Archive for the ‘கடல் கடத்தல்’ Category

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கக்கூடும்?

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கக்கூடும்?

Ground plan and section of main Chaitya Hall, Karla caves.2

பிராமணர்களும், பௌத்தர்களும்: புத்தர் இறந்து 500 வருடங்களுக்குப் பின்னரே அவர் உபதேசங்களை மற்ற கதைகளைத் தொகுத்து பௌத்த பிக்குகள் எழுத ஆரம்பித்தனர். அரசவம்சத்தில் பிறந்த சித்தார்த்தன், “புத்தர்” ஆகியபோது, முதலில் பௌத்தத்தை எற்றுக்கொண்டது அரசவம்சத்தினரே. புத்தர் மறைந்தபிறகு, பலர் சங்கத்தில் சேர்ந்தாலும், அரச-வணிகர்களின் ஆதரவு பௌத்தத்திற்கு அதிகமாக இருந்தது. பிராமணர்கள் பௌத்தத்தில் சேர்ந்தாலும் அவர்களது நிலை பாதிக்கப்படும் நிலையில்தான் இருந்தது. பிராமணர்களை எதிர்த்து பௌத்தம் வளர்ந்தபோது, பௌத்தத்தில் அவர்களது ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையினை ஆராயவேண்டியுள்ளது. விரும்பி ஏற்றுக்கொண்டாலும், வலுக்கட்டாயமாக மதமாற்றப்பட்டாலும் அவர்களை மற்ற பௌத்தர்கள் எவ்வாறு நடத்தினர் அல்லது தூரமாகவே வைத்திருந்தனர் என்பது நோக்கத்தக்கது. ஆகவே, பிராமணர்கள் பௌத்த மதத்தில் சேருவது என்பது சாத்தியமில்லை அல்லது குறைந்த அளவிலேயே இருந்திருக்கக் கூடும்.

சத்திரியர்களும், பௌத்தர்களும்: சத்திரியர்களின் நிலையோ அதைவிட முரண்பட்டதாகும். ஏனெனில் அவர்களுக்கும் அஹிம்சை போதிக்கும்
பௌத்தத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது வெளிச்சம். அரசர்கள் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டபோது, அவர்களது அரசுகள் “பௌத்த அரசுகளாக” இயங்கலாம், இயங்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் போரிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். தங்களது ஆட்சியை காத்துக் கொள்ளவேண்டும் என்றால், சத்திரிய தர்மத்தைத் தான் கடைபிடித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, அஹிம்சை, சமாதானம், அமைதி என்றால், அத்தகை சத்திரியர்கள் சத்திரியர்களாக இருந்திரிக்க மாட்டார்கள். பௌத்தத்தின் அஹிம்சாபோதனை போர்களை நிறுத்திவிடவில்லை என்பதனை சரித்திரம் காட்டுகிறது. மேலும், புத்தபிக்குகளே ஒரு அரசை ஆதரித்து, மற்ற அரசை எதிர்க்கும் நிலையும் ஏற்பட்டது. அவ்வாறான நிலையில், பிக்குகளும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றாகிறது.

வைசியர்களும் பௌத்தர்களும்: பௌத்தர்கள் பல நாடுகளுக்குச் சென்று வந்ததால், அங்கெல்லாம் பொருட்களின் தேவை இருக்கும் என்பதனால், வைசியர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. பௌத்தர்கள் வியாபாரிகளுக்கு முன்னோடியாக, உதவியாக இருந்தனர். “பட்டுப்பாதை/வழி” (the Silk route) ஆனாலும், கடல் வழியானாலும் வணிகர்கள் தமது பொருட்களுடன் பௌத்த பிரசாகரர்களுடன் பயணித்தனர். வியாபாரம் செய்தனர், லாபம் ஈட்டினர். அத்தகைய லாபங்களை தானமாக பிக்குகளுக்கு தோடங்களாக, விஹாரங்களாக அளித்து ஆதரித்தனர். எனவே பௌத்த பிக்கு-வைசிய உறவு பரஸ்பரமானது என்பதாகிறது.

சூத்திரர்களும், பௌத்தர்களும்: சூத்திரர்கள் பௌத்தத்தில் இணைந்துள்ளதை தம்மபாத மற்றும் ஜாதக கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் பௌத்தம் வளர்ந்ததற்கு, பரவியதற்கு பிக்குகளுடன் இணைந்து பணியாற்றிய விவரங்கள் தெரியவில்லை. பௌத்தத்தில் “வஸலா” என்ற வார்த்தை தாழ்த்தப்பட்ட, வெறுக்கத்தக்க மனிதனைக்குறிக்கிறது. பௌத்தம் அடிமைகளை மறுத்ததாகத் தெரியவில்லை.
http://www.bbc.co.uk/religion/religions/buddhism/history/slavery.shtml

பிராமணர்கள் கடல் கடக்கத் தடை: ஆகவே நிச்சயமாக “சிரமணர்கள்-பிராமணர்கள்” சேர்ந்து சென்றது அசோகனது காலத்திற்கு பிறகு மறைந்தது எனலாம். திடீரென்று பிராமணர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது, அவ்வாறு சென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர் என்ற தடை ஏற்படுத்தப்பட்டதும் நோக்கத்தக்கது. இதனால்தான், மனுஸ்மிருதியில் அத்தகைய இடைச்செருகல் ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ஏனெனில் தென்கிழக்காசிய மற்றும் தன்னமிரிக்க நாடுகளிலேயே இந்து மதம் பரவியிருந்தபோது, பிராமணர்கள் அங்கிருந்தனர். எனவே ஒன்று அவர்கள் நடந்து சென்றிருக்க வேண்டும் அல்லது கப்பலில் கடல் கடந்து செறிருக்கவேண்டும். பின்னதுதான் சாத்தியமாகிறது என்பதால், அத்தகைய தடை பிற்பாடு ஏற்படுத்தியிருக்கவேண்டும் எனத் தெரிகிறது. “சிரமணர்கள்”, “பிராமணர்கள்” தங்களுடன் வருவதை விரும்பவில்லையா அல்லது அவர்கள் வருவதை நிறுத்த முயன்றனரா என்பது நொக்கத்தக்கது. ஆகவே முன்னம் கப்பல்களில் சேந்து சென்ற இவர்களுக்குள் என்ன நேர்ந்தது? நிச்சயமாக, ஒருகாலகட்டத்தில், பிராமணர்கள் தங்களுடன் வருவதை “சிரமணர்கள்” விரும்பியிருக்க மாட்டார்கள். எனவே அவர்களை தடுக்க வழி உள்ள சட்டதிட்டங்களை வைத்துதான் செயல்படுத்த வேண்டும். அந்நிலையில்தான் மனுஸ்மிருதியை பௌத்தர்கள் திருத்தியிருக்கவேண்டும். ஏனெனில், பிராமணர்களே தங்களுக்கு பாதகமாக அத்தகைய சரத்தை நுழைத்திருக்க மாட்டார்கள்.

Ground plan and section of main Chaitya Hall, Karla caves.

பௌத்த சிற்ப-கட்டிடக் கலை வளர்ந்தது: குகைக்கோவில்கள், பெரிய அளவில் புத்தசிற்பங்கள், விஹாரங்கள் முதலியன அமைக்கப்பட்டது, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல இடங்களில் ஈடுபடுத்தப்பட்டது, ஈடுபட்டது தெரிகின்றது. கற்கள் மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் என்பதனால் அவ்விடங்களில் விஹாரங்கள் கட்டப்பட்டது சாதகமாகவே தெரிகிறது. கற்கள் உருவான விதம், அவற்றின் உள் அமைப்பு, கடினம்-மென்மை தன்மைகள், முதலியன கல்-விற்பன்னர்களுக்குத் தெரிந்திருக்கும். 40 அடிகள் உயர தூண்கள் அல்லது சிலைகள் இருக்கும்போது, அத்தகைய பாறைகளை எவ்வாறு உடைத்து, செதுக்கி உருவாக்கினர் என்று நோக்க வேண்டியுள்ளது. மேலும் கற்களை உடைக்க, கழிக்க, கடைய, செதுக்க, மேற்பகுதியை மென்மையாக்க பலவித உலோகக்கருவிகள் உபயோகப்படுத்த்ப்பட்டிருக்கும். எனவே அத்தகைய கருவிகளை உருவாக்கும் உலோகவியல் வல்லுனர்கள் இருந்திருக்க வேண்டும். வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோருக்கு வேண்டியவற்றை அவர்கள் தொடர்ந்து விநியோகித்து வந்திருக்கவேண்டும்.
James Fergusson, History of Indian & Eastern Architecture, Low-Priced Publications, New Delhi, 1997.
E. B. Havell, Indian Sculpture and Painting, John Murray, London, 1908, p.183. Taraporavala & Sons, Bombay reprint is available.

அவர்கள் எல்லொரும் பௌத்தர்களா அல்லது பணம் பெற்று அவர்களுக்காக வேலை செய்து அத்தகைய சிற்பங்கள், விஹாரங்களை உருவாக்கினரா? அல்லது அடிமைகளாக வேலை செய்தனரா? அவர்கள் எல்லாம் பௌத்தர்கள் இல்லை என்றால், தமக்கு எதிரான மதத்திற்கு அவ்வாறு வேலை செய்திருக்க முடியாது. அல்லது, அத்தகைய வேறுபாடே இல்லாத நிலை இருந்திருக்கவேண்டும். பௌத்தமதம் வெறும் பிராமணத்தை எதிர்த்து மட்டும் வளர்ந்து விடவில்லை. உலகம் முழுவதும், புத்த சிற்பங்களை செதுக்கி, தமது மதத்தை பிரபலப்படுத்தி வளர்த்தனர். ஆகவே, அத்தகைய லட்சக் கணக்கான வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோர் எவ்வாறு பௌத்தத்திற்கு சாதகமாக வேலை செய்தனர்?

Takht-i-Bahai Chaita hall, temple

உருவத்தை உருவாக்கும் நிலை (Iconogenism) மற்றும் உருவங்களை உடைக்கும் நிலை (Iconoclasm): பௌத்தம் தேய்ந்ததற்கு அவர்களும் காரணமா? மஹாயான பௌத்தத்தை குறை சொன்னால், அல்லது ஒதுக்கினால், இவர்களது கதி அதோகதிதான். எனவே, மஹாயானத்தைக் குறைக்கூறுவது, விக்கிர ஆராதனையை (Idolatry) விமர்சிப்பது, புத்த சிற்பங்கள்-விஹாரங்களை வெறுப்பது முதலியன முரணான போக்கே. விக்கிரங்களை உருவாக்குகின்றவர்கள் (Icon producers), இறையியல் அல்லது மற்ற சித்தாந்த ரீதிகளில் விக்கிரங்களை வெறுப்பவர்கள் /உடைப்பவர்கள் (Iconoclasts) ஒரே மதத்தில் / சாகையில் பிரசாரகரர்களாக, ஒருமித்த-சித்தாந்திகளாக இருப்பது போலித்தனமாகும், கபடத்தனமாகும். ஆகவே பௌத்தம் எந்நிலையிலும் அத்தகைய வாதத்தை முன் வைக்கமுடியாது. அத்தகைய வெறுக்கும் நிலையே அவர்களது அஹிம்சை-விரோத மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது. உருவத்தை உருவாக்கும் நிலை (Iconogenism) மற்றும் உருவங்களை உடைக்கும் நிலை (Iconoclasm) இரண்டையும் தன்னுள் அடக்கி பௌத்தம் இருந்தது என்றால் பொய்மைதான். கலாரசிகர்கள் கலையை வெறுப்பரோ, சிற்பங்களை “உருவாக்குபவர்கள்”, சிற்பங்களை “உடைப்பார்களோ?”
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians? in Contribution of South India to Indian Art and Architecture, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.

அத்தகைய உருவங்கள் / சிற்பங்கள் உருவானது, இருப்பதற்கு எதிராகத்தான் அல்லது மக்களைக் கவரும் முறையில் உருவாக்கியிருக்கவேண்டும். எனவே அத்தகைய முறையை உருவாக்கிவிட்டு, பிறகு அது பாவச்செயல், சாத்தானின் செயல் என்றெல்லாம் பேசுவது, பிரசாரம் செய்வது அல்லது அவற்றை உடைப்பது / அழிப்பது அஹிம்சை-விரோத மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது, தீவிரவாதாமாகிறது, மானுடத்தை பாதிக்கிறது.
The Mohammedans’ iconoclast-fanatical-ferocious destruction of temples have been noted by the British surveyors and recorded in their records and works. James Fergusson, opt cit. Archaeological Survey of Western India, Vol. III, pp.20, 23, 38-40.

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture60

ஒருவேளை, அத்தகைய எண்ணம் வலுப்பட்டு, பௌத்தத்தில் “உருவவழிபாட்டு-எதிர்ப்புவாதிகள்” உருவாகி கிளம்பியிருந்தால், நிச்சயமாக மேற்கண்ட வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோர் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பர். ஏனெனில் அது அவர்களின் தொழில் என்றாகிவிட்டப் பிறகு அதனை மறுப்பவரை, ஒழிப்பவரை அவர்கள் நிச்சயமாக விரும்பியிருக்க மாட்டார்கள். மேலும், பௌத்தர்களுக்கு எதிராகவும் திரும்பியிருக்கக்கூடும். தங்களை வைத்தே, அத்தகைய பற்பல கோடிகணக்கில் சிற்பங்கள், லட்ச கணக்கில் விஹாரங்கள், மடாலயங்கள் என்று உருவாக்கி, பிறகு தங்களையே இழிவு படுத்துவதை எந்த வேலையாளும், தொழிலாளியும், சிற்பியும் அல்லது ஸ்தபதியும் தாங்கிக் கொண்டிருக்கமாட்டான். எனவே அத்தகைய“உருவவழிபாட்டு-எதிர்ப்புவாத பௌத்தர்கள்” மற்றும் இவர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டிருக்கக்கூடுமோ என்று ஆராயத்தக்கது.

தென்னிந்திய சம்பிரதாயப்படி பலவித சிற்பசாஸ்திரங்கள் இருந்தன. அவையாவன:

1. விருத்தம்                         9. வித்தியாபதி               17.மிகுத்தவட்டம்
25. ஸுஸ்ருதம்
2. விஸ்வபோதம்                10. மானசாரம்              18.கலயூபம்                26.
சைத்யகம்
3. விஸ்வகஸ்பியம்        11. மனுமன்                      19. கபீலம்
27. நமசம்ஹிதை
4. விஸ்சலம்                        12. மனபோதம்               20. கற்பர்யம்
28. சாத்விகம்
5. விஸ்வதர்மம்                13. மயிந்திரமல்               21. கலாம்ருதம்        29.
அதிசாரம்
6. விஸ்வேஸம்                14. மயாமனபோதம்     22. நளம்                        30.
அரிதகம்
7. விஸ்வசாரம்                15.மயன்மதம்               23. பானு                        31.
ஸௌம்யம்
8. வஜ்ஜிரம்                        16. மயன்-நீதி                       24.
பர்சரியம்                32. சித்ரம்.

Prasanna  Kumar  Acharya, A Dictionary of Hindu Architecture, Vol.I, Low Price Publications, New Delhi, 1997.
………………………………………., Indian Architecture according to Manasara-silpasastra, Vol.II, 1998.
………………………………………., Manasara on Architecture and sculpture: Sanskrit Text with critical nores, Vol.III., 1997.
………………………………………., Architecture of Manasara (English translation), Vol.IV, 1998.
………………………………………, Atchitecture of Manasara: Illustraions of Architectural and Sculptural objects, Vol.V., 1998
……………………………………….., Hindu Architecture in India and Aboard, Vol.VI, 1998.
………………………………………., An Encyclopedia of Hindu Architecture, Vol.VII, 2001
Bruno Dagens, Mayamata, Sitaram Bharatia Institute of Science & Research, New Delhi, 1995, p.v in Introduction.
T. Bhattacharya, The Cannons of Indian Art, Calcutta, 1963, pp.183-195.
K. V. Ramakrishna Rao, Stone – Work, Art, Architecture, Style and Dating in Indian Context, ICIH-2009 conference, Souvenir Volume, New Delhi, 2009, p.78. For full text see at:
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture61

பௌத்தம் “இந்து/சனாதன மதத்திலிருந்து” பெற்றவை: “செரிந்தியா” எனப்படுகின்ற மத்திய ஆசியா பகுதிகளில் பௌத்தம் இருந்தபோதும், எட்டாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருத வழக்கு இருந்து வந்தது என்று ஏரியல் ஸ்டீன் என்ற ஆராய்ச்சியாளர் பல அத்தாட்சிகளுடன் காட்டியுள்ளார். பௌத்ததைப் பற்றிய ஆரம்பகால பாலிமொழி நூல் கரோஸ்தி லிபியில் இருந்தது. சமஸ்கிருதமோ பிரம்மி லிபியில் இருந்தது.
Sir Aurel Stein, Serindia, Vol.I, Introduction.

ஆகவே, எப்படி தத்துவம் முதலியன பௌத்தர்களுக்கு வேத-உபநிடதங்களிலிருந்து பெற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டனரோ, அம்மாதிரியே, வேதகலைகளையும் பெற்றனர் என்பது அவர்களது சிற்ப கட்டிட கலை அத்தாட்சிகள் காட்டுகின்றன. சரித்திரஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் எது முன்பு, எது பின்பு என்பதனை காலகணக்கீட்டு முறையில் குறிப்பிடுவதில்தான் குழம்பியுள்ளனர், குழப்பியுள்ளனர், பாரபட்சமுறையில் இருந்துள்ளனர் என்பது இதனை படிக்கும்போது / ஆராயும்போது தெரிகிறது. ஏ. எல். பாஸம் “அசோகனுடைய தூண்கள்” அசோகனுக்கு முன்னமே இருந்தன என்றபோது, நமது சரித்திரஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அறிந்தும் அறியாதவர்கள் மாதிரி இருந்தனர்.
A. L. Basham, The Wonder that was India, Rupa & Co., New Delhi., 1990.

“எழுத்தறிவற்ற” சிந்துசமவெளி / ஹரப்பன் நாகரிகம் (c.2250-1950 BCE) மற்றும் திடீரென்று முளைத்த “சரித்திர கால” மௌரிய பேரரசு (c.300 BCE) இந்த இடைப்பட்ட காலத்தில், 1900 வருடங்களுக்கு இந்தியர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? நமது அதி-மேதாவி / அறிவிஜீவி / பிரபலமான / முன்னோக்குள்ள சரித்திரஆசிரியர்கள் (eminent, progressive, secular etc), ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருட்துறை வல்லுனர்கள் அந்த ரகசியத்தைச் சொல்ல மறுக்கின்றனர்! எல்லாவற்றையும் proto-history (Proto- = original, primitive, first) காலத்தில் வைத்து இந்தியர்களை ஏமாற்றுகின்றனர்!

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture62

இருப்பினும் ஏ. எல். பாஸம் போன்ற நடுநிலையாளர்கள் உண்மையை எடுத்துக்
காட்டியுள்ளனர்: குப்தகாலத்திற்கு முன்பே பராபர், நாகார்ஜுனா முதலிய இருப்பிடங்கள் / குகைக்கோவில்கள் முதலியவற்றைக் குறிப்பிடும்போது, அவர் இவ்வாறு எடுத்துக்காட்டுகிறார்:

“The inner walls of all caves are finely polished, no doubt by workmen of the school whch was responsible for the polish of the Asokan columns” (p.354). “குகைக்கோவில்களின் சுவர்களை மென்மையாக கழித்து வழுவழுப்பாக பளிச்சென செய்தவர்கள் அசோகனுடைய தூண்களை செய்த அதே சிற்ப-
கட்டிடகலை குடும்பத்தை சேர்ந்திருக்கவேண்டும்”.

“The capitals of Asokan’s columns, some of which were perhaps made before his reign, are the earliest important sculptures after those of the Indus cities” (p.366).  “சிந்து நகர கட்டிடகலைக்குப்பிறகு, அதேமாதிரியான தொன்மையான வேலைபாடு அசோகனுடைய தூண்களிலில்தான் காணப்படுகிறது, அவைகளில் சில அவனது காலத்திற்கு முன்பே செய்யப்பட்டிருக்ககூடும்”

“Yet, if we did not know that the possibility of western influence existed, we might suggest that the animal sculptures of the columns were those of a school directly descended from the engravers of the Indus seals, which show a realistic treatment very unusual for so early a civilization”. “மேற்கத்தைய தாக்கம் இருந்ததற்கான வாய்ப்பு
உள்ளதா இல்லையா என்று அறிவதற்கு இயாலமல் இருக்கும் நிலையில், சிந்துசமவெளி நாகரிகத்தின் முத்திரைகளை கடைந்து பொரித்து உருவாக்கிய அதே கலைக்குடும்பம் அல்லது வம்சத்திலிருந்து நேரிடையாக வழி-வந்தவர்கள்தாம் இந்த விலங்குகளை செதுக்கியிருக்கவேண்டும் எனத்தெரிகிறது.”

பல “யக்ஸினிகள்” சிற்பங்களை ஆராய்ந்து கூறுவதாவது:

“The treatment of the ample abdomens of these figures has been compared with that of the Harappa torso and gives further evidence of the survival of tradition over the long intervening period” (p.367).
“எவ்விதமாக இந்த சிற்பங்களின் வயிற்றுப்பகுதிகள் செதுக்கப்பட்டுள்ளன / விவரங்களைக் கொண்டுள்ளன என்பதற்கு ஹரப்பன் சிற்பங்களின் முண்டத்துடன் ஒப்புமைப்படுத்தி போதுமான வரை ஆராயப்பட்டுள்ளது. அத்தகைய ஒப்புமை ஆராய்ச்சி கொடுக்கும் அத்தாட்சியானது, அத்தகைய கலைப்பாரம்பரியம் இடைப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வந்துள்ளது தெரிகிறது”.

ஆகவே, ஜைன-பௌத்த மதங்களுக்கு முன்பு, சிந்துசமவெளி நாகரிகத்திற்கு முன்பே அத்தகைய சிற்ப-கட்டிடகலை இருந்து வந்துள்ளது. ஜைன-பௌத்தர்கள் அவர்களிடமிருந்துதான் அத்தகைய கலையையும் பெற்றனர், அதன் வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோரையும் பெற்றனர். ஆகவே இருந்த பாரம்பரிய-கலாச்சாரக்கூறுகளுக்கு எதிராக ஜைன-பௌத்தர்கள் செயல்பட்டிருந்தால், அவர்கள் நிச்சயமாக பதில்-எதிர்ப்பை உணர்ந்திருப்பர். அதை பௌத்தத்திற்கு விரோதமாக நடந்த செயல் என்றாகாது. பாதிப்பு ஏற்படும்போது, பௌத்தர்களே புத்தர் சொன்னபடி நடக்காமல் இருந்திருக்கலாம். ஆகையால்தான், பௌத்தத்திலேயே பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளன.

வேதபிரகாஷ்
18-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

 Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture63

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்

மார்ச் 19, 2013

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்

Buddhist monk attacked in a train at Central Chennai2

 

உணர்ச்சிப் பூர்வமாக நடந்து வரும் போராட்டங்களும், பிரச்சினைகளும்: தமிழகத்தில் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதாக வீடியோ மற்று புகைப்படங்கள் வெளியானதிலிருந்து, குறிப்பிட்ட அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், இலங்கை-ஈழ விடுதலை இயக்கத்தார் முதலியோர் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர். கடந்த மாதம் ஸ்டர்லிங் ரோடில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் என்று அவை போராட்டங்கள் காலை நேரங்களில் நடத்தின. ஒரு நாள் பந்த் என்றும் அறிவித்து ஆர்பாட்டம் செய்தனர். இப்பொழுது, புத்த பிக்குகள், குறிப்பாக யாத்திரிகர்கள் தாக்கப்படுவது பிரச்சினையாகியிருக்கிறது.

Buddhist monk attacked in a train at Central Chennai5

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புத்த பிக்குகள் தாக்கப்படுதல்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், டில்லியிலிருந்து 19-03-13 அன்று சென்னை வந்த, புத்த சாமியார்கள் இருவர், மர்ம நபர்களால் தாக்கப் பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது[1]. ரயில்வே போலீசார் அங்கு வருவதற்குள், மர்ம நபர்கள் மூவரும் தப்பியோடினர்[2]. இலங்கை ஊடகங்கள் எல்.டி.டி.ஈ. அதரவாளர்கள் புத்த பிட்சுகளைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றன[3]. கருணதிலக அமுனுகம என்றறைலங்கை வெளியுறவுத்துறை செயலாளர், இந்தியாவில் பிராயணம் செய்யும் ஶ்ரீலங்கை யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளது[4]. தமிழக அரசும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் என்பவரும் அத்தகைய வேண்டுகோளை விடுத்திருந்தார்[5].கடந்த ஜனவரி மாதம், 2011ல் எழும்பூரில் உள்ள புத்த மடாலயம் தாக்கப்பட்டது. அதில் நான்கு துறவிகள் தாக்கப்பட்டனர். கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, உள்ளே மற்ற பொருட்களும் உடைக்கப்பட்டன[6].

Buddhist monk attacked in a train at Central Chennai3

குறிப்பாக எஸ்.6ல் நுழைந்து புத்த பிக்குகள் தாக்கப்பட்டது: இலங்கை கண்டியை சேர்ந்த, புத்த சாமியார் பண்டாரா, 40, தலைமையில், 19 பேர், இந்தியாவில் உள்ள புத்தகயாவிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, டில்லியிலிருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் “எஸ் 6′ பெட்டியில் ஒன்றாக பயணம் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை, 7:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது. திடீரென, மூன்று மர்ம நபர்கள், “எஸ் 6′ பெட்டிக்குள் புகுந்தனர். அங்கு காவி உடையிலிருந்த புத்த சாமியார் பண்டாராவையும், அவருக்கு அருகில் சாதாரண உடையிலிருந்த புத்தசாமியார் வங்கீசாவையும் பிடித்து இழுத்து அடித்தனர்[7]. அவர் பயத்தில் அலறியதால், அவருடன் பயணம் செய்ய மற்றவர்கள், அவரருகில் ஓடிவந்து, மர்ம நபர்களை தடுத்தனர்; எதிர்த்து அடிக்கவும் முயன்றனர். பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்களின் தாக்குதலை, பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயில்வே போர்ட்டர்கள் பார்த்துவிட்டு, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். இதற்குள்ளாக தகராறில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். புத்த சாமியார்கள் இருவர் மற்றும் இவர்களுடன் வந்திருந்த இலங்கையை சேர்ந்த, 17 பேரையும், ரயில்வே போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில், 17 பேரை, எழும் பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன், வேனில் அனுப்பி வைத்தனர்.

Buddhist monk attacked in a train at Central6

புத்த பிக்குகளிடம் போலீஸ் விசாரணை: புத்த சாமியார்கள் இருவரையும், பாதுகாப்பாக நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ரயில் பெட்டியில் நடந்தது என்ன? தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் ஏதும் தெரிவிக்க முடியுமா?’ எனவும் கேட்டனர். இதற்கு புத்த சாமியார் பண்டாரா, “மூன்று பேர் வந்தனர். இருவர் பேன்ட் சர்ட் அணிந்துஇருந்தனர். ஒருவர் பேன்ட், டி சர்ட் அணிந்திருந்தார். மூன்று பேரும், நாங்கள் பயணம் செய்த பெட்டியில் ஏறியதும், “நீங்கள் இந்தியாவிற்கு ஏன் வந்தீர்கள், சிங்களர்களே திரும்பி போங்கள்’ என, திட்டினர். அப்போது, எங்களை அவர்கள் தாக்கினர்’ எனவும் கூறினார். தன் முகத்திலும், நெஞ்சிலும், காலிலும் மர்ம நபர்கள் தாக்கியதாக கூறியவர், இடது காலில் இருந்த காயத்தையும், போலீசாரிடம் காட்டினார். பொலீசார் அவர் மிகவும் கொடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக கூறினர். காலின் மீது ஒரு கட்டைப் போன்ற ஆயுதத்தால் அடித்துள்ளனர் என்று கூறினர்[8]. தவிர ரூ.40,000/- அடங்கிய பை ஒன்றும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்[9]. காவி உடை அணிந்திருந்த புத்த சாமியாரை, வேறு யாரும் திடீரென தாக்கி விடாமலிருக்க, முன்னெச்சரிக்கையாக, அவரது காவி உடை மீது, சாதாரண உடை அணியுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். விசாரணைக்கு பிறகு, புத்த சாமியார் இருவரும், மற்றொரு வேனில் எழும்பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு, போலீஸ் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Buddhist monk attacked in a train at Central Chennai

புத்தசாமியார்களையும், அவர்களுடன்வந்திருந்தவர்களையும்தாக்கிவிட்டு, இரண்டேநிமிடத்தில்அங்கிருந்ததப்பிஓடியுள்ளனர்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் வந்து, ஆறாவது பிளாட்பாரத்தில் நின்றததும், பயணிகள் இறங்கியபோது, திடீரென மர்ம நபர்கள் மூன்று பேர், பெட்டியின் உள்ளே நுழைந்து புத்த சாமியார்களையும், அவர்களுடன் வந்திருந்தவர்களையும் தாக்கிவிட்டு, இரண்டே நிமிடத்தில் அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர். இதை, தனியார் “டிவி’ நிறுவனத்தின், கேமராமேன் வீடியோவில் பதிவு செய்து உள்ளார். செய்தி நிருபரும் அவருடன் இருந்துள்ளார். இதனால், மர்ம நபர்கள் பற்றி இவர்களுக்கு ஏதும் விவரம் தெரியுமா என, விசாரிப்பதற்காக, ரயில்வே போலீசார், இவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். புத்த சாமியார்கள் தாக்கப்பட்டபோது, அவர்கள் வீடியோவில், பதிவு செய்து வைத்திருந்த காட்சிகளையும் போலீசார் பார்த்தனர்.

Buddhist monk attacked in a train at Central7

மர்ம நபர் தொலைபேசியில் தனியார் டிவிக்கு அவர்கள் வருவதை தொலைபேசி மூலம் அறிவித்தனராம்: இதன்பிறகு, “புத்த சாமியார்களும், இலங்கை நாட்டினரும் ரயிலில் வருவது உங்களுக்கு எப்படி தெரியும்?’ என, கேட்டதற்கு, “எங்கள் அலுவலக தொலைபேசியில் பேசிய நபர் கூறினார். அதனால் தான், நாங்கள் வந்தோம். மர்ம நபர்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாதுஎன, தெரிவித்தனர். இதன் பிறகு, இருவரையும்போலீசார் அனுப்பிவிட்டனர். தாக்கியவர்கள் ஒரு ட்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று “தி ஹிந்து” பெயர் குறிப்பிடாமல் அறிவித்துள்ளது[10]. இப்படி குறிப்பாக ரெயில் பெட்டியில் நுழைவது, இரண்டு நிமிடங்களில் அடித்துவிட்டு மறைவது, ஆனால், இவற்றையெல்லாம் பொறுமையாக இருந்து வீடியோ பிடிப்பது எல்லாம், ஒரு குறிப்பிட்ட யிவி-குழுமத்தின் திறமையாகவேத் தெரிகிறது. யதேச்சையாக வீடியோ அவ்வாறு எடுக்க முடியாது. “எஸ் 6” பெட்டிக்குள் தாக்குதல் நடக்கும், அதை படம் பிடிக்கலாம் எனும்போது, போலிஸாருக்கு நிச்சயம் தகவல் அளித்திருக்கலாம், இரந்த முழுநிகழ்ச்சியை அறவே தவித்திருக்கலாம்.

Mahabodhi centre, Chennai Egmore

வேதபிரகாஷ்

19-03-2013


[3] Pro-LTTE Tamils in Tamil Nadu attack another Sri Lankan Buddhist monk, Mon, Mar 18, 2013, 09:40 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.

http://www.colombopage.com/archive_13A/Mar18_1363623022CH.php

[4] Karunathilake Amunugama, Lanka’s Ministry of External Affairs’ Secretary said Colombo has lodged a formal request with the Indian authorities in this connection. Sri Lanka’s concerns arose after two successive attacks against Buddhist monks and a group of pilgrims.

http://www.deccanherald.com/content/319782/sri-lanka-calls-indian-protection.html

[5] Tamil Nadu Government took this decision after the Sri Lanka’s Deputy High Commissioner Prasad Kariyawasam made such a request from the state government and the central government.

http://www.dailymirror.lk/news/26850-special-security-for-lankan-pilgrims.html

[6] An incident of stone pelting has been reported from Bodhimaya, the Buddhist centre in the capital city of Tamil Nadu.Four monks were injured in the attack, which took place on Monday night. Window panes were broken and the centre was vandalised in the attack.”What I have been told that 10-15 people came. An auto driver called me…I live in the neighbourhood…I came here immediately. By then the monks were taken to the hospital. I do not know what exactly happened here,” said Kapil Alexander, a local resident.

http://ibnlive.in.com/news/chennai-buddhist-centre-attacked-four-hurt/141438-3.html

[8] The police said the attack on Mr. Bhandara had been quite brutal. “They slapped the monk, hurled abuse at him and hit him on the leg with a blunt object,” an officer said. The monk sustained injuries on his left leg and the group lodged a complaint with the GRP in which they said they had been carrying Rs. 40,000 in cash, which they found missing after the assault.

[10] The Government Railway Police have registered a case and are investigating. They have also intensified checks on all trains. “We suspect that those who indulged in the attack are from a Tamil organisation,” a police officer said.

http://www.thehindu.com/news/national/sri-lankan-monk-attacked-on-train-in-chennai/article4522981.ece

 

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

பிப்ரவரி 20, 2010

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

வேதபிரகாஷ்

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது அல்லது தேய்ந்தது, இந்தியா பௌத்தத்தைத் துறந்தது அல்லது துரத்தியடித்ததைப் பற்றி பல கருத்துகள் உருவாகியுள்ளன. இதில் வேடிக்கையான பிரச்சினை என்னவென்றால், பௌத்தத்தைப் பற்றிய மூலங்கள் அதிகமாக இருந்தும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இருந்தும், அவற்றைப் படிக்காமல், ஆராயாமல், “மற்றவர்கள் சொன்னது” அல்லது “மற்றவர் மற்றவர்களைப் பற்றிச் சொன்னது”, தாங்கள் கேட்டது, கேள்வி பட்டது என்பனவற்றின் மீது கருத்துருவாக்கம் கொண்டு அதனையே சரித்திர ஆதாரமாக நிலைநிறுத்தப்பட்டது போன்று வாதிட்டி பேசி-எழுதி வருவது, தமிழர்களிடையே அதிகமாகவே உள்ளது.

ஒரு தடவையாவது அம்மூலங்களைப் படிப்பது அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்து அவ்வாறு தாங்கள் கேட்டபடி, நினைத்தபடி உள்ளதா அல்லது வேறுவிதமாக உள்ளதா என்று பரிசோதனை செய்வது, சரிபார்ப்பது உண்டா என்பது தெரியவில்லை.

இனி, விஷயத்தை ஆராயும்போது, இவற்றை – பௌத்தம் இந்தியாவில் குறைந்தது பற்றி – பொதுவாக இரண்டு தலைப்புகளில் பிரித்துஆராயலாம்:

1. புத்தமத உள்விவகாரங்கள் மற்றும் 2. வெளிகாரணிகள்

புத்தமத உள்விவகாரங்கள்: பௌத்தம் திடீரென்று குறைந்து, தேய்ந்து, மாயமாக மறைந்து விடவில்லை. இந்திய சரித்திரத்தில் உள்ள, உருவாக்கப்பட்ட, பரப்பப் பட்டுவரும் பற்பல கட்டுக்கதைகளில், இதுவும் பிரபலமான ஒரு கட்டுக்கதை, மாயை, பொய்மையும் கூட.

6ம் நூற்றாண்டிலிருந்து BCEலிருந்து, வளர்ந்து, பரவி, உலக மதமாகி, பலம்-அதிகாரம் பெற்று, சர்ச்சைகள் பெருகி, உடைந்து, பிரிவுகள் ஏற்பட்டு பிறகு 12ம் நூற்றாண்டில்தான் CE குறைகிறது! ஆகவே 1600-1800 வருடங்கள் இந்தியாவில் கோலோச்சி வந்தது, அதிகாரத்துடன் பவனி வந்தது, தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தியது. [இப்பொழுது BCE = Before Current / Common Era CE = Current / Common Era என்றுதான் சரித்திரத்தில் குறிப்பிடப் படுகின்றன].

அத்தகைய பலமுள்ள, அதிகாரமுள்ள உலக மதம் சாதாரணமாக மறைந்து விட முடியாது. பௌத்தத்தின் வளர்ச்சி-வீழ்ச்சி என்பது, அதன் 1600-1800 வருட-செயல்பாடுகளை பாரபட்சமின்றி ஆராய்ந்து தெளியவேண்டும். அம்பேத்கரே அத்தகைய வழியைக் காட்டிடுள்ளார்.

  1. புத்தமதம் இரண்டாகப் பிரிந்தது: முதலில் பௌத்தர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், பிறகு பல விஷயங்களுக்கு சண்டை-சச்சரவுகள் வளர்ந்தன. அதனால், புத்த சங்கம் ஹீனயானம் மற்றும் மஹாயானம் என்று இரண்டு பிரிவுகளாகவும், மற்றும் 16 சிறு பிரிவுகளாகவும் பிரிந்தன.
  2. புத்தரைக் கடவுளாக்கியது: கடவுள் இல்லை என்று வளர்த்த மதம், புத்தரையே கடவுளாக்கி அவர்களது புத்தகங்களும் அவ்வாறே திரித்து எழுதப் பட்டன.
  3. விக்கிர-ஆராதனை பெருகியது: வேதகாலத்திலிருந்து, பாரதத்தில் / “இந்தியா”வில் உருவவழிபாடு இல்லை. ஆனால், திடீரென்று, பௌத்தர்கள் புத்தருக்கு பெரிய அளவில் சிலைகளை செதுக்க ஆரம்பித்தனர். அத்தகைய வேலைகளில் எத்தனை வேலையாட்கள் ஈடுபடுத்தியிருக்க பட வேண்டும் என்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.
  4. வேதங்களை எதிர்த்து, வேதங்களை எடுத்தாண்டது: வேதங்களை பௌத்தர்கள் எதிர்த்தாலும், பெரும்பாலான, வேத-உபநிஸதக் கருத்துகளை அப்படியே தமது “தம்மத்தில்” தம்-மதத்தில் ஏற்றுக் கொண்டனர்[1].
  5. அதிகாரம், ஊழல் பெருகியது: முதலில் பிக்குகள் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, தம்ம-சிரத்தையுடன் இருந்தனர். ஆனால், பின்பற்றுபவர்கள் பெருக-பெருக அவர்களது முக்கியத்துவம் வளர்ந்தது. வாழ்க்கை முறையும் மாறி வசதிகளுடன் வாழத்தொடங்கினர். விஹாரங்களில் பணப்புழக்கம் அதிகமாகியது. இதனால் உட்பூசல்கள் ஆரம்பித்து பிக்குகள் ஒருவரை ஒருவர் குற்றம் கூற ஆரம்பித்தனர்.
  6. பெண்கள் பிக்குனிகள் அனுமதிக்கப்பட்டது: பெண்கள் பிக்குனிகளாக / கன்யா ஸ்திரீகளாக அனுமதிக்கப் பட்டது, சங்கத்தின் அழிவிற்கு வித்திட்டது.
  7. ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டது: அஹிம்சை போதித்த பௌத்தர்களே ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டதால், மக்களுக்கு, புத்தருக்குப் பிறகு, பௌத்தத்தின் மீதான நம்பிக்கை குறைந்தது. மன்னர்களுடைய தொடர்பு போர்களில் ஈடுபடவும் செய்தது.
  8. மாமிச உணவு உண்டது: குறிப்பாக மாமிச உணவு உண்ணும் பிக்குகள், பௌத்தர்களைக் கண்டு, மக்கள் வியந்து திகைத்தனர். விலங்குகளைக் கொல்லாமல், அவற்றை தோலுறித்து, பதப்படுத்திக் கொடுக்காமல் மாமிசம் கிடைக்காது. குறிப்பாக, புத்தரே மாமிச உணவைத் தடை செய்யாதௌ மாட்டுமன்றி புசிக்கவும் செய்தார்.
  9. மதம்-அல்லாத விஷயங்களில் ஈடுபட்டது: மதத்தை விடுத்து, பௌத்தர்கள் மற்ற காரியங்களில் அதிகமாகத் தலையிட்டனர்.
  10. அரசியலில் தலையிட்டது: ஜைனர்களைப் போன்று அரசியலில் ஈடுபட்டது. அதாவது ஆளும் மன்னர்களின் துணையில் அல்லது அவர்களை மதம் மாற்றி தமது மதத்தின் அதிகாரத்தைச் செல்லும் முறையைக் கடை பிடித்தனர். பௌத்த ராஜ்யங்கள் (Buddhist Kingdoms) பரவியிருந்தது உண்மை.
  11. வியாபாரத்தில் ஈடுபட்டது: பல இடங்களுக்கு, பல நாடுகளுக்கு சென்றுவந்த பௌத்தர்கள் வியாபாரத்தில் பங்கு கொண்டனர். வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டு, அரசியல் அதிகாரமும் பெற்றதால், மத காரியங்களில் சிரத்தையாக ஈடுபடாமல் போனது.
  12. கடல் கடந்தது மற்ற செயல்கள்: பாரத்தில் சில காரியங்கள் செய்வது ஏற்றுக் கொள்ளப் படாததாக இருந்தன. அவை இக்கால சட்ட-திட்டங்களைப் போன்று “கலிவிரஜ்யா” = கலிகாலத்தில் விலக்கப் படவேண்டியவை, என்றிருந்து மக்களிடையே நம்பிக்கையாக மனங்களில் பதிந்திருந்தது. அந்நிலையில், பிராமணர்கள் கடல் கடக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, பிக்குகள் கப்பல்களில் சென்றதும் மக்களுக்கு வியப்பாக இருந்தது.

வேதபிரகாஷ்

10-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

இதற்கான ஆதாரமான நூல்கள்:

Louis Dela Valle Poussin, The Buddhist Councils, K. P. Bagchi & Company, Calcutta, 1976.

Sumangal Barua, Buddhist Councils and Development of Buddhism, Atisha Memorial Publishing Company, Calcutta, 1997.

I. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen, Motilal Banarasidas, New Delhi, 1999.

K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm

Alexander Berzin, The Historical Interaction between the Buddhist and Islamic Cultures before the Mongol Empire, 1996 http://www.berzinarchives.com/web/en/archives/e-books/unpublished_manuscripts/historical_interaction/pt2/history_cultures_12.html

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, pp.439-447; 542-543

M. Monier Williams, Buddhism: In its connexion with Brahmanism and Hinduism and its contrast with Christianity, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd, New Delhi, 1995.

கடைசி புத்தகத்தில், மோனியர் வில்லியம்ஸ், பௌத்தம் தான் மேற்கொண்ட மாற்றங்களினால், இந்து மதத்தின் உயரிய கொள்கைகளான சகிப்புத்தன்மை, அஹிம்சை முதலிய குணாதிசயங்களினால், 12ம் நூற்றாண்டு காலத்தில் மறைய நேரிட்டது என்று விளக்குகிறார் (Lecture VIIl – Changes in Buddhism and its disappearance from India என்ற விளக்கத்தை “How Did Buddhism Die out in India?” pp.161-171, காணலாம்).

பி.வி.பாபட் தொகுத்த நூலில், “பௌத்தத்தில் பிற்பாடு செய்யப் பட்ட மாற்றங்கள்” என்ற தலைப்பில், பௌத்தம் எவ்வாறு தனது ஆரம்பகால நிலையினின்று பிரழ்ந்து என்பதனைக் காணலாம்.

P. V. Bapat, 2500 years of Buddhism, Publications Division, New Delhi, 1997, pp.297-332


[1] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992.