போதிதர்மன் – கட்டுக்கதை, சரித்திரம், மற்றும் தமிழ் மொழி பேரினவாதத்தில் சிக்கிக் கொண்ட நிலை [1]
இந்தியாவில் பௌத்தம் குறைந்தது, சீனாவில் வளர்ந்தது: இந்தியாவில் தோன்றிய பௌத்தம், கால போக்கில், முரண்பட்ட நிலைகளால், அது. பாரதத்தில் கொஞ்சம்-கொஞ்சமாக தேய்ந்து குறைந்தாலும், மற்ற நாடுகளில் வளர ஆரம்பித்தது[1]. பௌத்தத்தின் தொன்மை 1887-1807 BCE வரை செல்கிறது[2], ஆனால், ஆங்கிலேயர் அவரது தேதியை 563-483 BCE, அல்லது 480-400 BCE BCE என்று குறைக்கிறார்கள். கிருத்துவம் பௌத்தத்திலிருந்து பெறப் பட்டது என்ற சித்தாந்தம் இருப்பதால், புத்தரின் தேதியை குறைத்து வருகிறார்கள். பாஹியான், யுவான் சுவாங் போன்றோர், பௌத்த மதத்தின் ஓலைச்சுவடிகளை எடுத்துச் செல்ல இங்கு வந்து சென்றனர் என்று அவர்கள் அதிகமாகவே எழுதி வைத்தார்கள். சைனாகாரர்கள் அப்படியொன்றும், சோடை போனவர்கள் அல்லர். இதியாவுடனான வியாபார விவகாரங்களுக்கு அதிகமாகவே வந்டு சென்றனர். இந்தியர்களும் சென்றனர். உண்மையில், தென்கிழக்காசிய நாடுகளில், இந்தியாவின் தாக்கம் தான் அதிகமாக இருந்தது. அது, வியாபாரம் மட்டுமல்லாது, எல்லாமும் கலந்து இருந்தது. இல்லை, இந்தியரே, குறிப்பாக பல்லவர்கள் பல்லாண்டுகள் ஆண்டு வந்தனர். ஆனால், பௌத்தம் அதிகாரத்தில் ஆதிக்கம் வளர, இந்தியரின் தாக்கம் குறைந்தது. சோழர்கள் மறைந்தவுடன், 13ம் நூற்றாண்டு வரை, கடலில் ஆதிக்கம் இல்லாத சைனா, பிறகு கோலோச்ச ஆரம்பித்தது. அத்தகைய உறவுகள் இருவழிகளிலும் இருந்தன.
போதிதர்மன் பற்றிய சரித்திர ஆதாரமான மூல ஆவணம் எதுவும் இல்லை: போதிதர்மன் பற்றிய சரித்திர ஆதாரமான மூல ஆவணம் எதுவும் இல்லை. இருக்கின்ற சைன கதைகளிலிருந்து, அவன் 5ம் / 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று கருதப் படுகிறது. அவரன் காலத்தைய விவரங்கள் அடங்கிய நூல்கள் இருந்ததாகவும் பிறகு அவை அழிந்து விட்டன அல்லது அதை எல்லாம் ஆதாரபூர்வமான சொல்ல முடியாது என்ற கருத்து நிலவுகிறது. இக்கதை தொகுப்புகளிலிருந்து, –
1. பாரசீகத்தில் இருந்து அதாவது மத்திய ஆசியாவிலிருந்து அல்லது 2. இந்திய பகுதியிலிந்து வந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கப் படுகிறது. இருப்பினும், சீனாவுக்கு எப்பொழுது எந்த தேதியில் எந்த காலத்தில் வந்தான் என்று, எந்த சரித்திரக் குறிப்பு இல்லை. இருக்கின்ற குறிப்புகளை தொகுத்து பார்க்கும் பொழுது ஒன்று அவன் சீன தேசத்திலிருந்து மேற்கு திசையிலிருந்து, வந்திருக்க வேண்டும் அதாவது மத்திய ஆசியா / பாரசீகத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் இல்லை, இரண்டு அவன் தென்னிந்தியாவிலிருந்து இந்திய அரசின் வம்சாவளியில் பிறந்த, ஒரு அரசனின், மூன்றாவது மகனாக பிறந்தவன் என்றும் சொல்லப்படுகிறது. பல்லவகாலத்தில், ஒரு பிராமண குலத்தில் பிறந்தவன் என்றும் காணப்படுகிறது. இக்குறிப்பு, தமிழர்களின் இப்பொழுதைய கதைகளில் மறைக்கப் படுகின்றது. விகிபீடியாவே மறைப்பது கேவலமாக இருக்கிறது[3], ஏனெனில், ஆங்கிலத்தில் உள்ளதை[4] தமிழில் மறைக்கும் போக்கில் வெளிப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் போதிதர்மனைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை[5]: 2011ல் “ஏழாம் அறிவு” என்ற திரைப்படத்தின் மூலம் தான், அவனது கதையை அறியப்பட்டு குறிப்பாக அவன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்றதனால், ஆதாரங்களை எல்லாம் இல்லையென்றாலும், அவனை பற்றி இருக்கும் சில குறிப்புகள், பெரிதாக ஊதப்பட்டு ஏதோ பெரிய சரித்திரம் போன்ற குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் ஜனரஞ்சக எந்தவித சரித்திர ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுத ஆரம்பித்துள்ளனர். நேரிடையாக, போதி தர்மனைப் பற்றி பேசாமல், எதையதையோ பேசி, சுற்றி வளைத்து, காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்குச் சென்றான் என்கிறார்கள். சீனக் குறிப்புகளைப் படிக்கும்போதுதான், அவன் சென், சான் அல்லது ஜென் பௌத்த மதத்தை அல்லது அந்த புத்த மதக் கொள்கைகளை சைனாவுக்கு கொண்டுவந்தான் என்றுள்ளது. பிறகு ஜப்பான் வியட்நாம் போன்ற நாடுகளிலும் பரவியது என தெரிகிறது.
பட்டுப் பாதை வழியாக, சுமத்ராவிலிருந்து, குவாங்சௌ பகுதியில் முத்து நதி கரையில் வந்து இறங்கினான்: சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பு படி அவன் இந்தியாவின் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இருக்கும் கடல்வழி பட்டுப் பாதை வழியாக, சுமத்ராவிலிருந்து, குவாங்சௌ பகுதியில் [முன்னர் canton என அழைக்கப் பட்டது] முத்து நதி கரையில் வந்து இறங்கினான் என தெரிகிறது. அதாவது அவன் லியூ என்கின்ற சோங் வம்சாவளி [Liu Song Dynasty, 420-479] அல்லது லியாங் வம்சாவளி [the Liang Dynasty, 502-557CE)] காலகட்டத்தில் வந்திருக்கலாம் என்று பெர்கூசன் [Frgusson] என்ற ஆராய்ச்சியாளர் எடுத்துக் காட்டுகிறார்[6]. அருகில் இருக்கும் குவாங்சௌ மடாலத்தில் அவர் முதன் முதலில் தன்னுடைய போதனை ஆரம்பித்தார் என்றும் அவரால் குறிப்பிடப்படுகிறது[7]. பிறகு, தனது யாத்திரியை வடக்கு திசையில் மேற்கொண்டு, போதிசத்துவர் என்று மதிக்கப் படுகின்ற, அரசராக இருக்கின்ற வூ என்கின்றவனை சந்தித்து உரையாடினார் என்றுஉள்ளது. இதுவும் ஒரு apocryphal போன்ற கட்டுக்கதை போன்ற குறிப்புகளில் உள்ளது தான் என்று புரிகிறது.
யாங் சுவான்சீ கொடுக்கும் விவரங்கள் – போதிதர்மன் பாரசீகத்திலிருந்து வந்தான்: 17 ஆம் நூற்றாண்டிற் சீனாவில் அரசு செலுத்திய மிங் அரச மரபினரால் அமைக்கப்பட்ட போதி தருமரின் வெண்கல சிலை லுவோயங் (洛陽伽藍記 Luòyáng Qiélánjì) பகுதியில் அமைந்துள்ள பௌத்த மடாலயங்களின் குறிப்புக்கள் 547 CE ஆம் ஆண்டில் மகாயான பௌத்த ஆக்கங்களைச் சீனமொழிக்கு மொழிபெயர்த்த யுவான் சுவாங் என்பவரால் எழுதப்பட்டவையாகும். அக்காலத்தில் மேற்குப் பகுதியில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த பாரசீகரான போதிதருமர் என அறியப்பட்ட ஒரு துறவி இருந்தார். அவர் காட்டு எல்லைகள் வழியாகச் சீனாவை அடைந்தார். கதிரொளியிற் பளிச்சிடும் [யோங்னிங்சி தூபியின்] தங்கத் தட்டுக்களைப் பார்த்தும், அதனூடு செல்லும் ஒளி மேகத்தில் கலப்பது போன்றிருப்பதைக் கண்டும், காற்றில் அசைந்தாடும் மாணிக்கம் பதித்த மணியின் ஓசை வானத்தை அடைவது போன்று இருப்பதைக் கண்டும் அவர் அதன் புகழ் பாடினார். அவர் இப்படி விளித்தார்: “மெய்யாகவே இது ஆவிகளின் வேலை”. அவர் மேலும் கூறினார்: “நான் 150 ஆண்டு வயதானவன். நான் எத்தனையோ நாடுகளைக் கடந்து வந்துள்ளேன். கிட்டத்தட்ட நான் போகாத நாடே இல்லை எனக் கூறலாம். தொலை தூரத்திலிருக்கும் இது போன்ற பௌத்த நாடாயினும் சரியே.” அவர் அதனைப் புகழ்ந்தேற்றியதுடன் தன் கரங்களைக் கூப்பி நாட்கணக்காக வைத்திருந்தார். இங்கு குறிப்பிடப்படும் ஆலயமான யோங்னிங்சியில் (永寧寺) உள்ள ஆலயம் அதன் புகழ் ஓங்கி இருந்த காலத்திலேயே லுவோயங்கில் போதி தருமரின் வரவு பற்றி புரௌட்டன் 516 இற்கும் 526 CE இடைப்பட்ட காலத்தினதாகக் குறிப்பிடுகிறார். 526 ஆம் ஆண்டு முதல் யோங்னிங்சி தொடர்ச்சியாக இடம்பெற்ற கடுமையான நிகழ்வுகளால் தாக்கப்பட்டு அழிவுறத் தொடங்கி, 534 ஆம் ஆண்டு மொத்தமாக அழிந்து விட்டது. அதாவது ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாகியது.
தான்லின் – போதிதர்மன் தென்னிந்தியாவிலிருந்து வந்தான்: இரண்டாவது குறிப்பு தான்லின் (曇林; 506–574 CE) என்பவரால் எழுதப்பட்டது. தான்லின் எழுதிய “தரும போதகரின்” சுருக்கமான வாழ்க்கை வரலாறு, போதி தருமரே எழுதியதாகப் பொதுவாகக் கருதப்படும் இரு வாயில்களும் நான்கு செயல்களும் என்பதற்கு அவர் எழுதிய முன்னுரையில் போதி தருமா ஒரு தென்னிந்தியர் எனக் குறிப்பிடுகிறார்: “தரும போதகர் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். அவர் இந்தியாவின் சிறந்த அரசரொருவரின் மூன்றாம் மகன். மகாயான வழியிலேயே அவரது குறிக்கோள் இருந்தது. அதனால் அவர் தனது வெண் துகிலை நீக்கிவிட்டு, துறவிகள் அணியும் கருந்துகிலுக்கு மாறினார் […] வேற்று நாடுகளில் மெய்யான போதனை இல்லாமலாவதைக் கண்டு வருந்திய அவர் நெடுந் தொலைவிலுள்ள மலைகளையும் கடல்களையும் கடந்து ஹான் மற்றும் வை ஆகிய இடங்களிற் போதிப்பதை நோக்கமாகக் கொண்டு பயணித்தார்.” போதி தருமர் சீடர்களைக் கொண்டிருந்தார் என்னும் தான்லினின் கூற்று, குறிப்பாக அவர் டாஒயூ (道育) மற்றும் ஹூயிக்கே (慧可) என்போரைச் சீடராகக் கொண்டிருந்தார் என்னும் கூற்று இங்கு குறிப்பிடத் தக்கது. மேற்படி இருவருள் பின்னவரான ஹூயிக்கே என்பவர் போதி தருமர் பற்றிய இலக்கிய ஆக்கங்களைப் பின்னர் இயற்றியவராவார். தான்லின் போதி தருமரின் சீடரொருவரென்றே பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் அவர் போதி தருமரின் சீடரான ஹூயிக்கேவின் சீடராக இருந்திருப்பதற்கான சாத்தியமே கூடுதலாக உள்ளது.
© வேதபிரகாஷ்
17-10-2019
[1] மின்–தமிழ் என்ற இணைதளத்தில், இதைப் பற்றி விவரமாக எழுதி வந்தேன், ஆனால், திடீரென்று அவை மறைந்தன மற்றும் நானும் தடை செய்யப் பட்டேன். அதனால், அவற்றை மீட்டெடுத்து, தொகுத்து, மறுபடியும் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அப்பதிவுகளை, இங்கு படிக்கலாம்:https://buddhismstudies.wordpress.com/
[2] இது ரக்கலதாஸ் பானர்ஜியின் அகழ்வாய்வு முடிவுகளை ஒத்திருந்ததால், அவரது அறிக்கை மற்றும் புகைப் படங்கள், ஆங்கில அரசால் மறைக்கப் பட்டன, அச்சில் ஏறவிடால் தடுக்கப் பட்டன. புகைப் படங்களும் மற்ற ஆதாரங்களும் மறைந்து விட்டன.
[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
[4] https://en.wikipedia.org/wiki/Bodhidharma
[5] While Bodhidharma is virtually unknown in India,apart from the controversial 2011 film, 7am Arivu, his legacy in China, Japan and Vietnam is very considerable. As mentioned, he is honoured for bringing ‘Chan’ (pronounced ‘Chen’) Buddhism to China, and ‘Zen’ thereafter – by a succession of hands – to Japan, though contemporary scholarship suggests a much earlier introduction of Zen to the East (Red Pine, 1989).
[6] Andy Ferguson, Tracking Bodhidharma: A Journey to the Heart of Chinese Culture. Berkeley: Counterpoint., 2012.
[7] By contrast, for Bodhidharma, there are virtually no records, and what we lose by way of fact is made up by a wealth of invention. On the banks of Guangzhou’s Pearl River where Bodhidharma is said to have landed from his long sea voyage on the maritime silk route via Sumatra (in either the Liu Song Dynasty, 420-479, or the Liang Dynasty, 502-557CE), a gateway identifies the spot where he stepped ashore (Ferguson, 2012:25). Similarly, the nearby Hualin Temple in Guangzhou marks the place where Bodhidharma began his teaching.