Archive for the ‘ஆரியம்’ Category

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மாநாடு அழைப்பிதழ்

மாநாட்டில் பேசுபவர்கள்………

14-05-2023 – தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு: 14-05-2023 அன்று தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை வகித்தார். தம்ம தர்மேந்திரா, கோ.பெரியசாமி, ஆதிராஜா, சா.ராம்ஜி, மூக்நாயக் மணி, காளிதாஸ், மணிகண்டன், இளையநந்தன், பி.பி.ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவாசல் அருகே தியாகனுாரில் பவுத்த மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “தமிழகத்தில், 76 இடங்களில் புத்தர் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், உலகம் முழுதும் கடவுள் நம்பிக்கை, பிசாசு மூடநம்பிக்கை இருந்தது. கடவுள் நம்பிக்கையை பரப்பும் நிறுவனமாக மதம் உள்ளது. பவுத்த மதம் இருக்கும் இடத்தில் அறிவு உள்ளது. அம்பேத்கர் மேலும், 10 ஆண்டு உயிருடன் இருந்திருந்தால் பவுத்த மதம் வளர்ச்சி பெற்றிருக்கும். நல்லிணக்க கோட்பாடாக பவுத்தம் உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். புத்தர் அவதார புர்ஷர் அல்ல, புஷ்யமித்ர சுங்கரால் தான் பௌத்தம் இந்தியாவில் வீழ்ந்தது, என்பதெல்லாம் அவரது பேச்சில் இருந்த முக்கியமான அம்சங்கள்.

பௌத்த ஊர்வலம், நடபடிகள்: இந்த மாநாட்டை முன்னிட்டு முன்னதாக புத்த பிக்குகள் மற்றும் சங்க ரத்தினர்கள், பவுத்த உபாசகர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. மேலும் மாநாட்டில் சங்க பேரவையின் மகாசங்ககாதிபதியாக அனைவரும் முன்னிலையிலும் முக்கோல் பெற்றுக் கொண்டு பிக்கு தம்மசீலர் பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தபிரகாசம், தம்ம ரத்னா, ஜெயசீலர், குணசீலர், அமராவதி, தமிழ் கோவை, பவுத்தம் பாலா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு மங்கள கங்கண நிகழ்வும் புத்த பூர்ணிமா நிகழ்வும் நடை பெற்றது. பௌத்தத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இச்சடங்குகள் நிறைவேற்ற பட்டன. ஒருவேளை எஸ்.சிக்களை பௌத்தத்திற்கு மாற்ற, முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், “நியோ பௌத்தம்,” என்று குறிப்பிடாமல் இருப்பதும் நோக்கத் தக்கது[1].  

செக்யூலரிஸத் தன்மையினை எடுத்துக் காட்டிய முயற்சி: இதைத் தொடர்ந்து விகார் கவுன்சில் செயலர் திருநாவுக்கரசு தலைமையில் போதிச்சந்திரன் வரவேற்பில் சிறுபான்மை நலகுழு உறுப்பினர்கள் பவுத்த பெருமாள், அம்பேத் ஆனந்த், சி. அழகர், தேவேந்திரன், கௌதம் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில் சர்வ மதத்தினரும் கலந்து கலந்துண்ட நிகழ்வு நடை பெற்றது. இதில் காஞ்சி ஜைனமட ஜினாலய பரிபாலகர் பட்டாராக சுவாமிகள், உத்தரப்பிரதேசம் பிக்கு நாகபூசனா, ஆந்திரபிரதேசம் நாகார்ஜுனா, போ தி ஆகியயோர் மகா சங்கதிபதி மற்றும் மகா சங்கத்தை வாழ்த்தி பே சினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள புத்தர் திருக்கோயில் நிர்வாகிகள், சங்கரத்தினர்கள், புத்த பூசகர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேடையில் வழிபாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாட்டில் பவுத்த சுவடுகள் கருத்தரங்கம் நிகழ்வு மகாதினகரன் தலைமையில், எஸ் வசந்த் வரவேற்பில் நடைபெற்றது. இதில் தம்மதேவா, கோவைப் பிரியா, சிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் ஆதிக்கம்: ஜெர்மனி தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, குந்தவை நாச்சியார், கல்லூரி இணை பேராசிரியர் சிவராமன், வரலாற்று ஆய்வாளர் அரகலூர் வெங் கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 மாவட்ட சிறுபான்மைநல உறுப்பினர்கள் மகாசங்க உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து பவுத்த மறுமலர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பாளர் கவுதம சன்னா தலைமையில் நடைபெற்றது. மகா சங்க பொருளாளர் அரக்கோணம் கோவி. பார்த்திபன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொ.திருமாவளவன். எம்.பி., காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ., சிந்தனை செல்வன், மருத்துவர்கள் ராஜ்வர்தன், பெரியசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் மகர பூசணம், மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்கத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக சா. ராம்ஜி சாக்கியா நன்றி கூறினார்.

முரண்பட்ட அல்லது சேந்துள்ளவர்களின் சித்தாந்த நிலை: இப்படி இம்மாநாட்டில் ஏதோ பல இந்திய மாநிலங்களிலிருந்து, பல வெளிநாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்த முயன்றாலும், அவரவர் தமது காரியங்களில் குறியாக இருந்தனர். திருமாவளவன் பேசி சென்றுவிட்டார்.   தேமொழி எழுதிய ‘ தமிழகத்தில் பௌத்தம்” நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில்(14.05.2023) சேலம் அருகே தியாகனூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பௌத்த சங்கம் கூறியது, “நெடுநாளாய்த் தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்கள் குறித்த இந்துக்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லை யென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்து கொள்ளப் போவதில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, தன்னுதவி, தன் மேம்பாட்டுக்கான போராட்டம் அவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்.” பிறகு, நாராயணன் போன்றோர் எப்படி விசுவாசத்துடன் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோவிலும், இந்து கோவில் போலத் தான் கட்டியுள்ளார்கள். திருமா பார்த்தாரா என்று தெரியவில்லை.

விசித்திரமான நட்புக்குழு: கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் இவர்களின் தொடர்புகள், தமிழகத்தில் பல பேனர்களில் வேலை செய்வது, பரஸ்பர உதவி முதலியன பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. கௌதம சன்னா விசிக வின் பிரச்சார செயலாளர், பல அமைப்புகளில் பொறுப்பு என்று பட்டியல் காணப் படுகிறது[2].  மாநில செயலர் நீலசந்திரகுமார், முனைவர் கனல்விழி, பேராசிரியை சுந்தரவல்லி, செம்மலர், கௌதம சன்னா முதலியோர் கிருபா என்ற பெண் வழக்கறிஞர் விக்ரம் மீது ஏப்ரல் 2023ல் கொடுத்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க மே 2023ல் முதல் வாரத்தில் அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சுபாஷிணி மீது ஏற்கெனவே சிலர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இப்படி சர்ச்சைக்குர்யவர்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்கின்றனர் என்பதும் புதிராக உள்ளது. நாராயணன் கண்ணன் தன்னை ஒரு வைணவன் என்று காட்டிக் கொள்வார், ஆனால், இவர்கள் தூஷிக்கும் பொழுது கண்டுகொள்ள மாட்டார். தவிர, “மின் தமிழ்” என்ற குழுவில் இவர்கள் மற்ற பலருடன் நடு வைத்துள்ளனர். எல்லா விசயங்களையும் அலசுவர் பொதுவாக செக்யூலரிஸ, முற்போக்கு, மார்க்சீய, சித்தாந்திகள் போன்று காட்டிக் கொள்வர்..

கௌதம சன்னாபலவித பதவிகள், பொறுப்புகள், எழுத்தாளர் முதலியன: கௌதம சன்னாவைப் பொறுத்த வரையில் அரசியல்வாதி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தேர்தலிலும் நின்று தோற்றுள்ளது தெரிகிறது. “ஜெய் பீம் பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் வைத்திருப்பதும் தெரிகிறது.. இதனால், பௌத்தத்தை அரசியல் ரீதியில் உபயோகப் படுத்த முயலும் நிலையும் தெரிகிறது. அதனை அவரே விளக்கியுள்ளதை இங்கு படிக்கலாம்[3]. மற்றபடி “தலித்” என்ற பேனர்கள்-மேடைகள், புத்தகங்கள் எல்லாம் அம்பேத்கரை உபயோகப் படுத்தப் படும் முறையும் விளங்குகிறது. வழக்கம் போல திருவள்ளுவரையும் இதில் சேர்த்து குழப்பி, ஆராய்ச்சி என்று வறுத்தெடுப்பது, கிறிஸ்துவ பாணியும் புலப் படுகிறது. எனவே தலித்-கிறிஸ்துவ-பௌத்த இணைப்புகள் உள்ளதா இல்லையா என்று ஆராய வேண்டியதும் உள்ளது.

நாராயணன் கண்ணன் மற்றும் கௌதம சன்னா உறவுகள்: நாராயணன் கண்ணன் என்பவர், “பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்,” என்று பேஸ்புக் 14-05-2023 பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்று தியாகனூரில் நடந்த பௌத்த மாநாட்டில் சுபாஷினியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  மதம் மாறினாலும் எஸ்.சிக்களுக்கு அச்சலுகைகள் தொடரும் என்று அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளின் படி உள்ளது. அதனால், இதில் பிரச்சினை இல்லை.

[2] https://gsannah.wordpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

[3] “ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா  by வல்லினம் • February 1, 2018; https://vallinam.com.my/version2/?p=4973

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்தம மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

தென்னிந்தியாவில் ஜைனம்பௌத்தம் குறைந்து வைணவம்சைவம் வளர்ந்து ஆதிக்கம் பெற்றது: பௌத்த மதம் தன்னுடைய ஹிம்சை-அஹிம்சை முரண்பாடுகளால், போலித் தனங்களால், இரட்டை வேடங்களால், வன்முறைகளால், வாணிக அடாவடித்தனங்களால், மோதல்களினால், போர்களால் இந்தியாவில் வெளிப்பட்டு, மக்கள் அதனை ஒதுக்கினர்[1]. போதாகுறைக்கு, இடைக்காலங்களில் ஜைன-பௌத்த மோதல்களில் பௌத்தம் பெரும்பாலாக சீர்குலைந்தது. ஜைன ஆதிக்கம் அதிகமாகிய நிலையில் பௌத்தம் ஒதுக்கப் பட்டது[2]. பிறகு தென்னகத்தில் வைணவம்-சைவம் கொஞ்சம்-கொஞ்சமாக பல்லவ காலத்திற்குப் பிறகு வளர்ந்த நிலையில், பௌத்தம் ஓரளவுக்கு முழுமையாக வெளிநாடுகளுக்குச் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜைனம் உச்சத்தை அடைந்து தென்னிந்தியாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், வைணவம்-சைவம் சித்தாந்த மோதல்களில் தோற்க ஆரம்பித்தது. ஜைன அரசர்களின் வன்முறைகள் அவர்களது அஹிம்சை நெறிகளுக்கு முரணானது. முதல் நூற்றாண்டுகளில் தமிழக அழிவுகளுக்கு ஜைன களப்பிளர்களைச் சுட்டிக் கட்டியுள்ளனர். கல்வெட்டுகளும், ஜீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களும் ஜைனர்களின் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகின்றன.

ஜைனபௌத்த சிலைகள் தெய்வசிலைகள் அல்ல, பூஜிக்கப் படவும் இல்லை: மக்களுக்குப் புரிந்தது. இதனால், ஜைனர்கள் இரட்டை வேடம் போட முடியவில்லை. தங்களது வியாபார மற்றும் வணிக முறைகளால் இந்தியாவிலேயே சித்தாந்தத்தை மாற்றிக் கொண்டு தழைக்க முயன்று வெற்றி கண்டது. ஜைன-பௌத்த மதங்கள் நாத்திக மதங்களாதலால், அவற்றின் கடவுள், கடவுளின் விக்கிரகம் என்றெல்லாம் இல்லை[3]. இதனால், மதத்தலைவர்களின் சிலைகள் ஒதுக்கப் பட்டன, மறக்கப் பட்டன. ஏனெனில், அவை பூஜிக்கப் படவில்லை. இதனால் தான் அத்தகைய சிலைகள் அங்கும்-இங்கும் வயல்களில், கிராமப்புறகளில், தொலைவான இடங்களில் கிடக்கின்றன. இதுபோல பல சிவலிங்கங்களும், மற்ற இந்துமத கடவுள், தேவதைகளின் சிலைகள், விக்கிரங்களும் அதிகமாகவே காணப் படுகின்றன[4]. இத்தகைய சிலைகள் காணப் படுவதற்கு மாலிக்காபூர், ஹைதர் அலி, திப்பு சுல்தான், வாலாஜா நவாப்புகள் முதலியோர் காரணம். இதை எந்த எழுத்தாளர்களும் முறையாக எடுத்துக் காட்டுவதில்லை.

2013ல்தியாகனூரில் புத்தர் கோவில் கட்டப் படுதல்: கேட்பாரற்று கிடந்த, ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலைக்கு, தனி கோவில் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள், கோரிக்கை விடுத்தனர்[5] என்று ஊடகங்கள் குறிப்பிடுவ்தை கவனிக்கலாம். அதையடுத்து, மெட்ராஸ் சிமென்ட், சிட்டி யூனியன் பாங்க், எஸ்.கே., கார்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம்பெனி நிறுவனங்கள் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புத்த தியான பீடம் அமைக்க, கட்டுமான பணி நடந்தது[6]. மே 23 2013 அன்று தியான பீடத்தில், புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தில் சிலைகள் கீழ்கண்டவாறு அம்மைக்கப் பட்டுள்ளன:

  • கிழக்கு (அ) கோயிலின் முன் பக்கத்தில்: புத்தர் உருவம்
  • தெற்கு : கண்ணனின் உருவம்
  • மேற்கு : திருமாலின் நரசிம்ம அவதாரம்
  • வடக்கு :கிருஷ்ண அவதாரம்

இங்கு புத்தரின் விக்கிரகம் ஒரு வைஷ்ணவ ஆச்சாரியார் போலவே உள்ளது. புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாலும், அத்தகைய மாற்றத்தை வேண்டுமென்றே செய்தது இந்துக்களா, பௌத்தரா என்ற கேள்வியும் உள்ளது. இந்துக்களை மதமாற்ற பௌத்தர்கள் செய்த சூழ்ச்சி என்றும், இல்லை பௌத்தத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இந்துக்கள் செய்த சூழ்ச்சி என்றும் பரஸ்பர குற்றச்சாட்டு கூறுவது தெரிந்த விசயமே.

2023ல் பௌத்த மாநாடு நடத்த தீர்மானம்: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புத்த பூர்ணிமா விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பௌத்தர்கள் மற்றும் விஹார்களின் தலைமை மத அமைப்பின் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீட மேற்பு பிக்கு பிக்குகளின் சங்க பரிபாலன கங்கன மேற்புக்கான தமிழ்நாடு பௌத்தம் மறுமலர்ச்சி மாநாடிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கௌதம சன்னா அவர்கள் 14.05.2023 பகவான் தியாக புத்தர் திருக்கோயில் தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு தியாகனூரில் நடைபெற இருப்பதால் தமிழ்நாட்டின் ஆதி மதமான பௌத்தம் புத்தரின் காலத்திலும் அதற்கு பிறகும் தமிழகத்தில் பரவி செழித்திருந்தது.  பெரும்பாலான தமிழர்கள் பௌத்தம் தழுவி இருந்த நிலையில் சாம்ராட் அசோகரின் காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஏராளமான பௌத்த புனித தலங்கள் உருவாக்கினார். பௌத்தத்தை பின்பற்றிய தமிழ் அரசர்கள் அறநெறிப்படி ஆட்சி புரிந்தனர் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்தம் செழித்தோங்கியிருந்தது.அக்காலகட்டத்தில் பௌத்தத்தை பரப்பும் ஒருங்கிணைக்கவும் தலைமை பௌத்த சங்கம் செயல்பட்டது. அதற்கு தலைமை பிக்குவும் மற்ற நிர்வாகிகளும் பௌத்த மார்க்கத்தை நிர்வகித்தனர். இவர்களின் நிர்வாகத்தின் கீழ் விகாரைகள்  எனப்படும் பிக்கு பிக்குனி மடங்களும் புத்தரின் பாதையை பின்பற்றுவதை நினைவுறுத்தும் அவரின் பாத பீடிகைகளை  வழிபடும் முறையும் தமிழகத்தில் பரவலாக இருந்தன. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த பிக்கு பிக்குனிகள் பேரவை  மறைந்தது. தமிழர்களின் ஆதிமதமான பெளத்தம் தமிழ்நாட்டில் அழிந்துபோனது.

தமிழகத்தில் பௌத்தத்தின் நிலை: பௌத்தம் அளிக்கப்பட்டு 700 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் பண்டிதர் அயோத்திதாசரும் இந்தியா அளவில் அனகாரிக தர்மபாலா மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் பௌத்தத்தை மீட்டெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக 800 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் மகா சங்காதிபதி தலைமையில் பிக்கு பிக்குனிகள் நிர்வாகத்தில் தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பாகவும் தலைமை சங்கமாகவும் மீண்டும் எழுகிறது பௌத்தம். அதற்கான விழா தான் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீடமேற்பு மற்றும் பிக்கு பிக்குனிகளின் சங்க பரிபாலன கங்கன மேற்பு விழா நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது என்பது சிறப்பு மிக்கதாகும். இந்த மாநாட்டில்  அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து மத தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பௌத்த சங்கப் பேரவை மகா சங்காதிபதி வணக்கத்திற்குரிய பிக்கு தம்மசீலர், வணக்கத்திகுரிய பிக்கு போதி அம்பேத்கர் மற்றும் பிக்குகள், மகா சங்க செயலாளர் ஆர். திருநாவுக்கரசு, பொருளாளர் பார்த்திபன், தமிழக முழுவதிலும் உள்ள புத்த விகார் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு புத்தசங்கா கவுன்சில் துணைச் செயலாளர் எஸ் வசந்த், பால்ராஜ், ரகு, செந்தில், சந்திரசேகர், சரவணன்,மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  இதைப் பற்றி முன் தமிழில் விவரமாக சுமர் 200 பக்கங்களுக்கு எழுதியுள்ளேன். ஆக, இவை இந்த குழுக்களுக்கு – கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் முதலியோர்களுக்கு தாராளமாகவே தெரியும்.

[2] 788-CEல் தோல்வியடைந்த பௌத்தர்களை கொல்லாமல், இலங்கைக்கு நாடு கடத்தியதை கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன.

[3]  பௌத்தர்களின் ஸ்தூபம், விகாரம் முதலியவை கோவில்கள் அல்ல, சிதை-அல்லது இறந்தவர்களில் எச்சங்கள் மீது நினைவாகக் கட்டப் பட்ட கட்டிடங்கள் ஆகும். சிலைகளும் பிற்காலத்தில் வைக்கப் பட்டன.

[4]  இவையெல்லாம் சைவ-வைணவ மோதல்களில் உண்டானவை போன்று சித்தரிக்கப் படுகின்றன, ஆனால், அவை ஜைன-பௌத்தர்களால், பெரும்பாலும் துலுக்கர்களால் கோவில்கள் இடித்துத் தள்ளப் பட்டு விட்டுச் சென்ற மீதிப் பொருட்களே.

[5] தினமலர், ஆத்தூர் அருகே 5ம் நூற்றாண்டு கால புத்தர் சிலை பிரதிஷ்டை, பதிவு செய்த நாள்: மே 24,2013 03:52

[6] https://m.dinamalar.com/detail.php?id=720040

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? ராஜபுத்திரர்களின் வளர்ச்சியும், பௌத்தத்தின் வீழ்ச்சியும்(15)

மே 15, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?  ராஜபுத்திரர்களின் வளர்ச்சியும், பௌத்தத்தின் வீழ்ச்சியும்(15)

Annala and antiquities of Rajasthan - TOD

ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் உள்ள தொடர்பு முன்னமே விளக்கப்பட்டது [பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (4) தேதி 17-09-2009]. இனி ராஜபுத்திரர்களின் வளர்ச்சி, பௌத்தத்தைப் பாதித்ததா என்று பார்ப்போம். எப்படி ஜைனத்திற்கும், பௌத்தத்திற்கும் குழப்பம் உள்ளதோ, அது மாதிரி ராஜபுத்திரர்களுக்கும், ஜைனத்திற்கும்; ராஜபுத்திரர்களுக்கும், மார்வாரிகளுக்கும்; ராஜபுத்திரர்களுக்கும் அஹிம்சைக்கும் இடையேயுள்ள குழப்பங்கள் உள்ளன. ஆனானப்பட்ட காலனெல் ஜேம்ஸ் டோட் என்பாருக்கே அத்தகைய முரண்பாடான சிந்தனையிருந்ததை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர் ராஜஸ்தான் மக்களைப் பற்றி ஆய்ந்து விவரமாக எழுதியுள்ளார்.

Col. James Tod, Annals and Antiquities of Rajasthan, (in three volumes), Motilal Banarasidas, New Delhi, 1971 (1920).

ராஜஸ்தானில் உள்ளவர்கள் எல்லாம் ராஜபுத்திரர்களோ, ஜைனர்களோ, அஹிம்ஸாவாதிகளோ அல்லர்; மார்வாரில் வாழும் ராஜஸ்தானியர், அதிலும் ஜைன மதத்தைப் பின்பற்றுபவர்களே அஹிம்ஸாவாதிகள்; அதிலும் திகம்பர ஜைனர்கள் மிகக்கட்டுப்பாடுள்ளவர்கள். ஆனால், ராஜபுத்திரர்கள், வீரர்கள், பராக்கிரமசாலிகள், சண்டை-போர் விரும்பிகள். அவர்களுக்கும் அஹிம்சைக்கும் சம்பந்தம் இல்லை. 8-11வது நூற்றாண்டுகளில் வட-இந்தியாவில் ஏற்பட்ட அவர்களது வளர்ச்சி, முகமதியரது படையெடுப்பு காலத்துடன் இணைந்திருப்பதைக் காணலாம். இருப்பினும், முகமதியர்களின் படையெடுப்புகளால்தாம் அவர்கள் வளர்ந்தார்கள் என்று சொல்லமுடியாது. மஹாபாரத யுத்தத்திற்கு பிறகு க்ஷத்திரிய வம்சங்கள் பிரிந்தன. ஒரு அரச பரம்பரையிலேயே வித்தியாசங்கள் ஏற்பட்டு தனித்தனி வசங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. சில காரணங்களால் விலக்கப்பட்ட ராஜவசத்தினர்தாம் கிரேக்கர்கள் என்று எட்வர்டு ஈ, போக்கோக், காலனெல் ஜேம்ஸ் டோட் முதலியோர் எடுத்துக் காட்டியுள்ளனர். கிரேக்கத்தின் மீதான “திகம்பரத்தின் தாக்கம்” முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது.
Edward Pococke, Indian in Greece, Cosmos Publications, New Delhi, 1975.

The Hindu Temple in Bandar Abbas is a historical monument that was constructed in 1892
ராஜவம்சத்தினர், அரசர்கள் ஜைனமதத்தைத் தொடர்ந்து ஆதரித்தது: ராஜவம்சத்தினர், அரசர்கள் ஜைனமதத்தைத் தொடர்ந்து ஆதரித்தது சரித்திரம் மூலம் அறியலாம் (7ம்நூற்றாண்டு BCE முதல்). சேதகா (7ம் நூற்றாண்டு BCE), ஸ்ரீநெக் (601-552 BCE), அஜாதசத்ரு (552-518 BCE), நந்த வம்சத்தினர் (4ம் நூ.BCE), சந்திரகுப்த மௌரியன் (320 BCE), சம்பிரதி (220 BCE), காரவேல (174 BCE), முதலிய ராஜாக்கள், பேரரசர்கள் தொடங்கி, வட-இந்தியா மற்றும் தென்னிந்தியாவில், குறிப்பாக கர்நாடகத்தில் ஜைனத்திற்கு அரச-ஆதரவு அதிகமாகவே இருந்தது. விசித்திரமாக, களப்பிரர்களின் ஆட்சி மட்டும், தமிழர்களுக்கு எதிராக இருந்தது. ஆகவே இத்தகைய அரச-ஆதரவு ஜைனத்திற்கு இருந்தது, அதேகாலங்களில் பௌத்தத்திற்கு இல்லை அல்லது குறைந்தது என்பதை நோக்கத்தக்கது.

Temple at Nubia, Sudan, Africa-1

இந்தியஅரசர்களின், இந்துக்கள் ஆதிக்கம் பரவியிருந்தது: முதல் நூற்றாண்டுகளில் மத்தியத்தரைக் கடல் நாடுகளில் இந்திய அரசர்கள்
ஆண்டுவந்திருக்கின்றனர். ஏனெனில், அவர்களின் நாணயங்களில் இந்தியக் கடவுளர்கள்தாம் காணப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது, அக்காலத்தில் அந்த பிரதேசங்களில் இருந்த கோவில்கள், கட்டிடங்கள், சிற்பங்கள் முதலியனவும் இந்தியாவின் முத்திரையை/தாக்கத்தை எளிதில் காணலாம். காந்தாரம் / காந்தஹார் முழுமையாக இந்தியர்கள் / இந்துக்கள் வாழ்ந்த பிரதேசம். இங்கிருந்து மற்ற இடங்கள் எல்லாம் மிக அருகாகமைதான்.

* கஜானா / கஜினி 200 மைல்கள்;
* கோர் / கோரி / குர் / குரிஸ்தான் 220;
* நிஷாபூர் / நிஷாபுரி 420;
* பிராமணாபாத் / மன்சூரா 430 (சோநாத்திலிருந்து 300);
* லிங்கா / லிங்கப்புரி 650;
* ஜாமிந்தவர் 50;
* பாமியன் 250 (இங்கிருந்த புத்தசிலைகள்தான் தாலிபன்களால் இடித்து
நொறுக்கப்பட்டது);
* சப்ஸவர் 200;
* ஹரி-ரூத் 250;
* மைநந்த 50;

* ஹிந்துகுஸ் 300 (ஹிந்து = ஜிந்துக்கள், குஸ் = ரத்தம் வருமாறு
அறுத்தல் / கொல்லுதல், ஹிந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்ட இடம்);

* கர்ஷிஸ்தான் / கரிஜிஸ்தான் (கர்ஜ் = மலை, ஷார் = சக்தி வாய்ந்த தலைவன்,
அதாவது சக்தி வாய்ந்த மலை அரசன் = கிரி-ராஜ);
* காஃபிரிஸ்தான் / ஹிந்துக்கள் வாழும் நாடு;

[பெயர்கள் எல்லாம் எப்படி இந்திய மொழியில் உள்ளது என்பதனை அறியலாம்.       அதுமட்டுமல்லாது, இப்பகுதிகளில் இந்தியர்கள் / ஹிந்துக்கள் / ஹெதன்ஸ் / காஃபிர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்ததாக அவர்களே குறிப்பிடுகின்றனர் (ப. 70)]. இவையெல்லாம் பழைய சரித்திர புத்தகங்களில் பார்க்கலாம். முஹம்மது நாஸிம் சென்ற சரித்திர ஆசிரியர் எழுதிய The Life and times of Sultan Mahmud of
Ghazana, Cambridge at University Press, 1921, புத்தகத்திலும், வரைப்படத்திலும் காணலாம்.

Hittite Empire Period. Bogazkoy, Hat

இப்பகுதிகளை ஆண்ட மன்னர்களின் பெயர்கள்: பல இடங்களின் பெயர்கள் மட்டுமல்லாது, அரசர்களின் பெயர்களும் இவ்வாறு உள்ளன:

* ஜெயபால் (ஹிந்துஸாஹிய்யா வம்சத்தைச் சேர்ந்தவன். ஒரு லட்சம்
வீரர்களுடன் கஜானா வரைச் சென்று முகமதியரை விரட்டியடித்தவன),
* அனந்தபால்
* பிராமணபால்
* பாஜி ரே
* பீம்ராஜா / பீம்தேவா
* பீம்பால்
* திரிலோசனபால்
* சந்திரபால்
* சந்திர ரே
* கந்த ராஜா
* கோபால்வர்மா

* ஜெயபால்
* ஜெய சந்த்
* ஜானகி ராஜா
* கபகன் ராஜா
* மூல்சந்த் ராஜா*
* நந்த ராஜா
* பரூஜ்பால்
* ராஜ்யபால்
* ராம்ராஜா
* வித்யாதரா

 

இவர்கள் எல்லாம் காஷ்மீரத்திலிருந்து மேற்கே காஸ்பியன் கடல் வரை, வடக்கே
கோடானையும் தாண்டியுள்ள பகுதிகளை ஆண்ட ராஜாக்கள். எனவே, இவர்கள் இருந்த வரை, அரேபிரர்கள், பாரஸீகர்கள் முகமதியராக மாறியப் பிறகும் இந்தியாவை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால், பிறகு இந்திய அரசர்கள் தோற்க ஆரம்பித்தனர். கீரத் மற்றும் நூர் ஆறுகளுக்கு இடையேயிருந்த இடம் “மகிழ்ச்சிகரமான பள்ளத்தாக்கு” (Pleasant Valley) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் சிங்கத்தை / சிங்க உருவங்களை வழிபட்டு வந்தனர். அது நரசிம்மர் என்று பல ஆசிரியர்கள் எடுத்துக் காட்டினாலும், இவர் அதை சாக்கிய சிங்கம் எனக்குறிப்பிட்டு, அதனால் அந்த இடத்தில் பௌத்தர்கள் நிறைய வாழ்ந்திருக்கலாம் என்கிறார் (ப.74-75). இதனால், மஹ்மது (8thcent.CE) அங்கு படையெடுத்துச் சென்று அங்குள்ள வரை முகமதியர்களாக்கினான். கர்மதியர், பாதினி மற்றும் முதாஜிலித் முதலிய மக்கள் ரகசியமாக தமது முன்னோர் மதத்தை பின்பற்றுவதை அறிந்து அவர்களை ஒடுக்க பல கொடுமையான முறைகளைக் கையாண்டான். மக்களைப் பிடித்து கழுவிலேற்றினான், கல்லால் அடுத்துக் கொன்றான், விலங்குகளை மாட்டி இழுத்துச் சென்றான்; அவர்கள் வீடுகள் சோதனையிடப் பட்டு அவர்கள் பூஜித்து வந்தவை, புத்தகங்கள் எல்லாம் எரிக்கப்பட்டன; 50 ஒட்டகங்களின் மீது ஏற்றப்பட்ட புத்தகங்களை குவித்து, எறியூட்டி அதில் கர்மதியர் அதில் கழுவேற்றப் பட்டனர் (ப.83, 160).
Muhammad Nasim, The Life and times of Sultan Mahmud of Ghazana, Cambridge at University Press, 1921.

Bogozkoy temple- central citadel

இந்துக்கள் / பௌத்தர்கள் தனிமையில் இருந்தது: ஈராக்-ஈரானின் பெரும்பகுதிகள் 12வது நூற்றாண்டுகள் வரை தனியாக, அமைதியாக இந்திய-மக்கள் (காஃபிர்கள்) வாழ்ந்த்து வந்துள்ளார்கள் எனத்தெரிகிறது (காஃபிரிஸ்தான்). அமைதி விரும்பும் அவர்கள் தமது பாதுகாப்பிற்கு பாதுகாவலர்கள், சேனை இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. ஏனனில், மஹ்மது கஜானா (11th.cent.CE). அங்கு மலைகளை உடைத்து, பாறைகளை உடைத்து, சாலைகளை போட்டு அங்கடைந்து. மக்களைத் தாக்குவதாக உள்ளது. இங்கு, பௌத்தர்கள், இந்துக்களுடன் சேர்ந்து போராடியதாக தெரியவில்லை. முன்பு, விஹாரங்களில் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் இருந்தவர்கள், இங்கு எப்படி இருந்தனர் என்று தெரியவில்லை. சண்டையிட்டது மற்றும் அத்தகைய வெறிகொண்ட முகமதியரை எதிர்த்து போராடியவர்கள், சிந்து, ராஜஸ்தான், காந்தாரம், பஞ்சாப், காஷ்மீர இந்து அரசர்கள்தாம். ஆகவே, முதல் நூற்றாண்டுகளில் பலமாக இருந்த பௌத்தம் வலுவிழுந்த நிலையைக் காணலாம். முகமதியம் வளர்ந்தற்கும், பௌத்தம் தேய்ந்ததற்கும் இங்கு நிச்சயமாக சம்பந்தம் உள்ளதைக் காணலாம். ஆகவே, பௌத்தர்கள் பெருமளவில் முகமதியமதத்தில் இணைந்திருக்க வேண்டும். இங்கு சில கவனத்தை ஈர்க்கும் வகையிலுள்ள விஷயங்களை நோக்கவேண்டும்.

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind

புத், பூத், புத்து என்றெல்லாம் பௌத்தர்கள் அழைக்கப்பட்டதேன்?: பாரசிகமொழியில் “புத் / பூத்” (but / buth / Budd) என்றால் விக்கிரகம் / சிலை என்று பொருள். ஐரோப்பிய எழுத்தாளர்கள் இதை “புத் / புத்தா” என்றும் பொருள்கொண்டு தவறாக எழுதினர். பிறகு “தேபால்” என்ற வார்த்தை 120 அடி உயரம் மற்றும் அதே அளவு விட்டம் கோபுரம் கொண்ட கட்டிடமாகும் (துக்பது-இ-கிராம், ப.10). ஆனால் எம். ரைனாட் போன்றவர்கள், “தேபால்” என்றால் ஒரு பௌத்த கோவிலை மட்டுமல்லாது, ஒரு பௌத்த ஸ்தூபத்தையும் குறிக்கும்; புத் என்ற வார்த்தை ஃபோத் என்றதிலிருந்து என்பதைவிட ஃபேதௌ என்ற சொல்லிலிருந்து பெறலாம். சைனர்கள் அவ்வாறே அழைக்கின்றனர், என்கிறார். கிலேப்ரோத் என்பவர் “ஃபௌ-ரௌத்” என்றால் இறந்தவர்களின் உடலின் ஒரு பாகத்தைக் கொண்ட (relic), பிரமிட் / சேபல் (Chapel) போன்ற நினவிடங்களைக் குறிக்கும், என்கிறார். (quoting from Hammer-Purgstall, Burnouf, Fergusson).
Elliot and Dowson, The History of India: As told by its own historians, Low-Price Publications, New Delhi, Vol.I, pp.504-505.

Gorri Jo Mandar - Pakistan

சிரமணர்கள் யார் – சிரமணர்களும், பௌத்தர்களும் ஒன்றா?: Sramanas, Sramanes, Sarmanes, Sarmanae, Germanae, Samanaei, Semnoi என்று பலவாறு குறிப்பிட்ட “ஸ்ரமனா” என்ற வார்த்தை பௌத்தர்களைத் தான் குறிப்பிடும் என்கின்றனர் (Ibid, 506, fn.1). முன்பு இதே வார்த்தை ஜைனர்களுக்ககக் குறிப்பிடப் பட்டதை நினைவு கூறலாம். அவ்வாறு பௌத்தர்கள் அதிகமாக இருந்தபோது, அரேபியர்களுக்கு / முகமதியர்களுக்கு எதிராக அவர்கள் போராடியதாக இல்லை. இந்து ராஜாக்கள்தாம் அவர்களை எதிர்த்து போராடியுள்ளனர். ஆகவே, இருந்த பௌத்தர்கள் ஒன்று இஸ்லாமிய கத்திக்கு இரையாகியிருக்க வேண்டும் அல்லது மதம் மாறியிருக்கவேண்டும்.

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-5

சிரமணர்களும், பிராமணர்களும்: “சிரமணர்கள் / பௌத்தர்கள்” இருந்தது முன்பு குறிப்பிடப்பட்டது. ஆனால், “சிரமணாபாத் / புத்தபாத் / பௌத்தபாத்” என்று இருந்ததாக முகமதியர் சொல்லவில்லை. மேலும் பிராமணர்களைப் பற்றி அதிகமான குறிப்புகள், முகமதிய எழுத்தாளர்களில் காணப்படுகின்றன. “பிராமணாபாத்” என்ற ஊர் இருந்தது, அதில் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் இருந்தது, தாஹிர் இறந்தபிறகு, முஹமது காசிமிடம் சென்று பிராமணர்கள் பேசியது (p.184), பிறகு காசிம் அவர்களை ஒட்டுமொத்தமாகக் கொன்று குவித்து, பிராமணாபாதை இழித்தது முதலிய விவரங்கள் தாரிக்-இ-தஹிரி என்ற நூல் விளக்குகிறது (pp.259-260). இங்கு இந்துக்கள் வழிபடும் கோவில் “புத் கோவில்” என்றே அழைக்கப்படுகிறது! பௌத்தர்கள் அங்கிருந்தற்கான எதிர்மறை அத்தாட்சிகள் (negative evidences) என்று எல்லியட் மற்றும் டாவ்ஸன் குறிப்பிடுகிறார்கள்:

* புரோகிதம் இருந்தது எங்குமே குறிப்பிடப்படாமை.

* மற்ற சடங்குகள் அவர்களால் செய்யப்பட்டது

* விதவைகள் எரிக்கப்பட்டது

* பூணூல் அனிந்தது, அணிவிக்கப்பட்டது

* சம்பிரதாயங்கள், நோன்புகள், பூஜைகள் செய்தது அல்லது

* மற்ற பிராமணர்களுக்கு என்று அடிப்படையாக உள்ள எந்த சடங்குகள்
நடத்தப்படாமை / பின்பற்றப்படாமை

இவையெல்லாம் இல்லாததால், பௌத்தர்கள் தாம் “பிராமணாபாதில்” இருந்திருக்கவேண்டும் என்று வாதிக்கிறார். வீடு-வீடாக அவர்கள் பாத்திரத்தில் பிச்சையெடுத்தது, பௌத்த சடங்கைத்தான் குறிக்கும் என்றும் வாதிக்கிறார் (ப.506). ஆனால், பிராமணர்கள்தாம் முஹமது காஸிமுடம் பேசுகின்றனர் (ப.182); அப்பொது அவர்கள் சொல்வதாவது, கோவில்கள் எல்லாம் இடிக்கப்பட்டு, விக்கிரங்களும் உடைக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் இப்பொழுதெல்லாம் முன்போன்று சடங்குகள், சம்பொரதாயங்களை செய்வதில்லை; வீரர்கள், வியாபாரிகள் முதலியோரும் நிறுத்திவிட்டதால் தாங்கள் ஏழ்மையில் உழல்வதாகவும், அதனால் அவர்களால் வரி கட்ட முடியாது என்கின்றனர் (ப.185); உடனே காஸிம் ஹஜ்ஜாஜ் என்பாரிடம் அனுமதி பெற்று யூதர்கள், கிருத்துவர்கள் போன்று தனது ராஜ்யத்தில் பழையபடியே மதத்தைப் பின்பற்றலாம் (ப.186), ஆனால் அவன் அவர்கள் தமது மதத்தை பின்பற்ற வேண்டுமானால் ஜெஸியா வரி கட்டி வாழலாம் என்று ஆணையிடுகிறான்; இதனால் அவர்கள் தாமிர பாத்திரங்களை எடுத்துக் கொண்டு பிச்சைக் கேட்கிறார்கள்; மேலும் அவ்வரியை சேகரிக்கவும், பிராமணர்களையே நியமிக்கிறான் (ப.184)!

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-2

ஹிந்துபௌத்த மதங்கள் சேர்ந்தே இருந்தன: ராஜா ஹிந்துவாக இருப்பார், ஆளுனர்கள் பௌத்தர்களாக இருப்பர். பிராமணாபாதின் அரசன் ஒரு பௌத்தனாக இருந்தான். அவனது ஆன்மீக குரு ‘சமனி புதுகுய்’ ஒரு பைத்தவிஹாரத்தை வைத்திருந்தார். ஆனால் இத்தகைய நிலை காசிம் படையெடுத்து வந்தபோது, அவௌகளின் நெருப்பு மற்றும் கத்திகளுக்கு பதில் சொல்லமுடியவில்லை. அவர்களது ஜெபமாலைகள் முகமதிய கத்திகளுக்கும் ஈடாகவில்லை. அவர்களது அன்பும் அமைதியும் அவர்களது நெருப்பு மற்றும் கத்திகளின் முன்பு சாய்ந்தன. தேபால், சேஹ்வான், நெரூன், பிராமணாபாத், அலோர், மூல்தான் முதலியவை வீழ்ந்தன. இந்தவிதமாக ஒன்றரை வருடங்களில் அங்கிருந்த ஹிந்து ராஜ்யம் அழிந்து, இருளில் மூழ்கியது.

T. Thakur, Sindhi Culture, University of Bombay, 1959, pp.14-15.

ஆகவே, முதல் நூற்றாண்டுகளில் பலமாக இருந்த பௌத்தம் பிறகு
வலுவிழுந்திருக்க வேண்டும். முகமதியம் வளர-வளர, பௌத்தம் தேய்ந்தது, இந்து அரசர்கள் (இப்பொழுதைய) இந்தியாவிற்கு வெளியே போரிட்டது, பிறகு, முகமதியர் அங்கிருந்த இந்து அரசர்களைக் கொன்று அல்லது மதம் மாற்றி முகமதியர்களாக்கிய பிறகு, (இப்பொழுதைய) இந்தியாவிற்குள் நுழைவது கொள்ளை அடிப்பது முதலிய நிகழ்ச்சிகளைக் காணலாம்.

Temple at Nubia, Sudan, Africa-Lion temple

இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியா: முஹமதுவிற்கு (570/571-632 CE) மற்றும் இஸ்லாமிற்கு முன்பான அரேபியாவைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் விவரமாகக் கூறுவதில்லை. அரேபியர்கள் இந்தியர்களைப்போலவே விக்கிரங்களை வணங்கிக் கொண்டு, தீர்த்தயாத்திரைகள் செய்துகொண்டு, நாடோடிகளாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அதிருஷ்டம் (ஜத்), நல்லகாலம் (சத்), வரம் / தேவை (ரிதா), நட்பு (வத்), உயர்ந்த இடம் / பதவி (மனாஜ்), என்ற ஒவ்வொரு தேவைக்கும் ஒரு கடவுளை / தேவதையை வைத்திருந்தனர். எழுதப்பட்ட இலக்கியங்கள் இல்லையென்றாலும், நினைவிலேயே வைத்துக் கொள்ளப்பட்ட பல கவிதைகள் இருந்தன. ஆனால், அரேபியரிடம் குலச்சிந்தனகளால் அடையாளங்காண முற்படும்போது, பிரிவுகள் ஏற்பட்டபோது தங்களுக்குள் சண்டையிட்டு தனித்து வாழ்ந்தனர். இதனால், தமது அடிப்படை தேவைகளுக்குக்கூட மற்றவர்களை நம்பி வாழவேண்டியிருந்தது. இப்பொழுது போலவே, மத்தியத் தரைக் கடல் நாடுகளில் அப்பொழுதும் மற்ற மக்களின் மற்றும் பொருட்களின் உதவி இல்லாமல் அவர்களுக்கு சாதாரண வாழ்க்கைக் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. முன்பு இஸ்லாம் என்ற தீவிரமான பிணைப்பினால் அரேபியர்கள் இ ணைக்கப்பட்டு, மற்றவர்களை கொள்ளையிட்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். வர்த்தகப் பொருட்களை ஏற்றிச்செல்லும் கூட்டங்களை (caravans) வழி பறிசெய்து, கொள்ளையடித்து, பிணைக்கைதிகளுக்காக பணம் பறித்து, மற்றமக்களை உறிஞ்சியே வாழ்க்கை நடத்தி வந்தனர்.
M. M. Ahariff (Ed.&Trans.), A History of Muslim Philosophy, Vol.1, LPP, New Delhi, 1999, see under chapter.VI, Pre-Islamic Thought, pp.126-135.

“அதேமாதிரி, முகமதியரின் மத்திய ஆசிய படையெடுப்புத் தாக்குதல்களும் பௌத்தர்களின் கலையை முடிவிற்கு எடுத்து வந்தது. கஸ்கர் என்ற பிரதேசத்தின் ராஜா, கிஜில் என்ற இடத்திலுள்ள விஹாரங்களை இடித்தொழித்தான். துருக்மேனிஸ்தானம் தான், எப்படியோ முகமதியரின் தாக்குதலிருந்துத் தப்பித்தது. மங்கோலியர்களின் கொடுமைகள் மற்றும் இஸ்லாத்தின் குரூரங்கள்
பௌத்தம் தாக்குப் பிடிக்கமுடியாமல் மறைந்தது”.

Benjamin Rowland, The Art and architecture of India: Buddhist, Hindu, and Jain, London, Puffin, 1971, p.196.

E. von Grunebaum, Byzantine Iconoclasm and the Influence of the Islamic Environment, History of Religion, 2,  no.1 (1962), pp. 1.

Buddha sculptures resembling Greek-2

உருவவழிபாடு இருந்த மக்களிடம் உருவவழிபாடு எதிர்க்கும் மதம் உருவானது: இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எப்படி உருவ வழிபாடு / விக்கிர ஆராதனை அரேபியா முதல் சிந்து வரை பரந்து-விரிந்து, வெகுஜனமக்களின் விருப்பத்திற்கேற்றவாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரையிலும் இருந்து வந்தபோது, அத்தகைய மக்களிடையே, எப்படி அப்படியே தலைகீழாக மாறிய அல்லது உள்ள மத-சமூக நம்பிக்கை-சம்பிரதாயங்களுக்கு எதிராக ஒரு புதிய மதம் தோன்றியிருக்கவேண்டும்? முதல் நூற்றாண்டுகளில் எப்படி, உருவவழிபாடு /விக்கிர ஆராதனை வேண்டும் என்று ஹீனயானப்பிரிவு தனியாக செயல்பட்டதோ, அதேபோல அது வேண்டாம் என்ற ரீதியில் முகமதியம் / இஸ்லாம் உருவெடுத்தது நோக்கத்தக்கது. மேலும், அங்கிருந்த விக்கிரங்களின் பெயர்கள் அல்-லத், அல்-மனத், அல்-உஜ்ஜா என்று அழைக்கப் பட்டு அவை “அல்லாவினுடைய மகள்கள் /புத்திரிகள்” என்றே குறிப்பிடப்பட்டன (குரான்). இதைத் தவிர காஃபா / காஃபத்துல்லா (கடவுள் வசிக்கும் இடம்) என்று சொல்லப்படும் இடத்திலேயே சுற்றிலும் 360 விக்கிரங்கள் இருந்ததாகவும் முஹமது அவற்றையெல்லாம் உடைத்தெரிந்து விட்டு, காஃபா-கல்லை மட்டும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க விட்டுவைத்ததாக முகமதிய ஆசிரியர்ளே குறிப்பிட்டுள்ளார்கள். இருப்பினும், அரேபியாவிலிருந்து கிழக்கேயுள்ள நாடுகளில் விக்கிரங்கள் / சிலைகள் 21ம் நூற்றாண்டுகள் வரை இருந்தத்து தெரிய வருகின்றது (பாமியன்
புத்த சிலைகள் உடைக்கப்பட்டன).

Temple at Nubia, Sudan, Africa

பௌத்தர்கள் முகமதியர்களாகியது: 1026ல் முஹ்மதுவின் புகழ் பரவும்போது, கடா-கான், ஈகூர்-கான் முதலிய அரசர்கள் அவனுடன் சம்பந்தம் வைத்திக்கொள்ள விழைகின்றனர். ஆனால், மஹ்மதுவோ அவர்கள் இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று மறுக்கிறான் (ப.36). இந்த இரு பகுதிகள் கடா மற்றும் ஈகூர் சைனாவின் மாகாணங்கள் (ப.16, அடிகுறிப்பு.3). மேலும் முன்பு, இலக்-கான் என்பவன், குரஸானில் 1006ல் நுழையும்போது, அவன் சுக்பால் அல்லது நவாஸா ஷா என்பனுக்கு அரசாக்கத்தை ஒப்புவித்து செல்வதாக உள்ளது (ப.98). நவாஸா ஷா என்றால் ஷாவினுடைய பேரன் (ப.98, அ.கு.1). ஷா என்ற பாரசீக வார்த்தை க்ஷ்த்திரிய என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் (ப.60, அ.கு.4). ஆகவே, இவர்கள் பௌத்தத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள், அரேபிய இனத்தவரல்லாததால், இஸ்லாமியர்களாக இருப்பினும், திருமணம் உறவுகள் வைத்துக் கொள்ளும் வரையில் விரும்பவில்லை எனத்தெரிகிறது. ஆகவே, அவர்கள் தங்களது பௌத்த அடையாளங்களை மனதளவிலும் துடைத்துப் போட்டுவிட்டு, தமது புதிய மதமான இஸ்லாத்தின் மீதுள்ள விசுவாசத்தைக் காட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டர்கள் எனத்தெரிகிறது. என்றுமே புதிய மதம்-மாறிகள் அதிகமான வெறியுடன் இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் தமது செயலை, அதாவது பழைய மதத்தை விட்டு புதிய மதத்தற்கு சென்றதை, நியாயப்படுத்த வேண்டியுள்ளது, மேலும் புதிய மதத்தினரிடம் நம்பிக்கைப் பெறவேண்டும் என்றால், ஏதாவது பழைய மதத்தினருக்கு எதிராக பெரியதாகச் செய்தால்தான் தமது நிலைப்பாடு வெளிப்படும், அங்கீகரிக்கப்படும் எனும்போது, அவர்களது அழிக்கும் வெறி பழைய மதத்தின்மீது திரும்புகிறது. [மாலிக்காஃபூரை இங்கு நினைக்கத் தக்கது. அவன் இந்துவாக இருந்து
முகமதியனாகிய பிறகு, அவன் இந்து மக்களுக்கு, மதத்திற்கு விரோதமாக செய்த செயல்கள் தமிழ் மக்களே நன்கு அறிவர்].

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-4

இந்துக்கள் ரகசியமாக மத்தைப் பின்பற்றியது குறைந்து, மறைந்தது: இடைக்காலத்தில் (19ம் நூற்றாண்டு வரை), ஐரோப்பிய யாத்திரிகள், இவ்விடங்களில் பிரயாணம் செய்தபோது, முகமதியத்திற்கு-முந்தைய அரேபியா வரை அந்நிலையிருந்ததைக் குறிப்பிட்டுள்ளனர். அதே மாதிரி, “பட்டு-யாத்திரிகர்-பாதை” (Silk-route) எனப்படும் இந்திய வடமேற்கு திசை வழியாக, மத்திய ஆசியா மூலம் சீனா வரையிலான இடங்களில் முதலில், இந்து பிறகு பௌத்தத்தின் எச்சங்கள் இருப்பதைக் காண முடிகிறது (இன்றளவும் அகழ்வாய்வில் அத்தகைய சிற்பங்கள், உடைந்த நிலையில், மற்ற ஆதாரங்கள் கிடைப்பதும் நோக்கத்தக்கது). இதே நிலைதான் இப்பொழுதுள்ள ஆப்கானிஸ்தானின் அப்பொழுதயை நிலை. இஸ்லாம் தலையெடுத்தபிறகு, இந்துக்கள் ரகசியமாக 20-21வது நூற்றாண்டுகள் வரை அவ்விதமாக வாழ்ந்து அவஸ்தைப் பட்டது, எப்போதாவது, ஊடகங்களில் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கலாம் [2009ல், உள்ள சீக்கியர்கள் ஜெஸியா செல்லுத்த வேண்டும் என்று தாலிபான்கள் ஆணையிட்டது ஞாபகம் இருக்கும்].

யுத்ததர்மத்தைக் கடைபிடிக்காத முகமதியர்: ஏனெனில், முக்கியமாக முகமதியர் பொழுது சாய்ந்தபின்னரும், இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர், பின்பக்கமாக வந்து தாக்கினர் (ப.90),சாதாரண மக்களை துன்புறுத்தினர்; அவர்கள் பொருட்களைக் கொள்ளையிட்டனர்; பெண்களை அபகரித்துச் சென்றனர்; தோற்ற / பிடிக்கப்பட்ட வீரர்களின் கட்டைவிரல்கள் வெட்டப்பட்டன (ப.64); இத்தகைய யுத்ததர்ம மீறல்களை இந்தியர்கள் என்றும் பார்த்தது கிடையாது. அவர்கள் இப்பொழுதுமே, காலை சூரியோதயம் முதல், மாலை அஸ்தமனம் வரை யுத்தம்; இரவில் இல்லை; புறமுதுகிட்டு ஓடுபரைத் தாக்குவது கிடையாது; ஆயுதமற்றவர்களைத் தாக்குவது கிடையாது முதலிய விதிகள் முகமதியர் என்றும் பின்பற்றியதில்லை. அமைதியாகத் தனித்தனியாக ஆண்டுவந்த அவர்கள், முகமதியர்கள் தாக்கியபிறகு அத்தகைய முறைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. ஆகவே, மேற்குறிப்பிட்ட ராஜாக்கள் முகமதியர்களை எதிர்த்து போரிட்டடலும், அவர்களது துரோகம், வஞ்சகம், வெறி, முதலிய செயல்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் தோற்று துவண்டனர். கப்பம் கட்டி / ஜெஸியா செல்லுத்தி வாழ்ந்தனர். அனால் 712ற்குப் பிறகு, 12-13ம் நூற்றாண்டுகளில், இப்பகுதியே மாறிவிட்டது.

Buddha sculptures resembling Greek-Buddha-Herakles

ராஜபுத்திரர்களின் பலம் குறைந்ததால், ஜைனம் தேய்ந்தது, பௌத்தம் முகமதியத்தில் கரைந்தது: இவ்வாறு, ராஜபுத்திரர்கள் வளர்ந்தது தான், பௌத்தர்கள் வட-நாட்டில் வலுவிழந்து, மேற்கு-வடமேற்கு நோக்கி தள்ளப்பட்டு, மத்தியத்தரைகடல்-நாடுகள், மத்திய ஆசியா மற்றும் சீனா போன்ற நாடுகளை அடைந்தனர் எனலாம். முதலில் ஜைனம் இவ்வாறு பரவியது, பின்னர் பௌத்தம் சென்றதும் இவைக்களுக்கு இடையேயுள்ளக் குழப்பங்களைக் காணலாம். அங்குள்ள பௌத்தமத நினைவுச்சின்னங்கள் அதை மெய்ப்பிக்கிறது. மேலும், தெற்கிலும் சைவம்- வைணவம் வளர ஆரம்பித்தது, பௌத்தத்திற்கு ஆதரவாக இல்லை. மேலே குறிப்பிட்டபடி, அரசவம்சத்தினரின் ஆதரவு ராஜஸ்தானத்தில் ஜைனத்திற்கு இருந்ததால், பௌத்தம் அங்கு வளரமுடியாமல் போயிற்று. ஜைனத்தின் அஹிம்சை பௌத்ததை விட மேலானது. ஆகவே, க்ஷ்த்தியர்களின் பாதுகாப்போடு, ஜைனம் வளர்ந்தது. அதாவது குறிப்பாக ராஜபுதனத்தினரின் வளர்ச்சி,

  • முன்னம் கிரேக்கரைத் தடுத்தது;
  • பின்னர் ஹுணர்கள்-சாகர்கள்களைத் தடுத்தது;
  • அரேபியரைத் தடுத்தது;
  • முகமதியம் வளர்ந்த பின்னர் இஸ்லாத்தைத் தடுத்தது

[இவர்களை வென்று அடக்கி-ஒடுக்கியதால் விக்கிரமாதித்யன் சரித்திரத்திலிருந்து மறைக்கப் பட்டான்]; இதனால் ஓரளவு பௌத்தம் காப்பற்றப்பட்டது எனலாம். ஆனால், ராஜபுத்திரர்கள் 12-14ம் நூற்றாண்டுகளில் முகமதியர்களின் தாக்குதல்களால் வலுவிழந்தபோது, பௌத்தமும் முகமதியர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியது.

Gandhara remains - Pakistan

தீவிர அஹிம்சை தீவிரவாதத்திற்கு இடம் கொடுக்கும்: என்னதான் அஹிம்ஸாவாதியாக இருந்தாலும், தன்னைத் தாக்க வரும் எதிரியிடமிருந்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒருவன் தனது கையை உயர்த்தாமல் இருப்பான் என்று சொல்லமுடியாது. ஒன்று அடிவாங்கக்கூடிய சக்தி இருக்கவேண்டும். சாத்விக உணவு உண்ணும், அஹிம்ஸாவாதிகள் அவ்வாறு இருபார்களா என்பது சந்தேகமே. இல்லை, அடி தனது மீது விழாமல் இருப்பதற்காவது, கையை உயர்த்த வேண்டியுள்ளது. இரவில் விளக்கு வைத்தால், பூச்சிகள் விழுந்து சாகுமே என்றிருந்த அஹிம்சாவாதிகளும், இருட்டைப் போக்கவேண்டும் என்றபோது, விளக்குகளை வைக்கவே செய்தனர், செய்கின்றனர். ஆகவே, காலத்தின் கட்டாயமாக, பிறகு நிச்சயமாக முகமதியிரிடமிருந்துத் தங்களைக் காத்துக் கொள்ள ராஜபுத்திரர்கள் போராடவே அவசியமாக இருந்தது. மேலும், முகமதிய-ராஜபுத்திர போர்களிடமிருந்து, ராஜபுத்திரர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிகின்றது. எனவே, முகமதியம் மத்தியத்தரைகடல் நாடுகளிடமிருந்து வலுவுடன் பரவ ஆரம்பித்தபோது, நிச்சயமாக பௌத்தர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். பலாத்காரமாக மதம் மாற்றப்பட்ட பௌத்தர்கள், மனோரீதியில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் நிலைக்கும் மாறியிருக்கலாம். எப்பொழுதுமே, புதியதாக மதம் மாறியவர்கள், தாம்
புதியாதாக ஏற்றுக்கொண்ட மதத்தினை மிகவும் தீவிரமாகவே ஆதரித்துப்பேசுவர். ஏனெனில், தாம் செய்தது அல்லது தமக்கு செய்யப்பட்டதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.

வேதபிரகாஷ்
05-10-2009.

Artifacts recovered from Brahmanabad, Hyderabad, Sind-3

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மத-ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையா, பொய்யா? (14)

மே 15, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மதரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையாபொய்யா? (14)

T W Rhys Davids Buddhist scholar

ரைஸ் டேவிட்ஸ் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே இதெல்லாம் பொய் என்று மறுத்துள்ளார்: டி. டபிள்யூ. ரைஸ் டேவிட்ஸ் [Thomas William Rhys Davids (1843-1922)] என்பவர் பௌத்தமத ஆராய்ச்சியில் தலைசிறந்தவர். அவரது “பௌத்த இந்தியா” (Buddhist India) என்ற புத்தகம் இன்றளவிலும் மிக்கியமாக உள்ளது. பாலி டெக்ஸ்ட் சொஸைடி உருவாக்கியதில் (1881), நூல்களை, சேகரித்ததில், பதிப்பித்ததில் (more than 25,000 pages, www.palitext.com) பெரும் பங்காற்றியுள்ளார். அவர் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே, இப்பொழுது பிரச்சார ரீதியில் பௌத்தர்கள் ஹிந்துக்களால் இந்தியாவில் கொடுமைப்படுத்தப் பட்டனர், கொன்று குவிக்கப் பட்டனர், அவர்களது விஹாரங்கள், பள்ளிகள், சின்னங்கள் இடித்து நொறுக்கப்பட்டன, எரிக்கப் பட்டன, சங்கரர் மற்றும் அரசர்கள், குறிப்பாக பிராமணர்கள் இத்தகைய மத-தண்டனைகளை நிறைவேற்றினார்கள் போன்ற குற்றச்சாட்டுகளை ஆய்ந்து, அவையெல்லாம் சரித்திர ஆதாரமற்றது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இருப்பினும் பிரசார பீரங்கிகளை வைத்துகொண்டு, அதில் சரித்திர-ஆதாரமில்லாத வெடிமருந்துகளை நிரப்பி, பொய்களை வெடித்து, கட்டுக்கதைகளைப் பரப்பி வரும் சித்தாந்த எழுத்தாளர்கள்-பேச்சாளர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. நமது “மின்தமிழ்” அறிஞர்கள் சிலரும் அத்தகைய வினாக்களை எழுப்பியுள்ளார்கள். ஆகையால், அக்கட்டுரையை மொழி பெயர்த்துத் தருகிறேன்.

T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

மிஹிரகுலன் படையெடுப்பின் போது பௌத்தர்கள் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது: யுவான் சுவாங் தனது பிரயாணகுறிப்புகளில் (புத்தகம்.IV; Julien 1.196; Beal.1., 171) மிஹிரகுலன் என்ற காஷ்மீர அரசன், தன்னுடைய ஆப்கானிஸ்தானின் மீதான படையெடுப்பின் போது (சுமார் 400 AD) பௌத்த ஆலயங்கள், விஹாரங்கள் முதலியவற்றை இடித்துத்தள்ளியதாகவும், எண்ணிலடங்காத அந்த பௌத்த நாட்டு மக்களைக் கொன்றுகுவித்ததாகவும் சொல்கிறார் (ஜூலியன்.1.196; பீல்,1,171). பிறகு வோங்-பு என்பவரும் ஆறாவது நூற்றாண்டு இறுதியில் எழுதும்போது, இந்த நிகழ்ச்சிகளைக்குறிப்பிட்டுள்ளார். “தசைகளான ரத்த ஆறாக ஒடிக்கொண்டிருந்தது” (Beal’s “Catena”, p.139). பீல் இது மத-ரீதியில் நடத்தப்பட்டக் கொடுமை என்கிறார். ஆனால், ஒரு நாட்டின்மீது படையெடுத்து செல்லும் நிகழ்ச்சி, எவ்வளவு கொடுமையாக இருந்தாலும், மதசாயம் கொடுக்கமுடியாது. வெற்றிக்கொண்டவன், அந்த ராஜ்ஜியத்தை, தனது ஆளுகைக்குட்படுத்திய பின்பு, அத்தகைய கொலை, அழிவு நிகழ்ச்சிகள் அவன்மீது ஏற்றிச்சொல்லப்படுகிறது. மேலும் ராஜதரங்கிணி அவன் 3,00,00,000 மக்களை கொன்று குவித்ததால் அவனை ஒரு ராக்சஸன் என்று குறிப்பிடுகின்றது (I.312). ஆனால் அத்தகைய கொலைக்கு எந்த மதநோக்கும் இல்லை. மேலும் வேடிக்கை என்னவென்றால், அவனது மந்திரிகள் பௌத்தர்கள் ஆவார்கள்! ஆகவே அவன், ஒரு கொலைக்கார, வெறிபிடித்த பைத்தியம் எனலாம். அத்தகைய விவரங்கள் இருந்தால், அவன் மதரீதியில் கொடுமை புரிந்தான் எனலாம். ஆனால், உள்ள விவரங்கள் அவ்வாறு இல்லை.

Buddhism and violence

புத்தரின் எலும்புகளைப் பகிர்வதில் ஏற்பட்ட போர்கள்: பன்னா (சம்யுத்தா IV.61; திவ்யவதனா.38) என்ற அருமையான கதையில் சூன-பராந்தகர்கள் எவ்வாறு புதிய கருத்துகளைப் பரப்புகின்றவர்களைக் கொடுமைப்படுத்திகின்றனர் கூறப்படுகிறது. அவர்களது, அத்தகைய கொடிய நடத்தை. சத்தர்மா புண்டரீகா (X.25) என்ற நூலில் வரும் பாடலை நினவுபடுத்துகிறது, “எந்த பிராசரகன் மீதாவது கொம்புகள், கட்டைகள், முற்களால் ஆன ஆயுதங்கள், கெட்ட வார்த்தைகள் விழுந்தால், அவன் பொருமையாக என்னை நினைத்துக்  கொள்வனாக”. பாதிக்கப்பட்டவனே, அதை மத-ரீதியிலான நடந்த கொடுமை என்று சொல்லமாட்டான். ஆகவே, சரித்திர ஆசிரியன் இந்த வார்த்தையினை உபயோகப்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும். இத்தகைய கதையும் தாதாவாசன என்று நூலில் காணப்படுகிறது (P. T. S. J., 1884, II.94 and IV.13), ஒரு நிகந்தன் தனது குஹசிவா என்ற பக்கத்து வீட்டுக்காரனை, “தானே செத்த உடம்பின் எலும்பை வணங்கும்போது, அவன் மற்றவர்களின் கடவுளர்களை இகழ்ந்து பேசுகிறான்”, என்று ஒரு ஹிந்து அரசனிடம் புகார் கூறி அவனது இதயத்தில் விரோதத்தை வளர்க்க முயல்கிறான். அரசன் அந்த எலும்பை எடுத்து வரச்சொல்லி ராணுவத்தை தூதுவனுடன் அனுப்புகிறான். ஆனால், அவனே மதம் மாறுகிறான், பிறகு அரசனும் மதம் மாறுகிறான். ஆனால், படைகள் தாக்குகின்றன, குஹசிவா போரிட்டு இறக்கிறான் (IV.20), ஆனால், அந்த “புனித-எலும்பு” இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைக்கூட ஒரு “மத-யுத்தம்” என்று சொல்லலாமேத் தவிர “மத-ரீதியிலான கொடுமை” ஆகாது.

Persecution of the Buddhists in India - Sasanka as per Bana and Zuanzang

சசாங்கன் வங்காளத்தில் பௌத்தர்களைத் தண்டித்தது, கொடுமைப் படுத்தியது: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் பிரித்துவிட்டான். பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது (J. R. A. S., 1893, p.147). சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது”. அந்த திவ்யவதன கதைகளில் (ப,433, 434), பிறகு வருகிறான், புஸ்யமித்ரன். அவன் அசோகனுக்குப் பிறகு ஆறாவது அரசனாக இருக்கிறான், மௌரிய அரசர்களுக்கு கடைசியாக இருக்கிறான். இங்குதான், நாம் சோதித்துப் பார்க்கும் வகையில், கடைசியாக உடற்றல்/மத-ரீதியில் தண்டித்தல் (persecution) என்ற நிலை இருப்பதாகத் தெரிகிறது. இங்கு, சசாங்கன் புத்தனுடைய மதத்தை வேரறுக்கத் தீர்மானித்ததுடன், அவர்களுடைய விஹாரங்களை இடித்துத் தள்ளியதுடன், ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள் தரப்படும் என்று அறிவித்ததாகவும், பிறகு “அர்ஹத்துகள்” எனப்படுகின்ற பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் விவரங்கள் காணப்படுகின்றன. ஆனால், அக்கதை எழுதிய ஆசிரியரே ஒப்புக்கொள்வதாவது, உடனடியாக அந்த உடற்றல் நிறுத்தப்பட்டது என்பதாகும். இந்த கதையினை உறுதி செய்யும் வகையில் எந்த ஆதாரமும் இல்லாததால், நாம் நமது தீர்ப்பினை திருத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sasanka

மௌரியன் பௌத்தத்தை தண்டித்தான், கொடுமைப் படுத்தினான் என்பது முரணானது: “திவ்யவதன” என்ற இந்த கதையில் வரும் இந்த விவரங்கள் அடங்கிய பத்தி – ஒரு தேதியை தரும் வகையிலும் அல்லது ஒரு அரசனின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடுவதிலும், மிகவும் ஆவலைத்தூண்டும் வகையில் உள்ளது. உண்மையில், அந்த பத்தி “அசோகவதன” என்ற கதையில் வருகிறது. தொகுக்கப்பட்ட அக்கதைகள் பல காலங்களைச் சேர்ந்த பல அவதானங்களிலிருந்து பெறப்பட்டு இப்பொழுதைய உருவெடுத்துள்ளது. புஸ்யமித்திரன் எந்த கடைசி மௌரியனுக்கு படைதளபதியாக இருந்தானோ அவனைக் கொன்று, இரண்டாம் நூற்றாண்டில் BCE சுங்க வம்ச ஆட்சியை நிறுவியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அத்தாட்சியாக உள்ளதோ முன்னுக்கு முரணான உள்ள புராணங்களில் உள்ள அரசர்களின் பட்டியல்கள் தாம் (They are all given in Miss Duff’s forthcoming “Indian Chronology,” of which she has kindly allowed me to see the proofs. See also Lassen’s “In.Alt.,” 2.271, 345). இந்த புராணங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு, இந்த வடிவத்தில் இப்பொழுது உள்ளன. இங்கு இந்த விவரங்கள், அதாவது புஸ்யமித்திரனைப் பற்றியவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்வதானால், அவன் ஒரு மௌரியன் என்று கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், அவன் தான் மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் என்றாக மாட்டான்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sudhanvan

குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மதரீதியிலான தண்டனை:  கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்கப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. அதே மாதிரி எந்த ஒரு புத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது (See Telang’s Mudrarakshasa., pp.xlviii-liii., and the Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155. Wilson, Dict., xix; Colebroole, Essayas, 1. 323).

பௌத்த எச்சங்கள் சிதிலங்களில் காணப்படுவது, அவை பலமுறைத் தாக்கப் பட்டுள்ளன என்பதிக் காட்டுகின்ற்ன: நான் கவனித்த வரையிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பௌத்த நினைவு சின்னங்களின் தற்பொழுதுள்ள நிலை தான் எனக்கு ஆதாரமாகத் தெரிகின்றது. காபூலிலிருந்து வங்காளம் வரை, தெற்கில் தக்காணத்திலிருந்து இலங்கை வரை, பௌத்த பள்ளிகள், விஹாரங்கள் அழிவில் உள்ளன. சாரநாத்தில் அகவாழ்வு மேற்கொண்டபோது, பல இடங்களில் தீயிட்டதற்கான மற்றும் வேண்டும் என்றே இடிக்கப்பட்டது என்பதற்கான பல அடையாளங்கள் காணப்பட்டன, “இவையெல்லாம் – மதகுருமார்கள், கோவில்கள், விக்கிரங்கள் முதலியவை மொத்தமாக – ஒருதடவைக்கு மேல் தாக்கப்பட்டன, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன” என்ற முடிவிக்கு வரலாம். (Cunningham, Archaeological Reports, 1.121-128). இலங்கையில், நானே அத்தகைய அழிக்கப்பட்ட சின்னங்களைப் பார்த்திருக்கிறேன். இலங்கையைப் பொருத்த வரையிலும், உண்மையென்னவென்றால், தமிழக படையெடுத்து வந்தவர்கள் மற்றவர்கள் புதையலை வேட்டையாட வந்தார்களேயொழிய, தமக்குப் போட்டியாக வந்துள்ள மதத்தினை அழிக்க வரவில்லை, என்பது அவர்களது சாதாரணமான போர்முறைகளிலிருந்து தெரிகின்றது. (See especially Chapter 55, verse 21, and Chapter 80, verses 65-69). மத-துவேசம், வெற்றிக்கொண்டவர்கள் அதிகமாக இருக்கும்போது, போரின் முடிவில் தீவிரவாதத்துடன் வெளிப்பட்டிருக்கும் என்பதனை அறியலாம். ஆனால், இவையெல்லாம் அத்தகைய மத-ரீதியிலான தண்டனை யுத்தங்கள் அல்ல. இவையெல்லாம் சாதாரணமான போர்களில் எந்த அளவிற்கு வன்செயல்கள் ஏற்படுமே அந்த அளவில்தான் ஏற்பட்டுள்ளன, அதேமாதிரிதான் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளன என்று நியாமான முடிவிற்கு வரலாம்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- nothing mentioned in Pali texts

பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மதரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை: இருப்பினும், இந்திய சரித்திர ஆசிரியர்கள் நாலந்தா மற்றும் மற்ற இடங்களில் ஏற்பட்ட முகமதியர்களின் கொடுமைகளை பயங்கரமாகச் சித்தரிக்கின்றனர். எந்த ஒரு ராணுவ காரணம் / தேவையும் இன்றி, அத்தகைய பழமை வாய்ந்த பல்கலை கழகத்தை – கட்டிடங்களை அழித்ததோடு அல்லாமல், புத்தகங்களை எரித்துள்ளார்கள், தம்மைக் காத்துக் கொள்ளத் தெரியாத மாணவர்களையும் கொன்றுள்ளார்கள். இங்கு மததுவேசம் / வெறி இல்லை என்று மறுக்கமுடியாது அல்லது அவர்களது அறியாத காட்டுமிராண்டித்தனத்தை சாதாரணமாக குறைக்கூற முடியாது. சாரநாத்தில் காணப்படுகின்ற அத்தகைய கொலைகள் மற்றும் தீயிட்டுக் கொளுத்துதல் முதலிய காரியங்கள், அந்த அருமையான மென்மையான கைகளே செய்திருக்க வேண்டும். பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மத-ரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. நிகந்தர்களின் தூண்டுதலால் மொகல்லான என்பவன் கொல்லப்பட்ட நிகழ்ச்சி “தம்மபாத உரையில்” காணப்படுகிறது. ஆனால் அது தனிமனித குற்றச்செயலாக உள்ளது (Dhammapada Commentary, pp.298 and following; compare J.1.391).

பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள்: அங்குலிமாலன் தாக்கப்பட்டதற்கு எந்தவித மதக்காரணமும் இல்லை (M.2.96). மாகந்தியன் என்ற துறவி தனது பிராமண நண்பனிடம் புத்தருக்கு எதிராக வெறுப்பும், காழ்ப்புடன் கூறுவதும் அத்தகைய நிலையில் இல்லை. ஏனெனில், “புத்தர் நமது சூத்திரங்களில் வேவு பார்க்கிறார்” (M.1.502) என்றுள்ளது. ஆனால் அந்த பிராமண நண்பன் அவனிடம் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. பிறகு அந்த துறவியே தனது கருத்தை மாற்றிக்கொள்கிறான். பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள், மற்றும் பிராமணன் என்ற வார்த்தை எப்பொழுதுமே ஒரு மதிக்கப்படும் பட்டம் / கௌரவமுள்ளவன் போன்றே உபயோகப்படுத்தப் படுகிறது. சங்கத்திற்கும் பிராமணர்களுக்கும் இடையே நிரந்தரமான உரையாடல்கள்- சந்திப்புகள் மிகவும் அடக்கத்துடனும் மரியாதையுடனும் இருந்து வந்துள்ளன.

 

கதையாக எழுதியவர் ஆதாரங்களுடன் எழுதவில்லை: நான் [ரைஸ் டேவிட்ஸ்] குறிப்பிட்ட பிற்கால குறிப்புகள், சமூக மாற்றங்களை ஊக்குவிக்கும் கிருத்துவர்கள் ஆசார கிருத்துவர்களால் அல்லது ரோமாபுரி ஆட்சியாளர்களால் அரசியல் கலந்த முறையில் கிருத்துவர்கள் தண்டிக்கப்பட்டது போன்று, இவையெல்லாம் இல்லை. புஸ்யமித்திரன் கதைக்கு எந்த ஆதாரமும் / உண்மையும் இல்லை என்று நான் சொல்லவேண்டியதில்லை. இப்பொழுதுள்ள அந்த கதைகொண்ட ஆவணம் தவறான விவரங்களைக் கொண்டுள்ளன, மேலும் அதை எழுதிய ஆசிரியருக்கு எந்த விவரமும் முழுவதுமாகத் தெரிந்திருக்கவில்லை என்பது தெரிவதால், நாம் முடிவான தீர்ப்புக்கு கருத்துருவாக்கம் கொள்ள முடியாது. எது எப்படியாகிலும், தத்துவார்த்த ரீதியில் எதிர்-எதிரான கருத்துகளைக் கொண்ட மதங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் மிகுந்த அமைதியுடன் வாழ்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை.

சகிப்புத்தன்மைசிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும்: பௌத்த அரசன் அசோகனுடைய மெச்சக்கூடிய சகிப்புத்தன்மையினை, மேற்கத்திய சரித்திர ஆசிரியன் ஒப்புக்கொள்ள மறுக்கும் விஷயம் விந்தையான போக்காக உள்ளது. ஆனால் அத்தகைய சகிப்புத்தன்மை என்பது முந்தைய காரணங்களின் மீது ஆதாரமாக உள்ளது. இத்தகைய சிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும். மேலும், அசோகனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கங்கைச் சமவெளியில் மிகத்தலைச்சிறந்த ஞானம் மற்றும் கலாச்சாரம் இருந்து பரவியிருந்தது, மேனாட்டவர்கள் இதுவரை சரியான முறையில் அறியப்படவில்லை என்பது, என்னுடையக் கருத்து (The Mahavamsa (p.128) tells of the tolerance of the Tamil conqueror Elara towards the beliefs of his Buddhist subjects, and (pp.232-235) of proceedings taken by Buddhist kings against heretics of the same faith. See also Chapter 78). [என்னுடைய மேற்காணும் கட்டுரை தட்டெழுத்தில் இருக்கும்போது, சர் ஜான் வேர் எட்கார் (Sir John Ware Edgar) என்பவரும் அதேமாதிரியான முடிவை தமது கட்டுரையில் வெளியிட்டுள்ளார் Fortnightly Review, Vol.xxvii., 1880, p. 821, என அறிகிறேன். ஆனால் அதை நான் பார்க்கவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்]. T. W. Rhys Davids. இவ்வாறு ரைஸ் டேவிட்ஸ் தன்னுடைய கட்டுரையை முடிக்கிறார்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- acknowledging John Ware Edgar

ரைஸ் டேவிட்ஸின், ஆராய்ச்சியின் நாணயத் தன்மை: இங்கு ஒரு  ஆராய்ச்சியாளரின் நேர்மையை பாருங்கள். ஒத்தக்கருத்தை, அதே முடிவை மற்றொருவரும் ஆதாரங்களுடன் தனக்கு முன்பேயே கூறியுள்ளார் என்றபோது அவரைக் குறிப்பிட்டு அவரது ஆய்வுக் கட்டுரையை, முன்னமேயுள்ள பதிவுசெய்யப்பட்ட எழுத்துகளை அறிந்து ஏற்றுகொள்கிறார், முறையோடு ஆதரிக்கிறார். ஆனால், இன்றோ எங்கு தமது நிலை மாறிவிடுமோ, ஆராய்ச்சித்திறன்-மதிப்பு குறைந்துவிடுமோ என்று பயந்து அதை மறைக்கத் துணிகின்றனர், மறைக்கின்றனர். அதுமட்டுமல்லாது, சந்தர்ப்பம் / நேரம் கிடைத்தால், அத்தகைய ஆய்வுகட்டுரையிலுள்ள விஷயங்களையும் சேர்த்துக் கொண்டு, ஏதோ இவர் எல்லாவற்றையும் பார்த்துதான் தமது ஆய்வுகட்டுரையை உருவாக்கியுள்ளார் என்ற தோற்றத்தை தயாரித்து நம்புகின்ற முறையில் அளிப்பார். ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையை அறிய திறன் வேண்டும், அறிந்தபின் ஒப்புக்கொள்ளத் துணிவு, பக்குவம் வேண்டும். ஆனால் சித்தாந்தரீதியில் இயங்குபவர்கள் தமது நிலை, பதவி, ஆதிக்கம், கிடைக்கும் வசதிகள் முதலியவற்றை மனத்தில் கொண்டு, அவற்றை இழக்கக் கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, உண்மையைபற்றி கவலை இல்லை தான். அறிந்த பின்னரும், இல்லை நான் இப்படிதான் வாதிடுவேன், பேசுவேன், எழுதுவேன் என்றாலும் ஒன்றும் செய்யமுடியாது.

 

வேதபிரகாஷ்
01-10-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப் பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

 

15-05-2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சிறுபிள்ளை சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (13)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன்தர்மகீர்த்தியிடம் சிறுபிள்ளை சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (13)

Foundations - Dharmakirtis philosophy

சிறுபிள்ளை, சிறுவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனரா, எப்பொழுது?: அக்காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் சிறப்புப் பெற்ற சிறுபிள்ளை / சிறுவன் “ஆளுடைய பிள்ளை” திருஞான சம்பந்தர் தான், அவர் தான் 638-656 காலத்தில் 16 வயது வாழ்ந்து, சமண-பௌத்தர்களை தர்க்கத்தில் வென்றவர். இதனை, தர்மகீர்த்தி பற்றி ஆராய்பவர்கள் கவனிக்காமல் இந்ருந்தது / இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. “மஹாதேவர் அவர் முன்பு தோன்றி, எல்லாவற்றையும் போதித்தார். சில நேரங்களில் மஹாதேவரே, அவருடைய உடலில் புகுந்து, அவருக்குத் தெரியாத வாதங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார்”, என்றெல்லாம் தாரநாதர் விவரிப்பதும் நோக்கத்தக்கது. ஒருவேளை அக்காலத்திலேயே சம்பந்தர் சிறு வயதில் தன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்தி, பௌத்தர்-ஜைனர்களை வென்றதால், அவர் புகழ் பரவி, அதற்கேற்றார்போல, 17ம் நூற்றாண்டில், தாரநாத அப்புத்தகதை எழுதும் போது, தர்மகீர்த்தியை உயர்த்தி, சங்கராச்சார்யவை சிறுபிள்ளையாக்கி, குறைத்துக் காட்டினார் போலும்! இருப்பினும் சம்பந்தர் 16 ஆண்டுகள் வாழ்ந்தார், சங்கரர் 32 ஆண்டுகள் வாழ்ந்தார், என்றெல்லாம் கவனிக்கத் தக்கது. மேலும், சிறுவர்கள் மீது வன்முறையினை திணிப்பது, அதாவது, தோற்றால், இறக்க வேண்டும் போன்ற சரத்தையும் நோக்கத் தக்கது. ஏனெனில், சம்பந்தர், அதே காரணத்திற்காகத் தான், சிலர் ஜைனரை கழுவேற்றி வீட்டார் என்ற வாதத்தை வைத்து எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்கள் இத்தகைய விவரங்கள் முழுவதையும் படிப்பதில்லை போலும்.

kumarila bhatta - Tantravarttika- Dharmakirti

14-15 வயது பையனுடன் சண்டை போட ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்தது ஏன்?: சம்பந்தர் காலம் [c.638-654 CE] என்பதால் அவர் 16 வயது வரை தான் வாழ்ந்தார் என்றாகிறது. அப்படியென்றால், அந்த வயதிலேயே உடனுக்குடன் செந்தழில் பதிகம் பாடக் கூடிய திறமைப் பெற்றிருந்தார்; மத-தத்துவங்களில் வாதம் புரிய வல்லவராக இருந்தார்; மருத்துவம் முதலியவற்றையும் அறிந்திருந்ததால் கூன்பாண்டியனின் நோயையும் தீர்த்தார் என்ற விவரங்கள் தெரிய வருகின்றன. அதனால், சிறுவயதிலிருந்தே அவற்றையெல்லாம் கற்றுத் தேர்ந்தார் என்றாகிறது. ஆகவே, அத்தகைய சிறுவனுடன், வாதிட ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்தார்கள் என்பதே முரண்பாடாக இருக்கிறது. அக்காலத்தில் ஒருவர், இன்னொருவருடன் வாதம் புரிவார். தோற்றால், ஒப்புக் கொண்டு மற்றவரின் தத்துவத்தை, ஞானத்தை ஒப்புக்க்கொள்வார். ஆனால், ஜைனர் மற்றும் பௌத்தர் காலங்களில் தான், ஒன்று தங்களது மதத்தை ஏற்றுக் கொள் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கையுடன் வாதப்போரை ஆரம்பித்து வைத்தனர். அரசு சார்பில் மதத்தலைவர், ராஜகுரு போன்றோர் தோற்றால், அந்த அரசனை மதமாற்றி, அந்த அரசையும் அவர் மதசார்பான நாடாக்கினர். இவ்வாறு தான், ஒரு காலகட்டத்தில், பாரதம் முழுவதும் அதிகார ரீதியில் ஜைனர் மற்றும் பௌத்தர் கோலோச்சி வந்தனர். இருப்பினும் அவர்கள் பெரும்பான்மையினரான, சனாதன, வேத அல்லது இந்து நம்பிக்கையாளர்களை முழுவதுமாக மாற்ற முடியவில்லை.

Sstarving Buddha - sallekhana - suicide

சமணர்கள் வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள்: ஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்று சில நூல்களில் இருக்கிறது. ஆனால் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்தில், வாதத்தில் சமணர்கன் தோற்றவுடன் ஞானசம்பந்தர் அவர்களை, “நாணி லீர்! மன்னன் முன்னர் நல்ல சொல்கிறேன், கண்டீர்: பூணும் வெண்ணிறு பூசும்; போற்றி ஒயஞ்செழுத்தை போதும்காணொணா முத்தி இன்பம் காணலாம்,” என்றுதான் அருளினார். கழுவில் ஏற்றச் சொல்லவில்லை. சமணர் களில் சிலர் சைவ சமயத்தில் சேர்ந்தார்கள். ஆனால் பலர், வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள் என்று வருகிறது[1]. தக்கயாகப் பரணியிலும் இதே கருத்து உள்ளத. வாதத்தில் தோற்ற சமணர்களைக் கழுவேற்றுதல் ஆகாது என்று பிள்ளையார் விலக்கி அருள’ என்று வருமிடத்தில் சம்பந்தப் பெருமானின் பெருங் கருணைத் திறம் நன்கு புலப்படுகின்றது. அதுகாறும் வெளிவராத “தக்கயாகப் பரணி” நூலை ஶ்ரீமத் ஐயர் ஆராய்ந்து பதிப்பித்துக்கொண்டிருந்தார்: அவரோடு இவரும் அந்நூலைப் படித்து, ப்ரூஃப்” பார்த்துக் கொண்டும் இருந்தார். எனவே, பூரீமத் ஐயரின் கட்டளைப்படி அந்தக் கருத்தை வைத்தே, சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றவில்லை. சைவ சமயத்தில் சேருங்கள்” என்றே அருளினார்’ என எடுத்துக் காட்டப்படுகிறது[2].

Sallekhana and starving Buddha

தர்மகீர்த்தி தடுத்தது, சங்கராச்சார்ய கங்கையில் குதித்து செத்தது மற்றும் சம்பந்தர் தடுத்தது, சமணர் கழுவேறியது: தர்க்கத்தில் தோற்ற சங்கராச்சார்ய கங்கையில் குதிக்கும் போது தர்மகீர்த்தி தடுத்தது, பௌத்தத்தை ஏற்ருக் கொள்ல சொன்னார். இது வாரணாசியில் நடந்தது.  அதேபோல சமணர் தோற்று கழுவேற எத்தனித்த போது, சம்பந்தர் தடுத்த போது, அவர்கள் கழுவேறினார்கள். அதாவது, வாதத்தில் தோற்றவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது சாக வேண்டும் என்ற கொள்கை, சரத்து அக்காலத்தில் உண்டானதா என்று கவனிக்க வேண்டும். முகமதியர் பின்னர், இதே கொள்கையினைக் கடை பிடித்தது தெரிந்ததே. ஆக, இதில் வன்முறை ஊக்குவிப்பு என்பது எவ்வாறு நடக்கிறது, தானாக சாக ஒப்புக் கொள்வது என்பது தற்கொலையிலிருந்து வேறுபட்டதா, இல்லை, அவ்வாறு சாகாவிட்டாலும், சாவு அவர்களுக்கு காத்திருக்கிறது என்ற நிலையிருந்ததா, அல்லது, மரண தண்டனை கொடுத்து, இத்தகைய கதைகளை புராணம் போல எழுதி வைத்தனரா, முதலியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஆனால், இப்பொழுது, மதவாத, வகுப்புவாத திரிபுவாதங்கள், செக்யூலரிஸ போர்வையில், இந்துமதத்திற்கு , பிராமணர்களுக்கு எதிராக வைத்து எழுதி வருகின்றனர். அதில், எடுத்துக் காட்டப்பட்ட உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

Jains persecuted - sculpture from Chidambaram

தர்மகீர்த்தி இந்தியரா, வெளிநாட்டவரா?: விகிபிடியா[3] தர்மகீர்த்தி பற்றி இவ்வாறு கூறுகிறது, “தர்மகீர்த்தி  (Dharmakīrti) (கி பி 7-ஆம் நூற்றாண்டுஇந்திய பௌத்த அறிஞர். இந்திய தத்துவ தர்க்கவியல் தர்சனத்தை அறிமுகப்படுத்திய  பௌத்த துறவியாவார். மேலும் துவக்ககால பௌத்த அணுவாதக் கோட்பாட்டை கொள்கையை நிறுவிய கொள்கையாளர். இவரது பௌத்த அணுவாதக் கோட்பாட்டின் படி பொருட்கள் எல்லாம் கண நேரம் இருப்பதாக கருதப்படுகிறது. இவர் எழுதிய நூல் ஹேதுபிந்து ஆகும். கி பி ஏழாம் நூற்றாண்டில் சுமத்திரா தீவில் பிறந்த தர்மகீர்த்தி சைலேந்திரன் என்ற பெயரில் இளவரசராக வாழ்ந்தவர். ஸ்ரீவிஜயம் பகுதியில் அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கிய இவர் பின்னர் இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த இயல் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பௌத்த சமய தத்துவங்களில் சிறந்து விளங்கியவரும்காஞ்சிபுரத்தில் பிறந்தவரும், பௌத்த சமய துவக்க கால தர்க்க தத்துவ அறிஞராகவும் விளங்கிய திக்நாகரின் புகழ் பெற்ற பௌத்த தத்துவங்களுக்கு மீள் விளக்க உரைகள் எழுதியவர். இவரை எதிர்த்து வாதிட்ட  குமரிலபட்டரை நாலந்தா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியவர்”. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், பிராமணர், சங்கரர வென்றவர் என்று எல்லாவற்றையும் விடுத்திருக்கிறார். அதாவது ஆங்கில[4] “தர்மகீர்த்தி” ஒருமாதிரியாகவும், தமிழ் “தர்மகீர்த்தி” வேறுமாதிரியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளனர்[5]. ஒருவேளை இவ்வுண்மையினை அறிந்து, தமது சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறது என்று ஒருதலைப் பட்சமான விவரங்களை மட்டும் கொடுத்துள்ளனர் போலும்.

© வேதபிரகாஷ்

13-05-2017

Jain impaled - Avudaiyar Temple-2

[1]  நாம் அறிந்த கி.வா.ஜ, பக்கம்.237.

[2]https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9C.pdf/238

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

[4] https://en.wikipedia.org/wiki/Dharmakirti

[5] If we go by Tibetan sources, he seems to have been born in South India and then to have moved to the great monastic university of Nālandā (in present day Bihar state) where he was supposedly in contact with other Buddhist luminaries, such as Dharmapāla (530–561 C.E.).https://plato.stanford.edu/entries/dharmakiirti/

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (12)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன்தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (12)

Dhamakiriti arguing with Sankara child

சங்கராச்சார்ய இரண்டாவது பிறவியில், இரண்டாம் முறை தர்மகீர்த்தியிடம் தோற்று உயிரிழந்தது: அடுத்த வருடம், சங்கராச்சார்ய பட்ட ஆச்சாரியாரின் மகனாகப் பிறந்தார். மூன்று வருடங்கள் தந்தையிடமும், இன்னொரு மூன்று வருடங்கள் மற்றவர்களிடமும் கற்று, வாதம் புரிய தேர்ச்சி பெற்றார். இங்கு வருடம் / வருடங்கள் என்றேல்லாம் இருந்தாலும், அவை என்ன ஆண்டுகள் என்று குறிப்பிடப்படவில்லை. ஏழாவது வயதில் தர்மகீர்த்தியுடன் வாதம் புரிந்தார், ஆனால், முழுவதுமாக தோற்கடிக்கப் பட்டார். தர்மகீர்த்தி தடுத்தும் கேளாமல், சங்கராச்சார்ய கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால், அவரது இளைய சகோதரர் கிழக்கு திசையில் தப்பியோடி விட்டார். 500 பிராமணர்கள் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர், 500 பிராமணர்கள் திரிபீடிகத்தை படிக்க ஆரம்பித்தனர்.

Dharmakirti who defetated Sankaracharya for four times, in four births

தர்மகீர்த்தியின் புகழ் உலகம் முழுவதும் பரவியது, பல மடாலங்கள் ஏற்படுத்தியது முதலியன: மகதத்தில் பூர்ண மற்றும் மதுராவில் பூர்ணபத்ரா என்ற பிராமணர்கள் இருந்தார்கள். அவர்கள், மிக்க சக்திவான்கள், பணக்காரர்கள் மற்றும் தத்துவ சாஸ்திரங்களில் வல்லவர்கள். சரஸ்வதி மற்றும் விஷ்ணு போன்ற கடவுளர்களது ஆசிகளைப் பெற்றவர்கள். ஆனால், இவர்களும் தர்மகீர்த்தியிடம் வாதமிட்டு தோற்றுப் போயினர். இந்த விதமாக, இவரது புகழ் உலகமெல்லாம் பரவியது. மகதத்திற்கு அருகில் இருந்த மதங்க ரிஷி காட்டில், வாழ்ந்து மந்திரங்களில் சித்தி பெற்றார். அப்பொழுது, விந்தியாசலத்தில், உத்புல்லபுஸ்ப என்பனின் மகனான புஸ்ப என்ற அரசன் ஆண்டு வந்தான். தர்மகீர்த்தி அவனிடத்தில் சென்று, தன்னை தெரிவித்துக் கொண்டபோது, பல மடாலங்களைக் கட்டிக் கொடுத்தான். தர்மகீர்த்தி அங்கு வாழ்ந்து வந்தார். “பிரமாணம்” பற்றி ஏழு நூல்களை இயற்றினார். ஆயிரக்கணக்கில் பிராமணர்களை வென்று, 50 இடங்களில் மடங்களை ஏற்படுத்தினார்[1]. குஜராத் வரை சென்று வெற்றி கொண்டார். கோடாபுரி என்ற கோவிலைக் கட்டினார். இங்கு 80 சித்தர்களின் ஸ்தோத்திரங்கள் படி, தர்மகீர்த்தி வானத்தில் பறந்து சென்று பலரை வென்றார். ஆனால், இவையெல்லாம் நம்பும்படியில்லை[2].

Dhamakiriti arguing with Sankara - boy-16

மூன்றாவது முறையாக சங்கராச்சார்ய மூன்றாவது பிறவியில், தர்மகீர்த்தியிடம் தோற்று உயிரிழந்தது: இந்நிலையில் சங்கராச்சார்ய மறுபடியும் பிறந்து, வளர்ந்தார். தனது 16 அல்லது 17ம் வயதில் மஹாதேவருடைய தரிசனம் பெற்று, வாரணாசிக்கு வந்து தர்மகீர்த்தியுடன் வாதம் புரிய அரசன் மஹாஸ்யானி என்பவனிடம் அறிவித்தார். அரசன் மணியடித்து, இவ்வாதத்தைப் பற்றி பிரகடனம் செய்தான். நான்கு திசைகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் வந்து கூடினர். தெற்கு திசையிலிருந்து, தர்மகீர்த்தி வரவழைக்கப்பட்டார். 5,000 பிராமணர்கள் கூடியிருக்க வாதம் ஆரம்பித்தது. ஆனால், சங்கராச்சார்ய, தர்மகீர்த்தியிடம் தோற்றுப் போனார். கங்கையில் குதிக்க தயாரானார், தர்மகீர்த்தி தடுத்தார், ஆனால், ஒப்புக் கொள்ளாமல் குதித்து உயிரை விட்டார். இதனால், பல பிரமாணர்கள் மதம் மாறினர், இவரின் உபாசகர்களாகவும் மாறினர். இதனால், பௌத்தம் பெருகிக் கொண்டே இருந்தது.

Dhamakiriti arguing with Sankara

நான்காவது முறையாக சங்கராச்சார்ய நான்காவது பிறவியில், தர்மகீர்த்தியிடம் தோற்று உயிரிழந்தது: தர்மகீர்த்தியின் வாழ்நாள் இறுதியில், இதே சங்கராச்சார்ய மறுபடியும் பிறந்து, முன்னர் விட அதிபுத்திசாலியானார். மஹாதேவர் அவர் முன்பு தோன்றி, எல்லாவற்றையும் போதித்தார். சில நேரங்களில் மஹாதேவரே, அவருடைய உடலில் புகுந்து, அவருக்குத் தெரியாத வாதங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார். ஆக, இம்முறை 12வது வயதிலேயே, தர்மகீர்த்டியுடன் வாதம் புரிய தயாராகி விட்டார். “முதலில் மற்றவருடன் வாதம் புரிவாயாக, ஏனெனில், தர்மகீர்த்தியுடன் வாதம் புரிந்து ஜெயிப்பது கடினம் ஆகும்”, என்று சிலர் அறிவுருத்தினர். அதற்கு, சங்கராச்சார்ய, “அவரை வெல்லாமல், உண்மையான புகழ் கிட்டாது”, என்றார். அதேபோல, தெற்கில் இருக்கும் தர்மகீர்த்தியிடம் சென்று, வாதம் புரிந்து தோற்றார். அவரின் சீடரானார். தெற்கில் சங்கரரை பௌத்தத்தை பிராமணர் போலவே இருந்து உபாசிப்பதாக, வழிபடுவதாகச் சொல்லப் படுகிறது[3]. புத்தருக்காக சங்கராச்சார்ய கட்டி கோவிலும் அங்கிருக்கிறது.

Dharmakirti - duality and advaita

தெற்கிலிருந்து சங்கராச்சார்ய வடக்கு போனதும், வடக்கிலிருந்த தர்மகீர்த்தி வடக்கில் போனதும்: இந்த தர்மகீர்த்தி-சங்கராச்சார்ய வாத-மோத கதைகளில் மூன்று முறை தெற்கிலிருந்து சங்கராச்சார்ய வடக்கு போனதாகவும், வடக்கிலிருந்த தர்மகீர்த்தி வடக்கில் போனதாகவும் உள்ளது. நான்காவது முறைதான், இருவருமே தெற்கிலேயே வாதித்தாக குறிப்பிடப் படுகிறது. மூன்று முறை தோற்று, கங்கையில் உயிரைவிட்ட சங்கராச்சார்ய, நான்காவது முறை தோற்றபோது, அவரின் சீடராகிறார்! ஆக, இந்த தெற்கு-வடக்கு திசைகள் பௌத்தர்களை, திபெத்திய பௌத்தர்களை, ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. தர்மகீர்த்தியே, தெற்கில் பிரமாணராகப் பிறந்து, குமாரில பாட்டரின் மறுமகனாக இருந்து, பிராமண உடையை எடுத்துக் கொண்டபோது, குமாரில பட்டர் திட்டியதால், பௌத்தராக மாறினார் என்று கதைகள் சொல்கின்றன. நாலந்தாவில் போத்தித்து வந்த இவர், திபெத்தில் பிரபலமாக இருந்தார். இவரது காலம் ஆறு-ஏழாம் நூற்றாண்டுகள், சுமார் 600–660 CE, என்றெல்லாம் குறிக்கப்படுகின்றன[4].  கிடைத்துள்ள நூல்களில் காணப்படும் தத்துவம், தத்து விளக்கம், மறுப்பு-எதிர்ப்பு-ஆதரிப்பு போன்ற காரணிகளை வைத்துக் கொண்டு இம்முடிவுக்கு வந்துள்ளார்கள். எப்படியிருந்தாலும், இவர்கள் தர்மகீர்த்தியின் காலத்தை 500-660ற்குள் வைப்பதால்[5], நிச்சயமாக, இவர் ஆதிசங்கரர் காலத்தில் இருக்கவில்லை என்று உறுதியாகிறது. அப்படியென்றால், அது கட்டுக்கதை என்றாகிறது. அதாவது, பௌத்தர்கள் எழுதிவைத்த சர்ச்சைக்குள்ள, சரித்திரம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகளின் [polemical and controversial writings, legends and myths]  ஆதாரமாக வைத்து புனையப் பட்ட இன்னொரு கதை என்றாகிறது.

Foundations - Dharmakirtis arguments

மெத்தப்படித்த தர்மகீர்த்தி சிறுவர்களிடம் ஏன் தர்க்கம் /வாதம் புரிய வேண்டும்?: தர்மகீர்த்தியின் வயது இதுதான் என்று குறிப்பிடப்படவில்லை. மேலே குறிப்பிட்டபடி, ஆராய்ச்சியாளர்கள் அவர் 50-70 வருடங்கள் வாழ்ந்ததாக தோரயமாக கணக்கு போட்டு சொல்லியிருக்கிறார்கள்.  தர்மகீர்த்தி சங்கராச்சாரியரோடு பிரிந்த வாதங்கள் விவரங்களில் கீழ்கண்டவைப் பெறப்படுகின்றன. சங்கராச்சார்ய நான்கு முறை பிறந்து, மூன்று முறை இறந்து, மறுபிறப்பு எடுத்து, நான்கு முறை வாதம் புரிந்துள்ளார்:

தர்மகீர்த்தியின் வாதங்கள் சங்கராச்சார்யரின் வயது தோற்றப் பிறகு சங்கரச்சார்யரின் நிலை

முதல் வாதம்

குறிப்பிடப்படவில்லை கங்கையில் குதித்து இறப்பு
இரண்டாம் வாதம்

7

கங்கையில் குதித்து இறப்பு
மூன்றாம் வாதம்

16-17

கங்கையில் குதித்து இறப்பு
நான்காம் வாதம் 12

தர்மகீர்த்தியின் சீடரானார்.

ஆக, ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு வருடம் இடைவெளி விட்டு, இவரது காலத்தை கணக்கிட வேண்டுமென்றால், 1 + 7 + 1 + 16 + 1 + 12 = 38 வருடங்கள் வருகின்றன. அதாவது, 38 ஆண்டுகளில் ஒரே ஆளுடன் நான்கு முறை வாதிட்டிருக்கிறார். முதல் தடவை, இவர் வாதிடும் போது, இவரது வயது 50 என்று வைத்துக் கொண்டால் கூட, இவருக்கு கடையாக வாதிடும் போது 88 வயதாகியிருக்க வேண்டும். அப்படியென்றால், 50, 67, 75 மற்றும் 88 வயதுகளில் வாதிட்டபோது, 7, 16-17 மற்றும் 12 வயது சிறு பையன்களிடம் தான் வாதித்துள்ளார். வயதான தேர்ந்த, சிறந்த தர்க்கம் புரிய யாரும் இல்லாமலா போய்விட்டனர்? நிச்சயமாக தர்க்கத்தில் யார்-யாருடம் தர்க்கம் புரியலாம் என்ற நியதியெல்லாம் இருக்கிறது. சிறுவர்களுடம் / சிறுவர்கள் தர்க்கம் புரியலாம் என்றால், அக்காலத்தில் அத்தகைய நிலை என்ன, ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்றும் ஆராய வேண்டியுள்ளது. போதாகுறைக்கு, அக்குழந்தைகளை கங்கையில் குதித்து இறந்துள்ளனர். அப்படியென்றால், அந்த சிறுபையன்களின் தைரியம், அறிவு, பல்லாயிரம் கி.மீ நடந்து வாரணாசிக்கு வந்தது முதலியவை பிரமிப்படைய வைப்பதாக இருக்கிறது. பௌத்தர்கள் ஏன் அப்படி, சிறு பிள்ளை வென்றதாக கதைகள் எழுதி வைக்க வேண்டும்?

© வேதபிரகாஷ்

13-05-2017

Dharmakirti national musueum

[1] He established about fifty48 centres for the Doctrine. From there he went to the border-Iand49 *Gujiratha. He

converted many brahmarJa-s and tirthika-s into the Law of the Buddha. He built a temple called *Gotapuri. 235

[2] What is now current as the stotra of the eighty siddha-s cannot be considered reliable. Still it is clear that the account of his flying through the’ sky after defeating his opponents etc is based on this. 235.

[3] Towards the end of his life the same *Sal11karacarya was born again as the son of *BhaHa * Adirya the second54 and in intelligence became stronger than before. His god (Mabadeva) appeared before him in person and gave him lessons. Sometimes he (Mahadeva) even merged into his body and taught him some hitherto unknown arguments. At the age of twelve, he wanted to enter into a debate with Sri Dlnrmakirti. The . brahmary,a-s told him, ‘It is better for the time being to debate with others, whom you are sure to defeat. But it is hard to defeat Dharmakirti.’ He said, ‘Without defeating him there can be no real fame in debate.’ Saying this, he went to the south and started debate with

this agreement that the defeated one had to accept the other’s creed. Sri Dharmakirti became victorious and  converted him into a follower of the Law of the Buddha. It is said that in the south, he (Sa11lkara) used to worship

the Law of the Buddha as a brahmaIJa [Fol 93A] following the practices of an upasaka. The temple built55 by him still exists. 236-237

[4] Balcerowicz, Piotr. On the Relative Chronology of Dharmakīrti and SamantabhadraJournal of Indian Philosophy 44.3 (2016): 437-483.

[5]

Author Period assined approximately

Relying upon evidence, argument etc

Pathak, K. B Various dates . “Dharmakirti and Sankaracharya.” Journal of Royal Asiatic Society 18.

 

Lindtner 530-600 CE partly on the basis of the problematic dating of the Madhyamaka-ratna-pradīpa and its attribution to Bha¯viveka, etc.)
Kimura 550-620 CE

mainly on the basis of circumstantial evidence of Chinese sources, attempted to push Dharmakı¯rti’s date back to 550–620.

Erich Frauwallner 600-660 CE

rest primarily on the juxtaposition of the travelogues of two Chinese

pilgrims who visited Na¯landa¯ university where Dharmakı¯rti is known to have taught.    Xuanzang (602–664), who visited Na¯landa¯ during his travel to India between 629–641, apparently99 was completely silent on Dharmakı ¯rti, even though he did mention the names of some renowned Buddhist thinkers teaching at Na¯landa¯ 1961

650-700 CE

On the other hand Yijing (635–713) travelled to Na¯landa¯ during his trip to India between 673–685 and included Dharmakı¯rti’s name among the prominent teachers of the university.

P Balcerowicz 550-610

As contemporary of Samantabhadra 530–590 and Pu¯jyapa¯da Devanandin 540–600

 

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (11)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன்தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (11)

Pre-christian Buddhism in Britain - Ireland

இடைக்காலம் வரை தென்னிந்தியாவில் ஜைனபௌத்தத்தின் தாக்கம்: ஆரம்பகாலங்களில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் கிரேக்கர், அரேபியர் பிறகு முகமதியர் என்று அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு, முக்கியமாக தங்களது வியாபாரத்திற்கு முக்கியம் கொடுத்து வாழ்ந்ததால், இவர்கள் எண்ணிக்கைக் குறைய-குறைய தாக்குதல்கள் அதிகமாயின. குறிப்பாக பௌத்தம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலேயே முதல் நூற்றாண்டுகளில் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. டொனால்டு ஏ. மெக்கன்ஸி என்பவர் தன்னுடைய புத்தகத்தில் இவ்விவரங்களை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்[1].  ஆனால், யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் ஆதிக்கம் பெற்றுவந்த நிலையில், மற்றவர்களின் ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்தன. மற்ற நம்பிக்கையாளர்களையும் மதம் மாற்ற ஆரம்பித்தனர். அம்முயற்சிகளில், இம்மூன்று மதங்களுக்கிடையே இருந்த போட்டி, சன்டைகள், போர்கள் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன. அந்நிலையில் மற்ற மதங்களின் நிலை பற்றி சொல்லவேண்டியதில்லை. காலனிய ஆதிக்கம் வந்தபோது, ஐரோப்பியர் ஆசிய-ஆப்பிரிக்க-அமெரிக்க நாட்டு மக்களை அடக்கியாள திட்டமிட்டனர். 20 நூற்றாண்டுகள் வரை, அத்தகைய முறைகள் சித்த்ஆந்தம் மூலமும் செயல்பட்டது. அதற்கு சரித்திரம் [அவர்களே எழுதிய] உதவியது.

Pre-christian Buddhism in Britain - Ireland- donald Mackanzie

ஜைனபௌத்தர்கள் வடமேற்கு, வடக்கு, தெற்கு என்று நகர்ந்தது: மதமோதல்கள் அதிகமானபோது, ஜைன-பௌத்தர்கள், இடம் பெயர வேண்டியதாயிற்று. இவர்கள் மதம் மாற நேரிட்டது. தப்பித்தவர்களுக்கு, இந்தியா புகலிடம் அளித்தது. இடைக்காலத்தில், ஜைன-பௌத்த மதங்கள் முகமதியர்களின் தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல், தெற்கில் நகர்ந்து செல்ல ஆரம்பித்தனர். முன்பும் அவர்களது மடாலயங்கள் இருந்தன. ஆனால், இடைக்காலத்தில், தங்களது அதிகாரத்தைத் தக்கக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்பு, அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களுடன் – இந்துக்களுடன், தங்களது நிலையை அறிந்து அனுசரித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், முகமதியர்களின் அடக்குமுறைகளினால், பெரிதும் பாதிக்கப்பட்டது இவர்கள் தாம். “களப்பிரர்களின்” கொடுமைகளை இங்கு விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. முகமதியர் வடக்கில் கொள்ளை, கொலை அட்டகாசம், ஆதிக்கம் முத்லியவை அதிகமாகிய போது, அரசர்களின் நிலையும் மாறின. இதனால், இவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர். ஆனால், முதல் நூற்றாண்டுகளில் இவர்கள் மற்றவர்களுக்கு அதிக கொடுமைகள் புரிந்ததால், மக்கள் விழிப்புக் கொண்டு, சைவம்-வைணவம் என்ற ரீதியில் ஜைன-பௌத்தர்களை எதிர்க்க ஆரம்பித்தனர். இதனால், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் மூலம், விழிப்புணர்வு ஏற்பட்டது. 14ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் முகமதியர்களின் அட்டகாசம் ஆரம்பித்தது.

Buddha in Egypt

லாமா தாரநாதா என்பவரின்இந்தியாவில் பௌத்தம்என்ற நூல் கொடுக்கும் விவரங்கள்[2]: லாமா தாரநாதா 1575ல் பிறந்து, தனது 34ம் வயதில் [சுமார் 1609ம் ஆண்டு] “இந்தியாவில் பௌத்தம்” என்ற நூலை எழுதினார். இது “புத்த மஹாத்மியம்” என்றும் சொல்லலாம், ஏனெனில், முழுவதும் சரித்திரமாக இல்லாமல், புத்தர் மற்றும் பௌத்தத்தின் சிறப்பை, மேன்மையை மற்றும் வெற்றியை புகழ்ந்து எழுதப்பட்ட கதைகள் கொண்ட புராண நூலாக உள்ளது[3]. ஏ.ஐ. வோஸ்திரிகோவ், இந்நூல் 143 ஏடுகளைக் கொண்டிருந்தன, ஏ. குருன்வெடல் என்ற ஜெர்மானியர் மொழிபெயர்த்தார், மூல சுவடிகள் / ஏடுகள் ஐந்தாவது தலாய் லாமா காலத்தில் [1617-1682] பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டபோது, அழிக்கப்பட்டது[4].  இங்கு பௌத்தர்களை யார், எதனால், ஏன் தாக்கப்பட்டனர் என்று தெரியவில்லை, பிறகு மீண்ட ஆவணங்களை வைத்து, உருவான, அத்தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இப்பொழுது, பௌத்தர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை[5].

Dharmakirti - Tranatha Buddhism in India

தர்மகீர்த்தியின் புகழும் பௌத்தத்தை பரப்பிய விதமும்: காககுஹா என்ற இடத்தில் தர்மகீர்த்தி என்ற புத்த பிக்ஷு இருந்தார். அவர் ஆறு தர்சனங்களை அறிந்த தத்துவ விற்பன்னர்களைத் தோற்கடித்து, பௌத்தத்தின் சிறப்பை எடுத்துக் காட்டினார். ஆயிரக் கணக்கான பிராமணர்கள் தோற்று, பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர். நிர்கந்த, மீமாஸக, பிராமண, தீர்த்திக என்று எல்லா பிரிவினரையும் வெற்றிக் கொண்டார். மணியை அடித்து, “இன்னும் என்னுடம் வாதம் புரிய யாராவது உள்ளனரா?”, என்று கேட்டார். ஆனால், தப்பித்தவர் எல்லாம் விந்தியாசலம் தாண்டி ஓடி மறைந்தனர். அவர் பழைய சித்தாந்திகளின் வழிபாடு ஸ்தலங்களை, அவை அழிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததால், புதுப்பித்துக் கட்டினார்[6]. பிறகு, காட்டில் சென்று தியானம் செய்ய சென்று விட்டார். அதாவது அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் இடிக்கப் பட்டன, பௌத்தாலயங்களாக மாற்றிக் கட்ட்டப்பட்டன என்பதை அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய, பௌத்தப் பற்று கொண்ட தர்மகீர்த்தி, பழைய கோவில்களை ஒன்றும் புதுப்பித்துக் கட்டியிருக்க மாட்டார்.  அதாவது, ஆறாம் நூற்றாண்டிலேயே அத்தகைய இடிப்புகள் நடந்துள்ளது என்பதனையும் கவனிக்க வேண்டும்[7].

Dharmakirtis - Sankara arguments

சங்கராச்சார்ய, தர்மகீர்த்தியை எதிர்கொண்டது: இந்நிலையில் சங்கராச்சார்யா, ஶ்ரீ நளேந்திரர் என்பருக்கு தான் வாதம் புரிய தயாக இருப்பதாக செய்தி அனுப்பினார். ஆனால், நாலந்தாவில் உள்ள பிக்ஷுக்கள் ஒரு வருடம் கழித்து வாதம் வைத்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்தனர். அதாவது, தெற்கில் சென்ற தர்மகீர்த்தியை வரவழைக்க நேரத்தை எடுத்துக் கொண்டனர். வாரணாசியில், அரசன் பிரதோத்யா / பிராதித்யா வாதத்திற்கு ஏற்பாடு செய்தார். சங்கராச்சார்யா, தர்மகீர்த்தியிடம், “தர்மகீர்த்தி தோற்றால் கங்கையில் மூழ்கடிக்கப்பட வேண்டுமா அல்லது மதம் மாற்றப்பட வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்கலாம், ஆனால், நான் தோற்றால் கங்கையில் குதித்து என்னுயிரை மாய்த்துக் கொள்வேன்”, என்று எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார்[8].  இருவரிடையே வாதம் ஆரம்பித்தது, ஆனால், சங்கராச்சார்யா எல்லா விதத்திலும் தோற்கடிக்கப் பட்டார். அவருக்கு பதில் அளிக்க எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டது. அந்நிலையில், கங்கையில் குதித்து, இறக்கத் தயாரானார். அப்பொழுது, தர்மகீர்த்தி தடுத்தார். ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை, தன்னுடைய சீடனான பட்ட ஆச்சார்யாவை நோக்கி, “மொட்டையெடித்துக் கொண்டு இவருடன் வாதம் புரிவாயாக, ஒரு வேளை உன்னால் வாதத்தில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், நான் மறுபடியுமனுன்னுடைய மகனாகப் பிறந்து வந்து இவருடன் வாதிப்பேன்”, என்று கூறி, கங்கயில் குதித்து உயிரை விட்டார். தர்மகீர்த்தி சங்கர்ராச்சார்யருடைய சீடர்கள் பலரை பௌத்த மதத்திற்கு மாற்றினார். சிலர் தப்பி ஓடி விட்டனர்.

© வேதபிரகாஷ்

13-05-2017

Dharmakirti - ferocious

[1] Donald A. Mackanzie, Pre-Christian Buddhism in UK and Ireland, Blackie & Son Ltd, UK, 1928.

[2] Deviprasad Chattopadhyaya (ed.) and Lama Chimpoa (Trans.), Taranatha’s History of Buddhism in India, Motilal Banarasidas, New Delhi, 1990.

[3]   Deviprasad Chattopadhyaya , in his preface to this book writen on May 26, 1970, Preface, p.xxiii

[4] The original printing blocks of Taranatha’s works were largely destroyed “during the persecution of the Jo-nan~pa sect in the time of the Fifth Dalai Lama (Nag-bdan-bJo-bzanrgya-mtsho: A.D. 1617-1682) in the first half of the 17th century AD. Preface, p.xxiv.

[5] பௌத்தம் சைனாவினால் எப்படி கட்டுப்படுத்தப் பட்டது போன்ற விவரங்களையும் இவர்கள் படிப்பதில்லை, ஆராய்ச்சி செவதில்லை.

[6] He next went to *DravaIi and, by ringing a bell, proclaimed: ‘Is there anybody in this place capable of entering into a debate?’ Most of the tirthika-s ran away while some admitted that they were not capable of it. He rebuilt there all the older centres of the Doctrine which had been damaged. He sat on meditation in a solitary forest. 232

[7] ஏனெனில், முகமதியர்களாக மாறியவர்களில் பெர்ம்பாலோர் பௌத்தர்களாக இருந்த நிலையில், அவர்களது கோவில் இடிப்பு, விக்கிர-அழிப்பு சித்தாந்தம் இன்னும் அதிகமாகின என்பதை அவர்களது நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

[8] On the ev; of the debate between *Sal11karadirya and Sri Dharmakirti, * Sa111kara declared to the people in the

presence of the king: ‘In case of our victory, we shall decide whether to drown him into the *GaIlga or to convert him into a til’thika. In case of his victory, I shall kill myself by jumping into the *Gal1ga.’ 233.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

மே 12, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

Sankara vijaya accounts

ஆதி சங்கரர் பௌத்தர்களைக் கொன்று குவித்த கதை உருவானது: இனி ஆதிசங்கரர் எப்படி படைகளுடன் திக்விஜயம் செய்து, சென்றவிடமெல்லாம் பௌத்தர்களைக் கொன்றுகுவித்தார் என்ற குற்றச்சாட்டைப் பார்ப்போம். இக்கருத்தை இன்றைய பௌத்தர்கள், நியோ-பௌத்தர்கள், அம்பேத்கரைட்ஸ், தி.கவினர், மற்ற ஹிந்து-விரோத குழுக்கள் முதலியோர் பரப்பி வருகின்றனர். உண்மையினை ஆராயாமல், சில மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்களும் அதை பிரசாரம் செய்து வருகின்றனர்.
K. Jamanadas, Tirupati Balaji was a Buddhist Shrine, www.ambedkar.org/Tirupati/Tirupati.pdf
K. S. Bhagavan,  Adi Shankara’s Anti-people philosophy, The Modern Rationalist, Vol.XII, no.6, Feb.1985, pp.8-12.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -1, The Modern Rationalist, Vol.XII, no.7, March 1985, pp.5-6.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -2, The Modern Rationalist, Vol.XII, no.8, April 1985, pp.5-10.
David N. Lorenzen, Warrior Ascetics in Indian History, Journal of the American Oriental Society, Vol. 98, No. 1 (Jan. – Mar., 1978), pp.61-75 (article consists of 15 pages).
இவையேல்லாமே, “சங்கரவிஜயம்” என்ற நூற்களில் காணப்படும், சில வரிகளை வைத்துக் கொண்டு, அத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆதிசங்கரரைத் தாக்கும் போக்கில், இந்துமதத்தை தூஷிக்க வேண்டும் என்ற போக்குதான், இவர்களின் எழுத்துகளில் உள்ளதே தவிர, உண்மையினை அறிய வேண்டும் என்ற ஆராய்ச்சி நெறி காணப்படவில்லை.

Sankara vijaya texts - later period

18-19வது நூற்றாண்டுகள் வரை திருத்தப்பட்ட சங்கரவிஜயங்கள்: உள்ள “சங்கரவிஜயம்” எனப்படும் நூல்களைப் படிக்கும்போது, காஞ்சிமடம் மற்றும் சிருங்கேரிமடம் இவற்றிற்குள் உள்ள பூசல்கள், சண்டைகள் அத்தகைய சங்கரவிஜய எழுத்துப் பிரதிகளில் தத்தமது மடத்தின் பெருமையினை பறைச்சாற்றிக் கொள்ள பல மாற்றங்களையும், இடை செருகல்களையும் செய்துள்ளார்கள் எனத்தெரிகிறது.
ஸ்ரீராம சாஸ்திரிகள், ஆனந்தகிரி சங்கரவிஜயத்தில் ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமடம், ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
…………………………, வ்யாஸாசலீய சங்கரவிஜயம், காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003.
நடுநிலையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவரின் ஆராய்ச்சியின்படி, சங்கரவிஜயங்கள் எல்லாம் 18-19ம் நூற்றாண்டுகள் வரை எழுதப்பட்டு வந்துள்ளன. அதாவது, திருத்தங்கள், மாற்றங்கள், இலைசெருகல்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆகையால், சரித்திர ரீதியாக அவை சொல்வதை எடுத்துக் கொள்ளமுடியாது. மற்ற எல்லா மடங்களும் ஆதிசங்கரர் காலம் 509-477 BCE என்று பின்பற்றும்போது, சிருங்கேரி 788-820 CE தேதியை பயன்படுத்துகிறது. ஆகவே ஆதிசங்கரர் முதல் தற்பொழுதுள்ள சங்கராச்சாரியார்களின் பட்டியல்களும் அவ்வாறே உள்ளன. அதாவது சிருங்கேரியின் பட்டியலின்படி 36வது மடாதிபதி பாரதி தீர்த்தர் ஆவர். முதல் எட்டு மடாதிபதிகளுக்கு தேதிகள் குறிப்பிடவில்லை. பத்தாவது மடாதிபதி வித்யா சங்கர தீர்த்த என்பவருக்கு C.1228-C.1333 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
A. K. Sastri, A History of Sringeri, Prasaranga, Karnataka University,  Dharwad, 1982, Appendix – III.
காஞ்சிமடம் மடாதிபதிகளின் வரிசைபடி 509-477 BCEலிருந்து ஆரம்பித்து
தற்பொழுதையவர் 69வதாக உள்ளார். பொதுவாக, இம்மடங்கள் தங்களது தொன்மையினை எடுத்துக் காட்டிக் கொள்ள மேற்கொண்டுள்ள போட்டியில், ஆதிசங்கரரின் தொன்மையினை பாதிக்கும் முறையில், சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். அதனால், அவற்றில் காணப்படும் வேறுபாடுகளை, இந்துவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்.

Sankara vijaya accounts

காலின் மெகன்ஸி, ஓலைச்சுவடி சேகரிப்பு, பிரதியெடுத்தல், பிழைதிருத்தங்கள் பெருகுதல்: காலின் மெகன்ஸி என்பவர் பல இடங்களுக்குச் சென்று, லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் (இந்தியாவின் அக்காலப் புத்தகங்கள்), முக்கியமான நாணயங்கள், அத்தாட்சி பொருட்கள் முதலியவற்றை சேகரித்து இங்கிலாந்திற்கு அனுப்பி வந்தார். ஆனந்தானந்தகிரி அல்லது ஆனந்தகிரி என்பவரால் எழுதப்பட்ட சங்கரவிஜயம் அதில் இருந்தது. மெகன்ஸி அதைப் படித்துவிட்டு, “சங்கரரின் கட்டுக்கதை” என்று குறிப்பிட்டார்.
Colin Mackanzie, The Oxford Catalogue of Sanskrit Manuscripts, Bibilotheica Indica series, London, 1881.
ஆனால், நம் மக்களோ அக்கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டு சரித்திரம் ஆக்க முயற்ச்சிக்கின்றனர். மெகன்ஸி சில நேரங்களில் ஓலைச்சுவடிகள் அரிதாக இருந்தால் பிரதியெடுக்கச் செய்து அதனை வைத்து அசலை எடுத்திச் சென்றுவிடுவார். அவரிடம் வேலைப் பார்த்தவர்கள் இந்திய பண்டிதர்களே. 18-19வது நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் இந்திய சமூகத்தைச் சாதிகளின்மீதும், சமயப்பிரிவுகள், குறிப்பாக சமய-உட்பிரிவுகள் மூலம் பிரிக்க முயன்றனர். இதற்காக பல “ஜாதி-சரித்திரங்கள்” எழுதவைத்தனர்.
அதுமட்டுமல்லாது, நீதிமன்றங்களில் தமது மதப்பிரச்சினைகளை எடுத்துச் செல்லத் தூண்டி அதற்கேற்ற ஆதாரங்களைக் கேட்க ஆரம்பித்தனர். அவ்வாறு கேட்கும்போது, இந்தியர்கள் ஆதாரங்கள்/அத்தாட்சிகளை எடுத்துவருவர், அவற்றை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுங்கள் என்று கூறலாம் அவற்றை அபகரித்து விடலாம் என்பதுதான் அவர்களின் யுக்தி.

sringeri - Kanchi controversies

புதிய சங்கர விஜயங்கள் உருவானது எப்படி?: உதாரணத்திற்கு, 1844ல் காஞ்சிபுரத்தில் “தாதாங்க-ப்ரதிஸ்தா” என்ற சடங்கை ஜம்புகேசஸ்வரத்தில் உள்ள அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு செய்வதற்கு இரண்டு மடங்களும் போட்டியிட்டன. உடனே ஆங்கிலேயர்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாணப் பணித்தனர். விவரம் அறியாது அவ்வாறே சென்றன. ஆதாரம் கேட்டபோது, காஞ்சிமடம் “சிவ-ரஹஸ்யம்” மற்றும் “மார்க்கண்டேய-சம்ஹிதை” என்ற இரண்டு நூல்களை ஆதாரமாக சமர்ப்பித்தனராம். ஆனால், சிருங்கேரிக்கு அத்தகைய ஆதாரம் இல்லாதபோதுதான், இந்த சங்கரவிஜயம் இப்பொழுது உலாவரும் “வித்யயரண்யரின் சங்கரவிஜயம்” எனப்படும் நூல் உருவாக்க்கப்பட்டதாம்!
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003, ப.46.
பிறகு படிப்படியாக மற்ற விவரங்கள் சேக்கப்பட்டன. டபிள்யூ. ஆர். அந்தர்க்கர் எடுத்துக்காட்டுபவை:

  1. சித்சுக பிரதியில் “ஜைனர்கள், மஹாவீரர்”, என்றிருந்தது சதாநந்த,
    சித்திவிலாச பிரதிகளில், “பௌத்தர்கள், பௌத்த குரு” என்று மாற்றப்பட்டுள்ளது (ப.28).
  2. மற்ற சங்ரவிஜங்களில், சிவன் சங்ரராக அவதாரம் எடுக்கும்போது, பிரஹத்-சங்கரவிஜயத்தில், விஷ்ணுவே புத்தராக அவதாரம் எடுக்கிறார் (ப.56).
  3. ஒரு குறிப்பிட்ட சங்கரவிஜய பிரதிகளிலேயே உள்ள சுலோகங்கள் 11 முதல் 473
    வரை வித்தியாசப்படுகின்றன (ப.49-51).
  4. மத்வ, ஆனந்தகிரி முதலிய சங்கரவிஜயங்களைத் தவிர, மற்றவைகளில் ஜைனர்கள், பௌத்தர்கள் குறிப்பிடப்படுவதில்லை.
  5. சிருங்கேரி சங்கரவிஜயத்தில் “‡பனர்”, “திகம்பரர்” என்ற வார்த்தகள்
    அதிகமாகவும் “புத்த” என்ற வார்த்தை குறைவாகவும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.
  6. “மத்வரால்” எழுதப்பட்டது என்பது, 1798 வரை ததருத்தி எழுதப்பட்டு
    வருகிறது (ப.49).
  7. ஐரோப்பியர்களே, சீனர்களின் குறிப்புகளை அளவிற்கு மீறி நம்பவேண்டாம்
    என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் நாம், அவற்றை முழுவதுமாக
    நம்பொகிறோம் (ப,98).

Sankara vijaya accounts- vimsara-he preaching to Arabs

ஆதி சங்கரர் அரேபியாவுக்குச் சென்று போதித்தது: சீன-குறிப்புகளினின்றுதான் இந்த சர்ச்சை எழும்பியுள்ளதால், ஆதாரங்கள் இல்லாமல், சரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள், இதனை பெரிது படுத்து எழுதுவது தகாததாகும். ஆகவே, ஆங்கிலேயர்களும் தமது பங்கிற்கு இடைசெருகல்கள் செய்திருந்தால், அது அவர்களுக்குத் தான் தெரியும். எனவே, இந்தியர்கள் பல விதங்களில் பாதிக்கப்படும் நிலையில்தான் இருக்கின்றனர். ஆதிசங்கரர் அரேபியாவிற்கு சென்று போதித்தது: இன்னும், வேடிக்கை என்னவென்றால், சங்கரர் தமது திக்விஜயத்தில் அரேபியாவிற்குக் கூடபோனார், ஆகாயத்திலிருந்தே அரேபியர்களுக்கு போதித்தார் என்றும் உள்ளது! “விம்ஸர” என்ற நூல், “ஆதிசங்கரர் 64 நாட்களுக்கு வானத்தில் இருந்து கொண்டே வேதங்களின் மூன்று மார்க்கங்களான, கர்மா, உபாஸனா மற்றும் ஞானம் முதலியவற்றை அங்கு வாழ்ந்த யூகிக்களுக்கு அரேபிய மொழியிலேயே உபதேசித்தார். அவர்களும் சிரத்தையாக அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அரேபிய மொழியிலேயே அவற்றை எழுதி வைத்துக் கொண்டனர். அவைதாம் பிறகு புனித குரான் ஆனது”.
K. V. Subbaratnam, The Date of Sri Sankara, Vani Vilas Press, Srirangam, 1987, p.24
[கடல் கடந்து சென்றால், சங்கரரையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள் என பயந்து, அவரை ஆகாயத்தில் பறக்கவிட்டதுடன், ஆகாயதிலேயே அதாவது பூமியின்மீது கால்கள் படாமல் நிறுத்திவைத்தது நன்றாகவே தெரிககறது! பாவம், இடைச்செருகல் செய்தவர், காலத்ததற்கேற்ற்வாறு செய்துள்ளார் போலும்!]

Sankara and Kapalikas

ஜைன-பௌத்த சர்ச்சை நூல்கள் இத்தகைய நூல்களுக்கு தூபம் போட்டது: முன்பு வாதங்களில் தோற்றவர்கள் மேற்கில் கடலுக்கு அப்பால் அனுப்பப்பட்டனர் என்று குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. ஆகவே இவற்றை வைத்துக் கொண்டு, முகமது நபியே, சங்கர அத்வைதம் அவ்வாறு அறிந்து, தானும் பலகடவுளர்களை வழிபட்டு வந்த அரேபியர்களை ஒன்றுபடுத்தி, ஒருபுதிய மதத்தை நிறுவினார் என்று வாதிடலாம். ஏனெனில், முகமது நபி, மெக்காவில் இருந்த 360 விக்கிரங்களை உடைத்தாரம். அப்பொழுது, அவர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ஒரே ஒன்றை விட்டுவைத்தாராம். அதுதான் காஃபாவில் உள்ள விக்கிரம் / கருப்பான வெள்ளைக்கல். உண்மையில், ஆராய்ச்சிரீதியில், காலக்கணக்கியல் மற்றும் இதர ஆதாரங்களுடன், அத்தகைய கருதுகோளை சித்தாந்தம் ஆக்கலாம், சித்தாந்தத்தை ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கலாம், சரித்திரமாக்கலாம். [இப்பொழுது ஆதிசங்கரர் தமது அத்வைதத்தை இஸ்லாத்திலிருந்து காப்பியடித்துதான் உருவாக்கினார் என்று சரித்திர ஆசிரியர்கள் தாராளமாக எழுதி வருகிறார்கள்].

Sankara and Kapalikas- fight

ஆதிசங்கரர் சுதன்வன் படைகளுடன் சென்றாரா?: இனி, சங்கரதிக்விஜயத்திற்கு வரும்போது, குறிப்பாக, “மத்வர்/மத்வாச்சாரியார்” என்பவர் எழுதியாகச் சொல்லப்படும் சங்கரவிஜயத்தின்படி, “சங்கரர் சுதன்வ என்ற அரசன், மற்றும் பக்தகோடிகளுடன் தனது தத்துவத்தைப் பரப்புவதற்கும் மற்றும் அதனை எதிர்ப்பவர்களை வாதிட்டு ஜெயிப்பதற்கும் புறப்பட்டார்” (காண்டம்.15, வரி.1). இதில் என்ன வேடிக்கை என்றால், குறிப்பாக பற்பல இந்துமதப் பிரிவினர்களைத்தான் வெற்றிகொண்டார் என்றுள்ளது. நியாயவாதிகளை வென்றார், கபிலருடைய சித்தாந்தத்தை முடித்தார், வைஷ்ணவத்தை மண்ணோடு மண்ணாக மறையச் செய்தார் (10.118-119). காபாலிகர்களுடந்தான் சண்டை ஏற்பட்டது தெரிகிறது. ஒரு காபாலிகன், சங்கரரை, அவரது சீடன்போல நடித்து, கொல்லவருகிறான். அதிலும், “நரசிம்மரே” வந்து, அதாவது மற்றொரு சீடர் பத்மபாத “நரசிம்மராகி”, காபாலிகனைக் கொன்று, சங்கரரைக் காப்பாற்றியதாக உள்ளது (காண்டம்.11). எனவே இக்கதைகளை நம்பமுடியாது, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நியாயம், தர்மங்களை விடுத்த பிராமணர்களை கடுமையாகச் சாடுகிறார். மற்ற திமிரான எதிராளிகளை வென்று மேற்கு கடலுக்கு அப்பால் அனுப்பி விடுகிறார் (15.29). சாக்தகள், பாசுபத-காபாலிகர்கள், வைணவர்கள் இவர்களை வென்றதாக பல இடங்களில் உள்ளது (15.164). [இதையெல்லாம் படித்தால், அவர்களுக்குத் தான் கோபம் வரவேண்டும்]
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
முன்னுரையில், கே. ஆர். வெங்கடராமன் குறிப்பிடுவதாவது, “சுதன்வ என்பது கவியின் படைப்பு”, அதாவது கற்பனைப் பாத்திரம். ஏனெனில், எப்படி சிவன் சங்கரராக, முருகன் குமாரில பட்டராக பிறந்தார்களோ இந்திரனே சுதன்வனாகப் பிறந்தான், என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. மேலும் சிருங்கேரிமட சங்கராச்சாரியாரே (அதாவது ஸ்ரீ மத்வர் பிறகு, ஸ்ரீ வித்யாரண்யர் (1380-1386) என்ற பெயருடன் மடாதிபதியானார்) இதை எழுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சரித்திரத்தன்மையற்ற அந்த ஆவணங்களின் நிலையை நன்றாக அறிந்து கொள்ளலாம்.

சுதன்வன்அரசன்ஒரு கட்டுக்கதை: சரித்திர-ரீதியில் சுதன்வ என்ற அரசன் இருந்தது, அரசாண்டது என்ற குறிப்பே இல்லை. ஆகையால், இது 18-19வது நூற்றாண்டுகளில் சங்கரவிஜயம் எழுத ஆரம்பித்த மடங்களின் சார்புடையவர்களின் கற்பனையே ஆகும். இருப்பினும் அவன் படைகளுடன், வில்-அம்புகளுடன் சென்று காபாலிகர்களைக் கொன்றதால், அதே மாதிரி, பௌத்தர்களையும் கொன்றிருப்பான், என்று ஒருவர் குறிப்பிட்டதும், அதை மற்றவர்கள் எடுத்து தங்களது எழுத்துகளில் எடுத்தாள ஆரம்பித்து விட்டனர்! இனி விவரமாகப் பார்ப்போம்.

சுதன்வன் குமாரில பட்டரின் தூண்டுதலால் பௌத்தத்தை ஒடுக்கியது: கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்ப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. மேலும் அது ஒரு மறைமுக மிரட்டல் ஆணையாக உள்ளது. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. அதே மாதிரி எந்த ஒரு பௌத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது.
T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.
See Telang, Mudrarakshasa., pp.xlviii-liii.,
………………., The Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155.
Wilson, Dict., xix;
Colebroole, Essayas, 1. 32.

Sankara was defetated by Buddhists

பௌத்தர்கள் உருவாக்கிய சர்ச்சைக்குள்ள நூல்கள்: சமீபத்தில், கே. டி. எஸ். சரௌ என்ற ஆராய்ச்சியாளரும், இவ்விஷயத்தை நுணுக்கமாக ஆய்ந்து பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது பலநிலைகளில் – மத-சடங்கு முறை முதல் சங்கத்தின் பிரச்சினைகள் வரை – ஏற்பட்டது என எடுத்துக் காட்டியுள்ளார்.
K.T.S. Sarao, On the Question of Animosity of the Brāhmaṇas and Persecution by Brāhmaṇical Kings Leading to the Decline of Buddhism in India, The Chung-Hwa Institute of Buddhist Studies, Taipei Chung-Hwa, Buddhist Studies, No. 10, (2006).

ஆகவே, அக்கதைகளின் ஆரம்பம் என்னவென்று பார்த்தால் பௌத்தர்களின் “கதைகள்” தாம் என்று தெரிகின்றன. 7ம்-8ம் நூற்றாண்டுகளுக்கு மேல் பல காலங்களில் பலரால் எழுதப்பட்ட தொகுப்பு நூல்களில் தான் அத்தகைய விவரங்கள் காணப்படுகின்றன. முதன் முதலில் யுவான் சுவாங் (629-645), என்ற சைனாவின் புத்த யாத்திரிகர் வருகிறார். அவர் இந்தியாவில் தான் பார்த்தது, கேட்டது என்று எழுதிவைத்துள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துள்ளனர். பௌத்தர்கள் தமது மத-ரீதியில், சாதகமாக எழுதும்போது அவ்வாறுதான் எழுதுவார்கள். ஆனால் சரித்திர ஆசிரியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்த விவரங்களை மற்ற அத்தாட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கல்வெட்டு-கட்டிடங்களின் நிலை பார்த்து முடிவிற்கு வரவேண்டும். மௌரிய பேரரசு ஆதிசங்கரர் இவற்றை இணைக்கும் மற்றும் அவற்றை காலக்கணக்கீட்டில் வரிசையாக வைத்து அவ்வாறே இந்திய சரித்திர நிகழ்ச்சிகள் முறைப்படுத்தும் வலுக்கட்டாயமான முயற்ச்சியும் இதில் தெரிகின்றது. இது ஒரு 1200 ஆண்டுகளில் கட்டிவைக்க முயன்ற திட்டம். இக்காலகட்டத்தில் தான் உண்மையிலேயே, எழுதப்பட்டுள்ள சரித்திரத்தின் படி, ஜைன-புத்த மதங்கள் மிகவும் உச்சநிலையில் இருந்தன. ஆனால், “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர்.

சைனாவில் பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டது: முன்னமே குறிப்பிட்டபடி, சைனாவில் பௌத்தம் தழைத்தோங்கிய நிலையில் இருந்தாலும், அங்கு பௌத்தர்கள் தண்டிக்கப் பட்டது தெரிகிறது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் என்று தெரிகிறது. அவன் பொருளாதார காரணங்களுக்காக அவ்வாறு பௌத்தர்களைத் தாக்கியதாக கூறுகிறார்கள். அயல்நாட்டு தாக்கத்தை முழுவதுமாக அழிக்கவும், அவன் அத்தகைய கொடிய முறையைக் கையாண்டதாகத் தெரிகின்றது. எனவே அத்தகைய அடக்குமுறை, படிப்படியாக வளர்ந்து, பௌத்ததிற்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டும். பொருளாதார காரணம் காட்டியிருந்தாலும் (விஹாரங்களில் தங்கம் இருந்தது), அத்தகைய நிலை, மக்கள் பௌத்தத்தை பெரிதளவில் ஆதரித்த நிலப்பாடுத் தெரிகிறது. எனவே, திடீரென்று, ஆட்சியாளர்கள், அத்தகைய பிரபமான-மக்கள் மதத்திற்கு எதிராக அடக்குமுறையை ஏவிவிட்டிருக்க முடியாது. ஒரு சைன யாத்திரிகர், யுவான் சுவாங் எழுதியதை வைத்து, இந்தியர்களைக் குறைக்கூறும் இன்றைய இந்தியர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் சைனாவில் பௌத்தம் அவ்வாறு ஒடுக்கப்பட்டதைப் பற்றி பேசுவதில்லை. ஏனெனில், ஹூணர்களோ அல்லது பௌத்தர்களோ அல்லது யாரோ அவ்வாறு வெளியேறி இருந்தால், அவர்கள் இந்தியாவில் நுழைந்திருந்தால், ஏன் என்று ஆராய்ச்சி செய்யவேண்டும். பௌத்தம் இருந்தும், வன்முறை இருந்தது ஏன், எதற்காக அவர்கள் மீது அத்தகைய அடக்குமுறை ஏற்பட்டது என்பதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

வேதபிராகாஷ்
30-09-2009.

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)

மே 12, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – ஹூணர்கள் தாக்கி அழித்தனரா? (9)

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

ஹூணர்களால் பௌத்தம் அழிந்தது (478-637): பிறகு ஹூணர்களால் பௌத்தம் அழிக்கப்பட்டது என்ற கருதுகோள் வருகிறது. மேனாட்டு சரித்திர ஆசிரியர்கள் ஹூணர்களைப் பற்றி கூறுவதாவது: ஹூணர்கள் மத்திய ஆசியாவைச் சேர்ந்த குடிமக்கள். பைஜான்டின் எழுத்தாளர்கள் அவர்களை “ஹெப்தாலைட்டுகள்” – வெள்ளைநிறத்தவர் – வெள்ளை ஹூணர்கள் என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் துருக்கிய-மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நவீன எழுத்தாளர்கள் அட்டிலாவைச் சேர்ந்த ஹூணர்களுக்கும் இந்த ஹூணர்களுக்கும் சம்பந்தம் இல்லை, ஏனெனில் இவர்கள் இரானிய இனத்தைச் சார்ந்தவர்கள். கிரேக்கர்கள்,
சாகர்கள் மற்றும் குஷானர்களைப் போல, அவர்களும் மலைகள், சமவெளிகள் கடந்து இந்தியாவைத் தாக்க வந்தவர்கள் எனத் தெரிகிறது. ஹூணர்களுடன் போரிட்டு குமாரகுப்தனே இறந்ததாக “குப்த சரித்திரம்” கூறுகிறது. 500 க்கு மேலே மேற்கு இந்தியாவை அவர்கள் முழுவதுமாக பிடித்துவிட்டதால், அவர்கள் ஆட்சி புரியவும் தொடங்கி விட்டனர். தோரமானன் மற்றும் அவனது மகன் மிஹிரகுலன் இருவருமே அரசர்களாக ஆட்சி புரிந்தனர். ஹூணர்களின் படையெடுப்பால் “குப்த பேரரசு” மறைந்ததாக சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கின்றனர்.
A. L. Basham, The Wonder that was India, Rupa & Co., New Delhi., 1990. ப.67-69.

Tang Emperor Wuzong

சைன அரசனது அடக்கு முறைகளால், மங்கோலியாவிலிருந்த ஹூணர்கள் வெளியேறி மற்றவர்களைத் தாக்கினார்களா?: உண்மையில், சைனர்களின் அடக்குமுறைகளால் அவர்கள், இந்தியாவிற்கு வர நேர்ந்தது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் எனத்தெரிகிறது. ஆகவே அத்தகைய அடக்குமுறை, பௌத்ததிற்கு சாதகமாக இருந்த சைனாவில், திடீரென்று வந்திருக்கமுடியாது. எனவே இந்தியாவிற்கு வந்தவர்கள் ஹூணர்களா, பௌத்தர்களா அல்லது வேறு மதத்தினரா என்று நோக்கத் தக்கது. ஏனெனில், “ஹுணர்கள்’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவில் நுழைந்ததாக சொல்லப்படும் அவர்கள் பின்பற்றிய மதம் இந்துமதம் தான், ஏனெனில் அவர்கள் சூரியன், சிவன் முதலியவர்களை வணங்கியதாக அவர்களது கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன (Gwalior Stone Inscription of Mihirakula (ca. early 6th century CE). மேலும் விவரங்களுக்கு, கீழே காணவும்.

Toramana coin

ஜைனர்கள் இந்தியா முழுவதும் பலமாக இருந்த நிலையில், ஹூணர்கள் எப்படி பௌத்தர்களை மட்டும் தாக்கியிருக்க முடியும்?: ஹூணர்கள், பௌத்தர்களைத் தாக்கி அழித்தார்கள் என்பதில், பல கேள்விகள் எழுகின்றன:

*மேலும், அதேகாலத்தில், மேற்கு இந்தியாவில் இருந்த பலமான மதம் ஜைனம் ஆகும். பிறகு எப்படி, ஹூணர்கள் ஜைனர்களை விடுத்து, பௌத்தர்களை  மட்டும் குறிவைத்திருக்க முடியும்?

*“ஹிந்துத்வா-அரசர்கள்” குப்தர்களைத் தாக்கி அவர்களது பேரரசையே
மறையச்செய்திருக்க முடியும்?
*ஒருவேளை அவர்கள் ஜைனர்களாக இருப்பார்களோ? ஏனனில், அவர்களது செயல்கள் ஜைனத்திற்குத்தான் ஆதரவாக உள்ளது.

*ஒருவேளை, ஹூணர்களும், ஜைனர்களும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திகொண்டு, இந்தியாவைத் தாக்கியிருக்கக் கூடுமோ?

* 712ல் அரேபிய படையெடுப்புத் தொடங்குகின்றது. அவர்களும் ஜைனர்களை விட்டு வைத்திருக்க முடியாது.

* பிறகு வரும் “ஆதிசங்கரரும்” ஜைனர்களை கண்டுகொள்ளாமல், பௌத்தத்தின் மீதுதான் குறியாக இருக்கிறார்!

இதென்ன வேடிக்கை? எப்படி எல்லோருமே ஜைன-அபிமானிகளாக உள்ளார்கள்?
நிச்சயமாக இங்கு ஒரு “சரித்திர புதிர்” உள்ளது. அதாவது, சரித்திர ஆசிரியர்கள் செய்துள்ள புரட்டு வேலைத் தெரிகிறது.

Kanishka, Huvishka coins

தோராமானன், மிஹிரகுலன் தேதிகளை ஆங்கிலேயர் மாற்றியது: தோரமானன், மிஹிரகுலன் என்ற பெயர்கள் ஐரோப்பியர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது தெரிகின்றது. ஏனெனில், ஹூணர்கள் என்றாலே அவர்களுக்கு பயம், அதிலும் அட்டிலா என்பவனுடைய பெயரைக் கேட்டால், ஐரோப்பிய குழந்தைகள் சிறுநீர் விட ஆரம்பித்துவிடும் (Count Dracula in Bram Stoker’s novel Dracula claims to be descended from Attila: “What devil or what witch was ever so great as Attila, whose blood is in these veins?”). அவர்களது நாகரிகத்தை அழித்தவர்கள் என்று ஹூணர்கள் (Huns) மற்றும் வாண்டல்கள் (Vandals) என்று இரு மக்கட்பிரிவுகளைக் குறிப்பிடுகின்றனர் (vandal, vandalize, vandalism என்றால் தெரிந்திருக்கும்). ஐரோப்பா, மத்தியதரைகடல் நாடுகள் அவர்களால் பாதிக்கப் பட்டதால், இந்தியாவும் அதே காலத்தில் பாதிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆகவே, எப்படியாவது ஹூணர்களை இந்திய சரித்திரத்தில் நுழைக்கவேண்டும். அதே நேரத்தில் இந்திய காலத்தையும் குறைக்கவேண்டும் என்று ஆங்கிலேய பண்டிதர்கள் இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ராஜதரங்கிணியில் அத்தகைய பெயர்கள் வருவது அவர்களுக்கு வியப்பாகியது.

Rajatarangini Kalhana
ஆனால், கல்ஹணரின்படி, அவர்களது, தேதிகள் இவ்வாறு இருந்தன: ராஜதரங்கினியின் படி, அரசனின் பெயர்,        ஆண்ட காலம்,        காஷ்மீர சகாப்தத்தின்படி      மற்றும்  நடப்பு சகாப்தத்தின்படி இவ்வாறு இருக்கின்றன:

ஆண்ட அரசன் ஆண்டுகள் கல்ஹணர் தேதி இக்காலத்தவர் கொடுக்கும் தேதி
அசோகன் 48 1628-1676 1448-1400
ஜலௌகன் 56 1675-1732 1400-1344
தாமோதர-II 50 1732-1782 1344-1294
ஹுஸ்க, ஜுஸ்க, கனிஸ்க 60 1782-1842 1294-1234
அபிமன்யு 52 1842-1894 1234-1182
கோநந்த-III 35 1894-1929 1182-1147
விபீஷண 54½ 1929-1983½ 1147-1092½
இந்திரஜித் 35½ 1983½-2019 1092½-1057
ராவண 30 2019-2049 1057-1027
விபீஷண-II 35½ 2049-2084½ 1057-991½
கின்னர/நர 32084½-2124 991½-952
சித்த 69 2124-2184 952-892
உட்பலக்ஸ 30½ 2184-2214 892-861½
ஹிரண்யாக்ஸ 37½ 2214-2252 861½-824
ஹிரண்யகுல 60 2252-2312 824-764
வசுகுல 60 2312-2372 764-704
மிஹிரகுல 70 2372-2442 704-634
பக 40 2442-2482 634-591
கஹிதிநம்தன 30 2482-2512 591-564

*அசோகன் வருகிறான், ஆனால் பௌத்தன் அல்ல, ஜைனன்!
* அவனது தேதியோ 1448-1400 BCE!
*மிஹிரகுலன் உள்ளான் ஆனால், அவனின் தந்தை பெயர் தோரமானன் அல்ல!
*அவனது தேதியோ 704-634 BCE!
பிறகு எப்படி மாற்றுவது, தமது இச்சைக்கேற்றவாறு கணக்கை சரிகட்டுவது, தேதிகளை திருத்துவது, சரித்திரத்தைப் புரட்டுவது?

Hultzsch and Cunningham

ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் தேதிகளை மாற்றியமைத்தது: இதோ, திருவாளர் இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch), ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A. Cunningham), பேராசிரியர் வில்சன் (H. H. Wilson), டா. ஃபிலீட் (John Faithful Fleet) முதலியோரின் குழுமம் எப்படி வேலை செய்தது என்று விளக்குகிறார். ராஜதாரங்கிணியைப் பற்றி இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) எழுதும்போது, இந்த விவரங்களைத் தருகிறார், “ராஜதரங்கிணியில் கல்ஹணரின் காலக்கணக்கியலை மாற்றியமைப்பதைப் பற்றி, பேராசிரியர் வில்சன் (H. H. Wilson) கருதியபோது தனது கருத்துகளை சுருக்கக்குறிப்பாக இணைத்திருந்தார். ஜெனரல் சர். ஏ. கன்னிங்ஹாம் (A.Cunningham) 1843ல் தனது, “காஷ்மீரத்தின் பழங்காசுகள்” என்ற கட்டுரையில் அதனை பயன்படுத்தினார் (நாணயவியல் கால அட்டவணை, பகுதி.6, ப.1-38; Numismatic Chronicle, Vol.VI, pp.1-38) இருப்பினும் முந்தைய காலத்திற்கு திருப்திகரமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு மிஹிரகுலனைப் பொருத்தவரையிலும் அத்தகைய முடிவுகள் கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ராஜதரங்கிணியின்படி பெற்ற தேதி 2397 கலியுக சம்வத்ர ஆண்டு அல்லது B.C. 704; மற்றும் அவனது ஆட்சி காலம் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு முடிகின்றது. பேராசிரியர் எச். எச். வில்சன் இந்த தேதியை 200 B. Cக்குக் குறைத்து கொண்டார்.  (loc.cit, p.81). ஆனால் சர். ஏ. கன்னிங்ஹாம் A.D 163 ல் வரவேண்டும் என்று முடிவெடுத்தார் (loc.cit, p. 18). “இருப்பினும் புதியதாக கண்டுபிடித்த கல்வெட்டுகளின் மூலம், டா. ஃபிலீட் (John Faithful Fleet) உண்மையான தேதி ஆறாவது நூற்றாண்டின் ஆரம்பித்தால்தான் வரும் எனக் கொண்டு, அவனது ஆட்சியின் ஆரம்பத்தை A. D 515ல் வைத்து, 530 A.Dல் முடியவேண்டும் எனத் தீர்மானித்தார். ஏனெனில் அந்த வருடத்தில்தான் அவன் அதிகாரம் இழந்து காஷ்மீரத்திற்கு சென்று அங்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். “இது கல்ஹணரின் முன்பு குறிப்பிட்ட விவரங்களில் எப்படி மாறுதல்களை செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுயதுடன் ஒத்துப்போகிறது. அதுதான் நமக்கு குறிப்பிட்ட திட்டத்தைக் கொடுப்பதால், அதிலிருந்து தேதிகளை முன்னும் பின்னுமாக எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இதே மாதிரி கல்ஹணர், கனிஸ்கனுடைய காலத்தைப் பற்றிக் குறிப்பிடுவதையும் நோக்கத் தக்கது. தரங்கம்-I, வரி.18ன் படி, துரக்ஸ அரசனான கனிஸ்கன், கோநந்தன்-III, அரசாட்சிற்கு வருவதற்கு முன்பு B.C 1182ல் இருந்ததாக கல்ஹணரின் கூற்றுப்படி வருகின்றது. ஆனால், இது நமது கணக்கின்படி, உள்ள சாத்தியக்கூறுகளின்படி 77 A.Dக்கு வரவேண்டும். அதே மாதிரி அசோகனுடைய தேதியும் கல்ஹணரின்படி (தரங்கம்-I, வரி.191) முன்னதாக உள்ளது. ஆனால், கன்னிங்ஹாமின் படி, அந்த தேதி இப்பொழுது B.C 260க்கு வருகின்றது (Corp.Inscr.Indica, Vol.I, Preface, p.VII).

H H Wilson and J F Fleet

இப்பொழுது அத்தகைய தேதிகளை ஏன் மாற்றியமைக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில்:. காஷ்மீர அரசர்களின் வம்சாவளியில் குறிப்பிட்டவர்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்ததாக பெயர்கள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் அவர்கள் எல்லாம், மூதாதையர் மற்றும் அவர்களின் உறவினர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும், ஏனெனில் அவர்கள் அரசாளவில்லை. ஆகவே, நமது கணக்கின்படி சில அரசர்களை எடுத்துக்கொண்டாலும், விட்டாலும், நடுவிலே குறை ஏற்பட்டாலும் அத்தகைய அத்தியாவசம் உள்ளதால், அவர்களை வம்சாளி பட்டியிலிருந்து நீக்கவேண்டும்”.

மேலே இ. ஹுல்ட்ஜ் (E. Hultzsch) கொடுத்த வாக்குமூலம் படி, நாம் தெளிவாக அறிவதவது யாதென்றால்:

  1. மோஹிலோகுலோ” “மிஹிரகுலன்ஆனது: ராஜதரங்கிணியின் மிஹிரகுலன் ஐரோப்பிய மனதுக்கு மிகவும் ஒத்துப்போகிறது. ஏனெனில், ராஜதரங்கிணியில், அவனைப் பற்றிய கதை, “அடில்லாவை/டிராகுலாவை” ஒத்துபோகிறது! ஒருபெரிய கல்லை, ஒரு மிகவும் கற்புள்ள பெண்தான் நகர்த்தமுடியும் என்றபோது, “சந்திரவதி” என்ற பெண் நகர்த்துகிறாள், ஆனால் மற்ற பெண்களால் முடியவில்லை. இதனால் எல்லா பெண்களையும் அவர்களது கணவன்மார்கள், சகோதரர்கள், உறவினர்களுடன் கொன்றுக் குவிக்கிறான்! [இதைத் தவிர பல கொடுமைகளைப் புரிகிறான். விவரங்களுக்கு ராஜதரங்கிணியைப் படிக்கவும்] ஆகவே “மோ-ஹி-லோ-கு-லோ” யுவான் சுவாங் குறிப்பிட்டப்படி ஒரு “மிஹிரகுலன்” கிடைத்துவிட்டான்! அதுவும் ஹூணரைப்போல கொடுங்கோலனாக இருக்கிறான்!
  1. தேதிகளை மாற்றியது: தேதிகள் உதைக்கிறது: எனவே  தேதிகளை மாற்ற முடிவு செய்கிறார்கள், மாற்றவும் செய்தார்கள். தேதிககளை எங்களுடைய வச்திக்காகக் குறைக்கிறோம் என்று எவ்வளவு நாஜுக்காக சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
  1. அரசர்களையே வம்சாளியிலிருந்து எடுத்து மறைத்தது: பல அரசர்கள் இடையில் பிரச்சினை செய்கிறார்கள்! அதாவது அவ்வாறு காலத்தைக் குறைக்கும்போது, இடையில் அரசாட்சி செய்த அரசர்களை என்ன செய்வது? ஒரே வழி, அந்த அரசர்கள் இல்லவே இல்லை என்று சொல்வது! எனவே பல அரசர்கள் இந்திய சரித்ததரத்திலிருந்து மறைந்து விட்டார்கள்!
  1. ஜைனஅசோகனை பௌத்தஅசோகனாக்கியது: பௌத்தமதமே “அசோகனின்”மீது ஆதரமாக உள்ளது. ஆனால், ராஜதரங்கிணியின் அசோகனோ ஒரு ஜைன மதத்தவனாக விஹாரங்களைக் கட்டியதாக உள்ளது. அதிலும் காஷ்மீர அரசனாக உள்ளான், மௌரியன் அல்லன்! ஆகவே, அந்த அசோகனையே மறைத்துவிடுவது! எனவே, ஒரு புதிய அசோகன், பௌத்தமத காவலனாக “ஒரு அசோகன்” உருவாக்கப்படுகிறான். கல்வெட்டுகள் கிடைக்கவேண்டுமே? உள்ளவையெல்லாம் “தேவநாம்பியாதிஸ்ஸா / தேவநாம்பிரிய” என்றுதான் உள்ளது. எங்குமே “அசோகன்” என்ற பெயர் இல்லை! 1915 வரை இக்கல்வெட்டுகள் எல்லாம் அசோகனுடைது என்று உறுதியாகத் தெரியாது. 1915ல்தான் மஸ்கி கலவெட்டு கண்டுபிடிக்கப்படுகிறது, அதில் “தேவநா பியா” கூட “அசோக” என்ற வார்த்தையும் உள்ளது. வித்தியாசத்தை நன்றாக கவனிக்கவும். மேலும், இக்கல்வெட்டு மகதத்தில் அல்லது மௌரிய பேரரசு எங்கு வலுவாக இருந்ததோ அங்கு கிடைக்காமல், ஜைனம் ஆதிக்கம் செய்த பகுதியில் கிடைத்திருப்பது நோக்கத்தக்கது.
  1. 700 வருடகொள்ளுகொல்லுதாத்தாவை மகனாக்கியது!; இனி “தோரமானன்” என்பவனைக் கவனிப்போம். ராஜதரங்கிணியின்படி, 81வது அரசன் ப்ரவர்சேன / ஸ்ரேஸ்டஸேன / துஞ்ஞீனா என்பவன் ஆவன். இவனது இரண்டு மகன்கள் ஹிரண்யா மற்றும் தோரமான. ஹிரண்யா தோரமானனை சிறையில் அடைக்கிறான், அவன் சிறையிலேயே இறக்கிறான். அவன் வாழ்ந்த காலம் 16 BCE முதல் 14 CE வரை. ஆகவே, இவனுக்கு காலத்தால் 700 வருடங்களுக்கு முன்பு மிஹிரகுலன் (704-634 BCE) இருக்கிறான்! இருப்பினும் அவனை, இவனுக்கு மகனாக்குகிறார்கள்! என்னே சரித்திரத்தின் கோலம்?

Mihirakula - Vishnubakta 502-530 CE

  1. சௌரன்விஷ்ணு பக்தனாகிசிவபக்தனாகியது: பௌத்தர்களுக்கு எதிராக இருக்கவேண்டும் என்றால் ஒருவன் சைவனாக இருக்கவேண்டும். எனவே அடுத்தது, இந்த “மிஹிரகுலனை” சைவனாக்கும் படலம் ஆரம்பிக்கிறது. இதற்கு குவாலியர் கல்வெட்டை உபயோகப்படுத்துகின்றனர். அதில்  வரும் தோரமானன், மிஹிரகுல என்ற பெயரோடு ஆண்டதாக உள்ளது. மேலும் அவன் வழி வந்த மகன், பெயரன் முதலியோர்களின் பெயர்கள் மாத்ரிதல, மாத்ரிதாஸ, மாத்ரிசேத என்றுள்ளன. மேலும் அவன் சூரியவழிபாடு செய்வதுபோல உள்ளது. ஒரு பதக்கத்தில் ஒரு மிஹிரன் நான்கு கைகளுடன் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணுவை கும்பிடும் மாதிரி சித்தரிக்கப்பட்டுள்ளது (Sardonyx seal representing Vishnu with a worshipper, Afghanistan or Pakistan, 4th-6th century CE. The inscription in cursive Bactrian reads: “Mihira, Vishnu and Shiva”. British Museum). என்ன செய்வது, எப்படியாவது சரிகட்டவேண்டுமே? “தோரமானன் என்பவன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்பதனை “தோரமானனின் மகன் மிஹிரகுல என்ற பெயரோடு” என்று மொழிபெயர்த்து, மிஹிரகுலனை தோரமானனுக்கு மகனாக்குகிறார்கள்! அதாவது, சூரியபக்தன், விஷ்ணு பக்தனாகி, பிறகு சிவபக்தனாகி விடுகிறான்!
  1. ஹூணனான இந்தியனும், ஹூணமாகிய இந்திய சரித்திரமும்: ஹூணன் என்றால் மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்க வேண்டும் இல்லையென்றால் ஈரானிலிருந்து வந்திருக்க வேண்டும் (மேலே விளக்கப்பட்டுள்ளது). “மிஹிர் / மிஹிர / மெஹர்” (= சூரியன்) என்ற பெயர் இருக்க வேண்டும். ஆகவே, இத்தகைய ஜோடனை செய்யப்பட்டது. ஆனால் பாவம் காஷ்மீரத்திலேயே கல்ஹணருக்கு முன்பு “பத்மமிஹிர” (தரங்கம்.1-18) என்பவர் இருந்ததை கவனிக்கவில்லை! இருந்தாலும், அவரை எடுத்துவிட்டால் போயிற்று, என்பார்கள்! [முன்பு வராஹமிஹிரரையும் ஈரானிலிருந்துதான் வந்தார் என்றார்கள்] ஒரு இந்திய அரசனை, அதிலும் காஷ்மீரத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து சரித்திர-ரீதியாக இருந்த அரசனை மறைத்து இல்லாத ஒரு மிஹிரகுலனை உண்டாக்கி, அவனை “ஹூணனாக்கி”, ஹூணனாக இந்தியாவில் புகுந்து, தோற்றபிறகு காஷ்மீரத்திற்கு அனுப்பி வைக்கப் படும் ஒரு நிலையை இந்திய சரித்திரத்தில்தான் காணலாம்.

Devanampiya Tissa Asoka and Lanka

சித்தாந்தம் போன்ற காரணிகளால் இந்திய சரித்திரம் பாதிக்கப்படுகிறதா?: ஆராய்ச்சி என்று மாய்ந்து-மாய்ந்து இவ்வாறு சரித்திரத்தை புரட்டுகிறார்கள் தலைகீழ் மாற்றங்கள் செய்கிறார்கள், ஆனால், இத்தகைய மோசடிகளை எந்த பிரபல (eminent), முற்போக்குள்ள (progressive), பரந்த-விரிந்த மனதுள்ள (broad-minded), செக்யூலரிஸ (secular), மார்க்ஸிஸ (Marxist) மற்றும் எந்த சரித்திர ஆசிரியருக்கும் தெரியவில்லை! இத்தகைய மோசடிகளுடன், இந்திய சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. இருப்பினும், சில சரித்திர ஆசிரியர்கள், உண்மைகளை அங்கங்கு சொல்லியிருக்கிறார்கள்: “யசோதர்மன் மந்டசோர் கல்வெட்டில் மிஹிரகுல மற்றும் ஹூணர்கள் இருவரையும் குறிப்பிட்டாலும், இருவருன் தனி என்பதனை அறியும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” (ப,197).
R. C. Majumdar and A. S. Pusalkar, A History of the Indian People, Lahore, 1946, p.197, 196 etc.

“மிஹிரகுலன் ஒரு ஹூணன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” (ப.196).

இப்பொழுது, கே.டி. சேத்னா என்பவரும், இந்த விவரங்களைத் தருகிறார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi,
2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese
chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial
Guptas.
இவர் எடுத்துக்காட்டுவதாவது, மிஹிரகுலனின் காலம் 540 CE இல்லை, BCEல்தான் வரும், யுவான் சூவாங் காலத்தில் குப்தர்கள் இருந்திருக்க முடியாது;

அசோகனின் தேதி மாற்றப்பட்டது: அசோகனது காலம் சுமார்.1000 BCE வரை செல்லும்;
K. D. Sethna, Ancient Indian in New Light, Aditya Prakashan, New
Delhi, 1997. ஆங்கிலேயர்களின் காலக்கணக்கியலில் பல முரண்பாடுகள் உள்ளதை
எடுத்துக்காட்டி, இதில் இவர் கொடுக்கும் தேதிகள்:
950-914 BCE – reign of Asoka, thus Pushyamitra came after him.
221-181 BCE – Kumaragupta
181-169 BCE- Skandagupta
140 BCE – Toramana invaded Malva from Kashmir
137 BCE – Toramana died
100 BCE- Mihirakula came to power

இவை இந்திய பாரம்பரிய காலக்கணக்கியல் மற்றும் மேனாட்டு காலக்கணக்கியல், இரண்டிற்கும் மாறுபட்டதாகும். குப்தவசத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனை விடுத்து மௌரியவம்சத்தின் சந்திரகுப்தனை, அலெக்ஸ்சாந்திரன் காலத்துடன் வைத்ததில்தான் இந்திய சரித்திரத்தில் பல குளறுபடிகள் நேர்ந்தன. இதனால் 800 முதல் 1200 வருடங்கள் வரை பல முக்கிய தேதிகளில் வித்தியாசம் வந்துகொண்டே இருக்கும். மேலும், இந்த தேதிகள் எல்லாம் 70 முதல் 150 வருடங்களுக்கு முன்புதான் ஆங்கிலிலேயர்கள் தோராயமாக என்று வைத்துக்கொண்டு circa என்று குறிப்பிட்டு வந்தனர். ஆனால், circaவை விட்டுவிட்டு, நிலைநிறுத்திய தேதிகளைப் போல, பிறகு உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கிருஷ்ணமாச்சாரியார் தமது “இந்திய சமஸ்கிருத வரலாறு” என்ற நூலில் எவ்வாறு ஆங்லிலேயர் தேதிகளைக் குறைத்தர்கள் என்று விவரமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். ஆனால், இவை ஆராய்ச்சிசெய்யும் மாணவர்கள் மற்றும் சிலருக்குத் தான் தெரிய வாய்ப்புள்ளது. தெரிந்தாலும் மற்றவர்கள் குறிப்பிடுவதில்லை.
M. Krishnamachariar, History of Classical Sanskrit Literature, Motilal Banarasidas, New Delhi, 1993.
D. S. Triveda, Indian Chronoloy, Bharatiya Vidhya Bhawan, Bombay, 1958.
கோட்டா வெங்கடாசலம் என்பவர் ஆங்கிலேயர்களின் பல சரித்திர குளறுபடிகளை, திரிபுகளை, ஏன் கள்ள ஆவணங்கள் தயாரித்தது முதலியவற்றை எடுத்துக் காட்டி பல புத்தகங்களை 1950களுள் வெளியிட்டார். இவர் R. C. Majumdar, K. D. Sethna முதலியோருடன் இதைப் பற்றி கடித ததடர்பும் கொண்டிருந்தார். பிறகு, பொள்ளாச்சி மஹாலிங்கத்தின் ஆரார்ச்சி நிறுவனமும் அதன் அடிப்படையிலேயே
சென்று, வானவியல் ரீதியாக தேதிகளை நிறுவ முயற்ச்சி செய்தது.

வேதபிராகாஷ்
29-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

12-05-2017

Gwalior inscription of Mihirakula

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – பிராமணர்கள் காரணமா? (8)

A Brahmin attacked Buddha-2

பிராமணர்களின் கத்திபௌத்தர்களக் கொன்றது, விஹாரங்களை இடித்ததுபௌத்தத்தை ஒழித்தது முதலியன: சமீப காலத்தில், இத்தகைய கதைகள் “சரித்திரங்கள்” போன்று பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ பிராமணர்கள்தாம் தமது குரூர, கொடூர வஞ்சனைகளுடன் பௌத்தர்களை கொன்று குவித்து, பௌத்தத்தையே இந்தியாவிலிருந்து அழித்து விட்டனர், ஒழித்துக் கட்டினர், மறையச் செய்து விட்டனர் என்று அட்டகாசமாக எழுதி வருகிறார்கள். ஆகவே அதில் என்ன உண்மை உள்ளது என்பது ஆராய வேண்டியுள்ளது. ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய கதைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பொதுவான பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு பல நேரங்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது. படித்தவர்களும் மற்றவர்களும்கூட இதனை நம்பி அலச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று அவர்கள் அறிவதில்லை.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன்: பௌத்த-விரோத நான்கு கொடூரர்கள்:  புஸ்யமித்திரன், மிஹிரகுலன், சசாங்கன் மற்றும் சுதன்வன் என்று நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தாம் பௌத்தத்தை இந்தியாவில் வேரோடு கருவறுத்தவர், பௌத்தர்களைக் கொன்றுக் கொவித்தவர், பௌத்த வழிபாட்டு ஸ்தலங்கள், ஸ்தூபிகள், விஹாரங்களை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள், என்று இன்றளவிலும் சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்கள், “புதிய” / “லே” பௌத்தர்கள், அம்பேத்கரைஸ்டுகள், தலித் அறிஞர்கள், என பல குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. பிறகு அவர்கள் பிராமண அரசர்கள் என்பதனால், பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் தூண்டுதலால்தான் அவ்வாறு அட்டூழியம் செய்தனர் என்ற கருதுகோள் வைக்கப்படுகிறது. புதியதாக இப்பொழுது “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) ஒன்று “இஸ்லாமிய கத்தி” (Sword of Islam) போன்று தயாரித்து எழுதி வருகின்றனர், படம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலங்களைக் கொடுக்காமல் ஒருவர் சொன்னதைத் திரும்ப சொல்லுவது, குறிப்பிட்டதை திரும்ப குறிப்பிடும் ரீதியில் (Quoted-quote methodology) எழுதி-பேசி செயல்பட்டு வருகின்றனர்.
Why did Buddhism disappear from South Asia? Brahmin atrocities that destroyed Buddhism in the Subcontinent, Posted on February 3, 2008 by Moin Ansari
http://rupeenews.com/2008/02/03/why-did-buddhism-disappear-from-the-south-asian-subcontinent-summary-of-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

http://www.lankaweb.com/news/items/2013/01/26/why-did-buddhism-disappear-from-south-asia-brahmin-atrocities-that-destroyed-buddhism-in-the-subcontinent/

Pushyamitra Sunga accused of destroying Buddhism

நவீன பௌத்தர்களின் எழுத்துகளுக்கு ஒரு உதாரணம், இதோ. மேற்சொல்லப்பட்ட உதாரணங்களுடன், புதியாதாக சேர்க்கப்பட்டுள்ளது: ஸ்ரவஸ்தியின் அரசன் விரூதகன் 90,900,000 சாக்கியர்களை கொன்றுபோட்டான், அதனால் ரத்த குளங்களையே உண்டாக்கினான்.
Kyotsu Hori (Complier) & Jay Sakashita (Ed.), Writings of Nichiren Shonin, Doctrine.3, Hawaii, USA, 2004, p.122.
http://books.google.co.in/books?id=q2ADA_3Q4PAC&pg=PA122&lpg=PA122&dq=sasanka+kill+buddhists&source=bl&ots=gzpv06hoPX&sig=mDM3s8GObnp2VA0aUO2PnABiHcU&hl=en&ei=ESe7SoeYCsrUlAePuJSkDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4#v=onepage&q=&f=false

சித்தாந்தவாதிகளின் சரித்திரம் (Ideologized history): குறிப்பாக வெகுஜன வகுப்புவாதத்தை / அடிப்படைவாதத்தை (majority communalism / fundamentalism, read as Hindu communalism / fundamentalism) எதிர்க்கும் போக்கில் மார்க்ஸீய சரித்திர ஆசிரியர்கள் (Marxist historians) என்று கூறிக்கொள்ளும், கர்கி சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுவதாவது, “ஹிந்து ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையினைப் பற்றி ஒரு கட்டுக்கதை மிகவும் சாமர்த்தியமாக ஊக்குவிக்கப்படுகிறது. வாருங்கள், இரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கு செல்வோம். திவ்யவதன என்ற இரண்டாம் நூற்றாண்டு நூல் புஸ்யமித்திர சுங்கன் ஒரு பெரிய பௌத்தமத தண்டனையாளன் (Buddhist persecutor) என கூறுகிறது. சிலுவைப்போரைப் போன்று (crusading army) ஒரு பெரிய சேனையுடன் சென்று, அவன் ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்.
அந்த அழிவு சகல, இக்காலத்தைய சியால்கோட் வரையிலும் சென்றது. அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான். இது மிகவும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது என்றாலும், புஸ்யமித்திரனுக்கும் பிக்குகளுக்கும் இடையே இருந்த கொடிய பகைமையை மறுக்கமுடியாது”.
Gargi Chakravartty: “BJP-RSS and Distortion of History”, in Pratul Lahiri, ed.: Selected Writings on Communalism, People’s Publishing House, Delhi 1994, p.166-167.
http://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/pushyamitra.html

A Brahmin attacked Buddha

இங்கு குறிப்பாக எதையும் சொல்வதில்லை. “ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்றுதான் உள்ளது. உடனே, மற்றொருவர் அதை குறிப்பிட்டு “பல ஸ்தூபங்களை அழித்தான், விஹாரங்களை தீயிட்டுக் கொளுத்தினான், பிக்குகளைக் கொன்றான்” என்று எழுதுவார். அடுத்த இன்னொருவர், முன்னிருவரைக் ஆதாரமாகக் குறிப்பிட்டு, “ஆயிரக்கணக்கான”, “பல ஆயிரக்கணக்கான” என்று நீண்டுகொண்டே இருக்கும்.
Swami Dharma Theertha, The Menace of Hindu Imperialism, Har Bhagwan Happy Home Publication, Lahore, 1946. See chapter.X, “How Brahmanism killede Buddhism, pp.94-110.
Ahir, V. T. Rajasekhar முதலியவர்களின் புத்தகங்களைப் பார்க்கவும்.
மேனாட்டு/ஆதிக்கசக்திகளான ஆங்கிலேயர்களும் தமது பங்கை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, இ. பி. ஹேவல் என்பவர் அத்தகைய குறிப்புகளைத் தந்துள்ளார், “The earliest of these Saiva revivalists was Maikka-Vacagar, minister of one of the Pandyan kings of Madura about the sixth century A. D. He came to be known as the Hammer of the Buddhism”.
E. B. Havell, The History of Aryan Rule in India from the earliedst times to the death of Akbar, (1918),  K.M.N. Publishers, New Delhi, 1972.

இக்கதைகள்-கட்டுக்கதைகளின் தோற்றம்: திவ்யவதன, அசோகவதன போன்ற பௌத்த மத நூல்கள் (இடைகாலம் வரை திருத்தி எழுதப்பட்டவை-இவையெல்லாம் பல அதிசயங்கள், இயற்கைக்கு புறம்பான நிகழ்ச்சிகளைக் கொண்ட விவரணங்களைக் கொண்ட நூல்கள்), பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) என்ற சைன பௌத்த துறவியின் இந்திய யாத்திரைக் குறிப்புகள். தாரநாத என்ற திபெத்தின் பௌத்த பிக்குவின் நூல். குறிப்பாக யுவான் சுவாங் குறிப்புகளை வைத்துக் கொண்டுதான் அக்கதைகள் வளர்ந்துள்ளன. தங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பாதகமானதை விடுத்து, தமது சரக்கையும் சேர்த்து இவ்வாறான கதைகளை புனைந்துள்ளனர். அக்கதைகள் “மிகைப்படுத்திக் கூறப்பட்டது” என்றாலும், “பௌத்தம் இந்தியாவில் மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டது” என்பதனால், அது அவ்வாறு “மறைந்து / குறைந்து / தேய்ந்து விட்டத”ற்கு காரணம் கற்பிக்க ஒன்று இருக்கவேண்டும் என்பதினால், இத்தகைய கட்டுக்கதைகள் உற்சாகத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், “இஸ்லாமிய கத்தி”யை (Sword of Islam) மறைக்க, மறக்க இந்த தோற்றுவிக்கப்பட்ட “பிராமண கத்தி” (Brahmin sword or Sword of Brahmins) தாராளமாக உதவுகிறது. குற்றங்களை மறந்து மறைக்கும் சித்தாந்தவாதத்திற்கும் (negationaism) உதவுகிறது.

தினார்களா, தங்க நாணயங்களா? கர்கி சொல்கிறார், “அங்கு அவன் யார் ஒரு பௌத்தனின் தலையை எடுத்து வருகிறானோ அவனுக்கு 100 பொன் அளிக்கப்படும் என்று அறிவித்தான்”, என்று. இன்னொரு மொழிபெயர்ப்பிலேயோ (Beal, Watters etc), “ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள்
தரப்படும் என்று அறிவித்ததாக….” கூறப்படுகிறது.
http://projectsouthasia.sdstate.edu/docs/HISTORY/PRIMARYDOCS/FOREIGN_VIEWS/CHINESE/XuanZang/BookIV.htm
இன்னொருவர் சொல்கிறார், “100 தங்க நாணயங்கள் அளிக்கப் படும்” என்று. எவ்வாறு, தீனார், தங்கமாகி, தங்க நாணயங்களாக மாற முடியும்? தீனார்கள் சுங்க காலத்தில் இல்லை. ஆகையால் தினார்கள் இந்தியாவில் வழக்கில் இருந்த காலத்தில், இது எழுதப்பட்டது தெரிகிறது. அதாவது, பிற்கால இடைசெருகல் எனத்தெரிகிறது.

விஹாரத்தைக் கட்டிய புஸ்யமித்திர சுங்கன்: திலாதக/திரா-சக/தீலா-சாக்ய என்ற விஹாரம் பிம்பிசாரன் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசன் கட்டினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கடைசி அரசனோ புஸ்யமித்ர சுங்கன்! பிறகு எப்படி விஹாரங்களை இடிப்பவன், விஹாரத்தைக் கட்டியிருக்க முடியும்?
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.II, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.106-107.
இது மாதிரி, பல முரண்பாடுகள் யுவான் சுவாங் வர்ணனைகளில் உள்ளன.

பௌத்த அமைச்சர்களைக் கொண்ட புஸ்யமித்திர சுங்கன்: புஸ்யமித்திரன் அந்த அளவிற்கு பௌத்த-விரோதியாக இருந்திருந்தால், பௌத்த அமைச்சர்களைக் கொண்டிருக்க மாட்டான். உண்மை சொல்வதானால், அவன் காலத்தில்தான் பௌத்தம் நன்றாக செழுமையாக இருந்தது என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. கல்வெட்டுகள் சொல்லும் புஸ்யமித்திரன் நினைவு சின்னங்களை எழுப்புகிறான்: சாஞ்சி மற்றும் பஹ்ருத் முதலிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் இவன் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு, பஹ்ருத்தில் உள்ள பௌத்த கல்வெட்டு, “சுங்க அரசன்….தோரணம் மற்ற சிற்பங்களுக்கு தானம் கொடுத்து உருவாக்கினான்” (Suganaṃ raje… dhanabhūtina karitaṅ toranāṃ silā-kaṅmaṅto ca upaṃṇa)
D.C. Sircar (ed), Select Inscriptions Bearing on Indian History and Civilization, Vol. 1, 2nd rev and enlarged ed, Calcutta: University of Calcutta, 1965: 87.
என்ன இது, பிராமண சுங்கனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா அல்லது, யுவான் சுவாங் தவறாக எழுதி விட்டாரா? மகதத்திலிருக்கும் சுங்கன் பஹ்ரூத் வரை வந்து, பௌத்தர்களின் தலைக்கு தீனார் என்று பிரகடனப் படுத்தியபிறகு, ஏன் இந்த தாராளத்தனம்? எனவே, இக்கதைகளை ஊக்குவிப்பவர்கள் பல உண்மைகளை மறைக்கிறார்கள் எனத்தெரிகிறது.

Decline of Buddhism in India

சுங்ககாலத்தில் பெருகிய விஹாரங்கள்: இலங்கையின் தீப/மஹாவசங்கள் சுங்ககாலத்தை ஒட்டிய தத்தாகமணி (circa 101-77 BCE) காலத்தில் பீஹார், அவத், மால்வா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல விஹாரங்கள் இருந்ததாக குறிப்பிடுகின்றன. ஆகவே, புஸ்யமித்திரன் தண்டித்ததாக திவ்யவதன மற்றும் தாரநாத நூல்களில் காணப்படும் கதைகள் அபத்தமானவையாகும்.
Mitra, R.C. The Decline of Buddhism in India, Santiniketan, Birbhum: Vishva Bharati, 1954, p.125.

அதுமாதிரியே அவன் படையுடன் சென்று அழித்தது, 100 தினார்கள் கொடுப்பதக்க அறிவித்தது முதலியனவும் “தெளிவாக பொய்” எனத்தெரிகிறது “is manifestly false.”
Devahuti, D. Harsha: A Political Study, third revised edition, New Delhi: Oxford University Press, 1998, p.48.

Yuan Chwangs Travels in India

சசாங்கன்: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை (போதி மரம்) அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் களைத்துவிட்டான். என்றெல்லாம் எழுதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காலத்தால் வேறுபட்ட இந்த மன்னர்களை தனது காலத்தைச் சேர்ந்தவர்கள் போன்று யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார்.
K. D. Sethna, Problems of Ancient India, Aditya Prakashan, New Delhi, 2000. See Mihirakula and Yasodharman in the light of Chinese chronology of the Guptas and Hiuen Tsang on the time of the Inmperial Guptas.
“பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” (J. R. A. S., 1893, p.147).

ஆகையால், சசாங்கன், ஒரு சிவன் பக்தனாக, ஆனால் பௌத்தத்தை அடக்குவதாக இருப்பவன் ஆனால், அவன் எவ்வாறு தனது கர்ணசுவர்ன என்ற தலைநகருக்கு அருகில் இருந்த பிரபலமான ரக்தமித்ரிகா விஹாரத்தை விட்டுவைத்தான்? மேலும் யுவான் சுவாங் கூறுவதாவது,கர்ணசுவர்னவாவில் பத்து விஹாரங்கள் மற்றும் 2000 பிக்குகள் இருந்தனர் என்பது.
Thomas Watters, On Yuan Chwang’s Travels in India, London, 1904-05, pp.191-192.

அதே யுவான் சுவாங் சசாங்கன் இறந்த பிறகு, அந்த விஹாரத்தின் செழுமையைப் பற்றி புகழ்கிறார் (மூர்ஸிதாபாத் மாவட்டத்தில், சிரூதி என்ற இடத்தில் அதன் இடிபாடுகள் இப்பொழுது உள்ளன). நிச்சயமாக, அந்த பௌத்த யாத்திரியின் பார்வை மதமோஹத்தில் பாரபட்சத்துடன் நோக்கவைத்துள்ளது என நன்றாகத் தெரிகிறது. பௌத்தர்களும் அத்தகைய மதவிரோதத்துடன், மஹேஸ்வரனும், கௌரியும். திரிலோக்யவிஜய என்னும் பௌத்த கடவுளின் கால்களில் மிதிபடுவதைப்போன்று சித்தரித்துள்ளனர்.
Bratindra Nath Mukherjee, Nationhood and statehood in India: a historical survey, Rajiv Gandhi Foundation, Indian Council of Social Science Research. North Eastern Regional Centre, 2001, p.76.

Adi sankara - accused of for disappearance of Buddhism

சசாங்கனை எதிர்த்த குப்தர்கள்: யுவான் சுவாங் குறிப்பிடுகின்றார், “மோ-ஹி-லோ-கு-லோ (மிஹிரகுலன்) தனது பொழுதுபோக்கிற்காக பௌத்தமதம் கற்க ஆசைப்பட்டான். அதனால் ஒரு தலைச்சிறந்த பிக்குவை தனக்கு பௌத்தத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்படி பணித்தான். ஆனால், பௌத்தர்களோ அவனது வேலைக்காரனையே அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் கொண்ட மிஹிரகுலன், பௌத்தத்தை அழிக்கத் துணிந்தான். அப்பொழுது மகதத்தை ஆண்டு வந்த பாலாதித்யன் என்ற குப்த மன்னன் பௌத்தர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பல உதவிகளை தாராளமாக செய்து கொண்டு இருந்தான். மிஹிரகுலன் அவனது பகுதியின் மீது படையெடுத்தபோது, பாலாதித்யன் அவனை சிறைப்பிடிக்கிறான். ஆனால், தனது தாயாரின் அறிவுரைப்படி அவனை விடுவிக்கிறான். காஷ்மீரத்திற்கு தப்பிச் செல்லும் அவன், அந்த நாட்டு மன்னனைக் கொன்று தனது பௌத்த-விரோத கொள்கையினை தொடங்குகின்றான். 1600 ஸ்தூபிகள் மற்றும் விஹாரங்களை அழிக்கிறான். ஒன்பது பௌத்தர்களைக்கொல்கிறான். ஆனால், அவனது காலம் திடீரென்று முடிகிறது. வானம் கருக்கிறது, பூமி நடுங்குகிறது, பலமான காற்று வீசுகிறது, அவன் நரகத்திற்கு செல்கிறான்”.
Thomas Watters (Trs.), On Yuan Chwang’s Travels in India, Vol.I, 1905 edition, reprint by AES, New Delhi, 1988, pp.288-289.

மிஹிரகுலன் இறந்தது 619 அல்லது 637 எனக்கருதப்படுகிறது. ஆகவே, பௌத்தர்களின் பரம எதிரிகள்-இந்துத்வா-தூக்கிகள் என இப்பொழுது
வர்ணிக்கப்படும் குப்தர்கள் எப்படி பௌத்தர்களுக்கு உதவி இருக்க முடியும்? மேலும் வேடிக்கைகள் பல உள்ளன. அத்தகைய குப்தர்கள் பிராமணர்களின் அடிவருடிகளாகச் சித்தரிக்கப் பட்டாலும், புத்த குப்தன், தத்தகாத குப்தன், பாலாதித்யன் என வரிசையாக வரும் குப்தர்கள் பௌத்தமதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள், வளர்க்கிறார்கள்! “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ அவ்வாறு திடீரென்று குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர். ஹூணர்களின் படையெடுப்பால்தான் அவர்கள் மறைந்து போகின்றனர். பிறகு சுமார் 220 வருடங்கள் ஆண்ட குப்தர்களுக்கும் (320-540), 160 ஆண்டுகள் ஆண்ட தோரமானன்-மிஹிரகுலன்களுக்கும் (478-637) என்ன வேற்றுமை?

சிவனுடைய ஆணையின்படி புத்த கோவில்கள் கட்டும் பிராமணர்கள்: சசாங்கன் புத்தரின் சிலையை எடுத்துவிட்டு, சிவனுடைய சிலையை வைக்க முயன்றான், ஆனால் முடியவில்லை என்று சொல்லும் அதே பத்தியில் மேலே யுவான் சுவாங் குறிப்பிடுவதாவது, “இந்த கோவில் பனிமலையில் இருக்கும் சிவனின் அறிவுரையின்படி, ஒரு பிராமணன் கட்டினான். அருகிலுள்ள குளத்தை அவனது சகோதரன், சிவனின் ஆணையின்படி கட்டினான்”. இதையெல்லாம் முற்றும் உணர்ந்த சரித்திர ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. தமக்கு சாதகமாக இல்லை என்றால் அந்த வரிகளைக் ககறிப்பிட மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிய்ம், சாதாரணமாக யாரும் யுவான் சுவாங் எழுதியதை எடுத்து படுத்து அவ்வாறே உள்ளதா-இல்லையா என்று யாரும் பரிசோதிக்க மாட்டார்கள் என்று! இவ்வாறு பிராமணர்கள், புத்தனுக்காக கோவில்-குளம் கட்டும்போது, எதற்காக அவர்கள் சசாங்கனைத் தூண்டி இடிக்கவைக்கவேண்டும்? இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் நோக்கவேண்டும். சசாங்கனுக்கும், ஹர்ஷவர்த்தனுக்கும் இடையே இருந்த பகைமை அறிந்ததே. ஆகையால் பௌத்தர்கள் ஹர்ஷவர்ததனுடன் கூட்டு சேர்ந்து சசாங்கனுக்கு எதிராக சதி செய்திருக்கலாம். அந்நிலையில் எந்த அரசனும் அத்தகைய குழுவைத் தண்டிக்கத்தான் செய்வான்.
R.G. Basak, The History of North-eastern India Extending from the Foundation of the Gupta Empire to the Rise of the Pāla Dynasty of Bengal, 2nd rev and enl ed, C.A.D. 320-760, Calcutta: Sambodhi Publications, 1967: 154-56.

பௌத்தர்கள், இந்தியா முழுவதும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பாக இருந்தது. நாட்டின் பல இடங்களில் பரவியிருந்த விஹாரங்கள் மூலம், மகதத்தின் அரசியலில் அளவுக்கு அதிகமாகவே தலையிட்டுள்ளனர். ஆகையினால் பௌத்த மௌகாரிகள், பிராமண கௌடர்களுக்குச் சாதகமாக மகதத்திலிருந்து வெளியேற்ற பட்டிருக்கலாம். இதனால், பௌத்தர்களிடையே சசாங்கனுக்கு மதிப்புக் குறைந்தது எனலாம்.
B.P. Sinha, The Decline of the Kingdom of Magadha (Cir. 455-1000 A.D.), Bankipore: Motilal Banarsidass, 1954: 259.

தேவஹூதி என்பவரும் யுவான் சுவாங் கதையினை மறுத்துள்ளார்.
D. Devahuti, Harsha: A Political Study, third revised edition, Delhi:
Oxford University Press, 1998: 48.

வேதபிராகாஷ்
24-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாதிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.