Archive for the ‘Uncategorized’ Category

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (7)

ஜூலை 28, 2016

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (7)

Buddhist female monks in Thailand paintings.5

பெண்களும், பௌத்தமும்: பாலி எழுத்துகளில், வினய மற்றும் இதர சுத்தங்களில் எங்குமே புத்தரின் தனிமட்ட மனிதரின் கவர்ச்சியால் பெண்கள் அதிக அளவில் சங்கத்தில் சேர்ந்தனர் என்பதற்கான எந்தகுறிப்பும் இல்லை.

Eliot, Hinduism and Buddhism, London, 1921, Vol.I, p.248.
I. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen,
Motilal Banarasidas, New Delhi, 1999, p.96.

பெண்கள் பௌத்தத்தில் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், புத்தரைப் பின்பற்ற பெண்கள் வந்தனர் என்பது உண்மை.

Buddhist female monks in Thailand paintings.1

ஜைனத்தின் தாக்கம்: நிச்சயமாக, ஜைன மதத்தின் தாக்கத்தால், பௌத்ததில் பிக்குனிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் எனலாம். மஹாவீரர் தன்னுடைய காலத்திலேயே, தன்னைப் பின்பற்றுபவர்களை நான்கு பிரிவுகளாகக் கொண்டார்:

1.        ஆண்துறவியர்.
2.        பெண்துறவியர்.
3.        புதிதாக மதத்தில் சேர்ந்த ஆண்கள்.
4.        புதிதாக மதத்தில் சேர்ந்த பெண்கள்.

இதோ போல, பௌத்தர்களும், பெண்துறவியரை தமது இயக்கத்தில் / சங்கத்தில் சேர்த்துக்கொண்டனர்.

Buddhist female monks in Thailand paintings.2

புத்தரின் முதல் மறுப்பும், பிற்படி அனுமதியும்: “பிக்குனிகள்” – பெண் பௌத்த சந்நியாசிகளை உருவாக்குவதில் அதிலும், சங்கத்தில் சேர்ப்பதை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தார். ஏனெனில், ஆண்பிக்குகள் வழிதவறி நடந்தால் நடக்கும் நிலையை அறிந்தே அவ்வாறு அம்முறையை மறுத்து வந்தார். இருப்பினும், ஆனந்தா என்ற அவருடைய, மிகவும் விசுவாசமான சீடனின் வேண்டுக்கோளுக்கு இணங்கி பெண்களை பிக்குனிகளாக ஏற்றுக்கொள்வதை ஆமோதித்தார். இருப்பினும் அவர் சொன்னதாவது, “இது சங்கத்தின் காலத்தைக் குறைக்கப் போகிறது” என்பதாகும். இதனால், அவர்களுக்கு மிகவும் கடினமான சட்டதிட்டங்களும், கட்டுப்பாட்டு விதிமுறைகளும் விதிக்கப்பட்டன. “பிக்குனி பதி மோக்க” (பிக்குனியின் மோக்ஷப் பாதை) என்று அவர்களுக்குத் தனியாக விதிமுறைகள் இருந்தன. அவர்களுடைய சென்று-வரும் இயக்கம், வசிக்கும் இடங்கள் முதலியன கவனமாகக் கண்காணிக்கப்பட்டன.

Buddhist female monks in Thailand paintings.3

“பிக்குனி பதி மோக்க” (பிக்குனியின் மோக்ஷப் பாதை) விதிகள்: அத்தகைய கட்டுபாடுகள் (சுல்ல வக்க, வினய பீடிக):

1.        பிக்குனி எவ்வளவு வயதானாலும், பிக்குவிற்கு மரியாதைச் செல்லுத்த வேண்டும், ஆனால், பிக்கு அவ்வாறு பதிலிற்கு செய்யவேண்டியதில்லை.

2.        “வஸ”காலத்தை, பிக்குனிகள், பிக்கு இல்லாமல் கழிக்கக்கூடாது. [பிக்குனி, எந்த காரணத்திற்கும் மடாலயத்தில் பிக்குகள், அவர்கள் இருந்தாலும், இல்லையென்றாலும், வசிக்கும் இடத்திற்கு / இடத்தைக் கடந்து
செல்லக் கூடாது.]

3.        “உபோசதா” சடங்கு எப்பொழுது நடக்கும் என, பிக்குவிடமிருந்து கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும், மற்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் நாளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

4.        “பாவர்னா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குனி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.

5.        “மானத்தா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்படது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குனி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.

6.        “பிக்குனி பதி மோக்க” விதிமுறையின்படி, ஆறு பசித்தியா விதிகளில்
பயிர்ச்சி பெற்ற பிறகு, “உபசம்பதா” முறையிலும் இரண்டு சங்கங்களிலும்
தனித்தனியாக பயிர்ச்சி பெறவேண்டும்.

7.        பிக்குனி, ஒரு பிக்குவை திட்டவோம் நிந்திக்கவோ, தூஷிக்கவோ கூடாது.

8.        பிக்குனி, ஒரு பிக்குவை கடிந்து கொள்ளவோ, குறைகூறவோ கூடாது. மேற்குறிப்பிட்ட “உபோசதா” மற்றும் “பாவர்னா” தேதிகளை குறிக்க பிக்குகளிடன் வாதிடக்கூடாது. ஆனால், பிக்குகள், பிக்குனிகளை கடிந்து கொள்ளலாம்.
[இந்த “பாவர்னா” என்ற முறை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிறகு கிருத்துவத்தில் “பாவ- மன்னிப்புக்கோரல்” (confession) என்றாகியதா எனநோக்கத்தக்கது. பௌத்தத்திலிருந்து, கிருத்துவம் உருவானது, பெறப்பட்டது என பல அறிஞர்கள் ஏற்கெனவே எடுத்துக்காட்டியுள்ளனர்.]

Buddhist female monks in Thailand paintings.4

இதர தடைகள்: பிக்குனிகள், காடுகளில் வசிக்க அனுமதி அளிக்கப்படவில்லை, ஆனால் வெளிப்புற வீடுகள் மற்றும் ஆஸ்ரமங்களில் வசிக்கலாம். குளிப்பதற்கு, அலங்கார பொருட்கள் உபயோகிப்பதற்கு பல தடைகள் இருந்தன. பிக்குகள் மற்றும் பிக்குனிகளுக்கு இடையே உணவு, ஆடை, மற்றும் இதர பொருட்கள் கொடுக்கல்- வாங்கல் செயல்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தன.
N. Ramesan, Glimpses of Buddhism, A.P. Govt. archaeological series No.
2, Hyderabad, 1961, pp.187-189.

Buddhist female monks in Thailand paintings.6

நடைமுறை பிரச்சினைகள்: “பாவமன்னிப்பு” போன்ற சடங்குகள், அதுவும் பிக்குனிகள் பிக்குகள் முன்பு செய்யவேண்டும் என்பன, பிக்குகள் பிக்குனிகளை அடக்கியாள ஏதுவாயிற்று எனத்தெரிகிறது. மேலும், மேற்காணும் விதிக்கப்பட்ட எட்டு விதிகளும், பிக்குக்களுக்கு சாதகமாக உள்ளதை காணலாம். அதாவது “ஆணாதிக்கரீதியில் உள்ளதை தெரிந்து கொள்ளலாம். இதனல்தான், அத்தகைய அடக்குமுறைகளை தாங்காமல், சில பிக்குனிகள் சங்கத்தை விட்டு விலக நேரிட்டத்து என்ற குறிப்பிகளும் கானப்படுகின்றன.

இதிலிருந்து, பெண்கள் சந்நியாசிகளாக அனுமதிக்கப்பட்டது, பௌத்தத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது தெரிகின்றது. விஹாரங்களில் ஆண்-பெண் துறவிகள் இருப்பது, அவர்கள் பல நேரங்களில் சந்தித்துக் கொள்வது, பேசுவது, தமது பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்வது முதலிய காரியங்கள் நிச்சயமாக கட்டுப்பாடுகளை மீற வைக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கலாம். இதை மனத்தில் வைத்துகொண்டுதான், புத்தர் முதலில் பெண்கள் சங்கத்தில் சேருவதை ஊக்குவிக்கவில்லை.

ஜைன-பௌத்த பெண் சந்நியாசிகள் – வேறுபாடு: ஜைனத்தில், பெண்சாமியார்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். மொட்டை அடித்துக்கொண்டு, தீட்சை பெற்றுவிட்டால், அவர்கள் உண்மையிலேயே கடுமையான துறவர வாழ்க்கையினை நடத்தியாக வேண்டும். முக்கியமாக, அஹிம்சை சித்தாந்தத்தை முழு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், உணவு முறை கட்டுப்பாடு இருந்தது. அவ்வுணவு, எளிமையாக சாத்வீக ஆகாரமாக இருந்தது. அதாவது மனக்கட்டுப்பாட்டை தளர்க்கும், சலனத்தை ஏற்படுத்தும், உணர்ச்சிகளைத் தூண்டும் காய்கறிகள், பொருட்கள் உபயோகப்படுத்தி உணவு சமைக்கமுடியாது. ஆகவே, மாமிச உணவு என்பதற்கு பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் இருப்பிடம் தனியாக இருந்தது. பௌத்த பிக்குனிகளைப்போல, விஹார வாழ்க்கை வாழமுடியாது. பௌத்தத்தில், எவ்வாறு “மழைக்கு ஒதுங்கிய நிரந்தரமற்ற ஆவாஸ-ஆராம வாழ்க்கை”, பிறகு பற்பல வசதிகளோடு “நிரந்தர விஹார வாழ்க்கை” ஆனது என்பது ஏற்கெனவே விலக்கப்பட்டது. ஆகையால், பௌத்தத்தில், அத்தகைய கட்டுப்பாடுகள் முதலில் இருந்தாலும், பிற்பாடு தளர்ந்தது, பிரச்சினைகள் ஏற்பட்டது, பிக்குனிகள் சங்கத்திலிருந்து வெளியேறிது-வெளியேற்றப்பட்டதிலிருந்து நன்றாகவேத்தெரிகின்றது.

பிக்குனிகள் சங்கத்தை விட்டு விலகுவது: பிக்குனிகள், சங்கத்தில் சேர்ந்த பிறகு, வெளியேருவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத காரியம். அவ்வாறு அவர்கள், சங்கத்தைத்துறப்பது என்றால், தமது முடிவை “மூன்று முறை” அறிவிக்கவேண்டும். ‘சந்தகாலி’, என்ற பிக்குனியின் வெளியேற்றம் மற்றும் இதர பெண்களின் வெளியேற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, பிக்குனிகள் சந்நியாசி வாழ்க்கையினைத் துறந்து, மறுபடியும் இல்லறத்தில் புகுந்ததாகத் தெரிகிறது. இதைத்தவிர, சங்கத்தைத்துறந்து செல்லும் மற்றொரு முறையும் இருந்தது. அது தற்கொலை செய்து கொள்வதுதான். சிஹா என்ற பிக்குனியின் தூக்குப்போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்ட குறிப்பு உள்ளது. டி லா வல்லி பௌஸின் என்பவர், எப்படி சில பிக்குகள் தமது கழுத்துகளை அறுத்துக்கொண்டனர் என்று குறிப்பிடுகின்றார்.
L. de la Vallee Pousin, Nirvana, Paris, 1925, p.22.
மேத்தியா என்பவன், பெண்களை அவதூறாக பேசியதற்காக, சங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாக, குறிப்பிடப்படுகிறது.

[இத்தகைய முறையும், ஜைனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஜைனத்தில், பொதுவாக, உண்ணநோன்பு இருந்து தமது வாழ்க்கையினை முடித்துக்கொள்வர்.

சந்திரகுத மௌரியன், சிரவணபெலகோலாவிற்கு வந்து “வடக்கிருந்து” உயிர் துறந்தத்தை இங்கு நோக்கத்தக்கது. பௌத்தத்தில், பிறகு, தற்கொலை என்பது குறைந்த அளவில் அத்தகைய தண்டனையாக அல்லது உயிர்துறப்பதாகக் கொள்ளலாம். எது எப்படி இருப்பினும், அஹிம்சை போதிக்கும் இம்மதங்கள் இத்தகைய “ஹிம்சா- முறைகளை” மதத்தை / சங்கத்தை / இயக்கத்தைத் துறப்பதற்கு விதித்துள்ளது வினோதமே. தற்கொலை எண்ணம் எழுவது, அச்செயலைத் தூண்டுவது, செய்விப்பது முதலியன மனோதத்துவ ரீதியில் உள்ள விஷயங்கள் ஆகும். அது நிச்சயமாக அஹிம்சா முறையற்ற-நன்முறையற்ற வன்முறை-தீவிரவாத எண்ணங்களை மனத்தில் விதயிட்டு, வளர்க்கும், ஊக்குவிக்கும் முறையாகும்.]

[பெண்கள் சங்கத்தைத்துறக்க மூன்றுமுறை தமது முடிவை அறிவிக்கவேண்டும் என்பதும், இஸ்லாத்தில், ஒரு மனைவியை விவாகரத்து செய்யும்போது, மூன்றுமுறைஅவ்வாறு அறிவிப்பது நோக்கத்தக்கது].

பஹ்ருத், தக்ஸசிலா, அமராவதி, அஜந்தா, எல்லோரா முதலிய சிற்பங்கள் மற்றும் சித்திரங்களை வைத்துப் பார்க்கும்போதும், அங்கிருந்த மடாலயங்களில் இருந்த வசதிகளைப் பார்க்கும்போதும், பிக்குகள் “விஹார வாழ்க்கையை” மிகவும் வசதியாகவே வாழ்ந்தது தெரிகிறது. அதுமாதிரியே, பிக்குனிகளும் வாழ்ந்துள்ளனர். எனவே, புத்தர் எதிர்பார்த்தபடியே, பிக்குனிக்ச்ளை சங்கத்தில் அனுமதித்தது, சங்கத்தின் காலத்தைக் குறைத்துவிட்டது என்றே தெரிகிறது.

வேதபிரகாஷ்
23-09-2009

குறிப்பு: இது “மின் தமிழ்” குழுவில் தொடர்ர்சியாக பதிவு செய்யப்பட்ட தொடர்-ஆராய்ச்சிக் கட்டுரை. ஆனால், ஏதோ காரணங்களுக்கு, எனக்கு தடை விதிக்கப்பட்டது, மற்றும் நான் எழுதி-பதிவு செய்யப்பட்டதும் மறைய ஆரம்பித்தன.

இப்பொழுது “கூகுள்” தேடலில் கிடைப்பதை போடுகிறேன்.

28-07-2016

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

பிப்ரவரி 20, 2010

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

வேதபிரகாஷ்

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது அல்லது தேய்ந்தது, இந்தியா பௌத்தத்தைத் துறந்தது அல்லது துரத்தியடித்ததைப் பற்றி பல கருத்துகள் உருவாகியுள்ளன. இதில் வேடிக்கையான பிரச்சினை என்னவென்றால், பௌத்தத்தைப் பற்றிய மூலங்கள் அதிகமாக இருந்தும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இருந்தும், அவற்றைப் படிக்காமல், ஆராயாமல், “மற்றவர்கள் சொன்னது” அல்லது “மற்றவர் மற்றவர்களைப் பற்றிச் சொன்னது”, தாங்கள் கேட்டது, கேள்வி பட்டது என்பனவற்றின் மீது கருத்துருவாக்கம் கொண்டு அதனையே சரித்திர ஆதாரமாக நிலைநிறுத்தப்பட்டது போன்று வாதிட்டி பேசி-எழுதி வருவது, தமிழர்களிடையே அதிகமாகவே உள்ளது.

ஒரு தடவையாவது அம்மூலங்களைப் படிப்பது அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்து அவ்வாறு தாங்கள் கேட்டபடி, நினைத்தபடி உள்ளதா அல்லது வேறுவிதமாக உள்ளதா என்று பரிசோதனை செய்வது, சரிபார்ப்பது உண்டா என்பது தெரியவில்லை.

இனி, விஷயத்தை ஆராயும்போது, இவற்றை – பௌத்தம் இந்தியாவில் குறைந்தது பற்றி – பொதுவாக இரண்டு தலைப்புகளில் பிரித்துஆராயலாம்:

1. புத்தமத உள்விவகாரங்கள் மற்றும் 2. வெளிகாரணிகள்

புத்தமத உள்விவகாரங்கள்: பௌத்தம் திடீரென்று குறைந்து, தேய்ந்து, மாயமாக மறைந்து விடவில்லை. இந்திய சரித்திரத்தில் உள்ள, உருவாக்கப்பட்ட, பரப்பப் பட்டுவரும் பற்பல கட்டுக்கதைகளில், இதுவும் பிரபலமான ஒரு கட்டுக்கதை, மாயை, பொய்மையும் கூட.

6ம் நூற்றாண்டிலிருந்து BCEலிருந்து, வளர்ந்து, பரவி, உலக மதமாகி, பலம்-அதிகாரம் பெற்று, சர்ச்சைகள் பெருகி, உடைந்து, பிரிவுகள் ஏற்பட்டு பிறகு 12ம் நூற்றாண்டில்தான் CE குறைகிறது! ஆகவே 1600-1800 வருடங்கள் இந்தியாவில் கோலோச்சி வந்தது, அதிகாரத்துடன் பவனி வந்தது, தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தியது. [இப்பொழுது BCE = Before Current / Common Era CE = Current / Common Era என்றுதான் சரித்திரத்தில் குறிப்பிடப் படுகின்றன].

அத்தகைய பலமுள்ள, அதிகாரமுள்ள உலக மதம் சாதாரணமாக மறைந்து விட முடியாது. பௌத்தத்தின் வளர்ச்சி-வீழ்ச்சி என்பது, அதன் 1600-1800 வருட-செயல்பாடுகளை பாரபட்சமின்றி ஆராய்ந்து தெளியவேண்டும். அம்பேத்கரே அத்தகைய வழியைக் காட்டிடுள்ளார்.

  1. புத்தமதம் இரண்டாகப் பிரிந்தது: முதலில் பௌத்தர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், பிறகு பல விஷயங்களுக்கு சண்டை-சச்சரவுகள் வளர்ந்தன. அதனால், புத்த சங்கம் ஹீனயானம் மற்றும் மஹாயானம் என்று இரண்டு பிரிவுகளாகவும், மற்றும் 16 சிறு பிரிவுகளாகவும் பிரிந்தன.
  2. புத்தரைக் கடவுளாக்கியது: கடவுள் இல்லை என்று வளர்த்த மதம், புத்தரையே கடவுளாக்கி அவர்களது புத்தகங்களும் அவ்வாறே திரித்து எழுதப் பட்டன.
  3. விக்கிர-ஆராதனை பெருகியது: வேதகாலத்திலிருந்து, பாரதத்தில் / “இந்தியா”வில் உருவவழிபாடு இல்லை. ஆனால், திடீரென்று, பௌத்தர்கள் புத்தருக்கு பெரிய அளவில் சிலைகளை செதுக்க ஆரம்பித்தனர். அத்தகைய வேலைகளில் எத்தனை வேலையாட்கள் ஈடுபடுத்தியிருக்க பட வேண்டும் என்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.
  4. வேதங்களை எதிர்த்து, வேதங்களை எடுத்தாண்டது: வேதங்களை பௌத்தர்கள் எதிர்த்தாலும், பெரும்பாலான, வேத-உபநிஸதக் கருத்துகளை அப்படியே தமது “தம்மத்தில்” தம்-மதத்தில் ஏற்றுக் கொண்டனர்[1].
  5. அதிகாரம், ஊழல் பெருகியது: முதலில் பிக்குகள் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, தம்ம-சிரத்தையுடன் இருந்தனர். ஆனால், பின்பற்றுபவர்கள் பெருக-பெருக அவர்களது முக்கியத்துவம் வளர்ந்தது. வாழ்க்கை முறையும் மாறி வசதிகளுடன் வாழத்தொடங்கினர். விஹாரங்களில் பணப்புழக்கம் அதிகமாகியது. இதனால் உட்பூசல்கள் ஆரம்பித்து பிக்குகள் ஒருவரை ஒருவர் குற்றம் கூற ஆரம்பித்தனர்.
  6. பெண்கள் பிக்குனிகள் அனுமதிக்கப்பட்டது: பெண்கள் பிக்குனிகளாக / கன்யா ஸ்திரீகளாக அனுமதிக்கப் பட்டது, சங்கத்தின் அழிவிற்கு வித்திட்டது.
  7. ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டது: அஹிம்சை போதித்த பௌத்தர்களே ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டதால், மக்களுக்கு, புத்தருக்குப் பிறகு, பௌத்தத்தின் மீதான நம்பிக்கை குறைந்தது. மன்னர்களுடைய தொடர்பு போர்களில் ஈடுபடவும் செய்தது.
  8. மாமிச உணவு உண்டது: குறிப்பாக மாமிச உணவு உண்ணும் பிக்குகள், பௌத்தர்களைக் கண்டு, மக்கள் வியந்து திகைத்தனர். விலங்குகளைக் கொல்லாமல், அவற்றை தோலுறித்து, பதப்படுத்திக் கொடுக்காமல் மாமிசம் கிடைக்காது. குறிப்பாக, புத்தரே மாமிச உணவைத் தடை செய்யாதௌ மாட்டுமன்றி புசிக்கவும் செய்தார்.
  9. மதம்-அல்லாத விஷயங்களில் ஈடுபட்டது: மதத்தை விடுத்து, பௌத்தர்கள் மற்ற காரியங்களில் அதிகமாகத் தலையிட்டனர்.
  10. அரசியலில் தலையிட்டது: ஜைனர்களைப் போன்று அரசியலில் ஈடுபட்டது. அதாவது ஆளும் மன்னர்களின் துணையில் அல்லது அவர்களை மதம் மாற்றி தமது மதத்தின் அதிகாரத்தைச் செல்லும் முறையைக் கடை பிடித்தனர். பௌத்த ராஜ்யங்கள் (Buddhist Kingdoms) பரவியிருந்தது உண்மை.
  11. வியாபாரத்தில் ஈடுபட்டது: பல இடங்களுக்கு, பல நாடுகளுக்கு சென்றுவந்த பௌத்தர்கள் வியாபாரத்தில் பங்கு கொண்டனர். வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டு, அரசியல் அதிகாரமும் பெற்றதால், மத காரியங்களில் சிரத்தையாக ஈடுபடாமல் போனது.
  12. கடல் கடந்தது மற்ற செயல்கள்: பாரத்தில் சில காரியங்கள் செய்வது ஏற்றுக் கொள்ளப் படாததாக இருந்தன. அவை இக்கால சட்ட-திட்டங்களைப் போன்று “கலிவிரஜ்யா” = கலிகாலத்தில் விலக்கப் படவேண்டியவை, என்றிருந்து மக்களிடையே நம்பிக்கையாக மனங்களில் பதிந்திருந்தது. அந்நிலையில், பிராமணர்கள் கடல் கடக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, பிக்குகள் கப்பல்களில் சென்றதும் மக்களுக்கு வியப்பாக இருந்தது.

வேதபிரகாஷ்

10-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

இதற்கான ஆதாரமான நூல்கள்:

Louis Dela Valle Poussin, The Buddhist Councils, K. P. Bagchi & Company, Calcutta, 1976.

Sumangal Barua, Buddhist Councils and Development of Buddhism, Atisha Memorial Publishing Company, Calcutta, 1997.

I. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen, Motilal Banarasidas, New Delhi, 1999.

K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm

Alexander Berzin, The Historical Interaction between the Buddhist and Islamic Cultures before the Mongol Empire, 1996 http://www.berzinarchives.com/web/en/archives/e-books/unpublished_manuscripts/historical_interaction/pt2/history_cultures_12.html

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, pp.439-447; 542-543

M. Monier Williams, Buddhism: In its connexion with Brahmanism and Hinduism and its contrast with Christianity, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd, New Delhi, 1995.

கடைசி புத்தகத்தில், மோனியர் வில்லியம்ஸ், பௌத்தம் தான் மேற்கொண்ட மாற்றங்களினால், இந்து மதத்தின் உயரிய கொள்கைகளான சகிப்புத்தன்மை, அஹிம்சை முதலிய குணாதிசயங்களினால், 12ம் நூற்றாண்டு காலத்தில் மறைய நேரிட்டது என்று விளக்குகிறார் (Lecture VIIl – Changes in Buddhism and its disappearance from India என்ற விளக்கத்தை “How Did Buddhism Die out in India?” pp.161-171, காணலாம்).

பி.வி.பாபட் தொகுத்த நூலில், “பௌத்தத்தில் பிற்பாடு செய்யப் பட்ட மாற்றங்கள்” என்ற தலைப்பில், பௌத்தம் எவ்வாறு தனது ஆரம்பகால நிலையினின்று பிரழ்ந்து என்பதனைக் காணலாம்.

P. V. Bapat, 2500 years of Buddhism, Publications Division, New Delhi, 1997, pp.297-332


[1] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992.

Hello world!

ஒக்ரோபர் 4, 2009

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!