 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
A. K. Sastri, A History of Sringeri, Prasaranga, Karnataka University, Dharwad, 1982, Appendix – III.
காஞ்சிமடம் மடாதிபதிகளின் வரிசைபடி 509-477 BCEலிருந்து ஆரம்பித்து
தற்பொழுதையவர் 69வதாக உள்ளார். பொதுவாக, இம்மடங்கள் தங்களது தொன்மையினை எடுத்துக் காட்டிக் கொள்ள மேற்கொண்டுள்ள போட்டியில், ஆதிசங்கரரின் தொன்மையினை பாதிக்கும் முறையில், சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். அதனால், அவற்றில் காணப்படும் வேறுபாடுகளை, இந்துவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்.
காலின்மெகன்ஸி, ஓலைச்சுவடிசேகரிப்பு, பிரதியெடுத்தல், பிழை / திருத்தங்கள்பெருகுதல்: காலின் மெகன்ஸி என்பவர் பல இடங்களுக்குச் சென்று, லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் (இந்தியாவின் அக்காலப் புத்தகங்கள்), முக்கியமான நாணயங்கள், அத்தாட்சி பொருட்கள் முதலியவற்றை சேகரித்து இங்கிலாந்திற்கு அனுப்பி வந்தார். ஆனந்தானந்தகிரி அல்லது ஆனந்தகிரி என்பவரால் எழுதப்பட்ட சங்கரவிஜயம் அதில் இருந்தது. மெகன்ஸி அதைப் படித்துவிட்டு, “சங்கரரின் கட்டுக்கதை” என்று குறிப்பிட்டார்.
Colin Mackanzie, The Oxford Catalogue of Sanskrit Manuscripts, Bibilotheica Indica series, London, 1881.
ஆனால், நம் மக்களோ அக்கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டு சரித்திரம் ஆக்க முயற்ச்சிக்கின்றனர். மெகன்ஸி சில நேரங்களில் ஓலைச்சுவடிகள் அரிதாக இருந்தால் பிரதியெடுக்கச் செய்து அதனை வைத்து அசலை எடுத்திச் சென்றுவிடுவார். அவரிடம் வேலைப் பார்த்தவர்கள் இந்திய பண்டிதர்களே. 18-19வது நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் இந்திய சமூகத்தைச் சாதிகளின்மீதும், சமயப்பிரிவுகள், குறிப்பாக சமய-உட்பிரிவுகள் மூலம் பிரிக்க முயன்றனர். இதற்காக பல “ஜாதி-சரித்திரங்கள்” எழுதவைத்தனர்.
அதுமட்டுமல்லாது, நீதிமன்றங்களில் தமது மதப்பிரச்சினைகளை எடுத்துச் செல்லத் தூண்டி அதற்கேற்ற ஆதாரங்களைக் கேட்க ஆரம்பித்தனர். அவ்வாறு கேட்கும்போது, இந்தியர்கள் ஆதாரங்கள்/அத்தாட்சிகளை எடுத்துவருவர், அவற்றை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுங்கள் என்று கூறலாம் அவற்றை அபகரித்து விடலாம் என்பதுதான் அவர்களின் யுக்தி.
புதிய சங்கர விஜயங்கள் உருவானது எப்படி?: உதாரணத்திற்கு, 1844ல் காஞ்சிபுரத்தில் “தாதாங்க-ப்ரதிஸ்தா” என்ற சடங்கை ஜம்புகேசஸ்வரத்தில் உள்ள அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு செய்வதற்கு இரண்டு மடங்களும் போட்டியிட்டன. உடனே ஆங்கிலேயர்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாணப் பணித்தனர். விவரம் அறியாது அவ்வாறே சென்றன. ஆதாரம் கேட்டபோது, காஞ்சிமடம் “சிவ-ரஹஸ்யம்” மற்றும் “மார்க்கண்டேய-சம்ஹிதை” என்ற இரண்டு நூல்களை ஆதாரமாக சமர்ப்பித்தனராம். ஆனால், சிருங்கேரிக்கு அத்தகைய ஆதாரம் இல்லாதபோதுதான், இந்த சங்கரவிஜயம் இப்பொழுது உலாவரும் “வித்யயரண்யரின் சங்கரவிஜயம்” எனப்படும் நூல் உருவாக்க்கப்பட்டதாம்!
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003, ப.46.
பிறகு படிப்படியாக மற்ற விவரங்கள் சேக்கப்பட்டன. டபிள்யூ. ஆர். அந்தர்க்கர் எடுத்துக்காட்டுபவை:
சித்சுக பிரதியில் “ஜைனர்கள், மஹாவீரர்”, என்றிருந்தது சதாநந்த,
சித்திவிலாச பிரதிகளில், “பௌத்தர்கள், பௌத்த குரு” என்று மாற்றப்பட்டுள்ளது (ப.28).
மற்ற சங்ரவிஜங்களில், சிவன் சங்ரராக அவதாரம் எடுக்கும்போது, பிரஹத்-சங்கரவிஜயத்தில், விஷ்ணுவே புத்தராக அவதாரம் எடுக்கிறார் (ப.56).
ஒரு குறிப்பிட்ட சங்கரவிஜய பிரதிகளிலேயே உள்ள சுலோகங்கள் 11 முதல் 473
வரை வித்தியாசப்படுகின்றன (ப.49-51).
மத்வ, ஆனந்தகிரி முதலிய சங்கரவிஜயங்களைத் தவிர, மற்றவைகளில் ஜைனர்கள், பௌத்தர்கள் குறிப்பிடப்படுவதில்லை.
சிருங்கேரி சங்கரவிஜயத்தில் “‡பனர்”, “திகம்பரர்” என்ற வார்த்தகள்
அதிகமாகவும் “புத்த” என்ற வார்த்தை குறைவாகவும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.
“மத்வரால்” எழுதப்பட்டது என்பது, 1798 வரை ததருத்தி எழுதப்பட்டு
வருகிறது (ப.49).
ஐரோப்பியர்களே, சீனர்களின் குறிப்புகளை அளவிற்கு மீறி நம்பவேண்டாம்
என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் நாம், அவற்றை முழுவதுமாக
நம்பொகிறோம் (ப,98).
ஆதி சங்கரர் அரேபியாவுக்குச் சென்று போதித்தது: சீன-குறிப்புகளினின்றுதான் இந்த சர்ச்சை எழும்பியுள்ளதால், ஆதாரங்கள் இல்லாமல், சரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள், இதனை பெரிது படுத்து எழுதுவது தகாததாகும். ஆகவே, ஆங்கிலேயர்களும் தமது பங்கிற்கு இடைசெருகல்கள் செய்திருந்தால், அது அவர்களுக்குத் தான் தெரியும். எனவே, இந்தியர்கள் பல விதங்களில் பாதிக்கப்படும் நிலையில்தான் இருக்கின்றனர். ஆதிசங்கரர் அரேபியாவிற்கு சென்று போதித்தது: இன்னும், வேடிக்கை என்னவென்றால், சங்கரர் தமது திக்விஜயத்தில் அரேபியாவிற்குக் கூடபோனார், ஆகாயத்திலிருந்தே அரேபியர்களுக்கு போதித்தார் என்றும் உள்ளது! “விம்ஸர” என்ற நூல், “ஆதிசங்கரர் 64 நாட்களுக்கு வானத்தில் இருந்து கொண்டே வேதங்களின் மூன்று மார்க்கங்களான, கர்மா, உபாஸனா மற்றும் ஞானம் முதலியவற்றை அங்கு வாழ்ந்த யூகிக்களுக்கு அரேபிய மொழியிலேயே உபதேசித்தார். அவர்களும் சிரத்தையாக அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அரேபிய மொழியிலேயே அவற்றை எழுதி வைத்துக் கொண்டனர். அவைதாம் பிறகு புனித குரான் ஆனது”.
K. V. Subbaratnam, The Date of Sri Sankara, Vani Vilas Press, Srirangam, 1987, p.24
[கடல் கடந்து சென்றால், சங்கரரையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள் என பயந்து, அவரை ஆகாயத்தில் பறக்கவிட்டதுடன், ஆகாயதிலேயே அதாவது பூமியின்மீது கால்கள் படாமல் நிறுத்திவைத்தது நன்றாகவே தெரிககறது! பாவம், இடைச்செருகல் செய்தவர், காலத்ததற்கேற்ற்வாறு செய்துள்ளார் போலும்!]
ஜைன-பௌத்த சர்ச்சை நூல்கள் இத்தகைய நூல்களுக்கு தூபம் போட்டது: முன்பு வாதங்களில் தோற்றவர்கள் மேற்கில் கடலுக்கு அப்பால் அனுப்பப்பட்டனர் என்று குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. ஆகவே இவற்றை வைத்துக் கொண்டு, முகமது நபியே, சங்கர அத்வைதம் அவ்வாறு அறிந்து, தானும் பலகடவுளர்களை வழிபட்டு வந்த அரேபியர்களை ஒன்றுபடுத்தி, ஒருபுதிய மதத்தை நிறுவினார் என்று வாதிடலாம். ஏனெனில், முகமது நபி, மெக்காவில் இருந்த 360 விக்கிரங்களை உடைத்தாரம். அப்பொழுது, அவர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ஒரே ஒன்றை விட்டுவைத்தாராம். அதுதான் காஃபாவில் உள்ள விக்கிரம் / கருப்பான வெள்ளைக்கல். உண்மையில், ஆராய்ச்சிரீதியில், காலக்கணக்கியல் மற்றும் இதர ஆதாரங்களுடன், அத்தகைய கருதுகோளை சித்தாந்தம் ஆக்கலாம், சித்தாந்தத்தை ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கலாம், சரித்திரமாக்கலாம். [இப்பொழுது ஆதிசங்கரர் தமது அத்வைதத்தை இஸ்லாத்திலிருந்து காப்பியடித்துதான் உருவாக்கினார் என்று சரித்திர ஆசிரியர்கள் தாராளமாக எழுதி வருகிறார்கள்].
ஆதிசங்கரர்சுதன்வன்படைகளுடன்சென்றாரா?: இனி, சங்கரதிக்விஜயத்திற்கு வரும்போது, குறிப்பாக, “மத்வர்/மத்வாச்சாரியார்” என்பவர் எழுதியாகச் சொல்லப்படும் சங்கரவிஜயத்தின்படி, “சங்கரர் சுதன்வ என்ற அரசன், மற்றும் பக்தகோடிகளுடன் தனது தத்துவத்தைப் பரப்புவதற்கும் மற்றும் அதனை எதிர்ப்பவர்களை வாதிட்டு ஜெயிப்பதற்கும் புறப்பட்டார்” (காண்டம்.15, வரி.1). இதில் என்ன வேடிக்கை என்றால், குறிப்பாக பற்பல இந்துமதப் பிரிவினர்களைத்தான் வெற்றிகொண்டார் என்றுள்ளது. நியாயவாதிகளை வென்றார், கபிலருடைய சித்தாந்தத்தை முடித்தார், வைஷ்ணவத்தை மண்ணோடு மண்ணாக மறையச் செய்தார் (10.118-119). காபாலிகர்களுடந்தான் சண்டை ஏற்பட்டது தெரிகிறது. ஒரு காபாலிகன், சங்கரரை, அவரது சீடன்போல நடித்து, கொல்லவருகிறான். அதிலும், “நரசிம்மரே” வந்து, அதாவது மற்றொரு சீடர் பத்மபாத “நரசிம்மராகி”, காபாலிகனைக் கொன்று, சங்கரரைக் காப்பாற்றியதாக உள்ளது (காண்டம்.11). எனவே இக்கதைகளை நம்பமுடியாது, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நியாயம், தர்மங்களை விடுத்த பிராமணர்களை கடுமையாகச் சாடுகிறார். மற்ற திமிரான எதிராளிகளை வென்று மேற்கு கடலுக்கு அப்பால் அனுப்பி விடுகிறார் (15.29). சாக்தகள், பாசுபத-காபாலிகர்கள், வைணவர்கள் இவர்களை வென்றதாக பல இடங்களில் உள்ளது (15.164). [இதையெல்லாம் படித்தால், அவர்களுக்குத் தான் கோபம் வரவேண்டும்]
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
முன்னுரையில், கே. ஆர். வெங்கடராமன் குறிப்பிடுவதாவது, “சுதன்வ என்பது கவியின் படைப்பு”, அதாவது கற்பனைப் பாத்திரம். ஏனெனில், எப்படி சிவன் சங்கரராக, முருகன் குமாரில பட்டராக பிறந்தார்களோ இந்திரனே சுதன்வனாகப் பிறந்தான், என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. மேலும் சிருங்கேரிமட சங்கராச்சாரியாரே (அதாவது ஸ்ரீ மத்வர் பிறகு, ஸ்ரீ வித்யாரண்யர் (1380-1386) என்ற பெயருடன் மடாதிபதியானார்) இதை எழுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சரித்திரத்தன்மையற்ற அந்த ஆவணங்களின் நிலையை நன்றாக அறிந்து கொள்ளலாம்.
“சுதன்வன்” அரசன் –ஒருகட்டுக்கதை: சரித்திர-ரீதியில் சுதன்வ என்ற அரசன் இருந்தது, அரசாண்டது என்ற குறிப்பே இல்லை. ஆகையால், இது 18-19வது நூற்றாண்டுகளில் சங்கரவிஜயம் எழுத ஆரம்பித்த மடங்களின் சார்புடையவர்களின் கற்பனையே ஆகும். இருப்பினும் அவன் படைகளுடன், வில்-அம்புகளுடன் சென்று காபாலிகர்களைக் கொன்றதால், அதே மாதிரி, பௌத்தர்களையும் கொன்றிருப்பான், என்று ஒருவர் குறிப்பிட்டதும், அதை மற்றவர்கள் எடுத்து தங்களது எழுத்துகளில் எடுத்தாள ஆரம்பித்து விட்டனர்! இனி விவரமாகப் பார்ப்போம்.
சுதன்வன் குமாரில பட்டரின் தூண்டுதலால் பௌத்தத்தை ஒடுக்கியது: கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்ப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. மேலும் அது ஒரு மறைமுக மிரட்டல் ஆணையாக உள்ளது. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. அதே மாதிரி எந்த ஒரு பௌத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது.
T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.
See Telang, Mudrarakshasa., pp.xlviii-liii.,
………………., The Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155.
Wilson, Dict., xix;
Colebroole, Essayas, 1. 32.
பௌத்தர்கள் உருவாக்கிய சர்ச்சைக்குள்ள நூல்கள்: சமீபத்தில், கே. டி. எஸ். சரௌ என்ற ஆராய்ச்சியாளரும், இவ்விஷயத்தை நுணுக்கமாக ஆய்ந்து பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது பலநிலைகளில் – மத-சடங்கு முறை முதல் சங்கத்தின் பிரச்சினைகள் வரை – ஏற்பட்டது என எடுத்துக் காட்டியுள்ளார்.
K.T.S. Sarao, On the Question of Animosity of the Brāhmaṇas and Persecution by Brāhmaṇical Kings Leading to the Decline of Buddhism in India, The Chung-Hwa Institute of Buddhist Studies, Taipei Chung-Hwa, Buddhist Studies, No. 10, (2006).
ஆகவே, அக்கதைகளின் ஆரம்பம் என்னவென்று பார்த்தால் பௌத்தர்களின் “கதைகள்” தாம் என்று தெரிகின்றன. 7ம்-8ம் நூற்றாண்டுகளுக்கு மேல் பல காலங்களில் பலரால் எழுதப்பட்ட தொகுப்பு நூல்களில் தான் அத்தகைய விவரங்கள் காணப்படுகின்றன. முதன் முதலில் யுவான் சுவாங் (629-645), என்ற சைனாவின் புத்த யாத்திரிகர் வருகிறார். அவர் இந்தியாவில் தான் பார்த்தது, கேட்டது என்று எழுதிவைத்துள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துள்ளனர். பௌத்தர்கள் தமது மத-ரீதியில், சாதகமாக எழுதும்போது அவ்வாறுதான் எழுதுவார்கள். ஆனால் சரித்திர ஆசிரியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்த விவரங்களை மற்ற அத்தாட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கல்வெட்டு-கட்டிடங்களின் நிலை பார்த்து முடிவிற்கு வரவேண்டும். மௌரிய பேரரசு ஆதிசங்கரர் இவற்றை இணைக்கும் மற்றும் அவற்றை காலக்கணக்கீட்டில் வரிசையாக வைத்து அவ்வாறே இந்திய சரித்திர நிகழ்ச்சிகள் முறைப்படுத்தும் வலுக்கட்டாயமான முயற்ச்சியும் இதில் தெரிகின்றது. இது ஒரு 1200 ஆண்டுகளில் கட்டிவைக்க முயன்ற திட்டம். இக்காலகட்டத்தில் தான் உண்மையிலேயே, எழுதப்பட்டுள்ள சரித்திரத்தின் படி, ஜைன-புத்த மதங்கள் மிகவும் உச்சநிலையில் இருந்தன. ஆனால், “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர்.
சைனாவில்பௌத்தர்கள்தண்டிக்கப்பட்டது: முன்னமே குறிப்பிட்டபடி, சைனாவில் பௌத்தம் தழைத்தோங்கிய நிலையில் இருந்தாலும், அங்கு பௌத்தர்கள் தண்டிக்கப் பட்டது தெரிகிறது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் என்று தெரிகிறது. அவன் பொருளாதார காரணங்களுக்காக அவ்வாறு பௌத்தர்களைத் தாக்கியதாக கூறுகிறார்கள். அயல்நாட்டு தாக்கத்தை முழுவதுமாக அழிக்கவும், அவன் அத்தகைய கொடிய முறையைக் கையாண்டதாகத் தெரிகின்றது. எனவே அத்தகைய அடக்குமுறை, படிப்படியாக வளர்ந்து, பௌத்ததிற்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டும். பொருளாதார காரணம் காட்டியிருந்தாலும் (விஹாரங்களில் தங்கம் இருந்தது), அத்தகைய நிலை, மக்கள் பௌத்தத்தை பெரிதளவில் ஆதரித்த நிலப்பாடுத் தெரிகிறது. எனவே, திடீரென்று, ஆட்சியாளர்கள், அத்தகைய பிரபமான-மக்கள் மதத்திற்கு எதிராக அடக்குமுறையை ஏவிவிட்டிருக்க முடியாது. ஒரு சைன யாத்திரிகர், யுவான் சுவாங் எழுதியதை வைத்து, இந்தியர்களைக் குறைக்கூறும் இன்றைய இந்தியர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் சைனாவில் பௌத்தம் அவ்வாறு ஒடுக்கப்பட்டதைப் பற்றி பேசுவதில்லை. ஏனெனில், ஹூணர்களோ அல்லது பௌத்தர்களோ அல்லது யாரோ அவ்வாறு வெளியேறி இருந்தால், அவர்கள் இந்தியாவில் நுழைந்திருந்தால், ஏன் என்று ஆராய்ச்சி செய்யவேண்டும். பௌத்தம் இருந்தும், வன்முறை இருந்தது ஏன், எதற்காக அவர்கள் மீது அத்தகைய அடக்குமுறை ஏற்பட்டது என்பதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.
பௌத்தம்இந்தியாவில்வலுவிழந்ததுஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)
ஹூணர்களால்பௌத்தம்அழிந்தது (478-637): பிறகு ஹூணர்களால் பௌத்தம் அழிக்கப்பட்டது என்ற கருதுகோள் வருகிறது. மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் ஹூணர்களைப் பற்றி கூறுவதாவது: ஹூணர்கள் மத்திய ஆசியாவைச் சேர்ந்த குடிமக்கள். பைஜான்டின் எழுத்தாளர்கள் அவர்களை “ஹெப்தாலைட்டுகள்” – வெள்ளைநிறத்தவர் – வெள்ளை ஹூணர்கள் என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் துருக்கிய-மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நவீன எழுத்தாளர்கள் அட்டிலாவைச் சேர்ந்த ஹூணர்களுக்கும் இந்த ஹூணர்களுக்கும் சம்பந்தம் இல்லை, ஏனெனில் இவர்கள் இரானிய இனத்தைச் சார்ந்தவர்கள். கிரேக்கர்கள்,
சாகர்கள் மற்றும் குஷானர்களைப் போல, அவர்களும் மலைகள், சமவெளிகள் கடந்து இந்தியாவைத் தாக்க வந்தவர்கள் எனத் தெரிகிறது. ஹூணர்களுடன் போரிட்டு குமாரகுப்தனே இறந்ததாக “குப்த சரித்திரம்” கூறுகிறது. 500 க்கு மேலே மேற்கு இந்தியாவை அவர்கள் முழுவதுமாக பிடித்துவிட்டதால், அவர்கள் ஆட்சி புரியவும் தொடங்கி விட்டனர். தோரமானன் மற்றும் அவனது மகன் மிஹிரகுலன் இருவருமே அரசர்களாக ஆட்சி புரிந்தனர். ஹூணர்களின் படையெடுப்பால் “குப்த பேரரசு” மறைந்ததாக சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கின்றனர்.
A. L. Basham, The Wonder that was India, Rupa & Co., New Delhi., 1990. ப.67-69.
சைன அரசனது அடக்கு முறைகளால், மங்கோலியாவிலிருந்த ஹூணர்கள் வெளியேறி மற்றவர்களைத் தாக்கினார்களா?: உண்மையில், சைனர்களின் அடக்குமுறைகளால் அவர்கள், இந்தியாவிற்கு வர நேர்ந்தது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் எனத்தெரிகிறது. ஆகவே அத்தகைய அடக்குமுறை, பௌத்ததிற்கு சாதகமாக இருந்த சைனாவில், திடீரென்று வந்திருக்கமுடியாது. எனவே இந்தியாவிற்கு வந்தவர்கள் ஹூணர்களா, பௌத்தர்களா அல்லது வேறு மதத்தினரா என்று நோக்கத் தக்கது. ஏனெனில், “ஹுணர்கள்’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவில் நுழைந்ததாக சொல்லப்படும் அவர்கள் பின்பற்றிய மதம் இந்துமதம் தான், ஏனெனில் அவர்கள் சூரியன், சிவன் முதலியவர்களை வணங்கியதாக அவர்களது கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன (Gwalior Stone Inscription of Mihirakula (ca. early 6th century CE). மேலும் விவரங்களுக்கு, கீழே காணவும்.
ஜைனர்கள் இந்தியா முழுவதும் பலமாக இருந்த நிலையில், ஹூணர்கள் எப்படி பௌத்தர்களை மட்டும் தாக்கியிருக்க முடியும்?: ஹூணர்கள், பௌத்தர்களைத் தாக்கி அழித்தார்கள் என்பதில், பல கேள்விகள் எழுகின்றன:
*மேலும், அதேகாலத்தில், மேற்கு இந்தியாவில் இருந்த பலமான மதம் ஜைனம் ஆகும். பிறகு எப்படி, ஹூணர்கள் ஜைனர்களை விடுத்து, பௌத்தர்களை மட்டும் குறிவைத்திருக்க முடியும்?
*“ஹிந்துத்வா-அரசர்கள்” குப்தர்களைத் தாக்கி அவர்களது பேரரசையே
மறையச்செய்திருக்க முடியும்?
*ஒருவேளை அவர்கள் ஜைனர்களாக இருப்பார்களோ? ஏனனில், அவர்களது செயல்கள் ஜைனத்திற்குத்தான் ஆதரவாக உள்ளது.
*ஒருவேளை, ஹூணர்களும், ஜைனர்களும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திகொண்டு, இந்தியாவைத் தாக்கியிருக்கக் கூடுமோ?
* 712ல் அரேபிய படையெடுப்புத் தொடங்குகின்றது. அவர்களும் ஜைனர்களை விட்டு வைத்திருக்க முடியாது.
* பிறகு வரும் “ஆதிசங்கரரும்” ஜைனர்களை கண்டுகொள்ளாமல், பௌத்தத்தின் மீதுதான் குறியாக இருக்கிறார்!
இதென்ன வேடிக்கை? எப்படி எல்லோருமே ஜைன-அபிமானிகளாக உள்ளார்கள்?
நிச்சயமாக இங்கு ஒரு “சரித்திர புதிர்” உள்ளது. அதாவது, சரித்திர ஆசிரியர்கள் செய்துள்ள புரட்டு வேலைத் தெரிகிறது.
தோராமானன், மிஹிரகுலன்தேதிகளைஆங்கிலேயர்மாற்றியது: தோரமானன், மிஹிரகுலன் என்ற பெயர்கள் ஐரோப்பியர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது தெரிகின்றது. ஏனெனில், ஹூணர்கள் என்றாலே அவர்களுக்கு பயம், அதிலும் அட்டிலா என்பவனுடைய பெயரைக் கேட்டால், ஐரோப்பிய குழந்தைகள் சிறுநீர் விட ஆரம்பித்துவிடும் (Count Dracula in Bram Stoker’s novel Dracula claims to be descended from Attila: “What devil or what witch was ever so great as Attila, whose blood is in these veins?”). அவர்களது நாகரிகத்தை அழித்தவர்கள் என்று ஹூணர்கள் (Huns) மற்றும் வாண்டல்கள் (Vandals) என்று இரு மக்கட்பிரிவுகளைக் குறிப்பிடுகின்றனர் (vandal, vandalize, vandalism என்றால் தெரிந்திருக்கும்). ஐரோப்பா, மத்தியதரைகடல் நாடுகள் அவர்களால் பாதிக்கப் பட்டதால், இந்தியாவும் அதே காலத்தில் பாதிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆகவே, எப்படியாவது ஹூணர்களை இந்திய சரித்திரத்தில் நுழைக்கவேண்டும். அதே நேரத்தில் இந்திய காலத்தையும் குறைக்கவேண்டும் என்று ஆங்கிலேய பண்டிதர்கள் இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ராஜதரங்கிணியில் அத்தகைய பெயர்கள் வருவது அவர்களுக்கு வியப்பாகியது.
ஆனால், கல்ஹணரின்படி, அவர்களது, தேதிகள்இவ்வாறுஇருந்தன: ராஜதரங்கினியின் படி, அரசனின் பெயர், ஆண்ட காலம், காஷ்மீர சகாப்தத்தின்படி மற்றும் நடப்பு சகாப்தத்தின்படி இவ்வாறு இருக்கின்றன:
ஆண்ட அரசன்
ஆண்டுகள்
கல்ஹணர் தேதி
இக்காலத்தவர் கொடுக்கும் தேதி
அசோகன்
48
1628-1676
1448-1400
ஜலௌகன்
56
1675-1732
1400-1344
தாமோதர-II
50
1732-1782
1344-1294
ஹுஸ்க, ஜுஸ்க, கனிஸ்க
60
1782-1842
1294-1234
அபிமன்யு
52
1842-1894
1234-1182
கோநந்த-III
35
1894-1929
1182-1147
விபீஷண
54½
1929-1983½
1147-1092½
இந்திரஜித்
35½
1983½-2019
1092½-1057
ராவண
30
2019-2049
1057-1027
விபீஷண-II
35½
2049-2084½
1057-991½
கின்னர/நர
9½
32084½-2124
991½-952
சித்த
69
2124-2184
952-892
உட்பலக்ஸ
30½
2184-2214
892-861½
ஹிரண்யாக்ஸ
37½
2214-2252
861½-824
ஹிரண்யகுல
60
2252-2312
824-764
வசுகுல
60
2312-2372
764-704
மிஹிரகுல
70
2372-2442
704-634
பக
40
2442-2482
634-591
கஹிதிநம்தன
30
2482-2512
591-564
*அசோகன் வருகிறான், ஆனால் பௌத்தன் அல்ல, ஜைனன்!
* அவனது தேதியோ 1448-1400 BCE!
*மிஹிரகுலன் உள்ளான் ஆனால், அவனின் தந்தை பெயர் தோரமானன் அல்ல!
*அவனது தேதியோ 704-634 BCE!
பிறகு எப்படி மாற்றுவது, தமது இச்சைக்கேற்றவாறு கணக்கை சரிகட்டுவது, தேதிகளை திருத்துவது, சரித்திரத்தைப் புரட்டுவது?
ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் தேதிகளை மாற்றியமைத்தது: இதோ, திருவாளர் இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch), ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A. Cunningham), பேராசிரியர் வில்சன் (H. H. Wilson), டா. ஃபிலீட் (John Faithful Fleet) முதலியோரின் குழுமம் எப்படி வேலை செய்தது என்று விளக்குகிறார். ராஜதாரங்கிணியைப் பற்றி இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) எழுதும்போது, இந்த விவரங்களைத் தருகிறார், “ராஜதரங்கிணியில் கல்ஹணரின் காலக்கணக்கியலை மாற்றியமைப்பதைப் பற்றி, பேராசிரியர் வில்சன் (H. H. Wilson) கருதியபோது தனது கருத்துகளை சுருக்கக்குறிப்பாக இணைத்திருந்தார். ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A.Cunningham) 1843ல் தனது, “காஷ்மீரத்தின் பழங்காசுகள்” என்ற கட்டுரையில் அதனை பயன்படுத்தினார் (நாணயவியல் கால அட்டவணை, பகுதி.6, ப.1-38; Numismatic Chronicle, Vol.VI, pp.1-38) இருப்பினும் முந்தைய காலத்திற்கு திருப்திகரமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு மிஹிரகுலனைப் பொருத்தவரையிலும் அத்தகைய முடிவுகள் கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ராஜதரங்கிணியின்படி பெற்ற தேதி 2397 கலியுக சம்வத்ர ஆண்டு அல்லது B.C. 704; மற்றும் அவனது ஆட்சி காலம் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு முடிகின்றது. பேராசிரியர் எச். எச். வில்சன் இந்த தேதியை 200 B. Cக்குக் குறைத்து கொண்டார். (loc.cit, p.81). ஆனால் சர். ஏ. கன்னிங்ஹாம் A.D 163 ல் வரவேண்டும் என்று முடிவெடுத்தார் (loc.cit, p. 18). “இருப்பினும் புதியதாக கண்டுபிடித்த கல்வெட்டுகளின் மூலம், டா. ஃபிலீட் (John Faithful Fleet) உண்மையான தேதி ஆறாவது நூற்றாண்டின் ஆரம்பித்தால்தான் வரும் எனக் கொண்டு, அவனது ஆட்சியின் ஆரம்பத்தை A. D 515ல் வைத்து, 530 A.Dல் முடியவேண்டும் எனத் தீர்மானித்தார். ஏனெனில் அந்த வருடத்தில்தான் அவன் அதிகாரம் இழந்து காஷ்மீரத்திற்கு சென்று அங்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். “இது கல்ஹணரின் முன்பு குறிப்பிட்ட விவரங்களில் எப்படி மாறுதல்களை செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுயதுடன் ஒத்துப்போகிறது. அதுதான் நமக்கு குறிப்பிட்ட திட்டத்தைக் கொடுப்பதால், அதிலிருந்து தேதிகளை முன்னும் பின்னுமாக எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இதே மாதிரி கல்ஹணர், கனிஸ்கனுடைய காலத்தைப் பற்றிக் குறிப்பிடுவதையும் நோக்கத் தக்கது. தரங்கம்-I, வரி.18ன் படி, துரக்ஸ அரசனான கனிஸ்கன், கோநந்தன்-III, அரசாட்சிற்கு வருவதற்கு முன்பு B.C 1182ல் இருந்ததாக கல்ஹணரின் கூற்றுப்படி வருகின்றது. ஆனால், இது நமது கணக்கின்படி, உள்ள சாத்தியக்கூறுகளின்படி 77 A.Dக்கு வரவேண்டும். அதே மாதிரி அசோகனுடைய தேதியும் கல்ஹணரின்படி (தரங்கம்-I, வரி.191) முன்னதாக உள்ளது. ஆனால், கன்னிங்ஹாமின் படி, அந்த தேதி இப்பொழுது B.C 260க்கு வருகின்றது (Corp.Inscr.Indica, Vol.I, Preface, p.VII).
“இப்பொழுதுஅத்தகையதேதிகளைஏன்மாற்றியமைக்கவேண்டும்என்றகேள்விக்குபதில்:. காஷ்மீர அரசர்களின் வம்சாவளியில் குறிப்பிட்டவர்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்ததாக பெயர்கள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் அவர்கள் எல்லாம், மூதாதையர் மற்றும் அவர்களின் உறவினர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் அரசாளவில்லை. ஆகவே, நமது கணக்கின்படி சில அரசர்களை எடுத்துக்கொண்டாலும், விட்டாலும், நடுவிலே குறை ஏற்பட்டாலும் அத்தகைய அத்தியாவசம் உள்ளதால், அவர்களை வம்சாளி பட்டியிலிருந்து நீக்கவேண்டும்”.
மேலே இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) கொடுத்த வாக்குமூலம் படி, நாம் தெளிவாக அறிவதவது யாதென்றால்:
“மோ–ஹி–லோ–கு–லோ” “மிஹிரகுலன்” ஆனது: ராஜதரங்கிணியின் மிஹிரகுலன் ஐரோப்பிய மனதுக்கு மிகவும் ஒத்துப்போகிறது. ஏனெனில், ராஜதரங்கிணியில், அவனைப் பற்றிய கதை, “அடில்லாவை/டிராகுலாவை” ஒத்துபோகிறது! ஒருபெரிய கல்லை, ஒரு மிகவும் கற்புள்ள பெண்தான் நகர்த்தமுடியும் என்றபோது, “சந்திரவதி” என்ற பெண் நகர்த்துகிறாள், ஆனால் மற்ற பெண்களால் முடியவில்லை. இதனால் எல்லா பெண்களையும் அவர்களது கணவன்மார்கள், சகோதரர்கள், உறவினர்களுடன் கொன்றுக் குவிக்கிறான்! [இதைத் தவிர பல கொடுமைகளைப் புரிகிறான். விவரங்களுக்கு ராஜதரங்கிணியைப் படிக்கவும்] ஆகவே “மோ-ஹி-லோ-கு-லோ” யுவான் சுவாங் குறிப்பிட்டப்படி ஒரு “மிஹிரகுலன்” கிடைத்துவிட்டான்! அதுவும் ஹூணரைப்போல கொடுங்கோலனாக இருக்கிறான்!
தேதிகளைமாற்றியது: தேதிகள்உதைக்கிறது: எனவே தேதிகளை மாற்ற முடிவு செய்கிறார்கள், மாற்றவும் செய்தார்கள். தேதிககளை எங்களுடைய வச்திக்காகக் குறைக்கிறோம் என்று எவ்வளவு நாஜுக்காக சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
அரசர்களையேவம்சாளியிலிருந்துஎடுத்துமறைத்தது: பல அரசர்கள் இடையில் பிரச்சினை செய்கிறார்கள்! அதாவது அவ்வாறு காலத்தைக் குறைக்கும்போது, இடையில் அரசாட்சி செய்த அரசர்களை என்ன செய்வது? ஒரே வழி, அந்த அரசர்கள் இல்லவே இல்லை என்று சொல்வது! எனவே பல அரசர்கள் இந்திய சரித்ததரத்திலிருந்து மறைந்து விட்டார்கள்!
ஜைன–அசோகனைபௌத்த–அசோகனாக்கியது: பௌத்தமதமே “அசோகனின்”மீது ஆதரமாக உள்ளது. ஆனால், ராஜதரங்கிணியின் அசோகனோ ஒரு ஜைன மதத்தவனாக விஹாரங்களைக் கட்டியதாக உள்ளது. அதிலும் காஷ்மீர அரசனாக உள்ளான், மௌரியன் அல்லன்! ஆகவே, அந்த அசோகனையே மறைத்துவிடுவது! எனவே, ஒரு புதிய அசோகன், பௌத்தமத காவலனாக “ஒரு அசோகன்” உருவாக்கப்படுகிறான். கல்வெட்டுகள் கிடைக்கவேண்டுமே? உள்ளவையெல்லாம் “தேவநாம்பியாதிஸ்ஸா / தேவநாம்பிரிய” என்றுதான் உள்ளது. எங்குமே “அசோகன்” என்ற பெயர் இல்லை! 1915 வரை இக்கல்வெட்டுகள் எல்லாம் அசோகனுடைது என்று உறுதியாகத் தெரியாது. 1915ல்தான் மஸ்கி கலவெட்டு கண்டுபிடிக்கப்படுகிறது, அதில் “தேவநா பியா” கூட “அசோக” என்ற வார்த்தையும் உள்ளது. வித்தியாசத்தை நன்றாக கவனிக்கவும். மேலும், இக்கல்வெட்டு மகதத்தில் அல்லது மௌரிய பேரரசு எங்கு வலுவாக இருந்ததோ அங்கு கிடைக்காமல், ஜைனம் ஆதிக்கம் செய்த பகுதியில் கிடைத்திருப்பது நோக்கத்தக்கது.
700 வருட “கொள்ளு–கொல்லு” தாத்தாவைமகனாக்கியது!; இனி “தோரமானன்” என்பவனைக் கவனிப்போம். ராஜதரங்கிணியின்படி, 81வது அரசன் ப்ரவர்சேன / ஸ்ரேஸ்டஸேன / துஞ்ஞீனா என்பவன் ஆவன். இவனது இரண்டு மகன்கள் ஹிரண்யா மற்றும் தோரமான. ஹிரண்யா தோரமானனை சிறையில் அடைக்கிறான், அவன் சிறையிலேயே இறக்கிறான். அவன் வாழ்ந்த காலம் 16 BCE முதல் 14 CE வரை. ஆகவே, இவனுக்கு காலத்தால் 700 வருடங்களுக்கு முன்பு மிஹிரகுலன் (704-634 BCE) இருக்கிறான்! இருப்பினும் அவனை, இவனுக்கு மகனாக்குகிறார்கள்! என்னே சரித்திரத்தின் கோலம்?
சௌரன்–விஷ்ணுபக்தனாகி–சிவபக்தனாகியது: பௌத்தர்களுக்கு எதிராக இருக்கவேண்டும் என்றால் ஒருவன் சைவனாக இருக்கவேண்டும். எனவே அடுத்தது, இந்த “மிஹிரகுலனை” சைவனாக்கும் படலம் ஆரம்பிக்கிறது. இதற்கு குவாலியர் கல்வெட்டை உபயோகப்படுத்துகின்றனர். அதில் வரும் தோரமானன், மிஹிரகுல என்ற பெயரோடு ஆண்டதாக உள்ளது. மேலும் அவன் வழி வந்த மகன், பெயரன் முதலியோர்களின் பெயர்கள் மாத்ரிதல, மாத்ரிதாஸ, மாத்ரிசேத என்றுள்ளன. மேலும் அவன் சூரியவழிபாடு செய்வதுபோல உள்ளது. ஒரு பதக்கத்தில் ஒரு மிஹிரன் நான்கு கைகளுடன் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணுவை கும்பிடும் மாதிரி சித்தரிக்கப்பட்டுள்ளது (Sardonyx seal representing Vishnu with a worshipper, Afghanistan or Pakistan, 4th-6th century CE. The inscription in cursive Bactrian reads: “Mihira, Vishnu and Shiva”. British Museum). என்ன செய்வது, எப்படியாவது சரிகட்டவேண்டுமே? “தோரமானன் என்பவன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்பதனை “தோரமானனின் மகன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்று மொழிபெயர்த்து, மிஹிரகுலனை தோரமானனுக்கு மகனாக்குகிறார்கள்! அதாவது, சூரியபக்தன், விஷ்ணு பக்தனாகி, பிறகு சிவபக்தனாகி விடுகிறான்!
ஹூணனானஇந்தியனும், ஹூணமாகியஇந்தியசரித்திரமும்: ஹூணன் என்றால் மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்க வேண்டும் இல்லையென்றால் ஈரானிலிருந்து வந்திருக்க வேண்டும் (மேலே விளக்கப்பட்டுள்ளது). “மிஹிர் / மிஹிர / மெஹர்” (= சூரியன்) என்ற பெயர் இருக்க வேண்டும். ஆகவே, இத்தகைய ஜோடனை செய்யப்பட்டது. ஆனால் பாவம் காஷ்மீரத்திலேயே கல்ஹணருக்கு முன்பு “பத்மமிஹிர” (தரங்கம்.1-18) என்பவர் இருந்ததை கவனிக்கவில்லை! இருந்தாலும், அவரை எடுத்துவிட்டால் போயிற்று, என்பார்கள்! [முன்பு வராஹமிஹிரரையும் ஈரானிலிருந்துதான் வந்தார் என்றார்கள்] ஒரு இந்திய அரசனை, அதிலும் காஷ்மீரத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து சரித்திர-ரீதியாக இருந்த அரசனை மறைத்து இல்லாத ஒரு மிஹிரகுலனை உண்டாக்கி, அவனை “ஹூணனாக்கி”, ஹூணனாக இந்தியாவில் புகுந்து, தோற்றபிறகு காஷ்மீரத்திற்கு அனுப்பி வைக்கப் படும் ஒரு நிலையை இந்திய சரித்திரத்தில்தான் காணலாம்.
சித்தாந்தம் போன்ற காரணிகளால் இந்திய சரித்திரம் பாதிக்கப்படுகிறதா?: ஆராய்ச்சி என்று மாய்ந்து-மாய்ந்து இவ்வாறு சரித்திரத்தை புரட்டுகிறார்கள் தலைகீழ் மாற்றங்கள் செய்கிறார்கள், ஆனால், இத்தகைய மோசடிகளை எந்த பிரபல (eminent), முற்போக்குள்ள (progressive), பரந்த-விரிந்த மனதுள்ள (broad-minded), செக்யூலரிஸ (secular), மார்க்ஸிஸ (Marxist) மற்றும் எந்த சரித்திர ஆசிரியருக்கும் தெரியவில்லை! இத்தகைய மோசடிகளுடன், இந்திய சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. இருப்பினும், சில சரித்திர ஆசிரியர்கள், உண்மைகளை அங்கங்கு சொல்லியிருக்கிறார்கள்: “யசோதர்மன் மந்டசோர் கல்வெட்டில் மிஹிரகுல மற்றும் ஹூணர்கள் இருவரையும் குறிப்பிட்டாலும், இருவருன் தனி என்பதனை அறியும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” (ப,197).
R. C. Majumdar and A. S. Pusalkar, A History of the Indian People, Lahore, 1946, p.197, 196 etc.
“மிஹிரகுலன் ஒரு ஹூணன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” (ப.196).
இப்பொழுது, கே.டி. சேத்னா என்பவரும், இந்த விவரங்களைத் தருகிறார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi,
2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese
chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial
Guptas.
இவர் எடுத்துக்காட்டுவதாவது, மிஹிரகுலனின் காலம் 540 CE இல்லை, BCEல்தான் வரும், யுவான் சூவாங் காலத்தில் குப்தர்கள் இருந்திருக்க முடியாது;
அசோகனின் தேதி மாற்றப்பட்டது: அசோகனது காலம் சுமார்.1000 BCE வரை செல்லும்;
K. D. Sethna, Ancient Indian in New Light, Aditya Prakashan, New
Delhi, 1997. ஆங்கிலேயர்களின் காலக்கணக்கியலில் பல முரண்பாடுகள் உள்ளதை
எடுத்துக்காட்டி, இதில் இவர் கொடுக்கும் தேதிகள்:
950-914 BCE – reign of Asoka, thus Pushyamitra came after him.
221-181 BCE – Kumaragupta
181-169 BCE- Skandagupta
140 BCE – Toramana invaded Malva from Kashmir
137 BCE – Toramana died
100 BCE- Mihirakula came to power
இவை இந்திய பாரம்பரிய காலக்கணக்கியல் மற்றும் மேனாட்டு காலக்கணக்கியல், இரண்டிற்கும் மாறுபட்டதாகும். குப்தவசத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனை விடுத்து மௌரியவம்சத்தின் சந்திரகுப்தனை, அலெக்ஸ்சாந்திரன் காலத்துடன் வைத்ததில்தான் இந்திய சரித்திரத்தில் பல குளறுபடிகள் நேர்ந்தன. இதனால் 800 முதல் 1200 வருடங்கள் வரை பல முக்கிய தேதிகளில் வித்தியாசம் வந்துகொண்டே இருக்கும். மேலும், இந்த தேதிகள் எல்லாம் 70 முதல் 150 வருடங்களுக்கு முன்புதான் ஆங்கிலிலேயர்கள் தோராயமாக என்று வைத்துக்கொண்டு circa என்று குறிப்பிட்டு வந்தனர். ஆனால், circaவை விட்டுவிட்டு, நிலைநிறுத்திய தேதிகளைப் போல, பிறகு உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கிருஷ்ணமாச்சாரியார் தமது “இந்திய சமஸ்கிருத வரலாறு” என்ற நூலில் எவ்வாறு ஆங்லிலேயர் தேதிகளைக் குறைத்தர்கள் என்று விவரமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். ஆனால், இவை ஆராய்ச்சிசெய்யும் மாணவர்கள் மற்றும் சிலருக்குத் தான் தெரிய வாய்ப்புள்ளது. தெரிந்தாலும் மற்றவர்கள் குறிப்பிடுவதில்லை.
M. Krishnamachariar, History of Classical Sanskrit Literature, Motilal Banarasidas, New Delhi, 1993.
D. S. Triveda, Indian Chronoloy, Bharatiya Vidhya Bhawan, Bombay, 1958.
கோட்டா வெங்கடாசலம் என்பவர் ஆங்கிலேயர்களின் பல சரித்திர குளறுபடிகளை, திரிபுகளை, ஏன் கள்ள ஆவணங்கள் தயாரித்தது முதலியவற்றை எடுத்துக் காட்டி பல புத்தகங்களை 1950களுள் வெளியிட்டார். இவர் R. C. Majumdar, K. D. Sethna முதலியோருடன் இதைப் பற்றி கடித ததடர்பும் கொண்டிருந்தார். பிறகு, பொள்ளாச்சி மஹாலிங்கத்தின் ஆரார்ச்சி நிறுவனமும் அதன் அடிப்படையிலேயே
சென்று, வானவியல் ரீதியாக தேதிகளை நிறுவ முயற்ச்சி செய்தது.
வேதபிராகாஷ்
29-09-2009.
குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.
“பிராமணர்களின்கத்தி” பௌத்தர்களக்கொன்றது, விஹாரங்களைஇடித்தது, பௌத்தத்தைஒழித்ததுமுதலியன: சமீப காலத்தில், இத்தகைய கதைகள் “சரித்திரங்கள்” போன்று பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ பிராமணர்கள்தாம் தமது குரூர, கொடூர வஞ்சனைகளுடன் பௌத்தர்களை கொன்று குவித்து, பௌத்தத்தையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனர், ஒழித்துக் கட்டினர், மறையச் செய்து விட்டனர் என்று அட்டகாசமாக எழுதி வருகிறார்கள். ஆகவே அதில் என்ன உண்மை உள்ளது என்பது ஆராய வேண்டியுள்ளது. ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய கதைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பொதுவான பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு பல நேரங்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது. படித்தவர்களும் மற்றவர்களும்கூட இதனை நம்பி அலச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று அவர்கள் அறிவதில்லை.
புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன்மற்றும்சுதன்வன்: பௌத்த-விரோத நான்கு கொடூரர்கள்: புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன் என்று நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தாம் பௌத்தத்தை இந்தியாவில் வேரோடு கருவறுத்தவர், பௌத்தர்களைக் கொன்றுக் கொவித்தவர், பௌத்த வழிபாட்டு ஸ்தலங்கள், ஸ்தூபிகள், விஹாரங்களை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள், என்று இன்றளவிலும் சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்கள், “புதிய” / “லே” பௌத்தர்கள், அம்பேத்கரைஸ்டுகள், தலித் அறிஞர்கள், என பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. பிறகு அவர்கள் பிராமண அரசர்கள் என்பதனால், பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் தூண்டுதலால்தான் அவ்வாறு அட்டூழியம் செய்தனர் என்ற கருதுகோள் வைக்கப்படுகிறது. புதியதாக இப்பொழுது “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) ஒன்று “இஸ்லாமிய கத்தி” (Sword of Islam) போன்று தயாரித்து எழுதி வருகின்றனர், படம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலங்களைக் கொடுக்காமல் ஒருவர் சொன்னதைத் திரும்ப சொல்லுவது, குறிப்பிட்டதை திரும்ப குறிப்பிடும் ரீதியில் (Quoted-quote methodology) எழுதி-பேசி செயல்பட்டு வருகின்றனர். Why did Buddhism disappear from South Asia? Brahmin atrocities that destroyed Buddhism in the Subcontinent, Posted on February 3, 2008 by Moin Ansari http://rupeenews.com/2008/02/03/why-did-buddhism-disappear-from-the-south-asian-subcontinent-summary-of-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/
சித்தாந்தவாதிகளின்சரித்திரம் (Ideologized history): குறிப்பாக வெகுஜன வகுப்புவாதத்தை / அடிப்படைவாதத்தை (majority communalism / fundamentalism, read as Hindu communalism / fundamentalism) எதிர்க்கும் போக்கில் மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்கள் (Marxist historians) என்று கூறிக்கொள்ளும், கர்கி சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுவதாவது, “ஹிந்து ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையினைப் பற்றி ஒரு கட்டுக்கதை மிகவும் சாமர்த்தியமாக ஊக்குவிக்கப்படுகிறது. வாருங்கள், இரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கு செல்வோம். திவ்யவதன என்ற இரண்டாம் நூற்றாண்டு நூல் புஸ்யமித்திர சுங்கன் ஒரு பெரிய பௌத்தமத தண்டனையாளன் (Buddhist persecutor) என கூறுகிறது. சிலுவைப்போரைப் போன்று (crusading army) ஒரு பெரிய சேனையுடன் சென்று, அவன் ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்.
அந்த அழிவு சகல, இக்காலத்தைய சியால்கோட் வரையிலும் சென்றது. அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான். இது மிகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது என்றாலும், புஸ்யமித்திரனுக்கும் பிக்குகளுக்கும் இடையே இருந்த கொடிய பகைமையை மறுக்கமுடியாது”.
Gargi Chakravartty: “BJP-RSS and Distortion of History”, in Pratul Lahiri, ed.: Selected Writings on Communalism, People’s Publishing House, Delhi 1994, p.166-167. http://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/pushyamitra.html
இங்கு குறிப்பாக எதையும் சொல்வதில்லை. “ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்றுதான் உள்ளது. உடனே, மற்றொருவர் அதை குறிப்பிட்டு “பல ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்று எழுதுவார். அடுத்த இன்னொருவர், முன்னிருவரைக் ஆதாரமாகக் குறிப்பிட்டு, “ஆயிரக்கணக்கான”, “பல ஆயிரக்கணக்கான” என்று நீண்டுகொண்டே இருக்கும்.
Swami Dharma Theertha, The Menace of Hindu Imperialism, Har Bhagwan Happy Home Publication, Lahore, 1946. See chapter.X, “How Brahmanism killede Buddhism, pp.94-110.
Ahir, V. T. Rajasekhar முதலியவர்களின் புத்தகங்களைப் பார்க்கவும்.
மேனாட்டு/ஆதிக்கசக்திகளான ஆங்கிலேயர்களும் தமது பங்கை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, இ. பி. ஹேவல் என்பவர் அத்தகைய குறிப்புகளைத் தந்துள்ளார், “The earliest of these Saiva revivalists was Maikka-Vacagar, minister of one of the Pandyan kings of Madura about the sixth century A. D. He came to be known as the Hammer of the Buddhism”.
E. B. Havell, The History of Aryan Rule in India from the earliedst times to the death of Akbar, (1918), K.M.N. Publishers, New Delhi, 1972.
இக்கதைகள்-கட்டுக்கதைகளின் தோற்றம்: திவ்யவதன, அசோகவதன போன்ற பௌத்த மத நூல்கள் (இடைகாலம் வரை திருத்தி எழுதப்பட்டவை-இவையெல்லாம் பல அதிசயங்கள், இயற்கைக்கு புறம்பான நிகழ்ச்சிகளைக் கொண்ட விவரணங்களைக் கொண்ட நூல்கள்), பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) என்ற சைன பௌத்த துறவியின் இந்திய யாத்திரைக் குறிப்புகள். தாரநாத என்ற திபெத்தின் பௌத்த பிக்குவின் நூல். குறிப்பாக யுவான் சுவாங் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அக்கதைகள் வளர்ந்துள்ளன. தங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாதகமானதை விடுத்து, தமது சரக்கையும் சேர்த்து இவ்வாறான கதைகளை புனைந்துள்ளனர். அக்கதைகள் “மிகைப்படுத்திக் கூறப்பட்டது” என்றாலும், “பௌத்தம் இந்தியாவில் மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டது” என்பதனால், அது அவ்வாறு “மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டத”ற்கு காரணம் கற்பிக்க ஒன்று இருக்கவேண்டும் என்பதினால், இத்தகைய கட்டுக்கதைகள் உற்சாகத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், “இஸ்லாமிய கத்தி”யை (Sword of Islam) மறைக்க, மறக்க இந்த தோற்றுவிக்கப்பட்ட “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) தாராளமாக உதவுகிறது. குற்றங்களை மறந்து மறைக்கும் சித்தாந்தவாதத்திற்கும் (negationaism) உதவுகிறது.
தினார்களா, தங்கநாணயங்களா? கர்கிசொல்கிறார், “அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான்”, என்று. இன்னொரு மொழிபெயர்ப்பிலேயோ (Beal, Watters etc), “ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள்
தரப்படும் என்று அறிவித்ததாக….” கூறப்படுகிறது. http://projectsouthasia.sdstate.edu/docs/HISTORY/PRIMARYDOCS/FOREIGN_VIEWS/CHINESE/XuanZang/BookIV.htm
இன்னொருவர் சொல்கிறார், “100 தங்க நாணயங்கள் அளிக்கப் படும்” என்று. எவ்வாறு, தீனார், தங்கமாகி, தங்க நாணயங்களாக மாற முடியும்? தீனார்கள் சுங்க காலத்தில் இல்லை. ஆகையால் தினார்கள் இந்தியாவில் வழக்கில் இருந்த காலத்தில், இது எழுதப்பட்டது தெரிகிறது. அதாவது, பிற்கால இடைசெருகல் எனத்தெரிகிறது.
விஹாரத்தைக் கட்டிய புஸ்யமித்திர சுங்கன்: திலாதக/திரா-சக/தீலா-சாக்ய என்ற விஹாரம் பிம்பிசாரன் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசன் கட்டினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கடைசி அரசனோ புஸ்யமித்ர சுங்கன்! பிறகு எப்படி விஹாரங்களை இடிப்பவன், விஹாரத்தைக் கட்டியிருக்க முடியும்?
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.II, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.106-107.
இது மாதிரி, பல முரண்பாடுகள் யுவான் சுவாங் வர்ணனைகளில் உள்ளன.
பௌத்தஅமைச்சர்களைக்கொண்டபுஸ்யமித்திரசுங்கன்: புஸ்யமித்திரன் அந்த அளவிற்கு பௌத்த-விரோதியாக இருந்திருந்தால், பௌத்த அமைச்சர்களைக் கொண்டிருக்க மாட்டான். உண்மை சொல்வதானால், அவன் காலத்தில்தான் பௌத்தம் நன்றாக செழுமையாக இருந்தது என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. கல்வெட்டுகள் சொல்லும் புஸ்யமித்திரன் நினைவு சின்னங்களை எழுப்புகிறான்: சாஞ்சி மற்றும் பஹ்ருத் முதலிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் இவன் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, பஹ்ருத்தில் உள்ள பௌத்த கல்வெட்டு, “சுங்க அரசன்….தோரணம் மற்ற சிற்பங்களுக்கு தானம் கொடுத்து உருவாக்கினான்” (Suganaṃ raje… dhanabhūtina karitaṅ toranāṃ silā-kaṅmaṅto ca upaṃṇa)
D.C. Sircar (ed), Select Inscriptions Bearing on Indian History and Civilization, Vol. 1, 2nd rev and enlarged ed, Calcutta: University of Calcutta, 1965: 87.
என்ன இது, பிராமண சுங்கனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது, யுவான் சுவாங் தவறாக எழுதி விட்டாரா? மகதத்திலிருக்கும் சுங்கன் பஹ்ரூத் வரை வந்து, பௌத்தர்களின் தலைக்கு தீனார் என்று பிரகடனப் படுத்தியபிறகு, ஏன் இந்த தாராளத்தனம்? எனவே, இக்கதைகளை ஊக்குவிப்பவர்கள் பல உண்மைகளை மறைக்கிறார்கள் எனத்தெரிகிறது.
சுங்ககாலத்தில்பெருகியவிஹாரங்கள்: இலங்கையின் தீப/மஹாவசங்கள் சுங்ககாலத்தை ஒட்டிய தத்தாகமணி (circa 101-77 BCE) காலத்தில் பீஹார், அவத், மால்வா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விஹாரங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றன. ஆகவே, புஸ்யமித்திரன் தண்டித்ததாக திவ்யவதன மற்றும் தாரநாத நூல்களில் காணப்படும் கதைகள் அபத்தமானவையாகும்.
Mitra, R.C. The Decline of Buddhism in India, Santiniketan, Birbhum: Vishva Bharati, 1954, p.125.
அதுமாதிரியே அவன் படையுடன் சென்று அழித்தது, 100 தினார்கள் கொடுப்பதக்க அறிவித்தது முதலியனவும் “தெளிவாக பொய்” எனத்தெரிகிறது “is manifestly false.”
Devahuti, D. Harsha: A Political Study, third revised edition, New Delhi: Oxford University Press, 1998, p.48.
சசாங்கன்: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை (போதி மரம்) அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் களைத்துவிட்டான். என்றெல்லாம் எழுதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காலத்தால் வேறுபட்ட இந்த மன்னர்களை தனது காலத்தைச் சேர்ந்தவர்கள் போன்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi, 2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial Guptas.
“பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” (J. R. A. S., 1893, p.147).
ஆகையால், சசாங்கன், ஒரு சிவன் பக்தனாக, ஆனால் பௌத்தத்தை அடக்குவதாக இருப்பவன் ஆனால், அவன் எவ்வாறு தனது கர்ணசுவர்ன என்ற தலைநகருக்கு அருகில் இருந்த பிரபலமான ரக்தமித்ரிகா விஹாரத்தை விட்டுவைத்தான்? மேலும் யுவான் சுவாங் கூறுவதாவது,கர்ணசுவர்னவாவில் பத்து விஹாரங்கள் மற்றும் 2000 பிக்குகள் இருந்தனர் என்பது.
Thomas Watters, On Yuan Chwang’s Travels in India, London, 1904-05, pp.191-192.
அதே யுவான் சுவாங் சசாங்கன் இறந்த பிறகு, அந்த விஹாரத்தின் செழுமையைப் பற்றி புகழ்கிறார் (மூர்ஸிதாபாத் மாவட்டத்தில், சிரூதி என்ற இடத்தில் அதன் இடிபாடுகள் இப்பொழுது உள்ளன). நிச்சயமாக, அந்த பௌத்த யாத்திரியின் பார்வை மதமோஹத்தில் பாரபட்சத்துடன் நோக்கவைத்துள்ளது என நன்றாகத் தெரிகிறது. பௌத்தர்களும் அத்தகைய மதவிரோதத்துடன், மஹேஸ்வரனும், கௌரியும். திரிலோக்யவிஜய என்னும் பௌத்த கடவுளின் கால்களில் மிதிபடுவதைப்போன்று சித்தரித்துள்ளனர்.
Bratindra Nath Mukherjee, Nationhood and statehood in India: a historical survey, Rajiv Gandhi Foundation, Indian Council of Social Science Research. North Eastern Regional Centre, 2001, p.76.
சசாங்கனைஎதிர்த்தகுப்தர்கள்: யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார், “மோ-ஹி-லோ-கு-லோ (மிஹிரகுலன்) தனது பொழுதுபோக்கிற்காக பௌத்தமதம் கற்க ஆசைப்பட்டான். அதனால் ஒரு தலைச்சிறந்த பிக்குவை தனக்கு பௌத்தத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்படி பணித்தான். ஆனால், பௌத்தர்களோ அவனது வேலைக்காரனையே அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் கொண்ட மிஹிரகுலன், பௌத்தத்தை அழிக்கத் துணிந்தான். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த பாலாதித்யன் என்ற குப்த மன்னன் பௌத்தர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பல உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருந்தான். மிஹிரகுலன் அவனது பகுதியின் மீது படையெடுத்தபோது, பாலாதித்யன் அவனை சிறைப்பிடிக்கிறான். ஆனால், தனது தாயாரின் அறிவுரைப்படி அவனை விடுவிக்கிறான். காஷ்மீரத்திற்கு தப்பிச் செல்லும் அவன், அந்த நாட்டு மன்னனைக் கொன்று தனது பௌத்த-விரோத கொள்கையினை தொடங்குகின்றான். 1600 ஸ்தூபிகள் மற்றும் விஹாரங்களை அழிக்கிறான். ஒன்பது பௌத்தர்களைக்கொல்கிறான். ஆனால், அவனது காலம் திடீரென்று முடிகிறது. வானம் கருக்கிறது, பூமி நடுங்குகிறது, பலமான காற்று வீசுகிறது, அவன் நரகத்திற்கு செல்கிறான்”.
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.I, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.288-289.
மிஹிரகுலன் இறந்தது 619 அல்லது 637 எனக்கருதப்படுகிறது. ஆகவே, பௌத்தர்களின் பரம எதிரிகள்-இந்துத்வா-தூக்கிகள் என இப்பொழுது
வர்ணிக்கப்படும் குப்தர்கள் எப்படி பௌத்தர்களுக்கு உதவி இருக்க முடியும்? மேலும் வேடிக்கைகள் பல உள்ளன. அத்தகைய குப்தர்கள் பிராமணர்களின் அடிவருடிகளாகச் சித்தரிக்கப் பட்டாலும், புத்த குப்தன், தத்தகாத குப்தன், பாலாதித்யன் என வரிசையாக வரும் குப்தர்கள் பௌத்தமதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள், வளர்க்கிறார்கள்! “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ அவ்வாறு திடீரென்று குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர். ஹூணர்களின் படையெடுப்பால்தான் அவர்கள் மறைந்து போகின்றனர். பிறகு சுமார் 220 வருடங்கள் ஆண்ட குப்தர்களுக்கும் (320-540), 160 ஆண்டுகள் ஆண்ட தோரமானன்-மிஹிரகுலன்களுக்கும் (478-637) என்ன வேற்றுமை?
சிவனுடையஆணையின்படிபுத்தகோவில்கள்கட்டும்பிராமணர்கள்: சசாங்கன் புத்தரின் சிலையை எடுத்துவிட்டு, சிவனுடைய சிலையை வைக்க முயன்றான், ஆனால் முடியவில்லை என்று சொல்லும் அதே பத்தியில் மேலே யுவான் சுவாங் குறிப்பிடுவதாவது, “இந்த கோவில் பனிமலையில் இருக்கும் சிவனின் அறிவுரையின்படி, ஒரு பிராமணன் கட்டினான். அருகிலுள்ள குளத்தை அவனது சகோதரன், சிவனின் ஆணையின்படி கட்டினான்”. இதையெல்லாம் முற்றும் உணர்ந்த சரித்திர ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. தமக்கு சாதகமாக இல்லை என்றால் அந்த வரிகளைக் ககறிப்பிட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிய்ம், சாதாரணமாக யாரும் யுவான் சுவாங் எழுதியதை எடுத்து படுத்து அவ்வாறே உள்ளதா-இல்லையா என்று யாரும் பரிசோதிக்க மாட்டார்கள் என்று! இவ்வாறு பிராமணர்கள், புத்தனுக்காக கோவில்-குளம் கட்டும்போது, எதற்காக அவர்கள் சசாங்கனைத் தூண்டி இடிக்கவைக்கவேண்டும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் நோக்கவேண்டும். சசாங்கனுக்கும், ஹர்ஷவர்த்தனுக்கும் இடையே இருந்த பகைமை அறிந்ததே. ஆகையால் பௌத்தர்கள் ஹர்ஷவர்ததனுடன் கூட்டு சேர்ந்து சசாங்கனுக்கு எதிராக சதி செய்திருக்கலாம். அந்நிலையில் எந்த அரசனும் அத்தகைய குழுவைத் தண்டிக்கத்தான் செய்வான்.
R.G. Basak, The History of North-eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of the Pāla Dynasty of Bengal, 2nd rev and enl ed, C.A.D. 320-760, Calcutta: Sambodhi Publications, 1967: 154-56.
பௌத்தர்கள், இந்தியா முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பாக இருந்தது. நாட்டின் பல இடங்களில் பரவியிருந்த விஹாரங்கள் மூலம், மகதத்தின் அரசியலில் அளவுக்கு அதிகமாகவே தலையிட்டுள்ளனர். ஆகையினால் பௌத்த மௌகாரிகள், பிராமண கௌடர்களுக்குச் சாதகமாக மகதத்திலிருந்து வெளியேற்ற பட்டிருக்கலாம். இதனால், பௌத்தர்களிடையே சசாங்கனுக்கு மதிப்புக் குறைந்தது எனலாம்.
B.P. Sinha, The Decline of the Kingdom of Magadha (Cir. 455-1000 A.D.), Bankipore: Motilal Banarsidass, 1954: 259.
தேவஹூதி என்பவரும் யுவான் சுவாங் கதையினை மறுத்துள்ளார்.
D. Devahuti, Harsha: A Political Study, third revised edition, Delhi:
Oxford University Press, 1998: 48.
வேதபிராகாஷ்
24-09-2009.
குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது, தேய்ந்தது ஏன்? (2)
வெளிகாரணிகள்:
1. ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது.
2. ஆதிசங்கரர் இந்தியாவில் இருந்த பலவித வழிபாட்டு நம்பிக்கையாளர்களை “ஷண்மதம்” என்ற கட்டுக்குள் எடுத்து வந்ததால், பௌத்தம் இந்தியாவில் தேய ஆரம்பித்தது.
3. இந்துக்கள் புத்தரையே ஒரு அவதாரமாக்கி, பௌத்தத்தை வலுவிழக்கச்
செய்தார்கள்.
4. ஜைனர்களின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், “இந்தியா”விற்கு
வெளியில் தனது கவனத்தைச் செல்லுத்தியது.
5. ராஜபுத்தரர்களின் வளர்ச்சி
6. ஹூனர்களின் படையெடுப்பு
7. முகமதியரின் அழிப்பு
இனி மேற்கண்ட விவரங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.
1. ஜைன-மௌத்த மதங்கள் சமகாலத்தவை என்பதனால், அரசாதிக்கத்துடன் செயல்பட்ட ஜைனத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் போனது: ஆரம்பகாலங்களில் ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் வித்தியாசம் இல்லையென்றும், ஜைனத்திலிருந்தே பௌத்தம் பெறப்பட்டது என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
Sital Prasad, A Comparative study of Jainism and Buddhism, the Jaina Mission Society, Madras, 1934.
மஹாவீரர் (599-527 BCE) மற்றும் கௌதம புத்தர் (567-487 BCE) இவர்களின் சமகாலம் நோக்கத்தக்கது. மஹாவீரருக்கு 32 வயதாகும்போது, புத்தர் பிறக்கிறார். மஹாவீரர் இறந்தபிறகு (527 BCE), 40 வருடங்கள் வாழ்ந்து, பலமாக அரசு மதமாக இருந்த ஜைனத்துடன் போட்டியிட்டு தமது நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவே வேடிக்கை என்னவென்றால், ஜைனத்தை வென்று தனது புதிய மதத்தை பௌத்தர்கள் நிருவியிருக்க வேண்டும். ஆனால், பௌத்தமோ வேதமதத்திற்கு விரோதமாக இருந்து, வளர்ந்தது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஜைனமே அத்தகைய மதமாதனால், ஜைனர்களை தமது பக்கம் இழுத்திருந்தாலே, பௌத்தம் வலுப்பெற்றிருக்கக்கூடும்.
ஜைனர்கள் வலுவாக இருந்த பொழுது, புத்தர்காலத்தில் (567-487 BCE) பௌத்தம் வளர்ந்தது ஊகமே, ஏனெனில் ஜைனர்கள் காலத்தில் அவ்வாறு புத்தரோ தமது சீடர்களோ அவ்வாறு செய்திருக்க முடியாது.
* இதில் வேடிக்கையென்னவென்றால், தாத்தா சந்திரகுப்தன் (321 – 297 BCE) ஜைனமதத்தினனாக இருந்து, சிரவணபெலகோலா வந்து “வடக்கிருந்து” இறக்கிறான்.
* மகன் பிந்துசாரன் (299 – 274 BCE) “இந்து” என்றே கருதப்படுகிறது!
* பேரன் அசோகனோ (273 – 237 BCE) பௌத்த மதத்தைத் தழுவுகிறான்!
ஆகவே எப்படி ஒரு தலைமுறையில், இவ்வாறு மாற்றங்களுடன், அசோகன் உடனடியாக தனது மதப்பிரசாகர்களை அனுப்பி, புத்தமதத்தைப் பரப்பத் தொடங்கியிருக்கமுடியும்?
மேலும் வேடிக்கை என்னவென்றால், அசோகன் மட்டும் தான் “சரித்திர காலத்திற்கு” (historic period) வருகிறான்! அவனது தந்தை மற்றும் தாத்தா “சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் (pre-historic / proto- historic) வைக்கப்படுகிறார்கள்! பிறகு எப்படிதான், இந்தியாவின் சரித்திரம் நிர்ணயம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை! [Protohistory refers to a period between prehistory and history, during which a culture or civilization has not yet developed writing, but other cultures have already noted its existence in their own writings.]
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஃபார்மர் என்ற மேதாவி, ஏற்கெனவே, ஹரப்பன்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தி வருகிறார். http://www.safarmer.com/washstate.pdf
அசோகன் தனது “பிரம்மி” எழுத்தை உடனே கண்டுபிடித்து கல்லிலே எழுத ஆரம்பித்தவுடன் தான் இந்தியர்களுக்கு அத்தகைய எழுத்தறிவு வந்தது! ஆனால் பாவம், தந்தை-தாத்தாக்கள் எல்லாம் எழுதத்தெரியாமல் இருந்தார்கள்!
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians?, in “Contribution of South India to Indian Art and Architecture”, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43. http://forumhub.mayyam.com/hub/viewlite.php?t=6130 http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating
மௌரிய காலத்திலிருந்தே, குறிப்பாக தென்னிந்தியாவில் ஜைனத்தின் ஆதிக்கம்அரசிய ரீதியில் அதிகமாக இருந்தது. இலங்கையில் பௌத்தம் இருந்து வளர்ந்த நிலையில், தமிழகத்தில் ஜைனத்தின் ஆதிக்கம் இருந்தது ஒரு காரணம் எனலாம். மேலும், அகாலங்க என்பவர் பௌத்தர்களை 788 CEல் தோற்கடித்ததால், அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள், என்பதில், ஜைனர்கள்தாம் பௌத்தர்களை தோற்கடித்து இந்தியாவிலிருந்து விரட்டினர் என கல்வெட்டுகளிலிருந்துத் தெரிகிறது.
K. A. Nilakanta Sastri (Publisher), Sravanabelagola, Department of archaeology, Mysore. 1981, p.4, based on Epigraphica Karnataka, Vol.II.
ஆகையால் தான் சங்க-இலக்கியம் சந்திரகுப்த மௌரியனைப் பற்றியும், அசோகனைப் பற்றியும் மூச்சுக் கூடவிடவில்லை. முதல் நூற்றாண்டுகளில் ஜைனர்கள் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழகம் பெருமளவில் பாதித்தது “களப்பிரர்கள்” மூலம் அறியலாம்.
ராஜதரங்கிணி விளக்கும் அசோகனோ ஜைனமதத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவன் பல ஜைன விஹாரங்களைக் கட்டியதாக கல்ஹனர் குறிப்பிடுகிறார். அவனுக்கும், கல்வெட்டுகள் “தேவநாம் பியா திஸ்ஸா” என்று குறிப்பிடும் நபருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று வலுக்கட்டாயமாக விதிக்கப்பட்ட கருத்தே. http://www.allempires.net/asoka-of-kashmir_topic18234_post341610.html
வேதபிரகாஷ்
15-09-2009.
குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.